அவதாரிகை –
-தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இ றே மோஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -தான் இருப்பது–அனுபவ பரம் முதலில் உபதேச பரம் இதில் –
-அதில் தத்வ பாரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியில் –
ஹிதம்–உபாசன பாரமாகச் சொல்ல வேண்டும் அவற்றுக்கு எல்லாம் சங்க்ரஹமாய் இருக்கிறது இத் திருவாய் மொழி –
இத் திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக நிர்வஹித்திக் கொண்டு போந்து
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு
பக்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போருவர் – பின்பு எம்பாரும் அப்படியே அருளிச் செய்தார் –
பூர்வ த்விகம் -விஷயத்விகம் -சித்த த்விகம் –சமன்வய அவிரோத அத்யாயங்கள் -தத்வ பரம் -ஜகத் காரணத்வம் -அவனே –
உத்தர த்விகம் -விஷயித்விகம் -சாத்திய த்விகம் –சாதனா பல அத்யாயங்கள் -உபாசன பரம் –
தேசிகன் அருளிய முக்த ஸ்லோகம் –சுவ சேஷ அசேஷ அர்த்த -முதல் அத்யாயம் -சமன்வயா-சர்வேஷாம் வேதாந்தம் பிராமணி சம்யக் அந்வயம் இயைந்து
நிரவதிக நிர்பாத மஹிமா –குறை இல்லாத தடங்கல் இல்லாத விரோதம் இல்லாத -அவிரோதம்
பலானாம் தாதா -சாதனம் -மூன்றாவது -பக்திக்கும் பிரபதிக்கும் பலம் கொடுப்பவன் அவனே -பக்தி
அசேதனம் கொடுக்கும் தன்மை இல்லை சமீபத்தில் அழைத்துப் போகும் அவ்வளவே பலம் அபிச -பலமாகவும் தானே -நான்காவது
முதல் 7 பாசுரங்களால் -சமன்வயா-பிரமமே காரணம் -8/9 அவிரோத – குத்ருஷ்டிகள் /பாஹ்ய -நிரசனம் –
-நான்கு அத்தியாயங்களையும் தத்வ பரம் ஹிதம் பரம் இரண்டாக பிரித்து அருளி -பலம் -புருஷார்த்தம் -ஹித பரமாக சொல்லுவான் என் என்னில் -பலம் உபாய சாத்தியம் ஆவதால் –
பர வ்யூஹ விபவம் விஷ்ணு சகஸ்ர நாமம் -அந்தர்யாமித்வம் பரத்துக்குள் விபவம் வியூகத்துக்குள் சேர்ப்பது போலே
செய்வதவற்றையே சொல்லுவார் ஆழ்வார் -தாமான தன்மை ஞானத்தால்
-பிரேமம் தலை எடுக்க பெண் பேச்சு -சம்பந்த ஞானம் தாய் பேச்சு -த்வரை மிக்கு தலை மகள் பேச்சு
சாதன பக்தி இல்லை -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு பெருமாளால் அருளப்பெற்ற சாத்திய பக்தி என்றபடி –
வேதாந்த சித்த உபாயம் –த்விதம் -பிரபதனம் -பஜனம் -பக்தி -பஜநீயத்வம் இந்த திருவாய்மொழி காட்டும் குணம்
முதலில் பரத்வம் -அவன் பஜ நீயன் –பிரபத்தி குஹ்யம் ரகச்யார்த்தை முதலிலே போட்டு உடைப்பாரா
பிரபத்தி -பொருளிலே சாத்திய பக்தியைக் கூறலாம் -கொடுப்பவன் அவன் தானே –அருளினன் -அபார பர்யாயம்-இரண்டும் –
மறைத்து அருளிச் செய்து போந்தார் -ரோஹிணி -அத்தத்தின் பாத்தா நாள் போலே –சாத்ய பக்தி -அதாவது பிரபத்தி
அவன் உகப்புக்கு என்றே செய்வது -ஸ்வா தந்த்ர்யம் கலசாமல் –
பிரபன்னனுக்கு -ருசி கொடுப்பது போலே சாத்திய பக்தி யோக நிஷ்டனுக்கு பக்தி கொடுப்பார் என்றபடி
திண் கழல் சேர் -பிரபத்தி பரத்துக்கு ஸூசகம் -அவன் விட்டாலும் விடாமல் திண் கழல்
புல்கு பற்று அற்றே -பக்தி பரதைக்கு ஸூ சகம்
சர்வ தரமான் பரித்யஜ்ய -பற்று அற்ற -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -புல்கு –
விடுகை -அங்கம் -விட்டே பற்ற வேண்டும் பற்று அற்றே –அங்கத்துடன் விதிக்கிறார்
விவேகாதி -சாதன சப்தகங்கள் பாஷ்யம் -விமோக கல்யாண அப்யாச -போல்வன -அவசியம் அங்கங்கள்
பிரபதிக்கு அங்கங்கள் வேண்டாமே -ஒன்றும் எதிர்பார்க்காதே-இதனால் தான் பாஷ்யம் தலைக் கட்டின பின்பு ஸ்ரீ பாஷ்ய காரார் சாத்ய பக்தி பரமாக அருளினார் -அங்கத்துடன் சொல்வதால் –
மதி நலம் -பக்தி தானே -அங்கம் பகவத் கடாஷம் –கிருபை அருளால் வந்ததால் -சாத்திய பக்தி நிச்சயம்-இப்படி சமஞ்சயம்-
வீடுமுன் முற்றவும் வீடு செய்து -அங்கம் ஸ்பஷ்டமாக அருளி -ரொம்ப ஜாக்ரதையாக -ஸ்நாத்வா புஞ்சீதே குளித்தே உண்ண வேண்டும் –
நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -பிரபத்தி
கர்ம ஞானங்கள் -அலங்கரிக்கப் பட்ட -சஹகரிக்கப் பட்ட -அங்கமாகக் கொண்ட பக்தி
விஷயாந்தர வித்ருஷ்ணா -பற்று அற்ற தன்மை -அதால் அலங்கரிக்கப் பட்ட -அங்கமாக -சஹகரிக்க பட்ட -பக்தி -சாத்திய பக்தி -ப்ராப்ய பக்தி என்றபடி -முந்தியது பிராபக பக்தி -ஆகையால் விகல்பிக்கலாம் படி இருக்குமே -வைராக்ய சஹசரிதை பிரபத்தியும்
பிராப்ய பக்தி –சாத்திய பக்தி -உபாயமாக சாதன -பிராபக பக்தி –
பித்தம் போக்கி -நாக்கில் தீட்டி பித்தம் போக்கி -வீடுமுன் முற்றவும் -பால் குடிக்க -உம்முயிர் வீடு செய்மினே -ஷீரம் ரசிக்க
இவர் வைராக்கியம் விஷயாந்தர தோஷ தர்சனத்தால் –
ஆழ்வார் உடைய பிரபத்தி -பக்தி பாரவச்யத்தால் -ஞானாதிக்யத்தால் ஆச்சார்யர் -ஜ்ஞ்ஞானத்தால் நாம் -மூவகை உண்டே
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் –கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் -காதல் -பக்தி -சாத்திய பக்தி -கொடுத்தது பகவான்-
துடிக்கும் தன்மை கொடுத்து மறைந்து நின்றானே என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார்-பக்திக்கு பரவசப்படுத்து -என் நான் செய்கேன் –களை கண்
உன்னால் அல்லால் -யாவராலும் ஒன்றும் குறை இலேன் இம்மூன்றுமே உள்ளது
பக்தி ரூபாபன்ன ஞானம் பெற்று அத்தை தானே உபதேசிக்க வேண்டும்
இவருடைய பக்தி பிரபத்திகள் தான் விகல்பிக்கலாய் இ றே இருப்பது –
மயர்வற மதி நலம் அருளினான் என்று -இவர் தாம் பெற்றது பக்தி ரூபா பன்ன ஜ்ஞானமாய் இருந்தது -தாம் பெற்றது ஓன்று
பிறருக்கு உபதேசிப்பது ஒன்றுமாக ஒண்ணாதே –அப்போது விப்ரலம்ப கோடியிலே ஆவாரே –
உபயபரிகர்மித ஸ்வாந்தஸ்ய -என்கிறபடியே –
அதாவது கர்மம் ஞானம் இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞானம் கொண்டவனுக்கு -ஆத்ம சித்தி -ஆளவந்தார் அருளிச் செய்த படி
கர்ம ஜ்ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது இறே பர பக்தி –அந்த ஜ்ஞான கர்மங்களினுடைய ஸ்தானே-
பகவத் பிரசாதமாய் -அதடியாக அநந்தரம்-அதே ஷணத்தில்- விளைந்தது இ றே இவருடைய பக்தி தான் –
இது தான் வேதாந்த விஹிதையான பக்தி தானே யானாலோ வென்னில் –
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றார் ஆகிற ஏற்றம் போம் –அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும் –
ஆனபின்பு தாம் பெற்றதையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்-
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் அன்றோ -நான்காம் வருணத்தில் உள்ளவர் -சாதன பக்தி அருகதை இல்லை
விதுர ஆழ்வான்-த்ரை வர்ணிகர் அல்லர் -யம தர்ம ராஜன் மறு பிறப்பு பூர்வ கர்ம ஞானம் உண்டே பலன் இப்பொழுது கிடைத்தது
-ரைக்க்குவர் -சூத்திர -கூப்பிட்டு -ப்ரஹ்ம ஜ்ஞானம் உபதேசித்து –சூத்திர -சோகம் உடைமை தான் பொருள் — ஜாதி பரம் இல்லை –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -பக்தி இல்லை சொல்ல வில்லையே -வரவே வழி இல்லையே முன் முன் ஜன்மம் –வரவாறு ஒன்றும் இல்லை – என்கிறாரே
ஆளவந்தார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -முன் ஜன்ம கர்ம பலனும் இல்லை –வரவாறு ஓன்று இல்லை என்று ஆழ்வார் இத்தை அருளிச் செய்து விட்டாரே
அருளிச் செயல்களிலே பிரணவம் ஸ்பஷ்டமாகவே இல்லையே
சுகச்ய தத் அநாதர சரவணாத் ஆத்ரவநாத் –பல்லன் பல்லாஷன் பறவைகள் –ரிஷிகள் -அனுக்ரஹம் செய்ய ப்ரஹ்ம ஞானம் போதிக்க
சாமான்ய தர்மம் கொண்டு கார்யம் இல்லை -பரந்து ஜான சுருதி மேலே நிழல் படாமல் -பஷி பாஷை அறிவான் -ரைக்குவனா -சோகம் பிறக்க –
ஐஸ்வர்யம் -சேர்த்து -ஆத்மஞானம் -அஹங்காரம் தொலைந்ததும் ப்ரஹ்ம ஞானம் யோக்யதை –
ப்ராப்ய ருசி பரம் -இதுவே பக்திபரம் -பிரபன்னனுக்கும் ருசி வேணும் -ருசி அதிகாரி விசேஷணம்-ருசியே பிராப்யம் –
கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்வத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இ றே போந்தது –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து பிறருக்கு உபதேசிக்கிறபடி எங்கனே தான் –
தான் அனுபவித்த விஷயத்தை எல்லை கண்டோ -அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ -என்னில்
விஷயமோ வென்றால் -தனக்கும் தன தன்மை அறிவறியான்–8-4-6-என்கிறபடி அபரிச்சின்ன விஷயம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -4-7-2-இ றே
இனி தம் அபி நிவேசமோ வென்றால் –காதல் கடலின் மிகப் பெரிதால் -7-3-2–என்றும் –மண் திணி ஜ்ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8–என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -10-10-10–என்னும்படி பெருகி இருந்தது
ஆகிலும் ஒரு கால் அபி நிவேசம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயம் தானே காலாந்தரத்தில் விரக்தி பிறக்கக் காணா நின்றோம் –
அப்படியே சில காலம் அனுபவித்து பின்பு விரக்தி பிறந்ததோ வென்னில் -அங்கனம் சொல்ல ஒண்ணாது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொரும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதம் -2-5-4-என்னும்படி
நித்ய அபூர்வமாய் இருக்கும்
இனி ஆசார்ய பதம் நிர்வஹிக்கைக்காக அன்று -நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்பவர் இ றே
க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -என்று உபதேசிப்பவர் இ றே –
ஓத வல்ல பிராக்கள் -என்று அவர்களையும் தமது யஜமானராக எண்ணுபவர் இ றே
ப்ரப்ரூயாத் -முண்டக -1-2-13-என்ற ஒரு விதி பரதந்த்ரராய் அன்று – குருகுல வாசம் செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாது என்று இருப்பவரும் அன்றே
ஆனால் இது பின்னை எத்தாலே யாவது என்னில் -ஸ்வ அனுபவ பிரகர்ஷம் இருக்கிற படி -தான் அனுபவித்த விஷயம்
தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு ஆளாவார் ஆர் என்று சம்சாரிகள் பக்கலிலே கண் வைத்தார்
தாம் பகவத் விஷயத்திலே பிரவணராய் இருக்கிறார் போலே அவர்கள் சப்தாதி விஷயங்களிலே பிரவணராய் இருந்தார்கள்
இவர்கள் அநர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் உண்டு இல்லை என்னும் இடம் தனக்கே தெரியும் காண்-என்று நஞ்சீயர் பல காலும் அருளிச் செய்வர்
பிறர் அநர்த்தம் கண்டால் ஐயோ என்று இருந்தான் ஆகில் -நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும் –
இத்தனையும் பட்டிடுவானுக்கு -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும் என்று –
இவர்களை இவர் மீட்க்கப் பார்க்கிற வழி தான் என் என்னில்-இவர்கள் தான் சேதனராய் இருந்தார்கள் -சப்தாதி விஷயங்களில் வாசி அறிந்து –
தீயவை கழித்து நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
அவற்றினுடைய ஹேயதையும்-சர்வேஸ்வரன் உடைய உபாதேயதையும் இவர்களுக்கு அறிவித்தால் அவற்றை விட்டு இவனைப் பற்ற அடுக்கும்
என்று பார்த்து –
1-சர்வேஸ்வரன் உடைய நன்மையையும் –2-இவர்கள் பற்றின விஷயங்கள் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்-4–பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை-
-பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் –5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப் படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் -வண் புகழ் நாரணன்
6-அவனுடைய பஜ நீயதயையும் –இறை சேர்மின் -அருளிச் செய்யா நின்று கொண்டு -7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக
பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயிங்கோள் -புல்கு பற்று அற்றே -என்று பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –
———————————————
இதர விஷயங்களை விட்டு -உங்களுக்கு வகுத்த விஷயத்தை பற்றப் பாருங்கோள் -என்கிறார் முதல் பாட்டில் –
வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-
ஐதிகம் -பட்டர் -பெரிய பெருமாள் திருக் கண் அழகைக் காட்டி ஒருவரைத் திருத்தி -எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் போலர் –
மாதரார் –தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -கண் வலை படாமல் -கமலக் கண் நெடும் கயிற்றில் அகப்பட்டு உஜ்ஜீவிக்க உபதேசிக்கிறார் –
சகல இதர பரித்யாக பூர்வகமாக -ஆத்ம சமர்ப்பணம் விதிக்கிறார் –முற்றவும் -பஜன விரோதி -சாத்திய சாதனங்கள் அனைத்தையும் –
கர்ம ஞான பக்தி யோகங்கள் -உபாயாந்தரங்கள் -லௌகிக விஷய பற்றுக்கள் -அனைத்தையும் -வெட்கி -சவாசனமாக –
வீடுடையான் -மோஷம் நிர்வாஹகன் -மோஷ ப்ரதன்-இடம் ஆத்ம சமர்ப்பணம் -வீடு செய்மின் -விடு நீண்டு -செய்மினே -பாத பூர்ண ஏவகாரம்
வீடு இசைமினே –விடுவதற்கு மனசை தேற்றிக் கொண்டு -பெரியவாச்சான் பிள்ளை மட்டும் இப்படி -நிர்வாஹம்
சமர்ப்பிக்க இசைமின் -என்றுமாம் –
வீடு மின் –
வீடுமின் -என்று பன்மையாய் -ஒரு சொல்லாய்க் கிடக்கவுமாம் –
விடுமின் -என்றத்தை நீட்டி வீடுமின் –என்று கிடக்கிற தாகவுமாம் –நச்சாராவணை நச்சு அரவணை நீண்டால் போலே
முதலிலே வீடுமின் என்பான் என் என்னில் -சிறு பிரஜை கையிலே சர்ப்பத்தை பிடித்துக் கொண்டு கிடந்தால் பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி
-பின்னை சர்ப்பம் -என்பாரைப் போலேயும்
ஒருவன் கிருஹத்துக்கு உள்ளே கிடந்தது உறங்கா நிற்க நெருப்புப் புறம்பே பற்றி எரியா நின்றால்-புறப்பட்டுக் கொள் கிடாய் -என்று
பின்பு நெருப்பு என்பாரைப் போலேயும் முந்துற விடுங்கோள் என்கிறார் -த்ருஷ்டா சீதா போலே
ஜன்ம மரணங்களுக்கு நடுவே- ஷட்பாவம் – இ றே-இவை தான் நோவு படுகிறது – கொடு உலகம் காட்டேல் என்பார் பின்பு –
-த்யக்த்வா புத்த்ராம்ச தாராம்ச்ச –யுத்த -17-4–சரணாகதிக்கு முன்பும்-என்றும் –
பரித்யக்தா மயா லங்கா –யுத்த -19-5-என்றும் -விடுகை முன்னாக இறே முன்பு பற்றினவர்களும் பற்றிற்று —
வீடுமின் -என்கிற பன்மையால் சொல்லுகிறது என் என்னில் ஒருவன் தந்தனாய் வந்து நிற்க -அவனுக்கு உபதேசிக்கிறார் அன்றே
சம்சார வெக்காயம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே-ஒருவர் அல்லா ஒருவர்க்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லாருக்கும் உபதேசிக்கிறார்
எத்தை விடுவது என்னில் –
முற்றவும்
சண்டாளர் இருப்பிடத்தை ப்ராஹ்மணர்க்கு ஆக்கும் போது சில கூட்டி சில கழித்து அன்றே கொள்ளுவது
அப்படியே அஹங்கார மமகாரங்களாலே தூஷிதமான வற்றிலே சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே -ஆகையால் கட்டடங்க விடுங்கோள் என்கிறார்
அஹங்காரம் பிடித்தவன் -சண்டாளன் -ஜாதி பரம் இல்லை
வீடு செய்து -உறுதி செய்து -விடுவதே பிரயோஜனம் என்றவாறு –
வீடுமின் முற்றவும் -என்றார் ஆகில் திரிய வீடு செய்து -என்கிற இதுக்கு கருத்து என் என்னில்
மேல் ஒரு பேறு பெறுவதிலும் -இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாகப் போருகையாலே –விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி –
ராஜ புத்திரன் அழுகு சிறையிலே கிடந்தால் முடி சூடி ராஜ்யம் பண்ணுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இ றே –
உம்முயிர் வீடுடை யானிடை-
இதுக்குப் பல படியாக அருளிச் செய்வர் -நஞ்சீயர்
1–யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிறபடியே உம் உயிரையும் அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்-
2-உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்
3-உம் உயிரை விடும் இடத்தில் -சமர்ப்பிக்கும் இடத்தில் –உடையான் பக்கலிலே என்னுதல் –
வீடுடையான் –
4–பரமபத நிலையன் பக்கலிலே -என்னுதல்
உம்முயிர் –
அநித்தியமான சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகிறேனோ
நித்தியமான ஆத்மா வஸ்துவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்கிறது -ஆத்மாவை நிழலிலே வைத்து சரீரம் வெய்யிலே வைக்க –
அது தானும் என் உயிர்க்கோ
உம் உயிர்க்கு அன்றோ –மூக்கு நுனியைப் பார்த்து த்யானம் -யார் மூக்கு -போலே
உடையானிடை – வீடு செய்ம்ம்மினே
பொதுவிலே உடையவன் -என்கிறார்
ருசி பிறந்து -அவன் ஆர் என்றால் -வண் புகழ் நாரணன் -என்பாராக –
அவன் உடையவனாய் உங்கள் சத்தையாய் நோக்கிக் கொண்டு போரா நிற்க
நீங்களும் -நான் என்னது -என்று அகலப் பாராதே
உங்களை அவன் பக்கலிலே சமர்ப்பிக்கப் பாருங்கோள்-
அவன் உடையவன் ஆனபின்பு அவனோடு அவிவாதமே உங்களுக்கு வேண்டுவது –
விவாதம் இல்லாமல் இசைவே வேண்டுவது
ஜனமேஜயன் -வைசம்பாயனர் -அவகாசம் -இல்லை -மூட துரியோதன தசானனௌ-சா காங்க சமாக -ஆசை வரும்படி சொல்ல
–கோ க்ரஹணம் -வன பங்கனம் –அடியைப்பிடி பாரதப்பட்ட -தர்மாதி புருஷார்த்தங்கள் வேண்டாம் –
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் -ருசி
மூன்று எழுத்து உடைய பேரால் –
யம ப்ராதேசிகமான நியமனத்தை உடையவனை யன்று சொல்லுகிறது -சூர்ய மண்டல மத்திய வர்த்தி நாராயணன் –சகல தேசத்துக்கும் நிர்வாஹன் –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்று அவன் தன்னையும் நியமிக்குமவன் யாயிற்று இவன் —
வைவஸ்வத -விவஸ் வானுடைய குலத்திலே பிறந்தவன் -என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் -என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பாச என்கை யன்றிக்கே எல்லார்க்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
ய-அந்தர்யாமி ப்ராஹ்மாணாதிகளிலே பிரசித்தி –
தவிஷா ஹ்ருதி ஸ்தித -அவன் எங்குற்றான் என்ன -கண்டில்லையோ -உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே
தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் -ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் –தேன சேத விவாதஸ் தே-உடையவனாய்
இருக்கிறவனோடே உனக்கு அவிவாதம் உண்டாகில் இத்தால் பேறு -என்பாயோ
மா கங்காம் மா குரூன் கம -மனு ஸ்ம்ருதி–ஒரு தீர்த்தம் தேடித் போதல் புண்ய ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா –
கங்கை தீர்த்தம் -ஸ்ரீ பாத தீர்த்தம் -ஒத்துக் கொண்டவனையும் ஒத்துக் கொல்லாதவனையும் தீர்த்தம் ஆட வேண்டாம் –
சேஷத்வ பூர்வ ஞானம் ஆகிய அடிமை கொள்ளுவது -ஆட்சி -தொடர்ச்சி -அந்தர்யாமியாக இருப்பது
அஹங்கார கர்ப்பமான தீர்த்த யாத்ரை கைங்கர்யங்கள் கூடாதே –
அஹங்கார மமகாரங்கள் கிடக்க பிராயச் சித்தம் பண்ணுகையாவது-நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி இ றே-
உடையவனுக்கும் உடைமைக்கும் தக்க படி இ றே பிராயச் சித்தமும் -நம்பினேன் பிறர் நன் பொருள் –
உடையவன் -சர்வேஸ்வரன் -த்ரவ்யங்களில் பிரதானமான ஆத்மா த்ரவ்யத்தை இ றே அபஹரித்தது
அபஹரித்த த்ரவ்யத்தைப் பொகட்டு பிராயச் சித்தம் பண்ண வேணுமே
பொகடுகிற த்ரவ்யமும் தானாகையாலே -பிராயச் சித்தம் பண்ணுகைக்கு வேறு அதிகாரியும் இல்லையே
ஆகையால் நீங்களும் உடையவன் பக்கலிலே
வீடு செய்ம்மினே -வீடு -சமர்ப்பிக்கை-அதாகிறது -இசைகை
பொகடுகை -இசைகை ஒன்றே -சொத்து -அதிகாரி லஷணம்-அவனது என்று ஏற்ற பின்பு சொத்து தானாகவே ஒன்றும் செய்யாதே
ஸ்வ தந்த்ரன் அல்ல இசைவே பிராயச் சித்தம் -நம் சம்ப்ரதாயம் –
அப்ருதக் சித்த விசேஷணம்-பிரகாரம் – -சார்ந்தே விட்டுப் பிரியாமல் இருக்க எப்படி அபகரிப்பது -எப்படி சமர்ப்பிபது
-அபகாரமும் சமர்ப்பித்தும் -அபாவம்
ஸ்வ தந்திர நினைவே அபகாரம் -அந்ய சேஷத்வ நினைவும் அபகாரம் –
ஆசார்யர் -பாகவதர் -உபதேசிக்க –காருண்யத்தால் -அவர்கள் அருளிச் செய்ய -இசைவதே சமர்ப்பணம்
————————————————————————–
அவதாரிகை –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்-என்றார் முதல் பாட்டில் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் -அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த வற்றை இப்போதாக விடப் போமோ என்ன –
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-
மின்னின் நிலையில –
மின்னோபாதியும் நிலை யுடைத்தல்ல -ஐந்தாம் வேற்றுமை –எடுத்துக்காட்டு பொருள் -உபமார்த்தே பஞ்சமி
அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இ றே அது
இதுவும் அஸ்திரமாய் இருக்கச் செய்தேயும் ஸ்திர புத்தியைப் பிறப்பித்து அனர்த்தத்தோடே தலைக் கட்டு வித்துவிடும்
சந்தன ப்ராந்தியாலே -நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு சர்ப்பத்தின் மேலே கையை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கா நின்றால்
ஒரு தார்மிகன் -இது சர்ப்பம் கிடாய் என்று அறிவித்தால் பின்னை அதில் நின்றும் கை வாங்கி அல்லது நிற்க ஒண்ணாது இ றே
அப்படியே இதர விஷயங்களில் போகாதா புத்தி பண்ணிப் போருகிற இவனுக்கு -இது அல்பம் அஸ்தரம் -என்று இதனுடைய
தோஷ தர்சனத்தை பண்ணுவிக்கவே விடலாய் இருக்கும் இ றே –
மன்னுயிர் ஆக்கைகள் –
1-உயிர் மன்னுகிற ஆக்கைகள் -என்னுதல்
2-நித்தியமான ஆத்ம வஸ்து பரிஹிக்கிற தேஹங்கள்-என்னுதல்
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் போலே இ றே இவன் திரிவது –
மகிழல கொன்றே போலே மாறும் பல் யாக்கை -முதல் திருவந்தாதி -49–இ றே
வகுள பீஜம் -ஜ்யோதிஷர் -1/10/100 கணக்கு பண்ணுவார்கள் -ஸ்தானம் படி மதிப்பு மாறுமே –
ஓர் அலகு தானே காணி ஸ்தானத்திலே நிற்பது -கோடி ஸ்தானத்திலே நிற்பதாம் இ றே -அப்படியே ஓர் ஆத்மா தானே கர்ம பேதத்தாலே தேவாதி தேஹ பேதங்களைப் பரிஹரிக்கும் இ றே
அன்றியே
3-உயிர் என்கிற ஏக வசனம் -ஜீவ அனந்யத்துக்கு உப லஷணமாய்-ஆத்மாக்கள் பரிகிரஹிக்கிற சரீரங்கள் –என்னவுமாம் –
என்னும் இடத்து –
பகவத் குணங்களை பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாதாயிற்று தோஷ பரப்பு
இவ்விடை யாட்டத்து என்றபடி –
இறை உன்னுமின் நீரே —–
இதில் அல்பத்தை ஆராயுங்கோள்-
நீரே –
இது தனக்கு ஒரு பிரமாண அபேஷையும் இலை
சதாசார்ய உபதேசமும் வேண்டா –
பூர்வ உத்தர பகவத் ஆஸ்ரயம் பிரகரணம் -அதனால் இது சேராது
இறைவனை மனனம் பண்ணுமின் -திருவடி ஆஸ்ரயிக்க அருளிச் செய்கிறார் –
————————————————————————–
அவதாரிகை –
தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்
காலம் அநாதி -மேல் அனந்தமாய் இரா நின்றது –
பற்றின காலம் எல்லாம் வேணும் இ றே விடுகைக்கும் -என்ன
த்யாஜ்ய அம்சத்தை சுருங்க அருளிச் செய்கிறார் –
-சம்சார பீஜம் இன்னது -நீர் நுமது-என்றும் அதுக்கு பேஷஜம் இன்னது-வேர் முதல் மாய்த்து- என்றும் அருளிச் செய்கிறார் –
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–
நீர் நுமது -என்று –
அநர்த்த கரமான அஹங்கார மமகாரங்கள் –நான் எனது -என்னுமத்தை பிறருக்கு உபதேசிக்கும் போது-நீர் நுமது -என்று இ றே சொல்வது
நான் என்னது -என்று தம் வாக்காலே சொல்ல மாட்டாரே நாக்கு வேம் என்று -வேம் -தத்தமாம் -க்ரூரம் –
என் உடமை -என்னுமது வேணுமாகில் தவிருகிறன்-நான் என்னுமது தவிரும்படி என் என்னில்
அஹம் அன்னம் -நான் -அடியேன் –வாசி உண்டே தமிழில் -அஹம் தாஸ்யசேர்ந்து தானே சமஸ்க்ருதம் முரட்டு பாஷை –
இவன் அஹம் என்றால் ராவணாதிகள் நான் என்றால் போலே -ஸ்வாதந்த்ர்யம் அபிமானம் தவிர்க்க வேண்டும் –
அஹம் ஆத்ம ஸ்வரூபம் சொல்லாம் -ராவணன் போலே சொல்லக் கூடாதே -தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்த –
பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு இ றே இருப்பது —பிறர் -பரன் சொத்தை -அஹம் மே-பிறர் நன் பொருள் –
தேஹத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே –
தேஹாத்மா -தேகத்தை அஹம் என்னும் ஆத்மாவாக நினைப்பது இரண்டாவது குற்றம்
அஹம் அன்னம் சொல்லலாமே ஆத்மாவின் யதாவஸ்தித ஸ்வரூபம் சம்சாரம் தீண்டாதே
முக்த தசையில் -சொல்லலாம் -அஹம் -அங்கு அடியேன் என்ற பொருளில்
ஜீவத்வாரா -பரமாத்மா பர்யந்தம் -நான் -தேகத்துடன் சென்றாலும் ஆத்மா மட்டும் நின்றாலும் குற்றம் -அவன் அளவுக்கும் செல்ல வேண்டும்
தத்வத்ரய சம்ப்ரதாயம் -எவ்வளவு அழகாக இங்கே உதவுகிறது
அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை காட்டவே அஹம் அன்னம் -நீர் நுமது -கீழ் இரண்டு நிலைகள் –
இவை வேர் முதல் மாய்த்து –
இவை வேர் முதல் மாய்க்கையாவது என் என்னில் -இது அபுருஷார்த்தம் என்னும் பிரதிபத்தியைச் சொன்னபடி –
இரண்டு வ்ருஷம் தன்னிலே சேர நின்றால் ஒன்றிலே துளைத்து பெருங்காயத்தை வைக்க –விஷம் -என்றவாறு-சில நாள் ஓன்று போலே நின்று
பின்னைப் பட்டுப் போகா நின்றது இ றே
அப்படியே அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என்றும் பிரதிபத்தி உண்டாக தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும்
அநாத்மன்யாத்மா புத்திர்வே அஸ்வே ஸ்வமிதியா மதி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
-என்று சம்சார பீஜமும் சொல்லி
அச்யுதாஹம் தவாஸ்மீதி சைவ சம்சார பேஷஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று -பரிகாரமும் சொல்லிற்று இ றே
ரஷகனாவன் அவசர ப்ரதீஷகனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை உண்டானால் விரோதி போகைக்கு தட்டில்லை என்கை-
அவசர ப்ரதீஷன் -சந்தர்ப்பம் பார்த்து இருக்கிறான் என்றவாறு –
நான் அல்லாததில் நான் என்னும் புத்தி அஹங்காரம் -என்னுடைய இல்லாதவற்றில் என்னுடைய புத்தி மமகராம்
அச்சுயுத அஹம் தவ அஸ்மி -அஹம் உபயோகம் உண்டே இங்கே
பிராரப்த கர்மா தொலைய வேண்டாமோ -அவன் அவசர ப்ரதீஷனாய் இருக்க -நானும் இசைந்தாலும்
வேங்கடங்கள் –அது சுமந்தார்கட்கே -கடங்கள் -அநாதி கால கர்மா வேம் -எரிந்து போகும்
நம -விலக்காமை -சொல்ல அவன் பிரவர்த்தன் ஆக
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தன வினை யாயின எல்லாம் தன்னைடையே போம்
நானும் வேண்டாம் நீயும் வேண்டா
கேசவா என்ன -கெடும் இடராயவன வெல்லாம் -தீது ஒன்னும் அடையா –மாதவன் என்னு என்னு ஓத வல்லீரேல்
இறை சேர்மின் –
அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த சேஷி யானவனை சேரப் பாருங்கோள்-
சேர்மின் –என்கிறார் காணும் -பற்றுமின் -சொல்லாமல் சேர்மின்-
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கையாலே -சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம் –
மரக்கலம் ஆலம்பனம் -காற்று அடிக்க கப்பல் நகர -கரைக்கு வருகிறோம் விஷ்ணு போதம் கிருபாவான் -கிருபை காற்று
-அதனால் சேர்மின் -வேலை நமக்கு இல்லையே
உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
இத்தோடு ஒக்க சீரியது இல்லை -என்னுதல்-
நேர் -என்று ஒப்பாய் –
நிறை என்று மிகுதியாய்
உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை -என்றுமாம்
பிரதமத்தில் -ஔஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் ஹிதமுமாய் -உதர்க்கத்தில் பிரியமுமாய் இருக்கும்
நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை
சம்சார ஆர்ணவ மக்நாநாம் -இத்யாதி
விஷ்ணு போதம் இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு நடத்தும் ஓடம் –
சம்சார அர்ணவம் மக்னானான் விஷயாக்ராந்த -விஷ்ணு போதம் -நகராத ஓடம் -நாம் தான் நகரணும் –
பிரமம் விபு -நகர முடியாதே -ஏஷ சேது -இக்கரையும் அக்கரையும் இங்கேயே
————————————————————————–
அவதாரிகை –
விடுகிறவை போலே அபோக்யமுமாய் சதோஷமுமாய் இராது என்று பற்றப் படுகிற விஷயத்தின் உடைய போக்யத்தை அருளச் செய்கிறார் –
புல்க வேண்டிய அவன் ஸ்வரூப வை லஷண்யம் அருளிச் செய்கிறார் -ஆத்மா -அபோக்யம் -கைவல்ய நிஷ்டரை நிரசிக்க –
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-
உரு -இங்கே ஸ்வரூபத்தை குறிக்கும்
அந்நலம் -உயர்வற உயர் நலம் –
புல்கு-சிநேக உக்தமாக செறிவாய்- புல்லு – என்றுமாம் -பாட பேதம் –அத்யந்த பிரியமாய்-
பன்மையாக கீழே மூன்று பாசுரங்களிலும் -இங்கு புல்கு ஒருமை -த்யாஜ்யங்கள் -பல உண்டே –
அதிகாரிகள் பலரும் -புத்தி பேதங்கள் குணா பேதங்கள் -இங்கே பற்ற வேண்டிய விஷயமும் ஓன்று
–புருஷார்த்த ஐக்கியம் –புத்தி ஐக்கியமும் உண்டே – அதிகாரி ஐக்கியம் -ஜாதி ஏக வசனம் -முமுஷு பிரபன்னன் ஒரு ஜாதி தானே
இல்லதும்-
பிரமாண யோக்கியம் அல்லாமையால் வரும் துச்சத்வத்தை பற்ற வாதல் –முயல் கொம்பு போன்றவை
ப்ரதீதி மாத்ரமாய்-தோற்றம் மட்டும் -பாத யோக்யமான மித்யாத்வத்தை -பொய் -பற்ற வாதல்
-முத்துச் சிப்பி வெள்ளி போலே தோன்றுமே -சூன்யவாதி மாயாவாதி படிகளின் படி சொல்ல வில்லை-
இல்லது -என்கிறது அன்று -விநாசித்வத்தைப் பற்றச் சொல்கிறது
உள்ளதும் –
இல்லாத வஸ்துவில் வ்யாவ்ருத்தியைப் பற்ற -உள்ளது -என்கிறது –
யதஸ்தி யன்நாஸ்தி -என்றும் -சத்யஞ்ச நருதஞ்ச -என்றும் சொல்லக் கடவது இ றே சித் அசித்துக்களை
அன்றியே ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் அத்தை -இல்ல வீடு என்று கொண்டு
இருப்பிடமாக உடைய ஆத்மாவின் படியும் அல்ல என்றுமாம் –
அல்லது அவனுரு –
நச்வரமாய் இருக்கிற அசித்தின் படியும் அன்று
அசித் சம்சர்க்கத்தாலே அஹம் ஸூகீ அஹம் துக்கி என்கிற சேதனன் படியும் அன்று அவன் ஸ்வரூபம்
ஆனால் எங்கனே இருக்கும் என்னில்
எல்லையில் அந்நலம் –
ஆனந்த மய -என்றும்
உணர் முழு நலம் -1-1-2-என்றும்
ஓடியாவின்பப் பெருமையொன் -8-8-2–என்றும்
சுடர் ஜ்ஞான இன்பம் -10-10-10-என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றும் சொல்லலாம் படி இருக்கும்
சமஸ்த கல்யாணத்வம் என்பதே குணமாக -தன்மையாக கொண்டவன் -என்றுமாம் –
புல்கு பற்றற்றே –புல்கு –பற்று -சேர் -அணைத்துக் கொள் மூன்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே போக ரூபமாய் இருக்கும் இறே குண ஜ்ஞானம் உடையவனுக்கு குணாதிக விஷய அனுபவம் –
அது செய்யும் இடத்தில் -ஏவ காரம் -அற்றே புல்கு –இரு கரையன் ஆகை அன்றிக்கே புறம்பு உள்ள பற்று அற்றே புல்கு
மலரிட்டு நாம் முடியும் -அவன் சூட்ட சூடிக் கொள்வோம் -உடுத்துக் களைந்த பீதகவாடை உடுத்து கலத்தது உண்டு
உபாயாந்தரங்களை விட்டே பற்று என்றுமாம் -சமித்து பாதி சாவித்திரி பாதி இல்லாமல்
பற்றிலார் பற்ற நின்றான்-7-2-7- இறே அவன் -சாதனாந்தரங்களில் பற்று இல்லாத வர்கள் பற்றும் படி திருவரங்கன் –
ஆகையால் பற்று அற்றே புல்க வேணும்–
————————————————————————–
அவதாரிகை –
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிகாரத்தையும் -இடையூறு -ஆத்ம பிராப்தி –அருளிச் செய்கிறார் –
இந்திர பதத்தைக் கோலுமவன்-இவ்வருக்கு உண்டான ஐஸ்வர் யத்தையும் கோலான்
ப்ரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன் இவ்வருக்கு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்
ஆத்மா அனுபவத்தை ஆசைப் படுமவன் ஐஸ்வர் யாதிகளில் கண் வையான்
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -நித்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான் –
ஆக இங்கன் வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார் –
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-
அற்றது பற்று எனில் -பற்று அற்றது எனில் -விஷயாந்தரங்களில் நசை அறுத்து
உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது -கைவல்யம் மோஷம் அடைந்து விடும்
அது -அந்த ஆத்ம பிராப்தி -அல்பம் என்று உணர்ந்து
செற்று -செறுத்து- ஜெயித்து
மன்னுறில் நிலை நின்ற -நிரவதிக பகவத் அனுபவம் கிட்டப் பார்க்கில்
அற்று -ஐஸ்வர்ய கைவல்ய -ஆசைகளை விட்டு
இறை பற்றே
அற்றது பற்று எனில் –
பிரகிருதி பிராக்ருதங்களில் உண்டான பற்று அற்றது என்னும் அளவிலே –
உற்றது வீடுயிர் –
ஆத்மா மோஷத்தை பிராபித்தது –
விலஷண ஜ்ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைய வஸ்துவுக்கு திரோதானத்தை பண்ணுகிற அசித் சம்சர்க்கம் இ றே
யோக அப்யாசத்தாலே கழிந்த வாறே ஸ்வரூபம் பிரகாசிக்கும் -பிரகிருதி வியுக்த -கழிந்த நித்யாத்ம ஸ்வரூபத்தை நினைக்கை தானே யோகம் –
அது நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமாய் இருக்கையாலே -இது தன்னையே அனுபவிக்க அமையாதோ என்று என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –
பிராபிக்க ஒருப்படும் பொழுதே ஜெயிக்க வேண்டும் –உற்றது -உறும் என்றபடி -கைவல்யம் அடைந்த பின்பு மீள முடியாதே -ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் –
செற்றது –
அத்தை செற்றது -அத்தை முகம் சிதறப் புடைத்து –
மன்னுறில் –
மன்ன வுறில்-தன்னைப் பற்றினால் -இன்னமும் அதுக்கு அவ்வருகு ஒரு அனுபவம் உண்டு -என்று இருக்க வேண்டாத படியான நிலைநின்ற
புருஷார்த்தத்தைப் பற்றப் பார்க்கில்
அற்றிறை பற்றே —
ஆச்ரயண காலத்தில் அவனுக்கு என்று அத்யவசித்து –சேஷியான அவனை பற்றப் பாருங்கோள்
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி இத்தை அறப் பார் என்னுதல்
இறையைப் பற்றி இத்தை அறப் பார் –அறுத்து இறையைப் பற்று -முதலி யாண்டான் கூரத் ஆழ்வான் சம்வாதம் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14–என்னுமா போலே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply