ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் –
பிராப்துச்ச பிரத்யகாத்மன-
ப்ராப்த்யுபாயம் பலம்
ப்ராப்தேச்ததா பிராப்தி விரோதி ஸ
வதந்தி சகலா வேதாஸ் சேதிஹாசபுராணகா
முனயஸ்ஸ மகாத்மா நோ வேத வேதாந்த பாரக -என்கிறபடியே
தத்வ விதேக பிரமாணமான வேதாந்த வாக்யங்களாலும்
தத் சங்க்ரஹமான-ஸ்ரீ திருமந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும்
தத் அர்த்த நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்கள் பாசுரத்தாலும்
அவஸ்யம் ஜ்ஞாதவ்யதயா அறுதி இடப்பட்ட
அர்த்த பஞ்சகத்தை
நேராக உபதேசித்து அருளுமவனே
ஸ்ரீ சதாச்சார்யன் ஆகிறான் என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார்-
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-
சம்சாரிகள் தங்களையும் ஸ்ரீ ஈஸ்வரனையும் மறந்து -இத்யாதியாலே
அர்த்த பஞ்சகத்தை உபதேசித்து அருளுமவனே ஸ்ரீ ஆச்சார்யன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் இறே
இவனும் அத்தை இட்டு அறிவித்து -காட்டும் அவன் அன்றோ ஸ்ரீ ஆச்சார்யன் -என்கிறார்
ஸ்ரீ பிள்ளையை அடி ஒத்துமவர் இவர் ஒருவருமே போலே காணும்
பேசிற்றே பேசும் ஏக கண்டராய் இருக்கும் இருப்பு உள்ளது நம் முதலிகளுக்கே இறே –
உக்தார்த்த விசதீ கார யுக்தார்த்தந்தர போதனம்-மதம் விவரணம் தத்ர-என்கிறபடியே
திருமந்த்ரத்தில் பிரதம பதமாய்
அசம்ஹிதா காரேண பதத் த்ரயாத்மகமாய் இருந்துள்ள
பிரணவத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற அர்த்தங்களுக்கு உப யுக்தங்களாயும்
தத் பிரதி பன்னங்களாயும் இருக்கிற அர்த்த விசேஷங்களுக்கு நேரே பிரகாசகமாய்க் கொண்டு
பத த்வயாத்மகமான மந்திர சேஷம்
பிரணவத்துக்கு விவரணமாய் படி இருக்கிறபடியைத் திரு உள்ளம் பற்றி
முந்துற முன்னம்
தஸ்ய பிரகிருதி லீ நஸய யா பரச்ச மகேஸ்வர -என்றும்
அகாரோ விஷ்ணு வாசக -என்றும்
துளக்கமில் விளக்கமாய் -என்றும்
அவ ரஷணே -என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ யபதியான சர்வேச்வரனையும்
அவனுடைய ரஷகத்வ சேஷித்வங்களையும்
சாப்தமாக பிரதிபாதிக்கிற சவிபக்திகமான அகாரத்தின் யுடையவும்
அதிலே அனுக்தங்களாய் ரஷண உபயோகிகளான கல்யாண குணங்களையும் சாப்தமாகச் சொல்லுகையாலே
தத் விவரணமான நாராயண பதத்தின் யுடையவும்
அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –
அம்பொன் அரங்கர்க்கும்-
அழகியதாயும்
பாவனமாயும்
இருந்துள்ள திருவரங்க பெரு நகரத்தை
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே -என்கிறபடி
தமக்கு இருப்பிடமாக யுடையராய்
சர்வ ரஷகராய்
சர்வ சேஷியாய்
அசரண்ய சரண்யத்வாதி கல்யாண குண பூஷிதரான
பெரிய பெருமாளுக்கும்
ஸ்ரீ மதுரையை –
ஸூ பா -என்றும்
பாப ஹரா -என்றும் சொன்னவோபாதி
கோயிலையும்
தென்னரங்கம் என்றும்
பொன்னரங்கம் என்றும்
சொல்லுகையாலே
இது தான் போக்யமாயும் பாவனமாயும் இ றே இருப்பது –
போக்யதைக்கு அடி –
தெழிப்புடைய காவேரி வந்து அடி தொழும் ஸ்ரீ ரெங்கம் -என்றும்
தேன் கொடுத்த மலர்ச் சோலை திருவரங்கம் -என்றும்
இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கம் -என்றும்
சொல்லுகிற
நீர் வாய்ப்பும்
நிழல் வாய்ப்பும்
நில வாய்ப்பும்
ஆகிற இவை —
பாவனத்துக்கு அடி –
திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கம் -என்றும்
செழு மணிகள் விட்டெறிக்கும் திருவரங்கம் -என்றும்
சொல்லுகிறபடி
அஞ்ஞான
அந்தகார
நிரோதித்வமும்
ஸ்வ பிரகாசத்வமும் ஆகிற இவை –
பெரிய பெருமாளுக்கு உள்ள உபய லிங்கத்வமும் இதுக்கும் உண்டு போலே காணும்
தம்மைப் பற்றி இருப்பார்க்குத் தம் படியைக் கொடுக்குமவர் இ றே அவர் தான்
அம்பொன் அரங்கர்க்கும் -என்று
அவரை ஒரு விசேஷ வஸ்துவை இட்டு ஆகாதே நிரூபிக்க வேண்டுவது
திருமால் அடியார்கள் -என்று
அத்தலையாலே இத்தலைக்கு நிரூபணம் ஆனால் போலே காணும்
இத்தலையாலே அத்தலைக்கு நிரூபணம் இருக்கிறபடி –
ராமானுஜம் லஷ்மண பூர்வஜஞ்ச -என்றது இ றே
அம்பொன் அரங்கர்க்கு –
என்னரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் -என்றும்
அரங்கமேய அந்தணனை -என்றும்
சொல்லுகிறபடியே அழகும் பாவனத்வமும் பெரிய பெருமாளுக்கே ஆகவுமாம்-
இத்தால்
சமஸ்த கல்யாண குணாத்மகத்வமும்
அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்
ஆகிற உபய லிங்க தவமும் சொல்லுகிறது
இவ் உபய லிங்கம் பரதவ உத்தம்பகம் ஆகையாலே
இத்தையே இவருக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –
அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய சாஹா மஸ்மி சனாத நீ -என்றும்
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை -என்றும் சொல்லுகிற படியே
அரங்கர்க்கு -என்கிற இடத்தில்
பிராட்டியும் பகவத் ஸ்வரூப அந்தர் பூதையாய்க் கொண்டு தோற்றுகையாலே
புருஷகார பிரகரணத்தில்
புருஷகாரமாம் போது
கிருபையும்
பாரதந்த்ர்யமும்
அனந்யார்ஹத்வமும்
வேணும் -இத்யாதிகளாலே சொல்லுகிற புருஷகார வைபவமும்
அம பொன் -என்கிற
விசேஷண த்வயத்தாலே ஸூசிப்பித்து அருளுகிறார் என்று கண்டு கொள்வது-
அன்றிக்கே
அம்பொன் -என்று அழகாலே வந்த ஸ்ப்ருஹணீயதையைச் சொல்லிற்றாகவுமாம் –
ஸ்ப்ருஹணீயதை-காமதம் காமகம் காம்யம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கையாலே கோயிலுக்கும்
சகயம் சமஸ்த ஜன சேதசி சாந்த தானம் -என்கையாலே பெரிய பெருமாளுக்கும் யுண்டு இ றே –
ரதிங்க தோயதஸ் தஸ்மாத் ரங்க மித்யுச்ச தேபுதை -என்கிறபடியே
பெரிய பெருமாளுக்கு நிரதிசய ஆனந்த வர்த்தகமாய் இருக்கையாலே
கோயிலை அரங்கம் -என்கிறது-
அம்பொன் அரங்கர்க்கும் –
போய் இந்திர லோகம் ஆளும் -என்கிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்திலே சென்று
விரஜையிலே குடைந்து நீராடி
அமாநவ கர ஸ்பர்சம் முன்னாக
அப்ராக்ருத தேஹத்தை பரிக்ரஹித்து
புகுர வேண்டி இருக்கும் பொன்னுலகு போலேயும்
சம்சார வர்த்தகமாய் இருக்கும் கொடுவுலகம் போலேயும் இருக்கை அன்றிக்கே
இச் சரீரத்தோடு புகுரலாயும்
சம்சார நிவர்த்தகமாயும்
இருக்கையாலே
அரங்க மா நகர் -என்னும்படி
விபூதி த்வயத்துக்கும் புறம்பாய்
அதேவ த்ருதீய விபூதியை இருந்துள்ள -திருவரங்கம் திருப்பதியிலே —
அடியவரை ஆட்கொள்வான் அமருமூர் -என்கிறபடியே
இங்கு உள்ளாரை அடிமை கொள்வதாக
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே
ஸ்தாவர பிரதிஷ்டை யாய்க் கொண்டு
அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற பெரிய பெருமாளுக்கும் –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும்
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றும்
சடகோப வாக்வபுஷி ரெங்க க்ருஹே சயிதம் -என்றும் -சொல்லுகிறபடி இவர் தாம்
பிரமாணம் சடஜித் ஸூ க்தி
பிரமேயம் ரங்க சந்த்ரமா -என்னும்படி
மேய சரமமாய்க் கொண்டு
மான சரமமான திருவாய்மொழிக்கு
நேரே பிரதிபாத்யர் ஆகையாலும்
பதின்மர் பாடும் பெருமாள் ஆகையாலும்
குரு பரம்பரைக்கு முதலடி ஆகையாலும்
மா மலை மற்றும் உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றுக்கும் அடித்தலை யாகையாலும்
மற்ற எம்பெருமான்களைச் சொல்லாமல் இவர் தம்மையே பிரதானராக அருளிச் செய்கிறார் –
அம்பொன் அரங்கர்க்கு -என்று விவரண விவரணீய
பாப பன்னங்களான
அகார -நாராயண -பதங்களின் யுடைய அர்த்தத்தையும்
அரங்கர்க்கு -என்கிற விபக்தியாலே லுப்த சதுர்த்தியினுடைய அர்த்தத்தையும்
உட்கொண்டு அருளிச் செய்தாராய்-
மேல் –
மகாரோ ஜீவ வாசக -என்கிறபடியே
இச் சேஷத்வ ஆஸ்ரயமான சேதன வஸ்துவை சாப்தமாக பிரதிபாதிக்கிற
மகாரத்தினுடையவும்
அதில் அனபிஹிதங்களான இச் சேதன வஸ்துவினுடைய
நித்யத்வ ஏகத்வ பஹூத் வாதிகளை
சாப்தமாகச் சொல்லுகையாலே
ஏதத் விவரணமான நார பதத்தினுடைய அர்த்தத்தையும் உட்கொண்டு அருளிச் செய்கிறார் –
ஆவிக்கும் –
பிரத்யயங்களுக்கு -பிரக்ருத்யர்தாக ஸ்வார்த்த போதகத்வம் நியதம் ஆகையாலே
லுப்த சதுர்த்யர்த்தமான சேஷத்வம்
பிரக்ருத்யர்த்தமான ஈஸ்வரகதமாக வேண்டி இருக்க
சேதனகதமான படி எங்கனே என்னில்
இங்கு சேஷத்வம் ஆகிறது சம்பந்த விசேஷாத்மகமாய்க் கொண்டு
உபய நிரூப்யம் ஆகையாலே சேதனகதமானாலும் ஈஸ்வரகதம் என்னக் குறை இல்லை இ றே-
ஆவிக்கும் –
அம் பொன் – என்கிற பதங்களை இங்கும் கூட்டிக் கொள்வது
இப்படி நிருபாதிக சேஷியான பெரிய பெருமாளுக்கு சேஷமாய்
பிரக்ருதேபரமாய்
ஜ்ஞானானந்த மயமாய்
ஜ்ஞான குணகமாய்
நிர்விகாரமாய்
ஏகரூபமாய்
பக்த முக்த நித்ய ரூபேண த்ரிவிதமான
ஆத்மவஸ்துவுக்கும்-
பதிம் விச்வச்ய -என்றும்
மூவுலகாளி -என்றும்
என்னை யாளி -என்றும் -இத்யாதியாலே
பெரிய பெருமாளே வகுத்த சேஷியாகவும்
சேதன வர்க்கம் தத் சேஷமாகவும்-சொல்லிற்று இ றே
சர்வம் ஹிதம் பிராணி நாம் வரதம் -என்கையாலே
பிராணன் ஆகிறது பஞ்ச வ்ருத்தி பிராணனே யாகிலும்
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு என்றவோ பாதி
சேதனன் இடத்திலும் பிரயோகிக்கக் காண்கையாலே
அத்தைப் பின் சென்று இவரும் இப்படி அருளிச் செய்கிறார்-
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் –
அர்த்த பஞ்சகம் தொடக்கமான வற்றிலே
ஸ்வ ஸ்வரூபம் முன்னாக பர ஸ்வரூபம் பின்னே அருளிச் செய்தாரே ஆகிலும்
யச்யாச்மி-இத்யாதி ஸ்ருதிகளிலும்
அவற்றுக்கு அடியான பிரணவத்திலும்
பிராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி வசனங்களிலும்
பர ஸ்வரூபம் முன்னாக ஸ்வ ஸ்வரூபத்தைச் சொல்லுகையாலே
அத்தை அடி ஒற்றி இவரும் இப்படி நிர்தேசிக்கிறார்-
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற சமுச்சயம் அன்வாசய மானவோபாதி
அரங்கர்க்கும் ஆவிக்கும் -என்கிற இச் சமுச்சயம்
அன்வாசயாம் அத்தனை போக்கி சமசமுச்ச்சயம் அன்று
சேஷ சேஷிகளுக்கு சம பிரதாந்யம் இல்லை இ றே –
போக மாதரம் சாம்யம் லிங்கா ச்ச -என்றும்
ஜகத் வியாபார வர்ஜம்-என்றும் சொல்கையாலே
சேதனனுக்கு ஈஸ்வரனோடே போக மாத்ரத்திலே சாம்யம் ஒழிய
சர்வ பிரகார சாம்யம் இல்லை இ றே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
மம சாதர்ம்யம் ஆகத -என்றும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -இத்யாதிகளுக்கும்
இதுவே இ றே ஹிருதயம் –
அநந்தரம்-
அவதாரண மன்யேது மத்ய மாந்தம் வதந்தி ஹி-என்றும்
அஸ்வா தந்தர்யந்து ஜீவ மாதிக்யம் பரமாத்மன
நமஸா ப்ரோச்யதே தஸ்மின் நஹந்தா மம தோஜ்ஜிதா-என்றும் சொல்லுகிற படியே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பகவத் சேஷத்வங்களை சாப்தமாக பிரதிபாதிக்கிற
உகாரத்தின் யுடையவும்
அதில் அனுக்தங்களான
ஸ்வ அனர்ஹத்வ அசித்வத் பாரதந்த்ர்யாதிகளை சாப்தமாகச் சொல்லுகையாலே
தத் விவரணமான நமஸ் சினுடையவும் அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –
அந்தரங்க சம்பந்தம் காட்டி –
இவ்விருவருக்கும் உண்டான அனன்யார்ஹ சேஷத்வம் ஆகிற
அந்தரங்க சம்பந்தத்தை
ஸ்வ சேஷ நிவ்ருத்தி
அசித்வத பாரதந்த்ர்ய பர்யந்தமாகவும்
தத் பரா காஷ்டையான பாகவத சேஷத்வ பர்யந்தமாகவும்
வெளி இட்டுக் கொடுத்தது இ றே
ஸ விவரணமான உகாரத்துக்கு அர்த்தம்
உகரோ அனந்யார்ஹம் நியமயதி சம்பந்த மனயோ-என்னக் கடவது இ றே
சம்பந்த மாதரம் இதர சேஷத்வோபா மர்தி யல்லாமையாலும்
ஸ்வ விரோத்யதை அசஹ்யம் ஆகையாலும்
அந்தரங்கம் என்றத்தை
இங்கன் விசேஷிக்கிறார் –
ஸ்தான பிரமாணத்தாலே-அவதாராணார்த்தமாக உகாரம் விசேஷண சங்கதம் ஆகையாலே
அயோக்ய அவச்சேத்மாம் இத்தனை போக்கி
அனந்யோகாவ்ய அவச்சேத்ம் ஆனபடி எங்கனே என்னில்
விசேஷண விசேஷ்யங்கள் சாமான விபக்த்யா நிர்திஷ்டங்கள் ஆனவிடத்தில்
அந்நியமம் ஒழிய அசமான விபக்த்யா நிர்திஷ்டங்களான இடத்தில் அந்நியமம் இல்லாமையாலே
இந்த ஏவகாரம் அந்யோக அவச்சேதம் என்னக் குறை இல்லை
தேவதத்தம் ப்ரத்யேவ தண்டனம் -இத்யாதி பிரயோகங்களிலே இவ்வர்த்தம் சம்பிரதி பன்னம் இ றே –
அன்றிக்கே -அந்தரங்க -சம்பந்தம் -ஆகிறது
பிதாச ரஷகஸ் சேஷி பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ச்வாம்யாதா ரோமமாத் மாச போக்தா சத்யம நூ தித்த -என்கிறபடியே
திரு மந்த்ரத்தில் பிரகிருதி பிரத்யயதாது பதங்களாலே பிரதி பாதிக்கப் படுகிற
நவ வித சம்பந்தங்கள் ஆகவுமாம்
திருமந்தரம் தான் பிரதம பதமான பிரணவத்தில் வைத்துக் கொண்டு
பிரதம அஷரமான அகாரத்தில் ப்ரக்ருத் அம்சத்தாலே
பிதா நாராயணா -என்றும்
தேவ தேவோ ஹரி பிதா -என்றும்
எம்பிரான் எந்தை -என்றும்
சொல்லுகிறபடியே பிதா புத்திர பாவ சம்பந்தத்தையும் –
அதில் அவ ரஷணே-என்கிற தாத்வ அம்சத்தாலே
கோஹ்யே வான்யாத்க ப்ராண்யாத் -என்றும்
நஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்றும்
கருத்தில் தேவும் எல்லா பொருளும் வருத்தித்த மாயப் பிரானை -என்றும்
சொல்லுகிற படியே ரஷக ரஷ்ய பாவ சம்பந்தத்தையும் –
பிரத்யயமான இதில் லுப்த சதுர்த்தி அம்சத்தாலே
பதிம் பதீ நாம் -என்றும்
ஜகத் பதிம் தேவ நாதம் -என்றும்
அமரர்கள் அதிபதி -என்றும்
சொல்லுகிற படியே சேஷ சேஷி பாவ சம்பந்தத்தையும்
த்விதீய அஷரமான உகாரத்திலே அவதாரணம் ஆகையாலே
பகவத் ஏவ அஹம் -என்றும்
லோக பர்த்தாரம் -என்றும்
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -என்றும்
சொல்லுகிறபடியே பர்த்ரு பார்யா பாவ சம்பந்தத்தையும்
த்ருதீய அஷரமான மகாரத்திலே
மநு-அவ போதனே -என்கிற தாதுவாலே
நித்யாசிதவ்ய -என்றும்
த்யேயோ நாராயணஸ் சதா -என்றும்
உணர்வின் உள்ளே இருத்தினேன் -என்றும்
சொல்லுகிறபடியே ஜ்ஞாத்ரு ஜ்ஞ்ஞேய பாவ சம்பந்தத்தையும் –
த்வதீய பதமான நமஸ் சாலே
ஈசானோ பூத பவ்யச்ய-என்றும்
ஸ்வ த்வமாத்மா நி சஞ்ச்ஞாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
உலகம் மூன்றுடையாய் -என்றும்
சொல்லுகிற படி ஸ்வ சுவாமி பாவ சம்பந்தத்தையும்-
த்ருதீய பதமான நாராயண பதத்தால் நாரம் என்கிற அம்சத்தாலே
யஸ்ய யாத்மா சரீரம் யஸ்ய ப்ப்ருத்வி சரீரம் -என்றும்
ஜகத் சர்வம் சரீரம் தே-என்றும்
உம்முயிர் வீடுடை யானிடை -என்றும்
சொல்லுகிறபடியே சரீர சரீரி பாவ சம்பந்தத்தையும்
அயநம் -என்கிற அம்சத்தாலே
சதா யாத நா-என்றும்
மயி சர்வம் இதம் ப்ரோக்தம் ஸூ த்ரே மணிகணா இவ என்றும் –
மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒளிந்தார் -என்றும் சொல்லுகிறபடியே ஆதார ஆதேய பாவ சம்பந்தத்தையும்
வ்யக்த சதுர்த்திய அம்சத்தாலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்றும்
போக்தாரம் யஞ்ஞ தபஸாம் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு -என்றும்
சொல்லுகிறபடியே போக்த்ரு போகய பாவ சம்பந்தத்தையும்
சாப்தமாகச் சொல்லுகையாலே
இது இருவருக்கும் உண்டான நவவித சம்பந்தத்தை பிரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் இ றே-
ஏவம் விதமான சம்பந்தத்தை
அறியாதன அறிவித்த -என்கிறபடியே ஓர் ஆச்சார்யன் அஜஞாதஜஞாபனம் பண்ண
இச் சேதனன் தெளிய அறிந்த பின்பு இ றே இவனுக்கு
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும்
இருக்கை யாகிற ஸ்வரூபத்தில் உணர்த்தியும் –
என் நான் செய்கேன் யாரே களைகண்-என்று இருக்கை யாகிற
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்று இருக்கை யாகிற பிராபகத்தில் அத்யாவச்யமும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -என்று இருக்கையாகிற பிராப்யத்தில் த்வரையும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -இருக்கை என்கிற விரோதியில் பீதியும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரிய-என்று இருக்கை யாகிற
உத்தேச்ய விஷயத்தில் கௌரவத்தையும்
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு -என்று இருக்கை யாகிற
உபகார விஷயத்தில் கிருதஞ்ஞதையும் –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் -என்று இருக்கை யாகிற
உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும்-
அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஞானமும் –
அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த யாதாம்ய ஞானமும்-
அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஸ்வரூப ஞானமும்-
தர்ம தர்மிகள் உடைய விசேஷ ஐக்யத்தாலே -அவனேயாய் தான் இல்லை என்னலாம் படி இருக்கையைத்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமும்–
பகவத் தாஸ்யத்தையே இட்டு சதாசாரத்தை நெகிழாதே
சப்தாதி விஷயங்களிலே அச்சமும்
கைங்கர்ய அபாவத்தில் ஆர்த்தியும்
விளைகை யாகிற சேஷத்வத்தில் கர்த்ருத்வாதி நிவ்ருத்தியும்
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களை பற்றினவாறே
நான் ஞாதா வாகையாலே அன்றோ என்னை அவன் அங்கீ கரித்தது -என்று
தன ஞாத்ருத்வத்தை இட்டு இறுமாவாதே இருக்கை யாகிற
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றினவாறே அன்றோ என்னை அவன் அங்கீ கரித்தது -என்று
தன பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை இட்டு இறுமாவாதே இருக்கை யாகிற
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
அவனுக்குத் தான் அடிமை செய்யும் இடத்தில் அது ஸ்வ ரசத்துக்கு உடலாக அன்று இராதே
அவயவ பூதமான இவ்வாத்மவஸ்து அவயவியான எம்பெருமானுக்கு எடுத்துக் கை நீட்டுகை-என்று
இருக்கை யாகிற போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
தொடக்கமான ஆகார விசேஷம் உண்டாகிறது –
அந்தரங்க சம்பந்தம் காட்டி –
இஸ் சம்பந்தம் தான்
பிராப்தம் லஷ்மீபதேர் தாஸ்யம் சாஸ்வதம் பரமாத்மன -என்றும்
தாஸ பூதாஸ் ச்வதஸ் ஹ்யாத்மான பரமாத்மன -என்றும்
நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு ஆராயில்
நெஞ்சே அநாதி அன்றோ –
என்றும் சொல்லுகிறபடியே வந்தேறி அன்றிக்கே அநாதி யாய் போருகையாலே
காட்டி -என்கிறார்
முன் கண்டார் இருக்குமது இ றே லோகத்தில் காட்டக் கடவது
இஸ் சம்பந்தத்தை ஒருவன் வெளி இட்டு கொடுக்கப பெறாமையாலே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்கிறபடியே
நெடும்காலம் தன்னை உள்ளபடி அறிய மாட்டாமல்
தேஹாத்மா அபிமானியாய்
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -என்றும்
மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து -என்றும்
வழி திகைத்து -என்றும்
அசந்நேவ-என்றும்
பொருள் அல்லாத -என்றும்
சொல்லுகிற படியே உரு மாய்ந்து நித்ய சம்சாரியாய் போந்திருந்து
மகாரேண ஸ்வ தந்த்ரஸ் ஸ்யாத் -என்கிறபடியே
பத த்வயாத்மகமான நமஸ் சிலே ஸ்வ ஸ்வாதந்த்ர்யா பிரதிபாதகமான
மகாரத்தின் அர்த்தத்தையும் உட்கொண்டு அருளிச் செய்கிறார்–
-தடை காட்டி –
கீழ்ச் சொன்ன இஸ் சம்பந்த ஞானத்துக்கும் பிரதி சம்பந்தியான
ஈஸ்வரன் இடத்தில் பரதவ பிரதிபத்திக்கும்
சேதனன் இடத்தில் பகவத் அனன்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கும்
மேல் சொல்லுகிற திவம் என்கிற வாழ்வு ஆகிற கைங்கர்யத்தில் பிராப்யத்வ பிரதிபத்திக்கும்
சேர்ந்த நெறி யாகிற அவன் திருவடிகளிலே பிராபகத்வ பிரதிபத்திக்கும்
விரோதி இன்னது என்னும் இடத்தை வெளி இட்டுக் கொடுத்து
அவ்விரோதி யாகிறது –
அபர வஸ்துக்களில் பரதவ புத்தியும்
அரஷ்யகர் இடத்தில் ரஷகத்வ புத்தியும்
அநீஸ்வரன் இடத்தில் ஈஸ்வரத்வ புத்தியும்
அசேஷிகள் இடத்தில் சேஷித்வ புத்தியும்
அனுபாச்யர் இடத்தில் உபாஸ்ய புத்தியும்
அநாத்மாவில் ஆத்மபுத்தியும்
அச்வதந்த்ரனான தன்னிடத்தில் ஸ்வ தந்திர புத்தியும்
அனுபாயங்களில் உபாயத்வ புத்தியும்
அபந்துக்களில் பந்துத்வ புத்தியும்
அபோக்யங்களில் போக்யதா புத்தியும்
பகவத் கைங்கர்யங்களில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியும்
இவை எல்லா வற்றுக்கும் வேர் பற்றான
அஹங்கார மமகாரங்களும்-
இவ்விரோதி வர்க்கத்தை இ றே
புரத ப்ருஷ்ட தஸ் சைவ ஸ்தான தச்சவிசேஷத நமஸா விஷய தே ராஜன் -என்றும்
ஈஷி தேன புரத பச்சாதபிஸ் தா நதா -என்றும் சொல்லுகிறபடியே
காகாஷி நியாயேன் பிரதம சரம பதங்களோடு அந்விதமாயும்
சவாத ஏவ ஸ்தாநியான நமஸ் சோடே அந்விதமாயும்
இருந்துள்ள சகண்ட நமஸ் சில்
ஷஷ்டைந்தமான மகாரம் காட்டுகிறது
ஏவம் பூதமான இந்த விரோதி வர்க்கத்தைக் காட்டுகை யாவது –
நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ் தம்பதி மீஸ்வரம்
யோனய மர்ச்சயதே தேவம் பரபுத்த்யா சபாபபாக் -என்றும்
ஸ்வாதந்த்ர்யம் அந்ய சேஷத்வம் ஆத்மா அபஹரணம் விது -என்றும்
ஈச அனன்யார்ஹ சேஷத்வம் வருத்தம் த்யாஜ்ய மேவதத் -என்றும்
வாசூதேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாசதே த்ருஷி தோஜாஹ் நவீ தீரே கூபம் நதி துர்மதி -என்றும்
உபாய உபாய சம்யோகே நிஷ்டயாஹீய தே நயா -என்றும்
விஷயாணாந்து சம்யோகாத் யோபி பர்த்தி சுகம் நர
க்ருத்யத பணி நஸ்சாயம் விசரா மாயா ஸ்ரயேதச -என்றும்
அஹங்காரார்த்த நாமேஷூ ப்ரீதி ரத்யை வனச்யது -என்றும்
சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் தொடக்கமானர்வர்கள் இடத்தில் பரத்வாதி பிரதிபத்திக்கு விரோதியான
இந்த விபரீத புத்தி த்யாஜ்யம் என்னும் இடத்தை ஸநிதர்சனமாகவும்
சோபபத்திகமான ஸ்வ உபதேசத்தாலே விசத தமமாம்படி வெளி இட்டுக் கொடுக்கை-
அநந்தரம்
சாதனம் நம சாததா-என்றும்
தஸ்மாத் சதுர்த்யா மந்திரஸ்ய ப்ரதம் தாஸ்யம் உச்யதே -என்றும் சொல்லுகிறபடியே
உபாயவாசியான நமஸ் சினுடையவும்
சர்வ தேச சர்வகால சர்வ அவசத உசிதமான கிஞ்சித் காரத்துக்கு பிரகாசகமாய் இருந்துள்ள
வ்யக்த சதுர்த்தியினுடையவும்
அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –
உம்பர் திவம் என்னும் வாழ்வுக்கு
சேர்ந்த நெறி காட்டுமவன் -என்று
தேவா நாம் பூர யோத்யா-என்றும்
வானவர் நாடும் -என்றும் சொல்லுகிறபடியே
இவ்வருகு இருப்பார்க்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள நித்ய சூரிகளுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாய்-
தெளி விசும்பு திரு நாடு -என்றும்
அத்யர்கா நலதீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மகாத்மான -என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்
த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்
த்ரிபாத் விராட் -என்றும் சொல்லுகிறபடி
சர்வேச்வரனுக்கு போகய போக உபகரண போக ஸ்தான ரூபேண
இருந்துள்ள த்ரிபாத் விபூதியிலே
நச புனராவர்த்ததே -என்றும்
அநாவ்ருத்திஸ் சப்தாஸ் -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் -என்றும்
சொல்லுகிறபடியே புநரா வருத்தி இன்றிக்கே
நித்ய கைங்கர்யத்திலே நிரதராய் இருக்கை யாகிற வாழ்வுக்கு
நேரே அனுரூபமான உபாயத்தை வெளி யீட்டுக் கொடுக்குமவன் –
உம்பர் திவம் –
தேசிகனைப் போலே
தேசத்தையும் ததீயரை இட்டு நிரூபிக்க வேண்டி இருக்கும் போலே காணும்
திவம் -என்று சொன்னதுக்கு அடி பொன்னுலகம் என்னும்படியான நிலம் இது வாய்த்து -என்றும்
இமான் லோகன் காமான் நீகா மரூப்ய நு சஞ்சரன் -என்றும்
ஸ்வர சஞ்சரணம் ஆகையாலே இ றே விரோதி என்றும் –
வாழ்வுக்கு –
நித்ய கைங்கர்யம் என்றும் வாழ்ச்சி என்றும் பர்யாயம் போலே காணும் –
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இ றே –
சேர்ந்த நெறி –
அனுரூபமான உபாயம் –
வாழ்வுக்குச் சேர்ந்த நெறி என்று
பிராப்ய பிராபகங்களைச் சேர ஒன்றுக்கு ஓன்று சத்ருசமாக
அருளிச் செய்தது
ச்வீகார விஷய பூதன் -பிராபகம் -பரிசார்யா விஷய பூதன்பிராபகம் என்கையாலே
இவ்விரண்டின் உடைய ஐக்யத்தைப் பற்ற –
உபாய பிரகரணத்தில் -இது தன்னைப் பார்த்தால் -இத்யாதிகளில் சொல்லுகிற உபாய வைபவத்தை
சேர்ந்த -என்கிற விசேஷணத்தாலே ஸூசிப்பித்து அருளுகிறார் ஆயிற்று –
சேர்ந்த நெறி -என்கையாலே
சேர்ந்த நெறியும் உண்டாய் இருக்கும் ஆகாதே தான்
பக்த்யா பரம்யாவாபி -என்கிறபடியே
மோஷ சாதனத்வேன வேதாந்தங்களில் விஹிதமாய்த்தல்ல -என்கிறபடியே
விவேகாதி சாதனா சப்தக சாத்தியமாய்
தருவா நு ஸ்ம்ருதி ரூபமாய்
கீழ்ச் சொன்ன பிராப்யத்துக்கு அத்யந்த வி சத்ருசமாய்
விளம்ப்ய பல பிரதமாய் இருக்கும் பக்தி உபாயம் –
காட்டுமவன் அன்றோ ஆச்சார்யன் –
இப்படி அம பொன் அரங்கர்க்கு -என்று
உபய லிங்கத்வ விசிஷ்டமான பர ஸ்வரூபத்தையும்
ஆவிக்கு -என்று
தத் அநன்யார்ஹ சேஷமான ஸ்வ ஸ்வரூபத்தையும்
தடை -என்று
த்யாஜ்யமான விரோதி ஸ்வரூபத்தையும்
திவம் என்னும் வாழ்வுக்கு -என்று
ஏதன் நிவ்ருத்ய அந்தர்பாவியான புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
சேர்ந்த நெறி -என்று
இப்புருஷார்தத்துக்கு சத்ருச சாதனமான உபாய ஸ்வரூபத்தையும்
திருமந்திர உபதேச முகேன
ஸூ க்ரஹகமாகவும்
ஸூ வ்யக்தமாகவும்
வெளி இட்டு கொடுக்குமவன் அன்றோ
சதாச்சார்யன் -என்கிறார்
இப்படி உபதேசிக்கும் அவனுக்கு இ றே
ஆசிநோ திஹி சாஸ்த்ரார்ததா நாசாரே ஸ்தாப யத்யபி
ஸ்வ யமாசரதே யஸ்து ஸ ஆசார்ய இதீரித-என்று சொல்லுகிற ஆச்சார்ய லஷணம் உள்ளது –
நேரே ஆச்சார்யன் எனபது -சம்சார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை -என்கிற
திவ்ய ஸூ க்தியை உட்கொண்டு
காட்டுமவன் அன்றோ ஆச்சார்யன் -என்று
பிரசித்தி தோன்ற அருளிச் செய்கிறார் –
—————————————————————————
விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply