ஸப்த காதை —2–அஞ்சு பொருளும் அளித்தவன் பால்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக் கொடியர் நாம் சொன்னோம் -நஞ்சு தான்
ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை –2

——————————————————————————————

அவதாரிகை –

இப்படி ஸ்வ உபதேசத்தாலே அர்த்த பஞ்சக ஞானம் உண்டாகும் படி
விஷயீ கரித்து அருளி
ஏதன் முகேன மகா உபாகரகனான ஸ்வ ஆச்சார்யன் பக்கலிலே –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
சொல்லும்படியான உபகார ஸ்ம்ருதியாலே
ததா மந்திர பிரதே குரௌ த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா -என்றும்
மந்த்ரத்திலும்
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
பண்ணக் கடவ பிரேமத்தில் காட்டில்
அதிசயமான பிரேமம் இல்லாதார்
ஸ்வ ஸ்பர்ச மாத்ரத்திலே முடிக்க வற்றதான விஷத்திலும் அதி க்ரூரராய்
அத்தைப் போலே நஸ்வரமான சரீரத்தை நசிப்பித்து விடுகை அன்றிக்கே
நித்தியமான ஆத்மவஸ்துவை நசிப்பித்து விடுமவர்
என்கிறார் —

——————————————————————————————-

வியாக்யானம் –

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார் –
உய்யும் வகை-என்றும்
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்றும்
நன்கு அறிந்தேன் -என்றும்
உணர்வின் உள்ளே -என்றும்
ஆம் பரிசு -என்றும்
அவஸ்ய ஞாதவ்யதயா அறுதி இடப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும் உபதேசித்த
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்குமவர்கள் –

அஞ்சு பொருளும்
இவ் வர்த்த பஞ்சகத்தில் ஓர் ஒன்றும் உபதேசித்த அளவில்
கை வாங்கி இருந்தானாகில் அன்றோ
இவன் பிரேமம் அற்று இருக்கலாவது –

அஞ்சு பொருளும்-
வதந்தி சகலா வேதா -என்கிறபடியே
வேதைக சமதிகம்யமான அர்த்த பஞ்சகத்தை இ றே இவன் உபதேசிப்பது –

அளித்தவன் –
இவ்வர்த்த பஞ்சகத்தை –
சேவயா உபதேஷ்யந்தி -என்றும்
குருக்களுக்கு அனுகூலராய் -என்றும் சொல்லுகிற படியே
ஸ்வ அனுவ்ருத்தியாலே பிரசன்னனாய்க் கொண்டு உபதேசிக்கை அன்றிக்கே
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்கிறபடியே
இத்தலையில் ஏதேனும் ஒரு நன்மை யாதல்
த்ருஷ்ட பிரயோஜ நத்தை யாதல்
தன்னிடத்தில் ஆச்சார்ய பதத்தை யாதல்
க்யாதி லாப பூஜைகள் ஆதல்
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பாரதந்த்ரயத்தை யாதல்
கணிசியாதே
க்ருபயா நிஸ் ப்ருஹோ வதேத் -என்கிறபடியே
தங்கள் துர்கதியே பற்றாசாக யுண்டான
பரம கிருபையாலே
நிரபேஷனாய்க் கொண்டு உபதேசித்து அருளினவன் –

அளித்தவன் –
ஸூஸ்ரூ ஷூரஸ் யாதய-என்கிறபடியே
அவஸ்யம் கர்த்தவ்யதயா விஹிதையான ஸூ ஸ் ரூ ஷை முன்னாக
உபதேசித்தவன் ஆகில் இ றே இவனுக்கு பிரேமம் அற்று இருக்கலாவது
இத்தலையில் அர்த்தித்வம் கூட இல்லாது இருக்க
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே
கிருபை வடிம்பிட்டுக் -வரம்பிட்டுக் -கொடுக்க
தத் பரதந்த்ரனாய்க் கொண்டு அளித்தான் ஆயிற்று-

அன்பிலார் –
அங்கீ கரிக்கில்
உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -என்று
தத்வ தர்சிகளால் அவஸ்யம் கர்த்தவ்யதயா அறுதி யிடப் பட்ட பிரேமம் இல்லாதவர்கள்–
ஏவம் பூதரான இவர்கள் படி எங்கனே என்னில் –
நஞ்சில் மிகக் கொடியர் –
நஞ்சு கொடியது
இவர்கள் மிகக் கொடியர்
விஷம் க்ரூரமாய் இருக்கும்
இவர்கள் அதிலும் காட்டில் க்ரூரராய் இருப்பீர்கள்

இவ்வர்த்தத்தை அறியும் படி எங்கனே -என்னில்
நாம் சொன்னோம் –
வேறு ஒரு பிரமாணம் கொண்டு -ஆதல்
உபதேசம் கொண்டாதல்
அறிய வேண்டாதபடி
அவதார விசேஷமான பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளிலே
சிரகாலம் சேவை பண்ணி
தத்வ ஹித புருஷார்த்தங்களை சரம பர்யந்தமாக அருளிச் செய்யக் கேட்டு
தந் நிஷ்டராய் இருக்கிற நாம் சொன்னோம்

நாம் சொன்னோம் –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளை ஆஸ்ரயித்த
தமக்கு ச ப்ரஹ்மசாரிகளான
கூர குலோத்தம தாசர் தொடக்கமானவர்களைக் கூட்டிக் கொண்டு
நாம் -என்கிறார்
நாம் அறுதி இட்ட அர்த்தம் -என்று லோகம் பரி க்ரஹிக்கும்படியான
பெரு மதிப்பராய்
ஆப்த தமராய்
சர்வஞ்ஞராய்
இருக்கையாலே -நாம் சொன்னோம் -என்கிறார் –

சொன்னோம் –
சொல்லுமவிடு ஸ்ருதியாம் -என்னும்படியான ஏற்றத்தை யுடைத்தாயும்
ரிஷீணாம்பு நராத்யா நாம் வாச மரத்தோ நு தாவதி -என்னும்படி
அர்த்த ஸ்பர்சியுமாய் இ றே
தத்வ தர்சிகளாய் இருப்பார் வார்த்தையும் இருப்பது-

நஞ்சின் கொடுமை எங்கனே
இதன் கொடுமை எங்கனே -என்ன
அவ்விரண்டையும் அடைவே தர்சிப்பிக்கிறார் மேல்
நஞ்சு தான் ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் –
ஊன் ஆகிறது மாமிசமாய்
ஊனை-என்றது மாம்ச பிரசுரமான சரீரத்தை -என்றபடி
மாம்சத்தை சொன்ன இது
மற்றும் அதல் உண்டான
அசக்ருபூயவிண் மூத்திரஸ் நாயு மஜ்ஜாச்திகளுக்கு எல்லாம் உப லஷணம் –
மாம்சாஸ் ருக்பூய வி ண் மூத்ராஸ் நாயு மஜ்ஜாச்தி சம்ஹதள தேக -என்று
மாம்சாதி மயமாக வி றே இத் தேகத்தை நிரூப்கராய் இருப்பார் நிரூபிப்பது
புண்ணை மறைய வரிந்து -என்கிறபடி தோலை மேவிக் கைபாணி இட்டு
மெழுக்கு வாசியாலே பிரமிக்கும்படி பண்ணி வைக்கையாலே
ஆந்தரமான மாம்சாதிகள் நேராக தோற்றுகிறன வில்லை –
யதி நா மாஸ்ய தேஹச்ய யதந்தஸ் தத் பஹிர் பவேத்
தண்ட மாதாய லோகோ யம் ஸூ ந காகா நிவாரயேத்-என்கிறபடி
அகவாய் புறவாய் ஆனால் காக்கை நோக்கப் பணி போரும்படி இவை நேர் கொடு நேர் தோற்றும் இ றே
ஆனாலும்
மாம்ச பிரசுரம் ஆகையாலே அன்றோ
ஊன் -என்றும்
ஊனில் வாழ் உயிர் -என்றும்
ஊனேய் குரம்பை -என்றும்
ஆழ்வார்கள் நிர்ததேசித்தவோபாதி
இவரும் ஊனை என்று நிர்தேசித்து அருளுகிறார் –
சரீரம் வ்ரணவத் பச்யேத்-என்று சொன்னாரும் உண்டு இ றே-

நஞ்சு தான் ஊனை முடிக்கும்
உப புக்தும் விஷம் ஹந்தி -என்கிறபடி
விஷமானது ஸ்பர்ச மாத்ரத்தாலே
மாம்ச பிரசுரமான சரீரத்தை முடிக்க வற்றை இருக்கும்
முடிக்கையில் அதுக்கு உண்டான பிரதாந்யம் தோற்ற -நஞ்சு தான் -என்கிறார்
முடிக்கும் -என்றது ப்ராயிக அபிப்பிராயம்
மணி மந்த்ராதிகளும் உண்டாம் போது முடிக்க மாட்டாது இ றே

அது உயிரை முடிக்கும் –
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும் -அன்றும் தன் ஆரியன் பால் அன்பு ஒழியில் -ஞான சாரம் -என்கிறபடியே
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவன் –
சர்வ ஸூ கருத்தான ஈஸ்வரனும் கூட ஷிபாமி -ந ஷமாமி -களைப் பண்ணி
கை விடும்படி இலக்காய் இருப்பவன் ஒருவன் ஆகையாலே
ஸ ஆத்மஹா -என்கிறபடியே
இவன் நித்தியமான ஆத்மாவை முடித்துக் கொள்ளுமவன் —

நஞ்சு தான் -இத்யாதி –
விஷமானது –
சரீராக்ருதிபே தாஸ்து பூபைதே கர்மயோ நய -என்னும்படி
வந்தேறியான சரீரத்தை முடித்து
ஆத்மாவினுடைய ஸ்வா பாவிக விகாரத்துக்கு ஓர் இடைச் சுவரைப் போக்கும்
இவன் ஆத்மாவினுடைய ஸ்வா பாவிக ஆகாரத்தை முடித்து
அழுக்கு உடம்பும் இனி யாம் உறாமை -என்னும்படி துஸ்
ஸ்ஹமான
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொண்டு நித்ய சம்சாரியாய் இருக்கும் –

நஞ்சின் வியாபாரம்
ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்றும்
இந்த உடம்போடு இனி இருக்கப் போகாது -என்றும்
சொல்லுகிறபடி
இது த்யாஜ்யம் என்னும் பிரதிபத்தி யுண்டாய்
அத்தை கழித்து கொள்ள வேணும் என்று இருக்கும் ஜ்ஞான விசேஷஞ்ஞ யுகதர்ர்க்கு
இங்கனே யாகிலும் இவ் விரோதி இவனுக்கு கழியப் பெற்றது இ றே -என்று
உகக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு அபிமதமாய் இருக்கும் –

இவன் வியாபாரம்
உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்றும்
உலகினது இயலவே -என்றும் சொல்லுகிறபடியே
ஆண்டாளுக்கு வீர ஸூ ந்தர ராயன் செயல் அநபிமதமானவோ பாதி
அவர்கள் நோவுபாட்டுக்கும் ஸ்வ உத்கர்ஷத்துக்கும் வெறுப்புக்கும் உறுப்பாய்க் கொண்டு அ நபிமதமாய் இருக்கும்
ஆச்சார்ய விஷயீ காரத்தைப் பெற்றும் இவன் இப்படி தன்னைத் தானே முடிப்பான் ஒருவன் ஆகையாலே
அசத் ப்ராயன் என்றும்
அத்ரஷ்டவ்யன் -என்றும்
நினைத்துப் படர்க்கையாக -அது -என்கிறார் –

உம்மைப் போல் மற்றை யாராகிலும் இங்கன் சொன்னார் உண்டோ என்ன –
என்று ஈனமிலார் சொன்னார் இவை –
நாமே அன்று-
நமக்கு தேசிகராய் இருப்பாரும் இவ்வர்த்தத்தைச் சொன்னார் -என்கிறார் –
-என்று -இவை -ஈனமிலார் சொன்னார்-
நஞ்சு தான் அநித்தியமான சரீரத்தை முடிக்கும்
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவன் நித்தியமான ஆத்மவஸ்துவை முடிக்கும் என்று
இவ்வர்த்தத்தை ஸ்வா சார்யன் பிரேமம் அற்று இருக்கை யாகிற
ஈனம் -இலா -தாழ்வில்லாத –
நம் பூர்வாச்சார்யர்கள்
விஷதா தோப்யதி விஷம கலஇதி நம் ருஷா வதந்தி வித்வாம்ச
யதயம் நரு லத்வேஷீ ஸ குலத்வேஷீ புன பி ஸூ ந -என்று
லௌகிகர் விஷயமாக அபியுக்தர் சொன்னவோபாதி
தம் தம்மைப் பற்றி இருக்குமவர்களை பார்த்து
தாம் தாம் பரோக்திகளாலே விசத தமமாகச் சொல்லி அருளினார்கள் –

ஆச்சர்ய விஷயத்தில் பிரேமம் அற்று இருக்குமத்தில் காட்டில்
நிஹீ நதை இல்லை என்றும்
இதில் இருக்குமத்தில் காட்டில் உத்கர்ஷம் இல்லை என்றும்
திரு உள்ளம் பற்றி
ஈனமிலார் -என்கிறார் காணும்
சொன்னார் –
அவர்கள் கரண த்ரய சாரூப்யம் யுடையராய் இருப்பார் சிலர் இ றே
யத் வசஸ் சகலம் சாஸ்திரம் -என்றும்
க்ரீடார்த்தம் அபியத் ப்ரூ யுஸ் ஸ தர்ம பரமோமத -என்றும்
சொல்லும் படி காணும் அவர்கள் திவ்ய ஸூ க்தியின் மெய்ப்பாடு இருப்பது –

———————————————————————————-

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading