திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

உபசரித்தல் முன்னாக
தெய்வப் பெண்கள் உகந்து
இவர்களை வாழ்த்தினார்கள் –
என்கிறார் –

———————————————————————————————————————————————-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

———————————————————————————————————————————-

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே
வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு
நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்
இவிடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்
ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மாற்
குளிரப் பார்க்குமாறு போலே
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று
கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே
பரிபவம் செய்யப் பட்டவன்
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

மானஸ அனுபவம்
எல்லாருக்கும் தமக்கு கிடைத்த பேறு
அன்யாபதேசம்
நாரணன் தமர்
தன்னைக் கண்டு சொல்லாமல்
தமர்களை கண்டு
வலிவில் மடுத்து
யாக பலங்களை சமர்பித்த அளவே அன்றிக்கே
வைதிகர் வேத நல வாயினர்
அங்கும் ஆராதானாதிகள் உண்டு
சாதனானுஷ்டானம் அங்கும்
அகில் தொடக்கமான த்ரவ்யங்களை கொண்டு விரை கமழ் நறும் புகை
பிரவர்த்தித்தார்கள்
ச்ப்ருஹநீயமான புகை
காலங்கள் வலம்  புரி கலந்து எங்கும்  இசைத்து த்வநித்தார்கள்
மாற்றி மாற்றி
த்வனிக்கும் பொழுது -இசைத்தனர் -கின்னரர் போல் யார் என்று சொல்லாமல்
ஆழியான் தமர் நீங்கள் வானகம் ஆள்மின்கள்
பரம ஆகாசம் ஆள ஸ்தோத்ரம்
பக்தாநாம் தவம் பிரகாசதே -தன் விபூதியை அவனும் இருப்பது
திரு சின்னம் கௌரி காளம்
ஆளுகைக்கு குறை என்ன என்பார்கள்
வாள் ஒண் கண் மடந்தையர் ஒளி மிக்க மடந்தையர்
அங்கும் ஸ்திரீ ரூபத்தில் முக்தர் கைங்கர்யம்
ஆதிசேஷன் பாம்பு உண்டு
உரைத்தனர் தம் தேவியர்க்கே கீழே 7எலாம் பத்து கடைசி பாசுரம்
பூசித்து உரைப்பர் தம் தேவியர்க்கே
கண் அழகாய் வர்ணித்து
தாய்மார்கள் தேசாந்தரம் போன பிரஜையை குளிர நோக்கு
இத்தனை நாள் கை கழிய போனார்களே
ஒளியை உதிய அழகிய கண்களால் குளிர நோக்கி
ஸ்வரூப விஷயம் சோழ வில்லை
இவர்களை கண்டதாலே கண்ணுக்கு உண்டான ஒளியையும் அழகையும்  சொல்கிறார்
புத்திக் கணித்தன
மகிழ்ந்தே
பக்தாக்கள் சொல்வதால் இல்லை
ப்ரீதியால்  ஆசை உடன் செய்கிறார்கள்
பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசர் இங்கே  பரிபவம் கேலி செய்ய
அங்கெ அதே காரணம் சத்கார்யம்
தனக்குள்ளு அவ்வருகே உயர்ந்தவர்கள்
இவர்களை காட்டிலும் மேம்பட்டவர்கள் இல்லை
அவர்கள் கூட கௌரவிக்கிரார்கள்

————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading