ஆதி வாஹிகத் தலைவர்களான
வருணன் இந்த்ரன் முதலானவர்களும்
மற்றும் உள்ளாறும்
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை
அருளிச் செய்கிறார் –
———————————————————————————————————————–
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
———————————————————————————————————————–
மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –
என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –
வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்
வாசல் -வழி
அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்
என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –
மேலே உள்ள லோகங்களிலே
வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்
தங்கள் யாகங்களின் பலன்களை
இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்
தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ
பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –
———————————————————————————————————————————————————-
Leave a Reply