திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மருத்துக் கணங்களும்
வசுக் கணங்களும்
தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்
என்கிறார் –

————————————————————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

—————————————————————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்
ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி
திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது

கிளர் ஒளி மணி முடி –
மிக்க ஓளியை உடைத்தாய்
ஆதி ராஜ்ய சூசகமான திருமுடி –
மருதரும் வசுக்களும் அவன் சென்று செய்த கிருஷியின் பலம் அன்றோ
என்று கொண்டாடா நிற்பார்கள்
வியூக விபவங்களின் அளவு அன்றிக்கே
திருக் குடந்தையிலே திருக் கண் வளர்கிற
நீர்மையிலே தோற்று
பரம்பரையாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ
இவர்கள் என்று ஆயிற்று அவர்கள் ஆதரிப்பது –

பரம பதம் அணித்தான போதும் ஆரா அமுதனை நினைந்து கொண்டே அருளுகிறார் நம் ஆழ்வார் இதில்
திருமங்கை மன்னனும்
தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும்
சூழ்புனல் குடந்தையே தொழுது -என்றும்
சொற் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும் –
திரு எழு கூற்று இருக்கை-பிரபந்தமும்
சரம பிரபந்தம் திரு நெடும் தாண்டகத்தில்
தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைத்திட்டேன் –
என்றும் திருக் குடந்தை விஷயமாக அருளிச் செய்தார் –

மருத் கணங்கள்
வசுக் கணங்களும்
தங்கள் எல்லையில் -தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம்
செல்லலாம் இடம் எல்லாம் சென்று
இன்னும் பரம பதம் புக வில்லை
வழியில் உள்ள லோகங்கள் சொல்லி கொண்டு
ஒரு நிமிஷம் மாதரம் லோகாந்தரம் போனவர்கள் ஆகையால்
தொடர்ந்து
வேகமாக போக
நிமிஷம் இமை கொட்டும் காலம்
தேவர் அநுமிஷார்
ஸ்தோத்ரம்  பண்ணிக் கொண்டு பின் தொடர்ந்து
எல்லைக்குள் பர்யாப்தி பிரவாமையாலே
சடக்கு என போவதற்கு அடி ஏன் என்னில்
காண்பது ஏன் ஞான்ற்று கொலோ
உடன் கூடுவது எண்டு  கொலோ
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும்
அவனும் த்வரிப்பவன்
நஜீவேயம்  ஷணம் அபி துடித்துக் கொண்டு
எல்லையும் தாண்டி
கேசவன்
கோவிந்தன்
பிரகமாதிகளுக்கு முகம் கொடுக்க கடல் கிடந்தது -கேசவன்
சயனம் இவர்கள் குறை தீர்க்க
பரமபதம் களவு இருக்கையாக
ஆழமான கடல்
எம் கேசவன் ஆஸ்ரிதருக்கு கேசி அளித்து
எம் கோவலன்
கிருஷ்ணன் பிற்பாடருக்கு
குடந்தை எம் கோவலன்
காஞ்சி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்
குடந்தை திருக் கோவலூர்
இரண்டுக்கும் பெருமை
திவ்ய பிரபந்தம் பெற்று கொடுத்த
குடையில் உள்ள கோவலன்
குடி அடியார் இவர்கள் என்று கொண்டு
இதனால் திரு நாட்டிலும் மறக்க முடியாத திருக் குடந்தை
ஆரா அமுதே மூல காரணம்
முன்னமே படிந்தது இருந்தது ஆழ்வாருக்கு சர்வஞ்ஞன்
திருமங்கை
பாடத் தொடங்க திருக் குடந்தையே தொழுது இரண்டாம் பாட்டில்
திரு நெடும் தாண்டகம் குடந்தை அடி நாயேன் தலைக் கட்டி
திரு ஏழு கூற்று இருக்கையும் அருளிச்செய்தார்
குடந்தையன் கோவலன் இரண்டு திவ்ய தேச அனுபவம்
அடியார் என்று கொண்டு
முதல் அவதாரம் அங்கே திவ்ய பிரபந்தங்கள்
மிக்க ஒளியை உடைய
ஆதி ராஜ்ய சூசகம் திரு அபிஷேகம்
குடி அடியாள பரம்பரையாக பனி செய்து
எழுதிக் கொடுத்து
ஸ்தோத்ரம் சொல்லி
நோ பஜனம் ஸ்மரம் இருந்தாலும் மறக்க முடித்த திவ்ய தேசங்கள்
தரமி ஐக்கியம்
அடியவர்களுக்காக ஆக்கி இருவரும் உண்டே

———————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading