தன் உடைமையாய் இருந்து
நலிகிற பூவைகளைக் குறித்து
அவன் தான் முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான் –
இனி உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை –
என்கிறாள் –
—————————————————————————————————————–
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏ ழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்
——————————————————————————————————————–
அந்தரம் நின்று உழல்கின்ற –
உங்களுக்கு இங்கு நலிய பொருள் இன்றிக்கே இருக்க
நடுவே நின்று பயன் இல்லாமலே வருந்து கின்றீர்கள் -அத்தனை –
யானுடைப் பூவைகாள் –
என்னுடைய பூவைகாள் –
எல்லாருக்கும் பொதுவாய் இருப்பார் செய்வனவற்றை -குயில் அன்றில் – மயில் -நம் கண்ணன் -போல்வார்
சிலருக்கு உடைமையாய் இருப்பார் செய்யலாமோ –
நான் என் உடைமை என்று நினைக்க அமையுமே அன்றோ துன்புறுத்துகைக்கு -நம் திரு மார்பன் –
அவனும் என் உடையவன் ஆதலால் அன்றோ நலிந்தான் –
நும் திறத்து ஏதும் இடை இல்லை –
உங்களுக்கு என்னை நலிகைக்கு ஓர் இடம் இல்லை –
அன்றிக்கே
உங்கள் பாரிப்புக்கு என் பக்கல் ஓர் இடம் இல்லை -என்றுமாம்
குழறேன்மினோ –
எழுத்துக்கள் இன்றிக்கே இருக்கும் ரசமான சொற்களைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள் –
அவன் தான் செய்வதற்கு ஒருப்பட்ட கார்யத்தில் நெகிழ நின்றான் ஆகில் அன்றோ
நீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –
அதற்கு உங்களுக்கு இடம் வைத்தானோ அவன் -என்கிறாள் மேல் –
இந்திர ஞாலங்கள் காட்டி –
கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும்
சீலத்தையும்
செயலையும் –
காட்டி
அன்றிக்கே –
இவை நிலை நில்லாமையாலே -பொய்கள் என்கிறாள் -என்னுதல் –
இந்திர ஞாலம் என்பதும் -பொய் -என்பதும் ஒரு பொருள் சொற்கள் –
இவ் ஏ ழ் உலகும் கொண்ட –
பிறர் உடைய பொருளைக் கவரப் புக்கால்
அவர்கட்கு ஒன்றும் இல்லாதபடி கவர்கின்றவன் –
நம் திரு மார்வன் –
காதலை உடையவன் என்பதால்-வந்த ஒரு பிரசித்தி யை எனக்குக் காட்டி -என்பார் -நம் -என்கிறார் –
பிராட்டியோடு பழகிற்றும் காதலை உடையவனாய் அன்று
அதனைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக
என்பார் -திரு மார்வன் -என்கிறார் –
நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் –
சில பொய்களைப் பேசி பூமியைக் கொண்டால் போலே
நம்மோடு கலவியைச் செய்கிறான் என்று தோற்றும்படி
சில பொய்யான கார்யங்களை செய்து
பிரிதல் இவளை முடிக்கைக்கு உபாயம் என்று
நம்மை முடித்தற்கு நல் விரகு பார்த்தான் -என்னுதல் –
அன்றிக்கே –
உங்களுக்கு இங்கு இடம் இல்லை
நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான்
என்று தன்னிலே நொந்து கொள்ளுகிறாள் -என்னுதல்
சர்வ சக்தி செய்வதாக ஒருப்பட்ட கார்யத்தில்
குறை கிடப்பதாய்
அதிலே நீங்களும் துணை புரிகின்றீர்களோ-
பூவைகளை குறித்து -அடுத்து -ஒரு வகை பறவை –
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தும் பேறு கிட்டாமையால்
ஆர்த்தி பெருக்க நினைத்து –
லௌகிக பதார்த்தங்கள் பாதகம் ஆக –
அவனை நினைவு ஊட்ட –
பூவைகள் -அவன் என்னை முடிக்க விரகு
தன்னுடைய பூவைகள் -கிளி -பந்து –
இவள் வளர்க்க – இருந்த இவற்றையே -இவளை முடிக்க -விரகு
குருகு குயில் இவை தோட்டத்தில் இருந்தவை –
உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை -என்கிறாள் –
இந்திர ஞாலம் -ஜாலம் –
சுதந்தரம் -ஸ்வா தந்த்ரம் பிரத்யம் சேர்த்து சுந்தர பாவன் -சமஸ்க்ருதம்
ஐநதிரிக்க –
இந்திர தனுஸ் வானவில் -வில் போலே தெரியும் –
பொய்யான வஸ்துக்கள் இந்திர ஞாலம்
ரஷிக்கும் போலே பாவனை
ஆவி உன்ன உபாயம்
அந்தரம் -நடுவே நின்று -விஷயம் நலிய இல்லை
இடை இல்லை
குழறுவது மழலை சொல்
சர்வ சாதாரணமாய் உள்ளார் செய்வதை
சொத்தான நீங்களே பண்ண லாமா
யானுடை பூவைகள்
யான் எனக்கு -என்று வைப்பதே பாதகம்
அவனை ஏன் கண்ணன் எம் பெருமான் சொல்வதால் ஹிம்சை
நீங்களும் யானுடை பூ நினைத்ததால் ஹிம்சிக்கிறீர்கள்
இடையாட்டம் -உங்கள் இடத்தில் -நலிய அவகாசம் இல்லை
இலை அகல -ஊன் அத்யாயம் –பாரிப்புக்கு -வார்த்தைகள்
உங்கள் பாரிப்புக்கு இங்கு விஷயம் இல்லை
பேச்சு காட்டி முடிக்க
அவன் தான் அதிகரிக்கும் கார்யம்
என் உயிர் கொள்ளை கொள்ள
தயக்கம் இருந்தால் உங்களுக்கு வேலை -உண்டு -அவகாசம் வைக்க வில்லை
கண்டாருக்கு -விட ஒண்ணாத வடிவு சீலம் செஷ்டிதம் காட்டி
ஏழு உலகம் கொண்ட
கொண்ட கோலம் -யாசகனாய் நின்ற சீலம்
நிலம் மாவலி மூவடி சேஷ்டிதம்
அடுத்த -ஷணம் வாமன வடிவு மாறி திரி விக்ரமன் வடிவு காட்டி
இந்திர ஞாலம் போலே
ஒன்றும் சேஷியாமல் அபகரிப்பான் ஏழு உலகும் கொண்டவன்
நம் திரு மார்பன் -பிராணியி ரசம் காட்டி
இதுவும் இந்திர ஞாலம் ஊடல் வார்த்தை
கண்டாரை அகப்படுத்திக் கொள்ள இப்படி ப்ரீதி பிராட்டி இடம் பழகி
உன்னை விட்டு பிரியேன் பிரிந்தால் தரியேன் சொல்லி -பிரிந்தான்
நம்மை முடிக்க வழி
சர்வ சக்தன் கார்யம் குறை இருந்தால் நீங்கள் சஹ கரிக்கலாம்
துவி பிரவர்த்த -நமக்கு வேலை இல்லையே
அழகால் பார்த்தான்
தன்னிலே நொந்து சொல்கிறாள்
———————————————————————————————————————————————–
Leave a Reply