நீர் இங்கன் அஞ்சுகிறது என் என்ன –
தேவர்கள் முதலானோருக்கு அரியை ஆகையாலே
எனக்கும் அரியை ஆகிறாயோ-என்று
என் நெஞ்சு கலங்கா நின்றது –
என்கிறார் –
——————————————————————————————————————————————-
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே
——————————————————————————————————————————————–
உறுவது இது என்று –
சீரியது அடிமை செய்யும் இது -என்று
உனக்கு ஆட்பட்டு –
ஆத்மா பகவானுக்கு அடிமைப் பட்டது என்ற சேஷத்வ ஞானம் வந்ததும் பின் சீரிய பயன்
கைங்கர்யமே அன்றோ –
நின் கண் பெறுவது எது கொல் என்று –
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் உணர்ந்து –
சீரியதும் கைங்கர்யமே என்றும் அறிந்து –
அநந்ய பிரயோஜனருக்கு சர்வேஸ்வரன் வேறு ஒன்றையும்
கொடுப்பான் ஒருவன் அல்லன் என்றும் அறிந்து இவர்
உன் பக்கல் பெறுவது எது கொல் -என்கைக்கு காரணம் என் என்னில்
க்ரமத்தில் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருந்து
சம்சாரத்தில் இருக்கும் இருப்பையே கொடுத்து விடப் போகின்றாயோ
அன்றி
என் விரைவு அறிந்து சடக்கு என முகம் காட்டுகிறோயோ –
என்கைக்காக சொல்லுகிறார் எனபது –
பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் –
நாம் விரும்பிய படி பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கிற
என் நெஞ்சம் கலங்கா நின்றது –
இங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –
மனத்தின் உடைய அறிவின்மையே இதற்கு காரணம் –
நீயும் கூட இதற்கு காரணம் –
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
தேவர்களுக்கும் தானவர்களுக்கும் என்றும் ஒக்க அறிய அரியையாய் –
தேவானாம் தானவானாம்ச சாமான்யம் அதிதைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தா
அந்நிலையிலே ஒரு சிறுக்கனுக்கு உன்னை உள்ளபடி அறியலாம்படி இருந்தாய்
அதில் நான் எக்கோடியில் ஆகிறேனோ -என்ற அறியாமை –
தேவர்களையும் அசுரர்களையும்பிரித்த பின்னர் அர்ஜுனன் -நான் எக் கோடியிலே ஆகிறேனோ
என்று அஞ்சினாப் போலே
பின்னை அவன் இதற்கு செய்த மாற்று என் என்னில் –
தன் சௌலப்யத்தை காட்டுகை அன்றோ -என்றது
எளியோமாகையும் ஒரு கோடி உண்டாக நீர் சொன்னீர் ஆகில்
நீர் தாம் அக் கோடியில் உள்ளார் ஒருவராய் இருந்தீர் ஆகில்
உமக்கு இனி
நாம் கைப் புகுந்தோம் என்று இருக்கை அமையாதோ -என்கிறான் -என்றபடி
தேவாதிகளுக்கு அரியை
அதனால் எனக்கும் அறியனாவாயோ நெஞ்சு பயப்படுகிறது
பேதையேன் நெஞ்சம் மருகல் செய்ய
வானவர் தானவர்க்கும் அரிய
உறுவது இது சீறியது அடிமை செய்வதே -உறுவது
ஸ்வரூபம் பார தந்த்ர்யம் அறிந்தால் செய்ய வேண்டுவது கைங்கர்யம்
உனக்கு ஆள் பட்டு
அநந்ய பிரயொஜனர்
உன் கண் பெறுவது எது -சொல்வாரோ
ஸ்வரூபம் உணர்ந்து
கைங்கர்யம்-,ஆம்பரிசு அறிந்து கொண்டு
மெய்ம்மையை உள்ளபடி உணர்ந்த பின்பு
ஈஸ்வரன்-வேறு ஒன்றை கொடுத்து விடுவான் அல்லன்
தன்னையே கொடுத்து அருளுவான் –
இப்படி இருக்க
உன் பக்கல் பெறுவது எது -என்பான் என்
க்ரமத்தில் செய்கிறோம் தவரை அறிந்து சம்சார இருப்பு நீக்கி
ஆகட்டும் பார்க்கலாம் சுவாமி போலே இல்லாமல் –
சம்சார இருப்பே சேஷமாய் போகுமோ
உன் பக்கல் பெறுவது எது என்று பேதையேன் நெஞ்சு
உறுதி குலைந்து நெஞ்சு கலங்க
விவேக சூன்யத்தை பேதையேன்
ணீ தான் இதுக்கடி
வானவர்க்கு
தேவானாம் தானாவான் பொதுவாக இருந்தும் -ஒக்க அரிய
சிருக்கனுக்கு அறியும் படி
வானவர்க்கு அறிவது அரிய
தானவர்க்கு அறிவது அரிய
இருவருக்கும் ஒக்க
அரியாய நர சிம்கனாய் -சிருக்கன் -பிரகலாதனுள்ளபடி
நான் எந்த கோடியில் ஆகிறேனோ –
தேவாசுர விவாகம் அநந்தரம்
தைவி சம்பத்து ஆசூர சம்பத்து அர்ஜுனன் சொக்கிக எந்த கோஷ்டி
நீ தைவி கோஷ்டி தான் மாசுச -பரிஹாரம் செய்து அருள
சௌலப்யம் பிரகாசிப்பித்தது ஆழ்வார்
கை புகுந்தோம் என்று இருக்காய் அமையாதோ
எளியவன் கோஷ்டி
எளியவர்க்கு உதவினான் என்றீர்
அடி நாயேன் சொன்னீர்
யாருக்கு கிடைப்பேன் நீரே சொல்லும்
சங்கைக்கு இடமே இல்லையே -சமாதானம் இப்படி காட்டி அருளி –
சௌசீல்ய சௌலப்யம் காட்டிய பின்பு
அம்மான் -நமக்கு என்று யெர்ப்பட்டவன் –
நின் கண் பெறுவது எது கோள் மறுக வேண்டாமே
———————————————————————————————————————————————-
Leave a Reply