திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஏழாந்திருவாய்மொழி-‘ஏழையர்’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே ‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல், அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று அவன் வடிவழகினைச் சொன்னார்; அவ்வடிவழகுதானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே, அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய், பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே தமக்கப் பிறந்த ஆற்றாமையை, எம்பெருமானோடேகலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள். ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.

3சர்வேஸ்வரனோடே கலந்த பிரிந்து தளர்ந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி. 3ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது 4காட்சி முன்னாகப் பின்பே அன்றோ மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது? ஆகையாலே, திருக்கண்களின் அழகைக் கூறி, அவ்வழியாலே திருமுகத்தில் அழகைக் கூறி பின்பு அவ்வருகே சில பரிமாற்றலகளை ஆசைப்பட்டு அப்போதேஅது கைவாராமையாலே நோவுபட; இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்?ய என்று கேட்க, 1ஆற்றாமை பிரசித்தமாயினபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே! ஆகையாலே, அவர்களைக் குறித்து, ‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித்தனியும் 2திரளவும் வந்து நலியாநின்றது’ என்ன, ‘நீ இங்ஙனே சொல்லுமது 3உன்னுடைய பெண்மைக்குப் போராது; அவனுடைய தலைமைக்கும் போராது; 4நீதான் எங்களை நோக்கக் கடவதாய் இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது; ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம் சொல்லுவாரும் பொடிவாருமாக; ‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி; 5இனித்தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ? 6ஆன பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற வேண்டும்படி தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.

7
‘இவர்க்குத் திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள் சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப்படுகையும், அதுதான்

மானஸ அனுபவமாய் இருக்கையும், அனுபவித்த குணங்கள் ஒழிய மற்றைய குணங்களிலே விருப்பம் செலுத்துதலும்.1அதுதன்னில் கிரமப் பிராப்தி பற்றாமையும், அதுதான் மேல் நின்ற நிலையை மறக்கும்படி செய்கையும் ஆகிற இவையே அன்றோ? அவற்றைக் காட்டிலும், உருவு வெளிப்பாடாகச் சொல்லுகிற இதில் ஏறின அமிசம் என்?’ என்னில், ‘முன்பு பிறந்த தெளிவும் கிடக்கச் செய்தே மேலே விருப்பத்தை உண்டாக்குமது அன்றோ உருவு வெளிப்பாடாகிறது? 2மற்றைய இடத்தில், முன் பிறந்த தெளிவை அழித்தே அன்றோ மேலில் விருப்பம் பிறப்பது? ‘எங்ஙனேயோ?’ என்ற திருவாய்மொழியிலும் 3பெரும்பாலும் இதுவே அன்றோ ஓடுகிறது? அதில் இதற்கு வாசி என்?’ என்னில், அதில் பிரீதியும் பிரீநி இன்மையும் சமமாக இருக்கும்; இங்குப் பிரீதி இன்மை மிக்கிருக்கும். 4திருக்கண்களில் அழகை ‘இணைக்கூற்றங்கொலோ!’ என்னும்படியாயிற்று இங்குத் தீங்கு செய்வதில் உறைப்பு இருக்கும்படி.

                 729   

        ஏழையர் ஆவிஉண்ணும்
இணைக்கூற்றங்கொ லோஅறியேன்
ஆழியங் கண்ணபிரான்
திருக்கண்கள்கொ லோஅறியேன்
சூழவும் தாமரைநாண்
மலர்போல்வந்து தோன்றுங்கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
என்செய்கேன்துய ராட்டியேனே.

பொ-ரை : தோழிமீர்காள்! அன்னைமீர்காள்! கடல் போன்ற நிறத்தையுடைய அழகிய கண்ணபிரானுடைய திருக்கண்கள், பெண்களினுடைய உயிர்களை உண்ணும்படியான இரண்டு கூற்றங்கள் தாமோ? அறியேன்! அல்லது, திருக்கண்கள்தாமோ? அறியேன்! அத்திருகண்கள் நான்கு புறங்களிலும் அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றாநின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்?

வி – கு :
 கூற்றம் – உயிரையும் உடலையும் கூறுபடுபடுத்துமவன்; யமன். கண்டீர் – முன்னிலையசை.

இத்திருவாய்மொழி கலிநிலைத்துறை.

ஈடு : முதற்பாட்டு. 1‘இம்முகத்துக்குக் கண்ணாக இருப்பவர் நாம் அன்றோ?’ என்று முற்படத் திருக்கண்களின் அழகு வந்து தம்மை நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்- 2ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறாவிடில் தரிக்கமாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?3பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே, ‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ! 4தன் கண் அழகு தான் அறிகின்றிலனே! தன்னையும் நலிந்ததாகில் வாரானோ? 5கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ? இராமபாணம்போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க உயிரை முடியாநின்றது ஆதலின், ‘ஆவிஉண்ணும்’  என்கிறது. 1கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலேகாணும் திருக்கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள். ‘‘அறியேன்’ என்பான் என்? ‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில், கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலியவேண்டும் நிர்ப்பந்தமில்லையே! ‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது.

ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன் – 2அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலிக்கூடியவைகள் தாமேயோ? 3அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை; இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்தவிட்ட இத்திருக்கண்கள் தாமேயோ? .-4உபகாரம் செய்தலையே சுபாவமாகவுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்; அன்றிக்கே, ‘கடல் போன்ற சிரமஹரமான வடிவையுடைய உபகாரசீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல். அறியேன் – 5இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகமாம் என்றுஅறியக் காரணம் இல்லை. 1‘உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக்கண்’-பெரிய திருமொழி, 7. 1 : 9- என்றே அன்றோ கேட்டிருப்பது? இக்கடாக்ஷமே தாரகமாக அன்றோ உலகம் அடைய ஜீவிப்பது? நாம் கேட்டிருந்தபடி அன்றிக்கே இராநின்றது, இப்போது காண்கிறபடி. ‘ஆனால், தப்பினாலோ?’ என்னில்,

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – 2மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று; 3இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது? 4‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்’ –திருவிருத்தம், 39.-என்னக் கடவது அன்றோ?பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை. 6இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது. 7‘இப்போது ‘தாமரை நாண்மலர் போல்’ என்பான் என்?’ என்னில், 8‘பூஜிக்கத்தக்கபிராட்டியே! அந்தப் பெருமாள் தேவரீரைப் பார்க்காத காரணத்தால் மிகப்பெரியதாயும் எரிந்துகொண்டு இருக்கிற நெருப்பினாலே சூழப்பட்ட நெருப்புமாலை போன்று பரிதபிக்கிறார்,’ என்றும், 1‘நைவதம் ஸாந் ந மஸகாந் –

‘ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹாத ஜ்வலதா நித்யம் அந்நிநேவாக்நிபர்வத:’-
என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 44.

நைவ தம்ஸாந் நமஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்
ராகவோபநயேத் காத்ராத் த்வத் கதேநாந்தராத்மநா’-என்பது, ஸ்ரீராமா, சுந். 36 : 42.

அதற்கு-துடைக்க அறியாமல் இருந்ததற்கு. ‘என்றான்’ என்றது, ஸ்ரீ வால்மீகியை.

‘கன்மத்தை ஞாலத் தவர்ஆர் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான் மயல்கொண்டு புலன்கள் வேறாய்
நன்மத்தை நாகத் தயல்சூ டியநம்ப னேபோல்
உன்மத்த னானான் தனைஒன்றும் உணர்ந்தி லாதான்.’-என்பது, கம்பராமா. உருக்காட்டுப்பட. 84.

பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் துடைக்க அறியார்’ என்றும் சொல்லப்படும் நிலை அன்றோ அவருடை நிலை? ‘நன்று; அதற்கு அடி என்?’ என்ன, ‘த்வத்கதேநாந்தராத்மநா-உன்னிடத்தில் வைத்த மனத்தையுடையவராதலாலே’ பெருமாள் இங்கே குடி போர, அங்கு இவை யார்தான் அறிவார் என்றான் அன்றோ? பிரிவில் இவ்வளவு அன்று அன்றோ அத்தலைக்கு2ஆற்றாமை? 3அதனை அறிகிலலே இவள். 4தன்னோடே வந்து கலந்த விளைநீர் அடைத்துக்கொண்டு பிரிகிற போதைச் செவ்வி அன்றோ இவள் அறிவது? அதுவே அன்றோ இவள் நெஞ்சில் பட்டுக் கிடப்பது? 5பின்பு அவன் பட்டது அறியாளே; ஆகையாலே, 6தாமரை நாண்மலர் போல்’ என்று சொல்லுகிறாள். வந்து தோன்றும் – 1பிரித்தியக்ஷத்திலே அத்தலையாலே வரவு ஆனாற்போலே உருவு வெளிப்பாட்டிலும் அத்தலையாலே வந்து தோன்ற ஆயிற்றுத் தான் அறிகிறது. கண்டீர் – உங்களுக்கு இது தோற்றுகிறது இல்லையோ? தோழியர்காள் அன்னைமீர் – 2சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியன்றே இவள் நிலை? என்றது,3‘தோழிமார்க்குச் சொன்ன இதனைத் தாய்மார்க்குச் சொல்லுவோம் அல்லோம்,’ என்று மறைக்கும் அளவு அன்று ஆயிற்று, இவளுக்குப் பிறந்த நிலை விசேடம்,’ என்றபடி. என்செய்கேன் – 4இதனைத் தப்பப் பார்ப்பதோ, அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்? துயராட்டியேனே – 5‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்,’ என்று இருக்க வேண்டி இருக்க, அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கறிபடியே,6பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

‘ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சந’-என்பது, தைத்திரீ.

‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
இடராக வன்னி புனல்இடி கோள்மற்றும் என்செயும்வில்
இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’-என்ற திருவரங்கத்தந்தாதிச்செய்யுள், மேற்சுலோகப்பொருளோடு ஒப்பு நோக்கல் தகும்.

திவ்ய அவயவங்களை வர்ணிக்கிறார்
மானச அனுபவம் மாத்ரமே கொண்டு
பிரத்யஷம் புத்தி பண்ணி –
அணைக்க கை நீட்ட பெறாமையால் ஆற்றாமை மிக்கு
பிராட்டி தசையில் அருளும் திருவாய்மொழி –

அவயவங்கள் ஒவ் ஒன்றையும் அனுபவிக்கிறார்
திருமுக மண்டலம் மட்டும் பத்து பாட்டாலும் அனுபவிக்கிறார்
அழகு வெள்ளம் பாதகம் ஆனபடி
உபகரிக்க வில்லையே
நாயகி பாவத்தால் –
கீழே -நெஞ்சிலே உஊடு இருந்து
மல்கு நீள் சுடர் –மாணிக்கம் பூத்தாப் போலே இருக்க –
செம் பாட்டோடு
அடி உந்தி –வாய்
செஞ்சுடர் -என்னுடைய திரு மார்பனை அனுபவம்
பாவனா பிரகர்ஷத்தால் நினைவின் முதிர்ச்சி
பிரயஷா சமானாகாரமாய்
அணைக்க கணிசித்து –கை நீட்ட -கிட்டப் பெறாமையால்
மோதரம் பார்த்து -பர்த்தாவை -சீதை பிராட்டி அணைத்தாப் போலே –
பிறந்த ஆற்றாமையை விண்ணப்பிக்கிறார்
கலந்து பிரிந்த பிராட்டி வார்த்தையாக -உரு வெளிப்பாட்டால் -பிரத்யஷ சமானாகாரம்
உருவம் மானசமாக வெளிப்பட்டு
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி –
திருஷ்டி தானே முதலில் -சேதனர் சேதனர் கலக்கும் பொழுது
திருக் கண்களின் அழகாய் அனுசந்தித்து
அவ வழியாலே திரு முகம் அவயவங்களை அனுசந்தித்து
துக்கப் பட
தோழி தாய் இவள் தசை பற்றி கேட்க
இருவரையும் குறித்து சொல்லும் பாசுரம் –
திரு முக அழகு தனித் தனியேவும் சேர்ந்தும் நலிய
திரளவும்
அமலனாதி பிரான் -பாத கமலம் நல்லாடை உந்தி –
கண்கள் -மேனி -ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
தனித் தனி -லாவண்யம் அவயவ சோபை
சௌந்தர்யம் சமுதாய சோபை -திரளாக வந்து நலிய –
எழில் லாவண்யம்
அழகு -சௌந்தர்யம்
கேட்ட தாய் தோழி -இங்கனே சொல்லுவது ஸ்த்ரீத்வத்துக்கு தகாதே
அவனுடைய தலைமைக்கும் போராது
நீ தான் எங்களை பார்க்க வேண்டிய ஸ்வா பாவத்துக்கும் சேராது
பொடிகிற ஹிதம் சொல்லும் இருவரும் சொல்ல
உறைதத்திலே ஊன்றி நிற்கும்
விட்டு விட அமையும் -தம் பக்கல் நசை அறும்படி
சொல்லும் வார்த்தை இந்த திருவாய்மொழி
குணங்கள் -அனுபவித்து -புத்தி பண்ணி -க்ரம பிராப்தி பற்றாமை
துடிக்க பண்ணி கீழ் நின்ற நிலை மறக்க பண்ணும்
கதிர் பொறுக்குவது போலே
இதுவே ஆழ்வார் ஸ்வபாவம் எல்லா திருவாய் மொழியிலும்

எல்லா வற்றிலும் இந்த திருவாய் மொழி
கீழ் பிறந்த -மேன் மேலும் அபெஷை
கீழ் நின்ற நிலை அழியாமல்
எங்கனே -அன்னைமீர்காள் -இதுவே ஓட
அங்கே ப்ரீதியும் அப்ரீதியும் கலந்து விசேஷம்
அதில் இதுக்கு வாசி என்ன
இங்கே அப்ரீதியே முக்கியம் –
சப்தங்கள் -திருக் கண்கள் -இணைக் கூற்றம் -கொலோ –

இந்த முகத்துக்கு நேத்ரபூதர் -பார்வைக்கு இலக்காவது
திருக் கண்கள் தானே
முற்பட வந்து நலிய –
பிரதான பூதர் -நேத்ரபூதர் –

துயராட்டியேன் என் செய்கேன்
ஏழையர்-ஸ்திரீகள் அர்த்தம் –
இல்லாதவர் -ஞானத்தால் ஏழை -சபல புத்தி நைப்பாசை உள்ளவர் –
ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கள்
இரட்டையாக வந்த
சூழவும் –
தாமரை நாள் மலர் போலே -அன்றே அலர்ந்த பூ -சுற்று சிதறி வந்து தோன்றி நலிய –
ஏழையர் -சாபலத்தை பண்ணி பெற மாட்டாமல் தரிக்க மாட்டாத அபலைகள்
பிராணனை முடிக்கும் மிருத்யுகள் இரண்டும்
அபலைகளையே முடிக்கும்
அவனுக்கும் தோழிக்கும் அன்னைக்கும் பாதகம் இல்லை –
இருந்து ஆற்றாமை விளத்தவனுக்கும்
பருவம் நிரந்த தாய் மாறுக்கும் இல்லை
தன கண் அழகு தான் அறிந்தவன் இல்லையே
பிரிந்து இருக்க மாட்டாள் அறியாதவன்
தன்னையும் நலிந்ததாகில் வாரானோ
கண்ணாடிப் புரத்திலும் கண்டு அறியானோ
ராம சரம் போலே
ஏழையர் இல்லை ஏழையர் ஆவி
ஒப்பனை குறி அழியாமல் உயிர் முடிக்கும்
வஸ்தாசுரன் -இரண்டு பேரும் வந்தாப் போலே
அறியேன் –
மிருத்யு -அபலைகளையே நலிய வேண்டுமா
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரினாம்
ஆழி அம கண்ண பிரான்
பெண் பிறந்தார் மட்டும் நலிய கடவவான் உடைய
முதல் உறவு பண்ண பொருந்த விட்ட திருக் கண்கள்
கடாஷித்து ஆக்கியவை
அண்ணியாரே பாதகமாம் படி -நெருங்கியவை முன்பு
கண்ணபிரான் நெருங்கியவன் அர்த்தத்தால்
கடல் போன்ற கண்கள் ஆழி அம கண்ணபிரான்
கண்ணன் -அழகிய கண்ணை உடையவன்
கண்ணாவான் -தலைவன்
கிருஷ்ணன் கறுப்பாக உள்ளவன்
பிள்ளைக்கு தாய் வழியாகாதோ-பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண் ஏரார் கண்ணி யசோதை –
இச்சைக்கு உண்டான அபிமத உரு தேக யசோதை கண் நந்தகோபன் உடம்பு
இதுக்கு முன்பு அறியாமல்
தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்
கடாஷமே தாரகமாக லோகம் ஜீவிக்க
பாதகம் ஆனதே
தப்பினால் என்ன –
எங்கே பார்த்தாலும் கண்கள் தெரிய சூழவும் வந்து தோன்றும்
பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாள் ஆனாப் போலே
மூல பலம் இந்த்ரஜித் யாகம் செய்ய
அழிக்க
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று –உள்ளும் தோறும் தித்திப்பா
மூல பலத்தில் -அம்பை பொழிந்த சகரவர்த்தி திருமகன் வாளி பொழிய -அங்கும் இதே வியாக்யானம் –
விரோதிகளுக்கு பெருமாள் தொற்றினாப் போலே
ராம சரத்து ராஷசர் தப்பினாலும்
கண் அழகுக்கு தப்ப முடியாதே
புண்டரீக -தாமரை நாள் மலர் -திரு விருத்தம்
சர்ப்ப பயம் போலே இருக்கை-
பாதகம் -இருந்தாலும் நாள் மலர் அன்றே அலர்ந்த பூ என்பான் என்னில்
நாட்பூ –
நாட்கள் தப்பு நாள்கள் தான் சரியான வார்த்தை –
வாள்களாக நாள்கள் செல்ல -போலே
நாள்களோ நால் ஐந்து திங்கள் அளவிலே –
புண்டரீக –பொலிந்து எல்லா இடத்தவும் -திரு விருத்தம் –
சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் –
பெருமாள் ஊர்ந்ததும் கடித்ததும் அறியாமல் இருந்தது போலே –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரைக் கண்
பிரிந்த வாட்டம் அவனுக்கும் உண்டே
கண் வாடுமே
இவளுக்கு தெரியாதே
அதனால் நால் மலர் என்கிறாள்
திருவடி -பிராட்டி இடம் –
நித்யம் நெருப்பாக அக்னி பர்வதம் போலே கொதித்து இருக்க
எறும்பு கடித்தது கூட அறியாமல் -துடைக்கவும் அறியாமல் –
பிராட்டி இடம் மனச் செல்ல
அதுக்கடி -தேவரீர் இடம் வைக்கப் பட்ட ஆத்மா
பெருமாள் இங்கே குடி புக அங்கே உள்ளதை யார் துடைப்பார் –
சீதா பிராட்டி நெஞ்சில் இருக்க மால்யவானில் அப்படி
பிரிவில் அத்தலைக்கும் ஆற்றாமை
அறியவில்லை இவள் –
தன் உடன் கலந்து -விளை நீர் அடைத்துக் கொண்டு -ஆனந்தம் தேகி வைத்து
தாமரை நால் மலர் போலே இருக்க
அதுவே இவள் நெஞ்சில் பட்டு கிடக்கிறது –

வந்து தோன்றும்
பிரத்யஷத்தில் அவனே வந்து தோன்ற வேண்டும்
உரு வெளிப்பாட்டிலும் அவனே வந்து தோன்றும்
கண்டீர் -நீயும் பார் -அனுபவத்தில் ஈடுபாடு
சிலருக்கு சொல்லி சிலருக்கு மறைக்கும் படி அன்றி
தோழி அன்னை இருவருக்கும்
சொல்லும் தசா விசேஷம்
தப்ப பார்க்கவோ அனுபவிக்கவோ
துயராட்டயேன்-கிலேசமே
ஆனந்தம் ப்ரஹ்மனொ வித்வான் ந பிபதி பயப்பட மாட்டான்
அப்படி இருக்க வேண்டிய நான்
அவசியம் அனுபவோக்தம்
மயர்வற மதி நலம் அருளின ஆழ்வார் பழைய நிலைக்கு போனோமோ
ஞான லாபம் பெற்றாலும் துக்கம் பார்த்தால் கர்மம் தொடர
பேறு கிட்ட வில்லையே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading