திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.

பொ-ரை :- தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறியமுடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

  ஈடு :- முடிவில் 1இப்பத்தும் கற்றவர்கள் சர்வேசுவரனுக்கு அந்தரங்கமான தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் அளவிடமுடியாத திருமகள் கேள்வனுக்கு. 2“இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்” என்கிறபடியே

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய:
ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய:
தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.

. 3கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்டவனாயிருப்பான்; 4அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ. இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார். 5அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம். திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் – திருமகள் கேள்வனான சர்வேசுவரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார், 6சம்சாரத்தின் தன்மையை நினைத்தகொடுமையாலும், பகவத்விஷயத்திலே மூழ்கின கனத்தாலும், பெருவிடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. 1இது இவருடைய அகம்புத்தி இருக்கிறபடி. 2தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அகம்புத்தியைப் பண்ணுவான்; ‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்தபோது ஆத்மாவிலே அகம் புத்தியைப் பண்ணுவான்; தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்தபோது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக்கொண்டு போவன்; ‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்தபோது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன். 3“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று, இவருடைய அகம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. 4இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது.

மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!-
என்ற திருப்பாசுரம் நினைவு கூர்க. பெரிய திருமொழி.

தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் – பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இருப்பத்தும். உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-சர்வரக்ஷகனான சர்வேசுவரனுக்கு அநந்

யார்ஹசேஷமாக்கும் இத் திருவாய்மொழி. 1சம்சாரம் நன்றுமாய், பகவத்விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.“குணக்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூபப்ரயுக்தமான
தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதால் – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு.

கைங்கர்யம் செய்யப் பெறுவார்
தெரிதல் அறிந்து கொண்டு
நினைதல்-
எண்ணுதல் ப்ரீதி பூர்வகமாக எண்ணுதல்
சரவணம் மனனம் நிதித்யாசனம் –
கேவலம் இவை மட்டும் கூடாதே  -ஈடு பாடு வேண்டுமே
ப்ரீதி பூர்வகமாக இருக்க வேண்டுமே –
அவன் விஷயமாக -அனுபவமாய் அன்வயிக்கும் இவை
சூசுகம் கர்த்வம் சாதனா வேளையிலே இவை இனிக்கும் –
திருமால் இதுக்கடி ஸ்ரீ ய பதி-சர்வாதிகனுக்கு அடையாளம்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
அனந்யார்க்க சேஷ பூதன்
சம்சார வெக்கை பேசி -கொடு உலகம் துக்கம் ஆட
பெரு விடாயன் மடுவில் விழுமா போலே –
சந்தஸ் இடம் இல்லை மேலே மேலே சொல்ல
இவருடைய அஹம் புத்தி –
ஆழ்வார் அஹம் சொன்னாலும் சரம
நாம் தொண்டர் —தொண்டர் சொன்னாலும் நான் சொல்வது போலே
தேகம் ஆத்மா -நான் புத்தி உடலையே பேணி
ஆத்மா வேற -ஆத்மாவில் அஹம் புத்தி கைவல்யம் அஹம் ப்ரஹ்மாசி சொல்லி அத்வைதிகள் போலே
பிரகார மாத்ரம் இன்றி

தன்னை பகவத் சேஷ பூதன் -பிரகார மாத்ரம் நின்று
தானே அனுபவித்து ஐஸ்வர்யம் கொண்டு போகிறான்
செஷத்வமே புருஷார்த்தம் அறிந்து கொண்டால் பகவான் கூட நிற்காமல் பாகவத சேஷத்வம்
ததீய சேஷத்வம்
பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு -எவரேலும் அவர் கண்டீர் அடியார் –அடியோம்களே
இவ்வளவு தூரம் வந்தால்  தான் அனந்யார்ஹம்
தெரிய சொன்ன -தோஷங்களையும் காட்டி பகவத் விஷய உயர்தியையும் காட்டி
உரிய தொண்டர் ஆகுவார்
சம்சாரம் நன்றாக இருந்தாலும் பகவத் விஷயம் கஷ்டமாக இருந்தாலும் விட மாட்டார்கள்
கைங்கர்யமே போதும் என்பார் உரிய தொண்டர்கள் –
சாரம் -மா முனிகள்
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய
ஆழ்வார் கதற
மாலுக்கும் விசும்பில் இருப்பு அரிதாக
ஆறாத காதல் மாறன் சொல்லே
உஜ்ஜீவிக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading