கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.
பொ-ரை :- தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும் வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?
வி-கு :- கொல்லை – வரம்பு அழிந்த செயலையுடையவள்; உடையவன்: உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயர். சில்லை – பழிச்சொல். மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்க. மல்கி – மல்க. துடங்க மேவினள் என்க.
ஈடு :- நாலாம்பாட்டு. 1இவளைக் கண்ட நாட்டார் குணம் இல்லாதவள் என்பர்கொலோ? குணங்களால் மேம்பட்டவள் என்று கொண்டாடுவர்களோ? என்கிறாள்.
கொல்லை என்பர்கொலோ – 2இவள் வாசல் கடந்து புறப்படக்கடவதல்லாத மரியாதையைக் குலைத்தாள்: இவள் விலக்கிய செயலை மேற்கொண்டாள்; இவள் வரம்பு அழிந்த செயல்களைச் செய்தாள் என்பர்களோ? கொல்லை என்பது, வரம்பு இல்லாததற்குப் பெயர். குணம் மிக்கனள் என்பர்கொலோ – 3குணாதிகவிஷயத்துக்குப் போரும்படி செய்தாள் என்பர்களோ? கொல்லைஎன்பர் கொலோ குணம் மிக்கனள் என்பர் கொலோ – 1இவள் விதியை மீறினாள் என்பர்களோ; அல்லது 2சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?
சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?’ என்றது, ‘ருசி சுபாவத்தாலும்,
விஷய சுபாவத்தாலும், ஆத்ம சொரூபத்தைப் பார்த்தாலும்’ என்று
சொல்லப்படுகின்ற இவளுடைய பிராவண்யத்தின் மிருதி, விஷய
வைலக்ஷண்யம், சேஷத்வ சொரூபம் ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந்தன்னையே என்றபடி.
3ஓர் அளவிலே நின்று விலக்கியவற்றைக் கொண்டு, இது தகுதி இல்லாதது என்பர்களோ; 4ருசி சுபாவத்தாலும் விஷய சுபாவத்தாலும் இது தக்கது என்பர்களோ? 5சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ: ஆதம் சொரூபத்தைப் பார்த்துத் தெளிவர்களோ? 6உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ; ஆத்மாவின் சொரூபத்தையும் பேற்றின் சொரூபத்தையும் பார்த்து, இது கடவதுஎன்பர்களோ? 1பிற சாதனங்களை விலக்குதலை முன்னாகக்கொண்ட சொரூப ஞானம் பிறந்தால் பறப்படத் தகுதி இல்லை; சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தினை நினைத்தால், போய்ப் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது. 2விதியைப் பார்த்து நிந்திப்பர்களோ: 3காமவசனத்தைப் பார்த்து நன்று என்பர்களோ? 4“விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப்பட்டிருக்கின்ற எங்களை என்படுத்துகிறீர்” என்றாள் அன்றோ தாரை இளையபெருமாளைப் பார்த்து.
“ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி
த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேசகாலௌ ஹி நசார்த்த தர்மௌ
அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55. இளையபெருமாளைப் பார்த்துத் தாரை
கூறியது. என்றது, நீர் காமசாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான்
செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.
சில்லை வாய்ப் பெண்டுகள்-5சிலுகு சிலுகு என்னும் பெண்டுகள். விஷயத்திற்கு உட்பட்டு வருமதனையும் வசன சித்தம் என்றிருக்குமவர்கள். 6உபாயபுத்தியினாலே வருமவற்றில் அன்றோ விதிக்குவிஷயமுள்ளது; குணங்களால் தூண்டப்பட்டுப் போமிடத்தில் விதி விஷயமாகாதே. அயல் சேரியுள்ளாரும் – இவள் இருந்த ஓர் ஊர் வாசியும் கூட இல்லாதவர்கள். எல்லே – 1கீழில் அவர்களை விளிக்கிறாளாதல்; இஃது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்! என்கிறாளாதல். செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – 2அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள். முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள். அவன் சொரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ. 3தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வமானது கரைபுரளும் படியாக அவன் வந்து திருக்கண்வளர்ந்தருளுகிற திருக்கோளூர்க்கே. 4பாதுகாக்க வேண்டிய பொருள்களினுடைய பாதுகாத்தலைத் தொடங்கினாலன்றோ நியமிக்கின்றவனுடைய செல்வம் பிரகாசிப்பது! 5அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக்கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.
மெல் இடைநுடங்க – 6அவன் சொரூபஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய சொரூபஞானமோதான் இவளுக்கு உண்டாயிருக்கிறது. இவளுக்கு விழுக்காடு அறியாமை 1எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப்போமோ? நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம்படியாக. 2இந்த இடையைக்கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? இளமான் – போகிற வழியில் மிறுக்கும், தன் தன்மையும் அறிந்து மீளவல்ல பருவம் அன்று கண்டீர். செல்ல மேவினளே-போக ஒருப்பட்டாள். 3இவள் கையிலும் இவர்கள் கைகளிலும் அன்றே பேறு கிடப்பது; அது அவன் கையதன்றோ; 4இத் தலையில் துணிவே யன்றோ உள்ளது. 5மேலே “போனாள்” என்றாள்; இங்கே, “போக்கிலே ஒருப்பட்டாள்” என்னாநின்றாள்; இது, சேரும்படி என்? என்னில், இவள் போகையில் ஒருப்பட்டபோதே போய்ப்புக்காள் அன்றோ என்கிறாள்.
‘மேலே போனாள்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, பாதிவழி
போனாள் என்பது. அது எங்ஙனே? என்னில், இத்திருவாய்மொழியின்
முன்னுரையிலே ‘படுக்கையைப் பார்த்தவிடத்தில் வெறும்படுக்கையாய்க்
கிடந்தது’ என்கையாலும், “பொன்னுலகாளீரோ’ என்ற திருவாய்மொழியின்
முன்னுரையிலே. ‘புறச்சோலையிலே கிடந்து தூது விடுகிறாள்’
என்கையாலும், ‘ஒருப்பட்டாள்’ என்பதற்கு, பாதிவழி போனாள் என்பது
பொருளாகக் கொள்க.
இளமான் செல்ல மேவினள், கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள் என்பர்கொலோ? – 6அவள் கைகழிந்து கொடுநின்றாள்: இனி இருந்த நாம் என்கேட்கிறோமோ? 1இங்கு இருந்த நாள் நம்முடைய நல்வார்த்தையைக் கேட்கில் அன்றோ வழியிலுள்ளார் பழிகேட்பது அவள். 2இவள் வழிப்பட்டால் நல்வழியிலுள்ளார் வார்த்தை கேட்குமது ஒழியப் பெருவழியானார் வார்த்தை கேளாள்.
தாயார் உபாய அத்யவசாயம் தான் ஸ்வரூபம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை –
குணாதிக்யம் -விஷய வைலஷண்யம் -பேற்றுக்கு த்வரிக்கை -தலை மகள் நிலை
சம்பந்த ஞானம் நிலை தோழி
நாட்டார் -இவளை குண ஹீநை என்பார்களோ குணாதிகை என்பார்களோ -இந்த பாசுரத்தில் –
கொல்லை என்பர்களோ -வரம்பு மீறி போனாளோ
குணம் மிக்கவள் என்பர்களோ –
செல்வம் மல்கி திருக் கோளூர் மெல்லிடை துவண்டு போகும் படி செல்ல ஒருப்பட்டாளே
வாசல் கடந்து போனாளே -படி தாண்டா பத்னி -வரம்பு அழிந்த
கொல்லை -பக்கம் — பிளக்கடை போய் இருக்கிறாள்
வரம்பு இல்லாததுக்கு கொல்லை என்றும்
எம்பெருமானுக்கு தகுதியாக துடித்து -செய்தாளா
விதி அதிக்கிரமம் -அவனே வரும் வரைகாத்து
நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதே விதி
சித்தாந்தம் தன்னையே செய்தாளோ –
ப்ராப்த சேஷி இருந்த இடம் செல்லுவதே சித்தாந்தம்
ருசிஸ்வா பாவம் விஷய ஸ்வா பாவம் -அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அளவிலே நின்று -ததேக ரஷகத்வம் ததேக போக்யத்வம் ததேக நிர்வாஹத்வம்
கடல் அன்ன காமத்தனர் ஆயினும் மடலூரார்
ஆசைக்கு வரம்பு கட்டுவார் ஆர்
சாதனா விதி அளவிலே நின்று தடுமாருவார்களோ -சர்வ தரமான் –விட்டு விட்டு இருக்க சொல்லி
ஸ்வ ஸ்வரூபத்தை பார்த்து தெளிவர்களோ –
உபாயாம்சம் கண்டு கடவது அல்ல
பிராப்தாவின் ஸ்வரூபம் பார்த்து பிராப்ய ஸ்வரூபம் பார்த்து கடவது என்பார்களோ
அந்ய நிஷேதன பூர்வகமாக -ஸ்வரூப ஞானம் பிறந்தால் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை
புறப்பட யோக்யதை இல்லை
போய் புக்கு அல்லது நிற்க முடியாதே -ஸ்வரூப அநுரூபமான
காம வசம் -பரதந்த்ரன் -விரக்தர் ஆன நீர் காம வச்யர் -தாரை வார்த்தை இளைய பெருமாள் இடம்
கோப அக்நி -உடன் இளைய பெருமாள் இருக்க
தாரை இட்டு குறைக்க -அனுப்பி
போகம் அனுபவிக்க அனுப்பியது நீங்கள் தானே –
விரக்தர் ஆன நீர் -வைராக்ய -சாலி காம வசம் உள்ளார் நிலை அறியீர்
சிலுகு சிடு சிடு சொல்லும் பெண்கள் கோபித்தல் ஸ்வா பாவம்
வசன சித்தம்
நம் சேரியில் உள்ளாறும் -பிரேமா பரவசர் -சில்லையாய் பெண்டுகள் குணம் மிக்கவர் என்பவர்
அயல் சேரியில் உள்ளாறும் -வசன பரர் சொல்பவர்
இரண்டு கோஷ்டி
கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டில்
பக்தர்கள் இருக்கிற ஊரில்
இருப்பிடம் வைகுந்தம் வேம்கடம் –
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் தப்பாக
பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் -எத்தவங்கள் செய்தார்களோ பெரியாழ்வார் திருமொழி
அர்த்தம் கொண்டு பிரிக்காமல் சப்தம் கொண்டே பிரிக்கும் வேதம்
குண பிரேரிதராக போவாருக்கு விதி கூடாதே
உபாயம் என்று நினைப்பாருக்கு தான் விதி
ராக ப்ராப்தம் ஆனால் -பரிக்கிரகைக்கு உடலாய் இருக்கும் இ றே
ஸ்நாத்வா புஞ்சீத -விதி ஸ்நானத்துக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -விடுவதில் விதியா பற்றுவதில் விதியா
குணம் கழுத்தைபிடித்து தள்ள நிற்க முடியாதே
இவள் இருந்த ஊர் வாசி கூட இல்லாதவர் வைய -அயல் சேரி உள்ளார் –
எல்லே –
சம்போதம் -ஆச்சர்யம் -என்னவுமாம்
செல்வம் மல்கி அவன் கிடந்த
அவன் வரவை அசத் சமம் ஆக்கினாள் -நாலடி நடந்து
பரமபதம் இருந்து இங்கே வந்து -சந்நி ஹிதன் ஆனான்
பெருமாள் -தண்டகாரண்யா ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை
அவன் ஸ்வரூபத்தை அழித்தாள்
தன் ஸ்வரூபத்தை அழித்து
இவளுக்கு முற்பாடானாய் உதவ பர வியூக விபவ அல்லாத அர்ச்சைகளை விட்டு இங்கே வந்து
நிரவதிக சம்பத் -செல்வம் மல்கி -பெருக
ரஷ்ய வர்க்கத்தின் -நியந்தா -இவளைரஷிகாமல்
அவன் கிடந்த –
இவள் வருகை பார்த்து கிடக்க மெல்லிடை நுடங்க
தன் ஸ்வரூப ஞானமும் இன்றி
விழுக்காடு அறியாமை எங்கும் ஒக்கு இருக்க
இடையை அறிந்தால் ஆகில் புறப்பட்டு போமோ
நடுவே அறியாமல்
இடையைக் கொண்டு நடக்கப் புக்கால் அவன் எதிரில் வர வேண்டாமோ
இள மான் -வருகிற வழியில் துன்பம் வந்தால் போக்கி கொள்ள முடியாத
பருவம் அறிந்து போகாமல்
செல்ல முயன்றாள்
மேவினாள்
சேருவது இவள் கையில் இல்லையே
பிராப்யம் அவன் நினைவே
சங்கல்ப்பித்தால் தான் நடக்கும்
ஆசை த்வரை மட்டுமே வேண்டும்
ஏரி சாதனம் இல்லையே
மழை பெய்யும் பொழுது சேகரிக்க தானே
ஒருப்பட்டாள்
அது அவன் கை இ றே
man proposes god disposes
அவன் தான் முடித்து வைப்பான்
நாம் ஆரம்பித்து suggestion தரலாம்
இத்தலையில் துணிவு ஒன்றே
கீழே திண்ணம் என்றாள்
இங்கே ஒருப்பட்டாள்
அது நிச்சயம் என்பதால் சொன்னது
done வார்த்தை போலே கவலை வேண்டாம் அது நடந்து போலே நினை சொல்வது போலே
இங்கு உள்ளார் பேச்சை கேட்காத ஸ்வா பாவம் உள்ளவள்
வழியில் உள்ளார் பழியை கேட்பது
நல் வழி சொல்வார் வார்த்தை கேட்காதவள் இதை கேட்பாளோ
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply