என்னான் செய்கேன் யாரே களைகண் என்னைஎன் செய் கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உனதாள் பிடித்தே செலக்காணே.
பொ – ரை :- நான் என்ன காரியத்தைச் செய்வேன், துணையாவார் வேறு யாவர், என்னை என்செய்ய இருக்கின்றாய், உன்னால் அல்லாமல் மற்றையோரால் ஒரு குறையும் விரும்பேன், வேலைப்பாடு அமைந்த மதில்களாற் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்றவனே!அடியேனுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.
வி-கு :- கண் – தொழில்; வேலைப்பாடு. முதனிலைத் தொழிற்பெயர். அரு – ஆத்மா. வாழ்நாள் என்பது, வாணாள் என மரீயது.
ஈடு :- மூன்றாம் பாட்டு. 1இப்படி நசை அற்றாற்போலே துடித்துக் கிடந்து கூப்பிட்ட இடத்திலும், குளிர நோக்குதல் வினவுதல் செய்யாமையாலே, பேறு தம்மதானால் பெறுவார்க்கும் சில செய்ய வேணும் என்று இருந்தானாகக் கொண்டு, நான் என் காரியம் செய்கை என்று ஒன்று உண்டோ, நீ செய்து தலைக்கட்டித் தரவேணும் என்கிறார்.
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – 2என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ?
என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே
களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும், “என்னை என்
செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும்
இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்மேலே’
என்று தொடங்கி. ‘என்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, ‘இவனே
சாதநாநுஷ்டானம் பண்ணுகிறான், நாம் என்’ என்று என் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ? அதற்கு நான் க்ஷமன் அல்லேன் என்கிறார்
என்றபடி.
‘பிறர்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, பிறர் இவனை
ரக்ஷிக்கின்றார்கள் என்று அவர்கள் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ? அவர்கள் ரக்ஷிக்க மாட்டார்கள் என்றபடி.
‘நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ’ என்றது, இவர் நிலையும்
பிறர் நிலையும் இப்படியான பின்பு நாமே யன்றோ உளோம் என்று நீயே
ரக்ஷிக்கப் பார்க்கிறாயோ என்றபடி.
‘என் நான் செய்கேன்’ என்றதனால் 3‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்னநான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார். சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி. இதனைக் காட்டுகிறார்
‘நான் செய்வது எது’ என்று தொடங்கி. இங்கே, “என் நான் செய்கேன்’
என்றவிடத்தில் இம்மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீ சூக்தி
அநுசந்தேயம்
‘யாரே களைகண்’ என்றதனால், 1அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ? 2ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள் என் காரியம் செய்யவோ? என்கிறார். 3நெறி காட்டி நீக்குதியோ,-பெரிய திருவந்தாதி, 6. “நெறி” என்பது வேறு உபாயங்களை.
நின்பால் கரு மாமுறி மேனி காட்டுதியோ, நீ நினைத்திருக்கிறது என்? என்பார் ‘என்னை என் செய்கின்றாய்’ என்கிறார். என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என்செய்கின்றாய் – 4என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ 5என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.
ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என்
செய்கின்றாய்” என்ற இம்மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய,
முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத்
திருவுள்ளம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார் ‘என்னை
அறியாயோ’ என்று தொடங்கி.
5. ‘அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன சாதநாநுஷ்டானம் பண்ணுவேன்’
என்னுமதனைக் குறிப்பாக அருளிச்செய்கிறார் ‘என்னை’ என்று தொடங்கி.
‘என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது’ என்றது, நான்
என்னை ‘அஜ்ஞன், அசக்தன், அப்ராப்தன்’ என்று
புத்திபண்ணியிருக்கவில்லையோ, சர்வஜ்ஞனாய், சர்வ சக்தியான தேவரீரைப்
போன்று எண்ணிவிட்டதோ என்றபடி.
யாரே களைகண்-என்னளவு கிட்டாதார் எனக்கு ரக்ஷகர் ஆகவோ. என்னை என்செய்கின்றாய்-நீ செய்து தலைக்கட்டப் பார்த்தாயோ? அன்றிக்கே, ‘சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே கைவிடப் பார்த்தாயோ? என் நான் செய்கேன்-2தாம் கைவாங்கின படி. யாரே களைகண்-பிறர்பக்கல் நின்றும் கைவாங்கினபடி. என்னை என்செய்கின்றாய்-3“என்னை ஆராதிக்கின்றவன் ஆவாய், என்னை நமஸ்காரம் செய்வாய்” என்னப் பார்த்தாயோ? 4“துக்கப்படாதே” என்னப் பார்த்தாயோ?
5உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-6“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய். ‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாயபாவம் ஒருசேதனனாலே என்றிருக்கையாலே. அன்றிக்கே, 1பெறுவது உன்னையேயாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன். 2மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூபவிரோதியானது எனக்கு வேண்டாம். 3கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன். அன்றிக்கே, 4‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர். கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்-1இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள் அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ. “செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்றாரே அன்றோ. கண் ஆர் மதிள்-தொழில் மிக்க மதிள் என்னுதல். செம்பாலே செய்யப்பட்ட மதில் என்னுதல். ‘கன்’ என்பது, தொழிலும், செம்பும், சிக்கெனவும் எனப் பல பொருள்படும் ஒருசொல்.
அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹமாய்த் தனக்கு உரித்தல்லாத இந்த ஆத்மவஸ்து. வாழ்நாள் செல்நாள் எந்நாள்-ஜீவித்துக்கொண்டு செல்லும்நாள் யாதொருநாள். அந்நாள்-அந்த நாட்கள் முழுதும். உன தாள் பிடித்தே செலக்காணே-உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும். 2காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். 3‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்; இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி
குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார். 1அடிவிடில் உறுதி குலையுமே, 2அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது, ருசியில் வந்தால் பரபக்தியையுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில், பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.
‘என்னளவு கிட்டாதார்’ என்றது, உன் திருவருளுக்கு என்னைப் போன்று
இலக்கு ஆகாதவர்கள் என்றபடி. அன்றிக்கே, என்னளவு ஞான பக்தி
இல்லாதவர் என்னுதல்.
2. “என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என்செய்கின்றாய்”
என்னும் இம்மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களும், அவனே
ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப்படுகின்றன என்னுமிடம் தோற்ற
அருளிச்செய்கிறார் ‘தாம்’ என்று தொடங்கி. ‘தாம் கைவாங்கினபடி’
என்றது, ஆகிஞ்சந்யத்வம்; ‘பிறர் பக்கல் நின்றும் கை வாங்கின படி’
என்றது, அநந்யகதித்வம்; ‘அவனே ரக்ஷகன்’ என்னுமிடம் கூறுவது.
3. “மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”
என்பது ஸ்ரீகீதை. 9. 34.
4. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:”
என்பது ஸ்ரீகீதை. 18 : 66.
5. இதுகாறும் அநப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்தார்; இனி,
அப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்கிறார் ‘உன்னால் அல்லால்’ என்று
தொடங்கி. என்றது, வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும்
உண்டாய், வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும்
சக்தியுமுண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா
என்கிறார் என்றபடி. அநப்யுபகம்யவாதம் – உடன்படாமலே பேசுகின்ற
வாதம். அப்யுபகம்யவாதம் – உடன்பட்டுப் பேசுகின்ற வாதம்.
6. உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு,
மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். அவற்றுள், முதலது, “என்
நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.
என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய,
வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச்செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று
தொடங்கி. அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது
என்னை? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று
தொடங்கி.
1. இரண்டாவது பொருள். “என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும்
இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னாலே பெறும்
உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும்
உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி. இதனையே, ‘பெறுவது
உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும்
நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு
– காலபுருஷதானம் வாங்கி.
3. அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி. ‘கடல் கடத்த’
என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’
என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி. அப்படிச் செய்தால்,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது
என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.
4. மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை
விட்டு, உபயசாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய
வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது, ‘பிராப்பியம்
ஒரு பரமசேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’
என்கையாலே, இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது
போதரும்.
பேறு என்னதால் -நாம் ஒரு கார்யம் செய்வது உண்டோ
உனது திருவடிகளைப் பிடித்து செல்லும்படி
என் மேல் விட்டு இருக்கிறாயோ என் நான் செய்கேன் இம்மூன்றும் உண்டு
அர்த்த த்ரயம்
பிறர் ரஷிப்பாரா
நீ ரஷிக்க மாட்டாயா
நான் எது செய்வது கேட்கிறார் அல்லர் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்
பிரத்யனங்கள் ஒன்றும் செய்யாமல்
யாரே களைகண் -ரஷகன் நீ இருக்க
அமிழ்ந்தாரை அமிழ்ந்தார் எழுப்பவோ
என்னை என் செய்கின்றாய்
நெறி காட்டி நீக்குதியோ
வழி காட்டி கொள்வாயா
நீ நினைத்து இருக்கிறது என்ன
என்னை அறியாயோ
பிறரை அறியாயா
உன்னை அறியாயோ சக்தன்
என்னை நான் ஆக வன்றோ புத்தி பண்ணி அசக்தன் அப்ரப்தன்
நீயே செய்து தலைக் கட்ட பார்ப்பாயோ
நளன் தமயந்தி -கதை -வழி காட்டி -நீக்க -தகப்பனார் தேசம்
வழி காட்டுவது கை விட தானே
சாதன அனுஷ்டானம் செய்து
மாம் நமஸ்குரு என்றால் சோகம்
என் நான் செய்கேன்
யாரே களை கண்
என்னை என்ன செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
என் மேல் விட்டு இருக்கிறாயா பிறர் மேல் விட்டு இருக்கிறாயா நீ என்ன செய்வதாக இருக்கிறாய்
பிரபத்தி செய்யும் அதிகாரர் மூவர் -ஸ்ரீ வசன பூசான ஸ்ரீ ஸூக்தி
அஞ்ஞானத்தால் அஸ்மாத்தாதிகள்
ஞானாதிகர் -ஆச்சார்யர் –
பக்தி பரவசம் உள்ள ஆழ்வார்கள்
ஊற்றத்தைப் பற்ற -ஆசார்யர்களுக்கும் பக்தி பாரவச்யம் உண்டே –
நமக்கும் ஞானம் கொஞ்சம் உண்டு அஞ்ஞானம் அதிகம் –
அதிகமாக உள்ளவற்றை பற்றி சொல்லி
என் நான் செய்கேன் என்பதில் இம் மூன்றும் உண்டு
தன்னைப் பெரும் இடத்தில் உபாயாந்தரம் செய்ய யோக்யதை இன்றி அஞ்ஞனாய்
இருப்பதை என் நான் செய்கேன்
மயர்வற மதி நலம் அருளினேன் ஞானாதிக்யம் உண்டே
ஸ்வரூபம் பாரதந்த்ர்யம் உணர்ந்து அறிந்து அனுஷ்டிக்காமல் –
ஞானம் மாதரம் கொடுத்து இருந்தால்
மதி நலம் பக்தி ரூபாபன்ன பரிமளித்த ஞானம் கொடுத்து அருளினாய் என் நான் செய்கேன்
பக்தி பாரவச்யமும் கொடுத்து அருளினாய் என் நான் செய்கேன் –
இப்படி ஒவ் ஒன்றையும் மூன்று தடவை அந்வயித்து பொருள் கொள்ள வேண்டும்
24000 படி –
யாரே களை கண் -தங்கள் ரஷணத்துக்கு -வேத அபகார குரு பாதக
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நீ உன்னை தரப் பார்த்தாயோ
நான் சக்தன் ஆக இருந்தாலும் -பிறர் ரஷகர் ஆனாலும் -இல்லாததையும் சேர்த்து
உன்னால் வரும் நீ ஒழிய என்னால் வரும் நீ யும் வேண்டாம்
தவமே உபாய பூதோ மே பவ
ஏவகாரம்
மாம் ஏகம் போலே
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் உயிர் நிலை அர்த்தம் இந்த ஏவகாரம்
உன்னுடைய பேறு உன் அனுக்ரகத்தாலே வேண்டும்
கன்னார் மதிள் சூழ்
செம்பாலே செய்த மதிள்
ஆஸ்ரிதர் அஞ்ச வேண்டாதபடி
அவன் சக்தியை அனுசந்தித்து அவனே மதிள் ஆக
நினைத்து அவனது சௌ குமார்யம் அனுசந்தித்து -ஆபத்து வாராமல் இருக்க மதிள்
மதிளுக்கு மதிள் இடுகிறார் மங்களா சாசனம் செய்து கன்னார் மதிள் என்கிறார்
என்னுடைய அத்ய வசாயம் குறையுமோ பயந்து ஆகாமல்
அடியேன் -உன தாள் பிடித்து செலக் காண அருளுவாய் என்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply