திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

செலக்காண் கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பி லானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

பொ-ரை :- மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காண வல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியையுடையவனே! முடிவு இல்லாதவனே! எல்லா உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கிற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே திருக்கண் வளர்கின்றவனே! உன்னைக் காணும்பொருட்டு நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்.

வி-கு :- காண்கிற்பார்: வினையாலணையும் பெயர். உலப்பு-முடிவு. நலம்-பக்தி. அலத்தல் – அலமருதல்; சுழலுதல்.

ஈடு :- நாலாம் பாட்டு. 3சர்வேச்வரனாயிருந்து வைத்து அடியார்கட்காகத் திருக்குடைந்தையிலே அண்மையிலிருப்பவனாக இருக்க, நினைத்த கைங்கரியத்தைப் பெறாமையாலே நோவுபடாநின்றேன் என்கிறார்.செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் – 1உன்னுடைய குணங்களால் வந்த பிரசித்தி அடங்கலும் அழியப்புகாநின்றது கண்டாய். 2எத்தனையேனும் அளவுடையாரும் தாங்கள் நின்ற அளவுகளைக் கழித்து அவ்வருகே காணப்புக்கால், அவ்வளவுகளையுடையனாயிருக்கும். 3“பேசுவார் எவ்வளவு பேசுவர்-இது மூன்றாம் திருவந். 21.– அவ்வளவே, வக்கரனைக்கொன்றான் வடிவு”-திவ்விய மங்கள விக்கிரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பற்றிப் பேசுமவர்கள் யாதோர் அளவு சொல்லுவார்கள், அவ்வளவாயிருக்குமத்தனை. உலப்பிலானே-ஸ்வரூப குணங்கள் புருஷர்களுடைய புத்திக்கு உட்பட்டவல்லாத அளவாய், தான் ஓர் எல்லையிலே இருக்குமோ? என்னில், உலப்பிலானே-இயல்பிலே எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை. 4தனக்கும் தன்தன்மை அறிவரியானேயன்றோ. எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி- திருவாய்மொழி, 8. 4. 6.5வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக்கொள்ளக் கூடியவனே! அன்றிக்கே, வடிவு கண்டபோதே, ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோன்றும்படியாய் இருப்பவனே! என்னுதல். அன்றிக்கே, 1‘மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும். அப்போது, எல்லா உலகங்கட்கும் நிர்வாஹகனாய் ஒப்பற்றவனான சர்வேச்வரன் என்றபடி. இதனால், இவர்க்குப் பேறு என்? என்னில், உன் பெருமையை அழிக்க அன்றோ புகுகிறாய் என்பது. 2நீர் நோவுபடுகிற இடம் என் எல்லைக்குள் அன்று என்ன ஒண்ணாதே உனக்கு.

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்-3நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவாநின்றாய், கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது. 4உன்னைக் காண்பான் நான்-‘ஸ்ரீவைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற உன்னை, மிக்க காதலையுடைய நான், அத்தலை இத்தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவாநின்றேன். உன்னைக் காண்பான் நான்-காண்கிறவன் 1நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி. உன்னை – 2மேலே கூறிய இனிமையையுடைய உன்னை என்றுமாம். அலப்பாய்-அலமந்து. 3காணும்போது ‘கண்டு கொள்ளுகிறோம்’ என்று, சூது சதுரங்கம் பொருது ஆறியிருக்கும் விஷயமன்றே, காணப்பெறாமையாலே வந்த துடிப்பு. ஆகாசத்தை நோக்கி-4திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு வாயுபுத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே, பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.

ஆகாசத்தை நோக்குகைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருவடியினுடைய’ என்று தொடங்கி.

“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந்
நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம்
வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

‘உன்னை’ என்னா நிற்கச்செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில், ‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி. விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.

அன்றிக்கே, ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய 5நிராலம்பநதையைப் பார்த்து” என்றுஆண்டான் அருளிச்செய்வர். அன்றிக்கே, 1“வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களையுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்

“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப:
விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

. 2அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யாநின்றேன், பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன். சபலர் செய்யுமதனையும் செய்யாநின்றேன், விரக்தர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்.

“எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார், “மூர்த்தி” என்பது விக்கிரஹமாய்,
அதனாலே அழகினை விவக்ஷித்து, விக்கிரஹ சௌந்தர்யத்தாலே எல்லா
உலகங்களையும் சேஷமாகக்கொண்டவன் என்பது, முதற்பொருள்.
“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், விக்கிரஹத்தைக் கண்டவாறே ‘இவனே
எல்லா உலகங்களுக்கும் சேஷி’ என்று தோற்றும்படியாயிருப்பவன்
என்பது, இரண்டாவது பொருள்.“மூர்த்தி” என்ற சொல்லானது, விக்கிரஹத்தைக் காட்டுமோ? என்ற
சங்கையையும் பரிஹரித்துக்கொண்டு, மூன்றாவது பொருளினை
அருளிச்செய்கிறார் ‘மூர்த்தி என்ற சொல்லானது’ என்று தொடங்கி.
‘அப்போது’ என்றது, செல்வத்திற்கு வாசகமான போது என்றபடி.

சர்வேஸ்வரன் சந்நிகிதனாய் இருந்தும் இழந்தேனே என்கிறார்
கீர்த்தி -காணும் அளவும் செல்லும்
உலப்பு = முடிவு
நலத்தால் மிக்கார் நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
அனுக்ரகம் செய்யாமல் இந்த பெரிய கீர்த்தி குறையுமே
நின்ற நின்ற நிலை தாண்டி போனாலும் -அனுபவிக்கும் அளவு விஞ்சி இருக்கும் கீர்த்தி
புகழ் பழியாகும் லோகத்தில்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
பேசுவார் எவ்வளவு பேசுவார் -வடிவு பேசுபவர்கள் -பேசும் அளவும் உயர்ந்து இருக்கும்
ஸ்வரூப குணங்கள் -போலே தானும் உலப்பிலானே -அளவு பட்டு இன்றி
தனக்கும் தன் தன்மை அறிய முடியாமல்
வடிவு அழகை காட்டி கண்டவாற்றால் தனதே உலகு என்று இருக்கும்
மூர்த்தி சப்தம் விக்ரஹம் ஐஸ்வர்யம் வாசகம்
சர்வ லோகங்களுக்கும் நிர்வாஹகன்
பெருமையை அழிக்க கிடாய் –
சர்வ லோக சப்தத்தில் நானும் அடக்கம் தானே
நீர் நோவு படும் என்னுடைய எல்லையில் இல்லை சொல்ல முடியாதே

ராஜா -பண்டிதன் -கதை
நீ தான் பகவானை விட உசந்தவன்
அவனால் செய்ய முடியாததை நீ செய்ய முடியுமே
நாடு கடத்துவேன் இவன் சொல்லலாம்
பகவான் சொல்ல முடியாதே –

எனது கண் முன்னால்  சந்நிகிதனாய் -சஜாதீயனாய் –
நலத்தால் மிக்கார் உன்னால் அல்லால் செல்லாத நல்லவர்கள் உள்ள
க்ரம ப்ராப்தி பாராமல் துடிக்கும்
உன்னைக் காண்பான் நான் –
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாய் இருக்க
ஆஸ்ரிதர் விடாமல் இங்கே வந்து கிடந்தது இருக்க
அத்தலை இத்தலையாய்
உனைப் பெற நான் அலப்பாய் துடித்து இருக்க
காண்கிறது உன்னை அன்றோ
வஸ்து விலஷணம் ஆசையும் விஞ்சி
கண்டபோது கண்டு கொள்கிறோம் ஆறி இருக்காமல்
சூது சதுரங்கம் ஆடி பொழுது போக்குவது போலே

ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன்
திர்யக் திருவடி வார்த்தை கேட்டு திசைகள் தோறும் பார்த்து

ஆகாசத்தை நோக்குகைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருவடியினுடைய’ என்று தொடங்கி.

“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந்
நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம்
வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.
கண் முன்னால் பார்த்தாலும் கலங்கி ஆகாசத்தில் இருந்து வருகிறானோ பார்க்கிறார்
கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து போலே வருவான் என்று
என்னுடைய நிராலம்பம் -முதலியாண்டான் வார்த்தை -பிடிப்பு இல்லாத இடம் ஆகாசம்
பற்றுக் கோல் இல்லையே என்பதை குறிக்க ஆகாசம்

அழுவன் தொழுவன்
சிநேகிதர் செய்வதையும் செய்து -தீனன் செய்யும் கார்யம் தொழுதல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading