திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே! என்நான் செய் கேனே?

பொ-ரை :- எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும் விரும்பும் வகையிலே மேற்கொள்கின்றவனே! அழகிய ஏறே! சிவந்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணீர் மேலே கண்கள் போன்று மலர்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை மூடிக்கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்கிறார்.

வி-கு :- மூர்த்தி – ஸ்வபாவம், வடிவுமாம்; ஏறு – இடபம். மிசைக்கண் என்றவிடத்தில் ‘கண்’ இடமுமாம். ‘வளர்கின்றானே’ என்பது, கண்களைத் திறந்து என்னை வினவுதல் செய்யாது உறங்குகின்றானே, என் செய்வேன்! என்கிறார் என்றபடி.ஈடு :- இரண்டாம் பாட்டு. 1இப்படிக் கூப்பிடச் செய்தேயும் மறுமாற்றம் தாராமையாலே, ‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனை அன்றோ’ என்று இருந்தானாகக் கொண்டு முன்பு செய்த உபகாரங்களைக் கூப்பிடுகிறார்.

எம்மானே! என் நான் செய்கேன் – 2உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார். ‘நீயே உன் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக்கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ. என் நாதனே! எம்மானே என் வெள்ளைமூர்த்தி – 3“உலகத்திற்கெல்லாம் தலைவன்”, “அந்தச் சர்வேச்வரனுக்கு அடியவனாய் இருக்கிறேன்”

“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்
ஸிவம் அச்யுதம்.”
“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.”
என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.

பின்னர் எங்ஙனே செய்தபடி? என்னில், 4சுத்த ஸ்வரூபனாகையாலே தன்படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத்தன்பேறாகத் தானே காட்டக் கண்டேன். சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்னை ஆள்வானே – காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என்வழியேயாக்கி என்னைக் கைவிட்டாயோ. என்றது, “அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குணஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி. எம் மா உருவும் ஆவாய் – 1எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே. அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு, 2எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே! என்னுதல். என்றது, 3“என்னுடையதான ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு” என்கிறபடியே,

அவதார விக்ரஹங்களுக்கு வைலக்ஷண்யம் உண்டோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடையதான’ என்று தொடங்கி.

“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”-  என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.

பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய திருமேனியாக இருக்கை. 4வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல். அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்; “தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு 1“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும்பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல். எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி; ஆதலால், “மா உரு” என்கிறது. என்றது, 2தோன்றுதல்” என்கிறபடியே,

தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.

பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை என்றபடி. 3“பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.

“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா:
தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70. இது, அவனுடைய விக்ரஹம்
அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது,
அப்ராக்ருதமாயிருக்கும் என்றபடி.

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.

4இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும், 5இவன் கர்மங்கள் அவன்காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லாநிற்கும். 1இனி, அவனுக்குக் கர்மம் என்னப்பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு. 2இவனுக்கு இவன்தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே. 3இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன்பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும். 4“அருச்சுனா! உன்னுடைய பிறவிகளைப் போலவே என்னுடைய பல பிறவிகளும் கழிந்து போயின” என்றான் அன்றோ.

ஈச்வரனுடைய அவதாரங்கள் எண்ணிறந்தன என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘அருச்சுனா!’ என்று தொடங்கி.

“பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந
தாந்யஹம் வேதஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”-  என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.

5“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்றுகாண் என்பதற்கு.

இப்படி இராத அன்று இவனுக்கு மார்விலே கையை வைத்து உறங்க ஒண்ணாதே.

இப்படி இராத அன்று’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
அவதாரங்கள் உண்மையல்லவானால், அவ்வவதாரங்களில் சொல்லப்பட்ட

“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”-  (ஸ்ரீராமா. சுந். 18:33.) என்பது போன்ற சுலோகங்களும் உண்மையல்லவாம்
ஆகையாலே, அவ்வார்த்தைகளை நம்பிப் பயம் அற்றவனாயிருக்கக்
கூடாதே என்பதாம். அன்றிக்கே, இப்படி, அவன் அனுக்ரஹத்தாலே
அவதாரங்களைச் செய்யாதபோது, இவனுக்கு ‘அவனே ரக்ஷகன்’ என்று
நம்பிப் பயமற்றவனாயிருக்க விரகு இல்லையே என்னுதல்.

எழில் ஏறே – இப்படி அடியார்கட்காகப் பிறவாநின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில், பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை. 2கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ. “அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியையுடையவனாகிறான்” என்பது சுருதி. 3எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும். தேசம் அறியப் புகர் உண்டாய் நெஞ்சு வெறுத்திருக்குமோ? என்னில், 4“பட்டி மேய்ந்தோர் காரேறு” என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பையுடையவனாயிருக்கும். “வானிளவரசு” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி,
3. 6 : 3. “வானிளவரசு’ என்பதற்குப் பொருள், முதியோர்களான
அமைச்சர்களின்கீழே இளவரசன் இருப்பது போன்று, நித்தியசூரிகள்
தங்கியிருக்கின்ற பரமபதத்தில் இளவரசாக உள்ளவன் என்பதாம்

அகம்படி வைத்த அரசாய் இருக்கும் அங்கு, அச்செறுப்புத் தீர, தான் விரும்பினபடி சஞ்சரிக்கப்போந்த இடமே அன்றோ இது. ஆகையாலே, அங்கு நின்றும் போந்து பிறந்த பின்பாயிற்று ‘எழில் ஏறு’ ஆயிற்று. 1அடி அறிவார், 2தேவரீர், பிராட்டியோடு கூடியவரும் சக்கரத்தைத் தரித்தவரும் எங்கும் நிறைந்திருப்பவருமான நாராயணன் என்னும் தெய்வம் ஆவீர்; தேவரீர் ஒற்றைக் கொம்புள்ள வராக அவதாரம் செய்தவர், சென்றவர்களும் வருகின்றவர்களுமான பகைவர்களை அழித்தவர்” என்றால், அது பொறாதவனாய்

“பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு:
ஏகஸ்ருங்கோ வராஹ: த்வம் பூதபவ்யஸபத்நஜித்”

என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.

3“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,

ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீது மே”  என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.

4“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும்அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.

செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே – அவதாரகாலத்தில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாதபடி அன்றோ 1கோயில்களிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது.

கோயில்களிலே’ என்ற இவ்விடத்தில்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்.
(நான்முகன் திருவந்தாதி என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.

2பரிமளம் முகத்தே வந்து அலை எறிய அதுதானே துடை குத்தக் கிடந்து உறங்குகிறபடி. அன்றிக்கே, 3சிவந்த பெரிய தாமரைகளானவை, காட்சிக்கு இனியதான நீரை அமுக்கி மேலே அலருகிறபோது, கடல்நிறமான வடிவையும் அங்குத்தை அவயவங்களையும் காட்டாநின்றன ஆதலின் ‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்’ என்கிறார் என்னுதல். அரைக்கணத்திலே செவ்வி மாறுகிற தாமரை அங்குத்தைக்கு ஒப்பாகாதே அன்றோ, வருந்திச் சொல்லும்போதும் இத்தனை ஏறிட்டுச் சொல்ல வேணுங்காணும் என்பார் ‘செம்மா கமலம்’ என்கிறார். 4அழகிய தாமரைப்பூப் போலே இருக்கிற திருக்கண்கள் அலரக் காண்கின்றிலேன் என்பார் ‘அம் மா மலர்க்கண் வளர்கின்றானே’ என்கிறார்.

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12. இது கோவர்த்தந கிரியை எடுத்துக்
குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

அன்றிக்கே, அவற்றோடே ஒரே சாதியினவான இரண்டு பூக்கள் அலரக் காண்கின்றிலேன் என்கிறார் என்னுதல். என் நான் செய்கேனே – இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என்செய்கேன்? 1திருக்குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக்கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன, இத்தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! 2‘இக்கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய். 3‘இவை ஒழிய மதுபானம் செய்யோம்’ என்கையன்றோ இவர்க்கு இங்ஙன் படவேண்டுகிறது. 4இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும். அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

இப்படி கூப்பிடச் செய்தேயும்
உம்முடைய கார்யம் நீரே செய்யும் என்ற திரு உள்ளமாக கொண்டு
அவன் செய்து அருளிய உபகார பரம்பரைகள்
என் நான் செய்கேன்
எம்மான்
என் வெள்ளை மூர்த்தி
என்னையும் ஆண்டு
மூர்த்தி பலவும் காட்டு அருளி
உடைமை உடையவன் நிர்வக்கிக்க வேண்டுமே -எம்மானே என்கிறார்
வெறும் நானே யாய் இருந்தேனோ ஸ்வாமி நீ தான் என்னுடைய நாதன்
பதிம்  விச்வச்ய -சாஸ்திரம் கொண்டு அறியாமல் வெள்ளை மூர்த்தி
நீயே  காட்டக் கண்டேன்
மயர்வு கிடக்க அருளினாய் ஆகில் ஆறி இருக்கலாம்
என்னை ஆள்வானே -கை விடாமல் ஆண்டு
அஞ்சிறைய மடநாராய் மாசுருசோதி வியசனங்கள் தீர்த்து தரிக்க செய்து அருளினாய்
தரித்து பிராணனைக்  கொடுத்து ஆண்டு
எம் மா உருவும் ஆவாய் -சங்கல்பத்தால் இச்சா கிருகீக எந்த ரூபத்தையும் கொண்டு
நீ படும் பாடு எனக்காகவும் ஆஸ்ரிதருக்கும் விலஷணமான திருமேனி
பிராப்க்ருத திருமேனி தனக்கு வேண்டிய உரு கொண்டு
வேண்டுமாற்றால் தான் வேண்டுமாற்றால் -அடியார்கள் வேண்டுமற்றால்
இச்சையால் அபிமத திருமேனி ஸு இச்சை மட்டும் இல்லை
பாகவத இச்சை
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்

ஆவிர்பூதம் -இதர சஜாதீயமாக்கிக் கொண்டு -திருக்கல்யாண குணங்கள்
அந்ய ரூபம் தரித்து
அனுக்ரஹம் அடியாக திரு அவதரித்து
இருவருக்கும் பிறவி ஒகுக் அநேகம்
இவனுக்கு கூட முடியும் அவனுக்கு அவதாரங்கள் முடியாதே
கர்மம்
முடியலாம் சம்சாரிகள் அனைவரையும் கூட்டிச் செல்ல
இவன் கர்மம் அவன் காலிலே புகுரப் போகும்
அவனுக்கு கர்மம் நித்யம் அனுக்ரஹம் தானே கர்மம் நித்யம்
அவன் எல்லாருக்குமாக பிறக்க வேண்டுமே -பரார்தமாக இருக்கும்
பஹுனி மே ஜன்மானி -உன்னுடைய பிறவி மெய் போலே என்னுடிய பிறவியும் இந்த்ரஜாலம் போலே இல்லை
அப்படி இல்லாத பொது இவனுக்கு மார்பிலே கை வைத்து உறங்குதல் இல்லையே
எழில் ஏறு -ரிஷபம் ஆஸ்ரித அர்த்தமாக புகர் மிக்கு அவதரித்து

எழில் மேலே மேலே ஏறும்
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
சகா யு -அவனே -ஸ்ரேயான் பவதி ஜாயமான -பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு
உள்ளுக்குள் நெஞ்சு வெறுப்பு -இன்றி -பிறக்கப் பெற்றோம் மேணானிப்பு தோன்ற
பட்டி மேய்ந்தோர் -காரேறு -போலே
இட்டீர் இட்டீர் ஆனந்த சப்தம் –
அவாக்ய அநாதர அங்கு இருக்க –
வான் இளவரசு -அகம்படி
இங்கே தான் சந்தோஷம்
இட்டபடி திரிய -இங்கு தான் எழில் ஏறு -ஸு இச்சா சஞ்சாரம் செய்யலாமே
அடி அறிவார் -பவான் நாரயனோ தேவா -சொல்லும் ப்ரஹ்மாதிகள்
ஆத்மாநாம் மானுஷ்ய மன்ய -மனுஷ்யனாக நினைத்து
கோவர்த்தன் தேவோவா-அஹம் வோ பாந்தவோ ஜாத -போலே

செம்மா கமலம்
கோயிலிலே வந்து கண் வளர்கிறது பரிமளம் அலை எரிய
அதுவே தொடை தட்ட
கண் வளர்ந்து -தாமரை திருமேனி அழகைக் காட்ட மா கமலம் -செம்மா கமலம் ஒப்பு
அரை ஷணத்தில் செவ்வி மாறும் தாமரை இத்தனை ஏறிட்டு சொல்ல வேண்டுமே
கண்டேன் எம்மானே
அம்மா மலர் -அத்துடன் சஜாதீயன் ஆக்கும் திருக்கண்கள்
இரண்டும் மலர்ந்தால் தான் நான் தரிக்க
மது பானம் வண்டுகள் களியா நிற்க நான் -வண்டு பட்டினி கிடக்கும் படி
இக்கூப்பீடு சென்று கொண்டு இருக்கும் நினைத்து இருக்கிறாயா
இவை ஒழிய -வேறு எங்கும் போகாத வண்டு
மது விரதம் வண்டு
தேனை இந்த பூவில் உள்ள தேனை தவிர வேறு ஒன்றைப் பருகாத வண்டு
அலர்தல் -விசேஷ
கடாஷம் அவன் கண் விழியாத பொது இவர் கண் விழிக்க மாட்டார் இ றே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading