எட்டாம் திருவாய்மொழி – “ஆராவமுதே”
முன்னுரை
ஈடு :- 1சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்; இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க; 2கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்; தரித்த இதுதான் திருக்குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று. 3என்தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டாதொழியவும்அங்கு ஏறப்போகவேண்டுவான் என்? என்னில், 1‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா, நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே; “அடியார்களுக்காக எழுந்தருளியிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக்கட்டாமை இல்லை, ‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதியிடப்பட்டதாயிருக்குமே அன்றோ, ஆன பின்பு, இங்குச்செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்; 2இனித்தான், ஸ்ரீபரதாழ்வான் ‘பெருமாளை மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல. ‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ; ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததேயாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து, ‘திருக்குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும், நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று திருக்குடந்தையை அடைந்தார்.
அவ்வாறு அடைய, 3ஸ்ரீபரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒருபுண்பாடும், தாயைக்கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்” என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க்கொண்டு; நான் திருவடிகளிலே சென்று கிட்டினால், உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ! என்பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திருஅருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து; அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு போல, திருவயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை என்று பார்த்து 1“இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர், பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே, இவன் செல்ல; பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவுபடாமல் நடத்தாநின்றாயே? காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே; இவர் அடைந்த இடத்தில் 2திருக்கண்களை அலர விழித்துக் குளிர நோக்கியருளுதல், திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்தல், அணைத்தல் செய்யக்கண்டிலர். 3“அந்தக் கிருஷ்ணன், என்னை அக்ரூரனே!
என்று அருளிச்செய்வர்” என்றாற்போலே பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோரதம் பெற்றானே அன்றோ; அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய், 1இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து, பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு, 2இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார்.
520
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
பொ-ரை :- எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனுடைய சரீரமானது, உன் விஷயத்தில் அன்புதானே தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணீராகி ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே! சிறப்புப் பொருந்திய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது விளங்கும்படியாகச் சயனித்திருக்கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.
வி-கு :- உடலமானது அன்பாகி நீராகி அலைந்து கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே என்க. வீசும் திருக்குடந்தை என்க.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 3உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண்வளர்ந்தருளக் கண்டேன்; குளிரநோக்குதல், அணைத்தருளுதல், செய்யக் காண்கின்றிலேன் என்கிறார்.
1ஆரா அமுதே-அநுபவியாநின்றாலும் கிரமப்பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறி இருக்கும்படி. என்றது, முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன; அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி இருக்கையைத் தெரிவித்தபடி. ஆரா அமுதே – 2கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவயோனியிலே பிறக்கவேணும், பிரஹ்மசரியம் அநுஷ்டிக்க வேணும், இத்தனையும் இருந்தால் ஒரு தடவை உண்ணக்கூடியதாக இருக்கும்; இது அங்ஙன் அன்றிக்கே, சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக்கூடியதாய், பிரஹ்மசரியம் முதலானவற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும். 3வடதேசத்திலே லோகசாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன, ‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், ‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.
ஆராஅமுதே – 1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.அடியேன் – மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர், இனிமைக்குத் தோற்றுப் 1புற்கவ்விச் சொல்லுகிறார். 2“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் 3“அவர் குணங்களால் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறேன்” என்றாற்போலே. உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைய உருக்குகின்ற நெடுமாலே – சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் சரீரம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்தது. 4‘நான்’ என்று இருக்கக்கூடிய இவர்தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ; அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி. 1சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன்வழியே இழுக்கை தவிர்ந்து, அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. அன்றிக்கே, 2ஞான ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாதல், அதற்குத் தோள் தீண்டியான ஞானம் செல்லுதற்கு வழியான மனமாதல் அன்றிக்கே, இவற்றுக்கு அவ்வருகான தோல் சதை நிணம் எலும்பு வடிவமான சரீரமும் அழியும்படியாயிற்று என்னுதல். 3சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்புதான் ஒரு வடிவு கொண்டாற்போலே இராநின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.
4உடலம் அன்பாய், அன்புதான் நீராய்க் கொண்டு அலையாநின்றது என்பார் ‘உடலம் அன்பாய் நீராய் அலைந்து’ என்கிறார். 5முதல் முன்னம் கேள்வியாய், அதன் பின் மனனமாய், பின்னை பாவனையாய், அது பிரத்யக்ஷ ஸமாநாகாரமாய்க் கொண்டு அவ்வடைவிலே வருகிறதன்றே, விஷயம் அழிக்க அழிகிறதித்தனை அன்றோ.நீர் தன்பக்கலிலே அகப்பட்டதனைக் கரைத்துத் தான் கரையாதிருக்குமாயிற்று; இங்கு அங்ஙன் அன்று, நீர்தானாயிற்றுக் கரைகிறது என்பார் ‘நீராய் அலைந்து கரைய’ என்கிறார். 1அன்பு நீரானால், நீர்தான் கரையத் தட்டு இல்லையே. இத்தனை அளவு இது ஆனால், அத்தலை செய்கிறது என்? என்னில், ‘உருக்குகின்ற’ என்கிறார்; என்றது, 2அழிக்கைக்கு அடி இட்ட இத்தனையாயிற்று என்கிறார் என்றபடி. 3அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி. 4தேசமான அணிகலனும் இவர் கைகூப்புச் செய்கையே அன்றோ.
ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின், ‘நெடுமாலே’ என்கிறார். என்றது, எதிர்த்தலையில் அழிவுகண்ட பின்பே அன்றோ இத்தலையில் அழிவு என்றபடி. 5அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராதபடியாயிருக்கும். அவனுடைய அழிவு சொல்லும்போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது. ‘நெடுமால்’ என்னில்என்னுமித்தனை. மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை. அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் – 1மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்
ஆருயி ரேயோ! அகலிட முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயி ரேயோ! பெரியநீர் படைத்துஅங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த
சீருயி ரேயோ! மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!
ஓருயி ரேயோ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்குவந் துறுகோ.-என்பது, திருவாய். 8. 4 : 5.;
சர்வேச்வரன் என்றபடி. 2அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ. சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தையுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக்கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு கைங்கர்யம் செய்வாரைப்போலே அசையாநிற்கும். சீர் – கனமும், அழகும். ‘கவரி வீசும்’ என்றது, கவி போலே வீச என்றபடி. கவரி – சாமரை.
3அன்றிக்கே, ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடியாகிற சீர்மையையுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார் என்னுதல். அப்போது “நான் சர்வேச்வரனுக்கு போக்யன்” என்கிற சீர்மை. 4“மரங்கள் எல்லாம் காலம் அல்லாத காலத்திலும் பயன் அளிக்கக் கடவன” என்னுமாறு போலே, எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என 5நிகழ் காலத்தாற் கூறுகிறார்.என்றது, அறுத்து நடவேண்டா போலே காணும் இருப்பது என்றபடி. 1கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே, 2சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் என்னுதல். செழு நீர்த் திருக்குடந்தை – திருக்கண் வளர்ந்தருளுகிற சௌகுமார்யத்துக்குப் போரும்படி அழகிதான தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருக்குடந்தையிலே. செழுநீர் – பெருநீர் என்றுமாம். ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் – அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக்கண் வளர்ந்தருளுகின்றாய்.
3நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்றுபோல இருக்கும், ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, 4பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,
வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா
ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’
என்று தொடங்கும் வாக்கியம்.
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார். ‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை. கிடந்தாய் கண்டேன் – “சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன், நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, 1எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப்பெற்றிலேன் என்றபடி. 2எம்மானே-இது நம்மது’ என்று இராதொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது, சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியாநின்றது என்கிறார் என்னுதல்.
முகங்காட்டாதிருக்க’ திருக்குடந்தைக்குச் செல்லுவதற்குத் தரிப்பு
உண்டானவாறு எங்ஙனே? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘கடலில் அமிழ்ந்துவார்’ என்று தொடங்கி. மிதப்பு – தெப்பம். “ஆறு
எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கே, ‘வேறு
ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல்
செய்தல்’ என்றிருக்கையாலே, “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத்
தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று
யோசனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று
தோற்றுகிறது. அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும்
தந்தாய் என்பது. “நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை
நீக்குகிறது; “நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை
நீக்குகிறது; ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்”
என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும். இத்தால், இந்த நிலையிலும்,
ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான்
என்றபடி. ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது,
வேறு இரக்ஷகரில்லாமை.
அரசர்கள் ஆசன பேதத்தாலே
காரியம் செய்யுமாறு போலேயும், நம்பெருமாள், திருமங்கையாழ்வாருடைய
அபேக்ஷிதத்தைக் கோயிலிலே செய்யாமல் திருக்குறுங்குடியிலே செய்தது
போலேயும் தேசம் அறுதியிடப்பட்டதாயிருக்கும் என்றபடி.
காலவேற்றுமையாலும் காரியம் செய்வான் என்பதற்கு, வேறு ஒரு காரணம்
காட்டுகிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி. ஆக, இதனால், ‘இன்னானை
இன்ன தேசத்திலே அங்கீகரிக்கக் கடவோம்’ என்றும், இன்ன காலத்திலே
அங்கீகரிக்கக்கடவோம்’ என்றும் அவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு;
ஆகையாலே அந்த இரண்டு நிலைகளையும் அறிந்திருக்கிற இவர், இங்குச்
செய்திலனாகில் இன்னம் ஒரு தேசத்திலே செய்கிறான், இப்போது
செய்திலனாகில் வேறு ஒரு காலத்திலே செய்கிறான் என்று
திருக்குடந்தையிலே புக்கார் என்றபடி.
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
இத்திருப்பெயரின் இனிமையின் மிகுதி ஈச்வரனுக்கும் தனியே
அநுபவிக்கப் போகாது என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘ஸஹபத்நியா’ என்று தொடங்கி.
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ:
ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.
‘ஸ்வரூபத்தோடு கூடியதான தாஸ்யமே உத்தேசியம்’ என்றிருக்கிறவருக்கு,
இனிமைக்குத் தோற்று “அடியேன்” என்கிற இது, பொருந்துவதாமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரவாநஸ்மி’ என்று தொடங்கி.
“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
இவர் திருமேனி ஆபரணம் ஆமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தேசமான’ என்று தொடங்கி.
பூசுஞ் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாச கஞ்செய் மாலையே வான்பட் டாடையு மஃதே
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே
ஈசன் ஞால முண்டு மிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.-என்பது, திருவாய். 4. 3 : 2.
ஆரா அமுத ஆழ்வார் தரமி ஐக்கியம்
வேரற்ற மரம் போலே வான மா மலை திருவடிகளில் விழ
துக்கம் வந்தாலும் அவனே பேறு ஆறு என்று நினைக்கும் படி உறுதி கொண்டு தரித்து
வேற பிரமத்தை தவிர்த்தான் இ றே என்று தரிக்க
திருக்குடந்தை பெருமாள் -ஆரா அமுதன் -அனுபவிக்க தரித்து
இங்கே கிடைக்க வில்லை –
விசுவாசம் குறைந்து இல்லாதவர் ஆழ்வார்
ஆஸ்ரித அர்த்தமாக எழுந்து அருளி இருக்கிறவர் -நிச்சயமாக தனது கார்யம் செய்து
தலைக் கட்டுவான்
இன்ன கார்யம் இன்ன இடத்தில் செய்ய வைத்து இருப்பான்
பரத ஆழ்வான் -பெருமாளை மீட்டு திரு அபிஷேகம் செய்ய பாரித்து வர
14 வருஷம் நாள் குறித்து-அல்லால் மீளேன் – கொடுக்கும் ஸ்வ தந்த்ரன் அவன் என்பதால்
தாமத்திதாலும் நமது கார்யம் தலைக் கட்டுவான்
பரத ஆழ்வான் -தான் தான் நிமித்தம் என்று சொல்லும்படியாக புண்பாடு ஏற்பட -வருத்தமும் –
நாட்டார் சீறும் பாயும் என்ற அச்சத்துடன் -இருக்க
ப்ராதா சிஷ்யா தாஸ்ய -என்று கிருபை பிரார்த்தித்து
படை திரட்டி போக -ஆர்த்தர் பலர் கண்டு மீளுவான் என்று பார்த்து
ராஜ்ய கார்யங்கள் நன்றாக நடக்கிறதா -கேள்விகள் கேட்டு பெருமாள்
பரதனுக்கு பேச இடம் கொடுக்காமல் வார்த்தை பேசி அருளி
எம்பெருமானும் இப்படி கேட்க ஆசைப்படுகிறார்
திருக் குடைந்தையிலும் வார்த்தை பேசாமல்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு திரு மழிசை ஆழ்வாருக்கு செய்து அருளி
அக்ரூரர் பிரார்த்தி வந்தது போலே ஆழ்வார் பாரித்து வர
துக்கம் மேலிட்டு
போக்யதையாலும் சௌந்த்ர்யத்தாலும் -ஈடுபட்டு ஆனந்ததித்து
ஸ்தனந்த்ய பிரஜை தாய் முன்னால் நோவு படுமா போலே
தளர்ந்து இன்னும் எத்தனை வாசல் தட்டுவேன்
ஆர்த்தி உடன் தலைக்கட்டுகிறார் இந்த திருவாய்மொழியை-
24000 படி ஸ்பஷ்டமாக -ஒரு கால் பிரதிபத்தி பண்ணி மேல் மேலும் சரண் அடைந்து
மஹா விசுவாசம் கொண்டு –
அரும்பதத்தில் -இவ்வளவிலும் எம்பெருமான் இடம் -வேறு ஒன்றாலும் பேறு –
மற்று ஒருவர் ரஷகர் என்ற நினைப்பை தவிர்த்து
ஆறு எனக்கு நின் பாதமே சரண் என்றதை கடாஷித்து
கீழ் மூன்று யோஜனை தவிர -ரஷகம் -என்கிற நாலாவது அர்த்தமும் அருளி –
பாதமே உபாயம் ரஷகம் -இரண்டையும் –
சரணம் -க்ருஹம் /திருவடி /உபாயம் /உபேயம் /ரஷகம் -நாலு யோஜனை
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே -பரத ஆழ்வான் -நாள் குறித்து -முகம் காட்ட
பெருமாள் பிரதிக்ஜை -முதலில் நிறைவேற்றி –
இங்கு ஆழ்வாருக்கு முகம் காட்டாது ஒழிந்தது
விடாய் பிறப்பித்து /பிரபந்தம் தலைக்கட்ட ஆறு காரணங்கள் ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
ஆயிரத்துள் இப்பத்து சங்கல்ப்பித்து –
உசாவி -வார்த்தை கேட்ப்பான் என்று நினைத்து போக செய்யாமையாலே அப்ரீதி உடன் தலைக்கட்டுகிறார் –
பரத ஆழ்வானை உசாவி அருளினார்
அக்ரூரருக்கு அருளியது போலே கிடைக்காமல்
கதறுகிறார்
அழகு உருக்க
குளிர நோக்குதல் அணைத்தல் செய்யாமல் இருக்க –
ஆரா அமுதே -ஆரவே இல்லாத -திருப்தி ஏற்படாத அமுதம் -துடிப்புடன் அருளி
அபரியார்ப்த அமர்த்தம் சஹச்ர நாமத்திலும் இல்லாத திருநாமம்
ஆரா அமுத சப்தம் நிறைய முன் வந்தாலும் இதில் தொடக்கத்திலே
ஆரா அமுதன் -சொல்ல கூடாது ஆரா அமுது
மற்று ஒன்றினை காணாதே அமுதினைக் கண்ட
அமுது -இவன் -ஆரா அமுதனே சொல்லாமல் ஆரா அமுதே அருளுகிறார்
அடியேன் உடலம் நின் பால் அன்பால் நீராய் அலைந்து உருக்குகின்ற
செந்நெல் கைங்கர்யம் செய்ய
கண்ணால் பார்த்து கிட்டே சென்று ஸ்பர்சித்து அணைத்து க்ரம அனுபவம்
பசியன் சோற்றைக் கண்டால் போலே துடிப்பின் காரணம் மேலே விழுந்து அனுபவிக்க
சாமான்யமான அமிர்தம் உப்புச் சாறு -தேவ யோனியில் பிறந்து பிரமச்சர்யம் அனுஷ்டித்து
பிரமச்சர்யம் சாஸ்திர விகுதமாக பத்தினி மட்டும் -அனுபவித்து
அஷ்டாங்க யோகம் விஸ்தரித்து விளக்கி
அந்த உப்புச் சாரும் ஒரே தடவை
இது -அங்கன் அன்றிக்கே சர்வாதிகாரமாய் சதா சேவ்யமுமாய் பிரமச்சர்யம் இல்லாத பாபங்களையும் போக்கிக் கொடுக்கும்
லோக சாரங்க மகா முனிகள் -பிரசித்த -திருப்பாண் ஆழ்வார் -இருக்கலாம்
இங்குத்தை அங்கெ செல்ல
பிள்ளாய் தஷிண பூமியில் விசேஷம் என்ன
திவ்ய பிரபந்தம் கிடைத்ததை சொல்லி
சந்தைசொல்லிக் காணாய் என்ன
ஆரா அமுதே இத்தனை ஒன்றே போதும்
நாராயணாதி நாமங்கள் கிடக்க இப்படி ஒரு திவ்ய நாமம் கிடைக்கப் பெற்றோமே
தன்னைத் தானே அனுபவிக்க பார்த்தாலும் அவனுக்கே திருப்தி இன்றி
பெரிய பெருமாளை திருவாராதனம் செய்த பெருமாள் -சக பத்ன்யா விசாலாஷ்யா நாராயண உபாகமத்
தனியே சென்று இழிய முடியாமல் கூட்டு சேர்த்து போனார்
ஆழம் காலிலே இழிவார் கொம்பை பிடித்து போவாரைப் போலே சீதை பிராட்டி கொண்டு
கிண்ணகத்தில் இழிவார் தேசிகரை கொண்டு இழிவாரைப் போலே பிராட்டி உடன் –
தேசிகர் -ஆசார்யர் -வல்லவர்
பெருமாளை அனுபவிக்க சாமர்த்தியம் உள்ளவள் பெரிய பிராட்டியார் தானே
அவள் சக கார்யம் பெருமாளுக்கு வேண்டி இருந்தது
விசாலாட்ஷ்யா -பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தைக் கண்டு
கண் மலர்ந்து –
தன்னை அணைக்க போதிலும் காட்டிலும் உடம்பெல்லாம் கண்ணாக –
இவர் நியதி இருக்கும் படி நாராயணன் முழுகி -ஜிதேந்த்ரியம் -இந்த்ரியங்கள் வென்று
நாராயண உபாகமத் -நியதி -நியமம் -கிதேந்த்ர்யம் –
பிராட்டி விசாலட்ஷியாக நின்று இருந்தாலும் நாராயணன் நோக்கி
அக்கண்ணில் ஆழம் கால் படாமல் நாராயணன் மேல் ஈடுபட்டு
தான் தன்னை அனுபவிக்கவும் கூட்டுத் தேடும்படி ஆரா அமுதே
பீஜம் இப்பதம் ஆயிற்று -ஆதி காரணம்
ஆராத அமுதமாய் இருந்து ஆழ்வாரை படுத்த
அடியேன் -ஸ்வரூபத்தால் சொல்லாமல் -போக்யதையில் தோற்று -சொல்லும் வார்த்தை
காகுஸ்த -தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இல்லை குணத்துக்கு தோற்று இளைய பெருமாள்
இவர் அழகுக்கு தோற்று
தேகம் விரோதியாய் இருக்கும் ஆத்மா சேஷத்வம் இருக்க ஒட்டாமல்
உடம்பே உருக விரோதி ஒழிந்தது –
அஹம் என்று இருக்கக் கடவ அடியேன் என்றது போக்யதையால்
ஆத்மா வழியில் தேகம் வந்தபடி சொல்லுகிறது -அழகு அப்படி செய்தது
சேதனம அசேதன விபாகம் அற -அனைத்தையும் உருக
குழல் ஓசை கேட்டு பசுக்கள் -மரங்களும் இரங்கி
அன்பு வடுவு கொண்டது போலே
உடம்பு அன்பாய் நீராய் உருகி
சரவணம் ,முதலில் -மனனம் நிதித்யாசனம் -பிரதிஷ சமானாகாரம் அப்புறம் பிரத்யஷம்
நீர் தன் பக்கல் உள்ளவற்றை கரைக்கும்
இங்கே நீரே கரையே
அன்பு நீரானால் நார் கரைய தட்டில்லை
அவன் -அப்படியே இருக்க -விக்ருதி இன்றி
உருக்க -ஆபரணம் அழித்து உருக்குவான் போலே
உருக்குகின்றான் –
தேசமான அணிகலனும் இவர் கை கூப்பிச் செய்கையே
மால் அன்பு
நெடுமாலே
எதிர் தலையில் அழிவு கண்டு வ்யமோஹம்
அவன் வ்யாமோஹம் பார்த்து நம்மது ஒன்றும் இல்லை
நீரே அலைந்து உருக்கி சொல்லலாம் என்னது
அவனது நெடுமால் ஒன்றே சொல்லாம்படி
மால் கருமை பெருமை மையல்
சர்வேஸ்வரன் பெருமையும் இவளை அழிக்க உடல்
சீரார் செந்நெல் -கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு
கைங்கர்யம் கவிரி வீச அசைந்து சாமரம்
சீர்மை அமுது படியாகும் சீர்மை உண்டே செந்நெல்
அஹம் அன்னம் என்கிற சீர்மை
எல்லா காலத்திலும் மரங்கள் பழுத்தால் போலே
அறுத்து நட வேண்டாம் சீரார் செந்நெல்
கருது அறிந்து அடிமை செய்வாரைப் போலே
எது செய்தாலும் தனக்கு கைங்கர்யம் என்று நினைத்து கொள்ளுவான்
செழுநீர் -செழுமை
ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை தெரியும் படி சயனித்து திகழக் கிடந்தாய்
நாட்டார் அலங்காரம் பொல்லாங்கு மறைக்க
அயோக்கியம் தோன்றி கண்ணால் பார்க்க முடியாதே சயனித்தால்
இங்கு கிடந்த கிடைக்கைக்கு ஆலத்தி வழிக்கும் படி
ஸ்ரீ மான் –காகாசுரன் சுக துக்க -ஸ்ரீமான் பரந்தப
இவர் உணரச் செய்வது என் வயிறு பிடிக்கும்படி
கண்டேன் -கண்ணால் காணப் பெற்றேன் -ஆனால் நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன்
எம்மானே -நம்மவன் -ஆறி இருக்கமுடியாத -பிராப்தியும் இருக்க
வடிவு அழகு அனுபவித்து –
அணைத்து உசாவாமல் இருக்க ஆர்த்தி உடன் அருளிச் செய்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply