திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்கஆயி ரத்துள் ளிவைதண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.

பொ-ரை :- நித்தியசூரிகளுக்குத் தலைவனும் நாராயணனும் திரி விக்கிரமனுமான சர்வேச்வரனுடைய திருவடிகளின்மேலே, பறித்துக் கொள்ளப்படுகின்ற பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தைப் பற்றிய இவை பத்துப் பாசுரங்களையும் அர்த்த ஞானத்தோடு பாட வல்லவர்கள் நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர்.

வி-கு :- ஆயிரத்துள் தண் சிரீவரமங்கை மேய இவை பத்தையும் உடன் பாட வல்லார் வானோர்க்கு வைகல் ஆராவமுது என்க. வைகல்-நாள்.

ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைப் பொருள் அறிவோடு கற்குமவர்கள், நித்தியசூரிகளுக்கு என்றும் இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வநாயகன் – சர்வேச்வரன். நாரணன் – தன்னுடைமை இழக்கவிடாத வத்சலன். திரிவிக்கிரமன் – தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக் கொடுக்குமவன். அடி இணைமிசை – திருவடிகளிலே. கொய்கொள் பூம்பொழில் – நித்திய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை. குருகூர்ச் சடகோபன் – 2ஸ்ரீகீதையில் வேறுபாடு. செய்தஆயிரம் – 1அர்த்தம் வேதார்த்தமேயாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது. 2பரத்துவம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாச புராணங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. 3செய்த ஆயிரம் அன்றோ. அன்றிக்கே, 4தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல். உடன்பாட வல்லார் – அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாயசூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி. வைகலும் வானோர்க்கு ஆராவமுதே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர். 5தேவசாதிகள் அமுதம்பெற்றுக் கிருதார்த்தராமாறுபோலே, நித்தியசூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார். 1வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய அவர்கள், வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே, வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்தியசூரிகளுக்கு அமுதாவர்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

    நோற்றநோன் பாதியிலேன் நுன்தனைவிட்டாற்றகிலேன்
பேற்றுக் குபாய முன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கெனிலை என்னும் எழில்மாறன் சொல்வல்லார்
அங்கமரர்க்கு ஆரா வமுது.

திருவாய்மொழி வேதமாயிருக்க, “செய்த ஆயிரம்” என்னலாமோ? என்ன,
‘அர்த்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது,
ஆப்ததரமான ஆழ்வார் பக்கலிலே பிறந்தது ஆகையாலே
செய்யாமொழியாகிய வேதத்தைக்காட்டிலும் இது உயர்வுக்குக்
காரணமாயிருக்கும் என்றபடி.

2. வேதத்தைக்காட்டிலும் இதற்கு உயர்வு யாது? என்ன, ‘பரத்துவம் போலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா
வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்.

என்பது, இங்கு ஒப்பு நோக்குதல் தகும். திருவள்ளுவமாலை, 23.

‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, சர்வாதிகாரம் என்பது கருத்து.
ஆசாரியஹ்ருதயம் முதல் பிரகரணத்தின் பொருளை இங்கு நோக்கல் தகும்.

3. ‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, எப்படி? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘செய்த ஆயிரம் அன்றோ’ என்று.

4. மேலே வேதார்த்தத்தைச் செய்த ஆயிரம் என்று அருளிச்செய்து, வேத
அவதாரம் என்றும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘தமப்பன் இல்லாத’
என்று தொடங்கி. என்றது, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்து நிறம்பெற
வேண்டும் என்றபடி.

5. “அமுது” என்றதிலே நோக்காக, மேல்வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
‘தேவசாதிகள்’ என்று தொடங்கி.

நிகமத்தில் சாபிப்ரயாமாக அறிந்தவர்
வானவர் ஆரா அமுது ஆவார்
குருகூர் சடகோபன்
தெய்வ நாயகன் நாரணன் தனது வஸ்துவை விடாதவன்
திரி விக்ரமன் அழிய மாறி இரந்தாருக்கு -இரந்து அருளி கார்யம் செய்தவன்
தன்னை தாழ விட்டுக் கொண்டு
நித்ய வசந்தமான சோலை
உபாய அத்யவசாயத்தாலே
இவர் போலே
எப்பொழுதும் பூ பறித்து குலுங்கும் திவ்ய தேசம்
குருகூர் சடகொபனால் செய்யப்பட
கீதை தான் தோன்றி வார்த்தை
இது ஏற்றம் -செய்த ஆயிரம்
வேதம் போலே தான் தோன்றி இல்லை
தத்வ தர்சி வசனம் இது –
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே இதிகாச புராணங்கள்
ஆகமம் போலே
அர்ச்சை திவ்ய பிரபந்தம்
சகரவர்திக்கு பெருமாள் போலே அவதரித்து போலே வேத வேத்ய நியாயம்
வேதம் ஸ்ரீ ராமாயணம் போலே
தகப்பன் இல்லாத குறை தீர அவன் -கோதை சொன்ன மாலை
எம்பெருமான் தாழ -ஆண்டாள் இடைச்சியாக
வேதம் தன்னை தாழ விட்டுக் கொண்டது திருப்பாவையாக
ஸ்ரமஹரமான தண்
சாபிரயமாக உபாய சூன்யம் அனுசந்தித்து
நித்ய சூரிகளுக்கு போக்ய பூதராக நித்யமாக ஆவார்கள்
பிரபாகாந்தர -நிரபேஷராய் எம்பெருமானாராலே அவனை விரும்பி

நோன்பாதி இலேன்
உனக்கு ஆற்ற கிற்கிலேன்
மாறன் சொல் வல்லார் அமரர்க்கு ஆரா அமுது மா முனிகள் காட்டி அருளி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading