திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலிதண் சிரீவரமங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.

பொ-ரை :- பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ள மாயவனே! கரிய மாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளிந்த ஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்து வசிக்கின்ற குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உஜ்ஜிவிக்கும் வகையை அருள வேண்டும்.

வி-கு :- வல்லார் : முற்றெச்சம். வல்லாராகிய தெள்ளியார் என்க. மலிதல் – மிகுதல். இருந்த: கால மயக்கம்.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1“அருஞ்சேற்றில் வீழ்த்திகண்டாய்” என்று அஞ்சுகின்ற உமக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்ன, சக்தனாய் அண்மையிலிருப்பவனாயிருக்கிற நீ என் விரோதியைப் போக்கி, உன் திருவடிகளிலே கைங்கரியத்தைத் தந்தருள வேணும் என்கிறார்.

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த – 2கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார். பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய். என் கள்ள மாயவனே – ஒருவர்க்கும்தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், 1அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக்கொண்டவனே! கரு மாணிக்கச் சுடரே – நப்பின்னைப் பிராட்டியுடைய தடைகளைப் போக்கி, 2அவளுக்குக் கொடுத்த உடம்பின் வாசியை எனக்கும் அறிவித்தவனே! தெள்ளியார் – 3தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள். 4இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது, “இராமபிரானுடையவும் அறிவிற்சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே, அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி. அன்றிக்கே, 5“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’ நலியா நின்றாலும் 1தாய்முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே, 2“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினையுடையவர்கள் என்னுதல்.

திருநான்மறைகள் வல்லார் – 3நூறாயிரம் வரி எழுதியிருந்தாலும் அவற்றிற்போகாமல், தாத்பரியத்தைக் கிரகிக்குமவர்கள். என்றது, “மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு” என்றிருக்குமவர்கள் என்றபடி. மலி தண் சிரீவரமங்கையுள் இருந்த எந்தாய் – அவர்கள் நெருங்கி வசிக்கின்ற சிரமஹரமான சிரீவரமங்கையிலே அவர்களைப் போன்று இருக்கின்ற என் நாதனே! எனக்கு உய்யுமாறு அருளாய் 4அறச்சென்றற்றது கண்டாய், உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். 5கைங்கரியம்

என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு. விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது, இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.

ஞானம் உண்டானால் சாதநாநுஷ்டானம் செய்யவேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்கள் ஞானத்துக்கு’ என்று
தொடங்கி. இதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இராமபிரானுடையவும்’
என்று தொடங்கி.

“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.

5. இரண்டாவது தாத்பரியம், அவன்தான் நலியும்போதும் அவன் கையைப்
பார்த்திருக்கும்படி தெளிந்த ஞானத்தை உடையவர்கள் என்பது.
இதனையே அருளிச்செய்கிறார் ‘சுக்கிரீவ மஹாராஜரையும்’ என்று
தொடங்கி.

“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸு க்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரண்இல்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே.-என்பது, பெருமாள் திருமொழி.

“குழவி அலைப்பினும் அன்னேயென் றோடும்”-என்பது, நான்மணிக்கடிகை.

வல்லார்” என்றதற்கு, தாத்பரியத்தைக் கிரஹிக்குமவர்கள் என்று பொருள்
அருளிச்செய்கிறார் ‘நூறாயிரம்’ என்று தொடங்கி. அதனைப் பிரமாண
முகத்தாலே விவரணம் செய்கிறார் ‘மாதவன்’ என்று தொடங்கி.

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமின் ஏழைகாள் – ஓத்ததனை
வல்லீரேல் நன்றுஅதனை மாட்டீரேல் மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்பது, இரண்டாம் திருவந். 39.

சத்தனாய் -சந்நிஹிதனாய் இருக்கும் நீ
பசியர் சோறு இட்டதை நினைத்து சொல்லுவது போலே
விரோதி நிரசனம் செய்ததை எல்லாம் சொல்லி
கள்ள ஒருவருக்கும் தெரியாத மாய ஆச்சர்ய செஷ்டிதன்கள் நப்பின்னை -பிராட்டி போலே உனது திருமேனியைக் கொடுத்து
தெள்ளியார் –
தெளிந்தவர் அடியவர் ரஷிக்க உன்னையும் திருத்த வல்லவர்கள்
அவனுக்கு செய்யும் கைங்கர்யமாக இவர்கள் அனுஷ்டானம்
தெளிவு -விபீஷண ஆழ்வான் போலவும் பிராட்டி போலவும்
ராமனின் உறுதி அறிந்து லஷ்மணன் உறுதியும் அறிந்த பிராட்டி போலே
திருவடி தவறு செய்ய பார்க்க ராஷசிகளை -காத்து ஆஸ்ரித விஷயத்தில் வழி தப்பினால் திருத்த
சுக்ரீவன் போல்வார் விரோதித்தாலும் அவர்களைப் பார்த்து வார்த்தை சொன்ன விபீஷணன்
அரி  சினத்தால் ஈன்ற தாய் அகற்றினாலும் அவள் முகத்தையே நோக்கும்
திரு நான்மறை தாத்பர்யம் க்ரஹிக்கும்

அவனே உபாயம் உபேயம்
மாதவன் ஒத்தின் சுருக்கு அறிந்து
மலிந்து வர்த்திக்கும்
இருந்து ரஷிக்க வேண்டாமா
ஷணம் தாமத்திதால் நான் முடிவேன்
உய்யுமாறு -கைங்கர்யம்
உஜ்ஜீவனமும் கைங்கர்யமும் பர்யாய சப்தம்
அவன் வை லஷண்யம் அறிந்து துடிக்கிறார்
கால் பாய்ந்தால் ஞானம் இல்லை
உடனே அனுக்ரகம் செய்து திருவடி சேர்த்து கொள் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading