திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

அகற்ற நீவைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும்நீ அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகர்க்கதிர் மணிமாட நீடுசிரீவர மங்கை வாண னே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின்வாய் பிளந்தானே!

பொ-ரை :- உன் பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனைபொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களான அவற்றை உள்ளவாறே அறிந்தேன்; அவற்றின் தன்மையை அறிந்திருக்கிற என்னையும் நீக்கி, கரை ஏற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்; மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்றவனே! என்றும் பேசுதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே!

வி-கு :- வாணனே! எந்தாய்! பிளந்தானே! என்னையும் அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் என்க. வாழ்நன் என்பது, வாணன் என மரீஇயது. கண்டாய்: முன்னிலை அசைச்சொல். பகர் – சொல்லப்படுகின்ற எனலுமாம். ‘பகற்கதிர்’ என்ற பாடம் சிறக்கும். புகற்கு அரிய – அன்பில்லாதார் அடைவதற்கு அரிய என்னலுமாம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த – 2சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக, “என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த. மாயம் வல் ஐம்புலன்களாம் அவை – ஆச்சரியமான செயல்களைச் செய்யக்கூடியனவாய்த் தப்ப ஒண்ணாதபடியாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களாகிறவை, 3உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத்

தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்தவை. நீர் எங்ஙனே இது அறிந்தபடி? என்ன, நன்கு அறிந்தனன் – மயர் வற மதி நலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தனன். 1உகவாதார் அகன்று போகைக்கு வைத்தோமாகில், அதனால் உமக்கு என்? என்ன, அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – உன்னால் அல்லது செல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன்பக்கல் நின்றும் நீ பிரித்து, கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புல இன்பங்களிலே தள்ளப் புகாநின்றாய். 2இந்த உடம்போடு எனக்கு ஒரு சம்பந்தம் அற்றிருக்க, நீ பொதுவான இதிலே வைக்கிறது கைவிடப் பார்த்தன்றோ? நன்று; அவன்பக்கல் காரியம் கொள்ள நினைக்கிறவர், அருளில்லாதவர்களைச் சொல்லுமாறு போன்று கொடிதாகச் சொல்லுவான் என்? என்ன, ‘நமக்கே பழியாய் வந்து விளையப் புகாநின்றது’ என்று நீர்மையுடையார் காரியம் செய்து தலைக்கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.

பகர்க் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை வாணனே – மிக்க ஒளியையுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தையுடைத்தான சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே! பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்; மிக்க ஒளி என்பது பொருளாம். ‘பகற்கதிர்’ என்று பாடமான போது, சூரியலோகம் வரையிலும் செல்ல உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் – சூரியன். என்றும் புகற்கு அரிய எந்தாய் – நீ, கிட்டாமல் செய்யுமதுவும் அழியச்செய்வதும் உகவாதாரை அன்றோ. உனக்கே உரியனான என் விஷயத்திலும் அதனைச் செய்யவோ என்பார் ‘எந்தாய்’ என்கிறார். புள்ளின் வாய் பிளந்தானே – உமக்குக் கிட்டுதற்குத் தட்டு என்? என்ன, பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.

“நீ அகற்ற வைத்த மாய வல் ஐம்புலன்களாமவை” என்று கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘சர்வ சக்தியான நீ’ என்று தொடங்கி.
‘இந்திரியங்களுக்குத் தப்ப முடியாது’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய மாயை’ என்று தொடங்கி.

“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே”

என்பது, ஸ்ரீகீதை, 7:14. இதனைப் பிரமாணமாக எடுத்தது, இந்திரியங்களும்
பிரகிருதியின் காரியமாய் அதற்குள்ளே அந்தர்ப்பூதமாகையாலே என்க.

அகற்ற பிரசங்கம் என்ன -இங்கே சந்நிகிதன் ஆன பின்பு
இன்னும் இங்கே வைத்து இருக்கிறாய்
சேற்றிலே தள்ளி -மாய ஐம் புலன்கள்
மங்கை -ஸ்ரீ வர மங்கை யாகிற திவ்ய தேசத்துக்கு நாயகன்
மங்கள நகர் மன்கைம் ஆனதாம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் புதுவை ஆனது போலே
விரோதிகள் போக்கி கைக்கொள்ள வேண்டும்
அகற்ற -சர்வ சக்தியான உன்னை –
வேண்டாதாரை அகற்ற நீ வைத்த
மம மாயா துரத்தியா கடக்க தாண்ட முடியாதே
மாய வல் ஐம் புலன்கள் –
நீர் எங்கனே அறிந்தீர் மயர்வற மதி நலம் அருளப் பெருகையால் அழகியதாக அறிந்தேன்
உவகாதார் அகற்ற வைத்த
என்னையும் -உன்னால் அல்லது செல்லாத என்னையும் பிரித்து சம்சாரத்தில் தள்ளி
அவன் பிக்கள் கார்யம் கொள்ள நினைக்கிறவர் -நீயே
தள்ளினாய் -எடாமைக்கு உறுப்பு இ றே ஸ்ரீ வசன பூஷன ஸ்ரீ ஸூ க்தி

நமக்கு பழி -நீர்மை உடையவர் கார்யம் செய்வார் என்று –
சம்சாரத்தில் விழ கர்மம் தான் காரணம் எம்பெருமான் காரணம் இல்லையே
நீயே தந்த துக்கங்களை நீயே போக்கா -விட்டால்
கர்ம பலன் தானே அனுபவிக்கிறோம்
நினைத்தால் போக்கிடலாமே

ஜீவாத்மாவுக்கு அச்சித்துக்கும் வாய்த்த சம்பந்தம் நீ தானே வைத்தாய்
பகற்கதிர் தேஜஸ் பகர் தேஜஸ் உடைய மாடங்கள்
புகர் கதிர் பகர் -பர்யாப்த சப்தங்கள்
மிக்க ஒளி உள்ள மணி மாடங்கள் உடைய திவ்ய தேசம்
பகற்க்கதிர் –வல்லினம் பகல் கதிர் -சூர்யன் பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
பாற்கடல் வண்ண -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி ஸுய சரிதை
வல்லினம் ரகரம் அர்த்தம் பால் கடல் வெள்ளை நிறம் உடையவன் இல்லை
பாரை சூழ்ந்த கடல் கரிய நிறம்

உகவாதார் கிட்ட ஒண்ணாத படி
பிறர்களுக்கு அறிய வித்தகன்
கிட்டாமல் செய்வது உகவாதாரை தானே
என்னை அகற்றலாமா அனுகூலமான என்னை
புள்ளி ன் வாய் பிளந்தானே -எனது பிரதிபந்தகன்களை அழித்து உனது திருவடிகளில் சேர்த்து கொண்டு அருளுவாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading