கண்ணி நுண் சிறுத் தாம்பு – 6-இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

ஆறாம் பாட்டில் –
ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன –
அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார் –
ஆழ்வார் -கிருபை -ஸூசீநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோகப் ரஷ்டோபி ஜாயதே -என்றும் -சமாதி பங்கஸ் தஸ்யா சீத்-என்றும் பிரம்சம் பிரசங்கிக்கும்-பகவத் கிருபை அளவில் நினைத்து இருக்கலாமோ-(நழுவுதல் உண்டு என்பதற்கு பிரமாணம் –பிராப்யா புண்ய க்ருதா லோகம் –பூர்வ பாதி ஸ்லோகார்த்தம் -மான் குட்டி ஜடபிரதர் -)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–

இன்று தொட்டும்-
விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –
விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது

எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –

எம்பிரான் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை
உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
எம்பிரான் –
என் ஸ்வாமி-

நின்று –
ஒருபடிப்பட நின்று
உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து
பின்பு அது கிட்டினவாறே
அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

தன்  புகழ் ஏத்த –
ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ
ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )

அருளினான் –
நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறா இ றே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )

குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி –
தம்மையும் ஏத்தி இன்னம் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வார் உடைய
பூர்த்தி இருப்பது –
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யும் அது இ றே-இவர் நெஞ்சில் வாஸிதமாய் இருப்பது -அத்தைச் சொல்லுகிறார் –

என்றும் என்னை இகழ்விலன் –
என்றும் இகழ்விலன் –
என்னை இகழ்விலன் –
யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .
என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ
தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை
புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ
இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading