திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?

    பொ – ரை : ‘இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே! மிகவும் அறிவு கெட்டு, இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் இல்லை; உருண்டு வருகின்ற சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’ என்கிறாள்.

    வி-கு : வண்ணம் – நிறம். மா – கருமை; பெருமையுமாம். போதல் – மிகுதல்; ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள’ என்றார் தொல்காப்பியனார். துஞ்சுதல் – முடிவுறுதல். நசை – விருப்பம். ஆழாந்து – ‘ஆழ்ந்து’ என்ற சொல்லின் விகாரம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2அவ்விருளுக்குப் பின்னடைந்து அங்கே இங்கே திரியாநிற்க, இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடாநிற்றலைக் கண்டு, ‘பாவியேன், சகடாசுரனை அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.

    இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே – ‘இருளினது வயிரம் போன்று இருக்கின்ற நிறத்தையுடைத்தாய்ப் பெரிய நீரை

யுமுடைத்தான கழியே! 1‘வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி – வயிரம். இனி,2‘அச்சமான இருள்’ என்று பொருள் கூறலுமாம். போய் மருளுற்று – மிகவும் அறிவு கெட்டு. 3‘மயர்வற மதிநலம் அருளப் பெற்றாருடைய அறிவு கேட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றதே அதனுடைய அறிவுகேடு!’ என்பாள், ‘போய் மருளுற்று’ என்கிறாள்.

    இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். உருளும் சகடம் உதைத்த பெருமானார் – காவலாக வைத்த சகடந் தானே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்துவர, தாயுங்கூட உதவாத சமயத்திலே முலை வரவு தாழ்த்த காரணத்தால் சீறி நிமிர்த்த திருவடிகளால் முடித்து உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன். அருளின் பெருநசையால் – ‘அத்தகைய உபகாரகன் காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே. அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும் இருக்குமாதலின், ‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெருநசை’ என்கிறாள். ஆழாந்து நொந்தாயே – ‘தரைப்பட்டு நோவுபட்டாயே!’ என்கிறாள்.      

இவ் இருளுக்கு இறாய்த்து இருள் செறிந்த கழி –
மடல் எடுத்தல் போல்
உருளும் சகடம் உதைத்த பெருமானின் அருளின் பெரு நசையால் அகப்பட்டாயா –
இருளே திணிந்து இருக்கும் கழி
அச்சமான இருள் –
கொள்கின்ற  இருளை -உள்ளே -வைரத்தை சேர பிடித்தால் போல்
மிகவும் அறிவு கேட்டு –
மயர்வற மதி நலம் அருள பெற்று கெட்ட அறிவு விட -அதிகமாக
வடிந்து போகும் கழி
காவலாக வைத்த சகட
தவழ்ந்த குழந்தை அன்று விருந்து -யமுனை ஸ்நானம் பண்ண போக –
குழந்தை வண்டி அடியில் – தூளி கட்டி விட்டு ஏடலர் கன்னி யமுனை நீராடப் போனேன்-
மலை போல் ஓடும் சகடம் திருவடியால் சாடினான்
தாயும் உதவாத சமயத்தில் சீறி உதித்த  திருவடி முலை வரவு தாழ்ந்ததால்
சேஷி கொடுத்த திருவடி
ஆழ்ந்து தரை பட்டு நோவு பட்டாயா

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

     

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading