(மூன்று தோழி பதிகங்கள் -ஏழு தாயார்
தீர்ப்பாரை யாம் இனி தோழிப்பதிகம் -இப்பாசுர விவரணம்
பரகால நாயகிக்கு –வந்த கட்டுவிச்சி -ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை
இவளோ கள்ளும் இறைச்சியும் -கரும் சோறு செஞ்சொற் கொண்டு வந்தாள்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் –வண் துவாரா பதி மன்னனை ஏத்துமின்
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-
மா முனிகள் சமர்ப்பித்த பாசுரம்
ஸஹி வெறி விளக்கும் துறை
தோழிப்பாசுரம்
வேல நில் என்கிறாள்
சொல்லி ஏத்துமின் என்றதுமே உணர்ந்து
அடுத்த பாசுரம் சூட்டு நன் மாலைகள் -தானான தன்மையில் தனது பாழியான
கிருஷ்ண அவதார சார அனுபவம் )
அவதாரிகை –
வெறி விலக்கு துறை –
மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-
இத் தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே
தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-
அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி
கருமுக மாலையை (செவ்வி பெருக்க ) நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று
அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் (பக்தியையும்)
இந் நோய்க்கு நிதானத்தையும்
இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –
(நம்பியை –என் சொல்லி மறப்பனோ என்று இருக்கும் இவளை
எத்தால் மறக்க பண்ணுவீர்கள் )
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20
பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்-துறையடைவு -வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-
பதவுரை
சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
பேச நின்ற தெய்வங்கள் -பேசியே நிறுத்தி வைக்க வேண்டும்
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழி கொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்
வியாக்யானம் –
சின்மொழி –
சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு –
சப்த அவசேஷை -என்னவுமாம் –
பேசும் பருவமே இல்லாத போது பெற்ற ஸஹஜ பக்தி தானே இவரது
அங்கனே யாகில்
இத்தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த -போலே –
(இளையவள் மொழி இதுவரை
மேல் இளைத்து -சிதிலமான இவள் மொழி)
சின் மொழி -என்றது முக்தை-
இம் முக்த்யையை
விதக்தை யாக்கும் போது
ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது
சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது
ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –
நோயோ –நோய் ஓ –
பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே
இந் நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –
இவள் பருவம் அளவு அன்று –
கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –
பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
கழி பெருந்தெய்வம்–
கழிய மிக்க பெரும் தெய்வம் –
அவ் வருகு இல்லாத தெய்வம் –
பதிம் விஸ்வஸ்ய-என்றும்-
பதிம் பதீனம் -என்றும்
தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் –
அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-
இன்ன-
இந் நோய் இது என்று –
இந்நோயும்
இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று
இன் மொழி –
1-அர்த்த ரஹிதமான மொழி –
2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –
தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால்
கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது
கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று
3-இன் மொழி –
வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு –
பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –
வேல! நில் நீ –
தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் –
இங்கே புகுராதே கொள்-
எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் –
கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று
சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக
காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–
அம்மனைமீர் என்று சம்போதித்து
நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்
புத்ரகா இதி ஹோவாச –
(சுக்ரன் பிரம சாபம்தீர்க்க வந்த பித்ருக்களை -வயது மூத்து இருந்தாலும் -சிஷ்யர் என்றால் போல் )
சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே
அம்மனைமீர் என்பான் என் என்னில்
இவ்வர்த்தம்
இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை –
(பகவத் பிரபாவம் ஆழ்வார் பிரபாவம் அறிந்தவர்கள் தானே
அறிந்தவர்களே யானாலும்
இவளது ஆற்றாமை விஞ்சி இருக்கும் காலத்திலேயே கலங்கி அன்றோ இருப்பார்கள் )
தாங்களே இவ் வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-
வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி
உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-
பிரளயம் முதலிய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும்
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு –
ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் –
இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இறே
ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்
மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –
அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது
சொல் மொழி என்று
உப ஜீவிக்கும் மருந்தும் –
தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று
மேல் பூசும் மருந்தும் –
தேவதாந்த்ர ஸ்பர்சமும்
தத் சம்பந்தி ஸ்பர்சமும்
இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும்
பாகவத ஸ்பர்சமும்
சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது
தாத்பர்யம் –
நாயகியினுடைய வேதனை சமிப்பிக்கைக்காக
சில தேவதாந்த்ர பஜனம் பண்ணத் தொடங்க
மோகம் தெளிந்த தோழி ஒருத்தி நிஷேதிக்கிறாள்
ஓ தாய்மாரே
இப்பெண்ணுக்கு வந்த நோய் இன்னது இதுக்கு நிதானம் இன்னது இதுக்கு பரிஹாரம் இன்னது
இதுக்கு ஏறிட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் பெறும் வேலன் போன்ற ஷுத்ர தெய்வம்
அவனை நிறுத்தி -அவனது பூஜையையும் நிறுத்தி –
தாய் மாறே நான் சொல்லுமுபாயம் கேளுங்கோள்
சர்வேஸ்வரனுடைய திரு நாமம் அனுசந்தித்து
அவனது திருத்துழாயையும் சூட்டுங்கோள் -என்கிறாள்
————————————————————————–—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply