திரு அல்லிக் கேணி அனுபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு அல்லிக் கேணியில் தானே–ப்ருந்தாரண்யா ஷேத்ரம் -துளசி வனம்-வேர் பற்றானா கோவில் —
திரு அரங்கமும் –திரு மலை -பெருமாள் கோவில் -ஸ்ரீ ராமன் -ஸ்ரீ நரசிம்கன் –
தேன் பால் கன்னல் நெய் சக்கரை அமுது -கலந்த அமுதம் போல் -எல்லாம் தன் உள்ளே கலந்து ஒழிந்தோம் —
ஆழ்வார் அருளியது போல் இங்கு ஐவரும் சேவை—
நின்றவாறும் கிடந்த வாறும் இருந்தவாறும்-நடந்த வாறும்-சேவிக்க –
நின்றது எந்தை  ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து -புளிங்குடி -கிடந்தது வரகுண இருந்து வைகுண்டம் நின்று –
தனி தனி திவ்ய தேசம்–இங்கோ வேம்கட கிருஷ்ணன் மன்னாதன் தெள்ளிய சிங்கனும் நின்று கிடந்தது இருந்து —

ஆச்சார்யராக  இவனே –அவதாரம் –
கேசவ சோமயாஜி-காந்தி மதி –சுவாமி ராமானுஜர் திருகுருங்குடி நம் ஆழ்வார் போல –மூன்று ஆழ்வார் மங்களா சாசனம் –
திரு மங்கை  பேய் திரு மழிசை-கைரவணி -அடியார்கள் தோஷம் போக்க ஐந்து தீர்த்தம் சேர்ந்தவை–
இந்திர சோம மீனா அக்நி விஷ்ணு -புடை சூழ –பிரம்மாண்ட புராணம் –
பரம சிவனார் நாரதர் இடம் சொல்லி-மீன்களே இல்லாத புஷ்கரணி-முத்களர் ரிஷி தபஸ் இருக்க -மீன்களை வெளி ஏற சொல்ல –
புஷ் கரணி பெயரே கொண்டு திவ்ய தேச திரு நாமம்–
சனத் குமரர் நாரதருக்கு உபதேசம்-ப்ருந்தாரண்யா ஷேத்ரம் ஐந்து மூர்த்திகள் உண்டு–
வேங்கட கிருஷ்ணன் மூல மூர்த்தி -சுமதி அரசன்-பார்த்த சாரதி உத்சவ மூர்த்தி-
திரு வேம்கடம் உடையானை -சாரதி வேஷத்தில் சேவிக்க ஆசை கொண்டான்-
தேர் கடாவிய கோலம்–அடியார் ஆசை-நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே —
கீதாசார்யன் திருக் கோலம் -ஆசை பட்ட படி-சேவை சாதிக்க –
ஆத்ரேயா முனிவர்- வேத வியாசர் இடம் தபஸ் செய்ய இடம் கேட்க்க -விக்ரகம் எழுந்து அருளி கொடுக்க
தான முத்தரை இடது திரு கை வலது திரு கையால் பாஞ்ச சன்யம் கொண்டு–
சுமதி அரசனின் ஆசையை ஆத்ரேயா முனிவர் மூலம் அருளி-
ருக்மிணி தாயார் உடன்-அநிருத்தன் பிரத்யும்னன் சாத்விகி பல ராமன் உடன் சேவை–
தேர் ஒட்டி பாஞ்ச சன்யம் -கொல்லா மா  கோல் கொலை செய்து- பாரத போர்-
வேற ஆயுதம் எடுக்காமல்-தொண்டைமான் சகரவர்த்திக்காக சேவை —
திரு மங்கை ஆழ்வார் -நமக்காகா சேவை–வைபவம் ஒருங்கே- இணைய பெற்ற திவ்ய தேசம்

கீதா பாஷ்யம் அருளினார் ஸ்வாமி ராமானுஜரும்

தேரே கற்ப கிரகம் போல் சேவை -ஆங்கு அவளை கை பிடித்த பெண்ணாளன்–ருக்மிணி பிராட்டி உடன் சேவை–
சாத்விகி தேர் ஒட்டி  இடது பக்கம்-வலது பக்கம் பிராட்டி அருகில் பல ராமன் -அனிருத்னன் பிரத்யும்னன்-குடும்ப சகிதம் சேவை–
கீதை-பாஞ்ச சன்யம் வலது கையால் ஊத முதல் அத்யாய அர்த்தம் —
இடது கையால் திரு அடி  காட்டி இறுதி அத்யாயம் அர்த்தம்–சோகப் படாதே-மாமேகம் சரணம் விரஜ காட்டுகிறான் –
சரம ஸ்லோக அர்த்தம்– இவனை மேற்பட வேற சொத்து இல்லை —
தனஜயன  சந்தன பூஷணம் தனம்–உத்சவரை சேவித்து -பீஷ்மர் துரோணர் விட்ட அம்பு மழை பொழிய –
அனைத்தையும் ஏற்று பொழிந்த திரு முக மண்டலம்–
ஸ்ரீ ராமன் கர தூஷணர் சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி –
ருக்மிணி பிராட்டி ஆலிங்கனம் பண்ண வில்லை நம் இடம் கொண்ட காருண்யத்தால்

மன்னாதன் என்னை ஆள் உடை அப்பன்-வேத வல்லி தாயார் -பிரணய கலகம்-
பிராட்டி  ஸ்ரீ வைகுண்டம் இருந்து வந்து இங்கு ப்ருகு மக ரிஷி வளர்க்க –
தாத மன்னாத ஏவாயம் -என்னை ஆள் உடைய அப்பனை- தான் திரு கல்யாணம் சொல்லி –
அன்று முதல் இதே திரு நாமம் -மாசி துவாதசி திரு கல்யாணம் பங்குனி உதரம் சேர்த்தி-
அத்ரி ரிஷி -தெள்ளிய சிங்கரும் –
மனுமான் ரிஷி -ஸ்ரீ ராமர்
சப்த ரோமான ரிஷிக்கு தேவ பிரான்

——————————————-

வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் –எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திரு வல்லிக் கேணியான் சென்று –மூன்றாம் திரு அந்தாதி -16–

சென்று சேர்ந்து இருக்கிறார் -பிராட்டி திரு மார்பில் இலங்கி இருக்கிறாள் –
சிகப்பு பவளம் வெண்  முத்து சேர்க்கும் கடல் கரை -மாலை பொழுதில் அந்தி விளக்கு இவை -மணி மணியாக விளக்கு-
எந்தை -என்னை ஆள் படுத்திக் கொண்டான்-

———————————-

சயனம்-ஆயாசமா -ஐம் தலை நாகத்தை அணியாக கொண்டு –
திரு விக்ரமன் -அளந்த ஆயாசமா -வாய் திறக்காமல்-
கொடியார் திரு புளிங்குடி -துயில் மேவி -அடியார் அல்லல் தவிர்த்த அசைவா ஆழ்வார்–வாய் திறவான் —
கடல் அலைகள் இடித்து ஆயாசம் சூடு தணிக்க சிசு உபசாரம் பண்ணுகிறதாம், –
மா மயிலை- மயிலாப்பூர் படை வீடு -ராஜஸ்தானம் அதற்கு அடங்கிய ஊர் திரு அல்லிக் கேணி–
சயனித்த மன்னாதனை பல்லாண்டு  அருளுகிறார் திரு மழிசை
இவரும் பல்லாண்டு அருளி – திரு மங்கை ஆழ்வாரும்-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தது அருளும் வாய் திறவான் –நீளோதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐம் தலை வாய் நாகத் தனை -நான் முகன் திரு அந்தாதி –35-

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரம் எரி செய்த
சிவன் உரு துயர்களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திரு வல்லிக் கேணியில் கண்டேனே—பெரிய திரு மொழி–2-3-1–

கோல் கையில் கொண்டான் –கொலை செய்ய வேண்டிய ஆயுதம் இல்லை சக்கரம் வில் கதை இல்லை–
வெள்ளை புரவி தேர் விசயன் -அர்ஜுனனுக்கு -கொல்லா மா கோல் -தேர் முன் நின்றவனை பல்லாண்டு அருளுகிறார் இதில்–
வில் விழா கஞ்சன் மல்லர் குவலயாபீடம் பாகன் அனைவரும் வீழும் படி –
திரி புர தகனம் இறுமாப்பு -கபாலம் ஒட்டி கொள்ள அவன் சாபம் தீர்த்து கொடுத்தான் –
பிண்டியார்  சாபம் தீர்த்த ஒருவனூர் -சிற்றவை-கைகேயி-ஸ்ரீ ராமனை சேவிக்கலாம் என்கிறார் இதே பாசுரத்தில்–

————————————-

வேதத்தை வேதத்தின் சுவை பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் கழற்றிக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
யப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2–

சிறப்புடைய பெண்கள்-ஸ்திரீ பிரதானம் -மன்னாதன்-வேதமே பகவான் வேதத்தால் வழங்க படுபவனும் அவன் –
அதன் மூலம் அனுஷ்டித்து இருப்பவர் பலன் அடைவதும் அவன்–சனக சனத் குமாரர்கள்-முனிவர்–

வஞ்சனை செய்யத் தாய் வுருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலை ஊடு உயிர் செக வுண்ட
நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
வியந்து துதி செய்யப் பெண் னுருவாகி
அம் சுவை யமுதம் அன்று அளித்தானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –3–

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எம் தம்மோடு இன் வானிரை தளராமல்
எம்பெருமான் !அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -4–

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர்பாவை நப்பின்னை
தனக்கு இறை மற்றை யோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி
வாய் வுரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –5–

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன்
அணி இழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் எனத் தரியாது
எம் பெருமான் ! அருள் என்ன
சந்த மல் குழல் ஆளல கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்
திரு வல்லிக் கேணிக்கண்டேனே –6-

பரதனும் தம்பி சத்ருக்னனும்
இலகுமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணான் தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு
குயிலோடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –7-

சக்கரவர்த்தி திரு மகனுக்கு பல்லாண்டு அருளுகிறார்-

————————————–

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன்
வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை  எயிற்று  அனல்   விழி  பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –8–

ஆயிரம் திரு நாமம் சொல்லும் பிள்ளை-தன் சிறுவன்-நாராயணா ஓன்று தானே சொன்னான் –
ஓன்று சொன்னாலும் தன் பிள்ளை சொன்ன்னது ஆயிரம் என்கிறார் —
நாராயணா நாமம் இதற்க்கு -சமம் -சொன்ன விஷயம் பார்க்காமல் பிள்ளை என்று பார்க்காமல்-
பிள்ளையை -திரு மங்கை ஆழ்வார் தம் பிள்ளை என்று நாராயண நாமம் சொன்னதால்–
தெள்ளிய -கலக்கம் இன்றி-செவிக்கும் நம் கலக்கம் தீர்க்கும்–

—————————–

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான்
வேட்கை யினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக்
கறா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –9–

கஜேந்திர வரதனுக்கு பல்லாண்டு அருளுகிறார்-

—————————————-

மன்னு தன் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நல் மயிலைத்
திரு வல்லிக் கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர் கலி கன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகம் இனிது ஆழ்வார் வான் உலகே –10–

கீதை உபதேசம் அருளிய பெருமாளை பல்லாண்டு அருளுகிறார்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

One Response to “திரு அல்லிக் கேணி அனுபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..”

  1. V.S.SATAGOPAN Says:

    Swamin: The articles appears to be very educative and full of explanations. But the tamil seems to be difficult to understand. Would appreciate if the articles are in layman readable tamil

    dasan

    v s satagopan

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading