ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————————————————————-
இதுவரை சர்வ வேதாந்தங்களும்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன்
என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது
அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று
என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –
இதில் முதல் இரண்டு பாதங்களில் –
காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )
கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை
வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி
முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால்
இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான்
அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி
ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1-
ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-
முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –
ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –
அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்
ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்
இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –
———–
ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-
வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து
——————————
இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –
ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-
வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –
ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே
ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –
————
மூன்றாம் அதிகரணம் –ந விலக்ஷணத்வாதி கரணம்
ஸூத்ரம் –138– ந விலக்ஷணத்வா தஸ்ய தாத் வஞ்ச சப்தாத் –2-1-4-
இவ்வாறு கபில ஸ்ம்ருதியையும் யோக ஸ்ம்ருதியும் முரணானவை ஆதலின்
அவற்றால் வேதாந்த அர்த்தம் பாதிக்கப்படாது என்று காட்டி
பிறர் கூறும் தர்க்கங்களால் ஏற்படும் பாதத்தை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி –
வேதாந்தங்களுக்கு ப்ரஹ்மம் காரணம் என்பதில் நோக்கமா -அன்றி -பிரதானம் காரணமா என்று ஸந்தேஹம் தோன்றுகிறது
அங்கு பிரதான காரணத்வமே யுக்தமானது
ஏன் எனில்
ஜகத் ஜடமாய் இருப்பதால் ப்ரஹ்மத்தை விட ஸஜாதீயமான பிரதானம் காரணமாகத் தக்கது
என்ற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்
ந விலக்ஷணத்வாத்
அபிமானி வ்யபதேசாச் சான்ய
என்கிற இரண்டு ஸூத்ரங்களாலும் நிரஸனம் செய்கிறார்
இவை இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்
இதி சேத் ந –என்று கூறுவது பொருந்தாது
ஏது எனில்
அஸ்யக -இந்த ஜகத்துக்கு
விலக்ஷணத் வாத் -ஜடத்வாதிகளால் ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இருப்பதால் என்றபடி
ஸ லக்ஷணங்களுக்கே ம்ருத் கடாதிகளைப் போலே கூடும் என்பதால்
அத– ஆகையால் –ஜகத்துக்கு சமமான ப்ரதானமே
காரணம்
ததாத் வஞ்ச சப்தாத் -ப்ரஹ்மத்துக்கு ஜகத் விலக்ஷணத்வமும்
விஞ்ஞானம் சா விஞ்ஞானஞ்ச -முதலிய சப்தங்களால் அறியப்படுகிறது
ஆபோ வா அகா மயந்த –தம் ப்ருதி வ்ய ப்ரவீத் -முதலிய வாக்கியங்களில்
பிருத்வீ முதலிய அசேதனங்களுக்கும் ஞான கார்யமான காமனை முதலியவை கூறப்படுவதால்
ஞானாச்ரயம் என்ற முறையில் ப்ரஹ்மத்துடன் ஸாம்யம் உள்ளபடியால் உத் பத்தி தவறு இல்லையே என்றால்
அதற்கும் பூர்வ பக்ஷி விடை கூறுகிறார்
2-1-4-விலஷணத்வாத் அதிகரணம் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் – சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்
-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி குணம் கிரியை போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –
———————-
ஸூத்ரம் –139-அபிமானி வ்யபதேசஸ் து விசேஷ அனு கதிப்யாம் –2-1-5-
து -என்கிற சப்தம் சங்கையை நிவர்த்திக்கிறது
ப்ருத்வீ அப்ரவீத் -முதலிய இடங்களில் ப்ருத்வீ யாதிகளின் அபிமானி தேவதைகளைக் குறிப்பதாகும்
பிருத்வீ முதலிய அசேதனங்களைக் குறிக்க வில்லை
ஏன் எனில்
விசேஷ அனு கதிப்யாம் –ஹந்தா ஹமிமா -திஸ்ரோ தேவதா -என்று
ப்ருத்வீ யாதிகளை தேவதை என்று விசேஷயத்தால் குறிப்பதாலும்
அக்னிர் வாக் பூத்வா முகம் ப்ராவிஸத் -முதலியவற்றால்
அக்னி முதலியவற்றுக்கு வாகாதிகளுக்கு அனு கதி -பின் பற்றிச் செல்லுதல் கூறுவதாலும்
அசேதனத்வேந ஜகத்துக்கு ஸஜாதீயமான பிரதானம் காரணம் என்பது பூர்வ பக்ஷம்
இதற்கு ஸித்தாந்தி கூறும் விடை –
—————
ஸூத்ரம் –140-த்ருஸ்ய தேது –2-1-6-
து சப்தம் பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறது
ப்ரஹ்மத்தை விட விலக்ஷணமான ஜகத்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் என்பது கூடும்
ஏன் எனில்
உலகில் தேனடையில் இருந்து விலக்ஷணமான கிருமி போன்றவை தோன்றக் காணப்படுகிறது அல்லவா
அப்படியே காரியமும் காரணமும் விலக்ஷணமாய் இருப்பது தவறு அல்லவே
ஆகவே ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாய் இருக்கலாம் –
———————
ஸூத்ரம் –141-அஸத் இதி சேந் ந ப்ரதிஷேத மாத்ரத் வாத் –2-1-7-
கார்யம் காரணத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டால்
காரணத்தில் கார்யம் இல்லாததால் அஸத் காரிய வாதம் சரி என்றதாகும்
அசத்தான பொருள் தானே தோன்றுகிறது எனக் கொள்ள நேரும்
அப்படியாயின்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம என்று
ஜகத்தையும் ப்ரஹ்மத்தையும் சாமா நாதி கரணமாகச் சொன்னது பொருந்தாது
இதி சேந் ந–இப்படிக் கூறுவது பொருந்தாது
ப்ரதிஷேத மாத்ரத் வாத் –கார்ய காரணங்கள் ஒரே விதமாகவே இருக்க வேண்டும் என்கிற நியமம் மட்டும் தடுக்கப் பட்டது அன்றி
அவை ஒரே த்ரவ்யம் என்பது தடுக்க வில்லை
காரண அவஸ்தையில் இருக்கும் ஒரே த்ரவ்யமே காரியமான அவஸ்தையை அடைந்து கொண்டு
ஸஜாதீயமாகவும் விஜாதீயமாகவும் இரண்டு அவஸ்தைகளையும் அடைகிறது என்பது கருத்து
—————–
ஸூத்ரம் –142-அபீதவ் தத்வத் பிரசங்காத் அசமஞ்சஸம் –2-1-8-
இது பூர்வபக்ஷ ஸூத்ரம்
அபீதவ் -ஜகத்துக்கு ப்ரஹ்மத்தினிடம் -அப்யய -பிரளய காலத்திலும் -உத்பத்தியிலும்
தத்வத் பிரசங்காத் -முன் போலவே பிண்டத்தவம் கடத்தவம் முதலிய அவஸ்தைகளை யுடைய மண் போலே
ப்ரஹ்மத்துக்கும் ஸர்வஞ்ஞத்வம் அஞ்ஞத்வம்–முதலிய நிலைகள் வந்துவிடுமாதலால்
முரணான அர்த்தத்தைச் சொல்லும் வேதாந்தங்களுக்கு
அசமஞ்சஸம் -என்ற நிலை வந்துவிடும்
சர்வஞ்ஞதிகளை யுடைய ப்ரஹ்மமே
அஞ்ஞத்வ விசிஷ்ட ஜகத்தாகிறது-என்று
வேதாந்தங்கள் கூறுகின்றன என்றால்
ப்ரஹ்மம் காரணம் என்று சொல்வது தகாது என்பது பூர்வ பக்ஷம்
இந்த சங்கையை பரிஹரிக்கிறார்
————
ஸூத்ரம் –143-ந து த்ருஷ்டாந்த பாவாத் –2-1-9–
ந -ப்ரஹ்மத்தினிடம் அஞ்ஞத் வாதிகள் பிரசங்கிக்க மாட்டா
அதனாலேயே வேதாந்தங்களை அசமஞ்சஸ்த்வம் இல்லை
து -ஸப்தம்
அஞ்ஞத்வ பிரசங்கம் அசம்பாவிதம் என்று காட்டுகிறது
ஒரு வஸ்துவுக்கு இரு அவஸ்தைகள் ஏற்பட்டால் குண தோஷங்களின் வ்யவஸ்தைகளில் த்ருஷ்டாந்தம் இருப்பதால்
ப்ரஹ்மத்திடம் காரணத்வம் கார்யத்வம் என்கிற இரு அவஸ்தைகள் இருப்பதாக சரீரகதமான கர்ம வஸ்யாதிகளும் அதில் ஓட்டுவது இல்லை
ஆதலால் தவறு ஏதும் இல்லை
மனிதன் எப்படி பிறந்த பின் பாலனாகவும் யுவாவாகவும் முதியனாகவும் ஆகிறானோ அதே போல்
அசேதனமான மனித சரீரத்தில் பிறப்பும் பாலத்தவாதிகளும் ஏற்படினும் ஆத்மாவில் ஏற்படுவது இல்லையே
ஆத்மாவிடம் ஏற்படும் சுக துக்காதிகளும் சரீரத்துக்கு இல்லை அல்லவா
இதே போல் அவஸ்தா பேதம் அடையும் ப்ரஹ்மத்தினிடன் சேதன அசேதன தோஷங்கள் கலப்பது இல்லை
ஆகவே வேதாந்தங்கள் ஸமஞ்சசமே –
—————–
ஸூத்ரம் –144-ஸ்வ பக்ஷ தோஷாச் ச –2-1-10-
ப்ரஹ்ம காரண வாதம் தோஷம் அற்றது என்பது மட்டும் அன்று
பிரதான காரண வாதம் மிக்க தோஷங்களை யுடையது என்பதால் அதை விட்டு ஒழிக்க வேண்டும்
அவர் மதத்தில் நிர்விகாரமான புருஷனுக்கு பிரகிருதியின் சேர்க்கையால்
பிரகிருதியின் தர்மத்தைத் தன்னிடம் உள்ளதாய் பிரமித்து அதனடியாக ஜகத்தின் ஸ்ருஷ்டி கூறப்படுகிறது
பிரகிருதியின் இருப்பை மட்டும் சன்னிதானம் என்றால் முக்தனுக்கும் அத்யாஸம் வரும்
விகாரங்கள் சன்னிதானம் என்றால் எல்லா விகாரங்களை அத்யாசத்தாலே ஏற்படுவதால்
அத்யாசத்திற்கு விகாரம் ஹேது என்று கூறுவது முரணாகும்
இவ்வாறு மிகவும் அசமஞ்சஸமான பிரதான காரகத்வம் இகழத் தக்கதாம் –
———-
ஸூத்ரம் –145-தர்க்க அப்ரதிஷ்டா நா தபி–2-1-11-
கபில சித்தாந்தம் தர்க்கத்தை மூலமாகக் கொண்டது ஆதாலால்
புத்த மதஸ்தர் கூறிய தர்க்கங்களால் அது பாதிக்கப்பட்ட படியால்
தர்க்கத்துக்கு ஓர் முடிவே இராமையாலே அது யுக்தமான சித்தாந்தம் அன்று
————————
ஸூத்ரம் –146-அந்யத அநு மேயம் இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க –2-1-12-
அந்யத அநு மேயம்
இதற்கு முன் உள்ள தர்க்கங்களாலே பாதிக்க ஒண்ணாதபடி
பிரதான காரணத்தை அனுமானிக்கிறோம் என்று கூறினால்
இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க
இப்படியும் உன்னை தர்க்கத்தில் திறமை உள்ளவன் ஒருவன் ஏற்படக்கூடுமாதலின்
தோஷத்துக்கு விமோசனமே – –
——————-
நான்காவது அதிகரணம் –சிஷ்டா பரிக்ரஹா அதிகரணம்
ஸூத்ரம் –147-ஏதேந சிஷ்டா பரிக்ரஹா அபி வ்யாக்யாதா –2-1-13-
ஏதேந -கபில ஸ்ம்ருதியை நிராகாரணம் செய்த ஹேதுவான
நிலையற்றது என்ற ஹேதுவால்
சிஷ்டா பரிக்ரஹா அபி -சிஷ்டர்கள்
கணாதிகளின் ஸ்ம்ருதிகளும்
வ்யாக்யாதா -நிரஸனம் செய்யப்பட்டன என்று வ்யாக்யாதங்கள் என்பது கருத்து –
——————
ஐந்தாம் அதிகரணம் –போக்த்ரா பத்தி அதிகரணம்
ஸூத்ரம் -148–போக்த்ரா பத்தேர விபாகஸ் சேத் ஸ்யால் லோகவத் –2-1-14-
ப்ரஹ்மத்துடன் ஜகத்தில் உள்ள விகாரங்கள் ஒட்டாது என்பதற்கு ஜீவனை த்ருஷ்டாந்தமாக –
ந து த்ருஷ்டாந்த பாவாத் -என்கிற ஸூத்ரத்தில் காண்பித்தது
அப்படியானால் ஜீவனுக்கு உள்ளது போல் சர்வ சரீரத்வம் உள்ளமையால் ப்ரஹ்மத்துக்கு
சுக துக்க போக்த்ருதம் உண்டோ என்கிற சங்கையிலே
இவ்வதி கரணம் ப்ரவ்ருத்தம் ஆகிறது
ஸர்வாத்ம பூத ப்ரஹ்மத்துக்கு தன் சரீரமான ஜீவனைக் காட்டிலும்
நிரதிசய ஆனந்த ஏக ஸ்வரூபமான பேதம் கூறுவது
பொருந்துவதா இல்லையா என்ற சங்கைக்கு
பொருந்தாது என்பது பூர்வ பக்ஷம்
ப்ரஹ்மத்துக்கு ஜகத்து சரீரமானால் ஜீவனுக்குப் போலே ஸ போக்த்ருத்வம்
வந்து சேரும் என்பதால் பேதமில்லை -அபேதமே
அபஹத பாப்மத்வாதி ரூபமான விபாகம் கூடாது
இதி ஸ்யாத் -என்றால் விபாகம் வரத்தான் வரும்
ப்ரஹ்மம் கர்ம வஸ்யம் இல்லையால் ஜீவனைக் காட்டிலும் விபாகம் கூடும்
சுக துக்க போக்த்ருத்வங்கள் ச சரீரத்வம் காரணம் அன்று
கர்ம வஸ்யத்வமே காரணம்
அகர்ம வஸ்ய முக்தனுக்கு போக்த்ருத்வம் காணப்படாமையாலே -அதே போன்று
ஈஸ்வரனுக்கு சுக துக்க போக்த்ருவான்கள் பிரசங்கியாது
லோகவத் –
லோகத்தில் ராஜ வஸ்யர்களான ப்ருத்யர்களும் சாசகனான ராஜாவுக்கும் ஸ சரீரத்வம் இருந்தாலும்
ஸாஸனத்தை மீறினால் துக்கம் ப்ருத்யர்கட்க்கு இருக்க
ராஜாவுக்கோ தன் ஸாஸனத்தை மீறியதாக துக்கம் ஏற்படுவது இல்லை
அது போலவே ஸர்வ லோக நியந்தாவான ஈஸ்வரனுக்கு சுக துக்கங்கள் இல்லை என்பது திரு உள்ளம் –
————–
ஆறாம் அதிகரணம் -ஆரம்பணாதி கரணம் —
ந விலக்ஷணத்வாதி கரணத்தில்
கார்ய காரணங்கள் ஸ லக்ஷணமாகவே இருக்க வேண்டும் என்று நியமம் சொல்லும்
சாங்க்யனை நிரஸனம் செய்து
இதில்
கார்ய காரணங்களுக்கு விலக்ஷணதை சாதிப்பது போல் ஸ்வரூப பேதமும் சித்திக்கட்டும் என்று
எழுந்த வைசேஷிகன் கேள்விக்கு
காரியமும் காரியங்களும் அநந்யங்கள் -அபின்னங்கள் -என்று விளக்குவதன் மூலம்
கண்டனம் செய்கிறார் -என்று சங்கதி
ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-
ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் காண்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –
தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய
தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும் வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –கார்யப் பொருளாய் மாறிய நிலையிலும்
நேற்று நாம் பார்த்த மண்ணே குட வாணாயகவும் மாறி விட்டது என்று காரணமான மண் நினைவு படுவதாலும்
மண்ணின் அவஸ்தைகள் பல இருப்பினும் த்ரவ்யம் ஒன்றே என்பது ப்ரத்யக்ஷ ஸித்தமாம்
மண்ணைத் தவிர வேறே பொருள் தேவை இல்லை என்பதாம்
ஒரே மண் என்னும் த்ரவ்யம் -பிண்டம் கட்டி உருண்டை குடம் முதலிய அவஸ்தை மாறுபாடுகளால்
மண் கட்டி குடம் ஓடு முதலிய பெயர்களைப் பெறுகுவது போல்
புத்தி பேதம் ஸப்த பேதம் முதலிய அவஸ்தா பேதங்களை சார்ந்து இருப்பதால் அவை வஸ்து பேதத்தை சாதிக்க மாட்டாதவை
ஆகவே மண் என்ற ஒரே பெயர் காரண காரியமாக இருப்பது போல்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸூஷ்ம அவஸ்தையில் காரணமாயும் ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் இருப்பதால்
ஜகத்துடன் அநந்யத்வம் -பேதமற்ற தன்மை என்று பெறுகிறது
இங்கு
வாசா ரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல்
ஆரம்பண சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டதால்
வாசா ரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்று உணர்த்தப்படுகிறது
ஸ்ரீ பாஷ்யத்தில் இந்த அதிகரணத்தில்
முதலில் கார்ய காரணங்களுக்குப் பேதம் கூறும் கணாத மதம் காட்டப்படுகிறது
அதற்கு -அத்ராஹு -என்று தொடங்கி சங்கரர் தம் சித்தாந்தப்படி கூறும் சமாதானம் கூறப்பட்டது
அந்த சங்கரரை ஜீவனுக்கு அஞ்ஞானம் சொல்பவன் எதிர்த்தான்
கேசித் -என்று தொடங்கியது அவ்வெதிர்ப்பு
பிறகு மாயாவி இரண்டிற்கும் பேதம் சொல்பவனை எதிர்த்தான்
பின் இவ்வதிகரண பூர்வ பக்ஷி -காணாதன் -சங்கர மதத்தைக் கண்டிக்கவே
இறுதியாக காணாதனை நம் பாஷ்யகாரர் நிரசனம் செய்கிறார் என்பது ஸாரம் –
———
ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-
குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக் குடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –
——–
ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-
அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து
——–
ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந் ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத் ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –
—————
ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-
நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது
——————
ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-
ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்
—————
ஏழாம் அதிகரணம்–இதரவ்யபதேஷாதிகரணம்||
ஸூத்ரம் –155-இதரவ்யபதேஷாத்திதாகரணாதிதோஷப்ரஸக்திஃ||2.1.21||
ஸூத்ரம் –156-அதிகஂ து பேத நிர்தேஷாத்||2.1.22||
ஸூத்ரம் –157-அஷ்மாதிவச்ச ததநுப பத்திஃ||2.1.23||
—————–
எட்டாம் அதிகரணம்–உப ஸஂஹார தர்ஸந அதி கரணம்||
ஸூத்ரம் –158-உபஸஂஹார தர்ஷநாந்நேதி சேந்ந க்ஷீரவத்தி||2.1.24||
ஸூத்ரம் –159-தேவாதிவதபி லோகே||2.1.25||
——————
ஒன்பதாம் அதிகரணம் –க்ருத்ஸன ப்ரஸக்தி யதி கரணம்
ஸூத்ரம் –160-க்ருத்ஸன ப்ரஸக்தி நிர்வயத்வ சப்த கோபோவா –2-1-26-
காலம் என்னும் வெளி உதவியை மட்டும் கொண்டு ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகட்டும்
அப்படி இருந்தாலும் ஒரு அவயவமும் இல்லாத ப்ரஹ்ம ஸ்வரூபம்
எப்படி பலவாறாக மாறுவேன் என்று சங்கல்ப்பிப்பது –
எப்படி பல பொருளாக மாறுவது
என்ற சங்கையால் சங்கதி
ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா என்ற சம்சயம் கூடாது –
ஏன் எனில்
நிர் அவயவமான ப்ரஹ்மம் ஜகத்துக்கு உபாதானம் என்று ஏற்றுக் கொண்டால்
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகத்தாகப் பரிணமிப்பதால் நித்ய விபூதியில் வியாபித்து உள்ளது
என்ற தன்மை ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாது போகும்
இந்த தோஷம் நீங்க ப்ரஹ்மம் ஸ அவயவம் என்று ஏற்கப் பட்டால்
ஏகமேவ அத்விதீயம் என்று
நிர் அவயவத்வம் சொல்லும் ஸ்ருதியுடன் முரண்பாடு ஏற்படும் என்பது பூர்வ பக்ஷம்
க்ருத்ஸன ப்ரஸக்தி
ப்ரஹ்மம் காரணம் ஆகில் அது முழுவதுமாகக் காரியமாக மாறுவதாக ஏற்க வேண்டி வரும்
அதற்காக ஸ அவயவம் என்று ஏற்றால்
நிர்வயத்வ சப்த கோபோவா —
நிர் அவயத்வம் சொல்லும் ஏகமர்வ அத்விதீயம் என்ற
சுருதி வாக்யத்துடன் விரோதம் -நிர்வயத்வ சப்த கோபம் -வரும்
என்று இப் பூர்வ பஷத்தை நிரஸனம் செய்கிறார் –
———
ஸூத்ரம் –161-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-
து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்
பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்
இதனால் விரோதம் இல்லை
பரிமித சக்திகமான ஷீராதிகளை உதாரணம் காட்டி வினவுதல் கூடாது என்று திரு உள்ளம் –
—————–
ஸூத்ரம் –162-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-
ஆத்ம நிச ஏவம்
ஜீவாத்மாவிடம் சகல இதர வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராமை போலே
தேஹாதி வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராது என்று பரிஹாரம் கூற வேண்டும்
விசித்ராச் சஹி
அசேதனமான அக்னி ஜலம் முதலியவையும் விசித்ரங்களாகவே காணப்படுகின்றன
அக்னியில் உள்ள வெப்பம் நீரில் இல்லை
நீரில் உள்ள குளிர்ச்சி நெருப்பில் இல்லை
அப்படியே சித் அசித் விலக்ஷணமான ப்ரஹ்மத்திடம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியத்தகும்
ஸர்வ சக்திமத்வம் கூடும் என்பது கருத்து –
————-
ஸூத்ரம் –163-ஸ்வ பக்ஷ தோஷச் ச -2-1-29-
அனுமான கம்யமாய்
அசேதனமான பிரதானத்தில் கீழ்ச சொன்ன தோஷம் யாவும் மற்றும் பலவும் ப்ரஸக்தமாகும் –
—————
ஸூத்ரம் –164-ஸர்வோ பேதா ச தத் தர்சனாத் –2-1-30-
பரதேவதையானது மற்ற யாவற்றையும் விட வி லக்ஷண தன்மையால் மட்டும் ஸர்வ சக்தி யுக்த்தை அன்று
பின் ஏன் எனில்
தர்சனாச் ச -ஸ்ருதியாலும் கூறப்பட்டதால் சர்வ சக்தி உள்ளதாம்
தர்சய தீதி -தர்சனம் -ஸ்ருதி -வேதம்
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
இது முதலிய ஸ்ருதி பலத்தாலும் -உபாதானத்வம் நிமித்தத்வம் இரண்டும் கூடிய சக்தி யோகத்தவம் ஸித்திக்கிறது
ஆகவே ப்ரஹ்மத்துக்குக் காரணத்தவம் தடை அற்றது
————–
ஸூத்ரம் –165-விகரணத் வாந் நேதி சேத் ததுக்தம் –2-1-31–
சொன்ன அர்த்தத்தை உறுதி படுத்த மேலும் சங்கையை எழுப்பி சமாதானம் கூறுகிறார்
விகரணத் வாத் -சரீரம் இன்மையால்
நேதி சேத்-ப்ரஹ்மத்துக்குக் காரணத்வம் கூடாது என்றால்
ந தஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே -என்று
சரீர இந்திரியாதிகள் அவனுக்கு இல்லை என்ற படியால்
தத் யுக்தம் -பரிஹாரம் முன்னே கூறப்பட்டது
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத்
விசித்ராச் சஹி -என்ற ஸூத்ரங்களால்
சர்வ சக்தி உள்ளவன் என்று கூறப்பட்ட படி ஸர்வ வித காரணத்வமும் கூடும் என்பதாம் –
—————–
பத்தாம் அதிகரணம்–ப்ரயோஜனவத்வ அதிகரணம்
ஸூத்ரம் –166-ந ப்ரயோஜனவத்வாத் –2-1-32-
அவாப்த ஸமஸ்த காமனான பரம புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியாதிகளில் பிரயோஜனம் இல்லாமையால்
காரணத்வம் கூடாது என்கிற சங்கையை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி
ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா -என்று சம்சயம்
அது கூடாது
ந ப்ரயோஜனவத்வாத்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியால்
ஸ்ருஷ்டியால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமையால் அது பொருந்தாது
உலகில் குயவர் போன்றவர் ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பார்த்தே குடம் முதலியவற்றைப் படைப்பதை பார்க்கிறோம் –
ஆகவே கர்ப்பவாசாதி துக்க ரூபமான ஜகத்தின் ஸ்ருஷ்ட்டியை கருணையால் செய்கிறான் என்பது அயுக்தம் ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு காரணத்வம் பொருந்தாது என்று பூர்வ பக்ஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது
அதற்கு விடை மேல் –
———————-
ஸூத்ரம் -167-லோக வத் து லீலா கைவல்யம் –2-1-33-
து சப்தம் சங்கையை விலக்குகிறது
லீலா கைவல்யம்-கேவலம் லீலையே பிரயோஜனம்
கேவலம் என்கிறது -வேறே பயன்கள் இல்லை என்கிறது
ஆகவே கேவல லீலை ஸ்ருஷ்ட்டியை ஆரம்பிக்கவே பயன்படுகிறது
அவன் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் லீலா ரஸ மாத்ரத்திற்காக ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வது பொருந்தும்
லோகவத்
லோகத்தில் மஹா ராஜாவுக்கு கேவலம் பந்து விளையாட்டு சூதாட்டம் முதலியவற்றில் ஈடுபாடு காணப்படுகிறது
அப்படியே ப்ரஹ்மத்துக்கும் காரணத்வம் கூடும் –
———
ஸூத்ரம் –168–வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி–2-1-34–
இங்கு ஒரு ஆஷேபம் தோன்றுகிறது
ஸர்வ சமனாய் பரம காருணிகனான பரம புருஷனுக்கு தேவ மனுஷ்யாதிகளான விஷமமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதால்
வைஷம்யமும் -பக்ஷபாதமும்
துக்கம் மிக்க ஜகத்தைப் படைப்பதால்
நைர் க்ருண்யம் -இரக்கம் இன்மை
என்ற தோஷமும் வருமே என்பதே அது
அதுக்கு இந்த ஸூத்ரம் விடை தருகிறது
வைஷம்ய நைர் க்ருண்யே ந
இவ்விரு தோஷங்களும் வாராது
ஏன் எனில்
சாபேக்ஷத்வாத்
ஜீவர்களின் முந்திய கர்மங்களை அநு சரித்து தேவர் மனுஷ்யர் போன்ற வேறுபட்ட ஸ்ருஷ்ட்டியை செய்வதனால்
ஸ்வத ஸர்வ சமனான ஈஸ்வரனுக்கு தேவாதி விஷம ஸ்ருஷ்டியிலும்
துக்க மிக்க ஸ்ருஷ்டியிலும்
அவ்வோ ஜீவர்களின் பூர்வ ஜென்ம கர்மமே ஹேது என்று கருத்து
ததாஹி தர்சயதி
ஸாது காரீ -சாதுர் பவதி -அஸாது காரீ பாபோ பவதி -முதலிய சாஸ்திரங்கள்
பூர்வ கர்மாவுக்கு ஏற்பவே -ஸாது பாபீ என்ற வைஷம்யம் ஏற்படுவதைக் காட்டுகிறது
————
ஸூத்ரம் –169–ந கர்மா அவி பாகாத்தி சேந் நா நாதித்வாத் உப பத்யதே சாப் யுபலப்யதே ச –2-1-35-
ந கர்மா
ஸ்ருஷ்டிக்கு முன்னால் கர்மா இல்லை
ஏன் எனில்
அப்போது ஜீவர்கள் இல்லாமையாலே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் என்னும் ஸ்ருதி
ப்ரஹ்மதுக்கும் ஜீவனுக்கும் விபாகம் இல்லை
ப்ரஹ்மம் ஒன்றே அப்போது இருக்கிறது என்று சொல்வதால்
ஜீவர்களின் கர்மாவை அநு சரித்தே ஸாதுத்வமும் பாபித்வமும் போன்ற வைஷம்யம் ஏற்படுகிறது என்பது அனுப பன்னம்
இதி சேத் ந
என்று கூறுவது சரி அன்று
ஏன் எனில்
அநாதித்வாத்
ஜீவர்களின் கர்ம ப்ரவாஹமும் அநாதியாய் இருப்பதாலே
உப பத்யதே ச
ஜீவர்கள் அநாதிகளாய் பிரளய காலத்தில் இருந்தாலும் ஏகமேவ என்ற ஸ்ருதி பொருந்தலாம்
ப்ரஹ்மம் ஏகம் என்பது நாம ரூப விபாகத்திற்குத் தகாத ஸூஷ்ம அவஸ்தையில் உள்ள சேதன அசேதன சரீரகத்வம்
இத்தால்
அந்த ஸூஷ்ம அவஸ்தை ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவதால் ப்ரஹ்மம் ஏகம் என்பது பொருந்துமே
யுபலப்யதே ச
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே ஜீவர்களுக்கு அவர் தம் கர்மாக்களுக்கும் அநாதித் தன்மை தோன்றுகிறது
ஞ்ஞாஞவ் த்வவ் அஜாவிச நீசவ்
நித்யோ நித்யாநாம் சேதன அசேதனானாம் –முதலிய ஸ்ருதிகள்
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தி அநாதி உபா வபி முதலிய ஸ்ம்ருதிகள் –
—————
ஸூத்ரம் –170–ஸர்வ தர்மோ பபத்தேச் ச –2-1-36-
சாங்க்ய வைசேஷாதிகளின் பக்ஷங்களில் காரணமாக ஏற்கப்பட்ட பிரதான பரமாணுக்களில்
அஸம்பாவிதமாயும்
காரணத்வத்துக்கு இன்றியமையாதவையுமான
ஸர்வஞ்ஞத்வம் – ஸர்வ சக்தித்வம் முதலிய தர்மங்களுக்குப் பரம புருஷன் இடத்தில் பொருத்தம் இருப்பதால்
அவனே ஸூஷ்ம சித் அசித் சரீரகனாய் இருந்து
ஸகல ஜகத்துக்கும் ஸர்வ வித காரணமாவான் என்பது சித்தமாயிற்று –
————
நம் ஆச்சார்யர் அருளிய முறையில் வைஷம்யம் நைர் க்ருண்யங்களை நீக்கும் முறை ஓன்று வருமாறு
நிச்சேஷாத்ம பவர்க்கே –குத்ர சிந் நித்யமஸ்து –அதிகரண ஸாரா வளி
அதாவது
நித்ய ஸம்ஸாரி ஒரு சாரார் -வரும் காலத்தில் சம்சாரம் அற்றவர் ஒரு சாரார்
ஷிபாம் யஜஸ்ரம சுபான் -என்றபடி ஒரு காலமும் ஸம்ஸாரம் நீக்கம் அற்றவன் நித்ய ஸம்ஸாரி
இத்தகைய நித்ய சம்சாரியை ஏற்றுக் கொள்ளா விட்டால்
லீலா விபூதி நித்யை என்ற ஸ்ரீ ஸூக்தி யுடன் முரண்பட்டு ஏற்படும்
ஆகவே நித்ய சம்சாரியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள்
மற்றும் சிலர் எல்லா ஜீவர்களுமே முக்திக்கு யோக்கியர்கள் என்று கூறும் சுகர் போன்றவர்க்கு
ஸஹ காரி காரணம் சித்தித்தால் முக்தியில் சந்தேகம் இல்லை என்றும்
ஷிபாம் யஜஸ்ரம சுபான்
மாமப்ராப்யைவ கௌந்தேய
அவிச்சின்னாஸ் தத
மூடா ஜன்ம நிஜன் மநி -என்கிற
பிரமாணங்கள் விளம்ப மிகுதியைக் கூறுகின்றன என்றும்
ததா ஸம்ஸாரி பாந்தஸ்ய யாதி மோஹ ஸ்ரம சமம் -முதலிய பிரமாணங்கள் எல்லா ஸம்ஸாரிகளுக்கும் உபாயத்வ சம்பந்தத்தால்
ஸம்ஸார மோஹ நிவ்ருத்தியைச் சொல்வதாலும் நித்ய ஸம்ஸாரியே இல்லை என்கிறார்கள்
இந்த இரண்டு பஷத்திலும் வைஷம்ய நைர் க்ருண்யத்தைப் பரிஹரித்து அருளுகிறார் –
நித்ய சம்சாரியை ஏற்கா விட்டால் ஜீவர்கள் அனந்தர்களாய் இருப்பினும் எல்லாரும் முக்தி யோக்கியர்கள் ஆதலின்
கால க்ரமத்தில் முக்தர்களாகும் பக்ஷத்தில் லீலா விபூதி இல்லாமல் போவதால் பகவானுக்கு லீலை ஒய்வு பெற்று விடும்
அதை விலக்க நித்ய சம்சாரியை ஏற்றால் அவனிடம் பகவானுக்குத் தயை இல்லாமையால்
நைர் க்ருண்யம் என்கிற தோஷம் வரும் என்ற பூர்வ பஷத்துக்கு சமாதானம்
முன் பக்ஷத்தில் லீலை அற்றுப் போம் என்பது தோஷம் அன்று
ஏன் எனில்
சுயேச்சையான செயலே லீலை யாதலின் ஸ்ருஷ்டியில் ஈடுபடுவது போல்
அதில் இருந்து விலகி நிற்றலும் லீலையே யாதலின் பிறரின் உபத்திரவத்தினால் அல்லது
தன் இச்சையால் மட்டும் வந்தபடியால் லீலையில் ஒய்வு குறையாகாது –
நித்ய ஸம்ஸாரி பக்ஷத்தில் அந்த ஜீவர்களின் முன் கர்மாவுக்கு ஏற்ப பகவானின் தயை விரோதியாய் இருப்பதால்
நைர் க்ருண்யாதி தோஷங்கள் இல்லை என்று பொருள்
ஸ்ரீ பாஷ்யம் ஆரம்பணாதி கரணத்தில் –பூர்வ பக்ஷத்தில் வந்த
லீலா விபூதியின் ஏற்க முடியாத நிலையாகிற தோஷத்துக்கு
இவ்வர்த்தம் இங்கு வேறு முறையில் பரிஹாரமாக எழுதப்படுகிறது –
—————-
இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன
1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால் காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்
————–—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply