ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
—————————————————————-
தன் பக்ஷத்தில் சாங்க்யாதிகள் கூறிய அனுப பத்திகளை -பிழைகளைக் -காட்டி
இந்த தர்க்க பாதத்தில் எதிரி மதங்களைக் கண்டிக்கிறார் என்பது பாத சங்கதி
————
முதல் அதிகரணம் -ரசன அனு பபத்ய அதிகரணம்
முன் அதிகரணத்தில் அவாப்த ஸமஸ்த காமனுக்குப் பல அபேக்ஷை இராமையாலே
நிமித்த காரணத்வம் பொருந்தாது என்ற சங்கை தீர்க்கப் பட்டது
இவ்வதி கரணத்தில் பிறரது யுக்தி தவறு என்று காட்டப்படுகிறது என்பது அதிகரண சங்கதி
சாங்க்யர்கள் கூறும் பிரதானம் காரணம் என்கிற வாதம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதா இல்லையா என்று சம்சயம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதே
ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு அம் மூன்று குணங்களில் சம நிலையை யுடைய
பிரதானமே காரணம் என்பது தான் பொருத்தம் உள்ளது
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –
ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-
அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது
———
ஸூத்ரம் –172-பய அம்புவத் சேத் தத்ராபி –2-2-2-
பய -பாலும்
அம்புவத் -தண்ணீரும்
ப்ராஞ்ஞனான ஜீவனது அதிஷ்டானம் இன்றியே தயிராகவும்
இளநீர் மா முதலிய பற்பல சுவை உடையனவாகவும் மாறுவதே போல்
தனி பிரதானமும் ஜகத்தாக மாறுவது பொருத்தமே
என்றால்
தத்ராபி -அந்தப் பாலிலும் தண்ணீரிலும் கூட ஜீவனின் அதிஷ்டானம் -தலைமை -உள்ளது என்பதை
யோக அப் ஸூ திஷ்டன் -முதலிய
ஸ்ருதிகளிலே ஸித்தமாகக் காண்பதால் அதுவும் நம் பக்ஷத்தில் சேர்ந்ததே என்பதாம்
——–
ஸூத்ரம் –173– வ்யதிரேக அந வஸ்திதேச் ச அநபேஷத்வாத் –2-2-3–
வ்யதிரேக அந வஸ்திதே-
எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படுமாதலின் ப்ரதிவர்க்கம் என்னும் பிரளய அவஸ்தைக்கு இல்லாமை -அபாவம் -வரத்
தோன்றுவதால் என்றபடி
அதனால் பிரஞ்ஞனால் தலைமை தாங்கப்படாத பிரதானம் காரணம் இல்லை
மேலும்
அநபேஷத்வாத்
பிரதானத்துக்கு சேதன அபேக்ஷை இல்லாமையால் எப்போதும் ஜகத்தின் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க நேரிடும்
ப்ராஞ்ஞ-ஜீவனுக்கு -அதீனமான பரிணாமத்தை ஏற்றுக் கொண்டல் ப்ராஞ்ஞனின் ஸங்கல்பத்துக்கு
அனுகுணமாக ஸ்ருஷ்டி ப்ரளயங்கள் கூடும் என்பது தாத்பர்யம்
————-
ஸூத்ரம் –174-அந் யத்ர அபாவாச்ச ந த்ருணாதி வத் –2-2-4–
த்ருணாதி வத்-
பசுக்கள் முதலியவை உட் கொண்ட புல் போன்றவை பாலாக மாறுவது போல்
கேவலம் பிரதானம் காரணம் ஆகட்டுமே என்னில்
தகாது
அந் யத்ர அபாவாச்ச-
காளை போன்றவை தின்னும் புல் போன்றவை பாலாக மாறக் காணாமையாலே
அப்படி மாற -ப்ராஞ்ஞனான பகவானின் அதிஷ்டானம் அவசியம் ஆதலின்
அது இல்லாத பிரதானம் காரணம் ஆகாது –
—–
ஸூத்ரம் –175–புருஷாச் மவதிதி சேத் தத்ராபி –2-2-5-
பிரதானம் ப்ராஞ்ஞனான பகவானால் அதிஷ்டானம் பெறா விடினும் ஜீவன் தன் ஸந்நிதானத்தால்
அதை ஜகத்தின் ஸ்ருஷ்டியில் பிரவர்த்திக்கிறான் -தூண்டுகிறான் –
எப்படி எனில்
புருஷாச் மவத் -புருஷர் போலும் கல் போலும்
அதாவது
நடக்க சக்தி அற்றுப் பார்வை உள்ள புருஷன் -நடக்க சக்தி உள்ள கண் பார்வை அற்ற புருஷனின் உதவியால் நடந்து
விரும்பும் இடத்துக்குச் செல்வது போலவும்
காந்தக்கல் தன் நெருக்கத்தால் இரும்பை அசைத்துத் தன் பால் ஈர்ப்பது போலவும்
பிரதானமும் ஜீவனின் சேர்க்கையால் உலகைப் படைக்கலாம்
தத்ராபி -அப்படியும் ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடா
குருடன் நடக்கவும் நொண்டி வழி காட்டவும் சக்தி உள்ள சேதனர்கள்
இரும்புக்கும் காந்தத்துக்கும் எப்போதாவது தான் நெருக்கம் ஏற்படுகிறது
இவ்விடமோ புருஷனுடைய ஸந்நிதானம் -அருகில் இருத்தல் -தவிற வேறு விசேஷம் ஏதும் இல்லை
அந்த ஸந்நிதானம் மட்டுமே காரணம் என்றால் எப்போதும் ஸ்ருஷ்டி ஏற்பட வேண்டும்
அல்லது ஒரு போதும் ஸ்ருஷ்டியே இல்லை என்று ஏற்க வேண்டி வரும் –
——————-
ஸூத்ரம் –176-அங்கித்வ அனுபபத்தேச் ச –2-2-6–
குணங்களின் ஏற்றத் தாழ்வுகளால் அங்க அங்கி பாவத்தைக் கல்பித்து ஜகத்தின் ஸ்ருஷ்டி உன்னால் ஏற்கப்படுகிறது
பிரளய தசையிலோ சமநிலையில் உள்ள சத்வாதி குணங்களுள் ஒன்றுக்கு ஓன்று ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்ட
அங்க அங்கி பாவம் கூறுவது பொருந்தாது ஆதலின் ஜகத்தின் ஸ்ருஷ்டி பொருந்தாது
அந்த நிலையிலும் வேறுபாட்டை ஏற்றுக் கொண்டால் வேறுபாடு -விசேஷம் -இன்மையால் எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படும்
ஆகையால் ப்ராஞ்ஞனால் அதிஷ்டிதம் இல்லாத பிரதானம் காரணம் அன்று –
——-
ஸூத்ரம் –177-அந்யத அனுமிதவ் சஞ்ஞ சக்தி வியோகாத் –2-2-7-
கூறியதை விட்டு வேறு வழிகளில் பிரதானத்தை அனுமித்தாலும் பிரதானத்துக்கு ஞாத்ருத்வம் இல்லாமையால்
ரசன அனுபவத்தி முதலிய தோஷங்கள் அப்படியே உள்ளன –
————
ஸூத்ரம் –178- அப்யுபகமேப் யர்த்தா பாவாத் –2-2-8-
கேவல பிரதானத்தை காரணமாக ஏற்றுக் கொண்டாலும் பயன் இல்லாமையால் அதை அனுமானிக்க வேண்டாம்
புருஷனின் போக அப வர்க்கங்களுக்காக பிரதானம் ப்ரவர்த்திக்கிறது என்று உங்கள் கருத்து –
அது பொருந்தாது –
சைதன்யமே ஸ்வரூபமாக ஒரு வியாபாரமும் அற்ற புருஷனுக்கு அசேதன தர்மத்தின் அத்யாசத்தாலே
ப்ரக்ருதி தர்சன ரூபமாக போகமும் ப்ரக்ருதி விவேக ரூபமாக அப வர்க்கமும் சம்பவிக்கா –
——————
ஸூத்ரம் –179-விப்ரதிஷேதாச் ச அசமஞ்சஸம் –2-2-9–
ஒன்றோடு ஓன்று முரண் பட்ட வாதங்களாலும் இந்த சாங்க்ய மதம் நேர்மை அற்றது
ப்ரக்ருதி புருஷனின் போக அபவர்க்கங்களுக்காக ப்ரவர்த்திக்கிறது என்பது சாங்க்யர் கூற்று
அசேதனமான ப்ரக்ருதி தானே புருஷனிடம் உள்ள சைதன்யத்தைத் தன்னிடமும்
தன் பால் உள்ள கர்த்ருத்வத்தை புருஷன் இடமும் அனுசந்தானம் செய்து பந்தத்தை அடைகிறது
மோக்ஷ சாதனத்தையும் அனுஷ்டிக்கிறது என்றும் கூறுகிறார்கள்
அசேதனமான பிரதானத்துக்கு சேதன தர்மமான அத்தி யாஸம் எப்படிப் பொருந்தும்
இப்படி முரண் பட்ட பேச்சுக்களால் பிரதான காரிய வாதம் அடியோடு அசமஞ்சஸமாகும் –
இங்கு ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்துக்கும்
இவ்வதிகரணத்துக்கும் முரண்பாட்டை நீக்கும் வழி சிறிது விளக்கப்படுகிறது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
ரசனானுபத் யதிகரணத்தில் அசேதனங்களுக்கு சேதன அதிஷ்டானம் முக்யம் என்றுள்ள வியாப்தியால் -நியமித்தால் –
அந்தச் சேதனன் ஈஸ்வரனே என்று அனுமானத்தால் ஸாதிக்கப்பட்டது
ஆகவே இரண்டு அதிகரணங்களுக்கும் முரண்பட்டு உள்ளது என்ற சங்கைக்கு விடையாவது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
இங்கு ஈஸ்வரன் அனுமானத்தாலே பாதிக்கவும் முடியாதவன் என்று கூறப்படுகிறது
ஆகவே இரண்டுக்கும் முரண் ஏதும் இல்லை
அதாவது
எந்த வஸ்து எந்த ப்ரமாணத்தால் சாதிக்கத் தக்கதோ
அந்த வஸ்துவே அந்த ப்ரமாணத்தாலேயே பாதிக்கவும் தக்கதாகும்
ப்ரத்யக்ஷத்தால் காணத்தக்க குடம் அதே ப்ரத்யக்ஷத்தால் தான் பாதிக்கவும் படக்கூடும்
ப்ரத்யக்ஷத்துக்கு விஷயமாகாத பரமாணு முதலியவை ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கவும் படமாட்டா
அதேபோல் அனுமானத்துக்கு விஷயமாகாத ஈஸ்வரன் அந்த அனுமானத்தால்
சாதிக்கவோ பாதிக்கவோ இயலாதது என்பதே ஸூத்ர காரரின் திரு உள்ளம்
என்று ஸ்ரீ தேசிகன் -நன்வத்ரா சேத நானாம் -என்று தொடங்கும் ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
————————-
இரண்டாம் அதிகரணம் –மஹத் தீர்க்க அதிகரணம்
அனுமானத்தால் சித்திப்பது பிரதானம் போல் பரமாணுவும் ஆதலின்
நிரீஸ்வர சாங்க்யன் ஏற்ற பிரதான காரணத்வத்தைக் கண்டித்த பின்
கணாதர் ஏற்ற பரமாணு காரண வாதத்தைக் கண்டிக்கிறார் என்பது சங்கதி
சேஸ்வர சாங்க்யன் நிராகரிக்க வேண்டாதவன்
யோக மதமும் மிக்க விரோதம் இல்லாமையால் கண்டிக்க வேண்டியது இல்லை
பரமாணு காரண வாதியான புத்த மதஸ்தரும்
பிரதான காரணவாதியான பாசுபதனும் வேதத்தை நம்பாதவர்கள்
ஆதலின் சாங்க்யர் வைசேஷிகர்களுக்குப் பின் கண்டிக்கத் தக்கவர்
கநாதர் கூறும் பரமாணு காரண வாதம் சரியானதா இல்லையா என்று சம்சயம்
பூர்வ பஷீ அந்த வாதம் சரியானதே என்பதற்க்கு காரணம்
நூல் முதலிய அவயவங்கள் சேர்க்கையால் துணி முதலிய அவயவிகள் உண்டாகக் காண்கையாலே
அவயவங்கள் சிறுமை பெருமைகளுக்கு ஏற்ப கடுகுக்கும் மலைக்கும் வேறுபாடு காணப்படுவதால்
அந்த அவயவங்கள் சிறுமைக்கு எல்லையான பரமாணுவே காரணம் என்பதாகும்
இதனைக் கண்டிக்கிறார் –
ஸூத்ரம் –180-மஹத் தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம் –2-2-10-
இங்கு வா என்பது ச என்னும் பொருளில் வந்தது
அசமஞ்சஸம் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம்-மஹத் தீர்க்கவத்-
த்வய அணுகம் போலே
பரம அணுக்களால் த்வ அணுகம் -த்வய அணுக்களால் த்ரி அணுகம் –
இவற்றின் உத்பத்தி எவ்வாறு பொருந்தாதா அவ்வாறே அவர்கள் கூறிய எல்லா விஷயங்களும்
அநவஸ்தை முதலிய தோஷங்களால் பொருந்தாதவையே என்று கருத்து
எப்படி என்றால்
நூல் முதலிய அவயவங்கள் நான்கு பக்கம் -நான்கு திசைகளிலும் மேலும் கீழும் என்று
ஆறு பக்கங்களுடன் சேர்ந்து -ஒன்றோடு ஓன்று அளவில் பெரிய காரியப் பொருளை –
துணி முதலிய அவயவியைப் படைக்கின்றன
அதே போல் பரமாணுக்களும் ஆறு பக்கங்களுடன் சேர்ந்தே -ஒன்றோடு ஓன்று -த்வி அணுகம் முதலிய
கார்யங்களை நிறைவேற்றும் உண்டாக்கும் என்று சொல்ல வேண்டும்
அந்தப் பக்கங்கள் அவயவங்களை உடையவற்றுக்கே கூடுமாதலால்
பரமாணுக்களும் ச அவயவங்களாகவே இருக்க வேண்டும் என்று நேரிடும்
இப்படி ஏற்றால் முடிவே இல்லாமல் அநவஸ்தை வரும்
எந்தச் சிறு அவயவத்துக்கும் ஓர் அவயவியும் உண்டு என்று ஏற்க வேண்டி வரும் என்பதால்
உன் இஷ்டம் நிறைவேறாது –
————-
ஸூத்ரம் –181-உபய தாபி ந கர்மாத தத் அபாவ –2-2-11-
மற்றும் எது அசமஞ்சஸம் என்ற வினாவிற்கு விடை தருகிறார் இந்த ஸூத்ரத்தாலே
த்வய அணுகத்தைப் படைக்கப் பரமாணு செய்யும் முதல் செயல் ஒரு அத்ருஷ்டத்தால் -புண்யத்தால்
செய்விக்கப்படுகிறது என்று ஒப்புக் கொள்கின்றனர்
அந்த அத்ருஷ்டம் அணுவில் உள்ளதா -அன்றி ஜீவனிடம் உள்ளதா
இரண்டு இடங்களிலும் அது பொருந்தாது
பரமாணுக்கள் சேருவதற்கான கர்மா -அத்ருஷ்டம் -ஈர் இடங்களிலும் உள்ளது ஆகாது
அத்ருஷ்டம் ஜீவனின் கர்மாவால் உண்டாவது ஆதலின் பரமாணுவில் அது வராது
அதில் உண்டு என்று ஏற்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க வேண்டும்
ஜீவனிடம் உள்ளதாக ஏற்றுக் கொண்டால் அத்ருஷ்டம் வெவ்வேறு இடத்தில் இருப்பதால்
பரமாணுவில் கர்மாவை உத்பத்தி செய்ய இயலாது
அத்ருஷ்டமுள்ள ஆத்மாவின் சேர்க்கையால் பரமாணுவில் கர்ம உத்பத்தி ஆகிறது என்றால்
அந்த சம்யோகம் நித்யமாகையாலும் எப்போதும் ஸ்ருஷ்ட்டியை ஏற்க நேரிடும் –
————
ஸூத்ரம் –182-சமவாயாப் யுபகமாச்ச ஸாம யாத அநவஸ்திதே –2-2-12–
கணாத மதம் ஸமவாயம் என்ற சம்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாலும் அசமஞ்சஸம்
ஏன் எனில்
ஸம யாத -ஜாதிக்கும் வ்யக்திகளுக்கும் குணங்களுக்கும் த்ரவ்யங்களுக்கும் இடையே
விட்டுப் பிரிக்க முடியாத நிலைக்கு -அப்ருதக் ஸ்திதி -ஹேதுவாக ஸமவாயம் என்ற
சம்பந்தம் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அதே போல் அந்த ஸமவாயத்திற்கும் ஜாதி முதலியவற்றுக்கு இடையே
அதே அப்ருதக் ஸித்துக்கு ஹேதுவாக ஓன்று தேவைப்படுகிறது
அங்கோர் ஸமவாயம் ஏற்க வேண்டும்
இப்படி வியவஸ்தையே முடிவு இல்லாமல் போகும்
அதற்காக வேறே ஒரு சம்பந்தத்தை ஏற்காமல் ஸ்வ அப்ருதக் ஸித்தி-நிர்வாஹகத்வம்
தன்னை விட்டுப் பிரியாமையைத் தானே ஜாதியாதிகள் நிர்வஹிப்பவை என்று ஏற்றுக் கொண்டால் போதும்
ஸமவாயம் எனத் தனி சம்பந்தம் ஏற்பது அசமஞ்சஸம் ஆகும் –
—————-
ஸூத்ரம் –183-நித்யமேவச பாவாத் –2-2-13–
ஸமவாய சம்பந்தம் நித்தியமாக இருப்பதாக ஒப்புக் கொள்வதால்
சம்பந்திகளும் நித்யம் என்று ஏற்க வேண்டி வரும்
ஆக சமவாயத்தின் சம்பந்திகளான ஜாதி வியக்த்யாதிகளும் த்ரவ்ய குணாதிகளும் அவயவ அவயவிகளும்
நித்யமானவை என்று ஏற்படுவதால் ஒன்றுக்கும் காரண கார்ய பாவமே ஸித்தியாது –
———————
ஸூத்ரம் –184-ரூபாதி மத்வாச் ச விபர்யயோ தர்சனாத் –2-2-14–
பரமாணுக்களுக்கு ரூபாதிகள் உண்டு என்று ஏற்றுக் கொள்வதாலும்
விபர்யய -நித்யத்வம் நிர் அவயவத்வம் முதலியவற்றுக்கு முரண் ஏற்பட்டு விடும்
தர்சனாத் -ரூபாதிகளைக் கொண்ட குடம் முதலியவை அநித்யமாயும் ஸ அவயமாயும் காணப்படுவதாலும்
காண்பதற்கு ஏற்ற படியே கல்பிப்பதாலும்
பரமாணுக்களுக்கு அவர்கள் கூறும் நித்யத்வமும் நிர் அவயவத்மமும் பொருந்தாது என்பதாம் –
————
ஸூத்ரம் –185–உபயதா ச தோஷாத் –2-2-15-
பரமாணுக்களுக்கு அநித்யத்வாதிகள் வந்து விடுமே என்று பயந்து ரூபாதிகள் இல்லை என்று ஒப்புக் கொண்டால்
காரியத்தின் குணங்களுக்குக் காரண குணம் மூலம் என்ற நியமம் ஸித்திக்காது
அது ஸித்திக்க வேண்டி பரமாணுக்களுக்கு ரூபாதிகளை ஒப்புக் கொண்டால் அநித்யம் முதலானவை வந்து சேரும்
ஆகவே இரு வழிகளாலும் அசமஞ்சஸமாகும் –
————-
ஸூத்ரம் –186–அபரிக்ரஹாச் சாத் யந்தமநபேஷா –2-2-16–
கபில மதத்தில் ஸ்ருதி நியாய விரோதம் இருந்தாலும் ஸத் காரிய வாதிகளான வைதிகர்கள்
அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்
கணாத மாதத்திலோ ஒரு அம்ஸத்தையும் வைதிகர்கள் ஏற்காமையாலே அனுபபத்தியாலும்
க்ஷேமார்த்திகளால் அடியோடு ஏற்கக் கூடாததாகும் –
————–
மூன்றாவது அதிகரணம் –ஸமுதாய அதிகரணம்
ஸூத்ரம் –187-ஸமுதாய உபய ஹேது கே அபி தத் அப்ராப்தி –2-2-17-
உபய ஹேது கே அபி-ஸமுதாய -பரமாணுக்களால் உண்டாகும் ப்ருத்வீ சமுதாயத்திலும் –
ப்ருதிவ்யாதிகளால் உண்டாகும் சரீர இந்திரிய விஷய சமுதாயத்திலும்
தத் அப்ராப்தி -ஜகத் ரூபமான சமுதாயத்தின் உத்பத்தி கூடாது
ஏன் எனில்
க்ஷணிகமான பரமாணுக்கள் ஒன்றோடு ஓன்று சேரும் வேளையில் தாமே நசித்துப் போவதால்
ப்ருத்வீ யாதி சமுதாயத்தை எப்படி உண்டாக்கும்
அஸ்திரமானவற்றில் ஸ்திரம் என்னும் பிரமத்தால் சமுதாயத்தின் உத்பத்தி கூடும் என்றால்
சக்தி சிப்பியில் வெள்ளி என்ற பிரமத்தால் வெள்ளியின் உத்பத்தி கூடாதது போலே
சமுதாய உத்பத்தி கூடாது
ஆகையால் அந்த மதம் அசமஞ்சஸம்
இவ்விடம் கணாதரும் புத்த மதஸ்தரும் ஒரே விதமாய் நான்கு விதமான பரமாணுக்களை ஒப்புக் கொள்கிறார்கள்
ஆகையால் கணாதரைக் கண்டித்தும் புத்த மதஸ்தர் கண்டிக்கப் படுகின்றனர்
ஸூ கதர் என்னும் புத்தரின் சிஷ்யர் நால்வர்
வைபாஷிகர் -ஸுத்ராந்திகர் -யோகாசரர் -மாத்யமிகர் –
வைபாஷிகர் என்பவர் ப்ருத்வீ முதலிய ஸ்தூல த்ரவ்யங்கள் ப்ரத்யக்ஷ சித்தங்கள் என்பர்
ஸுத்ராந்திகர் -அவை ஞானத்தால் அனுமானம் செய்யத் தக்கவை என்பர்
யோகாசரர் -வெளிப்படையாக பாக்யங்களான ப்ருத்வீ யாதிகள் இல்லை என்பர்
ஆந்தரமான ஞான சந்தான மாத்ரமே ஸத்யம் என்கின்றனர்
இம்மூவரும் தாம் ஏற்றுக் கொண்ட பொருள்கள் க்ஷணிகம் என்பர்
மாத்யமிகர் –சர்வ வஸ்துக்களும் சூன்யம் என்பர்
இதில் வைபாஷிகனும் ஸுத்ராந்திகனும் கூறும் ஜகத்தின் உத்பத்தி பிரகாரம்
நன்கு உப பாதனம் செய்யத் தக்கதா இல்லையா என்ற சம்சயம்
உபபாதிக்கத் தக்கதே –
பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயுக்களின் பரமாணுக்கள் நான்கும்
கந்தம் ரஸம் ரூபம் ஸ்பர்சம் இவற்றை யுடையவனாய் ப்ருதிவ்யாதி ரூபங்களாகக் கூடுகின்றன
அவற்றில் இருந்து சரீர இந்திரிய விஷய ஸமுதாயங்கள் தோன்றுகின்றன
இதில் ஆந்தரமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மாவாகும்
இவை க்ஷணிகமே யாயினும் ஸ்திரம் என்ற பிரமத்தாலே உலக வ்யவஹாரங்கள் கூடும் என்ற
பூர்வ பஷியை மேற்கொண்ட ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்
———–
ஸூத்ரம் –188–இதர தர ப்ரத்ய யத்வாத் உப பன்னம் இதி சேந் ந ஸங்காத பாவா நிமித்தத்வாத் –2-2-18-
ஸகல வஸ்துக்களும் க்ஷணிகமாய் இருந்தாலும் அஸ்திரத்தை ஸ்திரம் என்று
பிராந்தியாகிய அவித்யை யாலே ராக த்வேஷாதிகள் உண்டாகின்றன
அவற்றில் இருந்து பிருதிவ்யாதிகள்
அவற்றில் இருந்து அவித்யை
இவ்வாறு ஒன்றில் இருந்து மற்று ஒன்றாக ஹேதுவாய் இருப்பதால் எல்லாமே பொருந்துமே என்றால்
இல்லை
ஸங்காத பாவா நிமித்தத்வாத்-ஸமுதாய பாவத்துக்கு அவித்யை நிமித்தமாக மாட்டாமையால் –
அஸ்திரத்தை ஸ்திரம் என்ற காரியத்தை எப்படி உண்டாக்கும்
இந்த அவித்யை யுடைய ஆத்மா அப்போதே நசிக்கையாலே
யாருக்கு ராக த்வேஷாதிகளை உண்டாக்குகின்றது
ஆகையால் இம்மதம் தவறானது
—————
ஸூத்ரம் –189-உத்தரோத் பாதேச பூர்வ நிரோதாத் –2-2-19–
உத்தரமான குடம் உண்டாகப் போகும் க்ஷணத்தில் முந்தைய மண் பிண்டத்தின் க்ஷணம் நசிப்பதால்
உத்தர குட க்ஷணத்துக்கு அபாவமே சூன்யமே ஹேது என்று சொல்ல வேண்டி இருப்பதால்
வியாவர்த்தகமான -பிரித்துக் காட்டத் தக்க விசேஷம் இல்லாமையாலே
குடத்தின் ஷணத்தால் துணி உண்டாகலாம் -அல்லது சர்வ ஜகத்தும் உண்டாகலாம் என்று கருத்து
க்ஷணம் என்ற சொல் ஷண்யதே என்ற வ்யுத்பத்தியாலே குடம் முதலியவற்றைக் குறிப்பிடும் –
—————–
ஸூத்ரம் –190-அஸதி ப்ரதிஜ்ஜோ பரோதோ யவ்க பத்ய மன்யதா –2-2-20-
அஸதி
காரணம் இல்லாமலே கார்யம் உண்டாகில்
ப்ரதிஜ்ஜோ
அதிபதி ஸஹ காரி முதலியவைகள் விஞ்ஞானத்தின் உத்பத்தி ஹேது என்று சொல்லுகிற
உங்கள் ப்ரதிஜ்ஜைக்குத் தடை வரும்
அந்யதா -இந்த சங்கையைப் பரிஹரிக்கைக்குப் பூர்வமான குட க்ஷணம் இருந்து கொண்டே
உத்தரமான குடத்தின் க்ஷணத்தை உண்டாக்குகின்றது என்று சொன்னால்
யவ்க பத்யம் -இரண்டு குட க்ஷணங்களும் ஒரே நேரத்தில் தோன்றக் கூடும்
அது உண்மையில் தோன்றுவது இல்லை –
————–
ஸூத்ரம் –191–ப்ரதி சங்க்யா ப்ரதி சங்க்யா நிரோதா ப்ராப்திர் அவிச்சேதாத் –2-2-21-
உலக்கையால் அடிபட்டு ஸ்தூலமாகத் தோன்றும் குடத்தின் அழிவு ப்ரதி சங்க்யா நிரோதம் -எனப்படும்
ஒவ்வோர் ஷணத்திலும் கண்களுக்குப் புலப்படாமல் அழிகிற அழிவு குடத்தில் ஏற்படுகிறது
அதை அப்ரதி சங்க்யா நிரோதம் என்பர்
இத்தகைய இருவகை விநாசங்களுக்கும் பிராப்தி இல்லை
ஏன் எனில்
அவிச்சேதாத் –உத்பத்தி விநாசம் என்னும் தர்மத்தை யுடைய மண் கட்டி முதலிய த்ரவ்யங்களுக்கு
விச்சேதம் -இடையூறு -இல்லாமையால் –
ஆகவே மண் கட்டிக்கு அடியகன்ற தோர் தோற்றமாதலால் குடத்தின் உத்பத்தி குடம்
கபாலம் ஓடு போன்ற நிலை அடைதலே அழிவு என்பது ப்ரத்யக்ஷமாகத் தோன்றுவதால்
கீழ்ச் சொன்ன இருவகை விநாசங்களும் நிரன்வய விநாசம் எனக் கூடாது
நிரன்வய விநாஸம் என்பது அழிவு
ஒரு நிலையிலே அந்வயிக்காமல் -சம்பந்திக்காமல் -இருத்தல் என்பதாம்
தீபத்தின் நாசம் என்பதும் தீபத்தின் ஸூஷ்ம அவஸ்தையே யாகும் –
—————
ஸூத்ரம் –192–உபயதா ச தோஷாத் –2-2-22-
உத்பன்னமான த்ரவ்யத்துக்கு தும்சத்வம் சூன்யத்வம் சொன்னாலும்
துச்சத்தில் இருந்தே ஜகத்துக்கு உத்பத்தி சொன்னாலும்
ஜகத்தே துச்சம் சூன்யம் என்று ஒப்புக் கொள்ள நேரிடும் –
————–
ஸூத்ரம் –193–ஆகாசே ச அவிசேஷாத் –2-2-23-
ஆகாசத்திலும் துச்ச ஸ்வரூபத்வம் சொல்லக் கூடாது
அவிசேஷாத் –பிருதிவ்யாதிகளைப் போலே ஆகாசத்திற்கும் அபாதிதமான ப்ரதீதி ஸித் தத்வம் சமம்
ஆகையால் விசேஷம் இல்லை
அத்ரஸ்யேந பததி-இங்கு கழுகு விழுகிறது என்று
கழுகு விழுவதற்கு ஆஸ்ரயமாகவே ஆகாசம் தோன்றுவதால் அதற்குப் பாதகம் இல்லை –
————
ஸூத்ரம் –194-அனுஸ் ஸ்ருதேச் ச –2-2-24–
இது அதே குடம் என்ற நினைவு -ப்ரத்யபிஜ்ஜை -ஏற்படுவதாலும்
குடம் முதலியவை க்ஷணிகம் என்பது தகாது
ப்ரத்யபிஜ்ஜை -என்பது சென்ற காலத்திலும் நிகழ் காலத்திலும் இருக்கிற
ஒன்றைப் பற்றிய ப்ரத்யக்ஷ ஞானம் –
அதே இது என்பது போன்றது
அதில் அதே என்பது ஸ்மரண அம்சம் -இது என்பது கிரஹண அம்சம் என்றும் கூற இயலாது
அதே இது என்ற விசேஷண விசேஷ்ய பாவத்தால் -ஸாமா நாதி கரண்யத்தால் –
க்ரஹண அம்சமே ஒரு பொருளில் தோன்றுவதால் ப்ரத்யக்ஷ ரூபம் தான்
அதற்குக் காரண ஸாமக்ரீ எது என்றால்
முன் அனுபவத்தால் உண்டான ஸம்ஸ்காரத்துடன் கூடிய இந்திரியங்களின் சேர்க்கை
இதனையுடைய மனிதனுக்கு இந்த ப்ரத்யபிஜ்ஜை ஏற்படுகிறது –
குடம் முதலிய விஷயங்களும் அறிபவனும் க்ஷணிகம் என்றால்
இந்த ப்ரத்யபிஜ்ஜை உண்டாகவே மாட்டாது
——————
ஸூத்ரம் –195–ந அஸத் அத்ருஷ்டத்வாத் –2-2-25–
அஸத் ந -நசித்துப் போன குடம் முதலியவற்றின் குடத்தன்மை -கடத்தவம் -போன்ற தர்மமானது
குடம் முதலியவற்றின் ஞானத்தில் சங்கமிக்கிறது -ஒட்டிக் கொள்கிறது என்பதும் பொருந்தாது –
ஏன் எனில்
அத்ருஷ்டத்வாத்-பொருள் நசித்த பின் அதன் தர்மம் மட்டும் வேறு ஒன்றில் ஒட்டிக் கொள்வது என்பது
எங்குமே காணப்படாமையாலே
ஸுராந்திகர் கூறுவது –
நீலம் மஞ்சள் முதலிய பல நிற அறிவைக் கொண்டு அவ்வறிவுக்கு முன் இருந்த நீலம் முதலியவை பற்றிய அறிவில்
நீலமான குடம் தான் அழியும் போது தன் நீல நிறத்தை ஒப்படைத்து விட்டு அழிகிறது
பின்னர் நீலக்குடம் முதலிய பொருள் அனுமானத்தால் தீர்மானிக்கப் படுகிறது என்பதாம்
இத்தகைய மதமும் அசங்கதம் என்பதாம் –
———–
ஸூத்ரம் –196–உதா ஸீநா நாம் அபி சைவம் ஸித்தி –2-2-26–
வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது
ஏவம் –இப்படி சர்வ த்ரவ்யங்களுக்கும் க்ஷணிகம் கூறினால்
உதா ஸீநா நாம் அபி ஸ்த்திதி ஸ்யாத் –ஒரு முயற்சியும் இல்லாதவர்களுக்கும்
இம்மை மறுமை பலன்கள் யாவும் சித்தித்து விடும்
புண்ய கர்மாக்களை அனுஷ்ட்டித்து புருஷன் க்ஷணிகனாய் நசித்துப் போவதால்
அந்த புண்ய பலனை வேறே ஒரு மனிதனே அனுபவிக்க நேரிடும்
ஆகையால் வைசேஷிக ஸுத்ராந்திக மதம் அசமஞ்சேஸமே என்று கருத்து –
————-
நான்காம் அதிகரணம் –உப லப்த் யதிகரணம்
இவ்வாறு பாஹ்யார்த்தங்களின் இருப்பைப் பற்றி பேசுவோரைக் கண்டித்து
விஞ்ஞானம் மட்டுமே உள்ளது என்னும் யோகாசாரநைக் கண்டிக்கிறார் என்று சங்கதி
யோகாசாரனின் ஞானம் மட்டுமே -ஸத் -என்கின்ற வாதம் யுக்தமா அயுக்தமா என்ற சங்கையில்
யுக்தமே என்கிறான் பூர்வ பஷி
ஏன் எனில்
இது குடம் இது வஸ்திரம் என்று குடம் முதலியவற்றின் ஞானத்துக்கும் பொதுவாகக்
குடம் முதலிய ஆகாரம் தோன்றுகிறது
பாஹ்யார்த்தங்களே ஸத் என்பாரும் குடம் முதலியவற்றில் உள்ள குடத்தன்மை கடத்வம் முதலியவற்றை
குடம் முதலியவற்றின் ஞானத்துக்கு ஆகாரமாக ஏற்று
வஸ்திரம் முதலியவற்றின் ஞானத்தில் இருந்து பேதம் சொல்கின்றனர்
ஆதலின் குடத்தன்மை முதலியவற்றின் தோற்றம் ஞானத்தின் உடையனதே தவிர
பாஹ்யார்த்தமான குடம் போன்றவற்றினுடையது அன்று
அப்படிப்பட்ட ஆகாரத்தோடு பாஹ்யார்த்த ப்ரதீதி -குடம் முதலியவற்றுக்கு பிராந்தி ரூபம் என்கின்றனர்
இம்மதத்தை இங்கு கண்டிக்கிறார் –
ஸூத்ரம் –197–ந பாவ உப லப்ர்தே–2-2-27-
அபாவ ந -ஞானத்தைத் தவிர வேறே பதார்த்தம் இல்லை என்று கூற இயலாது
ஏன் எனில்
உப லப்தே -நான் குடத்தை அறிகிறேன் என்று குடம் பற்றிய ஞானத்துக்கு
குடம் விஷயமாகவும்
ஆத்மா ஞாதாவாகவும் தோன்றுவதால்
விஷயங்களையும் ஞாதாவையும் இல்லை என்றால் ஞானமும் ஸித்திக்க மாட்டாது —
—————
ஸூத்ரம் –198-வை தர்ம் யச்ச ந ஸ்வப் நாதி வத் –2-2-28–
ஸ்வப் நாதி வச்ச ந-ஸ்வப்னத்தில் உண்டாகும் ஞானம் மித்யா விஷயமானால் போலவோ என்றால்
விழிப்பில் பெரும் ஞானமும் மித்யா விஷயமே என்பது பொருந்தாது
ஏன் எனில்
வை தர்ம்யாத் –ஸ்வப்ன ஞானத்தைக் காட்டிலும் விழிப்பு நிலை ஞானத்துக்கு வேறுபாடு உள்ளமையால்
அதாவது
ஸ்வப்ன ஞானத்திற்கு நித்ராதி தோஷம் காரணம்
ஸ்வப்னத்துக்கு பிந்திய நிலையில் இல்லை என்கிற பாதகமான எண்ணமும் உள்ளது
விழிப்பு நிலை ஞானத்திற்கு இவ்விரண்டும் இல்லை
இவ்வாறு தோஷம் அற்று பாதகமும் அற்றுள்ள குடம் முதலியவை பற்றிய ஞானத்தை –
மித்யா விஷயம் -அஸத்ய விஷயம் -என்று கூறுவது அயுக்தம்
ச -காரத்தால்
ஸ்வப்ன பதார்த்த ஞானமும் யதார்த்த விஷயகம் என்று ஸூ சிக்கப் படுகிறது –
—————–
ஸூத்ரம் –199–நா பாவோ அனு பலப்தே –2-2-29–
அபாவ ந –பொருள் அற்ற அர்த்த சூன்யமான ஞானத்திற்கு உண்மையும் இருப்பும் இல்லை
ஏன் எனில்
அனு பலப்தே-ஓர் இடத்திலும் அது தென்படாமையாலே பாதிக்கப்பட்ட ப்ரதீதியால்
ஸித்தமான அர்த்தத்தைக் கழித்து விட்டால்
ஞானத்தையும் கழிக்க வேண்டும் என்று கருத்து –
——————–
ஐந்தாம் அதிகரணம் –ஸர்வத அனுபபத் யதிகரணம்
ஸூ கத மதத்தினர் கூறும் ஸர்வ சூன்யத்வ வாதத்தை இதில் நிரஸனம் செய்கிறார்
ஸூத்ரம் –200–ஸர்வத அனுபபத்தேச் ச –2-2-30-
மாத்யமிகன் சொன்ன ஸர்வ சூன்ய வாதம் கூடுமா கூடாதா என்கிற சம்சயம் எழ
பூர்வ பஷீ கூடும் என்று வாதிக்கிறான்
மண் கட்டி முதலியவற்றை பிசையாமல் குடம் முதலியவற்றை உண்டாக்க இயலாது –
பிசைந்தாலோ கட்டி நசிந்து விடுகிறது
ஆகவே பிண்ட அபாவத்தால் உண்டான குடம் முதலியவை அபாவாத்மகங்களே என்று
கொள்ளுவது தான் பொருத்தமானது என்கிறான்
அதனைக் கண்டிக்கிறார் –
சர்வ சூன்யவாதி சர்வத்தையும் ஸத் என்று ப்ரதிஜ்ஜை செய்து தன் விருப்பத்தைச் சாதிக்கிறானா
அன்று அஸத் என்று கூறி சாதிக்கிறானா
அல்லது வேறு வழியிலா
ஸர்வதா -எல்லா வகைகளாலும் அவன் கூறும் ஸர்வ சூன்யத்வம் சித்திக்காது
அனுப பத்தே -எல்லா விதத்திலும் அனுப பத்தி இருப்பதால் -பாவம் அபாவம்-என்ற சொற்கள்
ஒரு பொருளின் அவஸ்தா விசேஷத்தையே குறிப்பவை என்று முன்னமே நிரூபித்து உள்ளோம்
மண் -அகன்ற அடிப் பாகத்தையும் மத்ய பாகத்தையும் உடைய பாத்திரமாக மாறும் அவஸ்தையே
குடம் இருக்கிறது என்ற புத்திக்கு விஷயமாகிறது
மண் கட்டி நிலை இங்கு குடம் தோன்றப் போகிறது என்ற புத்திக்கு விஷயம்
பானையின் ஓடு குடம் அழிந்தது என்ற புத்திக்கு விஷயம் ஆகிறது
ஆகவே உள்ள பொருளின் தர்மமே சத்த்வமும் அசத்த்வமும் என்று விளக்குவதால்
நீ கூறும் சர்வ சூன்யத்வ வாதம் சித்திக்க மாட்டாது –
—————
ஆறாவது அதிகரணம் –ஏகஸ் மின்ன ஸம்பவாதி கரணம்
அசத்துக்கு அஸத் சொல்லும் வாதியைக் கண்டித்து
ஸத்யத்வத்தையும் அஸத்யத்வத்தையும் சேர்த்துச் சொல்லும் ஜைன மதத்தைக் கண்டிக்கிறார்
என்று சங்கதி
ஸூத்ரம் –201- ந ஏகஸ் மின்ன ஸம்பவாத் –2-2-31-
ஜைன மதம் யுக்தமா அயுக்தமா என்ற சம்சயத்தில்
யுக்தமே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவன் என்றும் அஜீவன் என்றும் கூறப்படும் முழு ஜகத்தும்
சத்தாயும் அசத்தாயும் நித்யமாயும் அநித்யமாயும் பின்னமாயும் அபின்னமாயும் உள்ளதாகத் தோற்றுகிறது
த்ரவ்ய ஸ்வரூபம் ஸ்திரமாயும் ஏகமாயும் இருக்கும்
கடத்வம் கபாலத்வம் போன்ற பர்யாயங்களான அவஸ்தைகளாலே அநேகமாயும் அசத்தாயும் அஸ்திரமாயும் இருக்கும்
அதனால் இந்த மண் குடம் இந்த மண் கபாலம் -ஓடு – இது முதலிய ப்ரதீதி -எண்ணம் -தோன்றும்
என்னும் பஷத்தை நிரஸிக்கிறார்
ந -ஜைன மதம் பொருத்தமானது அல்ல
ஏன் எனில்
ஏகஸ்மின் அஸம்பவாத்-ஒரே த்ரவ்யத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு ஓன்று
முரணான தர்மங்கள் சம்பவிக்காதவை என்பதால்
குடம் வாணாய் என்பவற்றின் பேதங்களும் பிருத்வியின் பிரதேச பேதத்தால் அல்லது
ஒரு பிரதேசத்தில் பேத அபேத ஆஸ்ரயித்தவம் இல்லை
ஆகவே ஒரு வஸ்து தானே இரு வடிவுள்ளதாக இருக்கும் என்பது சரியில்லை
—————–
ஸூத்ரம் –202–ஏவாஞ்ச ஆத்ம அகார்த்ஸ்ன்யம் –2-2-32-
இப்படி ஒப்பும் கொள்ளும் பக்ஷத்தில் ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம் வந்து விடும்
அது எப்படி என்றால்
ஆத்மாவே சரீர பரிணாமமாய் இருக்கிறான் என்று ஜைன மதம்
அப்படியாகில் யானையின் உடலில் உள்ள ஜீவன் கொசுவின் உடலில் நுழைகையில்
ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம்-அபூர்ணத்வம் வரக்கூடும் –
—————–
ஸூத்ரம் –203-ந ச பர்யாயா தப்ய விரோதோ விகாராதிப்ய –2-2-33-
ந ச பர்யாயா தபி அவிரோதோ
ஆத்மாவுக்கு அல்பத்வ அவஸ்தை என்னும் பர்யாயத்தாலும்
கீழ்க் கூறிய விரோதம் வராது என்பது பொருந்தாது
ஏன் எனில்
விகாராதிப்ய -குடம் முதலியவற்றுக்கும் போலவே ஆத்மாவுக்கும் பெருமை சிறுமை முதலிய
விகாரங்கள் என்னும் தோஷம் சம்பவிக்கக் கூடுமாகையாலே
அவஸ்தா பேதத்தை ஏற்றாலும் ஆத்மாவுக்குத் தோஷத்தைப் பரிஹரிக்க முடியாது என்றபடி –
————–
ஸூத்ரம் –204-அந்த்யா வஸதி தேச் ச உபய நித்யத் வாத விசேஷ –2-2-34–
அந்த்யா வஸதி தேச் ச –ஜீவனுக்கு மோக்ஷ தசையில் வரக்கூடிய இறுதியான பரிமாணம்
பிற்பாடு ஒரே விதமாக இருப்பதால்
உபய நித்யத் வாத் –ஆத்ம ஸ்வரூபமும் -அந்திம இறுதிப் பரிமாணமும் நித்யமாயும் இருப்பதாலும்
அவிசேஷ -முன் தசையிலும் பின் தசை போலே ஆத்ம ஸ்வரூப பரிமாணங்கள் இருக்க வேண்டியவை யாதலால்
ஆத்மாவுக்குத் தேகம் போன்ற பரிமாணம் என்ற விசேஷம் இல்லை
ஆகையால் ஜைன மதம் பொருந்தாது என்பதாம் –
—————-
ஏழாம் அதிகாரணம் –பசுபத் யதிகரணம்
பசுபதி மதத்தில் ப்ரக்ருதி காரணம் என்று ஒப்புக் கொண்டாலும்
காணாத சாக்ய பாஷண்டை த்ரயீ தர்மோ விலோபித-என்கிறபடியே
வேதத்தை ஏற்காதவர்களுடன் சேர்ந்து இருப்பதால் ஜைனர்களைக் கண்டித்ததும்
பசுபத மதத்தைக் கண்டிக்கிறார் என்று சங்கதி
பசுபதியால் இயற்றப்பட்ட மதம் முமுஷுக்களால் ஆதரிக்கத் தக்கதா அல்லவா என்ற சங்கையில்
ஸர்வஞ்ஞனான ருத்ரனால் இயற்றப்பட்ட தாதலின் ஆதரிக்கத் தக்கதே என்பதே பூர்வ பக்ஷம்
அதனை இங்கு நிரஸனம் செய்கிறார்
ஸூத்ரம் –205–பத்யுர அஸாமஞ் ஜஸ்யாத் –2-2-35–
ந ஏகஸ்மின்ன சம்பவாத் – என்கிற ஸூத்ரத்தில் இருந்து ந -தருவித்துக் கொள்ள வேண்டும்
பத்யு ந -பசுபதியின் மதம் சரி இல்லை
அஸாமஞ் ஜஸ்யாத்–வேதாந்த சித்தனான பரமபுருஷனை கீழானவனாகவும்
ருத்ரனை நிமித்த காரணமாகவும்
கள் குடத்தை ஸ்தாபிப்பது போன்ற வேத விருத்தமான ஆசாரங்களை விளக்குவதாலும்
பசுபதி மதம் அசமஞ்சஸம் ஆதலின் ஆதரிக்கத் தக்கது ஆகாது –
———–
ஸூத்ரம் –206–அதிஷ்டான அனுப பத்தேச் ச –2-2-36-
அனுமான சித்தனான பசுபதி என்னும் ஈஸ்வரன் பிரதானத்தை அதிஷ்டிக்கிறான் என்று சொல்வதால்
சரீரமுள்ள குயவன் போன்றவனுக்கே மண் உருண்டை முதலியவற்றை அதிஷ்டித்தல் காணப்படுவதால்
சரீரம் அற்ற பிரதானத்தை அதிஷ்டித்தல் ஆகாது –
அதற்காக பசுபதிக்கு சரீரத்தை ஒத்துக் கொண்டால்
ஸ அவயவமான சரீரத்துக்கு ஒரு காரணம் அபேக்ஷிக்கப் படுவதால் ஓர் முடிவு இராமல் போகும் —
——————-
ஸூத்ரம் –207–கரண வத் சேத் ந போகாதிப்ய –2-2-37-
கரண வத் சேத் ந -ஷேத்ரஞ்ஞன் – ஜீவன் -சரீரம் இன்றியே தன் கரண களேபரங்களை
அதிஷ்டிப்பது போலவே பசுபதியும் அதிஷ்டிக்கலாம் என்பது தகாது
போகாதிப்ய-அவ்வாறே ஷேத்ரஞ்ஞனைப் போலவே
பசுபதிக்கும் புண்ய பாப ரூப கர்ம பல போகாதிகள் வந்து சேரும் –
——————
ஸூத்ரம் –208–அந்த வத்த்வம் அஸர்வ ஜ்ஞதாவா –2-2-38–
வா என்பது உம் -ச என்ற பொருளில்
பசுபதிக்கு புண்ய பாபங்கள் உண்டு என்றால்
அந்த வத்த்வமும்-விநாசமும் -ஸ்ருஷ்டிக்கும் ஸம்ஹாரத்துக்கும் விஷயமாதலும் –
ஸர்வஞ்ஞத்வம் இன்மையும் ஏற்படுமாகையால் பசுபதி மதமும் அசமஞ்சஸம் –
———————-
எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்
ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப்பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்
———
ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்
இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –
ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-
வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –
அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –
ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-
இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது
அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று
பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை
கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து
ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்
பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்
இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து
————–
பாதேஸ்மின் –காபிலஸ்தை –பஞ்சம ஆம்நாய தர்சீ —
முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்
ஸ்ரீ மத் பாரதத்தில் ஆனுசாசநிக பர்வத்தில் -ஞான காண்டத்தில் பல ஸ்லோகங்களால் முழுவதுமே
பாஞ்ச ராத்ர சாஸ்திரம் ப்ரமாணமே என்று ஸ்தாபித்த
வியாசர் பாஞ்சராத்ரத்தின் ஒரு பகுதி அப்ரமாணம் என்று சொல்கிறார் என்பது பொருந்தாது
தன் சொல்லுடனும் முரணானதாகும்
ஆகையால் பாஞ்ச ராத்ரத்தில் சுருதி விரோதத்தை அங்கீகரித்து விரோதம் இல்லாத அம்சம் மட்டுமே பிரமாணம்
என்று சங்கரர் கூறுவது கண்டிக்கப்பட்டது என்பதே ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஸ்ரீ ஆளவந்தாரும் ஆகம ப்ராமாண்யத்தில் இத்தை நன்கு ஸ்தாபித்தார்
————–—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply