ஸ்ரீ அருளிச் செயல்களைக் கொண்டே ஒருங்க விடுவார் ஸ்ரீ பாஷ்யகாரர் –

ஸ்ரீ லக்ஷ்மிகாந்த பதாரவிந்தயுகலைகாந்தாப்ரமேயாத்புத
சடகோபஸூரிமத தத்ஸுக்த்யப்திமக்நாசயம் |
ஸ்ரீமத்பாஷ்யக்ருதம் யதீந்த்ரமத தத்பூயோ’வதாராயிதம்
ஸ்ரீமத்ரம்யவரோபயந்த்ருயமிநம் ஸம்சிந்தயே ஸந்ததம் ||

ஸ்ரீமத்வரவரயமிந: க்ருபயா பரயா ப்ரபோதிதாநர்த்தாந் |
ஸம்தர்ஷ்யந் லிகாமி த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்||

ப்ராதாந்யேந ப்ரபந்தே த்விஹ யதிபதிநா த்ராவிடாம்நாயவாசாம்
ஸாஹாய்யேநைவ பாஷ்யாத்யநக க்ருதிததிர்நிர்மிதேதி ப்ரஸித்தா|
வார்த்தா யுக்த்யா ப்ரமாணைரபி ச ஸுவிஷதம் ஸம்ப்ரதிஷ்டாப்யதே போ:
மாத்ஸர்யம் தூரதோ ஸ்யந் விபுதஜந இதம் வீக்ஷ்ய மோமோத்தும் தந்ய:||

திவ்யப்ரபந்தேஷு ந வேததௌல்யம் ந சாபி வேதாததிகத்வமஸ்தி|
ராமானுஜார்யோ பி ந தத்ர ராகீத்யேவம் லிகந்த: குத்ருசோ நமந்து|

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற

வான் திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்

“எங்கள் கதியே இராமானுச முனியே ! சங்கை கெடுத்தாண்ட தவராசா !
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத் தா!”

“ மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!”

“உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள்நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறிதருஞ் செந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்அறிதரநின்ற இராமானுசனெனக் காரமுதே”!

வேதங்களில் பௌருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள்போலே, அருளிச்செயல் ஸாரம்.

ருக் ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவையாயிரமாயிற்று.

ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகஸியாத போதிற்கமல மலர்ந்தது வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
தல்பம் கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்||

காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத் தன்னில் கொண்டதாய்,
அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய்,
சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை, வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை
அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக் கொண்டு கடைகிறேன்.

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “

“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….

————————–

ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் தொடக்கம் –
“ப்ரதமே அத்யாயே ப்ரத்யக்ஷாதி ப்ரமாண கோசராத் அசேதநாத் தத் சம்ஸ்ருஷ்டாத் வியுக்தாச்ச சேதநாத்
அர்தாந்தர பூதம் நிரஸ்த நிகில அவித்யாதி அபுருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தைக தானம் அபரிமிதோதார
குண ஸாகரம் நிகில ஜகத் காரணம் சர்வாந்தராத்ம பூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் இத்யுக்தம்”.

இதன் பொருளாவது… வேதாந்த சூத்ரத்தில் முதல் அத்யாயத்தில் பர ப்ரம்ஹம் புலன்களால் அறியப் படுமவற்றிநின்று
வேறு பட்டு, பௌதிகப் பொருள்களுக்குக் கட்டுப் பட்ட ஜீவாத்மாவில் நின்று வேறுபட்டு, இப்பொருள்களினின்றும்
விடுபட்ட ஜீவாத்மாவிலிருந்தும் வேறுபட்டு அஞ்ஞானம் போன்ற அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கி,
எல்லையற்ற ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் நற்குணக் கடலாய் அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் தானே
ஒரே காரணமாய் யாவற்றுக்கும் அந்தர்யாமியாய் வேதாந்தத்தால் அறியப்படுகிறது.

எம்பெருமானே கடல்; நீர்க் கடல் அல்லன், திவ்யகுணக்கடல் என்பது தத்புருஷ சமாசத்தின் பொருள்.
பஹுவ்ரீஹி சமாசத்தில் குணங்களே கடல், அக்கடலொத்த குணங்களை உடையவன் எம்பெருமான்

“அகாத பகவத் பக்தி சிந்து”, நாதமுனிகள் பக்தியாகிற ஆழ் கடலை உடையவர் என்று ஸ்தோத்ரம் செய்து தொடங்குகிறார்.
இங்கு, நாதமுனிகளே பக்திக்கடலா? (தத்புருஷம்) அல்லது பக்தி என்னும் கடலை உடையவரா? (பஹுவ்ரீஹி) என்கிற கேள்வி எழுகிறது.
வியாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை இதை ஆழ்வார்கள் மரபில் நின்று பஹுவ்ரீஹியாகவே நிர்வஹிக்கிறார்.
இதற்கு அவர் நம்மாழ்வாரின் “காதல் கடலின் மிகப் பெரிது” (திருவாய்மொழி 7-3-6) பாசுரத்தையும்
திருமங்கை ஆழ்வாரின் “ஆசை என்னும் கடல்” (பெரிய திருமொழி 4-9-3) பாசுரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.
இவ்விளக்கம் சுவாமி வேதாந்த தேசிகனாலும் ஆதரிக்கப்பட்டது.
அவர் தம் உரையில் முதலில் தத்புருஷ அர்த்தமும் பின்பு பஹுவ்ரீஹி அர்த்தமும் சாதித்தருளுகிறார்.
“பக்திம்வா சிந்துத்வேன ரூபயித்வா பஹுவ்ரீஹி”, பக்தியை ஒரு கடலாக உருவஹித்தல்.

—————————–

அந்தஸ்தத் தர்மோபதேசாத்” (1-1-21) என்பதை விளக்கும்போது
ஸ்வாமி -பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே-
கீதை ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியருளுகிறார்.
பிறகு, ஸ்வாமி “ஸாதவோஹி உபாசகா:, தத் பரித்ராண மேவோத்தேச்யம், ஆநுஷங்கிகஸ்து துஷ் க்ருதம் விநாச,
ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப பத்தே” என்றருளிச் செய்கிறார்.

அவதாரத்தின் ப்ரதான நோக்கம் லக்ஷ்யம் உபாசகனை, பக்தியோடு வணங்குபவனைப் பாதுகாப்பதேயாம்.
தீயோரை அழிப்பது இரண்டாம்பக்ஷமே ஏனெனில்
அவதாரம் செய்யாமல் எம்பெருமான் தன ஸங்கல்ப மாத்ரத்தாலேயே அதைச் செய்து முடிக்கவல்லவன்.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே”

“நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன! கரஸ்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ” (மதுசுதன!
என் சரீரத்தைக் காத்துக்கொள்ள நான் உன்னை அழைக்கவில்லை.
என் துதிக்கையில் உள்ள இந்தத் தாமரை மலர்களை உனக்கு ஸமர்ப்பிக்கவே அழைத்தேன்”)

———–

ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவையுவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

அவரவர் தமதமது அறிவறிவறி வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவ்ர்
என்றும் ஓர் இயல்வொடு நின்றவெம் திடரே,

———————–

“கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன.

பாரளந்த பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்கிறார்.
ஆழ்வார் அரசே அரசே அரசே என மும்முறை விளிக்கிறார்..

பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.
த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.

எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி.
அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “பாரளந்த என்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு” என்று காட்டுகிறார்.

———————————–

“அடியேனுள்ளான் உடனுள்ளான்

“ஞானவான்” என்பான் வருமிடங்களிலெல்லாம் கீதா பாஷ்யத்தில் மேற்கொள்கிறார்.
ஸ்ரீ சங்கரர் பொதுவாகவே தெளிவுற்ற சேதனனைப் பற்றி
“விஷ்ணோ: தத்த்வவித்” (விஷ்ணுவின் உண்மைநிலை அறிந்தவன்) என்கிறார்.
ஸ்வாமியோ “பகவத் சேஷதைக ரஸ ஆத்ம-ஸ்வரூபவித் -ஞாநி “ என்கிறார்.
தெளிந்த அறிவுடையோன், ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டவன் என அறிந்தவனே என்பதாம்.

ஸ்ரீ ஆழ்வார் “நான்” என்னாமல் “அடியேன்” என்றருளிச் செய்ததை அடியொற்றியே
ஸ்ரீ ஸ்வாமியும் ஞானத்தைப் பார்க்கிலும் சேஷத்வமே மேன்மையுடைத்தென்பதைக் காட்டியருளினார்.

————-

“மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!”

”அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்ய ஸௌந்தர்ய மஹோததே!”.
ஸ்ரீ எம்பெருமான் ஓர் ஆழ் பெருங்கடல். அவன் கல்யாண குணங்களாலான கடல்
“ஆச்ரித வாத்ஸல்ய ஜலதே!” என.

வாத்ஸல்யம் அவனது எண்ணற்ற கல்யாண குணங்களில் ஒன்றே. ஆனால் அது தன்னிகர் அற்ற தனிப் பெரும் குணம்.
“நிகரில் புகழாய்!”

——————–

அருளிச்செயல் “செவிக்கினிய செஞ்சொல்” என அறியப்படுகிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி 10-6-11ல் “கேட்பார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஈரச்சொல்லிலேயே சிந்தை நனைந்து கிடந்த ஸ்வாமி ,
“ஸ்ரீ ஸூக்தை: ஸ்தோத்ரை: அபிஸ்தூய” என்கிறார்.
அருளிச்செயல் என்பது ஒரு சொற்றொடர். அது ஸ்தோத்ரம் ,
ஏதோ ஒரு ஸ்தோத்ரம அன்று அது ஸ்ரீ ஸூக்த ஸ்தோத்ரம் …செவிக்கு இனிய செஞ்சொல்.

—————————–

ஸ்ரீ ஆழ்வார், “உடல் மிசை உயிர் எனக கரந்தெங்கும் பரந்துளன்” என்றார். (திருவாய்மொழி 1-1-7).
உபநிஷத வாக்யங்களின் அர்த்த விசேஷத்தை ஸ்ரீ ஸ்வாமி போல் விசிஷ்டாத்வைதிகள்,
ஸ்ரீ ஆழ்வார் அருளிசெயல்களில் கண்டனர் எனில் மிகையே அன்று.

ஸ்ரீ எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:

உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸந்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குணகண
யவனவன்=புருஷோத்தமன்

ஸ்ரீ ஸ்வாமியின் திருவாக்கில் ஸ்ரீ ஆழ்வார் திருமிடறு எதிரொலிப்பதைக் காணக் கூடியவர்களே பாக்யசாலிகள்.

———–

செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

இக்கருத்தை அவர், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில்,
“யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:
சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது.
ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும்.
மாறாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன.
இதையே ஸத்வ ஸீம்னா என்றார். ஆகவே ஸ்ரீ சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

இறுதியாக ஸ்ரீ தேசிகன் தம்மையே “திராவிட வேதாந்த வித்வான்” என்று கூறிக்கொள்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் தூப்பில் தோன்றும் வேதாந்தகுரு” என்பது அவர் திருவாக்கு,

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

இன்பம் என்னும் பனிமூட்டத்திலும், இருள் என்னும் துன்பத்திலும், அருளிச்செயல் என்னும் ஒளி
நம் மனத்தில் ப்ரகாசமாக எப்பொழுதும் மலரட்டும்.

ஸ்ரீ எம்பெருமானாரே! இதை மட்டும் அளித்து அருள்.

—————————–

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading