ஸ்ரீ ஆச்சார்யர்கள் புகழும் ஸ்ரீ நம்மாழ்வார் –

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம்
“மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

————————-

த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்தவிபூஷணம் யத் ஸம்பச்ச ஸாத்விக ஜநஸ்ய யதேவ நித்யம் I
யத்வா சரண்யம் அசரண்ய-ஜனஸ்ய புண்யம் தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரணாங்ரியுக்மம்II

ஸ்ரீ ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே “த்ரைவித்ய-வ்ருத்தஜன-மூர்த்த விபூஷணம்”.
வேதம் வல்லார் சிரசுக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடித் தாமரைகளே ஆபரணம் என்கிறார்.
அவையே, “ஸாத்விக ஜனஸ்ய நித்யம் ஸம்பத்” = ஸுத்த ஸாத்விகர்களின் நிரந்தரச் செல்வம்.
ஸ்ரீ ஆளவந்தார் தாமும் தமது “மாதாபிதா” எனும் ச்லோகத்தில் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தமக்கு எல்லாமும் என்றார்.

ஆழ்வார் திருவடித் தாமரைகளே வேறு புகலற்றவர்க்குப் புகலிடம் = ”அசரண்ய ஜனஸ்ய சரண்யம்

——————————

பக்தி-ப்ரபாவ பவத்-அத்புத-பாவ-பந்த-ஸம் துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக -பூர்ண: I
வேதார்த்தரத்னநிதிர்-அச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர்-அஸீமபூமா ||

இந்த ச்லோகத்தில் ஆழ்வார் ஒரு ஸமுத்ரமாக உருவகிக்கப் படுகிறார்.
ஏனெனில் இதற்கு நான்கு காரணங்கள் உள.

ஸமுத்ரம் பல்வேறு நீர் வரத்தால் நிறைகிறது.
பராங்குச ஸமுத்ரமும் பக்தி-ப்ரபாவ-பவத்-அத்புத-பாவ-பந்த-ஸந்துக்ஷித-ப்ரணய-ஸார-ரஸௌக பூர்ண:
பக்தி எனும் வியத்தகு நவ ரஸ புனித உணர்வாகிய வெள்ளத்தினால் நிறைந்த கடல்.
ஸமுத்ரம் முத்தும் பவழமும் மற்றும் செல்வத்துக்கிருப்பிடம்.
பராங்குச ஸமுத்ரமும் அப்படியே – அதில் வேதார்த்த ரத்ன நிதி மண்டியுள்ளது
ஸமுத்ரம் எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடம். அச்யுத திவ்ய தாமா. அவன் திருப்பாற்கடலில் துயில்பவன்.
இராமனாய் அவன் கடலில் அணை கட்டினான்.
எனினும் அவன் வைகுந்தம் வேங்கடம் பாற்கடல் என்பன விட்டு என் இதயத்தினுள்ளே வந்திருந்தான் அவற்றைவிட இது மேல் என்று.
”கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏ பாவமே,
வெள்ள நெடியான் நிறங்கரியான் உள் புகுந்து நின்றான் அடியேனது உள்ளத்தகம்”
அவை தாழ்ந்தன ஏனெனில் என் மனத்தில் இடம் கொண்டான் என்றார் ஆழ்வார்.
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன் அடியேனுள்ளானே”
இவ்விஷயம் “இவையுமவையும்” திருவாய்மொழியில் நன்கு விளக்கப் பட்டுள்ளது.
ஸமுத்ரம் கரை காண ஒண்ணாதபடி பெரிது எனவே அஸீம பூமா எனப்படுகிறது.
கண்ணிநுண் சிறுத்தாம்பில் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை “அருள் கொண்டாடும் அடியவர்” என்கிறார்.
இவ்வாறு, பராங்குச பயோதியின் பெருமைகளை ஆழ்வான் கொண்டாடுகிறார்.

———-

ஸ்ரீமத்-பராங்குச-முநீந்த்ர-மநோவிலாஸாத் தஜ்ஜாநுராகரஸமஜ்ஜநம் அஞ்ஜஸாப்ய I
அத்யாப்யநாரதததுத்தித-ராகயோகம் ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம: I I

இந்த ச்லோகத்தின் உயிர்நாடியான பகுதி
“ஸ்ரீரங்கராஜசரணாம்புஜம் உந்நயாம:” என்பது ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் குறிக்கிறது.
ஸாதாரண லௌகிகக் கவிகள் திருவடித் தாமரைகள் சிவந்ததன் காரணம்
அவற்றின் மென்மை என்பர், அல்லது மென்மை காரணமாக நடை முதலிய வினைப்பாடுகள் என்பர்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களின் சிரோமணியான ஸ்ரீ ஆழ்வார் அப்படிச் சொல்லவல்லாரல்லரே.
திருவடிகள் சிவந்ததற்கு அவர் ஓர் அழகிய காரணம் காட்டுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் இதயத்தை அடைந்த ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் அங்கே பக்தியில் நனைந்து
அன்பின் நிறமான சிவப்பை எய்தி அவ்வண்ணமே இருக்கின்றன என்பதாம்.

ஸ்ரீ எம்பெருமான் மீது ஆழ்வார் கொண்ட காதலைவிடப் பத்து மடங்கு போலும் ஆழ்வார் மீது ஆழ்வான் கொண்ட காதல்.
அதிமானுஷஸ்தவத்தின் இரண்டாம் பாதி ஸ்ரீ க்ருஷ்ணாவதார அநுபவமாய் இருப்பது முழுமையாக
ஸ்ரீ ஆழ்வாரின் திவ்ய ஸ்ரீ ஸூக்திகளாலேயே அமைந்தது.

ஸ்ரீ ஸுந்தர பாஹு ஸ்தவத்தில் பன்னிரண்டாவது ச்லோகம்:

வகுளதரசரஸ்வதிவிசக்த-ஸ்வரஸபாவ-யுதாஸு கின்னரீஷு I
த்ரவதி த்ருஷதபி ப்ரசக்தகானாஸ்விஹ வனசைலததீஷு ஸுந்தரஸ்ய ||

இங்கு ஸ்ரீ ஆழ்வான் கின்னரப் பெண்கள் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸுந்தரத் தோளுடையானைத் தொழ வந்து
தம் இனிய குரலில் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களை அப்பாசுரங்களின் தகுதிக்கேற்ப மிகச் சிறப்பாகப் பாடவும்,
அப்பாட்டின் இனிமையில் கற்களும் உருகிப் பெருகி ஓட அதுவே நூபுர கங்கை ஆயிற்று என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் “மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணா என்று கூவுமால்” என்பதை நினைவு கூறுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் தெய்வீகக் காதலில் பிறந்த பாட்டுகள் கல்லையும் கரையச் செய்யும்.
எனில் சாதாரண மானிடர்களைப் பற்றி என் சொல்ல? அவை எல்லா மானிடர்களையும் கரையேற்ற வல்லவை.

ஸ்ரீ ஆழ்வான் ஆழ்வார் பாட்டுகளை இம்மண்ணுலகர் மட்டுமன்றி எவ்வுலகத்தாரும்
ஸ்ரீ எம்பெருமானைத் தொழும் போது பாடுவதாகக் கூறுகிறார்.
இவ்வாறு ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களைத் தம் ஒப்பற்ற பாணியில் புகழ்கிறார்.

ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் (59) ஆழ்வான் எம்பெருமான் திருவடிகள் எங்கெல்லாம் சென்று ஆனந்தமாய்
இளைப்பாறுகின்றன என்று பட்டியலிடுகிறார். இப்பட்டியலில் “யஸ்ச மூர்தா சடாரே” என்று சேர்க்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானுக்கு இன்பமாய் இளைப்பாறும் இடமாக ஸ்ரீ ஆழ்வார் திருமுடி காட்டப் படுகிறது.

———-

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் தொடக்க ச்லோகங்களில் ஸ்ரீ ஆழ்வாரை இங்ஙனம் போற்றுகிறார்:

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் I
ஸ ஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் I I

ஸ்ரீ பட்டர் இதில் ஆழ்வாரை ஒரு ருஷி என்கிறார். ஸ்ரீ ஆழ்வார் க்ருஷ்ண பக்தியின் காதலின் வடிவம் என்றும் கூறுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரும் க்ருஷ்ண பக்தியும் வேறல்ல எனும் ஸ்ரீ பட்டர், வேதங்களின் எண்ணற்ற சாகைகளை
ஸ்ரீ ஆழ்வார் தமிழில் காட்டினார் என்றும் அருளிச் செய்துள்ளார்.

பதின்மூன்றாம் ச்லோகத்தில்.
அமதம் மதம் மதமதாமதம் ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம் இதி ரங்கராஜாமுதஜுகுஷத் த்ரயீ

என்பதில் முதல் பகுதி “யஸ்யாமதம் தஸ்ய மதம்” எனும் உபநிஷத் வாக்யத்தை அப்படியே ஒட்டியுள்ளது.

இதன் அடுத்த பகுதியில் இம்மந்த்ரம்,
“ஸ்துதம் பரிநிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்” என்கிறது.

ஸ்ரீ ப்ரஹ்மத்தைப் புகழ்வதும் ஒர் இகழ்ச்சியாகவும், இகழ்ச்சியே புகழ்வதாகவும் ஆகிறது.
இப்பகுதி உபநிஷத்தில் எவ்விடத்திலும் இல்லை ஆனால் ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கில், ஸ்ரீ பெரிய திருவந்தாதியில்,
“புகழ்வோம் பழிப்போம், புகழோம் பழியோம், இகழ்வோம் மதிப்போம், மதியோம் இகழோம்” என வருகிறது.

இதில் ஸ்வாரஸ்யம் என்னெனில் ஸ்ரீ பட்டர் இவ்விரண்டுமே த்ரயீயின் பாகங்கள் என்கிறார்.
அவர் உபநிஷதங்கள் திவ்ய ப்ரபந்தங்கள் இரண்டையுமே வேத பாகங்களாகக் கருதுகிறார்.
இது, பதினாறாவது ஸ்லோகத்தில் “ஸ்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட வேத ஸூக்தை:” என்பதில் தெளிவாகத் தெரிகிறது.

இருபத்தொன்றாம் ச்லோகத்தில், “துக்தாப்திர் ஜனந்யஹமியம்” என்பதில் அவர்,
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், “தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம்” என்பதில்
காவேரி ஆறு கலங்கி ஓடுவதாக அநுபவிப்பதை அடியொற்றுகிறார்.

ஜித பாஹ்ய ஜினாதி மணிப்ரதிமா அபிவைதிகயன்னிவ ரங்கபுரே |
மணிமண்டப வபகணான் விததே பரகாலகவி:ப்ரணமே மஹிதான் ||

என்பதில் ஸ்ரீ பட்டர், ஸ்ரீ ஆழ்வார் நியமித்தருளிய கோபுரங்களும் தூண்களும் மண்டபங்களும்
பரம விலக்ஷணமான ஊர்த்வ புண்ட்ராதிகளோடும் ஸ்ரீ எம்பெருமானின் சங்க சக்ர சின்னங்களோடும் திகழ்வதை அருளிச் செய்கிறார்.

நாற்பத்தோராவது ச்லோகத்தில் சந்திர புஷ்கரிணிக்குக் கிழக்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆழ்வார்கள் துதிக்கப் படுகிறார்கள்:

பூர்வேண தாம் தத் வதுதார நிம்ன ப்ரசன்ன சீதா சய மக்ன நாதா: |
பராங்குசாத்யா: ப்ரதமே புமாம்சோ நிஷேதிவாம்சோ தசாமாம் தயேரன் ||

சந்திர புஷ்கரிணிக் கரையிலுள்ள புன்னை மரத்தைப் பற்றிச் சொல்லும்போது பட்டர் சாதிப்பது:

புன்னாக தல்லஜம் அஜஸ்ர சஹஸ்ர-கீதி சேகோத்த திவ்ய-நிஜ-சௌரபமாமநாம: (49)

இம்மரத்தடியிலேயே ஸ்ரீ பூர்வாசார்யர்கள் பலரும் எப்போதும் ஸ்ரீ திருவாய்மொழி அர்த்த விசேஷங்களையே
பேசிக்குலாவியபடியால் இம்மரமும் ஸ்ரீ திருவாய்மொழி நறுமணம் பெற்றதாயிற்று.

இப்படி மர நிழலை அழகாகச் சொன்ன மாத்திரத்திலேயே ஸ்ரீ பூர்வர்கள் ஸ்ரீ திருவாய்மொழியின்
ஸ்ரீ செம்பொருள்களையே பேசிக் காலம் கழித்தனர் என்றும் காட்டினாராயிற்று.

ஸ்ரீ குலசேகராழ்வார்,
“கடியரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்று
என் வாயாரவென்றுகொலோ வாழ்த்துநாளே” என்கிறார்.
ஸ்ரீ அரங்கனின் திருக்கண்களில்ருந்து பெருகும் அருள் அமுதத் திவலைகளில் நிற்க மாட்டாமல்
ஒரு பிடிப்புக்காக அங்குள்ள திருமணத்தூணைப் பற்றிக்கொள்வேன் என்றார் ஸ்ரீ ஆழ்வார்.

சேஷசாய லோசனாம்ர்த நதிரயாகுலித லோல மானாநாம் |
ஆலம்பமிவாமோத ஸ்தம்பத்வயம் அந்தரங்கமபியாம: || 59

மணத்தூண் என்பதை ஆமோத ஸ்தம்பம் என்றே ஸ்ரீ பட்டர் சாதித்திருப்பதைக் காண்க.

78வது ச்லோகத்தில்

“வட தள தேவகி ஜடர வேத சிர: கமலாஸ்தன சடகோப வாக் வபுஷி ரங்கக்ருஹே சயிதம்“ என்று
ஸ்ரீரங்கநாதன் தனக்குறைவிடமாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கைக் கொண்டுள்ளான் என்றார்.

கிரீடசூட ரத்னராஜிராதி ராஜ்ய ஜல்பிகா |
முகேந்து காந்திருன்முகம் தரங்கிதேவ ரங்கினா: ||

என்று 91 வது ஸ்லோகத்தில் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஆழ்வாரின் “முடிச்சோதியாய்” பாசுரத்தை மிக அழகாக வடமொழியாக்கியுள்ளார்.

116வது ஸ்லோகத்தில் “த்ரயோ தேவாஸ்-துல்யா:” என
“முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்” எனும் ஸ்ரீ ஆழ்வார் திருவாக்கை அடியொற்றினார்.

ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குக்கும் பட்டர் திருவாக்குக்கும் உள்ள ஸாம்யம் காண்பதில்
நாம் நம்மையே ஹேளனப்பொருளே ஆக்கிக் கொள்வோமித்தனை போக்கி வேறில்லை.
ஸ்ரீ பட்டர் திருவாக்கு ஒவ்வொன்றிலும் ஸ்ரீ ஆழ்வார் திருவுள்ளமே உண்டென நம் பூர்வர்கள் வ்யாக்யானங்களால்
கண்டு ரஸித்து உணர்வோர் பாக்யசாலிகள் என்றிவ்வளவே கூறலாகும்.

——————-

ஸ்ரீ யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீ தேசிகன்,
“யஸ்ய ஸாரஸ்வதம் ச்ரோதோ வகுளாமோதவாசிதம் ச்ருதீநாம் விஸ்ரயாமாசம் சடாரிம் தம் உபாஸ்மஹே”

என்று ஸாதிக்கிறார். வேதங்கள் வலுவிழந்து தெம்பிழந்து தவித்த வேளையில்
ஸ்ரீ ஆழ்வாரின் ஸ்ரீ ஸூக்திகளே அவற்றின் தளர்வை நீக்கிப் புத்துயிரளித்தன என்பதாம்.

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ஸ்ரீ தேசிகன் ஆழ்வாரையும் அருளிச்செயலையும் பற்றிப் பலபடச் சொல்லுகிறார்.
22ம் ஸ்லோகத்தில் ஸ்ரீ தேசிகன், உய்ய வழி ஸ்ரீ ஆழ்வாரின் அருளிச்செயலைக் கற்பதும்,
ஸ்ரீ எம்பெருமான் திருவடி நிலைகளின் பெயர் தாங்கிய அந்நிலையைத் தலையில் தரிப்பதுமன்றி வேறில்லை என்கிறார்.

அம்ருதவாதினி ப்ரபந்தத்தில் ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ நம்மாழ்வாரே உயர்ந்த ஆசார்யன் பக்தர்களைக் கரையேற்றவல்லவர் என 28ம் பாட்டில் கூறுகிறார்.

செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

இக்கருத்தை அவர், ஸ்ரீ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில்,
“யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:
சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது.
ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும்.
மாறாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன.
இதையே ஸத்வ ஸீம்னா என்றார்.
ஆகவே ஸ்ரீ சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

—————————

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading