ஸ்ரீ பாஷ்யம்–-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஸ்ம்ருதி அதிகரணம் – -இரண்டு ஸூத்ரங்கள்
இரண்டாவது- யோக ப்ரத் யுக்தி அதிகரணம்-ஒரே ஸூத்ரம்
மூன்றாவது-விலக்ஷணத்வ அதிகரணம்-9-ஸூத்ரங்கள்–
முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –
இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள் -இரண்டும் எட்டும் –
முதல் இரண்டில் ஸ்ம்ருதி விசாரம் -மேல் எட்டில் யுக்தி விசாரம் -ஸ்ம்ருதி உபக்ரமம் என்பதால் ஸ்ம்ருதி பாதமானது
ஜகத் உபாதானத்வமும்-ஜகத் நிமித்தத்வமும் பலித்தன
1-/-2-/-3-/6 -/-7-/-9-அதிகரணங்கள் உபாதாளத்வ ஸ்தாபனம்
8–/-10-நிமித்தத்வ ஸ்தாபனம்
4-சிஷ்ட பரிக்ரஹ /-5-போக்த்ராபாத்த்யதிகரணங்கள் உபய ஸ்தாபனம்
அதவா –
முதல் ஆறில் உபாதானத்வத்தில் விரோதி பரிக்ரஹம் என்றும்
மேல் நான்கில் நிமித்தத்வத்தில் விரோதி பரிஹாரம் என்றும் கொள்ளலாம்
——————-
பூர்வத்விகம்–விஷய த்விகம் –சித்த த்விகம் –/ உத்தர த்விகம் –விஷயி த்விகம் -ஸாத்ய த்விகம்
சமன்வய அத்யாயம் / அவிரோத அத்யாயம் /சாதன அத்யாயம் /பல அத்யாயம் –
————
பிரதம அத்யாயம் ஜகத் ஏக காரணம் பர ப்ரஹ்மம்
ப்ரத்யக்ஷ அசேதனம் -பின்ன -சேதனம் -மோக்ஷ அவஸ்தை வரும் வரை சரீரத்துடன் கூடியே ஜீவாத்மா –
அதுக்கு முன் அவஸ்தை ஸூஷ்மம்–மூன்றாம் அத்யாயம் சொல்லும்
காரண சரீரம் அதிலும் ஸூஷ்மம் உண்டு என்பர்
மோக்ஷம் அடைந்தபின்பும் -சரீர விசிஷ்டம் -கைங்கர்யத்துக்கு
அவிஸ்தார ஸூ கம்பீர ஸ்ரீ ஸூக்திகள்-விசேஷணங்களை மீண்டும் மீண்டும் அருளிச் செய்து
அபரிமித குண சாகரம் -வேதாந்த சித்தம் –
சமன்வயம் பண்ணின பின்பு விரோதங்கள் இல்லை என்று காட்ட வேண்டுமே
ஸ்ம்ருதி பாதம்
தர்க்க பாதம்
வியல் பாதம்
பிராண -பாதம்
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் —
vedic-classic-literature-
வேதம் -சம்ஹிதா பாகம் -ஆரண்யம் பாகம் –
வேதம் ரிஷிகளுக்கு அந்தரங்க கோசாரம் -மந்த்ர த்ரஷ்டா ரிஷி தர்சநாத் –
ஸ்ம்ருதி –ஸ்மர்தியே–நினைத்து -வேத யுக்தமாக -நினைவு படுத்தும் -வேதார்த்தம் விஸ்தாரணம் –
ஆர்ஷ சாஹித்யம் ரிஷிகள் புத்தி பூர்வகமாக எழுதினார்கள்
சுருதி ஸ்ம்ருதி விரோதம் வந்தால் சுருதி தான் பிரதானமாக கொள்ள வேண்டும்
கபில ஸ்ம்ருதி பிரக்ருதியே ஜகத் காரணம்
———–
2-1-1. ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சூத்ரம் : ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத்.– || 2.1.1 ||
கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –
இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது
மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே
யாகம் -அத்தி மரம் நேராக தொட்டுக் கொண்டு உத்காய -சாம கானம் பண்ண வேண்டும் -சுருதி
ஸ்ம்ருதி -அத்தி மரம் துணியால் மூடி -என்கிறது -கீழே ஸ்பர்சம் நேராக தொடச் சொல்லி -விரோதம் வந்தால் சுருதி வாக்யமே பிரதானம்
ஆனால் இங்கு விரோதம் ஸ்பஷ்டமாக இல்லாமல் -வேதாந்த அர்த்தம் அறிந்து கொள்வது துர்லபம்
கபிலர் பரம ரிஷி -ஸ்ம்ருதிக்கு விரோதம் வந்தால் -எல்லா நியமங்களுக்கு அபவாதம் -exception-கொண்டு
ஸ்ம்ருதி தள்ள வேண்டும் என்ற நியமத்துக்கும் சில இடங்களில் தள்ள வேண்டும்
ஸ்ம்ருதிக்கு பிரதானம் இங்கு கொள்ள வேண்டும்
ஆஷேபம் -சமாதானம் இரண்டுமே ஸூத்ரத்தில்
வேதமும் கபிலர் பரம ஆப்தர் -மோக்ஷம் மோக்ஷ சாதனம் -பரம ப்ரதிபாதனம்
மனு -ஸ்ம்ருதி பலவும் சொல்லும் கபில ஸ்ம்ருதி முழுவதுமே பரம ப்ரதிபாதனம் என்பதால் இதுக்கு மிக பிரதான்யம் உண்டே
மூன்று பாகங்கள்
1–ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்க
2–இதி சேத் ந
3–அந்ய ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்காத்
மனு ஸ்ம்ருதிக்கு பெரிய ஸ்தானம் -வேதமே மனு ஸ்ம்ருதி பேஷஜம் என்றும் கபிலரையும் புகழ்ந்து சொல்லும்
வேதத்தால் -அறியலாம் -வேதத்தால் இல்லை பக்தியால் அறியலாம் கீதை -பக்திக்கு பிரதானம் சொல்லும் பிரகரணம்
வேதம் மோக்ஷம் சாதனம் -கங்கா நதி நீராட போகும் பொழுது போகும் சாதனத்தில் ஆழ்ந்து
சாத்யத்தில் நோக்கு இல்லாமல் இருக்கக் கூடாதே
ஸாத்யத்திலே புத்தி செலுத்தி சாதனா புத்தி தவிர வேணுமே -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்தி உண்டே –
சுருதிகள் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ விஷ்ணுவாலேயே உண்டு பண்ணப்பட்டு ஸ்ரீ விஷ்ணுவிலே -அவனும் ஜகத் ரூபம்
ஆபஸ்தம்பர் ஸூத்திரமும் -இத்தை ஸ்பஷ்டமாக சொல்லும்
கபில ஸ்ம்ருதி -கொண்டு இவை அனைத்துக்கும் அநவகாசம் உண்டாகுமே –
முதல் அத்யாயத்தால் நிகில ஜகதேக காரணம் பரம்பிரஹ்ம வேத வேதாந்த வேத்ய சித்தம் என்பது.
அதாவது எல்லா உபநிஷத் வாக்கியங்களும் அந்த பரமாத்மாதான் ஜகத் காரணம் என்று ஐக்கிய கண்டத்தோடு சொல்வதாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டாவது அத்யாயம் அவிரோத அத்யாயம் –
சம்பவனீய ஸமர்த்த பிரகார தூர்தர்சன பிரஸ்தாவம். இதுவே இரண்டு அத்யாயத்துக்கான சங்கதி.
முதல் இரண்டு அத்யாயமும் சித்தமான பரமாத்மாவைப் பற்றிச் சொல்வதால், இதற்கு சித்த துவிகம் என்றும்
அதற்கு மேற்பட்ட செய்ய வேண்டிய சாதனம் – தியானம் , உபாசனம், வேதனம் எப்படிச் செய்ய வேண்டும்
என்று சொல்கிற அத்யாயம் 3 ஆவது அத்யாயம் – ஸாதனாத்யாயம் .
அதனால் அடையக் கூடிய பலத்தைப்பற்றிக் கூறும் அத்யாயம் 4 வது அத்யாயம் – பலாத்யாயம் ஆகிய
இவை இரண்டு அத்தியாயமும் ஸாத்யத்துவிகம் எனப்படும். பலம் எனப்படுவது இங்கு மோக்ஷ ரூபம் பலமாம்.
வேத வேதாந்த சித்தமான பிரஹ்மம் ஜகத் காரணம் என்று அறியுமிடத்து, அந்த பிரஹ்மம் எப்படிப் பட்டது என்றக்கால்,
பிரத்யக்ஷ, அநுமான சப்த பிரமாணங்களால் சுலபமாக தெரிந்து கொள்கிற விஷயங்களான அசேதன வஸ்துக்கள்.
அவை நம் கண் கை காது நாக்கு மூக்கு ஆகிய ஐம்புலன்களால் கண்டு, தொட்டு, கேட்டு, சுவைத்து முகர்ந்து உணரக்கூடியவைகளாய் ,
ஸ்தூல சரீராவிசிஷ்ட ஜீவாத்மாவுக்கும், அதற்கு அந்தரகதமான ஸூக்ஷ்ம காரணா சரீரத்தோடான வியுக்த (முக்த) ஆத்மாவுக்கும்
விலக்ஷணமானது பிரஹ்மம். நிகில நிரஸ்த அபுருஷார்த்த கந்தம். அனந்த ஞானானந்தைக தானத்வம், அபரிமித உதார குண சாகரம்,
நிகில ஜகதேக காரணம். ஸர்வாந்தராத்ம பூதம் . இப்படிப்பட்ட பிரஹ்மம் வேதாந்த வேத்ய சித்தம் என்பதே.
2வது அத்தியாயத்தில் 4 பாதங்கள்.
1. ஸ்ம்ருதி பாதம்.
2. தர்க்க பாதம்.
3, வியத் பாதம்.
4. பிராண பாதம்.
ஸம்ஹிதா, பிராம்மண, அரண்யக, உபநிஷத் ரூபமான வேதம் அபௌருஷேயம்.
ரிஷி திருஷ்டம். மந்திர தர்சனாத் திரஷ்டாக்களால் (Discover) வெளியிடப் பட்டவை.
ஸ்மிருதிகள் ஹார்ஷம். ஸ்மிர்யதே இதி ஸ்மிருதி : (Rememberance).
இதிஹாச, புராணங்களும் – ரிஷி பிரணீதம் – வேத அனுப்பந்திகள்.
ஸ்மிருதி இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரம்மயேத் – என்று வேதத்துக்கு அங்கங்கள் ஸ்மிருதியும், இதிஹாச புராணங்களும்.
வேதத்துக்கு விருத்தமான ஸ்மிருதி பாகங்கள், நமக்கு அனபேக்ஷம்.
அப்படியான விரோதம் இருப்பதாக சங்கை பண்ணி , அது இல்லை என்று சொல்ல வந்த அத்தியாயம் இந்த அவிரோதாத்யாயம். அதாவது
சாங்கிய மதத்தை அனுசரித்த காபில ஸ்மிருதியில் பிரக்ருதிதான் ஜகத் காரணம் என்று பேசப்படுகிறதே.
ஸர்வம் வாக்கியம் சாவதானம், அசதி வாக்யதே –
Each sentence is an assertive sentence. If assertiveness is further added like –
ப்ரகிருதிஹி ஜகத் காரணம் – it becomes doubly assertive. அ .து.
பிரக்ருதிரேவ ஜகத் காரணம் என்பதன் மூலம், பரமாத்மா ஜகத் காரணம் அன்று என்பதாக தேறும்.
கீழே பரமாத்மா ஏவ ஜகத் காரணம். ப்ரகிருதியோ, ஜீவாத்மாவோ இல்லை என்பதாக நிர்ணயித்து இருக்க,
காபில ஸ்ம்ருதி ப்ரக்ருதிதான் ஜகத் காரணம் என்பதால் , ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் விரோதம் வருகிறதே ?
அப்படி விரோதித்தால், அந்த ஸ்மிருதிக்கு பிராமண்யம் கிடையாது . அந்த அம்சத்தைக் கைவிட வேண்டும் என்பதும் –
எங்கனே? என்றால்
ஒளதம்பரீம் ஸ்ப்ருஷ்ட்வா உத்காயேத் – யஜ்ன பிரகிரியையில் சில இடத்தில் ஒளதம்பரீம் – அத்தி மரத்தை (உதும்பரம்)
தொட்டுக் கொண்டு சாம காயனம் பண்ண வேண்டியது – என்று வேதத்தில் சொல்லி இருக்க அதை விளக்க வந்த
ஸ்மிருதி வாக்கியம் ஒளதம்பரீம் ஸர்வா வேஷ்டயித்வா – அதை முழுவதுமாக சுற்றி மூடி இடவேண்டும் – என்கிறதே.
விரோதஸ்ய அனபேக்ஷம் ஸியாத் – ஸ்மிருதி சொன்னதை விட்டு, வேதம் சொன்னதை செய்வது – என்கிற
மீமாம்ஸா நியாயப்படி பார்க்கில், ஸ்ருதி வாக்கியமே பலீயம். இதில் சங்கை ஏதுக்கு ?
இப்படி அல்பமாக தள்ளக்கூடிய விஷயம் அன்று, கபில முனியினுடைய சாங்கிய மதம்.
காரணம். அவர் சாட்சாத் பகவத் அவதார ரூபமான ரிஷியானபடியாலே ,
ஸ்ருதியைக் காட்டிலும் ஸ்மிருதிக்கே பிராதான்யம் சொல்லலாம்படி அன்றோ உள்ளது?
ஸர்வே நியமாஹா ஸ அபவாதா : – Every Rule has an exception and that Exemption proves the Rule – என்பது.
ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : – இது ஆக்ஷேபம். பரமாத்மா ஜகத் காரணம் என்கிற ஸ்ருதி வாக்கியத்துக்கு,
சாங்கிய ஸ்ம்ருதி விரோதிக்கிறதே என்றால்
இதி சேத் ந – நிராகாரணம் – அப்படி சங்கிப்பது தவறு.
அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத் – இது சித்தாந்தம் / சமாதானம் –
கர்ம காண்டம் எதுவும் தள்ளுபடி இல்லாமல், பூர்ணமாக ஒப்புக்கொள்வதோடு, அந்த கபிலமுனிவரை
வேத, இதிஹாச, புராணங்கள் அனைத்தும் கொண்டாடுவதையும் நோக்குங்கால் ,
ஆப்த தமரான அவருடைய வார்த்தைகளை அன்னாரிப்பது எப்படி? மோக்ஷம், மோக்ஷ சாதனம் இரண்டையும் காட்டிக்கொடுக்கிற
கபில ஸ்மிருதியை ஒதுக்கி விட்டால் அல்ப ஸ்ருதர்களாக நாம் ஆகமாட்டோமா?
எனவே, வேத விருத்தமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும் , அபவாத திருஷ்டியில் (exception rule படி)
ஸ்ருதியைக் காட்டிலும் கபில ஸ்ம்ருதிக்கே பிராதான்யம் என்பது பூர்வ பக்ஷம் –
அவாந்தர பிரச்னம் :
கபில ஸ்ம்ருதியை அப்படியே ஏற்றுக் கொண்டால் , நாராயண ஜகத் காரணத்வம் சொல்லி ஸ்ருஷ்டியாதிகளைச் சொல்லுகிற
மனு ஸ்மிருதியைக் காட்டிலும், கபில ஸ்ம்ருதி பிரபலம் என்று எப்படிச் செய்வது என்கிற ஆக்ஷேபம் வருகிறதே
மனு ஸ்மிருதி தாய விபாகம் – சொத்து உரிமை இத்யாதி சாதாரண தர்மங்களை பற்றியும் சொல்லுகிறது.
காபில ஸ்மிருதியோ கேவலம் தத்வ விஷயமான கிரந்தம். எனவே தத்வ விஷயத்தைப் பார்க்கில்,
கபில ஸ்மிருதியே, மனு ஸ்மிருதியைக் காட்டிலும் ஆதரணீயம் என்பதாக பூர்வ பக்ஷிகள் தங்களுக்கு அனுகுணமாக சொல்கிற சமாதானம்.
சித்தாந்தம்.
அந்ய ஸ்மிருதி :
பகவான்தான் ஜகத் காரணம் என்று சொல்கிற ஸ்ருதிகள் –
மநு ஸ்மிருதி – ஆசீதிதம் தமோ பூதம் இத்யாரம்பா ஸ்வயம்பூ பகவான் வியக்த்தோ வியஞ்ச
கீதை – அஹம் கிருத்னஸ்ய ஜகத : பிரபவ பிரளயஸ் ததா ; அஹம் ஸர்வஸ்ய பிரபவ: மத்தஸ் சர்வம் பிரவர்த்ததே
பாரதம் – நாராயணோ ஜகன் மூர்த்தி: அநத்தாத்ம ஸநாதன : தஸ்மாத் அவியக்தம் உத்பன்னம்
த்ரிகுணம் திவஜஸத்தமா அவியக்தம் புருஷே ப்ரஹ்மந் நிஷ்கிரியே பிரலீயதே
விஷ்ணு புராணம் – விஷ்ணோசகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் ஸ்திதி ஸம்யமக கர்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத் யஸ :
ஆபஸ்தம்பர் – பூப் பிராணின ஸர்வ ஏவமுவாஹ யஸ்ய நஹந்மானஸ்ய விகல்மஷஸ்ய . . . .
தஸ்மாத் காயா பிரவந்தி ஸர்வே ஸமூலம் ஸாஸ்வதிகஸ்ய அநித்ய :
இப்படியுள்ள ஸத் கார்ய வாக்கியங்களுக்கு, காபில ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டால், அநவகாசமாகிற மஹா தோஷம் ஏற்பட்டு,
மந்வாதி ஸ்மிருதிகள் அபிராமணமாய் போய்விடும். ஆகவே காபில ஸ்மிருதியையே உபேக்ஷிகக் கடவது .
வேதாந்த வாக்கியங்கள் எப்படிப்பட்டவை என்றால், பிரத்யக்ஷ , அநுமான , சாப்த போதங்களால் அறியமுடியாத
விஷயத்தைப் பற்றி தெரிவிப்பதாக அமைந்தவை யாகும்.
அல்ப ஸ்ருதர்களான நமக்கு அத்தோடு, வேதாந்த வாக்கியங்களை விளக்கக் கூடிய உப ப்ரஹ்மணங்களும் அவசியமாகின்றன.
உப ப்ரஹ்மணங்களாவன ரிஷிகளுக்கு சமாதி நிலையில் உணர்ந்து வெளியிடப் பட்டவையேயாகும்.
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –
சமாதி (அ ) துரீய தசை தான் – ந ஜாக்ருத, நைவ ஸுஷுப்தி மூர்ச்சா, ந ஜீவிதம் நோ மரணம் விசித்திரம் – என்பதாக
விசித்திரமான தசை -சமாதி—ஜாக்ருத ஸ்வப்ன ஸூஷூப்தி -மூர்ச்சா -இந்திரியங்கள் மனஸ் எல்லாம் அடங்கி-
சங்கராச்சாரியார் சொன்ன படிக்கு அது ஒரு எண்ண அலைகள் (யோஜனை) அற்ற விழித்த நிலை.
ஞானம் , ஞேயம் , ஞாதா என்கிற திரிபுடி லய -beyond imagination- பகுத்தறிய முடியாத அஹமர்த்த லய ஸ்திதியே – சமாதி ஸ்திதி.
யத் மனசா தியாயதி தத் வாசா வததி – என்பதற்கு இணங்க, பேச்சும், எழுத்தும், செயலும் முதலில் புத்தி பிரேரிதமாகக் கடவது.
அப்படியல்லாமல் வேதம் அபௌருஷேயம் என்றால், திரஷ்டாவான ரிஷியின் புத்திக்கதீதமாக கேட்டு உணரப்பட்டு, வெளியிடப்பட்டதாகும் –
Revealed to and by them. பகவானுடைய அருளாலே ரிஷிகளின் புத்திக்கு கோசரமானதே ஸ்ருதி எனப்படும்.
ஸ்ருதி – ஸ்ருத்யுக்தார்த்த : ஸ்மர்யதே இதி ஸ்மிருதி.
சுருதி எனப்பட்ட வேதத்தால் என்ன சொல்லப் பட்டதோ அதை ஸ்மர்யதே இதி ஸ்மிருதி :
வேதத்தில் சொல்லப் பட்டவைகளை நினைவில் கொண்டு, அதை விளக்க வந்ததே ஸ்மிருதிகள் எனப்படும்.
நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகள் பராசர மனு இத்யாதி –ராஜ தர்மம் ஆஸ்ரம தர்மம் பல விஷயங்கள் உண்டே –
இதிஹாசம் – இதீக ஹாஸா – இப்படி நடந்தது என்று பேசுமவை.
வேத பிராச்சேதஸாத் ஆஸீத் சாஷாத் ராமாயணமாத்மநா –என்றும்
பாராத பஞ்சமோ வேத: என்றும் -கிருஷ்ணஸ்ய கதா மஹா பாரதம்-
பிரமேயாவதாரம்போலே ஆயித்து பிராமண அவதாரமும்.
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசராத்மஜம் என்று பகவான் தன் பராவர ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு
மனுஷ்யனாகவே அவதரித்தபடி.
கிருஷ்ணாவதாரமோ என்னில் மனுஷ்யனைப் போலே அவதரித்தபடி.
வேதங்களில் த்ரிவிக்ரம அவதாரமே பிரதானம் -வாமன அவதாரம் ஸ்பஷ்டமாக இல்லை –
புராணங்கள் – புராபி நவம் .
உப ஸர்கஸ்ச பிரதி ஸர்கஸ்ச வம்ஸோ மன்வந்திராணி ச வம்சாநுசரிதம் பூராநோ பஞ்ச லக்ஷணம்.
இவை அனைத்தும் ஹார்ஷ சாகித்யம். ரிஷிகளாலே பண்ணப்பட்டவை.
ஸ்ரீ விஷ்ணு புராணம் -organic-paint-போன்ற பலவும் உண்டே-
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப ப்ரஹ்மயேத் என்று மகரிஷிகளின் புத்தி கொண்டு ரசனை செய்யப்படவை.
வேதம் அபௌருஷேயம். புத்தி ரசனைக்கு உட்படாதவை.
வால்மீகி பிரணீதம் ராமாயணம் என்று சொல்வதுண்டு.
ஆனால் காயத்ரி மந்திர திரஷ்டா விச்வாமித்திர ரிஷி என்று வழக்கு உண்டே தவிர
காயத்ரி மந்திர கர்தா விஸ்வாமித்ர : என்று சொல்வதில்லை.
ஸ்ருதி பிரதிபன்னார்த்த விசதீகரணம் உபப்ரஹ்மணம் என்று வேதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்களை
விளக்கவோ, விவரிக்கவோ வந்தவை ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்கள் .
காபில ஸ்மிருதி வேத விருத்தமான அர்த்தங்களை சொல்வதால், அதைக் கொண்டு வேதார்த்த விசதீகரணம் செய்யப் போகாது.
உபேக்ஷணீயம்–உதாசீனம் -பிரமாணமாகக் கொள்ளக் கூடாது –
கபிலரும் ரிஷி தானே என்றால். அவர் ஆப்தர் – ஆப்த தரர் எனலாம் அவ்வளவே. அவருடை வார்த்தை
சம்பூர்ணமாக அனுப்பாதேயம் என்று சொல்லப் போகாது.
அனுக்தம் , அவிருத்தம் அந்யதோ கிராஹ்யம் என்கிற விதிக்குச் சேர எவை எவை நம்முடைய சித்தாந்தங்களுக்கு
ஒத்துப் போகுமே அந்த அளவே ஏற்புடைத்து. ஆனால் மந்வாதி ஸ்மிருதிகள் ஆப்த தமம் என்பதால் அவை பூர்ணமாகவே உபாதேயம்.
ஆப்த : என்றால் எதார்த்த வாதி மட்டுமில்லை. யதா திருஷ்டார்த்த வாதியும் கூட.
சத்தியம் பேசுவது மட்டுமல்ல. பிரியமானதை மட்டும் சொல்லாது, அப்பிரியமானாலும் உள்ளதை உள்ளபடி சொல்லுகை.
யதார்த்த வக்தா. யதாதிருஷ்டார்த்த வக்தா. யதார்த்த தர்சித்தவே சதி யதார்த்தவக்துத்வம் ஆப்த தமத்வம்.
தர்மஜ்ஞ சமயம் பிரமாணம் வேதாஸ் ச என்பதில், முதலில் தர்மஜ்ஞ சமயம் ஏவ பிரமாணம்.
தர்மஜ்ஞ : பராங்குச பரகால யதி வராப்ய : – பகவத் ஸாஷாத்காரம் பண்ணினவர்கள் வாழ்வும் வாக்கும் நமக்கு முதலில் பிரமாணம்.
தத்வ தர்சிகளாய், அவர்கள் தரிசித்த தத்துவத்தை யதா பிராகாரம் அப்படியே பேசுமவர்கள் ஆப்த தமர்கள்.
அது நம் ஆழ்வார் ஆச்சாரியர்கள் அல்லால் வேறு எவர்?
——————–
ஸூத்ரம் : இதரேஷாம் ச அநுபலப்தே : 2-1-2
மந்வாதி ரிஷிகள் – யத் வை மநு அவததி தத் பேஷஜம் என்கிற கணக்கிலே –
மனு, பராசர, வியாச மகரிஷிகள், தங்கள் யோக பலத்தால், பராவர தத்வங்களை உள்ளது உள்ளபடியே அறிந்து பேசிய
தங்களுடைய சாஸ்திரங்களில், -ஸூ யோக மகிமையால் ஜீவ பர யாதாம்யா ஞானம் அடைந்தவர்கள் -இதரேஷாம்-
ச காரம் து சப்தார்த்தம் -நிகில ஜகத் பேஷஜம் -இவை நமக்கு -மனு நாராயணன் அவதாரம்- –
சாங்கிய பக்ஷமான பிரகிருதி ஜகத் காரணம் என்பதைத் தள்ளி,
பிரஹ்மம் ஜகத் காரணம் என்று காட்டியுள்ள படியால், பிரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்கிற அவர்கள் பக்ஷத்தை
மட்டுமே கைக் கொள்வது அவசியமாகிறது.
மனுஷ்யாணாம் சகஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யாததாமபி சித்தானாம் கசச்சின் மாம் வேத்தி தத்வத: (கீதை)
ஆயிரக் கணக்கான மநுஷ்யர்களில் யாரோ ஒருவர் என்னை அடைய முயல்கையில், அவர்களில்
யாரோ ஒருவர்தான் வெற்றி காண்கிறார்கள்.-மநுஷ்யர்கள் தான் மூன்று வகை.
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் காட்டாதவர்கள் பலர். அவர்களில்
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் உள்ள சிலர். அப்படி விரும்பி
சித்தி பெற்ற சிலருள், என்னை உள்ளபடி அறிந்தவர்கள் ஒரொருவரே. – என்பதாக.
இதிலிருந்து சித்தி பெற்றவர்களுள்ளும் தத்வதஹா அறிந்தவர்கள் என்றும் ,
மேம் போக்காக அறிந்தவர்கள் என்றும் தாரதம்யம் உண்டு என்று
ஸ்ரீ ராமானுஜர் மட்டும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் இந்த வாசியைக் காட்டி அருளுகிறார் – –
முதல் ஆழ்வார்களுக்கு மூவருக்கு மட்டுமே ஒரே மாதிரி ஒரே சமயத்தில் யோக அனுபவம் -சாஷாத்காரம் –
அவர்கள் பாசுரங்கள் கொண்டு இத்தை அறிகிறோம் –
இது போலே -கபிலரும் ஞானி தான். இருந்தாலும், மநு , பராசர, வியாசாதிகள் உபாதேய தமர்கள் என்பது கொண்டு,
சாங்கிய சாஸ்திரம் உபேக்ஷணீயம்.
ஒருவேளை கபில முனியை விரோதிக்கக் கூடாது என்பதாக நினைத்து , மந்வாதி வாக்கியங்களை உபேக்ஷித்தால்,
விருஸ்சிக பயா பலாயமானஸ்ய வியாக்ர முகே பதநம் – தேள் கடிக்கு பயந்து புலியின் வாயில் விழுந்தபடி –
சிறிய தோஷத்தை பரிகரிக்கப் போய் பெரியதான தோஷத்தை சூழ்த்து கொள்வதிலே முடியும்.
சாங்கிய பக்ஷத்தை இத்தனை கடாகண்டிதமாக மறுப்பதற்கு காரணம் –
கிலேச அதிக தரம் தேஷாம் அவியக்தா ஸக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத் பிரவாப்யதே (கீதை 12-5)
அவ்யக்த மார்க்கமான ஞான மார்கம் துஷ்கரமானது. வேதாந்த யோக மார்கமாகிற பக்தி மார்கமே ஸுகரமானது.
இதை வலியுறுத்துகின்ற இந்த கீதா ஸ்லோகத்தின் அடிப்படையில் , பிரகிருதியிலும் பகவத் தத்துவத்தை பார்க்கிற சுத்த ஜீவாத்மாவுக்கு ,
பிரக்ருதி – புருஷ த்விதத்வ சாங்கியம் ஏற்புடைத்தாயினும், அல்ப ஸ்ருதர்களான நம் போல்வாருக்கு அது க்லேசாவகம்.
இதையே ஸ்வாமி தேசிகனும்
பக்திரேவ முக்தேர் உபாய : ஸ்ருதி ஸத விஹித: ஸா கதி: ப்ரீதிரூபா – அதனால் நமக்கெல்லாம் பகவத் பக்தி மார்க்கமே உபாயம்.
இதுவே பிரஹ்ம சூத்திரம் முழுவதுக்குமான ஸ்வாபதேசார்த்தமும் கூட.
ஞானம் முற்றி அனைத்திலும் ப்ரஹ்மம் பார்க்கும் த்ருஷ்டியில் -யோக மார்க்கம் ஆகிய பக்தி மார்க்கம் தள்ள வேண்டியது இல்லை என்றாலும்
மிகவும் துர்லபம் -ஆகவே உதாசீனமாக கொண்டு -நம் போல்வார்க்கு பக்தி ஒன்றே -என்று காட்டும் இந்த ஸ்லோகம்
ஸ்ரீ உ .வே .கொத்த மங்கலம் வரதாச்சார்யர் ஸ்வாமி ஆச்சார்யர் கிருபையால் இந்த விளக்கங்கள் –
——————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply