ஸ்ரீ பாஷ்யம்–இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஸ்ம்ருதி அதிகரணம் – -இரண்டு ஸூத்ரங்கள்
இரண்டாவது- யோக ப்ரத் யுக்தி அதிகரணம்-ஒரே ஸூத்ரம்
மூன்றாவது-விலக்ஷணத்வ அதிகரணம்-9-ஸூத்ரங்கள்–
முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –
இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள் -இரண்டும் எட்டும் –
முதல் இரண்டில் ஸ்ம்ருதி விசாரம் -மேல் எட்டில் யுக்தி விசாரம் -ஸ்ம்ருதி உபக்ரமம் என்பதால் ஸ்ம்ருதி பாதமானது
ஜகத் உபாதானத்வமும்-ஜகத் நிமித்தத்வமும் பலித்தன
1-/-2-/-3-/6 -/-7-/-9-அதிகரணங்கள் உபாதாளத்வ ஸ்தாபனம்
8–/-10-நிமித்தத்வ ஸ்தாபனம்
4-சிஷ்ட பரிக்ரஹ /-5-போக்த்ராபாத்த்யதிகரணங்கள் உபய ஸ்தாபனம்
அதவா –
முதல் ஆறில் உபாதானத்வத்தில் விரோதி பரிக்ரஹம் என்றும்
மேல் நான்கில் நிமித்தத்வத்தில் விரோதி பரிஹாரம் என்றும் கொள்ளலாம்
——————-
பூர்வத்விகம்–விஷய த்விகம் –சித்த த்விகம் –/ உத்தர த்விகம் –விஷயி த்விகம் -ஸாத்ய த்விகம்
சமன்வய அத்யாயம் / அவிரோத அத்யாயம் /சாதன அத்யாயம் /பல அத்யாயம் –
————
பிரதம அத்யாயம் ஜகத் ஏக காரணம் பர ப்ரஹ்மம்
ப்ரத்யக்ஷ அசேதனம் -பின்ன -சேதனம் -மோக்ஷ அவஸ்தை வரும் வரை சரீரத்துடன் கூடியே ஜீவாத்மா –
அதுக்கு முன் அவஸ்தை ஸூஷ்மம்–மூன்றாம் அத்யாயம் சொல்லும்
காரண சரீரம் அதிலும் ஸூஷ்மம் உண்டு என்பர்
மோக்ஷம் அடைந்தபின்பும் -சரீர விசிஷ்டம் -கைங்கர்யத்துக்கு
அவிஸ்தார ஸூ கம்பீர ஸ்ரீ ஸூக்திகள்-விசேஷணங்களை மீண்டும் மீண்டும் அருளிச் செய்து
அபரிமித குண சாகரம் -வேதாந்த சித்தம் –
சமன்வயம் பண்ணின பின்பு விரோதங்கள் இல்லை என்று காட்ட வேண்டுமே
ஸ்ம்ருதி பாதம்
தர்க்க பாதம்
வியல் பாதம்
பிராண -பாதம்
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் —
vedic-classic-literature-
வேதம் -சம்ஹிதா பாகம் -ஆரண்யம் பாகம் –
வேதம் ரிஷிகளுக்கு அந்தரங்க கோசாரம் -மந்த்ர த்ரஷ்டா ரிஷி தர்சநாத் –
ஸ்ம்ருதி –ஸ்மர்தியே–நினைத்து -வேத யுக்தமாக -நினைவு படுத்தும் -வேதார்த்தம் விஸ்தாரணம் –
ஆர்ஷ சாஹித்யம் ரிஷிகள் புத்தி பூர்வகமாக எழுதினார்கள்
சுருதி ஸ்ம்ருதி விரோதம் வந்தால் சுருதி தான் பிரதானமாக கொள்ள வேண்டும்
கபில ஸ்ம்ருதி பிரக்ருதியே ஜகத் காரணம்
———–
யோக ப்ரத் யுக்தி அதிகரணம் : 2-1-2
சூத்ரம் : ஏதேந யோக: ப்ரத் யுக்த : : 2-1-3 :
சங்கதி :
ஏதேந –
கீழ் அதிகரணத்தில் சாங்கிய ஸ்மிருதி நிராகரணம் பண்ணப்பட்ட அளவிலே, யோக சாஸ்திரமும் நிராகரிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும் .
அதனால், பிரஹ்மம் ஜகத் காரணம் என்கிற பக்ஷம் ஒன்றே ஏற்கத் தக்கது. இதற்கு என தனியாக ஒரு அதிகரணம் ஆக எதற்கு? என்றால்
பிரகிருதி அதிகரணத்தில் சொல்லப்பட்டது போல் யோக சாஸ்திரம், சாங்கிய சாஸ்திரத்தினின்றும் வேறு பட்டது.
பரமாத்மாவை அந்தராத்மாவாக கொள்ளாத -பிரக்ருதியே உபாதான காரணம் -என்பதில் யோக சாங்க்ய மாதங்களில் ஒற்றுமை இருவருக்கும் –
நிமித்த காரணம் மாத்திரமே ப்ரஹ்மம் என்பர்-
யோக சாஸ்திரத்தில் ஈஸ்வர தத்வத்தை ஒப்புக் கொள்ளவதோடு இரண்டிற்கும் இன்னும் சில அடிப்படை வித்யாசங்கள் உண்டு.
அதனால், யோக சாத்திரத்தை மறுக்க வேண்டி தனி அதிகரணம் தேவைப்பட்டது.
கிலேச, கர்ம விபாக ஆஷ: அபரா திருஷ்ட : புருஷ விசேஷ: ஈஸ்வர:
அவித்யா அபிநிவேச ராக துவேஷங்கள் – கிலேசம்.
சமாதி ஸ்திதி ஈஸ்வர பிரமிதாமா என்பது நம்முடைய சம்பிரதாயத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
தாது -யுஜிர் யோகே to unite என்று பகவானோடே ஜீவாத்மா ஸம்ஸ்லேஷிப்பதைச் சொல்கிறது.
அதனால் யோக என்பது சமாதி ஸ்திதியை உணர்த்துவது.
கீதா அத்யாயம் யோக சப்தம் -பர்யாயம் -பல அர்த்தங்கள் உண்டே –
யோக ப்ரத் யுக்த :
என்பது யோக ஸ்மிருதிகளைக் குறிக்கும். பதஞ்சலி மஹரிஷியுடைய பாதஞ்சலம் என்கிற யோக சூத்ர காரிகையை அல்ல.
காரணம் ஈஸ்வர தத்வத்தை ஏற்றுக் கொண்டாலும் அவனுடைய பூர்ண ஸ்வரூபத்தை ஒத்துக் கொள்ளாது
உபாதான காரணத்தை மறுக்கிறபடியால்-ஹேய குணங்கள் இல்லை என்பதோடு நிறுத்தி,
கல்யாண குணங்கள் உண்டு என்று சொல்லாமல் விட்டதும் அந்த யோக காரிகைக்கு தோஷம்.
நம்முடைய சம்பிரதாயத்தில், ஹேய பிரத்யநீக கல்யாணைக தானத்வமாகிற உபய லிங்க விசிஷ்டனாகவே –
பகவத் ஸ்வரூபமானது நிரூபிக்கப் படுகிறது. -உபய லிங்கத்வம் தானே பூர்ண நிரூபகம் ப்ரஹ்மத்துக்கு –
அந்த அம்சத்தில், வேதம் சொன்னவற்றோடு சம்பூர்ணமாக ஒத்துப் போகாத காரணத்தால்,
யோக சூத்திரங்களும் அநுத்தேஸ்யம் என்றபடி.
அஷ்டாங்க யோகஹத்தில் 7 அங்கங்கள், 8 வதான சமாதி என்பது அங்கியாகும். ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு இதில் பூர்ண சம்மதம் உண்டு.
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் . . .ஜ்ஞான யோகேந திருஷ்டிவா என்பதாக ஜ்ஞான யோகத்தால் சாஷ்த்கரிக்கக் கூடியது ஸ்ரீ வைகுண்டம் என்கிறார்.
நாதாயா முனே -ச விஜயதே யமுன முனி-தஸ்மை ராமாநுஜார்யாய பரம யோகிநே –என்று ஒரு யோகியாகவே செல்லப்படுகிறார்.
ஸ்ரீ நாதமுநி -ஸ்ரீ யாமுனமுநி-ஸ்ரீ ராமாநுச முநி -(ஸ்ரீ வரவர முநி)-என்கிற முநித்ராய சம்பிரதாயம் நம்முடையது.
அடுத்து, புராணங்களை பார்க்கில், ஹிரண்ய கர்பன் என்கிற பிரம்மா தமோ குணம் பிராசுர்யனாய் இருந்த போது உபகரித்த,
( எழுதியவர் வியாசராக இருந்தாலும் -) ராஜஸ, தாமச புராணங்கள் நமக்கு அனுத்தேஸ்யம்.
முக் குணங்களில், தமோ குணத்தால் தூக்கம் போன்றவைகள் நமக்கு ஏற்படுகின்றன
கோப தாபங்கள், ஆசா பாசங்கள் ரஜோ குணத்தால் சம்பவிக்கின்றன.
பொதுவாக, ஸத்வமும் தமஸும் தனியே காரியம் செய்யாது.
ரஜஸோடு தமஸ் சேர்ந்தால் கெட்ட காரியங்களும், ரஜஸோடு சத்வம் சேர்ந்தால் நல்ல காரியங்களும் மேற்கொள்வோம் என்பது நியதி.
அப்படி தேவதாந்திர பார்மயத்தை சொல்கிற ராஜஸ, தாமச புராணங்கள் அப் பிரமாணம்.
சாங்கியம் – யோக : பஞ்சராத்ரம் – வேதா: பாசுபதம் — ததா ஆத்ம பிரமாணம் — ஏதாநி ந ஹந்தவ்யாநி ஹேதுபிஹி.
பாசுபத ஆகமும் பிரமாணம் என்கிறார் ஸ்ரீ பாஷ்யகாரர்-
இவைகளில் சொல்லப்பட்ட தர்க்கங்கள், அறிவியல் விதிகள், கோட்பாடுகளை (Theories) யுக்திகளை காரணம் காட்டி (Logic)
ஸம்பூர்ணமாக தள்ளிவிடக் கூடாது. கிராஹ்யமான அம்சத்தை எடுத்துக் கொண்டு , விருத்தமான அம்சங்களை மட்டும் தள்ள வேண்டியது .
அந்த வகையில், யோக சாஸ்திரத்தைக் கொண்டு வேதார்த்த நிர்ணயம் , கீழ் சொன்ன கரணங்களுக்காக, செய்யப் போகாது.
அது வேத உப ப்ரஹ்மண அநர்ஹம்
—————-———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply