முதல் ஆழ்வார்கள் மூவரும் ஆகிறார்
சால ஜ்ஞானாதி காரராய் இருப்பாருமாய்
முக்தர் சம்சாரத்திலே வர்த்தித்தால் போலே இருப்பதொன்றாய்
இவர்கள் கர்ம பூமியிலே வர்த்திக்கும் வர்த்தனம் ஆகிறது –
பகவத் விஷயத்தில் முற்பாடருமாய்த்து இருப்பது-
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை–பத்மஜனான பூவனைப்
போலே யாயிற்று -தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –
இன் கவி பாடும் பரம கவிகள் -திருவாய் மொழி -7-9-6–என்றும்
செந்தமிழ் பாடுவார் -பெரிய திருமொழி -2-8-2- என்றும்-
நாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும் கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய்
திரு வுலகு அளந்து அருளின இடத்திலும்
திருமலையிலும் ஊன்றி இருப்பர்கள்
தனித் தனியே இவர்கள் பின்னே திரியக் கடவ அவன்
இவர்கள் மூவரும் ஓர் இடத்தே யானால் விடான் இறே
இப்படிப் புகுந்து நெருக்குகையாலே
இது விளக்கு ஏற்றிப் பார்க்க வேண்டி இருந்ததீ -என்ன
அவர்களிலே ஒருவர் சவிபூதிகனான சர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற
மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை விளக்காக ஏற்ற
அநந்தரம்
மற்றையவர் சாஷாத் காரத்தாலே அனுபவித்தாராய் இருக்கிறது
இனி இவை தான் மூன்றும் ஒருவர்க்கே பிறந்த தோர் அவஸ்தை போலே இருக்கிறது –
அதாகிறது
முந்துற ஜ்ஞானமாய் -அநந்தரம் -பக்தியாய் -பின்னை -தர்சனமாய் இறே இருப்பது-
முதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று -( சேமுஷீ பக்தி ரூபா )-
இருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று
மூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று-
பொய்கையார் -லீலா விபூதியில் கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பர பக்தி ரூப
ஞானத்தால் தரிசித்து அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார் –
ஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து இருக்க விருத்தமாக
இங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை –
அங்கு ஞானம் என்கிறது –பர பக்தி ரூபா பன்ன ஞானத்தை –
பக்தி என்கிறது -பர ஞான தசரா பன்னமான ப்ரேமத்தை-
சாஷாத்காரம் என்கிறது -பர ஞான விபாக ருபை யான பரம பக்தியை –
கர்ம அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து – அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி -அநந்தரம் –
த்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்-அநந்தரம் விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-
பின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்–இம்மூவருக்கும் அர்த்தம் ஒன்றே
இப்படியே தாங்கள் மூவரும் அனுபவித்த அளவிலே பர்யவசித்து விடுகை அன்றிக்கே
நாட்டுக்கு அடங்க அவனை அனுபவித்து வாழலாம் படி தாங்கள் அனுபவித்த பிரகாரத்தை மூன்று பிரபந்தமாக்கித்
தலைக் கட்டித் தந்தார்களாய் இருக்கிறது –
————-
வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-
பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி
இவைதன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி
அவ வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில் இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும்
ஜலத்தின் உடைய த்ரவத்தையும் தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து
இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து –
நித்ய விபூதி அடங்க உப லஷணமாக திரு வாழி ஆழ்வானைச் சொல்லி
ஆக
இத்தனையாலும் உபய விபூதி யுக்தன் என்னும் இடத்தைச் சொல்லி
இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்-தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி
அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி
அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கை=
அடிக்கே -என்றது உடம்பு உடையவனுக்கு இறே கால் உள்ளது -என்றபடி
இவர் தம்க்கு எல்லாம் பிரகாசித்த இடத்தில் முற்படத் தோற்றிற்று தம்முடைய சேஷத்வம் ஆகையாலே
அதுக்கு அநு கூலமாக திருவடிகளைப் பற்றி நிற்கிறார் –
பிராட்டி அல்லரே
முறை தப்பாதபடி வேணுமே
இத்தால்
கீழ்ச் சொன்ன ஜகத்தும் -ஆதித்யனும் -திரு மேனியும் திரு ஆழியும் போலே
அப்ருக்தக் சித்த விசேஷணம் இருக்கிறது ஆயிற்று –
சொன் மாலை
அவனுடைய தார் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் ஆனாப் போலே
இப்பிரபந்தமும் பகவத் பரத்வத்தைக் காட்ட வற்றாய் இருக்கை –
சொன்மாலை -யென்று
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசின படி –
செய்ய சுடர் ஆழியான் -செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –
இத்தால் -நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது –
இதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது
அடிக்கே -என்று விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது –
அடி- என்றதால் தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது-
————-
என் சொன்னோம் ஆனோம் –
ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய்
இருந்ததோ -அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார் –
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2–
கால த்ரயத்தில் உள்ளதும் சம காலத்தில் போலே தோற்றும்படியாய்க் காணும் இவர்க்குக் காட்டிக் கொடுத்தது –
வாமனன் மண் இது -திருவாய் மொழி-4-4-1–என்னும்படி தோற்றுகிறது இல்லையோ –
தன்னது அல்லாததை இப்படி கிருஷி பண்ணப் போமோ
கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் மொழி-4-6-10-
—————-
இவ்வோவபதாநங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு
அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதோ -என்கிறார்-
அப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —
எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் அதிலே கிடந்தது அலைகிறார்
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–
மகாபலியாலே பூமியை அளந்து
உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீ கரித்த படி அறிகிறிலேன்-
பேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –
————–
அபரிச்சின்ன வஸ்துவை பரிச்சேதிக்க ஒண்ணாதே இறே-
பரிச்சேதிக்கப் போம் என்று ஒருப்பட்டவையும் -மஹாந்தம் -என்று கொண்டு மீண்ட வித்தனை இறே
கண்ட இடம் காணும் இத்தனை யன்றியே
எல்லை கண்டாய் மீள ஒண்ணாது இறே
கடல் அருகே இருந்தான் என்னாக் கடலை முட்டக் கண்டான் ஆகானே –
நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் —4-
நெறி வாசல் தானேயாய் நின்றானை –
நெறி என்று கொண்டு உபாயமாய்
வாசல் என்று கொண்டு பிராப்ய வஸ்து தன்னைச் சொல்லிற்றாய்
ஆக இவ்விரண்டாலும் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் நின்றவனை –
இப்போது இது சொல்லுகிறது என் என்னில் -பிராப்தி அவனை ஒழிய உண்டாகில் அன்றோ
அறிவு அவனை ஒழிய உண்டாவது
நெறியான உபாயம் அவன் என்றது ஆகவுமாம்-அதாகிறது -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் -என்றபடி –
அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு-ஷேபோக்தி இருக்கிறபடி-
எம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –
தபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்-
————–
இன்னான் ஈஸ்வரன் -இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள்
கொண்டே அறியலாம் -என்கிறார் –
ருத்ரனுடைய அநீஸ்வரத்வமும்-எம்பெருமானுடைய ஈஸ்வரத்வமும்
தத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —5-
மானாவிக்கு நிர்வாஹகர் ஆவாரைப் போலே -மகா நவமி விழாவுக்கு தோரண வாயில்களை
அரசன் ஆணையால் கட்டுவாரைப் போலே
ஆன் விடை புள்ளூர்தி-
வாகனங்களையும் ஆராய்ந்தால் அப்படியேயாய் இருக்கும் –
உரை நூல் மறை-
ஒருவனுக்குத் தான் தமஸ் தலை எடுத்த போது சொன்ன ஆகமம் பிரமாணமாய் இருக்கும் –
மற்றையவனுக்கு அபௌருஷெய நிபந்தனம் ஆகையால் குண வஸ்யம் அல்லாத
நன்மையை யுடை த்தான வேதம் பிரமாணமாய் இருக்கும்
உருவம் எரி கார் என்றாக்கி மேனி ஓன்று என்கிறது
ஓன்று சரீரம்
ஒருவன் சரீரி -என்கிறது
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜ நாநாம் சர்வாத்மா -என்றால்
சர்வஞ் சாஸ்ய சரீரம் -என்று தோற்றுமா போலே
ஒருத்தன் சரீரம் என்றால் மற்றையவன் சரீரி -என்னும் இடம் தோற்றும் இறே –
அரன் -சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் – நாரணன் –ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை –
ஆன் விடை -அநஸ் வர்ய ஸூசகம் /புள்ளூர்தி-கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்ய ஸூசகம்
நூல்-ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்/ மறை-அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி
வரை-காடின்யத்துக்கு சத்ருசமான இடம் -கைலாசம் /நீர்-தண்ணளிக்குத் தக்க இடம் -ஷீரார்ணவம் –
கருமம் அழிப்பு -நசிப்பிக்கை /அளிப்புக் -ரஷிக்கை
வேல் -காண வயிறு அழலும் /நேமி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
வேல் -காண வயிறு அழலும் /நேமி-அறம் முயல் ஆழி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
எரி-நெருப்பைத் தூவும் -/கார் -காண ஜீவிப்பிக்கும்
மேனி யொன்று-ஓன்று சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இறே –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் –
————
ருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ -எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன்
ஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விச்ம்ருதி இல்லை என்கிறார் –
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை —-6-
ஓன்று மறந்து அறியேன்–மறுப்பு என் கையதாயோ இருக்கிறது –
ஒருக்கால் மறக்கும் படியோ வடிவழகு இருக்கிறது-ஸ்ரமஹரமான வடிவழகு உடையவனை –
கர்ப்ப ஸ்தானத்திலே நான் கிடக்கிற அன்று-அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்
இவனுக்கு அப்ரதி ஷேதம் உள்ளதொரு சமயம் என்று பார்த்து தன்னைக் கொடு வந்து காட்டினான் ஆயிற்று –
இத்தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிராக கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே-
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் மொழி -2-3-3-
கண்டு கை தொழுதேன் –
காணவும் பெற்றேன்-காட்சிக்கு அனந்தரமான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன் –
காட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்-
ஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு -நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –
————
பார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது -என்ன
அவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே
தாம் தாமே காண நினைப்பார் -தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு –
அது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் –என்கிறார்-
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு –7-
அசைவில் சீர்க் –
ஒரு நாள் குறைந்து–ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே
நித்தியமான கல்யாண குணங்களை யுடையவன்-அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –
கண்ணன்-
அந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு ஸூலபன் ஆனவன்
நெடுமால் –
உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டினவோபாதி
தேவதாந்தரங்களுக்கும் அவனே வேணும்
அவனையே பற்றினார்க்கு இரண்டும் த்யாஜ்யம் –
கண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன்
————–
இப்படி மதி மயங்கி எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில்
அது செய்வது சாதாரண விஷயத்தில்
ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு அவர்கள் பக்கல் தன் பஷ பாதம் தோற்றக்
கார்யம் செய்யும் என்கிறார் –
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது —8-
தோராழி யால் மறைத்த தென் நீ –
தேராழி–ரதாங்கம் என்னக் கடவது இறே திரு வாழியை -திரு வாழியைக் கொண்டு மறைத்தது என்
சர்வ சாதாரணனான உனக்கு இது போருமோ
சத்ய சங்கல்ப -என்கிற ஸ்ருதிக்கு சேருமோ
ந மேமோகம் வசோ பவேத் -என்று அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ –
ஈச்வரத்துக்குச் சேருமோ
மனிச்சுக்குச் சேருமோ –
திரு மாலே-
பிரச்னம் பண்ணினவர் தாமே
பரிஹாரம் முன்னாக இழிகிறார்
இவ்வோரத்துக்கு அடி அவளோட்டை சம்பந்தம் ஆகாதே
ஆஸ்ரித விஷயத்தில் பஷபாதம் ஸ்ரீ யபதித்வ நிபந்தனமாக வந்தது அன்றோ-
————
இவ்வளவே அன்று கிடீர் –
ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும்
ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் –
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் —9-
தலையாலே சுமந்து நோக்கிலும் நோக்கும்
தலையிலே காலை வைத்து நோக்கிலும் நோக்கும் –
ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் –
சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –
———–
பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்த படி சொல்லிற்று கீழ்
இங்குச் சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்தபடி சொல்லுகிறது –
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்–10-
சேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-
சிறிய வடிவைக் கொண்டு பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –
——————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply