ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோகம் -/ ஸ்ரீ கீதா யோக ஸாஸ்த்ர உபோத்காதம் / ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை -/ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-

ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோகம் –

யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாத அஹம் யாமுநேயம் நமாமி தம் –

எந்தத் திருவடித் தாமரைகளைப் பணிந்து த்யானம் செய்வதன் மூலம் -தன்னுடைய -என்று எம்பெருமானார் –
பாபங்கள் நீங்கப் பெற்றதோ -எதன் மூலம் இந்த உலகினில் நான் ஒரு பொருளாக மதிக்கப்பட்டு உள்ளேனோ
அந்தத் திருவடிகளைக் கொண்ட ஸ்ரீ யாமுநாச்சார்யாரை நான் வணங்குகிறேன் –

ஸ்ரீ கீதா பாஷ்யம் -தடங்கல் இல்லாமல் நிறைவு பெறவும் -உலகில் பரவவும் தமது ஆச்சார்யரை நமஸ்கரிக்கிறார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கும் மங்கள ஸ்லோகம்

யத் -என்னும் பதம்
எந்த -என்று பிரசித்தமான -ஆச்சார்ய குண பூர்த்தி உள்ள மேன்மையைக் காட்டும்
பத -அம் போருஹ-
தாமரை மலர் போன்ற என்ற உதாஹரணம் -அந்த திருவடிகள் அனுபவிக்க வல்லவை
அந்த த்யானம் மகிழ்வோடு இணைந்து உள்ளதால் பக்தி என்றும் கூறப்படும்
த்யான
துரோணாச்சார்யாருக்கு ஏகலைவன் போலே தான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு என்றத்தைக் காட்டும்

த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ
அழிக்கப்பட்ட அனைத்து பாபங்களையும் கொண்ட -என்பதால்
ஒரு முறை கடாக்ஷ லேசத்தாலே பலவிதமான பாபங்களும் அழிக்கப் பட்டன –
அதன் பின்னர் இடைவிடாமல் அந்த ஸ்ரீ ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளையே எண்ணி இருப்பதால்
அவை வாசனையோடு முழுமையாக நீக்கப் பட்டன -என்றவாறு

வஸ்துதாம்
வஸ்துவாக இருத்தல் –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் -2-6-1-ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவன்
என்றால் அவனை இருக்கிறவனாக அறிகிறார்கள்
அஹம் வஸ்துதாம் உபயாத
நான் அடைந்துள்ளேனா -என்ற வியப்பால் அருளிச் செய்கிறார்
இப்படியாக தனது அநிஷ்டங்களும் அப்ராப்தங்களும் நீங்கப்பெற்று இஷ்டப் பிராப்தி அருளியதற்கு
மனம் வாக்கு காயம் -முக்கரணங்களாலும் ஏவப்பட்டு நமஸ்காரம் செய்கிறார்
இதைக் கேட்பவர்களுக்கும் அநேக மங்களங்களும் உண்டாகும்
இத்தால் ஆச்சார்ய வந்தனம் குரு பரம்பரயா த்யானம் பூர்வகமாக பக்தி செய்ய வேண்டும்
என்று உணர்த்தப்பட்டது

ச சாசார்ய வம்சோ ஜ்ஜேயோ பவதி ஆசார்யாண மஸாவஸாவித்யா வித்யா பகவத்தஸ் –
ரஹஸ்ய ஆம்நாய ப்ராஹ்மணம் -என்று இப்படியாக உள்ள ஆச்சார்யர்களின் பரம்பரையில்
இன்ன ஆச்சார்யர் இன்ன தன்மை உள்ளவர் என்று எம்பெருமான் முடிய உள்ள அனைவரையும் பற்றி
அறிய வேண்டும் என்று ஸ்ருதியிலிலும் கூறப்பட்டது –

——————————

அதன் பின்னர் தனது விருப்பமான பரதேவதையான எம்பெருமானின் ஸ்வரூபம் -அழகான திருமேனி -குணங்கள் –
ஐஸ்வர்யங்கள் ஆகியவற்றை எண்ணியபடி இருப்பதாலும் -அவற்றைக் கூறியபடி இருப்பதாலும் –
சற்றும் இடையில் அழிவற்ற மங்களத்தைச் செய்தபடி உள்ளார் –
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த
ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– – ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-1-இந்த ஸ்லோகத்தை அடியொட்டி
தன்னால் வ்யாக்யானம் செய்யப்படுகின்ற ஸ்ரீ கீதா சாஸ்திரத்துக்கு உள்ள அனைத்து ஆழ் பொருளையும் –
அவற்றின் ஸ்வபாவங்களோடு காண்பிக்கிறார் –

இந்த ஸ்ரீ கீதா சாஸ்திரம் தகுந்த பிரமாணம் என்று உணர்த்துவதற்காக -ஸ்ரீ கீதையை அருளிச் செய்த
எம்பெருமானுக்கு உள்ள ஸ்வபாவிதமான சர்வஞ்ஞத்வம் -தயை -சகல ஆஸ்ரித சர்வ ரக்ஷண ஏக சிந்தை –
சங்கல்ப லவ லேசத்தாலே அனைத்தையும் செய்யும் திறல் -சர்வ சக்தித்வம் -ஆகிய பலவும் உள்ளமையைக் காட்டி
விஸ்வசநீயன்-இதுவே ஸ்வயம் பிரமாணம் என்று காட்டி அருளுகிறார்
சதுர்வித புருஷார்த்தங்கள் -அவற்றை அடையும் உபாயம் -பரம புருஷார்த்தமான பகவல் லாபார்த்தியின் மஹிமை –
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் இவற்றையும் காட்டி அருளுகிறார்
சங்கரர் போன்று இல்லாமல் இந்த ஸாஸ்த்ர உபதேசம் பொருந்தும் என்றும் காட்டி அருளுகிறார்

ஸ்ருதி வாக்கியங்கள் -பலவற்றையும் எடுத்துக் காட்டி –
இவனே த்ரிவித காரண வஸ்து –
வியாபக தோஷம் தட்டாதவன் –
காரண வஸ்துவை தியானிக்க வேண்டும்
ஸமஸ்த இதர விலக்ஷணன்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
பஹுஸ்யாம்
போக்தா பாக்யம் ப்ரேரிதா
பேத அபேத கடக சுருதிகள் கொண்டும் சர்வ சாகா ப்ரத்யய நியாயம் கொண்டும் சாமான்ய விசேஷ நியாயம் கொண்டும் –
மயக்கங்களை வேருடன் அறுத்து யாதாம்ய அர்த்தங்களை ஸ்தாபிக்கிறார்
அனைத்துக்கும் உள்ளும் புறமும் இருந்து -நியமனம் தாரகம் சேஷி -ஸ்ருஷ்டியாதிகள் லீலா வியாபாரம்
தேரோட்டியாக தாழ நிற்பதும் அடியார்களுக்காக
அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு தன்னை அடையும் மார்க்கங்களைக் காட்டவே ஸ்ரீ கீதா யோக சாஸ்திரம்
அவனது ஸ்வரூபம் நீங்கலாக மற்ற அனைத்தும் நாரா சப்தார்த்தம் –
அனைத்துக்கும் ஆதாரமாயும் அந்தர்யாமியாயும் உள்ள ஸ்வரூபத்தைக் காட்டி அருளுகிறார் –

—————

ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை
ஸ்ரீ யபதி–
நிகில ஹேய ப்ரத்ய நீக
கல்யாணைகதாந –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண
அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் –

ஸ்வபாவிக அனவதிக அதிசய ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ப்ரப்ருத்ய
அசங்க்யேய கல்யாண குண கண மஹோ ததி-

ஸ்வ அபிமத அநுரூப ஏக ரூப
அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்வல்ய ஸுந்தர்ய
ஸுகுமார்ய லாவண்ய யவ்வனத்தி அனந்த குண நிதி -திவ்ய ரூப

ஸ்வ உசித விவித விசித்திர அனந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய அபரிமித திவ்ய பூஷண
(இங்கு அனுரூபம் என்றது அவனது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு என்று காட்டுவார் தேசிகன )

ஸ்வ அநு ரூப அசங்க்யேய அசிந்த்ய சக்தி நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்ய திவ்யாயுத

ஸ்வ உசித அபிமத அநு ரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்யா அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண ஸ்ரீ வல்லப

ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத ச
அசேஷதைக ரதி ரூப
நித்ய நிரவத்ய நிரதிசய ஞான கிரியை ஐஸ்வர்யாத்
அனந்த குண கணா அபரிமித ஸூரிபிர்
அனவரத அபிஷ்ருத சரண யுகல

வாங்மனச அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ

ஸ்வ உசித விகித விசித்திர அனந்த போக்ய போக உபகரண
போக ஸ்தான சம்ருத்த
அனந்த ஆச்சர்ய அனந்த மஹா விபவ

அனந்த பரிமாண நித்ய நிரவத்ய அக்ஷர பரம வ்யோம நிலய
விவித விசித்திர அனந்த்ய போக்ய போக்த்ரு வர்க்க பரி பூர்ண நிகில ஜகத் உதய விபவ லய லீல

பரம் ப்ரஹ்ம புருஷோத்தம
பர நாராயண

ப்ரஹ்மாதி ஸ்தவாரந்த அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்வா
ஸ்வரூபேண அவஸ்தித தக்ஷ ப்ரஹ்மாதி தேவ மனுஷ்யானாம்
த்யான ஆராத்யானாம் அ கோசார

அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதாரய மஹோ ததி
ஸ்வ மே ரூபம் தத் தத் சஜாதீய ஸம்ஸ்தானம்
ஸ்வ ஸ்வபாவம் அஜஹதேவ குர்வன்
தேஷூ தேஷூ லோகேஷூ வவதீர்ய அவதீர்ய தைஸ்தைர ஆராதித
தத் அதிஷ்டான ரூபம் தர்மார்த்த காம மோஷாக்க்யம் பலம் பிரயச்சன்

பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத
பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்

பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய

அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை-
விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா
விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பாண்டு தனய யுத்த ப்ரோத்ஸாஹன வ்யாஜேந –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா
வேதாந்தம் விதிக்கும்
ஸ்வ விஷய -ஞான கர்ம அனு க்ருஹீதாம்-(சஹகரிக்கும் ) பக்தி யோகம் அவதாரய
(மறந்தும் புறம் தொழா மாந்தர் – மழைக்காக ஆனை புகுந்தாலும் ஆனைக்கால் புகார்கள் அன்றோ -வித்யா ஞான யோகம்
அவித்யா வேறுபட்ட கர்மா யோகம் –
இரண்டும் பக்தி யோகத்துக்கு அங்கம் ஆகுமே
சமுச்சயம் சாதனம் நம் சம்ப்ரதாயம் இல்லை
ஞானான் மோக்ஷம்-ஜீவன் முக்தி – சங்கரர் பக்ஷம் –
இரண்டும் சஹகாரமாகக் கொண்டு பக்தி ஒன்றாலேயே ஸம்ஸாரம் தாண்டி நீங்காத இன்பம் பெறுகிறான் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் தானே பரம புருஷார்த்தம்
பக்தி ரூபா பன்ன ஞானம் -மதி நலம் – )
ஸ்வ விஷயம் ஞான கர்ம அநு க்ருஹீத பக்தி யோகம் அவதாரயாமாச

தத்ர பாண்டவானாம் குரு பிரார்ப்பதே -ச -பகவான் -புருஷோத்தமன் -சர்வேஸ்வரேஸ்வர

பகவான்
புருஷோத்தமன்
சர்வேஸ்வரேஸ்வர
(ச அந்த -கீழ் விவரித்த அந்த
பகவான் -குணங்கள் சங்க்ருஹீதம்
புருஷோத்தமன் வேறு பட்ட மேம் பட்டவன்
ஐந்து விரல்கள் -அதமன் -மத்யமன் -உத் -உத்தர- உத்தம –
எண்ணிலும் வரும் -சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் -அங்குஷ்ட மாத்ர புருஷன்-
நியமன சீலன் -விஸ்வம் கல்யாண குண பூர்த்தி- விஷ்ணு வியாபகம் – வஷட்க்காரன் –
இப்படிப்பட்டவனா தேர் ஓட்டியாக -பக்தானாம் பிரகாசம் இச்சையால் -)
ஜகத் உபக்ருதிம் அர்த்யம் (பின்னானார் வணங்கும் சோதி )
கோ விஜேதும் சமர்த்த
பார்த்தம் ரதி நாம் ஆத்மாநம் ச சாரதிம் இதி -சர்வ லோக சாஷிகம் இதி
ஆஸ்ரித வாத்சல்ய விவஸ்த -இதற்க்கே கட்டுப்பட்டு இருப்பான் –

ஏவம் ஞ்ஞாத்வா
சர்வாத்மனா அந்தக த்ருதராஷ்ட்ரன்
(உள் கண்ணும் இல்லாமல் -பாசம் விடாமல் –
கோவிந்த புண்டரீகாஷா சப்தம் கேட்டும் அறியாமல் )
துரியோதனன் விஜய பிபுஸ்தயா சஞ்சய பிரஸ்த -கேட்டான்

—————

ஸ்ரீ யபதி
உபய லிங்க விசிஷ்டன் -அகில ஹேய பிரத்ய நீகன் கல்யாணை ஏக குணாத்மகன் –
ஏஷ நாராயண ஸ்ரீமாந் ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ
மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -ஸ்ரீ விஷ்ணு பர்வம் -54-50–
அர்தோ விஷ்ணுர் இயம் வாணீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் —அவன் வார்த்தை மூலமாக அறியப்படுபவன் –
அந்த வார்த்தையாக ஸ்ரீ மஹா லஷ்மி
நிகிலேத -சமஸ்தருக்கும் ஸமஸ்த ஹேயங்களை நீக்கும் சாமர்த்தியம்
நிரவதிக அதிசய அஸங்க்யேய ஞான பல ஐஸ்வர்யாதிகள் உடையவன்
ஸ்வ இதர ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

நித்யம் விபும் சர்வகதம் -முண்டகம்
விஸ்வமே வேதம் புருஷ –
அனைத்து இடங்களிலும் -அனைத்து காலத்திலும் -அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பதால்
த்ரிவித -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன் –
அனுகூல ஞானமே ஆனந்தம் -ஞானானந்த மயன்-
ஆனந்த ஞான மயன்-சொல்லாமல் ஞானத்தை முதலில் -சொன்னது
இத்தைத் தவிர வேறு ஒன்றையும் அறிய வேண்டியது இல்லை என்பதைக் காட்டவே –
இரண்டு பதங்களும் ஸ்வரூபத்தை விளக்க வந்தவை
ஸ்வாபாவிக -நிரதிசய ஞான பல ஐஸ்வர்யம் வீரம் சக்தி தேஜஸ் கொண்டவன் –

குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹமும் ஸ்வரூபத்துக்கு விசேஷணங்கள்
விக்ரகங்களைத் தரிப்பதும் ப்ரவர்த்திப்பதும் கல்யாண குணங்களைக் காட்டி அருளவே -என்பதால்
குணங்களை முதலில் அருளிச் செய்கிறார்
அவற்றிலும் ஞானாதி ஆறு குணங்களும் மற்றவற்றுக்கும் ஊற்றுவாய்
தவ அனந்த குணஸ் யாபி ஷட் ஏவ பிரதம குணா யைஸ்த்வயேவ ஜகத் குஷாவந்யே அப்யந்தர் நிவேசிதா–என்று
இவை ஆறும் முதன்மை -இவற்றால் அன்றோ திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்தாய்

வ்யூஹ மூர்த்திகளான சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தன் -மூவருக்கும் இரண்டு இரண்டு பிரதானங்கள்
அனைத்து பொருள்களையும் அனைத்து விதமாக எப்போதும் பார்த்தபடி உள்ளான்-ஞானம்
பார்த்தபடி உள்ள அனைத்தையும் தாங்கியபடி உள்ளான் -பலம்
தாங்கியபடி உள்ள போதே அவற்றை நியமிக்கிறார் -ஐஸ்வர்யம்
தாங்கியும் நியமித்தும் இருந்தாலும் தனக்கு விகாரம் அற்று உள்ளான் -வீர்யம்
சேர இயலாதவற்றையும் எளிதாகச் சேர்த்துக் காட்டுகிறான் -அகடி கடநா சக்தி
இவற்றுக்கு யாரிடமும் எந்த உதவியும் எதிர்பாராமல் -தான் யாருக்கும் அடி பணியாமல் -அனைத்துக்கும் ஸ்வாமி -தேஜஸ்
முக்தருக்கு இவன் அருளால் இவை கிட்டும் இவனுக்கே ஸ்வாபாவிகம்

அநவதி கத்வம் –
மேற்பட்ட எல்லை இல்லாமல் –
பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வேதாஸ்வரம் –6-8-

அஸங்க்யேய -எண்ணிக்கை அற்ற
யதா ரத்நானி ஜலதேர அஸங்க்யேயநி புத்ரக -ததா குண ஹ்ய அநந்தஸ்ய அஸங்க்யேயோ
மஹாத்மந –ஸ்ரீ வாமன புராணம் -74-40-
கல்யாண -பதம்
அவனுக்கு குணங்கள் இல்லை என்கிற சுருதிகள் தாழ்ந்த குணங்கள் இல்லை என்பதையே காட்டும்
உத்சர்க்க அபவாத நியாயம் –
அனைத்து ஹோமங்களும் ஆஹவநீய அக்னியில் சேர்க்க வேண்டும் என்றும் அஸ்வமேத யாகத்தில்
பதே ஜுஹோதி -என்று மீமாம்சத்தில் பதிஹோமத்தை குதிரையின் காலடிச் சுவடில் செய்ய வேண்டும் –
நியாயம் இதே போலே

மேலே ரூப வர்ணனை
ஸ்வ அபிமத -அநு ரூப தனக்கு ஏற்ற -அவிகாராய -எங்கும் காணப்படாத -அத்புத -நித்ய -தோஷம் அற்ற –
தேஜோ ரூப -அழகிய ஸுகந்த்ய-மென்மையான-இனிய இளமை மிக்க -திவ்ய மங்கள விக்ரஹம்
காரண ஸ்ருதி -உபாசனை ஸ்ருதி -அஸ்திர பூஷண அத்யாய ஸ்ருதி வாக்கியங்களில் உள்ளவை போலே

அபிமத அநு ரூப ஏக ரூப
முரண்பாடுகள் அற்று -விரும்புமாயும் ஏற்கத்தக்கதாயும் -வ்யூஹம் விபவங்களிலும்
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன்
தாழ்ந்த குணங்கள் இல்லாமை -ஆனந்தம் அளிக்கும் -மோக்ஷ பிரதத்வம் —
முமுஷுக்களால் ஆஸ்ரயிக்கலாம் படி அன்றோ திருவவதார திவ்ய ரூபம் –

அசிந்த்ய
எண்ண இயலாது
அவயவங்களுடன் சேர்ந்தே அவதரித்தாலும் -அழியாதவனாக -நெஞ்சுக்கும் கண்ணுக்கும்
அளவிட்டு அறிய முடியாதவன் –

திவ்ய
விசித்திரம் -பரமபதம் போலே அப்ராக்ருதம் -பிரகிருதியின் பரிமாணம் இல்லையே

அத்புத
ஆச்சார்யமான -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன்
ஆலிலை கண்ணன் -விஸ்வரூப தர்சனம் –
நித்ய
அழிவற்ற –
காலத்துக்கு உட்படாத –
நித்யா லிங்கா ஸ்வபாவ சம்சித்திர் இந்திரிய ஆகார அங்க ப்ரத்யங்க வ்யஞ்ஜ நவதீ –ரஹஸ்ய ஆம் நாயம் -என்று
காலத்தினால் அளவு படாதது -ஆண் பெண் அடையாளம் அற்றது -இச்சா பரிக்ருஹீதம் –
நமது இந்திரியங்கள் போல் அங்க உப அங்கங்கள் கொண்டவன்

நித்ய சித்தே ததாகாரே தத் பரத்தவே ச பவ்ஷ்கர-யஸ் யாஸ்தி சத்தா ஹ்ருதயே தஸ்யாஸவ்
சந்நிதிம் வ்ரஜேத்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸ்ரீ பவ்ஷ்கர சம்ஹிதை -என்று
நித்தியமாக அவரது ரூபத்தில் மேன்மையைக் குறித்து யார் நித்தியமாக உள்ளான் என்று எண்ணுகிறானோ
அவன் அருகில் உள்ள இருப்பை பகவான் அடைகிறான் –இவனும் அவனது சாமீப்யம் அடைகிறான்

நிரவத்ய
தோஷம் அற்ற -மூப்பு இத்யாதிகள் இல்லாமை

மேலே உபாஸ்ய குணங்களின் வர்ணனை
நிரதிசய-எல்லை அற்ற
ஸுவ்ந்தர்ய
ஸுவ்கந்த்ய
சர்வ கந்த சர்வ ரஸ
புஷ்பஹாஸ
ஸூ குமாரோ மஹா பல –ஆரண்ய -19-14-
லாவண்யம் -சமுதாய சோபை
விஸ்வ மாப்யாயயந் காந்த்யா பூர்ணேந்த்வயுத துல்யயா –சாத்விக சம்ஹிதை -2-70-பல பூர்ண சந்த்ர சமமான
தேஜஸ்ஸாலே உலகை நிறைவு பெறச் செய்தது –
பூயிஷ்டம் தேஜ ஏவாத்பிர் பஹுலா பிர்ம்ருதூக்ருதம் சஷுர் ஆனந்த ஜனநம் லாவண்யம் இதி கத்யதே –
அஹிர் புத்ன்ய சம்ஹிதை –52-ஆனந்தம் அளிக்கும் பிரகாசம் லாவண்யம்
யவ்வன
யுவா குமார -யுயஸ்ய குமாரி

மேலே திவ்ய ஆபரணங்களின் வர்ணனை
இவையும் எண்ணிக்கை அற்ற -அபிமத அநு ரூப -அத்புத -அழிவற்ற -அப்ராக்ருதம்
அதே போலே திவ்ய ஆயுதங்களும்
எண்ணிக்கை அற்ற -அபிமத அநு ரூப சக்தி பொருந்தி அழிக்க முடியாத
குறைபாடுகள் இல்லாத திவ்ய அப்ராக்ருத மங்களம் அழிக்க வல்லவையாய் இருப்பன
ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவா பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா –கிஷ்கிந்தா -3-15-
நாநா வித -விவித -விசித்திர -கிரீட ஹாராதிகள்
எல்லை அற்ற ஆச்சர்யமான -எண்ணிக்கையிலும் -ஒவ் ஒன்றிலும் நாநா விதம் -அபரிமித அளவற்ற -அசிந்த்ய சக்தி

மேலே ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபன் -ஸ்வ அபிமத அநு ரூப -நித்ய -ஸ்வரூப ரூப குண -விபவ ஐஸ்வர்ய சீலாதி
ஸ்வரூபஸ்ய நித்யத்வம்
ஸ்வரூபம் நிரவத்யம்
ஸ்வரூபம் அநு ரூபத்வம்
ஸ்வரூபம் நித்யத்வம்

அஸ்யா தேவ்யா யதா ரூபம் தஸ்யேயம் அஸி தேஷணா–ஸூந்தர -15-51-
விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ் தனும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-9-145-
விக்ரஹ குணா நாம் நித்யத்வம்
கநக நகத் யுதீ யுவ தஸாம் அபி முக்த தஸாம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -29-
தேவ திர்யக் மனுஷ்யேஷு புந் நாம பகவான் ஹரி ஸ்த்ரீ நாம் நீ லஷ்மீர் மைத்ரேய நாநாயோர்
வித்யதே பரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-
அஸ்யே ஸாநா ஜகதோ விஷ்ணு பத்னீ -யஜுர்வேதம்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -ஸ்ரீ ஸூக்தம்
துல்ய சீல வாயோ வ்ருத்தாம் -ஸூந்தர -13-5-
உபய அதிஷ்டானம் ஸைகம் சேஷித்வணம்-இருவரும் சேர்ந்தே மிதுன சேஷி
வ்யாபகாவதி சம்ச்லேஷா தேக தத்துவ மிவோதிதவ் -இருவரும் சேர்ந்தே வியாபித்து
ஸ்ரீ வல்லபன்

மேலே திவ்ய நித்ய ஸூரிகளுடைய சேர்த்தி
தனது சங்கல்பத்துக்கு அநு ரூப ஸ்வரூபம் சதி ப்ரவ்ருத்தி -கைங்கர்ய ஸ்ரீ -எண்ணற்றவர்கள்
சரா நாநா விதாச்சாபி தநு ராயத விக்ரஹம் அந்வ கச்சந்த காகுத்ஸ்தம் சர்வே புருஷ விக்ரஹ –உத்தர -109-7-
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நி ஹிதத் வாச்சா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -4-4-7-
சதா பஸ்யந்தி ஸூரயா தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே –ஸ்ரீ புருஷ ஸூக்தம்
அநவரத அபிஷ்டுத சரண யுகளம்–எப்போதும் வணங்கப்பட்ட திருவடிகள்

அவனது ஸ்வரூபமும் ஸ்வ பாவமும் வாக்காலும் மனசாலும் கூற இயலாதபடியே இருக்கும் –
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ச அவ்விஞ்ஞாதம் விஞானதாம் அவிஞாநதாம் –கேந உபநிஷத் -2-3-
ஸோ அங்க வேத யதி வா ந வேத
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்யாஸ மனசா ஸஹ–என்றும் சொல்லி
தத் விஜிஜ்ஞாஸஸ்வ –தைத்ரியம் -அறிவை ஆசை கொள்வாயாக
மனசா து விசுத்தேன–மநு ஸ்ம்ருதி தூய மனசாலே அறியலாம்

ப்ரஹ்ம வித் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
இத்யாதி வாக்யங்களுக்குள் விரோதம் இல்லை
காட்டவே கண்டு -போலே

மேலே ஸ்ரீ வைகுண்ட வர்ணனை
தனக்கு ஏற்றதும் -அத்புதம் -எண்ணற்ற போகப்பொருள்கள் -போக உபகரணங்கள் -போக ஸ்தானம் –
ஐஸ்வர்யங்கள் -நிரதிசய ஆனந்தமயம் -தோஷம் அற்ற -மங்கள ரூபம்
ஸ்வ உசித–யாதி -அநந்த -ஆச்சர்ய -விபவ -அநந்த பரிணாம -நித்ய -நிரவத்ய –
சுத்த சத்வ மயம் -பரம் -தத் அக்ஷரம்

மேலே லீலா விபூதி வர்ணனை
யதோ வா இமாநி பூதாநி –தைத்ரியம்
ஜந்மாத் யஸ்ய யாத –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-1-1-2-
விவித விசித்திர -அநந்த -போக்ய-இமாநி -இந்த என்று கையாலே காட்டும்படி –
யாராலும் செய்ய இயலாத –

மேக உதய சாகர சந்நி வ்ருத்திர் இந்தோ பாக ஸ்புரிதாநி வாயோ வித்யுத் பாங்கோ கத முஷ்னாரஸ்மே
இங்கு நிகில -என்று நான்முகாதிகளும் ஸ்ருஷ்யர்களே என்று காட்டி அருளுகிறார்
உதய -பாதத்தால் தானே நேரடியாகவும் இவனைக் கொண்டும் ஸ்ருஷ்ட்டி
விபவ -பதம் -தனது அவதாரம் -அந்தர்யாமியாய் செய்யும் செயல்கள்
லய நித்ய நைம்மித்திகாதிகள்
த்ரிவித காரணமும் இவனே

பஹு ஸ்யாம் ப்ரஜாயேய –சாந்தோக்யம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே உபாதானம்
தனக்கு விகாரம் இல்லாமல் -இதனாலே லீலா -சப்த பிரயோகம்

இப்படிப்பட்ட ஸ்ரீ மந் நாராயணன் பர ப்ரஹ்மம் புருஷோத்தமன்
சத் -ப்ரஹ்ம -ஆத்மா -பொது சொற்களும் இவனையே சொல்லும்
நாராயண பரம் ப்ரஹ்ம -தைத்ரியம் -ஒட்டியே —
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் ஸ்லோகம்
அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்.–
புருஷம் சாஸ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் -ஸ்ரீ கீதை —৷৷10.12৷৷
யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம–ஸ்ரீ கீதை —৷৷15.18৷৷
ஏஷ நாராயண ஸ்ரீ மாந் -ஸ்ரீ ஹரி வம்சம்

ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தம் அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்டி
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ப்ரஹ்ம ந ந ஈச–மஹா உபநிஷத் -1-1-1-
தத்ர ப்ரஹ்மா சதுர்முக்கோ
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹினோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர -6-18-

ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் சாஸ்திரத்தில் காட்டியபடி உபாஸனாதிகளைப் பண்ணி தன்னை அடையாமல் இருக்க
தானே அவதரித்து -வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -தாயாதி குணங்களைக் காட்டி –
அவர்களைத் தன்னை ஆராதிக்கப் பண்ணி அறம் பொருள் இன்பம் வீடு போன்ற புருஷார்த்தங்களை விரும்பிய படியே அளிக்கிறான்

ஸ்வேநேத்யாதிநா அகோசர -ஸ்வரூபத்துடன் கிருபை அடியாக அவதரித்ததும் இழந்தே போகிறார்கள்
யைர் லக்ஷணை ரூபேதோ ஹி ஹரி ரவ்யுக்த ரூபத்த்ருத் யைர் லக்ஷணைர பேதோ ஹி வ்யக்த ரூப தசா யுவான் -என்று
எம்பெருமானுக்கு புலப்படும் நிலை புலப்படாத நிலை இரண்டும் உண்டே –
தத் உபர்யபி பாதராயண சம்பவாத் -1-3-25-ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் உண்டே

சமஸ்தா சக்தயச்சைதா ந்ரூப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வ ரூப வைரூப்யம் ரூபம் அந்யத்தரேர்
மஹத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-70-என்று தொடங்கி
ஸமஸ்த சக்தி ரூபாணி தத் கரோதி ஜனேஸ்வர தேவ திர்யக் மனுஷாக்யா சேஷ்டா வந்தி ஸ்வ லீலையா -6-7-71-
இத்தால் ஆதி அம் சோதி உருவுடனே இங்கு அவதரிக்கிறார் -இதையே ஸ்வமேவ ரூபம் -என்கிறார் இங்கும்
நைஷ கர்ப்பத்வ மாபேதே ந யோந்யா ம வஸத் பிரபு -சபா பர்வம் -61-32-
ந தஸ்ய பிராக்ருதா மூர்த்திர் மாம்சமே தோஸ்தி சம்பவா-வாயு புராணம் -34-40-
ந பூத சம்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மா

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

இந்த கீதா ஸ்லோகார்த்தத்தை திரு உள்ளத்தில் கொண்டே
ஸ்வ ஸ்வ பாவம் அஜஹதே வேதி –தேஷு தேஷூ லோகேஷு அவதீர்ய அவதீர்ய தைஸ்த ஆராராதித–
அவதாரம் செய்து அவதாரம் செய்து ஆராதிக்கப்பட்டவன்

ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான–அவதரிக்க அவதரிக்க மேலாக உள்ளான்
யஸ்த அவதார ரூபாணி சமர்ச்சந்தி தேவவ்கச அபஸ்யந்த பரம் ரூபம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-80-
உயர்ந்த ஸ்வரூபத்தை பார்க்காமல் அவதார திருமேனியை தேவர்கள் வணங்குகிறார்கள்
தத் தத் இஷ்டா நிரூபம் -விரும்பியவற்றை அளிக்கிறான்

தஸ்மிந் ப்ரசன்னே கிம் இஹஸ்த்ய அலப்யம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-91-கடாக்ஷம் இருந்தால்
அடைய முடியாதது ஏதும் இல்லையே
தன்னை ஆஸ்ரயிக்கவும் பூ பாரம் குறைக்கவும் அவதாரம்
அஸ்மாதாதீநாம் அபி -நம் போல்வாருக்கும் ஆஸ்ரயிக்கலாமே

நிகில ஜன -அனைத்து உயிர்களுக்கும்
திவ்ய சேஷ்டித
உண்ணும் சோறு பார்க்கும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -தாரகம் போஷகம் போக்யம்
மத் ஸ்வரூப சேஷ்டித அவலோகந ஆலாபாதிதாநே ந தேஷாம் பரித்ராணாய தத் விபரீதா நாம் விநாசாய
ச ஷீணஸ்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மத் ஆராதன ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப பிரதர்ஸேன ஸ்தாபனாய
ச தேவ மனுஷ்யாதி ரூபேண சம்பவாமி யுகே யுகே -பரம பாகவதர்களுக்காகவே திருவவதாரம்

பூர்வ சரிதங்கள் அனைத்துக் இந்த ஸ்ரீ கீதா உபதேசத்துடன் இணைத்துக் காண்பித்து அருளுகிறார்
பாண்டு தனய யுத்த ப்ரோத்ஸாஹன வ்யாஜேந –
இங்கு வ்யாஜேந -என்றது –
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -5-உத்திச்ய -பத ப்ரயோகத்தால்
ஸ்வ விஷய -வேதாந்த உக்த மோக்ஷ சாதனயா -பரம புருஷார்த்த முக்கிய பலனுக்காகவே உபதேசம்

பக்தி யோகம் ஒன்றையே உபதேசம் -ஞான யோகமும் கர்ம யோகமும் அதுக்கு அங்கங்கள்
வைராக்கியமும் ஞான நிஷ்டை கர்ம நிஷ்டைக்குள் அடங்கும்
ச பகவான் புருஷோத்தம ஸர்வேச்வரேச்வர கிருஷ்ண ஜகத் உபக்ருதிம் அர்த்ய ஆஸ்ரித வாத்சல்ய விவஸ
ஜெகதாம் உபகராயா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஜகத் உபக்ருதிம் அர்த்யம் கோ விஜேதும் சமர்த்த
பார்த்தம் ரதி நாம் ஆத்மாநம் ச சாரதிம் இதி -சர்வ லோக சாஷிகம் இதி

இதை அறியாமல் -புறக் கண்ணும் அகக் கண்ணும் இல்லாமல் த்ருதராஷ்ட்ரன் கேள்வி
த்வாம் சீல ரூப –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -15-
சுத்த பாவம் கதோ பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜனார்த்தன -உத்யோக -68-5-
வ்யாஸ பகவானின் அனுக்ரஹத்தால் நேராக அனைத்தையும் சஞ்சயன் பார்த்து பதில் உரைக்கிறான்

——————-

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த- ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும்
பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

———————————-

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஸ்ரீ மத் வேங்கட நாதேந யதா பாஷ்யம் விதீயதே
பகவத் யாமுநேய யுக்தி கீதா ஸங்க்ரஹ ரக்ஷணம்

ஸ்ரீ எம்பெருமானாரது ஸ்ரீ கீதா பாஷ்யத்தை ஒட்டி கீதார்த்த ஸங்க்ரஹத்துக்கு
ஸ்ரீ மத் வேங்கட நாதரால் ரக்ஷை செய்யப்படுகிறது

————-

தத்வம் ஜிஜிஞ்ஞாசமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை -தத்வமேகோ மஹா யோகீ ஹரீர்
நாராயண பர –சாந்தி பர்வம் -347–83-
உண்மையான வஸ்து என்பதை அறிய வேண்டும் என்னும் ஆசை உள்ளவர்களுக்கு -அனைத்து இடங்களிலும்
நீக்கமற வ்யாபித்துள்ள காரணங்களால் -அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்த உயர்வான ஸ்ரீ ஹரியான
ஸ்ரீ மந் நாராயணன் ஒருவனே உண்மையான வஸ்து ஆவான்

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ
நாராயணஸ் சதா –நரசிம்ஹ புராணம் -18–34-
அனைத்து சாஸ்திரங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்து மீண்டும் மீண்டும் ஆராய்ந்தால் நாராயணன் ஒருவனே
எப்போதும் த்யானிக்கப் பட வேண்டியன் என்பது நிச்சயம் ஆகிறது –
இப்படியாக உள்ள பல பிரமாணங்கள் மூலமாக மஹரிஷிகள் வேதாந்த சாஸ்திரங்கள் அனைத்துக்கும்
சாரமாக உள்ள தத்வ ஹிதங்களை முடிவு செய்தனர்
அனைத்து உபநிஷத்துக்கள் சாரமாக ஸ்ரீ மத் பகவத் கீதை உள்ளது –
இதில் தத்வம் ஹிதம் ஆகிய இரண்டுமே கூறப்படுகிறது என்பதை ஸ்ரீ ஆளவந்தார்
ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹத்தில் நிரூபிக்கப் பட உள்ளார்
இந்த இரண்டிலும் தத்துவமே முக்கியம் என்பதை சாரீரக சாஸ்திரம் முதல் ஸூத்ரம் உரைப்பதால்
ஸ்ரீ ஆளவந்தாரும் முதல் ஸ்லோகத்திலே தத்துவமே முக்கியம் என்கிறார்

ஸ்வ தர்மங்கள் -சாஸ்திரம் சொல்லிய வர்ணாஸ்ரம தர்மம் –
ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரத சாம் சித்திம் லபதே நர -18-45-என்று தங்கள் தங்கள் கர்மங்களில்
ஈடுபாடு உடையவர்கள் பக்தி சித்தியை அடைகிறார்கள் –

ஞானம் -சேஷத்வ ஞானம் என்றபடி -சேஷத்வமே ஸ்வபாவம் என்று அறிவதே ஞானம்

வைராக்யம்-இதர விஷயங்களில் பற்று அற்ற தன்மை
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி இதை முமுஷோ–நாரத பரிவ்ராஜக உபநிஷத் –என்று
மோக்ஷத்தில் ஆசை கொண்டவனின் ஸ்வ பாவம் பரமாத்மாவிடம் ஆசையும் இதர விஷய ஆசையின்மையும் உள்ளவனே முமுஷு
த்ருஷ்டா அநுச்ரவிக விஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார சம்ஞ்ஞா வைராக்யம் – பாதாஞ்சலயோக சாஸ்திரம் -1-15–என்று
கண்களால் பார்க்கப்படும் விஷயங்கள் -வேதங்களால் கேட்கப்படும் இவ்வுலக பயன்கள் ஆகியவற்றில் ஆசை இல்லாதவனுக்கு
வசீகரம் என்பது வைராக்யம் என்றே பொருள் அளிப்பதாக உள்ளது –
காரணம் வைராக்யம் இருந்தால் தான் மோக்ஷம் கை கூடும் -இது இல்லை என்றால் மோக்ஷம் கிட்டாது என்பதை உணர்த்தவே –
தோஷங்களின் அடிப்படையான ஆசையை விலக்கினால்-
ஆசையைப் பற்றியபடி உண்டாகும் கோபம் போன்றவற்றையும் வைராக்யம் நீக்கி விடுமே

இவற்றில் வர்ணாஸ்ரம தர்மமும் ஞானமும் முறையே
கர்ம யோகமாகவும் ஞான யோகமாகவும் இருந்தபடி ஆத்ம சாஷாத்காரத்தை உண்டாக்கும்
அதன் மூலமாக பக்தி யோகத்துக்கு சாதனங்களாக உள்ளன
இந்தக் கருத்தையே ஸ்ரீ ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –
உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்
கர்ம யோகம் ஞான யோகம் இரண்டாலும் தூய்மை பெற்ற மனம் உடையவனும்
ஒரே நிச்சயம் கொண்டதாக மரண காலம் வரையில் செய்யக் கூடியதான பக்தி யோகம் உண்டாகும்

சாஷாத்காரம் போலவும் -தைலதாராவத் இடைவிடாத நினைவும் -அன்றாடப் பழக்கங்களால்
சத்வ குணம் ஓங்கி வளருவதால் பக்தி யோகமும் வளரும்
ரஜஸ் தமஸ் இரண்டும் இதற்கு பிரதிபந்தங்களாகும் -இவற்றுக்குக் காரணம் வினைகள் –
இவற்றை நீக்கி சத்வ குணத்தை ஒங்கச்செய்து பக்தி யோகத்துக்கு ஸ்வ தர்மமும் ஞானமும் உதவுகின்றன
இதனால் ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம் மூலமாக
பலன்களை எண்ணிக் கர்மங்களைச் செய்வதைக் கை விட்டு
பகவத் கைங்கர்ய -ஆராதனை ரூபமாகவே நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்வதால் பக்தி யோகம் வளரும்
ஸ்வ தர்மம் ஞானம் மூலம் பக்திக்கு பின்னரும் பலன் உண்டு
இப்படி இவை உதவுவதை எண்ணியே
இயாஜ சோ அபி ஸூ பஹூன் யஞ்ஞான் ஞான வ்யபாசர்ய ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்தம்
ம்ருத்யு மவித்யயா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12–
என்று ஸ்ரீ பராசர மகரிஷி -கேசித்வஜன் என்ற அரசன் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டவனாய்
ப்ரஹ்ம வித்யை கை கூடப் பெற்று கர்மங்கள் மூலமாக பக்தி யோகத்துக்குத் தடையாக உள்ள
பாவங்களைக் கடப்பதற்காக பல யஜ்ஞங்களை இயற்றினான் என்கிறார் –

உயர்ந்தவர்களைக் கண்டால் உகப்பது -பக்தி ஆகிறது –
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்திரித்ய பிகீயதே–லிங்க புராணம் உத்தர காண்டம் -9-19-என்று
விஸ்வாசத்துடன் இடைவிடாமல் செய்கின்ற தியானமே பக்தியாகிறது –
வேதனம் உபாசனம் த்யானம் -மூலம் பக்தி –என்று பொதுவாகவும் விசேஷமாகவும் உண்டே –
அறிவு ஞானமும் உபாசனம் பொருளிலே பிரயோகம் –
பிருஹத் உபநிஷத் -பகவான் யார் ஒருவனைத் தான் விரும்பும் குணங்களைக் கொண்டவனாக ஆக்குகிறானோ
அவனாலே மட்டுமே பரம புருஷனை அடைய முடியும்
எம்பெருமானால் தனக்குப் பிடித்தவனாக ஆக்கப்படும் தன்மை பக்தியால் மட்டுமே வரும் –
ஆகவே பக்தியே இந்த வேதனம் உபாசனம் த்யானம் -போன்ற அனைத்துப் பதங்களாலும் கூறப்படுகிறது –
எனவே ஸ்ருதியும் ஞானம் தவிர வேறே உபாயம் இல்லை என்றும்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

எனவே சுருதி ஸ்ம்ருதி வாக்யங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை-
இதையே பக்தியேக கோசார -என்று பக்திக்கு மட்டுமே பலனாக உள்ளவன் என்கிறார் –ஸ்ரீ ஆளவந்தார் இந்த ஸ்லோகத்தில்
பக்திக்கு மட்டுமே அவன் பலனாக உள்ளான் -இத்தால் கர்மமும் இணைந்தே மோக்ஷத்துக்கு காரணம் என்ற வாதமும்
ஞானான் மோக்ஷம் என்ற வாதமும் நிரசிக்கப்படுகிறது
இங்கு -கோசரன் -என்றது -பலனாக அடையும்படியாக அவன் உள்ளான் என்றபடி –
பக்தி ஏக லப்ய புருஷே புராணே–ஸ்ரீ கருட புராணம் -219-34- என்று பக்தி ஒன்றால் மட்டுமே
அடையக்கூடியவனாக எப்போதும் உள்ள பரம புருஷன் உள்ளான்
ஆத்ம சித்தியிலும் பக்தி யோக லப்ய–பக்தி யோகத்தினால் மட்டுமே அடையாத தக்கவன் என்பதும் உண்டே
உபாயமாகவும் -உபேயமாகவும் -ஆஸ்ரயமாகவும்-அவன் ஒருவனே
ப்ரயோஜனாந்தம் கொண்டு விலகிப் போகாமல் இருக்கவே ஏக பத பிரயோகம்
ஏக -பக்திக்கு அவன் ஒருவனே விஷயம் –
பூமா வித்யை போன்றவை எல்லை அற்ற மேன்மையுடன் கூடிய உயர்ந்த பரம புருஷார்த்தம் அவனே என்று காட்டும் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா வேதாந்த உதிதம்
ஸ்வ விஷயம் ஞான கர்ம அநு க்ருஹீத பக்தி யோகம் அவதாரயாமாச -ஸ்ரீ கீதா பாஷ்யம்-என்று
உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்துக்கு சாதனம் என்று வேதாந்தங்களில் கூறப்பட்டதும்
தன்னையே பற்றியதும்
ஞானம் மற்றும் கர்மங்களால் ஏற்படுவதும் ஆகிய பக்தியைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்தான்
அன்றிக்கே
கோசார -என்று எல்லை அற்ற ஐஸ்வர்யம் கொண்டவன் -அதனால் நமது பக்திக்கு உடையவன் என்றுமாம் –

ஐகாந்திகையாக இருப்பதையே ஏக -சப்தம் –
ஐகாந்திகையாக இருத்தல் என்றால் -உயர்ந்த தத்வம் தாழ்ந்த தத்வம் வேறுபாடுகளை அறிந்த பின்னர்
எங்கு பக்தி செய்ய வேண்டுமோ அங்கு நிலை நிறுத்தி -மற்ற விஷயங்களைப் பற்றாமல் –
ஒரே விஷயத்தையே பற்றியபடி இருத்தலே –

ஆத்யந்திகை -புருஷார்த்தங்களிலே தாழ்ந்தவை உயர்ந்தவை ஆகியவை பற்றி அறிந்து கொண்டு —
அவனே புருஷார்த்தம் என்று இருக்கை-அவனை மட்டுமே அனுபவித்து அதற்கு
மேல் எல்லை இல்லை என்று ஈடுபாட்டுடன் இருத்தலே ஆகும்

ப்ரஹ்ம -போன்ற பொதுச் சொற்கள் -மஹா உபநிஷத் போன்றவற்றில் கூறப்பட்டதும் -மறுக்கப் படாததும் –
வேறே அர்த்தம் கொள்ள முடியாததுமான -நாராயண –என்பதன் விசேஷமான பதத்தின் பொருளையே குறிக்கும்
இதை உணர்த்தவே ஸ்ரீ ஆளவந்தார் முதல் ஸ்லோகத்தில் –
நாராயண பரம் ப்ரஹ்ம-என்று பொதுவாகவும் விசேஷமாகவும் அருளிச் செய்கிறார்
நாராயண அநுவாகத்தில் -நாராயண பர ப்ரஹ்ம -என்று நாராயண சப்தம் வேறுபாடு இல்லாமல் உள்ளது போலே தோன்றினாலும்
முன் பின் வாக்கியங்களில் வேறுபாடு தோன்ற உள்ளதாலும் –
மற்ற சாகைகளில் பிரித்தே கூறப்பட்டதாலும் இங்கும் விசேஷம் பொது என்று பிரித்தே கொள்ள வேண்டும் –
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டிய விசேஷமான தத்வம் முன்பே வேதங்களில் நிச்சயிக்கப் பட்டதால்
பரத்வம் பற்றி முழங்கும் நாராயண அநு வாகத்தில் கூறப்பட்ட ஸ்ரீமந் நாராயணனே
இந்த ஸ்ரீ கீதா சாஸ்திரத்திலும் பரக்கப் பேசப்படும் பொருளாகிறான் –
விஸ்வமே வேதம் புருஷ –தைத்ரியம் -11-2- அனைத்து வஸ்துக்களும் புருஷன் என்று கூறப்பட்டது போன்று

அர்ஜுந உவாச-
பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்—৷৷11.15৷৷

அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
அவ்வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் –
உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும்
ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –
பார்த்தேன் -தேவ சப்தம் இங்கு ஆதேயம் –உலகு எல்லாம் தாங்கி -தேவர்கள் அத்தனை பேரையும் –
இந்த்ராதிகள் இங்கு -நான்முகன் மேலே -பூதங்கள் விசேஷ -கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தேன் –
பிராணி வகைகள் பல அன்றோ -கற்றுக் கறவை கணங்கள் பல அன்றோ பல பஹு வசனங்கள் இதில் -அதே போலே –
பூத விஸேஷ ஸங்காந்-நான் முகன் உந்தித் தாமரையில் ருத்ரன் ரிஷிகள் -பாம்புகள் -சேர்த்து சொல்லி -வாசி இல்லையே –
அவன் திருமேனியில் -இருப்பதால்

பரமாத்மாவுடன் சேர்த்துக் கூறப்பட்டதும் –நாரா -என்னும் சொல்லின் பொருளாக உள்ள
நான்முகன் -சிவன் -இந்திரன் -உள்ளிட்டவர்கள் -அவனால் நியமிக்கப்படுகிறவர்கள் -என்று
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-உள்ளது
எல்லாமே அவனது விபூதியே-என்றே நாராயண அநு வாகத்தில் நாராயண பர ப்ரஹ்ம -என்று உள்ளது -இதையே
ஸ்வாபாவிக அனவதிக அதிசய ஏசித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக –க ப்ரஹ்ம சிவ
சதமக பரம கராடித்யேத அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ்தே -ஸ்தோத்ர ரத்னம் -11-என்று
இவர்களைக் காட்டிலும் மேலான-கர்மவசப்படாத -முக்தர்களும் இவனது பெருமை என்னும் கடலின் துளியாகவே இருக்க
இவனது ஸ்வ பாவிக மேன்மையான ஐஸ்வர்யத்தை எந்த வைதிகம் பொறுக்க மாட்டான் என்கிறார்

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —என்னும் ஸ்ருதிக்கு வியாக்யானமாக –
யதா சோழ நிரூப சம்ராட் த்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூர அஸூர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிதுஸ் –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ரப் ச விப்ருஷ-உஎன்று
சோழ அரசன் தனக்கு சமமாக யாரும் இல்லாதவன் -ஸார்வ பவ்மனாக உள்ளான் -என்றது
அவனுக்கு நிகராக வேறு அரசர்கள் உள்ளனர் என்னும் கருத்தை நீக்குவதிலேயே முக்கிய நோக்கம் –
புத்ரர்கள் வேலையாட்கள் பத்னி போன்றவர்கள் அவனுக்கு இருப்பதை நீக்குவதில் இல்லையே
அதே போலே அத்விதீயம் என்றது
அகில ஹேயபிரத்ய நீக்க ஸமஸ்த கல்யாண குண நிதி -அப்ரமேய -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத மேன்மை –
ப்ரஹ்மாண்டங்கள் கொண்ட லீலா விபூதியும் நித்ய விபத்தியும் கொண்டவன் -என்றதே ஆகும்
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –
மஹா புருஷ நிர்ணயம் என்னும் கிரந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் இத்தை அருளிச் செய்கிறார் –

இப்படி பரம் ப்ரஹ்ம இரண்டையும் ஸ்ரீ யபதி தொடங்கி
ஸ்ரீ கீதா பாஷ்யமும் -பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண – என்று விளக்கி
ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகையும் இத்தை விளக்கும் – –
பரம் என்னும் விசேஷணம் இல்லாமலேயே ப்ரஹ்மம் -என்றாலே பர ப்ரஹ்மத்தை –
அனைத்தையும் விட பெரியதாகவும் அனைத்தையும் தம்மை ஓக்க பெரியதாக ஆக்கும் திறமையையும் குறிக்கும் –
இருந்தாலும் அவனது லவ கேசம் உள்ளதால் ப்ரஹ்மம் என்று சிலரை உபசாரமாக சொல்வதும்
உண்டாததால் பரம் விசேஷணம் –
மும்மூர்த்திகளை விட வேறே ஓன்று உயர்ந்த வஸ்து உள்ளது போன்ற வாதங்களைத் தள்ளவே
இங்கு பரம் விசேஷணம் என்றுமாம்

ஸ்ரீ கீதை -தத்வம் ஹிதம் -உண்மை -நன்மை -இரண்டையும் உள்ளபடி உபதேசிப்பதால் ஸ்ரீ கீதா சாஸ்திரம்
உபநிஷத்துக்கு சமமாக இருப்பதாலே பெண்பாலில் வழங்கப்படுகிறது –
அத்ர உபநிஷதம் புண்யம்
கிருஷ்ண த்வைபாயனோ அப்ரவீத் -ஆதி பர்வம் -1-279–என்று மஹா பாரத்தில் தூய்மையான உபநிஷத்தாகிய
ஸ்ரீ கீதையை ஸ்ரீ வியாசர் கூறினார் –

கற்றவர்களும் –
யஸ்மின் ப்ரஸாதே ஸூ முகே கவயோ அபி யே தே சாஸ்த்ராண்யசா ஸூரிஹ தான் மஹிமா ஆஸ்ரயாணி
கிருஷ்னேந தேன யதிஹ ஸ்வயம் ஏவ கீதம் சாஸ்த்ரஸ்ய தஸ்ய சத்ருசம் கிமி வாஸ்தி சாஸ்திரம் —என்று
எந்த ஸ்ரீ கிருஷ்ணன் அனுக்ரஹம் காரணமாக பல கவிகளும் அவனுடைய மஹிமையைப் பற்றிய சாஸ்திரங்களை
இந்த உலகில் கூறி வருகிறார்களோ -அந்த ஸ்ரீ கிருஷ்ணனால் எந்த ஸ்ரீ கீதை இந்த உலகில் தானாகக் கூறப்பட்டதோ
அந்த ஸ்ரீ கீதா சாஸ்திரத்துக்கு நிகரான சாஸ்திரம் என்ன உள்ளது-என்றனர் –
பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —என்றும்
ஐந்தாம் வேதமான மஹா பாரதத்தில் கீதை உள்ள பகுதியே பிரதான்யம் -என்றும் உரைக்கப் பட்டது –

சமீரித-நன்றாக கூறப்பட்டது என்றபடி
மயர்வு அறுத்து -அஞ்ஞானம் சம்சயயம் விபர்யயம் -இல்லாமல் -அறியாமை சந்தேகம் விபரீத ஞானம் வராமல் தடுத்து
ப்ராப்யமும் ப்ராபகமாகவும் -அடையாக கூடியவன் -அடையச் செய்பவன் –
த்ரி வித காரணமாயும் –சகல இதர வஸ்துக்களும் ஒரே அத்புத அகில காரணன் –
ஸ்திதி சம்ஹாரம் ஸ்ருஷ்டி-அனைத்தையும் செய்து அருளி -தாரகன் -நியாமகன் -சேஷி -வேத ப்ரதிபாத்யன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்-அமலன் -ஆதி பிரான் -விமலன் -நிமலன் நிர்மலன் -புருஷோத்தமன் –
சமன்வய ஸூத்ரத்தில் படியே -எல்லையற்ற மேன்மையைக் கொண்ட பரம புருஷார்த்தம் -சம் -சமீரித- என்றுமாம்
இப்படி இந்த முதல் ஸ்லோகம் மூலமாக ஸ்ரீ கீதா சாஸ்திரத்தின் ஆழ்ந்த பொருள் சுருக்கமாக உணர்த்தப் பட்டது –

———–

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-

கண்ணா நீ பார்த்ததற்கு காத்தற்கு இனிதுரைத்த
திண்ணார் திறம் அருளும் சீர் கீதை எண்ணாரு
நன்பொருளை எங்கட்க்கு நாதா அருளுதலால்
புன் பொருளில் போகா புலன் -1-

மாதவனும் மா மாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடி கண் –மீதருள
வுச்சி மேல் கொண்டே யுயர் கீதை மெய்ப்பொருளை
நச்சி மேல் கொண்டு யுரைப்பன் நான் –2-

நாதன் அருள் புரியு நல் கீதையின் படியை
வேதம் வகுத்த வியன் முனிவன் –பூ தலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டு ஒத்தும் பகர்வேன்
சீர் தழைத்த வெண்பாத் தெரிந்து –3 —

வேதப் பொருளை விசயற்குத் தேர் மீது
போதப் புகன்ற புகழ் மாயன் -கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள் விரிப்பனன் தமிழால் தேர்ந்து –4-

தேயத்தோர் உய்யத் திருமால் அருள் கீதை
நேயத்தோர் எண்ணெய் நிறைவித்துத் –தூய
தெருள் நூலதே பெரிய தீபத்தை நெஞ்சில்
இருள் போக ஏற்றுகேன் யான் –5-

சுத்தியார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறந்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமணாம் நாரணனேநல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம்-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

அடுத்துள்ள மூன்று ஸ்லோகங்களால் மூன்று ஷட்கங்களின் அர்த்தங்களை சுருக்கமாக அருளிச் செய்கிறார் –
ஞான நிஷ்டை என்பது ஞான யோகம் -கர்ம நிஷ்டை என்பது கர்ம யோகம் –
அந்த அந்த அதிகாரிகள் தங்களால் செய்யத்தக்க யோகத்தில் நிலையாக நிற்பதே நிஷ்டையாகும்
அல்லது பலன் உண்டாகும் வரையில் உறுதியாகப் பிடிக்கப்பட்ட உபாய அனுஷ்டானம் என்பதாகும் –

இவற்றின் ஸ்வரூபங்களைக் குறித்து
கர்ம யோகஸ்த பஸ் தீர்த்த தான யஜ்ஞாதி சேவனம்
ஜ்ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரி ஸூ த்தாத்மநி ஸ்திதி –23-
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த –கர்ம யோகம் என்பது -தபமும் தீர்த்த யாத்திரையும் மேலே காட்டுகிறார் –
யோக லஷ்யே–கர்ம யோகம் செய்த பின்னர் -ஞான யோகம் கை கூடப்பெற்று அதன் மூலமாக
ஆத்ம சாஷாத்காரம் பெறுகிறான் என்பது இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்ட வரிசையாகும்
ஞான யோகத்தின் போது பழக்கம் இன்மை காரணமாக இடையிலே உண்டாகும் விளையும் தவறுகளால்
அதனைக் கை விட்டு ஆத்ம சாஷாத்காரம் அடைவது வரை
ஆத்ம ஞானத்தை தன்னுள்ளே அடக்கிய கர்ம யோகத்தில் சிலர் இழியக் கூடும்
இத்தகைய கர்ம யோகம் மூலமாக உலகில் சிஷ்டர்கள் என்று பிரசித்தி பெற்றவர்கள் சிலர் உள்ளனர்
மேலும் சிலர் தங்களுடைய அனுஷ்டானத்தையே பிரமாணம் என்று கொண்டு
மற்றவர்களும் அதைப் பின்பற்றும்படியாக உள்ளார்கள்
தவறுகள் இல்லாமல் எளிதாகச் செய்யக் கூடிய உபாயத்தை மீது மட்டுமே ஆசை கொண்டவர்கள் உள்ளனர் –
இவர்கள் அனைவருக்குமே ஞான யோகம் இல்லாமல் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம்
கை கூடும் என்று மூன்றாம் அத்யாயம் தெரிவிக்கிறது

ஸ்லோகத்தில் உள்ள -யோக லஷ்யே-என்பதில் உள்ள யோகம் என்னும் பதம் –
ஆசனம் பிராணாயாமம்- உள்ளிட்ட அங்கங்களைக் கொண்டதும் – ஆத்ம அவலோகநம் என்ற பெயர் உள்ளதும் ஆகிய
ஆத்மாவை நேரில் காண்பதற்காக மனதை ஆத்மாவிடம் நிலையாக செலுத்தியபடி இருத்தல் –
இவ்விதம் நிலையாக நிற்கும் மனம் மூலம் ஆத்மாவைக் காணுதல் என்பதே யோகம் என்று இங்கு உள்ளது
அதாவது ஆத்ம சாஷாத்காரம் என்பதாகும் –
ஆகவே இடைவிடாமல் ஆத்மாவையே நினைத்தபடி உள்ள இந்த யோகத்திற்குக் காரணமான ஞான யோகம் வேறு –
யோகத்தின் பலனாகிய ஆத்ம சாஷாத்காரம் வேறு -பலனைக் காட்டிலும் யோகம் வேறு என்பதை உணர வேண்டும்

ஸூ ஸம்ஸ்க்ருதே––எம்பெருமானுக்கு ஆதி பணிந்தது -சேஷத்வ ஞானத்துடனும் -பகவத் ப்ரீதிக்காகவே செய்வதாக –
வேறே ப்ரயோஜனாந்தர புத்தி இல்லாமல் –தனக்கே யாக -என்றபடி
சேஷிக்கு அதிசயமும் ஆனந்தமும் பிரயோஜனம் என்ற உணர்வுடன்-செய்யும் நிலை –

ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்ய மதீந்த்ரியம்.–
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ் சலதி தத்த்வத—৷৷6.21৷৷
இந்திரியங்களுக்கு அப்பால் பட்டதாகவும் -ஆத்ம புத்தியினாலேயே அறியத் தக்கதாயும் ப்ரஸித்தமானதுமான
துன்பம் கலவாத ஆத்ம சாஷாத்கார ஸூகத்தை எந்த யோக அப்யாஸத்தில் அனுபவிக்கிறானோ –
எந்த யோக அப்யாஸத்தில் இருக்கும் இந்த யோகீ அத்தன்மையில் இருந்து ஒரு போதும் நழுவுவது இல்லையோ –

ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே —
ஸூ கம் ஆத்யந்திகம் யத்தத் –என்று கூறுவதற்கு ஏற்ப புலன்களால் அனுபவிக்கும் சிற்றின்பங்களை விட உயர்ந்தது –
தன்னைத் தவிர உள்ள மற்ற இன்பங்களில் பற்று அற்ற சிந்தனையை அளிக்க வல்ல ஆத்ம சாஷாத்காரம் என்னும்
உயர்ந்த பலனை அளிக்க வல்லதாகும் என்றே பொருள் –

பூர்வ ஷட்கே ந சோதிதே –என்று முன்னமே விதிக்கப் பட்டன
இரண்டாம் அத்யாயம் ந த்வே வாஹம் -வரை உள்ள -11-ஸ்லோகங்கள் முடிய இதே பொருள் என்பதால்
தனியாக ஒரு ஸங்க்ரஹ ஸ்லோகம் அமைக்கப் பட வில்லை

இப்படியாக இந்த கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் மூலம் -முதல் ஆறு அத்தியாயங்கள் தாழ்வான ஜீவனைப் பற்றிக்
கூறுகின்றன -என்பதும் -பரம்பரையாக பலனை அளிக்கின்ற உபாயத்தை உரைக்கின்றன என்பதும் ஆகும் –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்யாவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே சொல்கிறேன் -என்பான் –
மேகம் தானே வர்ஷிக்குமே – –

நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் மிகவும் உயர்ந்த வஸ்துவைப் பற்றியும் –
நேரிலே பலனை அளிப்பதுமான உபாயம் பற்றியும் கூறுகின்றன –
கடந்த ஸ்லோகத்தில் -பூர்வ ஷட்கேந -இதில் மத்யம ஷட்கேந –
பகவான் -என்ற பதம் -நடு ஆறு அத்தியாயங்களில் கூறியபடி -சர்வத்துக்கும் காரணமாய் –
அகில ஹேயபிரத்ய நீகனாய் கல்யாணை கதனனாய் உள்ள பர ப்ரஹ்மத்தையே சொல்லும் –
பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமன்வித -சப்தோ அயம் நோபசாரேண த்வன் யத்ர
ஹ்யுபசாரத –ஸ்ரீ விஷ்ணு புராணம் 6-5-77-என்கிற பதங்கள்
பகவான் இவனுக்கே ஸ்வாபாவிகம்-மற்றறவர்களுக்கு உபசாரமாக அன்றோ சொல்வது
ப்ரஹ்மம் பதமும் அவனையே குறிக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தின் தொடக்கத்திலேயே எம்பெருமானார் இதனாலே ப்ரஹ்ம பத பிரயோகம் –
பகவத் பக்தர்கள் பாகவதர்கள் -அவர்களால் பக்தி செய்யப்படும் பரமாத்மாவுக்கு பகவான் என்றே பெயர் –
பகவாநேவ தத்வம் –பகவான் ஆகிற வஸ்து –ப்ரமாணங்களால் காட்டப்படும் வஸ்து –
இதுவே பகவத் தத்வம் எனப்படுகிறது –

யாதாத்ம்யாவாப்தி சித்தயே-
இந்த ஸ்லோகத்தில் உள்ள -யாதாத்ம்யாவாப்தி சித்தயே-பதங்கள்
பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷என்றபடி கூறப் பட்ட பொருளை அளிக்கிறது –
பக்திக்கு பலனாக ஐஸ்வர்யாதிகள் இல்லாமல் அவனே உள்ளான் –என்கிறது –
அவனது திவ்ய ஸ்வரூபம் தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேதமும் இல்லாமல் எங்கும் நிறைந்த ஸ்வரூப ஆகும்
அவாப்தி-
அனுபவித்தல் -நிரவதிக அதிசய ஆனந்தமாக அனுபவித்தல் -இதுவே உயர்ந்த பலன் -அனுபவித்தல் சித்தி என்றும்
அனுபவத்தை அடைதல் சித்தி என்றுமாம் –

ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ-
ஞான யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகியவற்றால் உண்டாகக் கூடிய -என்று ஸ்லோகத்தில் கூறியதால்
முதல் ஷட்கம் -நடுவில் உள்ள ஷட்கம்-என்றுள்ள ஷட்கங்களின் வரிசையானது காரணத்துடன் கூறப்பட்டது –
இதை அடி ஒட்டியே ஏழாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் –
பரம ப்ராப்ய பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத் யஸ்ய மஹா விபூதே–ஸ்ரீ மதோ நாராயணஸ்ய
ப்ராப்தயுபாய பூதம் தத் உபாசனம் வக்தும் தத் அங்க பூத ஆத்மஞான பூர்வக கர்ம அனுஷ்டான சாத்யம்
ப்ராப்து -பிரத்யகாத்மநோ யாதாம்ய தர்சனம் யுக்தம் -என்று ஸ்ரீ எம்பெருமானார் -அருளிச் செய்கிறார் –
முதல் ஆறு அத்தியாயங்கள் கொண்ட ஷட்கம் மூலமாக அனைவரின் குறிக்கோளாக உள்ளவனும் –
பர ப்ரஹ்மமாக உள்ளவனும் -தோஷங்களால் பீடிக்கப்படாமல் உள்ளவனும் –
அனைத்து உலகுக்கும் ஒரே காரணமாக உள்ளவனும் -அனைத்தையும் அறிந்தவனும்-
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் -தடையில்லாத ஸத்யஸங்கல்பம் கொண்டவனும் –
உபய விபூதி நாதனும் -ஆகிய ஸ்ரீ மந் நாராயணனை அடையும் உபாயமான அவனைக் குறித்து
உபாசனம் கூறப்பட்டது -இத்தகைய உபாசனத்துக்கு அடிப்படையாக உள்ளதும் –
ஆத்ம ஞானம் என்பதுடன் இணைந்த கர்ம யோகத்தின் மூலமாக அடையப்படும் ஆத்ம சாஷாத்காரம்
என்பது உபாயமாகக் கூறப்பட்டது -என்று அருளிச் செய்தார்

அடுத்துள்ள இரண்டாது ஷட்கம் மூலமாக பர ப்ரஹ்மமாகிய பரம புருஷனின் ஸ்வரூபமும் –
பக்தி என்னும் பதத்துக்குப் பொருளாக அந்தப் பரம புருஷனின் உபாசனமும் கூறப்படுகிறது –

யதம் ப்ரவ்ருத்திர் பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்.–
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ—৷৷18.46৷৷

எந்தப் பரம புருஷனிடம் இருந்து எல்லாப் பொருள்களுக்கும் உத்பத்தி முதலான செயல்கள் அனைத்தும் விளைகின்றதோ-
எந்தப் பரம புருஷனாலே இந்தப் பொருள்கள் அனைத்தும் வியாபிக்கப் பட்டுள்ளதோ அந்தப் பரம புருஷனை
தனக்கு உரிய வர்ணாஸ்ரம கர்மத்தால் ஆராதனம் செய்து மேலான ப்ராப்யமான என்னை அடைகிறான் –
முக்தி -அடைகிறான் -எவன் இடம் இருந்து ஜீவ ராசிகள் உத்பத்தியோ அடைகின்றனவோ வியாபிக்க பட்டு இருக்கிறதோ
அந்த பரம் பொருளை -அர்ச்சனை பண்ணி -வர்ணாஸ்ரம கர்மாக்களில் புஷபம் அர்ச்சனை -பிரித்து விட்டு –

ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷

என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –

இந்த அர்த்தமானது -இந்த இரண்டு ஸ்லோகங்களிலும் சுருக்கமாக கூறப்பட உள்ளது –
பக்தி என்னும் பதம்
உபாயம் என்று பொருள் தருவதால் –பக்தி யாகிற யோகம் பக்தி யோகம் என்கிறதாகிறது
யோகம் என்னும் பதம் த்யானம் என்னும் பொருள் தரும் போது பக்தி என்னும் த்யானம் என்றதாயிற்று –
இவ்வாறு கூறும் போது த்யானம் என்னும் பதம் இடைவிடாமல் நினைத்தலையே சொல்லும்
பக்தி என்பது ப்ரீதியுடன் நினைத்தலையே உணர்த்தும் -எனவே பக்தியாகிற த்யானம் எனலாம்

ப்ரகீர்தித-மேலானதாக -என்பதன் மூலம்
பக்தி ஸ்வரூபம்
அதன் அங்கம்
அதன் விஷயம்
அதன் பலன் -ஆகியவை அனைத்தும் உயர்வாகவே உள்ளன என்று கூறப்பட்டது –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியில் இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோ அந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் –
இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் -சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர
பிரதானம் அல்லது பிரகிருதி -என்பது அனைத்து லோகங்களுக்கும் காரணமாக உள்ள
ஸூஷ்ம -அசேதன -ஜடப் பொருள் ஆகும்
புருஷன் என்னும் ஜீவாத்மா -மேலே கூறப்பட்ட அசேதனங்களுடன் தொடர்பு கொண்டவனும்
அதனுடன் சேராமல் உள்ள தூய்மையான முக்தாத்மாக்களும் ஆவர்
வ்யக்த
பிரகிருதியின் செயல் -என்பது மஹான் தொடக்கமான பஞ்ச பூதங்கள் வரை உள்ள விசேஷங்களும்
அவற்றால் உண்டாகும் -தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் தாவரங்கள் -என்றுள்ள சரீரங்களும் ஆகும்

சர்வேஸ்வரன் என்பது –
உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

எவன் ஒருவன் அசித் பக்த ஜீவன் முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும் வியாபித்து –
அவற்றைத் தாங்குகிறானோ -அவன் அழிவற்றவனாய் -அனைத்தையும் நியமிப்பவனாய் –
பரமாத்மா என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுபவனாய் –
இக்காரணங்களால் மிக மிக மேலான புருஷனாய் இருப்பவன் -முற்கூறிய
ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் –
சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் –
மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும்
என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள புருஷோத்தமனை குறிக்கும் –

சர்வேஸ்வரன் -என்பதால்
அவன் உண்டு உமிழ்ந்த தாழ்ந்த ஈஸ்வரர்கள் விலக்கப்பட்டனர்
சர்வேஸ்வரன் –
அஜஸ் சர்வேஸ்வரச்சித்த -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -என்ற திரு நாமம் இதனாலே கொண்டவன் –
விவேச நம்-
பகுத்தறிவு –இப்படிப்பட்ட வஸ்துக்களைப் பிரித்து உணர்த்த வல்ல தர்மம் ஆகும்
இதன் மூலமாக அந்தப் பொருள்களை வெவ்வேறானவை என்று தெளிகின்ற விவேகம் பெறலாம்
என்றும் பொருள் கொள்ளலாம் –
கர்ம தீர் பக்திரித்யாதி–
என்பதன் மூலம் -கர்மயோகம் – ஞானயோகம் – பக்தியோகம் -ஆகியவற்றின் ஸ்வரூபங்கள் தெரிவிக்கப்படுகிறது
ஆதி சப்தத்தால்
இவற்றைச் செய்யும் முறையும் சாஸ்த்ர விதி நிஷேதங்கள் எல்லாம் குறிக்கும்
பூர்வ சேஷ –
எஞ்சியவை என்றவாறு –எஞ்சியவற்றை கூறி -விவரித்து -புநர் யுக்தி இல்லாமல் தெளிவாக்கப்படுகிறது –

இந்த ஸ்லோகம் ஸ்ரீ எம்பெருமானாரால் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் -13- அத்யாயம் தொடக்கத்தில் தெளிவாக விவரிக்கிறார்
பூர்வஸ்மிந் ஷட்கே
பரம ப்ராப்யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ பகவதோ வாஸூ தேவஸ்ய
ப்ராப்த் யுபாய பூத பக்தி ரூப பகவத் உபாசந அங்க பூதம் ப்ராப்துஸ் –
பிரத்யகாத்மநோ யாதாத்ம்ய தர்சனம் -ஞான யோக கர்ம யோக லக்ஷண நிஷ்டாத்வய சாத்யம் யுக்தம் –
மத்யமே
ச பரம ப்ராப்ய பூத பகவத் தத்துவ யாதாத்ம்ய தன் மாஹாத்ம்ய ஞான பூர்வக
ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக நிஷ்டா ப்ரதிபாதிதா-
அதிசய ஐஸ்வர்ய அபேக்ஷமாணாம் ஆத்ம கைவல்ய மாத்ர அபேக்ஷமாணாம் ச பக்தி யோகஸ்
தத்தத் அபேக்ஷித சாதனமிதி சோக்தம்-
இதா நீ முபரிதநே து ஷட்கே
ப்ரக்ருதி புருஷ தத் சம்சர்க்க ரூப பிரபஞ்சேஸ்வர தத் யாதாம்ய
கர்ம ஞான பக்தி ஸ்வரூப தத் உபாதான பிரகாரச்ச ஷட்கத்வ யோதிதா விசோத்யந்தே –என்று
அருளிச் செய்தார் இறே

முதல் ஷட்கத்தில்
பர ப்ரஹ்மமாகவும் -அனைவராலும் அடையப்படும் பொருளாகவும் உள்ள வாஸூ தேவனை ஆராதிப்பதே
ஜீவனின் உண்மையான தன்மை எனப்பட்டது
இது ஞான யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகிய வழிகளில் அடையப்படும் எனப்பட்டது –
அடுத்து நடு ஷட்கத்தில்
பரம் பொருளான பகவானைப் பற்றி அறிதல்
அவனை முன்னிட்டு பலன் கருதாத பக்தி யோகத்தில் நிலைத்தல் ஆகியவை கூறப்பட்டன
மேலும் ஐஸ்வர்யம் மற்றும் கைவல்யம் விரும்பியவர்களுக்கு அவர்கள் விரும்பிய பலனை
அடைவிக்க வல்லது பக்தி யோகமே எனப்பட்டது
இறுதி ஷட்கத்தில்
கீழே கூறப்பட்ட பலவற்றையும் விவரித்து –
மூல ப்ரக்ருதி -ஜீவன் -இவை இரண்டும் கூடிய ஸ்தூல உலகம் -சர்வேஸ்வரன் –
இவர்களைப் பற்றிய ஞானம் -கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் இவற்றினுடைய ஸ்வரூபம் –
இவற்றைக் கிட்ட உதவும் உபாயங்கள் ஆகியவை விவரிக்கப் படுகின்றன

இதில் பூர்வ த்ரிகம் உத்தர த்ரிகம் -என்று பிரித்து -16-அத்யாய தொடக்கத்தில்
அதீதே நாத்யா யத்ரயேண ப்ரக்ருதி புருஷயோர் விவி பக்த்யோஸ் ஸம்ஸ்ருஷ்ட யோச்சி யாதாம்யம்
தத் சர்க்க வியோக யோச்ச
குண சங்க தத் விபர்யய ஹேது கரத்வம் –சர்வ பிரகாரேண அவஸ்திதயோ –
ப்ரக்ருதி புருஷயோர் பகவத் விபூதித்வம் விபூதி மதோ
பகவதோ விபூதி பூதாதசித்வஸ்துந–அசித் வஸ்து நச்ச பத்த முக்த உபாய
ரூபா தவ்ய யத்வ வ்யாபந பரண ஸ்வாம்யைரர்த் தாந்தரதயா
புருஷோத்த மத்வே நச யாதாம்யம் ச வர்ணிதம் —என்று அருளிச் செய்கிறார் எம்பெருமானார் –

அசித் என்ற பிரகிருதி -சித் என்ற ஜீவன் ஆகிய இரண்டும் -சேர்ந்துள்ள போதும் பிரிந்துள்ள போதும்
அவற்றின் தன்மைகள் என்ன என்று கூறப்பட்டது –
அவை இரண்டும் சேர்ந்து இருப்பது என்பது குணங்களில் உண்டாகும் பற்றுதல் என்பதும்
பிரிந்து இருப்பது என்பது குணங்களில் பற்று நீங்குவதின் மூலம் என்பதும் கூறப்பட்டது –
சித் மற்றும் அசித் ஆகியவை எந்த நிலையில் உள்ள போதிலும் அவை எம்பெருமானின் செல்வங்களே
என்று கூறப்பட்டது
பந்தப்பட்ட நிலை -முக்தி பெற்ற நிலை -ஆகிய நிலைகளில் உள்ள ஷர அஷர புருஷர்களைக் காட்டிலும்
எம்பெருமான் உயர்ந்தவன் ஆவான்
அவன் அழியாமல் எங்கும் உள்ளவனாக அனைத்தையும் நியமித்த படி உள்ளதால் புருஷோத்தமன்
எனப்படுகிறான் என்று கூறப்பட்டது -என்பதாகும்

ஆக இந்த மூன்றாவது அத்தியாயத்தின் முதலில் உள்ள மூன்று அத்தியாயங்கள்
சித் அசித் ஈஸ்வரன் என்கிற தத்துவங்களை ஆராய்வதாகவும்
அடுத்து உள்ள மூன்று அத்தியாயங்கள்
கர்மயோகம் முதலானவற்றைச் செய்ய வேண்டிய முறைகளை ஆராய்வதில் நோக்கம் கொண்டவை
என்ற வேறுபாடு அறிய வேண்டும் –

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என்னதான் அன்று அந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-

—————————————————————-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த சங்கிரகம் —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியுள் -ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

கட்டப் பொருள் விரித்த காசினியில் நான்மறையில்
இட்டப் பொருள் இயம்பும் இன் பொருளைச் -சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்பாதம்
புயம் அடியேன் பற்று –1-

கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார் பாதாரவிந்த மலர் பற்று –2-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று
அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்
திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-

———————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading