ஸ்ரீ சரம உபாய நிர்ணயம்–ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -நிலை -பவிஷ்யத்ககார ஆச்சார்யர் -ஸ்ரீ பெருமாளே காட்டி அருள –
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை –பற்றி இரண்டு தனியன்கள்-

ஸூருத்த யர்த்த சார ஜனகம்-ஸ்ம்ருதி பால மித்ரம் -( இளம் சூரியன் போலே) -பகவத் அங்கிரி
புராண பந்து- (பழ வடியேன்-சேஷத்வம் தொன்மை ) ஞானாதி ராஜம் -அபயப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி

அபயப்பிராய பாதர் தேசிக உத்பவம் திருக்குமாரர் -அகில ஜகத் ஜீவன உபாயம் – ஆகிய –
அஸ்மத் தேசிகன் ஆஸ்ரயே யத் பிரசாத் சரம உபாய நிர்ணய ஸஹாய குரும் நியம ஆதரானே ஆசை யுடன் ஸ்துதிக்கிறேன்

த்யான ஸ்லோகங்கள் நான்கும்

1-அபாய பிரய பாதர் -ஆகிய -என்று புகழாகச் சொல்லப்பட்ட -அஸ்மத் தேசிகன்-
அடியேனுக்கு பிதாவும் குருவுமான -யத் பிரசாத் -வாக்ய-எழுதப்பட்டது

2-அஸ்மத் ஜனக காருண்ய –ஸூதா ஸந்துஷ்ட ஆத்மாவான்-அமுத வெள்ளத்தில் நனைக்கப்பட்டவன் –
கரோமி சரம உபாய நிர்ணயம் மத் பிதா யதா மத் பிதா ஏதா -தந்தை சொன்னபடியே திரும்பி சொல்கிறேன்

3-அஸ்மத் உத்காரகம் வந்தே – யதிராஜம்-ஜகத் குரும்- -யத் கிருபா ப்ரேரிதா குருமி -சரம உபாய நிர்ணயம்
அரங்கம் ஆளி என் ஆளி போலே

4-பூர்வ அபர குரு ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டும் -முன் பின் குருக்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை – –
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்கள் இரண்டும் ஆதாரமாகக் கொண்டு மயா சம்யக் கிரியதே-நன்றாக அடியேனால் செய்யப்பட்டது –
யதிராஜரே சரம உபாயம் என்பது பொருந்தும் -என்னும் அர்த்தம் சொல்லப்பட்டது

————-

ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –பொதுவாக எழுதி -சர்வருக்கு உஜ்ஜீவன அர்த்தமாக –
இவர் இங்கே காட்டி அருளுவது -ஸ்ரீ ராமானுஜர் அபிமானம் உத்தாரகம் –
ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -அவர் அவர்களுக்கு அவர் அவர்கள் பெருமாள் என்று காட்டி அருளியது போலே –
சாஷாத் ஆச்சார்யத்வைத்தை -நம் முதலிகள்-தம் தாம் ஆச்சார்யர்கள் அபிமானம் உத்தாரகம் -சம்சாரம் தாண்ட –
என்று அறுதி விட்டார்களே ஆகிலும் -முதல் படி இது –

ஆச்சார்யர்கள் உடையவரே உத்தாரகம் என்று காட்டிக் கொடுத்து-நீங்களும் இப்படியே
விஸ்வசித்து போங்கள் என்று அருளியதால் – இவரே சரம உபாயம் –
சாஷாத் -நேரே மோக்ஷம் கொடுப்பவர் -என்றும் கண் முன் நேராக என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டே
குருவி தலையில் பனங்காயை வைத்தது போலே -என்பார்கள்

குரு -சொல் பொருந்தும் இடம் -விஷ்ணு சேஷி -ததீயா ஸூப குண நிலைய விக்ரஹ ஸ்ரீ சடாரி -விஷ்ணுவுக்கு திருமேனி
ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார் பாத கமலங்கள் -மாறன் அடி பணிந்தவர் –
தஸ்மிந் ராமாநுஜார்யரே குரு என்னும் சொல் இங்கே தானே நன்கு பிரகாசிக்கும் -நான்யத்ர-என்றவாறு –
பிரதம பெருமாள் -மத்யம-பாகவத ஆழ்வார் – சரம-ஆச்சார்யர் ராமானுஜர் -என்றவாறு –
தஸ்ய நாதஸ்ய சேஷம் -அனைவரும்–அவதார விசேஷம் என்பதால் இவர் ஆதி சேஷன் -குரு என்பதால் சேஷியும் இவரே Dhanya Mata
ஒளி விஞ்சி விவஸ்திதம் இங்கே -ஸ்ரீ வடுக நம்பி வார்த்தையை நினைப்பது –

சம்பந்தம் விலகாமல் -முன்புள்ள பின்புள்ள முதலிகள் – இதுவே பரம உத்தாரகம் -த்வித சம்பந்தம் –
ஆரோகணம் அவரோகணம் -சம்பந்தம்
ஆசார்யத்வேன -சிஷ்யத்வேன இவை இரண்டுக்கும்-ஆரோஹண அவரோஹண கிரமங்களுக்கும் விளை நிலம் உடையவர் இறே –
ஓன்று நிரவதிகமாய் ஓன்று சாவதிகமாய் இருக்கும் -அவரோகணம் இன்னும் நிரவதிகமாய் இருக்கும்
பர்யந்தம் சொல்லு முடிவு இன்றிக்கே இருக்கும் -ஸ்ரீ லஷிமீ வல்லபன் பர்யந்தம் சா வதிகம் தானே
ஆ பகவத் -ஆ ராதனம் -ஆ காசம் -ஆ சமந்தாத் -முதலில் இருந்து எல்லாம் அவனுக்கு ப்ரீதி ஏற்படுத்தும் செயல்கள் –
அசவ் -இதி பகவத் அளவும் -ஸ்ரீ எம்பெருமானார் அளவும் கொழுந்து -விட்டு படரும் –
கொழுந்து இலை கிளை தண்டு மரம் –அவரோகணம் -மரம் தொடங்கி ஆரோஹணம்
இடையிலே -நின்றார் -நடு நாயகமாய் இருப்பார் -குரு பரம்பரா ஹாரம்
குரு பரம்பரையில் இடையிடப்பட்டார் அன்றோ இவர் -இரு தலை நாயகமாகக் கொண்டு பிரகாசப்படுத்துவார்
பத்தோடு பதினொன்று தானே இவர் சங்கை கூடாதே –மேல் ஒன்பது -கீழே ஒன்பது -பாரபக்ஷம் இல்லாமல் –
இரண்டு திறத்தாரும் கார்யம் கொள்ளும் பொழுது மத்தியஸ்தர் கொண்டே தானே கார்யம் செய்ய வேண்டும்

முன் பின் பெற்ற பிரகாரம் -உற்றேன் உகந்து பணி செய்தென் -கார்யம் தலைக்கட்டும்
பத த்ரயத்துக்கும் மத்யம பதம் போலே -பர்வத த்ரயத்துக்கும் மத்தியஸ்தர் இவர்
ம ஜீவர் /நார-சேதன அசேதனங்கள் -பதத்தில் சொல்லப்பட்ட மகார ஜீவர்களுக்கு உபாயம் –
நமஸ் உபாய -அசேதனத்துக்கு இல்லை -ஞானம் உடையவனும் தானே உபாயம்
நடுவில் நின்று இருவருக்கும் கார்யம் -சம்பந்த த்வயம் உண்டே –
கார்ய உபயோகி -ஆச்சார்யத்வேன -சிஷ்யத்வேன -உத்தாராகத்வம் -இது தானே இவருக்கு விசேஷம் –
அசாதாரணத்வம் -இவருக்கு மட்டும்
இந்த ஆகார த்ரயத்தை விசேஷேண வெளியிட்டுக் கொண்டு விஸ்வசனீயராக இருக்கிறார்-
நம்பனை நரசிங்கனை -ஆழ்வாராதிகளுக்கு மட்டுமே -அவன்
அர்வாஞ்சோ–யத் பத சரஸிஜ த்வந்த பூர்வே -தோயம் ராமானுஜ அபி யஸ் சம்பந்தாத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் பெருமை

கிருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யார் இடம் தானே நம்பலாம் -எலி எலும்பின் ஆச்சார்யர் திரு உள்ளத்துக்கு ஏற்க அனுவர்த்திக்கப் போகாதே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலமாக இருப்பார் துர்லபம் -ஸ்ரீ முதலியாண்டான் நமக்காக ஸ்ரீ கூரத்தாழ்வான் இடம் –
மத்தகத்துக்கு –ஞான சாரம் பாசுரம் -பரகத சுவீகாரம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்று —
நம்முடைய ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளுவார்
சோமாசி ஆண்டான் -அபராதம் செய்யும் பிரபன்னர் -காருணிக குணத்தால் ரஷிக்கும் ஆச்சார்யர் முக்கிய குரு –
அப்ரமேயர் -குரு குணாவளி பிரபந்தத்தில் அருளிச் செய்துள்ளார்
உத்தாரகத்தாராகவும் கிருபா மாத்ர பிரசன்பனாச்சார்யராக இருப்பது இவர் இடமே பொருந்தும் –
பூர்ணமாக இருப்பது உத்தாரகத்வ விசிஷ்டமான கிருபா மாத்ர ப்ரசன்னாசாரத்வம் இவர் இடமே பொருந்தும்

ஸ்ரீ அரையர் குமாரரை திருத்தி -அரங்கமாளி-என்பான் திருவடி நிலைகளை தலையிலே சாத்தி –
நீ பற்றின காலுக்கும் இதுக்கும் வாசி கண்டாயே அவை நரவாஹகம் -அன்று தொடங்கி அவன்
இந்த ரஹஸ்யத்தை எனக்கு உபதேசித்து தந்தை சொல்ல அப்படியே நானும் விஸ்வசித்து போருவேன்
இவை இரண்டுமே பிரமாணம் -மேலும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்க மேலும் பல ஸ்ரீ ஸூக்திகள் –
ஸ்வப்ன விருத்தாந்தங்கள் மேலே அருளிச் செய்கிறார்

இந்த பிரபன்ன குலத்தில் அவதரிக்கப் போகிறார் -அவராலே நாடு அடங்க உஜ்ஜீவிக்கும் -ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நாதமுனிகளுக்கு சொல்ல –
பயன் நன்றாகிலும் –முயல்கிறேன் -செயல் நன்றாக திருத்தி -மூன்று நிலைகள் -பாசுரம் அருளி –
இவர் அவதாரம் செய்வார் -விக்ரஹம் காட்டி மூன்றும் –
அற்றை இரவில் ஸ்வப்ன முகேன எழுந்து அருளி -திருமேனி காட்டி அருள
ஆஜானுபாஹுவாய் நிரவதிக தேஜோ ரூபம் -நீண்ட காது காப்பும் முகமும் முறுவலும்-ஆகர்ஷகமாய் உமது திருமேனி விட –
சொல்ல ஸ்ரீ ஆழ்வார் முகம் மலர்ந்து —(ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் இப்படி சொல்ல வில்லை -இவர் ஆச்சார்ய வம்சம் அன்றோ –
பக்தி பாரவஸ்யம் -அங்கு ஞானாதிக்யம் இங்கு )லோகம் எல்லாம் இந்த விரக்தியில் அன்றோ மேல் விழப் போகிறது என்று அருளிச் செய்ய
இந்த திருமேனி நித்யம் அனுபவிக்க விரகு-ஏது என்று விண்ணப்பம் செய்ய –
மற்றை நாள் ஸூ விக்ரஹத்தை உருவாக்கிய சிற்பி வம்சாவளி ஸ்வப்னா முகேந எழுந்து அருளி -சமஸ்தானத்தை வகுத்து காட்டி அருளி –
நாளை நம் புளி அருகில் வந்து சர்வ அவய பூர்ணமாக அமையுங்கோள்
அங்கு முந்திய விக்ரஹம் -இங்கு சர்வ அவயவ பூர்ணமாக அமையும் என்று இங்கு ஆணை
ஆகார நித்திரை இல்லாமல் நிர்மிந்து கொடுக்க -அதில் சக்தி விசேஷத்தை ஆவேசித்து அருளி –
ஸ்ரீ ராமனுக்கு வலக்கை ஸ்ரீ இலக்குமணன் போலே ராமஸ்ய -ஸ்ரீ ஆழ்வார் -என் அவலமாக நினைத்து -இந்த வியக்தி அடி நாம் ஆகையால் –
நமக்கு அடியுமாய் நம் காரியத்துக்கு காரியமாக -பிரபத்தி மரியாதை உலகுக்கு காட்டி -உரு பெரும் செல்வமும் இத்யாதி
நம் தரிசனத்துக்கு அடி இட்டு வைத்தோம் -உம்முடைய குலத்தில் ஒருவர் இந்த விரக்தியை சாஷாத்கரிப்பார் –
ஸ்ரீ பெருமாள் திரு அபிஷேகத்துக்கு நாள் குறித்தால் போலே -நம் பிறவி நாள் -விசாகம் –18-நாள் கழித்து -திருவாதிரை
பிரதம உபாயம் பிறந்தது -18-அத்யாயம் பின்பு வந்தால் போலே –

ஸ்ரீ கிருஷ்ணன் பிரதம உபாயம் அருளி -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் சரம உபாயம் காட்டி அருளினார் என்றதாயிற்று
ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி திருமகள் வரை ஓராண் வழியாக ரஹஸ்யமாக வந்தது
ஸ்ரீ திருக்கண்ண மங்கை ஆண்டானுக்கு ஸ்ரீ நாதமுனிகள் இவ்வர்த்தம் பிரசாதித்து –
ஆரோஹண க்ரமத்தால் பெற்ற பேறு இருந்தவாறு என்று உகந்து
பின்னை ஸ்ரீ உய்யக் கொண்டார் -தரிசன பிரவர்த்தக கைங்கர்யம் கொடுத்து
ஸ்ரீ ஈஸ்வர முனிவர்-உமக்கு திருக்குமாரர் -உண்டாவார்- ஸ்ரீ யமுனைத்துறைவன் என்று திரு நாமம் சாத்த வேண்டும் என்றும் – –
ஸ்ரீ குருகைக் காவல் அப்பன் -யோக சாஸ்திரம் -மூவருக்கும் பிரசாதித்து –

ஒருவருக்கும் சொல்லக் கூடாது என்று ஸ்ரீ உய்யக் கொண்டாருக்கு சூளுறவு கொண்டு –
ஸ்ரீ ஈஸ்வர முனி குமாரருக்கு நான் தஞ்சமாக பற்றின விக்ரஹம் என்று கொண்டு அந்த விக்ரஹத்தையே திரு உள்ளத்தில்
த்யானம் பண்ணிக் கொண்டே அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடே கலந்தார் -திரு முடி சம்பந்தம் –
இவர் ஸ்ரீ மணக்கால் நம்பி -ஸ்ரீ திருவல்லிக்கேணி அரையர் -ஸ்வப்னம் வ்ருத்தாந்தம் அருளிச் செய்து —
12-வருஷம் கைங்கர்யம் பெற்ற பின்பு ஸ்ரீ மணக்கால் நம்பிக்கு -சரம தசையில் தான் விக்ரஹம் பிரசாதம் —
சொட்டைக் குலத்தில் அவதரிக்கப் போவார் -அவருக்குப் பின்பு குரு பரம்பரை யார் யார் என்று ஏங்கத் தேவை இல்லை –
பிரபன்ன குலமாக பேறு பெறும்படி அவராலே தர்சனம் விளங்கப் போகிறது
ஸ்ரீ மணக்கால் நம்பியுடைய சரம தசையில் -நாட்டை அளித்து உய்யச் செய்த்து நடத்துபவனை தேடச் சொன்னோம்
என்று சொல்லும் -அனைத்து உலகும் உய்யப் பிறக்கப் போகும் உடையவர்
நமக்கு ஸ்வப்னத்தில் -சாஷாதாக பேரன் பெற்றால் என் நெஞ்சாறல் தீரும் என்று ஸ்ரீ நாத முனிகள் –
அவதார ரஹஸ்யத்தை பேணிக் கொண்டு போந்தார்கள்
தேட ஆரம்பிக்கிறார் -ஆச்சார்யர் சிஷ்யரை -பரகத ஸ்வீகாரமே கார்ய கரம்

ஸ்ரீ திருக்கச்சி நம்பி முகேன-கண்டு -திரு நக்ஷத்ரம் கேட்டு அருளி -அவரே இவர் என்று உள்ளத்தால் தேறி –
மூன்று படியாலும் ஒத்து இருக்கையாலே -கடாக்ஷித்து அருளி ஆ முதல்வன் இவன் என்று –
சரம தசையில் -திருக்கோஷ்டியூர் நம்பிக்கு பிரசாதித்து அருளி -விக்ரஹம் கொடுத்து அருளி –
ஸ்ரீ ரஹஸ்ய அர்த்தங்களை அருளிச் செய்யும் -என்று நியமித்து அருளி -அவர் திரு நாமத்தால் தர்சனம் –
ஸ்ரீ எம்பெருமானார் பேர் அளித்தவர் இவர் தானே -வரம்பு அறுத்தவர் -ஸ்ரீ எம்பெருமானை விட அதிகர் –
உங்களுக்கு ஒருவரை உண்டாக்கி நாம் பேறு பெறுகிறோம் -நாம் அன்றோ இழவோடு போகிறோம் என்று
சரம தசையில் ஸ்ரீ முதலிகளுக்கு அருளிச் செய்தார்

லோகாந்தாரஸ்தர் -முற்பட்டவர் -ஸ்ரீ வைஷ்ணவர்-தாங்கள் குலத்தில் பிறந்து –
பித்ருக்கள் புத்த நரகர் புகாமல் -பின்பட்டவரால் பயன் உண்டே
ஸ்ரீ வைஷ்ணத்வம் இல்லாமல் லோகாந்தரங்களில் காத்து உள்ளார் -பித்ரு லோகம் இடைப்பட்ட –
பூர்வர்களுக்கு அப்படி இல்லையே -தாங்களே ஸ்ரீ வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
அடைய வேண்டிய இடம் அடைந்தார்கள் -எவ்வாறு உத்தாரகர் ஆவார் –
ஸ்ரீ நாதமுனிகளுக்கு ஸ்ரீ ஆழ்வார் உத்தாரகர் -பிரதிபத்தி நடக்கும் -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அறுதி இட்டு இருப்பார்
ஆழ்வார் தாமும் -அவயவமாக நினைத்து இரும் என்று சாதித்து இருக்க –
இந்த வ்யக்திக்கு அடி நாம் ஆகையால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -ஸ்ரீ பராங்குச பாத பக்தம் –
ஸ்ரீ யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி-ஸ்ரீ பெரிய நம்பி -ஆச்சார்ய பதயுக்தமே கதி
கொடுமின் கொள்மின் -உபதேசம் பிரசாதித்து அருளி -தாங்கள் புத்திரர்களை இவர் மூலம் கொண்டு
சம்பந்தம் அறுதி இட்டு இருந்தார்கள்
ஆச்சார்யர் வியாஜேன சம்பந்தம் -சாந்தீபன் வசிஷ்டாதிகள் போலே
அத்வாரக சம்பந்தம் விட சத்வாரக சம்பந்தத்தை ஸ்ரேஷ்டமாக கொண்டு பிடித்தார் பிடித்தார் இத்யாதி
ஸ்ரீ தாசாரதி- ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -ஸ்ரீ நந்தகோபன் குமரன் யசோதை இளஞ்சிங்கம் இத்யாதிகளாலே ஹ்ருஷ்டானாவான் அவனும்
ஸூ உத்பாதாக விஷயீகார விஷயத்தில் உத்தாரக பிரதிபத்தி பண்ணி இருப்பார்கள் –
கண்டாகர்ணன் -உடன் பிறந்த அளவும் -விபீஷணர் பெற்ற பேறு நால்வருக்கும்
ஸ்ரீ பிரஹலாதன் -விஷயீகாரம் மகாபலி அளவும் சென்றபடியும் உண்டே
பந்த மோக்ஷம் -பிரதம விஷயம் இவை இருக்க -சரம பர்வத்தில் கேட்க வேண்டாமே –

ஸ்ரீ உடையவருக்கு முந்திய ஆச்சார்யர்கள் -உபகாரத்துவத்திலே அந்வயிக்கும் உத்தாரத்திலே புகாது —
ஸ்ரீ பகவானுக்கும் உத்தாரகத்வம் ஸ்ரீ ராமானுஜர் என்று நிகமிப்பார்
தங்கள் பக்கல் உத்தாரகத்வம் இருக்குமாகில் தங்கள் தங்கள் குமாரர்களை உடையவர் இடம் சேர்த்து இருக்க வேண்டாமே
உத்தாரகத்வம் வ்யக்தி த்ரயம் -ஸ்ரீ மான் -சேஷி தம்பதிகள் -உபய விபூதி நாதத்வம் இருக்க வேண்டும்
பொன் உலகு ஆளீரோ புவநி முழுதும் ஆளீரோ-
ஸ்ரீ பெரிய பெருமாள் அருள- ஸ்ரீ உடையவர் ஆனார் -ஆகையால் விவஸ்திதம் –
இம்மூவரிலும் இவர் இடமே உறைத்து இருக்கும்
ஸ்ரீ ஆழ்வார் அறப் பதறி வீடு பெற்றார் -மங்க ஒட்டு உன் மாயை இத்யாதிகளால் இனி இனி -20-கால் கூப்பிட்டு
-120-சம்வத்சரம் இருந்து -73-மா முனிகள் -7-இவர்களும் துடித்து இருக்க ஸூசகம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி இவர்களால் பொலிந்ததே-உத்தாரகத்தின் உறைப்பே இதன் காரணம்

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் –கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
ஸ்ரீ கீதையிலும் -அனுவ்ருத்தி ப்ரசன்னாச்சார்யார் -தானும் இருந்து விதித்து
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் -உத்தாரகம் -இருந்து உபதேசித்து திருத்துவது -இவர் பக்கலிலே
அரச மரம் -புன்னை மரம் அகில உலகம் மகிழ பிறந்தவர் மகிழ மரத்தடியில் -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மதுராந்தகத்தில் –
பர சம்பந்த வேதனம் -சங்கு சக்ர லாஞ்சனம் -வளையாதி விபூஷணம் பதிவிரதா –
ஸ்ரீ பகவத் சம்பந்தம் பூர்வகமாக மந்த்ர ரத்னம் -பஞ்ச சம்ஸ்காரம் -இவருக்கு
பின்பு நமக்கு எல்லாம் ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் -இந்த பஞ்ச சம்ஸ்காரம் -ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ ஸூக்தி அடியாக
பிரபன்ன குலமே விளங்கப்போகிறது -தேவரீர் உத்தாரகர் ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ உடையவருக்கு அருளிச் செய்து -சம்ப்ரதாயம்

வெம் கதிரோன் குலத்தில் ஓர் விளக்கு -ஸ்ரீ ராம சந்திரன் -பிரகாசமும் குளிர்ச்சியும் கலந்த -ஜனகானாம் குல கீர்த்தி-போலவே –
ஓர் இடத்தில் அவதரித்து அனைவரும் வாழ பிறந்த ஸ்ரீ எதிராசர் –
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -அமோக உத்தாரகர் நீரே என்று -நேராக-அருளிச் செய்தார் –
ஸ்ரீ எம்பாரை உதக தாரா பூர்வகமாக அளித்து -ஸ்ரீ ராமாயண வ்யாஜத்தாலே எனக்கு சம்பந்தம் கிடைத்தது –
என்று மகிழ்ந்து -நிர்பரராய் இருக்கிறோம் –
நிழலும் அடிதாருமாக இருக்க ஆசீர்வாதம் -ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா தானே இவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் -பவித்ரம் -ஸ்ரீ முதலியாண்டான் -பாதுகா -தண்டம் இரண்டுமாக
ஸ்ரீ திரு கோஷ்டியூர் நம்பி -லோக சம்ரக்ஷணர்த்தமாக தேவரீர் அவதாரம்

தரிசன ப்ரவர்த்தகராக ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷம் –
பொலிக –ஸ்ரீ திருமாலை ஆண்டான் -காலஷேபம் -நடக்க -ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி இவரை கடாக்ஷித்து —
தேவரீர் பிறந்த -அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே -கலி கெட்டு -நாரணற்கு ஆளானார் –
பிரபன்ன குல உத்தாரகர் -அஸ்மாதாதிகளைக் கரை ஏற்றவே –என்று அருள ஸ்ரீ திருமாலை ஆண்டானும்
மயிர் கூச்சு எறிந்து சம்பந்தம் பெற்ற ஹர்ஷம் -இனி நான் ஸ்ரீ ஆளவந்தாரை அறியேன் -தேவரீர் உடன் சம்பந்தமே பேற்றுக்கு தஞ்சம்
அடுத்து ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் –
அனுவர்த்தித்து -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -தேவரீர் இடமே பொருந்தும் -முக்கியமாக விலை செல்லும் –
சர்வ உத்தாரகர் -ஸ்ரீ நாத முனிகளே அருளிச் செய்த அர்த்தம் –

மேவினேன் உம் பொன்னடி -ஸ்ரீ திரு கோஷ்ட்டியூர் நம்பியும்-அவர் திருக் குமாராத்தியும்-சொன்னாராக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
அந்திம காலத்தில் -தேவரீருக்கு பேறு முற்படத்தது உடையவர் சம்பந்தத்தால் -அவரும் வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று மகிழ்ந்தார் ஸ்ரீ நம்பியும்
விக்ரஹத்தை அவள் இடம் சாதித்து -ஸ்த்ரீ என்று பாராமல் -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று சொல்லிக் கொண்டே திருவடி சேர்ந்தார்
ஸ்ரீ திருக்கச்சி நம்பி -தேவ பெருமாள் -ஆறு வார்த்தை -அறியாமல் கேட்கவில்லை -லோக ஹிதார்த்தமாக -கேட்டார் என்று ஸ்ரீ தேவப்பெருமாளே அருளிச் செய்ய

திரு மா மகள் தானே குருவாகி வந்து -சாஷாத் ஹரி நாராயண -பீதக வாடைப் பிரானார் பரம காருணிகனாய் வந்து
சஸ்த்ர பாணியாய் -இவரும் ஸ்ரீ பகவத் அவதாரமே -சம்பந்தம் கொள்ளவே ஆச்சார்யராக ஸ்ரீ பெரிய நம்பி முதலாமவர் –
ஆச்சார்யத்தை வ்யாஜமாக -சம்பிரதாய ஸ்ரவணத்தால் -பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வம் இவர் இடம் அறுதி இட்டு இருப்பார்கள்
ஸ்ரீ எம்பெருமானுக்கே இவர் உத்தாரகர் -என்றால் இவர்களுக்கு சொல்ல வேண்டாவே
ஸ்வரூப ஸத்பாவம் உண்டாக்கி கரை மரம் சேர்ப்பதே உத்தாரகம்

ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் இயற்கையான தன்மை -அத்தை இழக்க –உணர்த்தி தன் ஸ்தானத்தில் வைப்பதே உத்தாரகம்
ஸ்ரீ எம்பெருமானுக்கு -பாஹ்ய குத்ருஷ்டிகள் -மதி விகற்பால் -ப்ரஹ்ம ஸ்வரூபம் இல்லை செய்ய —
பஹு மதி –தூரஸ்திதாம்-இத்யாதிப்படியே -18-துர்மதவாதிகளும் பேர்களும் சேர்ந்து இல்லை செய்ய – –
வேதமும் ப்ரஹ்ம ஸ்வரூபங்கள் இழக்க -அத-பதித்தனாக -ஸ்வரூப சித்தி ஏற்படுத்தி -கரை மரம் சேர்த்தார் –
ஸ்ரீ கோபாலன் யாதவ வம்சம் மக்நம்-உத்தரித்தால் போலேயும் -கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலர் போலே –
ஸ்ரீ நாரதர் -ஸ்ரீ கண்ணன் பிறந்து உத்தாரகம் செய்வார் என்றது போலே
கலியும் கெடும் கண்டு கொண்மின்-ஸ்ரீ நம்மாழ்வார்
இங்கும் அங்கும் இவர் பெயரால் தர்சனம் -நிரவதிக ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ இன்று வரும் கொழுந்து விட்டு படருகிறதே -வைதிக மார்க்கம் –
அர்ஜுனன் வ்யாஜத்தாலே சரம ஸ்லோகம் பிரதம பர்வம் –
ஸ்ரீ உடையவரும் தம் பக்கல் சரம உபாயம் என்று ஸ்ரீ முதலியாண்டானுக்கு ஸ்ரீ திருநாராயண புரத்தில்-யதுகிரி மஹாத்ம்யம் வாசிக்கும் பொழுது
சதுர்த்த பாதப் பொருள் அனந்த பிரதம ரூபம் -இத்யாதி -ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாக
அருளிச் செய்ய -முதலிகளுக்கு திருப்தி இல்லாமல் இருக்கக் கண்டு -பின்னை வெளியிடுகிறோம்
அன்று இரவில் -அந்யோந்யர்களுக்கு இதில் -ரஹஸ்யமாக –
நாமே விஷயம் நம் பிறவி சர்வ உத்தாரகத்துக்கே-இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம் -என்று ஸ்ரீ உடையவரே அருளிச் செய்தார்
யதிகட்க்கு இறைவன் -யதிராஜர் -சம்பந்தம்
அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ய பலபத்ர கலவ் கச்சித் –அவ்வர்த்தம் அருளிச் செய்ய பிரார்த்திக்க கச்சித் -நாமே விஷயம்
சர்வ உத்தாரகமாய் பிறந்த பிறவியாய் இருக்கும் -மாம் ஏகம் வ்ரஜ -என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னது போலவே
உண்மையாக இருப்பதால் தற் புகழ்ச்சி இல்லையே
இவர் மட்டும் சொல்லவில்லையே -முற்பட்டார்களும் பின் பின் வந்தவர்களும் கூட இருந்து உணர்ந்தவர்களுக்கு உண்டே –

திரு அத்யயன உத்சவம் பொழுது -ஸ்ரீ பெரிய நம்பி திரு அம்சத்தார் –நாயந்தே-ஸ்ரீ ராமானுஜ உடையார் -என்னும் பொழுது வாராமல் இருக்க –
எங்களுக்கு சேஷ பூதர் அன்றோ -என்று அவர்கள் நினைக்க -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்தானத்தாலே தங்களை நினைத்து இருக்க
ஸ்ரீ அழகர் சாதித்தவை இவரோட்டை சம்பந்தம் அறுத்தால் உங்களுக்கு கதி ஏது –
ஸ்ரீ கிடாம்பி ஆச்சானுக்கு -ஒரு பாசுரம் சொல்லிக் காண் என்ன – ந தர்ம நிஷுடோமி – அநந்ய கதி அகிஞ்சனன் சொல்லி சரணம் புக
இந்த வருத்தம் தீர தானே -நம் ஸ்ரீ ராமானுஜரை வைத்தோம் -இனி அகதி சொல்லலாமோ –
இன்றும் திருப்பாவை கோஷ்ட்டி எல்லாம் ஸ்ரீ உடையவர் சந்நிதியில் தானே ஸ்ரீ ரெங்கத்தில் –
ஸ்ரீ ஷீராப்திக்கு போனேன் –ஸ்ரீ ஷீராப்தி நாதன் ஸ்ரீ சேனை முதலியாரை நியோமிக்க-
எல்லாரும் நமக்கு ஆளாம்படி- ஸ்ரீ இளையாழ்வாராக வந்து அவதரித்தார் –
சேஷோவா ஸைன்ய நாதாவோ -உண்டே
ப்ரஹ்ம ரஜஸ்ஸூம் -யாதவ பிரகாசர் -வ்ருத்தாந்தம் -அவதார விசேஷம் என்பதை வெளியிட்டதே
ஸ்ரீ உடையவரும் சாரதா பீடம் எழுந்து அருள -வ்ருத்தி கிரந்தம் -குறிப்புரை -சரஸ்வதியும் எதிரே வந்து வரவேற்று
ஸ்ரீ சர்வேஸ்வர அம்ச அவதாரம் என்று அதி ப்ரீதியுடன் -கப்யாசம் வாக்யார்த்தம் சாதிக்க பிரார்த்திக்க –
அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ ஒக்கும் – ஸ்ரீ சரஸ்வதியும் கேட்டு சந்தோஷித்து -அடியேனைக் கடாக்ஷிக்கவே நூறு காதம் வந்தீர்
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு நாமம் சாத்தி –

ஸ்ரீ பேர் அருளாளர் -கூரத்தாழ்வான் -பிரசாதிக்க –அத்தி வரதர் அர்த்தி வரதர் -நாம் வான் இளவரசாகையாலே –
யுவா குமாரா -இளமையை வீட்டுக் கொடுக்காமல் -வான் இளவரசு வைகுண்ட குட்டன்-நமக்கு ஸ்வா தந்தர்யம் மட்டமாய் இருக்கும் –
ஸ்ரீ யதி ராஜர் -அவர் தந்தோம் என்றால் போய் வாரும் என்றார் –
ஸ்ரீ உடையவர் இடம் தேவரீர் மேல் எழுத்து விண்ணப்பம் செய்ய -வலது திருச் செவி த்வயம் சாதித்து – நலம் அந்தமில் நாடு புகுவீர்
நாலூரானுக்கு பிரசாதிக்க பிரார்த்திக்க
கண்டா கர்ணன் விஷயீகாரம் அவன் பிராதாவுக்கு போலே விஷயீகாரம் நாலூரான் அளவும் செல்லும் என்று சாதித்தார் –
ஸ்ரீ பட்டரைக் கொண்டு திரு அத்யயனம் நடத்தி -பட்டரைக் கூட்டி ஸ்ரீ கோயிலுக்கு செல்ல -இத்தால் சுப ஸ்வீகாரம் கோயிலுக்கு செல்லும் வழக்கம்
உமக்கு பிதா போனீர் வ்யாகுலப்படாதீர் நாமே பிதா -ஸ்ரீ பெருமாளே சாதிக்க -புத்ர சுவீகாரம் –
த்ருஷ்டத்துக்கு நாம் -அத்ருஷ்டத்துக்கு ஸ்ரீ உடையவர் -துணிந்து இரும் -நம் பரமாயது உண்டே -திருமாலை போலே
சரம பருவத்துக்கு -சரம உபாயம் நிர்ணயம் ஸ்ரீ பெரிய பெருமாளே சாதிக்க –

ஸ்ரீ நம் ஆழ்வாரை சேவிக்க ஸ்ரீ உடையவர் எழுந்து அருள -திருமுடியை திருவடிகளில் மடுக்க சொல்லி-
கொத்து பரிவாரம் இங்கும் உண்டே -ஸ்ரீ மா முனிகள் -ஆஜ்ஜை-
அனைத்து கொத்து பரிவாரங்களும் அருளப்பாடிட்டு நம் பாதுகை ஸ்ரீ ராமானுஜரை பற்றுங்கோள்-
நம் ஸ்ரீ ராமானுஜரை நீங்கள் உடையவராய் பிழையுங்கோள்-நமக்கு ஸ்ரீ உடையவர் பட்டம் –
அன்று தொடங்கி ஸ்ரீ பாதுகை ஸ்ரீ ராமானுஜன் -அங்கு மட்டும் -முன்பு ஸ்ரீ சட கோப பாத த்வயம் ஸ்ரீ மதுர கவி –
ஆகவே ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது
ஸ்ரீ மதுர கவி வம்சம்-ஸ்ரீ பராங்குச தாசர்–யோகி -பல வருஷங்கள் -ஸ்ரீ நாத முனி -இவர் சிஷ்யர் –
ஒருத்தி மகனாய் பிறந்து மறைந்து விஸ்வரூபம் காட்டின் போலே -நாலாயிரம் –
மேவினேன் அவன் பொன்னடி -என்று சா அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
பிற்காலம் உணர்ந்து -ஸ்ரீ ராமானுஜர் பொன்னடி என்று -தாமரை அடி என்னாமல் -பரம பாவனம் என்பதால் -தாமரை போக்யத்வம்
சகல த்ரவ்ய உத்க்ருஷ்டம் -எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படி -பல ப்ரசாதகமாயும்
ருசி உள்ளார் அனைவர் இடம் வசிக்கும் வ்யக்தி தாரதாம்யம் இட்டு வர்த்தக்காமல் இருக்குமே
ஆண்களும் பெண்களும் தொடும்படியாய்
பின் தொடரும்படியாய்
கைப்பட்டால் நோக்கிக் கொள்ளுமதாய்
இழந்தால் உயிர் விடும்படி கிலேசம் கொடுக்கும்
காருண்யம் -உத்க்ருஷ்டர் உடையவர் -74-சிம்ஹாசனாதிபதிகள் மேல் விழுந்து ஆசைப்படும்படி
மோக்ஷ பல பிரதர்
இன்னார் இணையார் இல்லாமல் -ருசி உடையார் அனைவருக்கும் ரஹஸ்ய அர்த்தங்கள் வெளியிட்டு அருளி
கிருமி கண்ட சோழன் இடம் ரக்ஷணம் பேணப்பட்டு
தம்முடைய விஸ்லேஷத்தில் பலர் மூச்சடங்க–இப்படி ஏழு பெருமைகள் உண்டே –

ஸ்ரீ உடையவர் பிரயாணத்தில் -மூச்சு அடக்கினார் பலர் உண்டே
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்-உடையவராய் சேவிக்க வர -வழியில் ஒருவர் உடையவர் பிரயாணத்தை சொல்ல –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று சொல்லி மூச்சு அடக்கினார்
ஸ்ரீ குமாண்டூர் இளையவல்லி -சொப்பனத்தில் உடையவர் திவ்ய விமானம் ஏறி ஆயிரம் சூர்யன் தேஜஸ் ஸூக்களுடன் –
ஸ்ரீ பரமபத நாதன் நித்ய சூரி வர்க்கங்கள் உடன் புடை சூழ நிறைந்து ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ நாதமுனிகள் உடன் சேர்ந்து
எதிர் கொண்டு -நிரவகாசமாக நிறைந்து – தொடர்ந்து தானும் பின் போவதாக -கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து
அசல் அகத்தில் வள்ளல் மணி வண்ணனை எழுப்பி -கண்டேன் –
இனி தரியேன்-என்று -ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம் என்று அருளிச் செய்து மூச்சு அடக்கினார்
இப்படி இருந்த இடங்களிலே அடக்கினார் பலர்
அருகில் இருந்த முதலிகள் ஆற்றாமையுடன் -கோகுலத்தில் அனைத்து கோபிகளும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் குறையாமல் –
மோகித்தும் பரபரத்தும் இருப்பர் – -அழகில் -மயங்கி -சிலர் எழுப்ப -இருந்தால் போலே –
ஸ்ரீ ராமானுஜர் சத்ய ப்ரதிஜ்ஜை வாங்கிக் கொண்டார்-ஆணை இட்டு விலக்கி தரிசன அர்த்தம் பிரவர்த்திப்பிக்க விட்டு வைக்க –
ஸ்ரீ ஆளவந்தாரும் முன்பு செய்தால் போலே -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கல்யாணம் போலே இயற்க்கை-எய்தினார் உடம்பை மற்றும் அறிந்தவர் –
இறைவன் அடி சேர்ந்தார் சிலர் -அவன் உபாயம் -ஆச்சார்யர் திருவடி அடைந்து -அத்ரபரத்வ என்று இருப்பார் –
பிரிந்து முடியாமல் ஆற்றாமை மிக்கு -இப்படி வை லக்ஷண்யம் உடையவர்

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திரு குருகைப் பிரான் பிள்ளானுக்கு–பொலிக -பொலிக -அர்த்தம் கேட்டு -விஸ்மயித்து -ஆட -வேறுபாடு தோற்ற நிற்க
ஸ்ரீ ஆழ்வார் தேவரீர் திரு அவதாரம் -கண்டு கொண்மின் என்று எங்களை போல்வாரை அன்றோ அருளிச் செய்தார்
-நாமே இதுக்கு விஷயம் என்று தேவரீரும் தொட்டுக் காட்டி அருளினார் -நினைத்து ஹர்ஷ பரவசராய் –
நாடு அடங்க வாழப் பிறந்த உம் சம்பந்தம் பெற்று உம்மால் திருவாய் மொழி வியாக்யானமும் கேட்கப் பெற்றேன் என்று
ஸூஹ்ருத்த தேவரால் என்று விசமயப் பட்டார்
அன்று இரவு -ஸ்ரீ பிள்ளானைக் கைப்பிடித்து தம் திருவாராதன பெருமாள் ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதிக்கு கூட்டிச் சென்று
திருவடிகளை அவர் திரு முடியில் வைத்து இத்தையே சரணம் என்று விசுவாசித்து உபதேசித்து அருளும் –
நாளைக்கு தேவப்பெருமாள் சேவித்து ஆறாயிரப்படி அருளிச் செய்ய நியமித்தார்
அன்று உரைத்தது இன்பமிகு ஆறாயிரம் -ஸ்ரீ மா முனிகள்

ஸ்ரீ முதலி ஆண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலானோர் இருக்கும் -கோஷ்ட்டியில்
ஸ்ரீ உடையவர் திருவாய் மொழி கால ஷேபம்–ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஆஸ்ரயிக்க வர –
அவர்களை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க
குறிவித்தலையில் பனங்காயைக் கட்டினால் போலே என்று அவரும் அருளிச் செய்ய -சர்வ உத்தாரகர் –
ஜகத் அடங்க -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அவரை விஸ்வஸித்து இருக்கச் சொல்லி –
ஸ்ரீ எம்பெருமானாரும் -அவரை பற்ற நாம் உம்மிடம் வந்து திருவடிகளை தலையிலே வைத்து உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம் –
இத்தையே தஞ்சமாக நினைத்து இரும்
உபகாரம் -உத்தாரகம் -மோக் ஷப்ரதம் மூன்றும் நம் ஆச்சார்யர் உடையவர் எம்பெருமான் கர்தவ்யம்
ஸ்ரீ திருமலைக்கு ஏற-விண்ணோர் வெற்பு -திரு தாழ்வரை அடியிலே இருந்து -ஆழ்வார் தீர்த்தம் –
அங்கு இருந்து தொண்டைமான் ஸ்ரீ திருமலைக்கு செல்ல வழி இன்றும் உண்டே –
தொழும் அத்திசை உற்று நோக்கி -என்றபடி -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -ஸ்ரீ திருமலையே தருமே –
முதலிகளும் ஏற மாட்டோம் என்று வற்புறுத்தி -சொல்ல -மீண்டும் சுத்தி பண்ணிக் கொண்டு -ஏறி அருளி –
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ ஆதி சேஷ பீடம் காலை வைத்து ஏறி அவன் மடியிலே அமர்வது போலே

ஸ்ரீ திருமலை நம்பி பெருமாள் பிரசாதம் கொண்டு வரவேற்க -நானே நீசன் -ஐவரும் -ஸ்ரீ திருவடியும் அங்கே ஸ்ரீ சீதா பிராட்டி இடமும் –
உமது பெருமைக்கு ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர வேண்டும் -சகல ஜன ஜீவாது-அவனுக்கும் உத்தாரகர் நீர் –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தார் வாழியே -நான் வந்தது தகாது -அவன் நியமிக்க வந்தேன் -சென்றதும் ஸ்ரீ திருவேங்கடமுடையானும்
என்ன குறையாக வந்தீர் -தெற்கு திரு வீட்டில் உபய விபூதியும் கொடுத்தோம் -நீர் மட்டுமே நம் சொத்து –
கிடந்ததோர் கிடைக்கை உம்முடைய விபூதி கொடுத்தீர் -உம்மைக் கொடுக்க வேண்டுமே பிரான் இருந்தமை காட்டி
கண்டவாற்றால் தனக்கு உலகு என்று நின்ற -ஸ்ரீ ஹஸ்திகிரி சேவித்தான் -இருக்கும் நிலை கண்டு அனுபவிக்க வந்தேன் என்றார் –
ஸ்ரீ கோவிந்தராஜரும் ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானே -ஸ்ரீ சிதம்பர பாசுரம் நித்ய அனுசந்தானம் அங்கு இன்றும் –
ஸ்ரீ உடையவரே மூலவரை பிரதிஷ்டை-
வாரும் என்று திருவடிகளில் தலையை வைக்கச் சொல்லி இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்சனம் நடத்தும்
உம்முடைய அபிமானத்தில் ஒதுங்கினவர் நமக்கு வேண்டியவர்
அனைவரையும் நமக்கு ஆளாக திருத்தும் -இதற்கு அன்றோ உம்மை இங்கே அனுப்பி வைத்தேன் –
சூழல் பல பல என்று அவதரித்து இழவோடே போனேன் –
இத்தால் ஸ்ரீ திருவேங்கடமுடையானும் இவரது உத்தாரகத்வத்தை காட்டி அருளினார் ஆயிற்று –

ஸ்ரீ திருக்குறுங்குடி -நம்பி -அருள்பாடிட்டு -எல்லாரும் உமக்கு ஆளாய் இருக்க -அகப்படுத்திக் கொண்ட விரகு –
கேட்டு அருளும் விதத்திலே கேட்டு அருள வேண்டாவோ -திவ்ய ஆஸ்தானத்தில் இருந்து இரங்கி
தரையிலே ஓலையில் அமர்ந்து ஸிம்ஹாஸனம் கொடுத்து அருளி –
வலது பக்கம் அமர்த்தி வலது காதில் உபதேசிக்க -தலையில் வலது கை வைத்து – இடது கையை மார்பில் வைத்து –
கடாக்ஷித்து தன் ஆச்சார்யரை மனசில் வைத்து -மந்த்ர ரத்னம் த்வயம் அருளிச் செய்து -அவர் காதிலே —
ஸ்ரீ திருநறையூர் நம்பி ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -ஒருவருக்கு மட்டுமே அருளி –
நாம் முன்பு ஒரு காலத்தில் -இத்தையே செய்தாலும் -நாம் நர நாராயணன் திருமந்திரம் வெளியிட்டு –
இப்பொழுது மத் வ்யதிரிக்த்தரில் ஆச்சார்யர் -குறை நீங்கப் பெற்றோம் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தி -ஸ்ரீ ராமானுஜர் உடையார் ஆகப் பெற்றோம் -ஸ்வா தந்திரத்தில் எல்லை நிலம் ஸ்ரீ நம்பியுடைய சிஷ்யத்வம்

ஸ்ரீ நடாதூர் அம்மாள் -பக்தி பிரபத்தி -இரண்டும் துஸ் சஹமாய் -ஸ்வரூப விருத்தமாய் -விஸ்வாச துர்லபத்வம் –
இவை இரண்டும் இல்லாதவர்க்கு ஸ்ரீ எம்பெருமானார் அபிமானமே உத்தாராகம் -இத்தை ஒழியவே பேற்றுக்கு வேறு உபாயம் இல்லை –
நானும் இத்தையே விஸ்வஸித்து இருக்கிறேன் –
சரம தசையில் -மீண்டும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றி -விஸ்வஸித்து இருங்கோள் என்று இத்தையே ஸ்திரப்படுத்தி அருளினார்
பிரயாண கால -ஸ்ரீ ராமாநுஜார்யம் திருவடிகளே உத்தாரகம்

ஸ்ரீ காராஞ்சியில் சோமயாஜியார் -தேவியார் தேக உபாதியால் -ஆச்சார்யரை சென்று சேவிக்காமல் –
ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய மங்கள விக்ரஹம் எழுந்து அருளி பண்ணி -சமஸ்தானம் -மனசுக்கு பிடித்தபடி இல்லாமல்
வேறே ஏறி அருள பண்ண -அன்று சொப்பனத்தில் -அபிமானமே உத்தாரகம் என்று விஸ்வஸித்து இருக்காமல்
இப்படி அழித்து பண்ணுவான் என் -திடுக்கிட்டு எழுந்து அருளி -தேவியாரைத் துறந்து ஸ்ரீ கோயில் ஏறி
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுந்து -நடந்தத்தை அறிவிக்க -உம்முடைய ஸ்த்ரீ பாரவஸ்யத்தை தடுக்க செய்து அருளினோம் –
நீர் விட்டாலும் நாம் விட மாட்டோம் -நீர் எங்கு இருந்தாலும் நம் அபிமானத்தால் உஜ்ஜீவிப்பீர் –
சர்வ பரன்களையும் என்னிடம் பொகட்டு நிர்ப்பரராய் இரும் என்று அருளிச் செய்தார் என்று ஸ்ரீ நம் பிள்ளை அருளிச் செய்தார்

ஸ்ரீ கணியனூர் சிறியாத்தான் -தீர்த்தமாடி துடிப்புடன் உபாசன்னராய் பெரிய திரு மண்டபத்தில் ராஜ்ய சபை கூடினால் போலே –
சத்யம் சத்யம் -புநஸ் சத்யம் யதிரஜு ஜகத் குரு ஸமஸ்த உத்தாரகர் -அருளிச் செய்து -பிரபன்ன குலத்தாருக்கு எல்லாம் -கோஷித்தார்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ எச்சான் முதலானார் -இவ்வாத்மாவுக்கு ஆச்சார்யர் ஒருவரா பலரா -ஸ்ரீ பொன்னாச்சியாரை கேளுங்கோள் என்று
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்ய –
இவர்கள் அங்கு சென்று கேட்க -திருக் குழல் கற்றையை-உதறி கட்டி -அபலையான அடியேனுக்கு தெரியுமோ
ஸ்ரீ எம்பெருமானார் சொல்ல வேண்டும் -தரையில் உள்ள காவி நூலை தலையில் சூடி அனுப்ப –
அவர் செய்த வியாபாரம் என்ன என்று கேட்க -இவர்களும் சொல்ல -அர்த்தம் உணர்த்தி அன்றோ சென்றாள்-சொல்லாமல் சொன்னாளே-
இவ்வாத்மாவுக்கு -ஆச்சார்யரை பார்க்கும் போது ஓர் ஆகாரத்தால் பலராய் இருக்கும் –
ஸ்ரீ உடையவருக்கு பஞ்ச ஆச்சார்யர்கள் உண்டே -ஒன்றாக முடிந்ததால் -பேற்றைப் பண்ணிக் கொடுப்பவர் ஒருவர் என்றபடி –
தரையில் உள்ள காவி நூலை எடுத்தது -ஒருவரே உத்தாரகர் -என்று காட்டி அருளி –
தலையிலே வைத்ததால் -அனைவருக்கும் அதிசய நாயக ரத்னம் –
உள்ளே சென்றது உள்ளத்துக்குள்ளே வைத்து அனுசந்தித்து இருப்பதே க்ருத்யம்
இத்தால் ஸ்ரீ பொன்னாச்சாரியாரை விடுவித்து வெளியிட்டு அருளினார்

ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ வடுக நம்பி -இருவரும் தேவு மற்று அறியேன் -சேஷி -சரண்யன் ப்ராப்யம்- மூவருமே ஆழ்வார் –
ஸ்ரீ மதுரகவி நிலையை எமக்கும் -பிரதம பர்வம் பார்க்காமல் -தேவரீர் இடம் மட்டுமே இருக்குமாறு தந்து அருள வேண்டும் என்று பிரார்த்திக்க —
நம்மிடத்தில் இருக்குமாறு செய்தோம் -இனி என் வேண்டுவது -இந்த பிரதிபத்தி யாவதாத்ம பாவி இருக்குமாறு அருளிச் செய்ய வேண்டும் –
அங்கும் இதே நிஷ்டை என்றபடி -மிகவும் உகந்து அருளி -உபாய உபேய தமேவ சரணம் வ்ரஜேத்-நமக்கும் இரண்டு ஆகாரம் உண்டு –
இரண்டு இடத்திலும் -இங்கும் அங்கும் இரண்டையும் நம் பக்கலிலே அறுதியிட்டு இருக்க குறையில்லை
இது தான் உங்களுக்கு மட்டும் இல்லை -நம் சம்பந்திகள் அனைவருக்குமே இதுவே கார்யகரமாவது –
ப்ராப்ய பூமியில் உபாய பாவம் கொள்ளுவது எங்கனே என்னில் –
ஸ்ரீ வைகுண்டத்தில் உபாயத்வம் எதுக்கு என்னில் -அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்று அருளிச் செய்தது –
தத்துவமே உபாய ப்ராப்ய பாவங்கள் இயற்க்கை ஸ்வபாவிகம் -வந்தேறி இல்லையே -இரண்டும் ஸ்வரூபம் –
ஒன்றுக்கு கார்யம் இல்லாவிட்டால் மழுங்கி இன்னும் ஓன்று பளிச்சிடும் -அத்யாபகர் உபயன்யாசகராவும் இருக்கலாமே –
ப்ராப்யமும் ப்ராபகமும் வடிவாக கொண்டவர் -இங்கும் அங்கும் -தமேவ உபாய உபேய பாவேந -அவதாரணம் –
இவர் ஒருவரே இரண்டுக்கும் இரண்டு இடத்திலும் -வேறு ஒன்றை ஸஹிக்காதே -அந்ய யோக விபச்சேதம் –
ஸஹாயந்தரம் அஸஹ்யமாய் இருக்கும் -அந்திம உபாயம் –இது ஒன்றே

சம்சார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாக இருக்கும் -இது மோக்ஷ ஏக ஹேதுவாய் இருக்கும்
ஸ்ரீ பகவத் சம்பந்தம் ஆச்சார்ய சம்பந்தம் அபேக்ஷித்து இருக்கும் -அலர்த்தக்கடவ ஆதித்யன் நீர் சம்பந்தம் இல்லாமல் உணர்த்துவான்
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தம் வேண்டாதாய் இருக்கும் -ஸ்ரீ ஆச்சார்யர் சம்பந்தம் பெற்றே ஸ்ரீ பகவத் சம்பந்த ஞானம் பிறக்கும்
ஸ்வரூப விகாசம் -ஆச்சார்யர் விஷயீகாரத்துக்குப் பின்னே –
அவனே இதுக்கு ஆசைப்பட்டு -ஸ்ரீ கீதாச்சார்யர் -ஸ்ரீ லஷ்மீ நாதன் -குரு பரம்பரையில் -நிரபாய உபாய பூதர் ஸ்ரீ உடையவர் –
யாவதாமாபாவியாக இருக்கக் குறை இல்லை

ஆகில் ஸ்ரீ ஆளவந்தார்-ஸ்ரீ நாதமுனிகள் திருவடிகளே உபாயம் உபேயம் என்றது எங்கனம் என்னில்
உபகாரம் நினைத்து செய் நன்றியாக -மதீயம் -எனக்கு -கோஷ்டிக்கு சொல்லாமல் -க்ருதஞ்ஞா ஆவிஷ்காரம்-
கருவிலே திருவுடையனாக்கினார் -ஸ்ரீ மணக்கால் நம்பி -ஸ்ரீ உய்யக்கொண்டார் -மூலம் -உபகாரத்துக்குத் தோற்று
உபகார ஸ்ம்ருதி யாவதாத்மபாவி -அத்ர பரத்ர சாபி -என்று -அவர் அருளிச் செய்த விஷயத்து அளவும் –
ஸ்ரீ நாதமுனிகள் நினைவே யாயிற்று இவருக்கும் திரு உள்ளோடும் நினைவு –
ஆழ்வார் இடத்தில் சர்வம் -யதேவ -என்று அருளிச் செய்துள்ளார் இவரும்-ஆகவே ஆழ்வார் திருவடிகளில் தானே உபாய உபேய –
ஸ்ரீ மத தத் அங்க்ரி யுகளம் மாறன் அடி பணிந்து உய்ந்தவர் மாறன் -மேவினேன் அவன் பொன்னடி என்றார் அன்றோ -ஆகவே உடையவரே உத்தாரகம்
இங்கு மத் அன்வயியானாம் -சம்பந்தி பரம்பரைக்கும் -ஸ்ரீ நாதமுனிகள் இடம் மதீயம் மட்டும் -ஒருவரை சொல்லி உபகாரம்

ஸ்ரீ எம்பார் -திருவீதியில் குண அனுபவம் -ஸ்ரீ பட்டர் -கண்டு -ஆச்சார்யத்வம் -அனுவ்ருத்தி ஆச்சார்யரை விட க்ருபா மாத்ரா -பிரதானம் –
பரகத சுவீகாரம் பேற்றுக்கு உடல் -இவை இரண்டும் ஸ்ரீ எம்பெருமானார் -நீரும் பெருமாள் சுவீகார புத்திரர் என்று இறுமாந்து இராமல்
என்னைப்போல் அவரே உத்தாரகர் என்று விஸ்வஸித்து இரும்
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ நஞ்சீயருக்கு -திருவடி நிலையை தலையிலே வைத்து -உமக்கு இவை அன்று தஞ்சம் –
உமக்கும் எமக்கும் சர்வருக்கு உடையவரே -என்று நினைத்து இரும் இல்லாவிடில் நித்ய சம்சாரியாய் விடுவீர் –
ஸ்ரீஎம்பெருமானார் சம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல் –

ஸ்ரீ அமுதனாரும் -ஸ்ரீ ராமானுஜரும் நிற்க -வேறு -என்பர் நல் அறிவு இழந்தே
சரம பர்வம் இருக்க பிரதம பர்வத்தில் இழிவதும் அஞ்ஞான காரியம் அன்றோ
எட்ட இருந்த குருவை -விட்டோர் -பரனை வழிபடுதல் -அருளாள பெருமாள் எம்பெருமானார் -கைப்பட்ட நீரை விட்டு
மேகம் பார்த்து இருப்பது போலே–ஸ்ரீ முகில் வண்ணன் ஸ்ரீ நம்மாழ்வார் போல்வாருக்கு தானே
கைப்பட்ட பொன்னை விட்டு புதையலை தேடி தோண்டுவாரைப் போலே
ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி -ததீய சேஷத்வ ஞானம் இல்லாதவனுக்கு தத் சேஷத்வ ஞானம் இல்லாமல் போகும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டன் பிரதம பர்வத்தில் கை வையான் –
ஈஸ்வர அபிமானம் குலைத்தவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
ஆச்சார்ய சம்பந்தம் குலைத்துக் கொண்டவனுக்கு ஸ்வரூப சங்கோசம் ஸ்ரீ ஈஸ்வரன் பண்ணுவான்
இத்தால் -ஸ்ரீ எம்பெருமானாரோடு சம்பந்தம் இல்லாதவனை ஸ்ரீ ஈஸ்வரன் கை விடும்
தோஷங்களை பார்த்து கை விடார் ஸ்ரீ எம்பெருமானார் –
தானே வைகுந்தம் தரும் -யாரும் முயல வேண்டாம் -தனியாக யத்னம் பண்ண வேண்டாமே

தேவு மற்று அறியேன் -மேவினேன் அவன் பொன்னடி -இரண்டும் வேண்டும் -சர்வ பிரகாரத்தாலும் சர்வருக்கு உத்தாரகர்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி —15- பாசுரங்கள்-பாத கமல பக்தி -ப்ராவண்யம் -ஜனகம்
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை -சரணாரவிந்தம் மன்னி வாழ –
ப்ராப்ய பிராப்பகங்கள் அவர் -பேறு ஓன்று மற்று இல்லை உன் சரண் அன்றி-
ஆறு ஒன்றும் இல்லை -அந்ய யோக விவச்சேதம் -தத் ஏக நிஷ்டன்
குறை இருப்பதால் விட்டு இங்கே வரவில்லை –ஈஸ்வர அபிமானம் கலசாதபடி
ஸ்ரீ வடுக நம்பி -நம்முடைய ஸ்ரீ மதுர கவிகள் என்பாராம் ஸ்ரீ ஸ்வாமி
ஸ்ரீ ஆண்டானையும் ஸ்ரீ ஆழ்வாரையும் இரு கரையர் என்பார்
ஆச்சார்ய அபிமான நிஷ்டன் வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாமல் போலே இருப்பாரே
குண க்ருத தாஸ்யம் இல்லை -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சொல்ல இந்த உதாரணம் -தத் அபிமானத்தை தவிர வேறு ஒன்றையும் மதியான்
பாதகனான தசையிலும் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திண்ணையிலே -இருந்த விருத்தாந்த – வைத்த இடத்தில் இருக்க வேண்டுமே –
மோதிரக்கையாலே குட்டுப்பட வேண்டுமே -திருத்திப் பணி கொள்வார்
தத் அபிமான ராஹித்யத்தில் சத்தை இல்லாமல் -நான் உன்னை அன்றி இலேன் –

ஸ்ரீ வசன பூஷணம் ஆச்சார்யர் பொதுவாக இங்கே -விசேஷித்து -அனைத்தும் ராமானுஜர் -ஸ்பஷ்டமாக –
உபகாரத்வம் உத்தாரகத்வம் இரண்டையும் சொல்லும் இவை இரண்டும்
வாசா –யதீந்த்ர மனசா -முக்கரணங்களாலும் -கொள்ள வேண்டும் –
சகல வேத வித்தகர் -ஸ்ரீ அமுதனார் வீடு அளிப்பான் விண்ணுலகத்தின் நின்றும் அவதரித்து
ஸ்ரீ நம்பிள்ளை -ஸ்ரீ எம்பெருமானார் இடம் -ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி சாற்று முறைக்கு பின்பு
அடியேனுக்கு ஹிதம் அருளிச் செய்ய பிரார்த்திக்க -சொப்பனத்தில் திருவடிகளை திருமுடியில் வைத்து
இதுவே தஞ்சம் -உம்மை அண்டினாருக்கும் இத்தையே அருளிச் செய்யும்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை கூப்பிட்டு அருளிச் செய்ய -சரம தசையில் நமக்கு ஹிதம் என்ன என்று அருளிச் செய்ய –
கேட்க வேண்டுமோ அவர் அபிமானத்தில் அந்தர்கதரன பின்பு

1–இருப்பிடம் -தொழும் பெரியோர் எழுந்து இருந்து ஆடும் இடம் -ஞானாதிகர் கழித்து வர்த்திக்கும் இடமே வாசஸ்தானம்
2–அனுபவ விஷயம் இங்கு இருக்கும் நாள் -உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி உள் மகிழ்ந்தே -இதுவே கர்த்தவ்யம்
3–ஸ்ரீ ராமானுஜன் மிக்க சீலம் அல்லாது உள்ளாது என் நெஞ்சு
4–சாரா மனிசரை சேரேன்-இனி எனக்கு என்ன தாழ்வு -ஆதிக்யம் பார் -ஸ்வரூப ஹானி பிறக்கும் சேர்ந்தால்
5–புகழ் அன்றி என் வாய் பரவலாகாது -வாசா அனுசந்தேயம் இதுவே
6–மன்னு மா மலர் தாள் மறவேன் -எத்தை நினைத்தாலும் இவர் திருவடிகளையே -எவ்வாறு அடர்க்கும் தீ வினை
7–உன் தொண்டர்க்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -அநந்யார்ஹர் -இதுவும் உடையவர் இடமே பிரார்த்தித்து பெற வேண்டும்
8–மெய்யில் சீர் -திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமே -காஷாய சோபை -இல்லை எனக்கு எதிர் இல்லை எண்ணப் பண்ணுமே
9–திரு நாமங்களில் விஸ்வஸித்து -அடியார்களுக்கு கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம்
10–இது இல்லாமல் அகல் இடத்தர் ஏது பேறு என்று காமிப்பாரே துர்லபம்

சகல பிராமண ப்ரமேய தீர்க்க தர்சி வசன அனுஷ்டானங்களால் -சத்யம் சத்யம்
பொருந்தா நிலை -யாவதாத்மபாவி சம்சாரம் அநுவர்த்திக்கும்
உடையவருக்கு உடையவராய் இருப்பார்க்கு யாவதாத்மா பாவி சர்வ அபீஷ்டங்களும் சித்திக்கும்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading