முதல் ஆழ்வார்கள் அனுபவம் / அருளிச் செயல்களில் அண்ணல் அப்பன் அண்ணன் அத்தன் -பத பிரயோகங்களின் தொகுப்பு —

பர பக்தி பர ஞானம் பரம பக்தி -மூன்றுக்கும் மூவரும்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையுமே இம் மூன்று சப்தங்கள்
ஞான தரிசன பிராப்தி நிலைகள் மூன்றையும் காட்டவே
உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மணாளனும் போலே இம் மூன்றும்
அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை அர்ச்சிராதி கதி இம் மூன்றும்
வையம் தகளியா -அன்பே தகளியா-திருக் கண்டேன் இம் மூன்றும் இவற்றையே காட்டி அருளும் அருளிச் செயல்கள்

பூதத்தாழ்வார் என் நெஞ்சமே யான் -நெஞ்சிலே திருக் கைகள் வைத்து நம் ஆழ்வார் போலே சேவை –
ஆழ்வார்கள் அனைவரும் உடையவர் சந்நிதியில் சேவை திருக் காஞ்சியில் /
மூவரும் மூன்று நாளும் -நடுவில் அந்த ஆழ்வார் திரு நக்ஷத்ரம் -அவருக்கு மட்டும் கிரீடம் மற்றவர்க்கு கொண்டை – /
ஸ்ரீ ரெங்கத்தில் சதயம் அன்று மட்டும் /

பூதத்தாழ்வார் -முதலில் பாகவத சேஷத்வம் -சரம் துரந்தான் தாழ் இரண்டும் யார் தொழுவார் அவர் பாதம்
தொழுவது என் தோளுக்கு சிறப்பு என்று காட்டி அருளி –
அதனால் தான் பாகவத சேஷத்வம் -இவரே முதலில் அருளிச் செய்தார் –

திருக் கடல் மல்லை பதிகம் -விசேஷமாக காட்டி அருளி திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
சிஷ்யர் ஸ்ரீ கூரத் தாழ்வான்–பெரியவர் /- ஆச்சார்யர் திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி திருவதாரம் -1000-இவருக்கும் –சின்னவர்

ஆகஸ்த்யமும் அநாதி -செந்தமிழ் பாடுவார் என்று முதல் ஆழ்வார்களையே அருளிச் செய்கிறார் -என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை /-அஷ்ட புஜ பதிகம் –
சர்வாதிகம் -அருளிச் செயல் -எளிதில் -மான மேய சரமங்களில் -மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகாவே அளிக்கும் வீடு -/
தமிழ் ஆழ்வார்களுக்கு தொண்டு புரியுமே /
வரலாற்று மாற்றம் -ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சை / சம்சரிதம் தமிழ் -எல்லாருக்கும் -எப்போதும்–மோக்ஷம் எளிதில் கிடைக்குமே -சொல்வதே
செம்மை இது தானே / இவர்களை வைத்தே -வித்து பீஜம் –
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் -வெந்திறல் வீரரின் வீரம் ஒப்பார் -ராமனாக —
ராவண வத அனந்தரம் -தேவர்கள் வணங்க -பவான் -நாராயணோ தேவா
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ராமனா தேவனா -தெரிக்க மாட்டேன் —
திரு வேங்கடமுடையானோ -என்ற அர்த்தம் பெரியவாச்சான் பிள்ளை –
அனு கூலர் -கலப்பற்ற -பசும் தமிழ்-/ பெருமை வீரம் -எளிமை மூன்றும் கண்டார் கலியன் இவன் இடம் -/எளிமையும் பெருமையே –
பவான் -நாராயணோ தேவா -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-இங்கே -உள்ளான் -/
அந்தணர் கொல் திருவிக்ரமன் -வாமனன் -குறள் உருவாய் நிமிர்ந்து -மண் அளந்த அந்தணர் —
வந்து நிமிர்ந்து -திரு விக்ரமன் -ஒரே இடத்தில் எளிமையும் பெருமையும் –
முதல் ஆழ்வார்களை சொல்லும் ஸூ சகம் -இவை இரண்டும் -/

247-பாசுரம் வாங்கிக் கொண்ட தமிழ் கடவுள் அரங்கன் –
மா பிடிக்கு முன் நின்று -பெருகு மத வேழம்-இரு கண் /தூய தமிழ் – நல் தமிழ்- செந்தமிழ் -/
அட்டபுயகரத்தேன் -கழஞ்சு மண் கேட்ட அவதாரம் இல்லை -பெண்ணை கேட்டவன் -/
எனக்காக பிச்சை -இந்திரனுக்காக இல்லையே /
திருக்கண்ண மங்கை -பெரும் புறக்கடல் –தெள்ளியார் வணங்க்கப்படும் தேவன்-7-10-4- —
இங்கும் -முதல் ஆழ்வார்களால் -மாயனை மதில் கோவல் இடை கழி மைந்தனை மிடுக்கனை
மாயனாகவும் ஆயனாகவும் –கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /இவர்கள் தொடக்கம் தானே தெளிந்த ஞானம் –
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானம் உடையவர்கள் -/
இன்கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -திருவாய்மொழி-7-
இன்கவி தமிழையும் – பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் என்னப்படும் முதல் ஆழ்வார் -நம்பிள்ளை
மாலே- மாயப் பெருமானே -மா மாயனே என்று என்று –மாலே ஏறி -மயர்வற மதிநலம் அருளியது –
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்து பாலே பட்ட இவை பத்தும் —
அபரியாப்தமருதன் -ஆராவமுதன் -இரண்டுக்கும் வாசி உண்டே –
பராங்குச தாசர் -/ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் / பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கூரத் தாழ்வான
முதல் ஆழ்வார்/ திருப் பாண் ஆழ்வார் / பெரியாழ்வார் -ஒரு நிர்வாகம்
அக இருள் போக்க பொய்கை பிரான் -அன்று எரித்த திரு விளக்கு – செந்தமிழ் தன்னையும் கூட்டி -திரி -அமுதனார் -/
தத்வ ஹித புருஷார்த்தம் -மாறாமல் / தமிழ்த்தலைவன் பேயாழ்வார் -திராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகர் மூலம் –
வித்திட்டவர்கள் -திருக் கண்டேன் -நமக்கு சொல்லி அருளிய நம்மாழ்வார் அன்றோ –
இசைகாரர்-சீரிய நான் மறை செம் பொருள் செந்தமிழால் அளித்த பாண் பெருமாள் –
பழ மறையின் பொருள் என்றே பரவுகின்றோம் –

——————————————-

சாது கோஷ்டியுள் கொள்ளப் படுபவரே -பரம புருஷார்த்த ம் –
ரிஷ்ய சிங்கர் -அங்க தேசம் நுழையும் பொழுது மழை பெய்தால் போலே தபோ பலம் –
கொம்பு முளைத்ததா -கேட்டார்கள் -ரிஷ்ய சிங்கர் -தலை கோட்டு முனிவர் -நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழை
பரத ஆழ்வானுக்கு விசனம் தீர -முற்ற முற்ற அயோத்யா மக்கள் மகிழ்ந்து -பெருமாள் கட்டாயம் சீக்கிரம் வருவாரே –
இவர்களும் கிருஷ்ணன் உடன் கூடினால் -சம்ச்லேஷம் -மழை பொழியுமே விச்லேஷம் அனாவருத்தி

ஓங்கி -பிறர் கார்யம் செய்ய உடம்பு பணைக்குமே -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து – –அண்டம் -அளந்த நீண் முடியன் -பனி பட்ட மூங்கில் போலே
பையத் துயின்ற பரமன் -பிறர் கார்யம் செய்வது சத்தா பிரத்யுக்தம் -ஆர்த்த நாதம் இவனுக்கு ஓங்க காரணம் -வளர்ந்த சடக்கு -கையில் விழுந்த நீரும்
பிரம்மா விட்ட நீரும் ஒக்க விழுந்ததே -சென்னி மேற ஏறக் கழுவிய நீரும் –
உலகளந்த -இருந்ததே குடியாக குணாகுணம் நிரூபணம் பாராமல் -ஏக் தேசம் இன்றிக்கே -ரஷித்து-
அகவாயில் வியாப்தி -ஸ்வரூப வியாப்தி -உயிர் மிசை எங்கும் கரந்து-விக்ரஹமும் அப்படியே வியாப்தி -அனைவர் உடன் கலந்து
தாரகமாக நின்றான் -இங்கு -அனச்னன்- அந்ய -அங்கு -இரண்டு பறவை -உண்ணாமல் ஸ்புஷ்டியாக இருப்பான் –
ந தே ரூபம் நிஷேதம் தன்னது என்பதை தவிர்ந்து -பக்தாநாம் – நாம் அஹம் அபி என் உடைமையும் உன் சக்கரப்படை ஒற்றிக் கொண்டு போலே
அவனும் ந தே ரூபம்
சர்வாதிகன் உத்தமன் -ஈஸ்வரர் காலில் -அடங்கப் பெற்றதால் உத்தமன் -திருவடி சேர்த்து மத்யமன் –
ஆசார்யர் -திருவடி வையாமல் அன்றோ நாம் கைங்கர்யங்கள் செய்ய முடியாமல் -அந்தராத்யாமா உடன் ஒக்கும்

பேர் -அம்மா என்னுமா போலே –
சித்தி -அஹங்காரம் -துரபிமானம் -அகலப் பண்ணும் —அவன் பண்ணும் சித்தி தான் சுத்து –
தானும் தன்னை விட்டு பிறரும் கை விட்டு எம்பெருமான் கைக் கொள்ள அர்ஹனாவான்-
புண்டரீகாஷன் -திருக்கண் நோக்காலே சுத்தி –த்வயம் உத்தர வாக்கியம் சொல்லி சுத்தி பண்ணனும் –
தங்கம் ஜலத்தால் -வெள்ளி திருதீயம் மூணாவது போட்டு -சுத்தி -பித்தளை
புளியால் -மரத்துக்கு மஞ்சளால் மண் பாத்ரம் புதிதாகவே -ஊறுகாய் -இரவில் தொட மாட்டார்கள் –
எவர்சில்வர் கூடவே கூடாது –
பேர் -பெரிய -திரு நாமம் பெரியது எம்பெருமானை விட -பேய் ஆழ்வார் -மஹத்-மஹதாவ்யஹ -மகான் என்று அழைக்கப் படுகிறவர் -பட்டர் –
பெரிய மழை பேய் மழை போலே
பாடி -அன்புடன் பாடி –
உத்தமன் பேர் பாடி -நாங்கள் நம் பாவைக்கு -பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயாம்சம் அவனே -தாரகமும் திரு நாமம் சொல்வதே
நம் பாவை –அனுஷ்டானமும் அனநுஷ்டாமனும்-விகல்பிதமாக -சாதனம் என்று கொள்ளாமல் பிராப்ய ருசிக்காக செய்பவை –
அவனே உபாயம் என்ற போதுஅனுஷ்டிக்கா விடிலும் பலன் கிட்டும் –
பொறி வண்டு -ரசாயன சேவை பண்ணுவாரை போலே இளகிப் பறித்து -உள்ளது எல்லாம் உத்தேச்யம்-

உத்தமன் -நீ பண்ணின ஓரம் பஷபாதம் -பிரமாணித்தார் பெற்ற பேறு ஆஸ்ரித்தார் விஸ்வசிக்க –கரு மாணியாய் உலகு அளந்தாய் –
தார்மிகன் -துர்பலனான கோவிந்த நாம கீர்த்தனம் -கோவிந்த புண்டரீகாஷன் -த்ரௌபதி -பிரபலனை அண்டை கொண்டு நிர்பரனாய் –
வியாசர் -அர்ஜுனனும் விச்வசித்து -துப்புடையாரை -அடைவது சோர்வுக்கு துணை -ஆனைக்கு நீ அருள் செய்தது போலே அரியது எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரை மால் யானை -ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் —
கழுத்திலே ஓலை கட்டி தூது போயும் மார்பிலே அம்பு ஏற்றி சாரத்தியம் பகலை இரவாக்கி சத்தியமும் செய்தும் அசத்தியம் ஆயுதம் எடுத்தும்
பொய் சொல்லியும் மெய் சொல்லியும் வார் கொத்து -எல்லை நடந்தும் -கார்யமே நிர்வாகியா நிற்கும்
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரை போலே கரை காணும் காலத்தை எண்ணி இருப்பார் -உத்தமர் பேர் பாடி நன்மை –
மந்திரத்தால் –திருவிக்கிரம -ஓங்கி -உத்தமன் -வாசகம் பேர் -மந்த்ரம் சொல்லி அர்த்தம் சொல்வது -நாரணன் திண் கழல் சேர் எண் பெறுக்கு அந்நலம்
ஈறில வண் புகழ் -நாராயணன் நங்கள் பிரான் பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் –

———————————————————————

நான் கண்ட நல்லதுவே –உபக்ரமித்து -மதியத்தில் ஸ்ரீ வானமா மலை பதிகத்திலும் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எம்மான் -உபஸம்ஹாரம் –
பன்றியாய் பாழியான்—திருமங்கை ஆழ்வாரும் உபக்ரமித்து -மேலே திருவிடவெந்தை பதிகம் முழுவதும்
பட்டர் இத்தை கொண்டே ஸ்ரீ வராஹாவதார மகிமை அருளினார்

———————————————-

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்

வெண்ணெய் கடையும் பொழுது பார்க்க வில்லையே / கடை வெண்ணெய் களவு -கடைகின்ற காலத்திலேயே வெண்ணெய் ஆனந்தம்
கும் கும் இதி கிம் ப்ரமதி–அம்பா ததி மத்ய
டிம்பா நஙு பூதம் இஹ தூரம்
அம்பா நவ நீதம் இதி -கிருஷ்ண
மந்த ஹஸிதம் மாதரம்-தொல்லை இன்பத்து இறுதி –
மிடறு மழு மழுத்தோட -கையிலும் வாயிலும் வைத்து ஒட வெண்ணெய் ஓன்று மட்டுமே
இப்படி ஸ்ருஷ்டித்த பின்பே அவதரித்தான் –
தேன் குழல் நாழியில் மாவை அடைப்பது போலே வெண்ணெய் வாயில் வைத்துக் கொண்டு போடலாமே

————————————————————-

அண்ணல் அண்ணன் –திருவேங்கடம் / அண்ணன் கோயில் / திரு விண்ணகர் மேயவனே -இராமானுஜர் -நால்வரும் –
உபாயம் உபேயம் -இடர் நீக்கி கைங்கர்யம் -இரண்டுக்கும் இரண்டு சப்த பிரயோகங்கள்

குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
வெண்ணெயும் மெத்தத் திருவயிறாற விழுங்கிய அத்தன்
பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்
கோபால கோளரி அத்தன்
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல்
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணல்
அம்மா-அப்பா -அத்தா – உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
ஆழி மழைக்கு அண்ணா / பூவைப் பூ அண்ணா /
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
வித்துவக்கோட்டு அம்மா -வித்துவக்கோட்டு அம்மானே
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராயே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
அலை கடல் துயின்ற அம்மானை
திரு வெள்ளத்துக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றனர் பிறர் என்னை
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நறையூர் நம்பீ
கண் துயிலும் தண் சேறை எம்மான் தன்னை
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
அண்டத்துப் புறத்து உய்த்திடும் ஐயனை
அரியைப் பரி கீறிய அப்பனை
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பில்லா என்னப்பா என்கின்றாளால்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அணியுருவில் திருமாலை அம்மானை அமுதத்தை
வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன்
அத்த எம்பெருமான் –அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ
மா மழை அன்று காத்த அம்மான்
ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான்
என்றும் இறவாத வெந்தை இணை யடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
பொங்கி அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த அம்மானை ஏத்தாது அயர்த்து
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா
பொழில் ஏழும் உண்ட எந்தாய்
ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தன்னை
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யான் உன்னை அங்கு வந்து அணுகிற்பனே
உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அநந்தனை
அரவம் ஏறி அலை கடல் அரும் துயில் கொண்ட அண்ணலை
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
ஆற்ற நல் வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
அப்பனே அடலாழி யானே
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
அலை கடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான் தன்னை
நிலம் கீண்ட அம்மானே
கை தவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்டு அழு கூத்த வப்பன் தன்னை
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
என் வாய் முதல் அப்பனை என்று
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் யமர்ந்து உறையும்
யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே
பெரிய வப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன்
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை
தேனை நன்பாலைக் கன்னளை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
அல்லி யம் தண்ணம் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக் கடித் தானமே
வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மானே
கூத்தவம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மதுஸூத வம்மான்
ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான்
திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே
அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே
ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நிச்சயித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிதுடையன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
என் மாய வாக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்
என் கொல் அம்மான் திருவருள்கள்
அலி வண்ணன் என்னம்மான்
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ் புகழ் நாரணன்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர்
உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர்
ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading