ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -115–141-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /உபாயாந்தர தோஷம்– – ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்–பெறுவான் முறை-

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————

இதர விஷய பரித்யாகத்துக்கும் -பகவத் விஷய பரிக்ரஹத்துக்கும் பிரதான ஹேதுகள் இன்னது என்றார் கீழ் -இந்த பிரசங்கத்திலே -இதர உபாய பரித்யாகத்துக்கு பிரதான ஹேது இன்னது என்கிறார் மேல் –

சூரணை -115-

பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

(ஆய் ஸ்வாமிகள்-சித்த உபாய ஸ்வீகாரத்துக்கு பூர்வ பாவியாய்-தியாக விஷயமான -உபாயாந்தர -தியாக பிரகாரம் -தோஷம் -141-வரை சுக ரூபம் அளவாக —
அப்ராப்தம் என்று விடுகை விஷயாந்தரங்களுக்கும் மட்டும் அல்ல -சாதனாந்தரங்களுக்கும் அதுவே –சரம ஸ்லோகத்தில் -தர்ம சப்த வாசயங்களாய் -தர்மத்தை -தர்மங்களை -அங்கங்களுடன் கூடியவை சர்வ தர்மான் –பொருளாய் –மோக்ஷ சாதனங்களாக கர்ம ஞானாதி -பக்தி யோகங்களுடைய -ச உப சர்க்க–பரி- த்யஜ்ய-லபந்ததாலும் கிடைத்த சவாசன தியாகத்துக்கு பிரதான ஹேது -அஞ்ஞானம் அசக்தி இல்லை -தெரியாமையால் இல்லை-அறிய அருமை -அனுஷ்ட்டிக்க கடினம் – —பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு ஸ்வ தந்த்ர க்ருத்யங்களானவை விரோதிகள் -என்று விடுமதே ஸ்வரூபஞ்ஞனுக்கு முக்கிய ஹேது —
இவற்றை அஞ்ஞானம் அசக்திகள் அடியாக விட்டால்-(-குளித்தே உண்ண-குளித்த பின்பே உண்ண -போலே -விட்டு இருந்தாயாகில் என்னைப் பற்று என்பது இல்லை -விட்டே பற்ற வேண்டும் –என்றவாறு -)ஞான சக்திகள் உண்டான பின்பு மீண்டும் பண்ண வேண்டுமே –
நாதமுனிகள் போல்வார் பண்ண வில்லையே -அத்யந்த பாரதந்தர்யம் ஸ்வரூபம் அறிந்து -அதுக்கு விரோதம் என்பதாலேயே -சவாசன தியாகம் ஆகுமே -)

( ஓண்ணான  எம்பார் ஜீயர்  ஸ்வாமிகள் அரும்பதம் -பிரபத்தி எது- பிரபத்வயனான பகவானே -எங்கு இருக்கும் என்றால் பிரபன்னனுடைய புத்தியில் இருக்கும் –சார்ந்தே அதீனமாய் இருப்பதே பாரதந்தர்யம் –அஞ்ஞானம் ஞானாதியம் பக்தி பாரவஸ்யங்கள் முக்கிய ஹேதுக்கள் அல்ல –இவை தூண்ட பிரபன்னன் ஆகிறார்கள் -ஸ்வரூப அனுரூபம் -ஒன்றே காரணம் –பாரதந்தர்யம் -ஸூ யத்னம் —ஹேய ப்ரத்யநீக- இடத்தில் ஹேயம் இருக்குமா போலே -இருள் சூர்யன் -சேராதது போலே –
சாதனாந்தரம் ஆரோபித-வந்தேறி -அயோக்யதா ரூபம் -பாரதந்தர்ய விசிஷ்ட ஸ்வரூபம் தொடக் கூட யோக்யதை இல்லாதவை சாதனாந்தரங்கள்–போகம் மோக்ஷம் அடைய -ஸ்வாதந்திரமே வடிவான கர்மாந்தரங்கள்–ஸாத்ய பகவானுக்கும் –15-வாசிகள் உண்டே –
தார தம்யம் -தார தம உயர்ந்ததும் மிக உயர்ந்ததும் -என்றவாறு –துல்ய விகல்பம் -இதுவோ அதுவோ முதல் நிலை –அடுத்து விவஸ்தித விகல்பம்-மூன்றாவது நிலை – அவற்றை த்யஜ்யத்துக்கு -லஜ்ஜித்து இதுக்கு வர வேண்டும்
1–நாஸகத்வம்–ஸ்வரூபத்துக்கு நாசகாரம் -ஆத்மா அழியாதே -தர்ம ஸ்வரூபம் -பூ அழியாது மணம் போகலாமே –ஸ்த்ரீக்கு சக்தி பாரதந்தர்யமே -ஆணுக்கு புருஷத்வம் போலே -பதி பத்னி –சங்கு சக்கரம் சக்தி போலே அஞ்சலிக்கும் சக்தி உண்டே -அனைவரும் ஸ்த்ரீகள் -ஒருவனே புருஷோத்தமன் -ஸ்வ தந்த்ரன் – நெருப்புக்கு எரிக்கும் சக்தி -எதிர்க்கும் மந்த்ரம் -சீதா அருளியது போலே –ஒளஷதம் மணி போன்றவை தடுப்பவை -நெருப்பை அழிக்காதே-தஹிக்கும் தன்மையைத் தடுப்பது போல் -அதே போலே பாரதந்தர்ய சக்தியைத் தடுக்கும் இவை –ஸூ ரக்ஷண ஸ்வான்வய அனர்ஹத்வ ரூபத்துக்கு விரோதம் ஆகும்
2—அயோக்யத்வம் –யோக்யதையே இல்லை –உபாயாந்தரங்கள் தொடவே முடியாதே உஜ்ஜவலமான பாரதந்ரயமே ஜீவனை -இவற்றால் தீண்ட முடியாதே
3–நிஷ்பலம் -விரும்பிய பலம் கிடைக்காதே –பக்தியால் கிடைக்குமே ஸ்ரீ கீதை -ஸ்வார்த்த பரதை யுடன் கைங்கர்யம் –பரார்த்த கைங்கர்யம் வேறே -அது கிடைக்காதே இவற்றால் -யதா க்ரது நியாயம் –உபாசனம் படியே பலனும் -அங்கும் -பல்லாண்டு இங்கும் அங்கும் போலே -ஸ்வரூபம் தெரிந்தால் பரார்த்த கைங்கர்யம் தானே விரும்பிய பலமாகும் –
ஸ்வார்த்த அனுபவ கைங்கர்ய சாதனமே உபாயாந்தரங்கள் –பரார்த்த அனுபவ கைங்கர்யங்களுக்கு அசாதனங்கள் ஆகுமே –ஸூ பிரவ்ருத்தி உத்தேச்ய போகத்துக்கு- ஸர்வதா அநர்ஹத்வ -எவ்விதத்திலும் தகுதி இல்லாததே –பாரதந்தர்யம் ரூப ஸ்வரூபம்
4—-அநிஷ்ட ஹேதுத்வம் -பிடிக்காத ஒன்றையே கொடுக்கும் –கீழே நிஷ்பலம் -இங்கு நீ விரும்பாதவற்றை தான் கொடுக்கும் -பாரதந்தர்யத்துக்கு –நமோ நாராயணாயா அர்த்தம் –ஸூ போகம் நரகம் அவஸ்தை போலே ஆகுமே -மம-எனக்காக போகம் ஆகுமே
அங்கே போனால் ஸ்வரூப ஆவிர்பாவம் வருமே -பாரதந்தர்ய ஞானம் வந்து மாற்றிக் கொள்ள முடியாத தேசம் அது அன்றோ -பிரபத்தி செய்து பரார்த்த கைங்கர்யம் பெற முடியாதே அங்கும் -கொடுத்த ஸ்வ தந்தர்யத்தை மதித்து அங்கும் அதே கைங்கர்யம் -சரீரத்தை சரியாக புரிந்தால் சம்பத்து ஆகும் -இல்லை என்றால் ஆபத்து ஆகுமே –
5–விவேக பரி பந்தித்வம்-எதிர்மறை என்றவாறு –  தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை-ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம் நாரணன் தாட்கே யடிமை நான் -ஞான சாரம் -16-பாசுரம்–இதுக்குப் பிரமாணம்- –நாஹம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா ஜ்ஞா நானந்த மயஸ் த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன —நாஹம் விப்ரோ ந ச நரபதிர் நாபி வைஸ்யோ ந சூத்ரோ நோ வா வர்ணீ ந ச க்ருஹபதிர் நோ வனஸ்தோ யதிர் வா கிந்து ஸ்ரீமத் புவன பவன ஸ்தித்ய பாயைக ஹேதோர் லஷ்மீ பர்த்துர் நரஹரி தநோர் தாஸ தாசஸ்ய தாஸ —-என்னக் கடவது இறே–தேவர் —ஞாத்ருத்வ சேஷத்வங்கள் தானே ஸ்வரூபம் -நர ஹரி திருமேனி போன்ற தாச தாச அடியார்க்கு அடியான் என்றவாறு -ஆண் அல்லன் பெண் அல்லன் – அல்லா அலியும் அல்லன் -பகுத்து அறிவு -விவேகம் –இதுக்கே நேர் எதிர்மறை உபாயாந்தரம் – தேஹாத்ம விவேகம் உடையார்க்கு-அதிகார போத யுக்தேஷு– இத்யாதி விஷ்ணு புராணம் -வர்ணாஸ்ரம பிரமம் – த்ரை வர்ணிகர் அதிகாரம் தானே பக்தியோகம் -விசேஷ ஞான கர்மங்கள் –நான் செத்து வாரும் -என்ற ஐதிக்யம் உண்டே 
6--அஹங்கார மிஸ்ரத்வம் -எனக்கு விரும்பிய பலத்தை நான் சாதித்து – உபாயாந்தரங்கள் அஹங்கார மமகார கர்ப்பமாய் இருக்கும் –பகவத் அதிசயம் செய்ய முடியாதே – த்ரிவித தியாகம் கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் உண்டே என்னில் –பிரதானமாக விடச் சொல்லி –
முழுவதுமே விட்டால் -பக்தி வேலை செய்யாதே -பிரவ்ருத்தி மார்க்கம் அன்றோ -அடியோடு விட்டால் புருஷார்த்த சித்தி கிடையாதே –ஓம் நம-அவனுக்கு சேஷம் பிறருக்கும் தனக்கும் அல்லன் என்பதற்கு நேரே எதிராக துளி ஒட்டிக் கொள்ளும் இவை கூடாதே
7–ஓவ்பாதிகத்வம் -காரணத்வத்தை பற்றி -கர்மம் அனுபவிக்க கொடுத்த சரீரம் -பகவத் ஸ்வரூபம் திரோதானகம் ஸூ விஷய அனுபவ போக்யத்வ புத்தி ஜனகமாய் -சரீரத்தை கொண்டு சாதிக்க வேண்டிய பக்தி -பிரபன்னருக்கு சரீரம் வேண்டாவோ என்னில் —
இவர்களுக்கு சரீரம்- வர்ணாஸ்ரம ஹேய ஸ்பர்ச ரஹிதராய் -கல்லும் புல் என்று ஓழிந்தன -ஆசைப்பட்டு வந்த சரீரம் – -ஸ்ரீ லஷ்மீ பதி வசிக்கும் க்ருஹம் அன்றோ -திரு மேனி -இவர்களுக்கு சரீரம் இல்லை –
8–சேஷத்வ பாரதந்தர்யத்துக்கு விரூபமாய் இருக்கும் -பர அதிசய ஆதானங்களுக்கு -அர்ஹனாய் இருக்கும் சேஷத்வம் -பக்தி செய்தால் தனக்கும் பரனுக்கும் அதிசயம் –போக மோக்ஷ சாதன க்ருதி அனர்ஹத்வம் பாரதந்தர்யம் -இத்தை அறிந்து தத் தஸ்ய சத்ருசம் பவேத் -நாஸகத்வம் பாரதந்தர்ய சக்திக்கு நாஸகம் -நெருப்பின் எரிப்புக்கு அயோக்யத்வம் உபாயாந்தரம் பாரதந்தர்யம் இரண்டும் ஏக அதிகரணம் இல்லை -என்றது —இங்கு ஞான பிரதிபத்யத்வம் என்று சொல்கிறது –மூன்றாவது விரூபத்வம் –ஆரோபிதமாகக் கொண்டே -வந்தேறி -அன்றோ – பனை மரம் கீழே பாலைக் குடித்தாலும் -தப்பு சொல்வது போலே —பல த்வாரா நாசமாகும் –
9-ஐகாந்தித்வத்துக்கு பங்கம் -உபாய உபேயம் ப்ரஹ்மமே -அக்னி இந்திரன் அந்தர்யாமியாக உபாசனம் –குண உப சம்ஹார பாதம் -அவாந்தர பலன்கள் இடையில் உண்டாகும் பலன்கள் -வித்யை அனுஷ்ட்டிக்க கர்மம் -செய்ய பலமுள்ள தேகம் -பெற்று மோக்ஷம் -கடைசியிலே அங்கே போனாலும் இடையிலே ஒரு பலத்துக்கு போனால் காலை பிடித்து இழுக்கும் -ஒன்றே முடிவு என்பதற்கு பிரதிபந்தகம் தானே -பித்ரு ரிஷி தேவர் ருணம்-மூன்று கடன்கள் உபாசகன் முடிக்க வேண்டுமே –வேதம் கற்று த்ரை வர்ணிகர் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு இந்த நிர்பந்தம் இல்லையே —சர்வ பாபேப்யோ -அனைத்தையும் அவனே போக்கி -சித்தனாய் –கையும் உழவு கோலும் -சுலபனாய் -அசாதாரணமான திவ்ய மங்கள விசிஷ்டானாய் –லஷ்மி விசிஷ்டனாய் பரத்வ விசிஷ்டனாய் இருக்க -பஞ்ச பிரகார -அர்ச்சையில் தான் தானாக –கல்யாண குண பூர்ணம் இங்கே தானே —என் உடம்பில் அழுக்கை நானே போக்கி கொள்ளேனோ -நித்ய நைமித்திக கர்மம் தர்மம் ஹானி கூடாதே பரார்த்த கைங்கர்யமாக அவன் ப்ரீதிக்கு —பலாந்தர கந்த ரஹிதராய் -ஏகாந்தி – -நிஷ்டை –
11 -சேனாதி சாம்யம் ஆவது — சேனா யாகம் -விரோதி தொலைக்க -ஆரம்பித்து -சாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து -அல்பம் அஸ்திரம் உணர்ந்து-பர ந்யாஸம் -நிலைக்கு வந்த பின்பு – உபாயாந்தரமும் இது போலே -ஸ்வ தந்தரராய் பாரதந்த்ர ஞானம் இல்லாமல் -சேஷத்வ ஸ்வரூபத்தில் விசுவாசம் வர பக்தி-அதுக்கே மேல் பாரதந்தர்யம் -அதுக்கும் மேலே ஏகாந்தி நிஷ்டை -அநர்த்தாவஹம்-ஆகும்ஆஸ்திகருக்கு அபிசார கர்மங்கள் த்யாஜ்யம் போலவும்உபாசகனுக்கும் காம்ய கர்மங்கள் த்யாஜ்யங்கள் போலே-பாரதந்தர்ய ஸ்வரூபம் தெரிந்தவனுக்கு பக்தி யோகமும் த்யாஜ்யமாம் –
12—-பிராப்ய அந அனுகுணம்-பொருந்தாதே -பாரதந்தர்ய ஸ்வரூப அனுரூப பிராப்யம் பரார்த்த கைங்கர்யம் -விபரீத பலம் -ஸ்வார்த்த அனுபவத்துக்குத் தானே இவை –ப்ராப்ய விசத்ருசம் -இவை -ஏற்றவை அல்ல–
13 –பாதகமாக இருக்கும் –முமுஷுக்களுக்கு புண்யம் மோக்ஷ பிரதிபந்தகங்கள் ஆகுமே –சர்வம் ஸ்ரீ கிருஷ்ணரார்ப்பணம் பண்ணுகிறோம் பலத்தில் த்யாஜ்யம் -அதே போலே
உபாயாந்தரங்கள் பாதகமாகும்-சத்ருக்ந நித்ய சத்ருக்கனன் அநல பார்த்தோம் -ராம பக்தியாகிய சத்ருவை ஜெயித்தவன் -இவனுக்கு உத்தேச்யம் பரத கைங்கர்யம்
வல் வினையேன் சென்றேன் குடக்கூத்து பார்க்க – -மன்றம் அமரும் படி கூத்தாடிய மைந்தா என்னும் –மயங்கி கிருஷ்ண அனுபவம் இழந்தேன் -அநிஷ்ட பலன்களுக்கு சாதனம் ஆகுமே
14–சிஷ்ட அபரிஹ்ரீஹிதம் -நாத யமுனா யதி வர வர வர முனிகள் —வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் பரசுராமன் -ஆவேச அவதாரம் உபாஸிக்க கூடாதே –போக்கிய தேவனை போற்றும் புனிதன் –ராமானுஜர் உபாஸிக்க வில்லை -ஸ்தோத்ரம் பண்ணுகிறார் -இந்திராதி தேவர்கள் உபாஸிக்கத் தகாதவர்கள் போலே –அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம் பேச்சுப் பார்க்கில் கள்ளப் பேச்சும் -இத்யாதி – -பரிக்ரீஹிதங்களாக இருக்க வேண்டுமே -வியாசாதிகள் சிஷ்டர்களில் அக்ர கண்யர் முதன்மை அல்லர்-உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்பவர்கள் அல்லர்
15–கலி தர்மத்துக்கு பொருந்தாது -த்வாபர யுகம் ஸ்ரீ கீதை -சர்வ தர்மான்-சரம ஸ்லோகம் கோடி காட்டிப் போனான் -ஹரி நாம சங்கீர்த்தனம் -வேறே எந்த கதியும் இல்லை -உபாயாந்தரங்கள் காயோடு நீடு கனி உண்டு -உபாயாந்தரங்கள்  அத்யந்த துஷ்க்கரம் ‘-மாதவன் என்பதே கொண்டு -திருமால் இரும் சோலை என்றேன் என்ன – -கேவலம் மதிய -பகவத் ஸ்வீகார வியாச பூதம் – நாம உச்சாரணம் தவிர வேறே ஒன்றே பொருந்தாது—பகவத் ஸ்வீ கார முகேந நாம உச்சாரணம் இதுவும் உபாயம் இல்லை வியாஜ்யம் தான் -வாய் வார்த்தை –எண்ணிலும் வரும்-த்வயம் வாயாலே சொன்னாலே போதும் – நிர்ஹேதுக கடாக்ஷத்தால் மோக்ஷம் ஆசை வந்தவர்களுக்கு இவை விருத்தங்கள் –தாமிரபரணி வைகை காவேரி பாலாற்று கரையில் அவதரிப்பார்கள்-என்றதே ஸ்ரீ மத் பாகவதம் -)

(திருமழிசை அண்ணா அப்பு ஐயங்கார் ஸ்வாமிகள் அரும்பதம் -உபாயாந்தர தியாகாதிகள் அதிகாரி நிஷ்டை அந்தர்கதம் –பிரகரண சங்கதி -பிரபகாந்தரம் -அந்நிய பிராபகம் –பிரபத்தி உபாயம் -என்றால் –அதிகாரி நிஷ்டை -அதிகார பிரதிசம்பந்திதயா புத்திஸ்திதமான பிரபத்தி உபாயம்–கத்யர்த்த புத்யர்த்தா -அவனே உபாயம் என்ற எண்ணமே – வேறே உபாயம் என்ற எண்ணமே கூடாதே -பாரதந்தர்யம் தானே– அதி பாரதந்தர்யம் அத்யந்த பாரதந்தர்யம் –– –மூன்று நிலைகள் –பராதீன பலத்தவம் -ராஜா சேவகன் போலே-ஐஸ்வர்ய கைவல்யார்த்திகள் -என்றும்–பராதீன கர்த்ருத்வம் –தாய் சிறு குழந்தை —அதி பாரதந்த்ரம்-உபாசகன் இந்த நிலை -ஸூவ கிருதி ஸாத்ய சாதனம் -சாஸ்த்ரம் படி ப்ரீதியால் பலனை அடைகிறான் -என்றும் -இதுக்கு மேலே ஸூ ரக்ஷண ஸூ வியாபார -பராதீன அகிலம் அயோக்யத்வம்அத்யந்த பாரதந்தர்யம் –பிரபன்னன் இந்த நிலை -அபிமத தாரதம்யம் -உபாயாந்தரம் -பிரபத்தி -இரண்டிலும் -ப்ரீதியில் வேறுபாடு அவனுக்கு – மம -த்வயம் சொல்லி மிருத்யு -சமம் -மூல மந்த்ரஸ்ய நமஸ் விவரண சம்ஹிதா வாக்கியம் –பக்தி யோகத்தில் மமகாரம்
2–சித்த உபாயம் -சொல்லும் இடங்களில் உபாயாந்தர நிஷேத வாக்கியம் உண்டே
3--உத்தம மத்திம அதிகாரி உண்டே
4–ஏகாந்தி பரமை காந்தி –ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே
5– பிராராப்தி கர்ம நிவ்ருத்தி ஏற்றம்
6–அனுபந்தி பர்யந்த பல சித்தி அபாவ ரூபம் –மரணமானால் சரணம் கொடுக்கும் -சரீராவாஸனாத்தில் முக்தி -கர்மாவாசனாத்தால் முக்தி பக்திக்கு
7–சரணாகதியில் பதினாறில் ஒரு பங்கே கலா மாத்திரம் பக்தியாதிகள்
8–மாமேஷை -பகவத் யுக்தி –என்னை அவன் அடைகிறான் – நான் அவனை விடுக்கிறேன் வாசி உண்டே-நானாகா பார்த்து ஸ்வயம் ஏவ தூக்கி விடுகிறேன் லஷ்மி தேவியிடம் சொல்லி – மநோ ஹரம் பிரபத்தி -இத்யாதி சுவாரஸ்யத்தால்-கர்மாதிகளில் குறை உண்டே –
பாரமாக பக்தி சக்தி அதிகாரம் -லகுவாக பிரபத்தி சர்வாதிகாரம் –சக்தர்களுக்கு மட்டும் என்றதால் தாழ்வு இல்லை —பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –என்னில் -ஸ்வரூப பிராப்தம் 
ஜிதேந்த்ரிய அர்ஜனுக்கும் உபதேசம் உண்டே -குடாகேசன் அன்றோ –அர்த்தவாத வாக்கியம் இல்லை-தேகாவஸான முக்தி -விளம்பித்து பெற அஸஹாயம்-என்பதால் தான் -நாத முனியாதி களும் பிரபத்தி அனுஷ்ட்டித்தார்கள் -என்றும் சொல்ல முடியாதே –
பக்தி யோகத்திலும் அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை அறிந்து பண்ணினாலும் தேகாவஸானத்திலே உண்டே –அத்தைப் பண்ணி இருக்கலாமே என்னில் –ஸ்வரூப அபிராப்தம் என்பதே முக்கிய காரணம் -பிரதிபத்தி – அனு கல்பம்- இரண்டாம் பக்ஷம் – அல்ல என்றபடி -அனு பின் தொடர்ந்து -அர்த்தத்தில் -இரண்டும் வேறே பாதைகள் –அதிகாரி பேதம் 
கவ்ண முக்கிய பாவங்கள் உண்டானால் –சர்வ தர்வான் பரித்யஜ்ய -ச வாசனமாக விட்டே பற்ற வேண்டுமே என்பதால் -விதி உண்டே –பக்திக்கு ஆசைப்பட்ட பிரபன்னனுக்கும் பிராயாச்சித்தம் உண்டே -பாபங்கள் போலே – உத்தம அதிகாரி பிரபன்னன்–பிரிய தமனாக உள்ளான் – மத்யம அதிகாரி உபாசகன் – உபாய அபாய ஸம்யோகம்-என்பார்களே
மானஸ ஸ்நானம் உயர்ந்தது -ப்ரோக்ஷணம் நிஜ ஸ்நாத்தை விட உயர்ந்தது -முடியாதவர்களுக்கு -அதே போலே பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி என்பது பொறுத்ததே
அபிமத தாரதம்யம் -விசிஷ்ட அபிமத ஜனகத்வம் இதுக்கே –பக்தி அநுசிதம் பிரபத்தி உசிதம் அத்யந்த பரதந்த்ரனுக்கு –ஸ்வரூப நாசம் -ஆத்ம தர்மி போகாதே – பாரதந்த்ரம் என்கிற தர்மம் நாசகார என்கிறார் பார்த்தோம் -பிரபத்தியை ஸ்துதிக்கைக்கா அதிவாதம் என்பார்கள் பூர்வபஷிகள்-ஸ்வர்க்கத்தில் பசுக்கள் தலை கீழே நடக்கும் என்பது போலே – எறும்பி அப்பா தங்க மாளிகைகள் ஆழ்வார்களாசைப்பட்டு அருளிச் செய்தார்கள் -என்பது போலே – -ராகாதி விரோதிகளுக்கு சமம் பக்த்யாதிகள் –மோக்ஷத்துக்கு விதித்தாலும் பரார்த்த கைங்கர்யத்துக்கு விரோதி தானே -அத்யந்த பாரதந்தர்ய ஞானம் உள்ளவனுக்கு –
ரஹஸ்யத்ரய சாரத்தில் ஸ்ரீ தேசிகன் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறார் -ஸ்வரூப விரோதம் என்றது நாஸகம் என்றவாறு —ஸ்தான ப்ரமாணத்தாலே -உகாரம் அநந்யார்ஹத்வம் ஏவ -அர்த்தம் -ததேவ பூதம் தது சந்த்ரமா ஸ்ருதி வாக்கியம் -ஏவ ஸ்தானத்தில் உகாரம் பிரயோகம் உண்டே –இங்கு ஸ்தான பிரமாணம் -அபிராபத்தையால் இதர விஷயங்களை விடுகைக்கு – உபாயாந்தரங்களை விடுகைக்கு ஸ்வரூப நாசம் என்பதால்-ஸ்வரூப நாசமே அப்ராப்தம் என்றவாறு –காம்ய கர்மங்களைப் போலே உபாயாந்தரங்கள் பந்தகங்கள் இல்லா விட்டாலும்–விஸிஷ்ட அபிமத அபாவ ரூப அநர்த்தம்– ஸ்வரூபத்துக்கு அநர்த்தம் வருவதால் -தள்ளுபடியே இவை -)

பிரபகாந்தரங்கள் ஆவன -பிரபத்தி உபாயத்தை ஒழிந்த உபாயங்கள் –
அஞ்ஞான அசக்திகள் என்றது -அவற்றை அறிகைக்கும் அனுஷ்டிகைக்கும் ஈடான ஞான சக்திகள் இல்லாமை –தத் த்யாகத்துக்கு பிரதான ஹேது அன்று என்றபடி –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது-என்றது-பகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற ஸ்வரூபத்துக்கு சேராது என்னும் அதுவே முக்கிய ஹேது என்றபடி –
இத்தால் அஞ்ஞானத்தால் பிரபன்னர் என்கிற இடத்தில் சொன்ன அஞ்ஞான அசக்திகள் முக்கிய ஹேது அன்று என்னும் இடம் சொல்லுகிறது –அஞ்ஞான அசக்திகள் அடியாகா விடில் -ஞான சக்திகள் உண்டாகில் பரிகிராஹ்யம் இறேஸ்வரூப விரோதம் என்று விட்டால் இறே மறுவல் இடாது ஒழிவது–

(அஞ்ஞான அசக்திகளோ ஞாநாதிக்யமோ பக்தி பாரவஸ்யமோ பிரதான ஹேதுக்கள் அல்ல -மூவருக்கும் பிரதான ஹேது ஸ்வரூப ப்ராப்தி ஒன்றே)

————————————-

இப்படி பிரபாகாந்தரத்தை விரோதி என்று தள்ளலாமோ-அதுவும் மோஷ உபாயமாய் அன்றோ போருகிறது -அது பின்னை  யாருக்கு உபாயம் என -அருளிச் செய்கிறார் –

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

(ஆய் ஸ்வாமிகள்-இவையும் மோக்ஷ உபாயம் இல்லையோ என்னில் -உள்ளபடி உணர்ந்தவருக்கு இவை அபாயம் –நாசகரம் -விலக்கும்-அவன் இடம் இருந்து –
அதீத ப்ரீதிக்கு ஆளாக மாட்டார்களே –நெறி காட்டி நீக்குதியோ -என்பார்களே )

(சேனையாகாதிகள் வேதத்தில் வேறே அதிகாரிகளுக்கு உண்டே அதே போலே –
அஞ்ஞர்களுக்கு உபாயம்–அத்யந்த பாரதந்தர்ய ஞானிகளுக்கு அபாயம் இங்கே என்றவாறு -ஸ்வரூப விரோதி —அஞ்ஞான அசக்தியால் விட்டவர்களுக்கு உபாயம் ஆகும் -உபாயாந்தரங்களை விட்டவர்கள் –ஞானம் உள்ளவன் இவற்றை உபாயம் என்றே நினைக்க மாட்டானே –உபாயம் என்னும் பிரம்மமே என்றவாறு – ஸூ ரக்ஷண ஸூ யத்ன கந்த அஸஹமான ஸ்வரூபம் அன்றோ அத்யந்த பாரதந்தர்ய ஞானம் உள்ள பிரபன்னனுக்கு –
கீழே -42-அஞ்ஞானத்தாலே பிரபன்னர்கள் அஸ்மதாதிகள்-இங்கு ப்ரபகாந்தரம் அஞ்ஞர்க்கு உபாயம் -பக்தி போல்வன -பிரபத்தி ஞானிகளுக்கு உபாயம் –அங்கே சொன்ன அஞ்ஞானி வேறே இங்கே சொன்ன அஞ்ஞானி வேறே -என்றபடி இங்கு ஸ்வரூப யாதாம்ய ஞானம் அத்யந்த பாரதந்தர்யம் ஞானம் இல்லாதவனுக்கு -அங்கு சாமான்ய ஞானம்என் நான் செய்கேன் -பாசுரம் தான் விஷய வாக்கியம் -இப்படி இவற்றை விரோதிகள் என்னலாமோ என்னில் -அவையும் மோக்ஷ உபாயங்கள் -என்னில் உள்ளபடி உணர்ந்தவர்களுக்கு அபாயம் -நாஸகம் நீக்கும்-விஸ்லேஷம் பிறப்பிக்கும் -இரண்டும் கொடுக்கும் -செய்வதற்கு அறியாது பிரபத்தி செய்ய எளியது என்று இரண்டையும் உபாயமாக கொள்பவன் அஞ்ஞானி -ஸ்வரூப விரோதி என்று விடாமல் –அது தர்மமே இல்லை இதுவே தர்மம் என்று உணர வேண்டுமே – உபாயமாகத் தோற்றும் பக்தியாதிகள் -அத்யந்த பாரதந்தர்ய ஞானம் இல்லாதவனும் மோக்ஷம் -ஆனால் அங்கும் ஸ்வார்த்த அனுபவ கைங்கர்யம் தானே பெறுவான் -நாம் இங்கும் அல்ல அங்கும் அல்ல -பிரபத்திக்கு ஆள் இல்லை அத்யந்த பாரதந்தர்ய ஞானம் இல்லாமல் -பக்திகளுக்கு ஞான சக்திகளும் இல்லை –விதாயக சாஸ்திரம் -விதித்தது பொய்யாக்க கூடாதே -சேனையாகம் போலே பக்தி -ஒன்றாக சொல்லி -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் புரட்சி இங்கே தான் வெடித்தது –சர்வதர்மான் பரித்யஜ்ய -யாதாம்யார்த்தம் கொண்டு சாதிக்கிறார் திராவிட வேத சாஸ்த்ர விசாரம் தான் ஸ்ரீ வசன பூஷணம் -இதுவும் ப்ரஹ்ம சாஸ்திரம் போலே -சமஸ்க்ருத வேத விருத்தமாக இல்லை -முரண்பட்டு இல்லை மாறுபாடு —சமான வித்தி வேத்யத்வ நியாய லப்தம்  -விசேஷண விசேஷ்யம் மாற்றி -ஸ்வரூப விரோதிக்கு ஹேது ப்ரபகாந்தரம் -திருப்பி எழுதி -பிரபகாந்தரம் ஸ்வரூப விரோதி –லோகத்தில் அனுஷ்டானம் வேதங்களில் விதி இல்லாமல் போகுமே–பக்தியை வேறே எதுக்கோ உபாயமாக சொல்ல வில்லையே – பக்தியும் பிரபத்தியும் சமான விதியோ இரண்டும் மோக்ஷத்துக்கத் தானே -என்றால் –வேறு விதமாக அந்நிய பரத்வம் என்னலாமோ என்னில் -ஒப்புமை இல்லாத படி -என்றபடி -ஹோமம் பண்ண கருப்பு எள்ளாலோ தர்ப்பையாலோ -கிராம பசு காட்டு பசு ஹிம்சை கூடாது -ப்ரஸம்ஸா பர வாக்கியம் -அஹிம்சையே சிறந்தது -ஆஹுதி கொடுக்க அர்ஹதை இல்லை என்றும் வேறே வாக்கியம் -ஆட்டுப் பாலாலே ஹோமம் பண்ணு அடுத்த வாக்கியம் –நான்கு வாக்கியங்களையும் ஒற்றுமைப் படுத்த-அஹிம்சை -உடன் கொடுப்பது ஆட்டுப்பால் -வெட்டும் ஹிம்சையும் இல்லை -ஆடு தானாக கொடுக்கும் -கறக்கா விட்டால் ஆட்டுக்கு வலிக்குமே –முதல் வரி விதியே இல்லை -அந்நிய பரம் -அதுக்கு பிரயஜனம் விதிக்க இல்லை -ஒன்ற உடன் ஒப்பிட பிரதியோகி வேண்டுமே —இதை விட அது உசந்தது இத்யாதி -அனைத்தும் பண்ணத் தக்கது ஆகுமே என்கிற சங்கைக்கு -அஹிம்சை தான் —கீழே இத்துடன் ஒப்பிட்டு கழிப்பதற்கு தான் -அதே போலே இங்கும் பக்தி அந்நிய பரமாக சொன்னால் என்ன -இதுக்கு த்ருஷ்டாந்தம் தான் கீழே சொன்னது – மோக்ஷ உபாயமாக அன்றோ விதிக்கப்படுகிறது என்று அந்த த்ருஷ்டாந்தம் இங்கே செல்லுபடி யாகாதே என்னில் பிரபத்தி ஸ்துதிக்க ப்ரதிஷேத பிரதியாக பக்தி யோகத்தை – விவஸ்தித விகல்பம்-இது தான் இது இல்லாவிடில் அது – துல்ய விகல்பம் -இதுவோ அதுவோ எதனாலும் -ஸ்வரூபத்தை அறிந்து பக்தி யோகத்தை த்யஜிக்க —பிரசங்கிக்கும் ஆகையால் அதிகாரியே இல்லாமல் போகுமே சாஸ்திரம் அப்ராமாண்யம் வருமே –குரு லகு உபாயங்களை விவஸ்தித விகல்பமே உசிதம் – முக்கிய அனுகல்ப பாவமாக நிர்வகிக்க பார்க்கில் –மஞ்சள் பழம் செவ்வாழை பழம்-விட்டே வர வேண்டாமே – சர்வ தர்மான் பரித்யஜ்ய சொல்லி விலக்கி விட்டே அன்றோ வர வேண்டும் –அனு கல்பத்தில் நிற்பவனுக்கு முக்கியம் நினைத்தால் பிராயாச்சித்தம் என்றும் அவன் -மத்யயம உத்தம அதிகாரி சொல்லுவோமோ -விதி த்வயம் ஸ்வரூப ஞான அஞ்ஞான விதியாக கொள்ள வேண்டும் இரண்டையும் –உன்னையே பற்றி மோக்ஷம் -சரணாகதி உத்தம அதிகாரி சொல்லுமே -விவஸ்திதமாக்கிக் கொள்ள வேண்டும்)

அஞ்ஞருக்கு உபாயம் என்றது -ஸ்வ ரஷண ஸ்வ யத்ன கந்த அசஹமான ஸ்வரூபத்தை உள்ளபடி தர்சிப்பைக்கு ஈடான ஞானமில்லாதவர்களுக்கு உபாயமாய் இருக்கும் என்றபடி –

—————————————–

ஆனால் ஞானிகளுக்கு இது எங்கனே என்ன -ஞானிகளுக்கு அபாயம் –என்கிறார் –

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம் -(நாஸகரம் அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு -அபிமத அலாபம் -விஸ்லேஷ ஜனகம்)

(ஆய் ஸ்வாமிகள் -பரதந்த்ர ஸ்வரூப விரோதி என்று உணர்ந்து விடும் ஞானிகளுக்கு –ப்ராப்யத்துக்கும் விரோதம் –ஸ்வ தந்த்ர ஸ்வாமியுடைய உபேக்ஷைக்கு ஹேது –அதிமாத்ர ப்ரீதிக்கு எதிரியாகும் -இரண்டும் உண்டே -ஸூ யத்னம் இல்லாமல் அவனை எதிர்பார்த்து இருந்தால் தான் அபேக்ஷிப்பார் -சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே -என்னில் சேனை யாகமும் சாஸ்திரத்தில் உண்டாம் போலே இதுக்கும் ஆள் உண்டு -அத்யந்த பாரதந்தர்யம் அறியாத அதிகாரிக்கு என்ற சமாதானம்-சேனா யாகத்துக்கு சமம் -அவ்வதிகாரிக்கு மேற்படி உள்ளவர்க்கு தள்ளுபடி போலே -விட்டவர்கள் உள்ளார்கள் -ஞானிகளுக்கு அபாயம் என்று தள்ளுவார்கள் –ஸூ யத்ன ரூபம் -ஸ்வரூப விரோதியாய் -நாசகமுமாய் -பெருமாளால் உபேக்ஷிக்க காரணனுமாய் -நெறி காட்டி நீக்குதியாய் –ஞானாதிகர் -அங்கு ப்ரவ்ருத்தி அவனது என்று அறிந்தவர்கள் –இங்கு ஞானி என்பதால் அங்குள்ள அஞ்ஞானிகளும் இங்குள்ள அஞ்ஞானிகளும் அங்குள்ள ஞாநாதிகர்களும் இங்குள்ள ஞானிகளுக்கும் வாசி உண்டு என்பது ஸூசகம் )

அதாவது ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் உடையவர்களுக்கு அபாயமாய் இருக்கும் என்கை –

————————————————

இவர்களுக்கு அபாயம் ஆவான் என் -என்ன-அபாயமாய் ஆயிற்று ஸ்வரூப நாசகம் ஆகையாலே -என்கிறார் –

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று
ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

ஸ்வ தந்த்ர க்ருத்யமாகக் கொண்டு பரதந்த்ர ஸ்வரூப நாசக ஹேது ஆகுமே –

(ஆய் ஸ்வாமிகள் -அபாயம் -சப்தம் -நாசகர ஓன்று விஸ்லேஷம் ஏற்படுத்தும் -)

(துக்க  -ஜென்ம-தர்ம அதர்ம  ப்ரவ்ருத்தி- தோஷ பிரவ்ருத்தி -ராக த்வேஷம் மித்யாஞானம்-  -படிக்கட்டுகள் கௌதம நியாய சாஸ்திரம் யுத்த உத்தர அபாயம் நாசம் ஆனால் அதுக்கு முன் முன் நாசகார ஆகி மோக்ஷம் அபவர்க்கம் கிட்டும் -அபாயம் -நாசகர பொருளில் உபயோகம் -வியாகரணத்தில் அபாயம் -விஸ்லேஷம் உண்டே – இரண்டாவது அர்த்தம் அடுத்த சூர்ணிகை)

ஸ்வரூபம் ஆவது அத்யந்த பாரதந்த்ர்யம் – இதுக்கு ஸ்வ யத்ன ரூபம் ஆன  அது நாசகம் இறே –

——————————-

தத் உபாயத்வத்தை ஞாநினாம் அக்ரேசனரான-ஆழ்வார்  பாசுரத்தாலே தர்சிப்பிக்கிறார் –நெறி காட்டி-பெரிய திருவந்தாதி -6 -என்றுதொடங்கி –

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் —உன் பக்கலில் நின்று அகற்றப் பார்க்கிறாயோ -விலக்கும் தன்மை அபாயம் –திராவிட வேத ஸூக்தி -சாதனாந்தரங்களைக் காட்டி -அவனை அகற்றும் அபாயம் விஸ்லேஷ கரம்

(கர்ம ஞான யோகம் உபாயமாக -திருடுதல் பொய் சொல்லுதல் அபாயமாக சாஸ்திரம் சொல்லும் -ஸ்ரீ லஷ்மீ தந்திரம்-சாமான்ய சாஸ்திரம் அதுவிசேஷ சாஸ்திரம் இது –அத்யந்த பாரதந்தர்யம் பார்த்து அத்யந்த அபிமதம் பிறக்கும் அதில் -த்வம்ஸம் பிறக்கும் உபாயாந்தரங்களில் இழிந்தால் -உபாயாந்தர பரித்யா பூர்வகமாய் சித்த உபாய ஸ்வீகார ஹேது -ஸ்வரூப ஞானவான் மேல் அத்யந்த அபிநிவேசம் உண்டே அவனுக்கு -அத்யந்த பாரதந்த்ரயம் அத்யந்த வியாமோஹத்துக்கு காரணம் –உபாயாந்தரங்கள் அதுக்கு த்வம்ஸம் பிறக்க ஹேது வாகுமே)

அதாவது
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி உன் பக்கலின் நின்றும்
அகற்றப் பார்க்கிறாயோ -என்கையாலே -பிரபாகாந்தர உபாயத்வம் சித்தம் இறே என்கை —
நீக்குகை யாவது -பாரதந்தரமான வஸ்துவை ஸ்வதந்திர க்ருத்யமான -உபாய அனுஷ்டானத்திலே மூட்டி தனக்கு அசல் ஆக்குகை இறே –

—————————————–

இதனுடைய ஸ்வரூப நாஸகத்வ பிரயுக்தமான தூஷண விசேஷங்களை அருளிச் செய்கிறார் –வர்த்ததே -இத்யாதி  -வாக்ய த்வயத்தால் –

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

(ஆய் ஸ்வாமிகள்-பயத்தையும் சோகத்தையும் உண்டாக்கும் -தூஷண விசேஷங்கள் –காலம் தேசம் சரீரம் –மூன்றும் உண்டாகியே இருக்க -சேர்த்து பண்ண உபாயாந்தரங்களும் உண்டே -இவையே மிகவும் பயம் வரக் காரணங்கள் ஆகும் -ஆகாமி சோகம் வரப் போகிறதே என்பது பயம் -வந்ததும் சோகம் அப்புறம் பயம் இருக்காதே-உபாயாந்தர ஸ்ரவண அனந்தரம் -அர்ஜுனனுக்கு சோகம் பிறக்க -ஸ்வரூப அனுரூப உபாயம் உபதேசித்து சோகத்தை ஒழித்து அருளினான் –அபாயத்வம் -இரண்டையும் விளைக்குமே–உமிழ்ந்ததை கவ்வி விக்குமா போலே -விட்டத்தை மீண்டும் மூட்டி —ஆஸ்ரயித்து அளவில்லாத பெரிய பயம் –வந்திடப் போகிறதே என்ற எண்ணமே -சாதனாந்தர தர்சனத்தாலே -ஸூ ரக்ஷண ஸூ யத்தனத்தாலே -பயந்து சோகம் —பயப்படாதே -நானே போக்குவிப்பேன் –ஸ்வரூப அனுரூபம் இல்லாமல் இருக்குமே இது –அபாயங்கள் -ஸ்வரூப விரோதியத்துவமே காரணம் -பிரதான ஹேது -என்றவாறு -)

அதாவது –
காலேஷ் வபிச சர்வேஷு  திஷூ சர்வாஸூ சாஸ்யுத சரீரேச கதவ் சாபி வர்த்ததே  மே மகத் பயம் -என்று உபாயாந்தர அனுஷ்டானதுக்கு யோக்யமான கால தேச தேக விஷயமாகவும் –
உபாயாந்தரங்கள் தன் விஷயமாகவும் எனக்கு மகா பயம் வர்த்தியா நின்றது-என்கையாலும்-உபாயந்தர ஸ்ரவண அநந்தரம் அர்ஜுனனுக்கு சோகம் பிறக்க
ஸ்வரூப அநுரூப உபாயத்தை உபதேசித்து –மா ஸூச –என்று சோக அபநோதனம் பண்ணி அருளுகையாலும்-ஸ்வரூப விரோதியான ப்ரபாகாந்தரம்-ஞானிகளுக்கு பய ஜனகமாய் -சோக ஜனகமுமாயும் -இருக்கும் என்கை

————————————–

கீழ்ச் சொன்ன படி அர்த்தத்தை அங்கீகரியாத அளவில் விரோதம் காட்டுகிறார் -இப்படிக் கொள்ளாத போது-என்று தொடங்கி —

சூரணை -121-

இப்படிக் கொள்ளாத போது
ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயச் சித்தி விதி  கூடாது –

(ஆய் ஸ்வாமிகள்-உபாயாந்தரங்கள் ஸ்வரூப விரோதித்வத்தை இசைவிக்கிறார் மேல் நியாய வாதங்களால் –இவ்வாறு கொள்ளாத போது -உபாயமாக தோற்றுகிற இவற்றில் பிரபன்னன் பிரவர்த்திக்கும் பொழுது-குற்றத்தைப் போக்க பிராயச்சித்தம் –உபாயம் என்று பிரமிக்கும் அபாயங்கள் -உபாயாந்தரங்கள் -அபாயங்கள் உபாயங்களாக பற்றும் பொழுது -தெரியாமல் ஸ்வீ கரித்தால் -புத்தி பூர்வகம் இல்லாமல் கவனக் குறைவால் -பிரமாதிகமாக உபாயாந்தர ப்ரவ்ருத்தி வந்தால் —அபாய ப்ரவ்ருத்தி என்றது -தீய பழக்கங்கள் -உபாயாந்தர சம்பந்தம் -ஸூ ரக்ஷணத்தில் ஸூ அன்வயம் என்றபடி –சடக்கென பிராயச்சித்தம் பண்ண வேண்டும் -)

(மீண்டும் சரணாகதியை பிராயச்சித்தமாக —நாம் சக்தி இல்லை என்று விட்டதால் நமக்கு மீண்டும் போக மாட்டோம் என்று நம்புகிறோம் -ஸ்வரூப பிராப்தி என்ற விட்டவனுக்கு ஆபத்து ஒட்டிக் கொண்டே இருக்குமே –சக்தி இருந்தால் – (சக்தி லஜ்ஜை ஸ்வ யத்னம் குலைய வேண்டும் முன்பே பார்த்தோம்)ஆழமாக யோஜித்து அருளிச் செய்கிறார் –முன் செய்த சரணாகதியை நினைப்பதே மீண்டும் சரணாகதி -எல்லா தப்புக்களுக்கும் பண்ணின சரணாகதியை நினைப்பதே பிராயாச்சித்தம் -என்றவாறு – அஹம் ஸ்மராமி மத்பக்தம் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -பக்தி யோகத்தை பொய் சொல்வது போன்றவற்றுக்கு சமனாக சொன்னது பிரபன்னனுக்கு -புனஸ்ரணம்  விரஜேத்-மீண்டும் செய்யக் கடவேன் இல்லை-நினைப்பதை லஷிக்கிறது -மீண்டும் சரணாகதியை பண்ண வேண்டாம் –விரஜ-தாது ஸ்மரண ரூப ஞான பரம் – ஏற்பட்டுவிட்ட அநர்த்தம் நாசம் பண்ண பிராயாச்சித்தம் -உப வாஸம் சமீப வாஸம் -சப்தார்த்தம் வந்திடுமோ என்கிற பயத்தால் முதல் பிரபத்தி -வந்து விட்டதே என்ற சோகத்தால் இந்த நினைவு -மீண்டும் செய்தால் முதலில் செய்தது விலகி விடும் -மீண்டும் நினைப்பது என்றது வேறே பிராயாச்சித்தம் தேட வேண்டாம் -என்றவாறு –இது என்னிடம் உள்ளது என்ற உறுதி வருவதே இந்த நினைவு -பூர்வ க்ருத பிரார்த்தனையை ஸ்மரணம் -கொள்வதே யுக்தம் -மீண்டும் செய்வது அல்ல -தத்வ தீபம் -விளக்கிச் சொல்லுமே –பிள்ளை சந்நிதியில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் மீண்டும் நினைப்பது என் என்ன என்று வினவ – -ஒரு குள்ளன் நெடியோன் ஒருவனைக் கைப் பிடித்து ஆற்றைக் கடக்க ஒரு -நரிப் பள்ளம் (பெரிய பள்ளம்)  கண்டவாறே கையை இறுகப் பிடிப்பது போலே திட அத்யாவசயாத்தைச் சொன்னவாறு)

இப்படிக் கொள்ளாத போது-என்றது -ஸ்வரூப நாசகம் என்று கொள்ளாத போது என்றபடி —
ஏதத் பிரவ்ருத்தியில் பிராயச் சித்தி விதி  கூடாது –என்றது –
சக்ரு தேவவஹி சாஸ்த்ரார்த்த க்ருதோயம் தாரயேன் நரேம் உபாய அபாய  சம்யோகே(உபாயமாகத் தோற்றம் அளிக்கும் அபாயங்கள் )நிஷ்டையா  ஹீயதே அனையா அபய சம்ப்லவே (உபாயமாக ஸ்வீ கரித்து விட்டால்-தேசம் ப்ரக்ருதி என்பதால் சரணாகதனுக்கும் உபாயாந்தர ஸ்பர்சம் உண்டாகலாம்)சத்தே பிராய சித்தம்  சமாசரேத் பிராயசித்திரியம்  சாத்ரா யத் புனஸ்ரணம்  விரஜேத் உபயானாம் உபாயத்வ ஸ்வீகாரேப் ஏத தேவஹி -என்று பிரபன்னனாவனுக்கு  பிரமாதிகமாக உபாயாந்தர பிரவ்ருத்தி வந்த காலத்தில் -அபாய பிரவ்ருத்தியில் போலே – புன பிரபதன ரூப பிராயச்சித்தத்தை விதிக்கக் கூடாது என்கைபுன பிரதனம் ஆவதுபூர்வ பிரபதன ஸ்மரணம் -புன பிரயோகம் அன்று .

———————————————

இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –

சூரணை-122-

திருக் குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–என்று-

(ஆய் ஸ்வாமிகள் -புத்தி விசேஷம் பரிசுத்தமான பக்தியாக இருந்தாலும் அஹங்கார கர்ப்பமாக இருப்பதால் த்யாஜ்யம் என்பதை ஆப்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார்-நீர் நுமது என்று அவாஸ்யமான அஹங்காரம் -நான் எனது அருளிச் செய்ய வில்லையே ஆழ்வார் -லேச மிஸ்ரமாய்-பரிசுத்த சேஷத்வ ஞான அந்தர்கதமாய்-தத் கைங்கர்ய புத்தியா பரிசுத்தமுமான –இரண்டு பெருமை பக்திக்கும் -ஆனால் –ஸூ யத்ன ரூப -மோக்ஷ உபாயாந்தரங்கள்கொண்ட கொண்டை கோதை மீது தேன் உலாவு-பெருமைகளைச் சொல்லி ஒரு சிறுமை கூனி -பெருமாள் அப்படி –அவர் ஆராதித்த -சேஷத்வ ஞானம் தெரிய வைப்பார்-)

(இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் -அஹங்கார லேஸம் -கள் பிந்து – தீர்த்த சலிலம் -பக்தி-ராஜ வித்யா ராஜ குஹ்யம் பாவனம் – கும்பம் ஜீவாத்மா ஆனந்தமயன் தானே -கள்ளு ஒரு சொட்டு கலந்து – -ஸ்வர்ண பாத்திரம் -மய -முழுவதுமே ஸ்வர்ணம் தீர்த்த -சலிலம்–புண்ய தீர்த்தம் -தீர்த்தங்கள் ஆயிரம் – த்ருஷ்டாந்தம்-உபாயாந்தரம் புத்தி விசேஷ பரிசுத்தம் -பக்தி ஞானம் முதிர்ந்த அவஸ்தை தானே -அஹங்காரம் கலசி -கர்ப்பமான -ஓன்று அன்றோ —
சர்வஞ்ஞர் -பகவானைப் போலே ஸ்ரீ ராமானுஜரும் -மா முனிகள் புனர் அவதாரம் -தன்னைப் பற்றியே யாதாவாக அருளிச் செய்கிறார் –இங்கே பாஷ்யகாரர் என்றது –தேசிகர் சம்ப்ரதாயம் பாஷ்ய காரர் என்றும் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் எம்பெருமானார் உடையவர் என்றும் தப்பாக அபிப்பிராயம் -பர நியாசம் இங்கும் சரணாகதி அங்கும் பிரயோகங்கள் உண்டே -பாஷ்யம் சாதிக்க வேதாந்தி யாக இருக்க வேண்டும் -ஆப்த தமர் சொல்ல வந்ததுக்கு ஏற்ப இங்கே பிரயோகம் –நெய்-தங்க பாத்திரத்தில் உருக வைத்தால் -தங்க பஸ்பம் -சகல பாபங்களும் போகும் -திருவடிகளே தனம் மதீயம் -துக்கம் அஞ்ஞனம் மலம் மூன்றும் பிரகிருதி தர்மம் -ஆத்மாவுடையது இல்லையே-ஸ்தாலீ -தண்ணீர் -நெருப்பு-சம்பந்தம் நேராக இல்லாமல் பானை நடுவில்-ஸ்தாலீ நியாயம் – – -அரிசி -ஆகாசம்-சாதம் வடித்து இடம் காண வேண்டுமே -சம்பந்தம் -அன்னம் பஞ்ச பூதமயம் –ஆத்மா ஸூக துக்கம் அனுபவித்தது சரீர சம்பந்தத்தால் -இதே போலே ஸ்தாலீ சங்காதம் போலே -பக்திக்கு ஆஸ்ரயமான ஆத்மா -தீர்த்த சலிலம் தங்கக்குடம் போலே -பக்தி அவனைக் குறித்தே -அதனாலே புனித தீர்த்தம் போலே -அஹங்காரம் கலசாமல் இருக்க கூடாதே –சாத்தியமாக கொண்டால் கலாசாதே -சாத்ய ஸஹஜ பக்திகளாக இருக்க வேண்டும் -சாதன பக்தி தானே அஹங்காரம் கலந்த பக்தி-அவாஸ்ய த்ரவ்யத்தின் –அத்யல்ப பிந்து -லேசமான-ஸ்பர்சத்தால்-ஸ்ப்ருஹணீய பாவனை -உயர்ந்த தூய்மை -ஸ்வர்ணம் -பரிசுத்த தீர்த்தம்
-இங்கே அஹங்காரம் – -கர்த்ருத்வ போக்த்ருத்வ அனுசந்தானம் – ஸ்ரீ கீதையில் இந்த்ரியங்களில் வைராக்யம் அஹங்காரம் இல்லாமல் பக்தி விதி உண்டே -பக்தி யோக நிஷ்டனுக்கு எப்படி அஹங்காரம் —ஸூ கர்ம ஞான –வைராக்ய ஸாத்ய பக்தி –அன்றோ-உபாசனத்துக்கு அங்கம் அன்றோ -என்னில் – ஹேது தானாக இருக்க வேண்டும் என்றும் உபாசகனுக்கு வேண்டுமே–ஸ்வ கத உத்தேஸ்ய சாதன கோசார யத்ன ஹேதுகத்வ -வேறே வேறே அஹங்காரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -விஷ்ணு சித்தீயம் -சமாதானம் -ஸ்தூல அஹங்காரம் போனால் பக்திக்கு வரலாம் –ஸூஷ்ம அஹங்காரம் இங்கே சொல்லிற்று -இது இருந்தால் தான் ஸூ யத்னம் -ஸாத்ய சித்த உபாயங்களை வாசி இருக்க வேண்டுமே –மத் பல சாதனத்வாத் மத் நிமித்தம் இந்த கர்ம -இது சாதனம் என் பொருட்டு என்ற எண்ணம் கடைசி வரை ஒட்டிக் கொண்டே இருக்குமே )

திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஆகிறார் –சர்வஞ்ஞரான பாஷ்யகாரர் திருவடிகளிலே சேவித்து தத் அபிமத விஷயமாய் -சகல சாஸ்திரங்களும் ஆராய்ந்து அறுதி இட்டு இருக்குமவர் ஆகையாலே -ஆப்த தமராய் இருக்குமவர் அவர் இறே
பணிக்கும் படி என்றது –அருளிச் செய்யும் பிரகாரம் என்ற படி –
மதிரை யாவது –அத்யந்த நிஷித்த த்ரவ்யமாய் – ஸ்வஸ் ஸ்பர்ச -(பிந்து)-லேசமுள்ள வஸ்துகளையும் தன்னைப் போலே நிஷித்தமாக்குமது இறே –
இத்தை அஹங்காரத்துக்கு திருஷ்டாந்தம் ஆக்குகையாலே -அதினுடைய அத்யந்த நிஷித்தத்வமும் – தத் ஸ்பர்ச லேசமுள்ள வஸ்துவும் தத்வத் நிஷித்தம் என்னுமிடமும் தோற்றுகிறது –
சாத கும்ப மய மாவது – ஸூவர்ணம்-தந்மய கும்பம்-என்றது -உள்ளு த்ரவ்யாந்தரமாய் ஸூவர்ணம் மேல் பூச்சாய் இருக்கை-அன்றிக்கே அது தானே உபாதாநமாகப் பண்ணின குடம் என்றபடி —இத்தால் -பாத்திர சுத்தி சொல்லுகிறது –

தத் கத தீர்த்த ஸலிலம்  என்கையாலே -அதுக்குள் இருக்கிற ஜலத்தின் பாவநத்வம் சொல்லுகிறது -அது போலே அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்கையாலே -இங்கும் பாத்திர சுத்தியும் தத் கத பதார்த்த சுத்தியும் சொல்ல வேணும் -அதாவது – ஆத்ம ஞான மய அமல -என்கிற ஸ்வதோ நிர்மலதையலும் -பகவத் அனந்யார்ஹ சேஷதையாலும் பரிசுத்தமாய் இறே-பகவத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து இருப்பது –தத் கத பக்தியும் பகவத் ஏக ஆகார தயா பரிசுத்தை இறே –அஹங்காரம் கலசிற்றில்லை ஆகில் ஒரு குறை இல்லையே –

ஆக -இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் -ஸூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்-பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -ஸூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே –ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் –
ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து –
பணிக்கும் படி -என்றதுக்கு சேர -வாக்யத்தின் முடிவிலே -என்று என்ற இத்தனையும் கூட்டி நிர்வஹிப்பது –

————————————–

இன்னமும் இதுக்கு பல வி சத்ருசத்வம் என்பதொரு தூஷணம் உண்டு என்கிறார் –

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

(ஆய் ஸ்வாமிகள் -ஆகிலும் இவற்றை சாதனம் என்று ஈஸ்வரன் மோக்ஷம் அருளுவது எதனால் என்னில் -இந்த பக்தி சத்ருசமான உபாயம் அல்ல என்றபடி –லௌகீகத்தில் கஷ்டப்பட்டு கிடைப்பது உயர்ந்தது -பக்தி சத்ருசம் பிரபத்தி சத்ருசம் இல்லை என்று தப்பாக நினைப்போம்-அசேதனத்தைப் பற்றினால் சத்ருசம் இல்லை -பரம சேதனனைப் பற்றினால் தானே சத்ருசம் பிரபத்தி நம் செயல் இல்லையே பகவத் அனுக்ரஹம் என்று உணர வேண்டும் –விற்கவும் பெறுவார்கள் -பக்திக்கு மயங்கி தன்னையே கொடுக்கிறான் –
பலகறை ஓட்டாஞ்சில் -கொடுத்து உதாரனான அரசன் இடம் ரத்னம் வாங்குமா போலேயும்- அபேக்ஷித அர்த்த ஸூசகங்களாக தான் இருக்கும்-பக்தி சபலனாய் – பரம உதாரனான மோக்ஷம் அருளுவதும் —பக்தி அநந்யார்ஹத்வம் காட்டுவதற்கே -உபயோகி -அத்வேஷம் மாத்திரமே போதுமே – சத்ருசமும் அன்று சாதனமும் அன்று என்றபடி-)

(சத்ருசம் என்றாலே சாதனமாக இருக்காதே என்று காட்ட இந்த இரண்டு த்ருஷ்டாந்தங்கள்-லோகத்தில் உபாய உபேய -எண்ணிக்கை அளவு உண்டே-ஜ்யோதிஷ்ட்ட ஹோமத்துக்குத்தக்க பலம் சுவர்க்கம் சங்க்யா அளவு சத்ருஸ ஏற்புடையவையாய் இருக்குமே -நிஷித்த கர்மங்களிலும் செய்த அபசாரத்துக்குத் தக்க தண்டனை உண்டே அந்நிய ப்ரயுக்தமான அவற்றிலே –நியத பூர்வ வர்த்தி மாத்ரங்களான வியாஜ்யங்களாய் இருக்கும் இவை -இதுவே பக்தி – பகவத் நிர்ஹேதுக கிருபையே சாதனம்-நொண்டிச் சாக்காய் இருக்கும் – பக்தி விஷயத்திலே இப்படி என்றால் பிரபத்திக்கு சொல்ல வேண்டாமே-அல்ப கால ஸாத்ய கிருஷி யாகாதிகள் -ஸ்வர்க்கம் பெற்று கொடுக்க வில்லையோ —  -பஹு கால அனுபாவ்ய பல சாதனத்வம் காண்கிறோமே -இங்கேயும் விதி பலத்தால் -பக்தி மோக்ஷ சாதனமாம் -என்ன ஒண்ணாது-சாஸ்திரம் விதித்தது -பக்தி ஒன்றாலேயே அடைகிறான் – இருந்தாலும்- ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் விட்டு விஷ்ணு போதம் –திரு நாவாய் முகுந்தன் -அவனே காட்டினால் தான் உண்டுவிதி இருப்பதால் சத்ருசம் இல்லை என்றாலும் உபாயம் ஆகுமே என்ன ஒண்ணாதே -நிலை பெற்ற ஸ்ரீ வைகுண்டம் நிலை இல்லாத எதனாலும் அடைய முடியாது -சத்ருசம் வராதே -பிரபல சுருதி வாக்கியங்கள் -கீழ் உள்ளவை பிரபல வாக்கியங்கள் அல்ல -கிருத்து சாத்யத்வ மாத்ர பர விதி -தான் அது –அது நடந்த பின் கிட்டும் –அது உபாயம் இல்லை -என்பதே யுக்தம் -பகவானுக்கு இதர எதுவும் சாத்தியம் ஆகாதே –சத்ருச சாதனம் இல்லையாகிலும் பொருத்தம் இல்லாத சாதனம் என்னலாமோ என்னில் -விலக்ஷண உபேயம் -தத் அனுரூபமான சாதனத்தாலே சாதிப்பதே திரு உள்ளம் குளிர்ந்து ஆஹ்லாத கரமாய் இருக்கும் – கீழே பக்தி அஞ்ஞருக்கு உபாயம் -அப்யமகத வாதம் -இது அநப்யகம வாதம் வாதம் -உள்ளத்தை உள்ளபடி இங்கு அருளிச் செய்து -கீழே பூர்வ பஷ வார்த்தையை உபாயம் என்று கொண்டாலும் தோஷங்கள் உள்ளன என்பதற்காக அருளிச் செய்தது -)

அதாவது -த்வீபாந்தரந்களிலே சிலர் பல கறையை ஆபரணமாக பூண்கையாலே பலகறையை கொடுத்தவர்களுக்கு ரத்னத்தைக் கொடுப்பார்கள் –
உதாரரான ராஜாக்கள் ராஜ்ய அர்த்தியாய் வந்து ஓர் எலுமிச்சம் பழத்தை கொடுத்தவனுக்கு ராஜ்யத்தைக் கொடுப்பார்கள் –
இப்படிக் கொடுப்பார்கள் என்றால் -மகார்ககமான ரத்னத்துக்கும் மகா சம்பத்தான ராஜ்யத்துக்கும் -பல கறையும் எலுமிச்சம் பழமும்-சத்ருச சாதனம் அல்லாதா போலே –
பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா-பகவத் கீதை  -8 -22 -என்றும்
பக்த்யா த்வ அந்ய யா  சக்ய -பகவத் கீதை -11 -54 – என்கின்ற படி-பக்தி சபலனாய் -பரம உதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக -பரம புருஷார்த்த லஷண மோஷத்தைக் கொடுத்தாலும் – பலத்துக்கு இது சத்ருச சாதனம் அன்று என்கை-

———————————————-

ஆனால் விசத்ருசமான பலகறையும் எலுமிச்சம் பழத்தையும் -உபகாரமாக் கொடுத்து ரத்னத்தையும் ராஜ்யத்தையும் பெறுகிறவர்கள் தான் பெருகிறபடி என் -என்ன –
அவ்வோபாதி யாகிறது என்ன -அது தனக்கு யோக்யதை இல்லை என்கிறார் –

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

(ஆய் ஸ்வாமிகள்-நித்ய தரித்ரன் என்பதாலே அங்கும் அப்படியே  தரித்ரன்-பகவானை மட்டுமே -ஆத்மாத்மீயன்கள் வைராக்யம் –எறாளும் இறையோன் -திருவாயமொழி –மதீயம் ஒன்றுமே இல்லையே – ததீயம் என்றே கொடுக்க வேண்டும் -ஆகையால் சிறிய அளவாவது கொடுக்க வேண்டும் என்பது வராதே -எடுத்த த்ருஷ்டாந்தத்தில் எலுமிச்சம் பழம் இவனது -இங்கு அதுவும் இல்லையே -அதுக்கும் யோக்யதை இல்லையே -ராஜாவுக்கு உரியவன் அல்லன் அங்கு -இங்கு பகவானுக்கே உரியவன் -சரீராத்மா பாவ நிபந்தம் யானே நீ என் உடைமையும் நீ- இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் அவன் உரு -சரீரமாக கொண்டவன் –நியத தத் சேஷத்வம் லபிக்கிறது -சரீர சரீர பாவத்தால் -புஷ்பம் மணம் நியதி சேஷத்வம் உண்டே -பகவதீயம் என்றவாறு -இரண்டு அவதாரணங்கள் -யான் நீ -என் உடைமையும் நீ தான் சொல்லாமல் – யானே நீ –-யானும் நீயே -ஒரு துளியும் எனக்கு இல்லையே -காட்டவே -அகிஞ்சனன் அன்றோ -தரித்ரன் என்றது ஆகிஞ்சனன் என்றவாறு -)

அதாவது -அங்கு தானும் தனக்கு உரியவனாய் -தனக்கு என்று ஒரு பலகறையும் எலுமிச்சம் பழமும் உண்டாகையாலே அது செய்யலாம் —இங்கு அப்படி இன்றிக்கே –
யானும் நீ என்னுடைமையும் நீயே -திரு வாய் மொழி -2 -2 -9 -என்கிறபடியே ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தையாய்-தனக்கு என்று ஒன்றும் இல்லாத அகிஞ்சனன் ஆகையாலே -பேற்றுக்கு ஹேதுவாக அவன் விஷயத்தில் தனக்கு சமர்ப்பிக்கல் ஆவது ஒன்றும் இல்லை என்கை –

—————————————————-

கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுக்குமா போலே -அவன் தந்தது தன்னை அவனுக்கு கொடுத்தாலோ என்ன -அருளிச் செய்கிறார்

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

(ஆய் ஸ்வாமிகள்– -ஞானம் பக்தி இவைகளைக் கொடுத்தவன் அவன் தானே -அடைவு கெட கொடுப்பதே உசிதம் –புத்தி யோகம் -தாதாமி தம் -அத்தைக்கு கொண்டே அவன் என்னை அடைகிறான் –பிதாவே ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அவன் தந்ததை கொண்டு தக்ஷிணை தருவது போலே –உண்மையிலே ஒத்துக் கொண்டு- ஸ்வ தந்த்ரனான அவன் தந்த பக்தியையே -தரித்ரனான இவன் பூர்ணனான அவன் இடம் -சமர்ப்பித்து – கொடுத்தத்தை கொடுத்து நாக்கு நீட்டி நிற்கலாமோ -என்று-பரிகாசம் பண்ண தானே உடலாகும் –
அன்றிக்கே அவன் கொடுத்த பக்தியை தன்னதாகப் பாவித்து அடைவுகெட பாவித்தால் பரத்ரவ்யமாகிய -அபஹாரம் -கோயில் களவு -பரமாத்மா சொத்து -திருடுகை -வருந்தியும் மறைக்க ஒண்ணாத படி பாவஞ்ஞர் அறியும்படி -வெளிப்பட்டு விடுமே – திரு ஆபரணத்தை களவு கண்டு மீண்டும் கொடுத்ததும் ஒக்குமே )

( கௌஸ்துப மணி போலே பச்சை திரு ஆபரணம் ராஜ மகேந்திரன் சமர்ப்பித்தது –
ஸ்ரீ வைகுண்டத்தில் பக்தி கைங்கர்யம் தத்த  பிரதிதானம் -பலம் எதிர்பார்க்காமல் கொடுத்ததை திரும்பி தந்து –நீதி வானவர் -நாம் தானே அநீதி மண்ணவர்-
ஆச்சார்யரை வைத்து ப்ரஹ்ம உபதேசம் -அதிருஷ்ட பலம் சிஷ்யனுக்கு ஆச்சார்யருக்கு அபூர்வ வஸ்து கிடைக்குமே -தக்ஷிணை யாக -பிதாவுக்கு அபூர்வ புதியதான வஸ்து பெற்ற ப்ரீதி இல்லையே-அதே போலே இங்கும் நமக்கும் மோக்ஷம் அதிருஷ்ட பலம் -பகவானுக்கு அபூர்வ வஸ்து லாபம் என்று ஒரு விஷயமே இல்லை -அஸ்மத் இஷ்ட பிராப்தி மட்டுமே கிட்டும் -ஸ்வாமி சொத்து -பிதாவின் சொத்து பிள்ளை பிறந்த பின்பே பங்கு உண்டே -ஆஷேபம் -பகவான் பிதா என்று ஒத்துக் கொண்ட பொழுதே என் சொத்து ஆகுமே –
பிதா தானம் பண்ணி -தன் சொத்து இல்லை என்று கொடுத்த பின்பு பிள்ளை திரும்ப கொடுக்க அபூர்வ வஸ்து லாபம் ஆகுமே -தக்ஷிணை தானம் கொடுத்தால் தான் அனுக்ரஹம் வரும் -அபூர்வ அர்த்தம் கிடைத்த ப்ரீதியும் பிதாவுக்கு வரும் –
பகவான் இடம் அப்படி இல்லையே எந்த சொத்தையும் தன்னது இல்லை என்று ஒழிக்க முடியாதே –ஒழிக்க முடியாத ஒன்பது சம்பந்தம் உண்டே -யாருக்கும் வாரமோ சாபமோ தண்ணீர் விட்டு எத்தையும் கொடுக்க வில்லை எந்த புராணங்களிலும் -இல்லையே –
தானம் வாங்கப் போவான் -தானம் தார மாட்டார் -இவர் கொடுத்தால் வராதே இதம் ந மம சொல்ல முடியாதே அவனால் -அவனால் கொடுத்து பெற இயலாது –ஆகையால் பக்தி உபாயமாக மாட்டாதே -)

அவன் தந்ததை கொடுக்கை யாவது -விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா பிரமன் ஹஸ்த பாதாதி சம்யுதா -என்றும் -அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -சொல்லுகிறபடியே அடியிலே அவன் தந்த கரண களேபரங்களை —மன்மநா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ் குரு -என்றும் –
சததம் கீர்த்த யந்தோ மாம் யதந் தச்ச திருட வ்ரதா -என்றும் -சொல்லுகிறபடியே –
த்யான அர்ச்சன பிரணாமாதிகளாலே தச் சேஷமாம் படி பண்ணுகை-
அடைவிலே கொடுக்கையாவது –ததீயம் என்னும் புத்தியாலே சமர்ப்பிக்கை-
இப்படி கொடுக்கில் -அநு பாயமாம் -என்றது -அவனத்தை அவனுக்கே கொடுத்த இத்தனை ஒழிய -தான் ஓன்று கொடுத்தது ஆகாமையாலே–அது பேற்றுக்கு சாதனம் ஆகாது -என்றபடி 
அடைவு கெட கொடுக்கை யாவது -மதீயம் என்னும் புத்தியாலே சமர்பிக்கை –
இப்படி செய்யில் -களவு வெளிப்படும் -என்றது -பகவத் த்ரவ்ய அபஹாரம் பிரகாசிக்கும் என்ற படி –

—————————————

இன்னமும் உபாயாந்தரதுக்கு ஒரு தூஷணம் சொல்கிறார் –

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

(ஆய் ஸ்வாமிகள்-சேஷத்வ பாரதந்த்ரத்துக்கு விரூபம் -இவற்றை விலை பேசுவது போலே ஆகுமே -கீழே அஹங்கார கர்ப்பம் என்றார் –களவு வெளிப்படும் அது மாத்திரம் இல்லை -பர்த்தா கொடுத்த போகமே போஜனமாக கொள்ள வேண்டுமே -பதி விரதை இப்படி தானே நினைக்க வேண்டும் -சேஷத்வமும் ரக்ஷகத்வமும் போகுமே இல்லை யாகில் –
பக்தியை நம் கோணத்தில் பார்க்கக் கூடாதே -பகவான் ஜீவனை அனுபவிக்க பக்தி இருக்க வேண்டுமே –பரத்தை போலே இல்லாமல் பதி விரதை போலே-அவனையே நோக்கி இருக்க வேணுமே -பர போக உபகரணம் தானே பக்தி –இதுவே ஸூ போகத்துக்கு உறுப்பு என்று சேஷ பூதன் நினைக்கில் -தத் ஏக போகனான தனக்கும் -அவனுக்கும் -நிலை நின்ற அவத்யமாக தலைக் கட்டுமே -)

(விளைந்த பக்தி -அவன் இடம் சென்று தானே வளர்க்க வேண்டும் –ஈர நெல் வித்தி -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -பக்தி உழவன் –பக்தி பண்ண பண்ண ப்ரத்யக்ஷமாக முன்னே கொண்டு வந்து நிற்கப் பண்ணும் –போக ரூபமே -ஸூ ஸூ கரம்-பக்தி அனுப ரூபம் -பிராபகம் தானே சாதனம் இல்லை -நித்ய முக்தர்களைப் போலே -பக்தி உபாயம் ஆகாது —அன்பு என்னுடைய அளவு அல்லவே -எனக்கு அடங்கினது இல்லையே –அவா தத்வ த்ரயங்களிலும் விஞ்சி -பகவத் பெருமையால் -விளைந்தால் பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை– விளைந்த -அவன் செயல் -இருந்தாலும் இது விஷய ஆஸ்ரய-உபாயத்வ புத்தியை உருவாக்கும் – உண்மையான ஆகாரம் ப்ராப்ய சேஷியுடைய போக ரூபம் அனுபவிக்க கருவி உபாய பாவத்தை கண் வையாதே பிராப்ய வேஷத்தில் கண் வைத்து இருக்க ஸ்ரீ பாஷ்ய காரர் சரம தசையில் அருளிச் செய்தார் அன்றோ –செல்லப் பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க கீழே அருளிச் செய்தார் அடைவதற்காக அல்ல அனுபவிப்பதற்காகத் தானே பக்தி -நான் அவனை அனுபவிக்க இல்லை –அவன்- என்னை-அடியேனை-அனுபவிக்க தானே பக்தி –இஷ்ட சாதனம் வேறே இஷ்ட ப்ரயோஜகம் பரம்பரையா காரணம் –பக்தி பிரயோஜகம் – பகவத் கிருபை ஒன்றே இஷ்ட சாதனம் – பிரபத்தி என்றால் சாஷாத் சர்வேஸ்வரனையே சொல்லும் -அவன் ஒன்றே காரணம் -சாஸ்திரம் பக்தியை சாதனமாக சொல்லுவதும் பிரயோஜகத்தை குறித்தே சொல்ல வந்தவை –வியாஜம் -போலி காரணம் -ராத்திரி பர்த்தாவோடே சம்ஸ்லேஷித்து விடிவோறே கைக்கூலி தர வேணும் – யோக கால த்ருஷ்டாந்தம் -ராத்திரி-பார்த்தா -கணவன் சப்தம் இல்லாமல் –தாங்குபவன் பர்த்தா  புல்கு பற்று அற்றே -சம்ஸ்லேஷம் -யோக அனுபவம் முடிந்து எழுந்து -விடிவோறே-மோக்ஷ உபாயமாகக்  கொண்டு கைக்கூலி வேணும் –என்பது -வளைத்தல் -நிர்பந்தம் -பிள்ளான் வார்த்தை)

அதாவது-பார்யை ஆனவள் ஸ்வயம் பிரயோஜனமான பர்த்ரு போகத்தை ஸ்வ உதர போஷணதுக்கு- (பக்தியை மோக்ஷத்துக்கு ) சாதனம் ஆக்கி கொள்ளும் அளவில் –தன்னை பார்யை யாக விரும்பின பர்த்தாவுக்கும் – தத் பார்யை என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும் அவத்யம் ஆம் போலே –பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை மோஷ சாதனம் ஆக்கும் அளவில் –தன்னை சேஷ பூதனாக விரும்பி தன்னோடு கலந்து பரிமாறின ஈஸ்வரனுக்கும் -தத் சேஷ பூதன் என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும் அவத்யமாய் தலை கட்டும் என்கை –
ராத்திரி பர்த்தாவோடே சம்ஸ்லேஷித்து விடிவோறே கைக்கூலி தர வேணும் என்று
வளைக்குமா போலே -பக்தியை உபாயமாகக் கொள்ளுகை-என்று இறே பிள்ளானும் அருளி செய்தது –

————————————-

சூரணை -127-

வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

(இதுக்கு பதில் அடுத்த சூர்ணிகை-ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை-ஆதி பலத்துக்கு சத்ருசமாக இருக்காதே -வேதாந்தங்கள் -சேனையாகாதிகளை தாமச ராஜஸ அதிகாரிகளுக்கு இல்லை – ஹிதத்தை அனுசானம் பண்ணுமே வேதாந்தங்கள்)

இப்படி ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை -ஹிதா தனுசாசனம் பண்ணுகிற வேதாந்தங்கள் –
ஒமித் யாத்மானம் த்யாயதா-
ஆத்மா நமேவ லோக முபாசீத –
ஆத்மாவா ஆர் த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய-என்று
இச் சேதனனுக்கு மோஷ உபாயமாக விதிக்கிறதுக்கு நிதானம் அருளிச் செய்வதாக –
தத் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

——————————————————–

தந் திதானம் தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை

(ஆய் ஸ்வாமிகள்-பக்தி ஸ்வாதந்த்ர வாசனை உடன் இருக்குமே – வெல்லத்துக்குள்ளே மருந்து வைப்பது போலே -பக்தி அங்கி ஈஸ்வரன் அங்கம் -அங்கம் தான் வேலை பார்க்கும் -அங்கே உள்ளே இருப்பது மருந்து கசக்கும் -இங்கு இவன் தேன் —நச்சு மா மருந்து –-நம்பிக்கைக்கு உரிய மருந்து -நஞ்சு என்று நாம் பிரமிக்க இந்த வார்த்தை -ஈஸ்வர கிருபை தான் சாதனம் -இருவருக்கும் அவத்யம் ஏற்படுத்தும் பக்தியை உபாயமாக சாஸ்திரம் விதிப்பது – ரோக அனுகுணமான – திவ்ய மருந்துகளை -ஒப்புச் சொல்ல ஹிதைஷி -வைத்தியர் போலே –சம்சாரம் என்னும் மஹா ரோகம் -நாசகரமான மருந்து –நச்சு மா மருந்து –உபதேசித்தாலும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய இத்யாதி உபதேசம் மூலம் ஆச்சார்யர்கள் – -சேஷ பூதரான சம்சாரிகளுக்கு –கலசி -எங்கும் அந்தராத்மா தானே –யோகம் என்பதே உள்ளே உள்ள அவனை நோக்குவதே –அர்ச்சாவதாரம் கலியுகம் பிரதானம் -வெளியில் பார்த்தாலும் தன்னை நோக்க –இவன் உள்ளே பார்க்காமல் வெளியிலே திரிகிறான் – அஹங்கார கர்ப்பமான ஸூவ யத்னத்தை பக்தி என்ற பேராலே விதிக்கிறது-வத்ஸலையான மாதாவான சாஸ்திரம் – பகவானை உள்ளே இவன் தெரியாதபடி கலந்து இடுகிறது -ஸ்வ தந்திரம் அந்நிய சேஷத்வங்களை போக்கும் மருந்து இது –இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –ஸ்ரவணம் -அர்த்த கிரஹணம் உண்மை பொருளை -மனனம் விசாரம் பண்ணி நிலை –நிதித்யாஸனம் இச்சா பூர்வக இடைவிடாமல் த்யானம் -போக அனுபவ ரூபம் வாசனை பலத்தால் ஸூவ யத்னத்திலே பிரார்த்தித்து -முதலிலே சர்வேஸ்வரனையே நோக்காமல் இருக்கப் பண்ணும் )

அதாவது -அத்யந்த ருக்ணராய் திரியா நிற்க செய்தே -அத்தை அவிளம்பேன போக்கும்
ஆப்தமான மகா ஒவ்ஷதத்தை சேவிக்கச் சொன்னால் -அதுக்கு இசையாத பால புத்ராதிகளுக்கு -அவர்கள் ஆசைப் பட்டு விநியோகம் கொள்ளும் வஸ்துகளிலே அந்த ஒவ்ஷதத்தை கலசி இடும் -வத்சலரான மாத்ராதிகளைப் போலே -சீக்ரமாக சம்சார வியாதியை தீர்க்கும் -சித்தோ உபாயமாகிற நச்சு மா மருந்தை-திரு வாய் மொழி -3 -4 -5 –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வமாக சேவிக்கச் சொல்லி -முதலிலே உபதேசித்தால் –
அநாதியாய் வருகிற வாசநையால் அதுக்கு இசையாத சேதனரையும் விட மாட்டாமையாலே அவர்களுக்கு அபிமதமான ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கிற உபாசனத்திலே -தத் அங்கத்வேன-சித்தோ உபாயமான ஈஸ்வரனை கலந்து தாத்ருசமான -உபாசனத்தை அவர்களுக்கு மோஷ உபாயமாக விதிக்கிற இத்தனை என்கை –
த்ருஷ்டாந்தத்தில் அபிமத வஸ்து வியாதிகரம் அன்றியே தந் மிஸ்ரமாக பிரயோகித்த ஒவ்ஷதமே வியாதிகரம் ஆகிறது போலே -த்ருஷ்டாந்தகத்திலும் -உபாசனம் அன்றிக்கே -தந் மிஸ்ரமான ஈஸ்வரனே உபாயம் என்னும் இடம் சம்ப்ரதிபந்தம் –
அவ்யவதாநேன சேவிக்கும் அளவில் – அவிளம்பேன வியாதியை போக்கும் ஒவ்ஷதம் அபிமத வஸ்து மிஸ்ரமான போது- விளம்பேன கார்யகரம் ஆகிறாப் போல் ஆய்த்து -உபாசன மிஸ்ரமான போது-ஈஸ்வரன் விளம்ப பல ப்ரதன் ஆகிறதும் –

———————————————–

இனி இப்படி இது தன்னை விதித்தது கீழ் நின்ற நிலையைக் குலைத்து – மேலே கொண்டு போகைக்காக இத்தனை என்கிறார் –

சூரணை -129-

இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

(ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பு ஐயங்கார் அரும்பதம் -பர ஹிம்சை நிவர்த்திப்பது – என்றது-அபிசார – காம்ய கர்மாக்களை பண்ணுவதை நிவர்த்திக்க என்றபடி -தாமச ராஜஸ சாத்விக பரம ஸாத்விகன் -மேலே மேலே அதிகாரிகள் -சேனா யாகம் -தொடங்கி-பிரபத்தி பர்யந்தம் சாஸ்திரம் விதிக்கும் -பர ஹிம்சை -உயர்ந்த -சேனையாதி ஹிம்சை போலே இல்லாமல் ஜ்யோதிஷ்டோஹோமாதி ஹிம்சைக்கு மேலே என்றபடி –ஹிம்ஸா பரம் -ஹியோதிஷ்டிஹோமாதிக்கும் வெள்ளாட்டு ஹிம்சை உண்டே -இதுவும் ஹிம்சாபரமாய் இருக்கும்-பிரபன்னன் உபாசனம் தள்ளி என்ன ஹிம்சை என்னில் -ஹிம்ஸா பாரமாய் -ஹிம்சை போலே இருக்கும் -இப்படி இரண்டு நிர்வாகம் – பிரவர்தகர் பக்தியை விதித்து -என்றைக்கும் பக்தி உண்டு – பரம சாத்விகனுக்கு தான் இது உபாயம் இல்லையே-பிரவர்த்திப்பார் -கர்த்ரு வேணும் -உபாசகன் பக்தி யோகன் –வேதம் விதிக்கும் -சாஸ்த்ர பரம் வேத பரம் இங்கே -குறிக்கும் –முக் குணத்தவர்களுக்கும் சொல்லும்
வளர்த்த தாயாரின் வியாவர்த்தி பெற்ற தாய் –கண் குறை –தமோ குணம் -நிஷ்டன்-தர்மி ஸ்வரூபம் மறைக்கும்-இன்னாரை தெரியாதவன்-ரூபி தர்மி இங்கே சொல்லி -தர்ம ஸ்வரூபம் மறைக்கும் காது–ரஜஸ் -அவன் பற்றி இன்னான் என்று கேட்டு அறியாதவன் ஆகாச தர்ம -சப்தம் கிரஹிக்காதே-படு கரணர்-சாத்விகர் -தர்மம் தர்மி யதாவத் அறிந்தவர்
சாஸ்த்ர விசுவாச -முதல் நிலை – தேஹாத்ம விவேகம் அறிந்து இரண்டாம் நிலை -அந்நிய சேஷத்வம் ஸூவ ஸ்வாதந்த்ர நிவ்ருத்தி-மூன்றாம் நிலை -அத்யந்த பாரதந்தர்யம் நான்கு நிலைகள் -தமோ – ரஜஸ் – சாத்விக – பரம சாத்விக -நான்கு அதிகாரிகள் –சேனையாக விதி – காரீரீ-ஜ்யோதிஷ்டஹோமாதி விதி (விருஷ்ட்டி அன்னம் ஸ்வர்க்கம்–ஆதி மற்ற காம்ய கர்மங்கள்)-உபாசன விதி – பிரபத்தி விதி -நான்கும்-நாஸ்திகர் தொடங்கி -தேகாத்ம பிரமம் -அந்நிய சேஷத்வ–ஸூ ஸ்வா தந்திரம் –தத் தத் -ப்ரத்ய நீக –எதிராக-ஆஸ்திக்ய -தேகாத்ம விவேக – அந்நிய சேஷத்வ–ஸூ ஸ்வா தந்திரம் அபாவ -அனுசந்தான ரூபம் -சேதன புத்தி பக்குவம்-மூன்று நிலைகளை மட்டும் சொல்லி-நான்காவது பரம ஸாத்விகன் ஆனபின்பு பாகம் அடைய ஒன்றுமே இல்லை-பலத்தை பார்த்து ஆசை -சத்ரு வதம்-ஸ்வர்க்கம் -மோக்ஷங்களில் உத்தர உத்தர -பக்தியும் பிரபத்தியும் மோக்ஷம் தானே பலம் -ப்ரவர்த்திப்பித்து –)

( ஸ்ரீ எம்பார் ஜீயர் அரும்பதம்-பஞ்ச மஹா பாதகம் -ஆறாவது பக்தி -குடக் கூத்துக்கு போனது வினையால் போலே- ராம பக்தி சத்ரு போலே–அத பாதக பீதஸ் த்வம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மஹா பாரத ஸ்லோகம் -பாரதத்தில் தர்ம ராஜன் யமன் -தன்னுடைய புத்ரன்-தர்ம ராஜன்- -கிருஷ்ணன் பக்கலில் இருக்கச் செய்தேயும் அவனே தஞ்சம் என்று விசுவாசம் இல்லாமல்-ஹிரண்யகசிபு தர்மத்தை தடுத்து யாகம் பண்ண ஒட்டாமல் -இங்கு சாஷாத் தர்மம்-யமன் சண்டாள வேஷத்துடன் அத்யந்த பசி யுடன் சோறு கேட்க -பிராமணர் பூஜிப்பதற்கு முன்னே விட போகாதே -இடாவிடில் பிழையான -தர்ம சங்கடம் –
யாகத்தில் பிரார்த்திக்க பாதகமாக தலைக் கட்டிற்றே-யாகாமபாதகம் ஆனதே சாஷாத் பகவானை விட்டால் -சாஷாத் பிரபத்தி விட்டு பக்தி இனிதே போலே பாதகம்
அப்போது யமன் –அத பாதக பீதஸ்தம் -சாஷாத் தர்மம் விட்டு இங்கே பற்றினத்தால் –
பாதகம் -சர்வ பாவேந விமுக்த -எல்லா படிகளாலும் அந்நிய சமாரம்பம் -பகவானை தவிர வேறே ஒன்றை பற்றுவதை விட்டவனாய் நாராயண பரனாகவே இரு – -சரம ஸ்லோக பூர்வார்த்த விவரணம் சொன்னான் -அத –ஒரு வேளை நீ பயந்து இருந்தாய் ஆனால் -என்றபடி – பாத பீதஸ் –ஸ்வரூப விருத்தமான யாகம் கண்டு பயமுடையவனை –
அதிகாரி ஸ்வரூபம் –பிரபன்னனுக்கு அடையாளம் தகுதி -சொல்லுகிறது –
கேட்பதற்கு முன் அஞ்சுபவனும் பின் அஞ்சாதவனுமே இந்த ஸ்லோகம் கேட்க அதிகாரி –
உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு– அஞ்சினது முன்னால் -அஞ்சி உன் சரண் அடைந்தேன் -நைமிசாரண்யத்துள் எந்தாய் -துர்லபம்-நாராயண பர -சர்வ பாவேனே எல்லா படிகளாலும் பயந்தவன் -எல்லா படிகளாலும் விட்டவன் -எல்லா படிகளாலும் பற்றினவன் மூன்றும் உண்டே-சர்வ பாவேந பாதக பீதஸ் -உபாயாந்தரங்களில் -பயந்து -அறியவும்- அனுஷ்டானத்துக்கும் முடியாது- செய்தாலும் ஸ்வரூப விரோதம் -மூன்றும் உண்டே –பாதக சப்தம் உபாயாந்தரங்களைக் காட்டுமோ என்னில் –இந்த ஸ்லோகார்த்தம் கேட்பதும் – தர்ம புத்ரன் -தர்ம சீலனாய் இருக்கையாலும்—யாகம் பிரசக்தமாக இருக்கையாலும் – ப்ரஹ்மஹத்தி முதலான பாதகங்கள் வராமையாலும் -விமுக்த -வேறு பட்ட அனைத்தையும் விட்டு விடு என்பதால் அனைத்துக்குள்ளும் இது -சர்வ தர்மான் பரித்யஜ்ய தர்மங்களையே த்யாஜ்யமாக சொல்லுகையாலும்-யாகம் பாதகம்-மேலும் அளவுடையாருக்கு பய ஜனகம் -சாதனாந்தரங்கள் பய ஜனகமே –இத்தால் சர்வ பாவேந –மேல் சர்வ பாவேந விமுக்த அந்நிய சமாரம்பா –அந்நிய சப்தம் பகவத் அந்நிய பரம் -சர்வ தர்மான் -ச பஹு வசன –
அங்கங்கள் உடன் கொடிய தர்மங்களை-ருசி வாசனை யுடன்-லஜ்ஜை யுடன் விட்டு -விமுக்த -தாது -பரித்யஜ்ய அர்த்தம் –சர்வ பாவேந நாராயண மாத்ர பர -மாம் ஏகம் சரணம் வ்ரஜ அர்த்தம்-சர்வ வாக்கியம் சாவதாரணம் – நாராயணனையே -என்று -மாம் சப்தார்த்தம் நாராயணன் -மாத்ர சப்தம் ஏகம் அர்த்தம் –பர வ்ரஜ -தாத் அர்த்தம் அத்யாவசிய -கத்யர்த்த புத்யர்த்த புத்தியால் உறுதி கொள்வது -சர்வ பாவேந–உபாயம் உபேயம் என்றும் -மாதா பிதா இத்யாதி யாகவும் —வாசுதேவ சர்வம் -எல்லாம் கண்ணன் —தாரக போஷாக போக்கிய –என்றும் -ஸ்வீகாரத்தின் சர்வ பிரகாரத்தையும் சொல்லி -பர ஹிம்சை- ஹிம்ஸா பரமே என்பதை புரிய வைக்க இவ்வாறு அருளிச் செய்கிறார் —

(ஆய் ஸ்வாமிகள்-ஸ்வரூப ஹானி தர அக்ருத்ய விசேஷம் காம்ய கர்மம் நிவர்த்தனமாக வேதாந்தம் -விதித்து – ஸ்வர்க்கத்துக்கு சாதனமான பர ஹிம்சை மீட்க -ஹிம்ஸா அபிசார கர்மம் மட்டும் இல்லை -தன் நிவர்த்தகம் ஸ்வர்க்காதி சாதன விதியே யாகையால் -துக்க சாதனம் இல்லாமல்-சுக சாதனமான இவற்றை பர ஹிம்சை என்னலாமோ என்னில் -பண்ணும் கர்த்தாவும் ஆடும் ஸ்வர்க்கம் போனாலும் -சர்வம் துக்க மயம் –பிராக்ருதத்திலே எங்கும் துக்கமே ஸத்ய லோகம் வரை – வெறுக்கத்தக்க சுகம் -துக்க பிராயம் துக்கத்துக்கு ஒப்பு -என்று-முமுஷுக்களுக்கு தோன்றும் பகவத் பாரதந்தர்யத்தை முறுக்கும் ஸ்வ தாந்தர்யம் -பிரம காரணமான பிரவர்திகள் –)

அதாவது சாஸ்திரம் ஆகிறது -த்ரைகுண்யா விஷயா வேதா -என்கிறபடி
பெற்ற தாய் -அந்த பதிராதிகள் ஆன விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற வாத்சல்யையாய் இருக்குமா போலே –மாதா பித்ரு சகஸ்ரங்களில் காட்டிலும் வத்சல தரம் ஆகையாலே -தம ப்ரசரோடு -ரஜ பிரசரோடு சத்ய பிரசரோடு வாசி அற -அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே – அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் உபதேசித்து -கொள் கொம்பிலே ஏற்றுகைக்கு சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களால் தன்னுடைய தாத்பர்யாம்சத்திலே-யாரோபிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறது ஆகையாலே –
சேயேன விதி தொடங்கி-பிரபத்தி பர்யந்தமாக வரும் அளவும் சேதனர்  நின்ற அளவுக்கு ஈடாக உத்தரோத்தர புருஷார்த்த சாதனங்களை ப்ரவர்பித்திப்பித்து பூர்வ பூர்வங்களை நிவர்திப்பிக் கடவதாய் இருக்கும் –
ஆகையாலே இவ் உபாசனத்தை பிரவர்த்திப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

பரஹிம்சை -என்றது -மேலான ஹிம்சை என்றபடி –பர தேவதை -பர கதி –என்கிற இடங்களில் -மேலான தேவதை -மேலான கதி -என்று அர்த்தம் ஆகிறது போலே –
அதாவது சேயேன விதிக்கு மேலாக விதிக்கப் பட்ட பசவ அவலம்ப நாதிகளை சொன்ன படி –
அத்தை ஹிம்சை என்னலாமோ என்னில் -விஹித ஹிம்சை என்ன கடவது இறே-
அக்நி ஷோமீயம் பசுமாலபேத -என்கிற இடத்தில் ஆலம்ப சப்தம் -ஆலம்ப ஸ்பர்ச ஹிம்சயோ- என்கையாலே -ஹிம்சா வாசி இறே —
இத்தால் காம்ய கர்மத்தை சொன்னபடி -பூர்வ விஹித ஹிம்சை – என்று சேயேன விதியை சொல்லுகையாலும் – தது பரி விஹிதமான காம்யமே இவ்விடத்தில் விவஷிதம் –
அன்றிக்கே –
விஹிதமே ஆகிலும் -பகவத் சேஷத்வ ஜ்ஞான பூர்வகமாக அநந்ய பிரயோஜனாய் கொண்டு – அக்நி-இந்த்ராதி தேவதா அந்தர்யாமி சமாராதனமாகவே பண்ணும் பசவ ஆலம்ப நாதி யுக்த யாகாதி கர்மத்தை பற்ற ஸ்வ தந்த்ரனாய் கொண்டு ஸ்வர்க்காதி பல சாதனமாக அக்நி இந்த்ராதி தேவதா மாத்ரங்களை உத்தேசித்து பண்ணும்
பச்வாலம்ப நாதி யுக்த காம்ய கர்மம் விசேஷஞ்ஞர்க்கு பர ஹிம்சாப்ராயம் என்னலாம்படி யத்யந்த நிக்ருஷ்டமாய் இருக்கையாலே இவ்வாகாரத்தை இட்டு அது தன்னை பர ஹிம்சை என்று அருளி செய்தார் ஆகவுமாம்–
சாஸ்திர விஹிதமுமாய் -பகவத் ஏக விஷயமுமாய்- இருக்கிற பிரபகாந்தரத்தை ஜ்ஞாநிகளுக்கு அபாயம் என்றவோபாதி – இதுவும் அதிகாரி விசேஷத்தை இட்டு
சொல்லலாம் இறே —
அத பாதகபீதஸ் த்வம்-என்று உபாயாந்தரத்தை பாதகமாக சொல்லிற்று இறே
தர்ம தேவதையும் -புபுஷுக்கு உபாதேயமான புண்ணியமும் தானே முமுஷுக்கு பாப சப்த வாக்யமாகா நின்றது இறே —
ஆக -எல்லா வற்றாலும் -இவ்விடத்தில் காம்ய கர்மத்தையே சொல்லுகிறது –இப்படி தான் யோஜிக்கிறது- உபாசன விதிக்கு நிவர்த்யம் காம்ய கர்மமாக இவர் தாமே -பரந்தபடி ரஹஸ்யத்திலே அருளிச் செய்கையாலே –

—————————————

ஆனால் இப்படி விதித்ததை பின்னை நிஷேதிக்கிறது என் என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

(உபாசனம் விதிக்கப்பட்டதே -நிஷேதிப்பது எதற்கு என்னில் -நாஸ்திகர் தம பிரசுரரைப் பற்ற விதிக்கப்பட்டு -சாஸ்த்ர விசுவாசம் உடைய ஆஸ்திகரைப் பற்ற நிஷேதிக்கப் படுகிற பூர்வ விஹித ஹிம்சை யாகிற அபிசார கர்மம் போலே -அந்நிய சேஷத்வம் அற்ற ஆத்மாக்களை பற்ற -உபாசகர் பெருமாளைக் குறித்து தானே உபாசிக்கிறான் –ஸ்வா தந்தர்யம் தான் ஒட்டிக் கொண்டு உள்ளது —ஸூ ஷ்ம ஸ்தூல பாரதந்தர்யம் தியாகம் – முன்பே பார்த்தோம் – நிதித்யாசித்வய என்று விதித்து பரம சாத்விகரை பற்ற பரித்யஜ்ய என்று நிஷேதிக்கவும் படத் தட்டு இல்லையே ஒரே வார்த்தை விதிக்கும் நிஷேதிக்கவும் உட்படும் நிலை மாறின பின்பு )

இது தான் -என்கிறது -கீழ் சொன்ன உபாசனத்தை –
பூர்வ விஹித ஹிம்சையாவதுச யே நே நாபி சரன்  யஜதே -என்று பிரதமத்தில்
விதிக்க பட்ட அபிசார கர்மம் –அது -தம பிரசுரராய் -நாஸ்திகராய் இருப்பாரைப் பற்ற விதிக்கப்பட்டு- ஆஸ்திகராய் காரீர்யாதி காம்ய கர்மங்களிலே இழிகைக்கு யோக்யரான ரஜ பிரசுரரைப் பற்ற நிஷேதிக்க படிகிறாப் போலே – உபாசனமும் -ஸ்வ தந்த்ர அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் சேஷத்வத்திலே ஊன்றுவிக்கைக்கு யோக்யரான சத்வ பிரசுரரைப் பற்ற விதிக்கப் பட்டு- பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறந்து பகவத் ஏக உபாயத்வத்திலே ஊன்றுகைக்கு யோக்யரான பரம சத்வ நிஷ்டரைப் பற்ற நிஷேதிக்கப் படவும் குறை இல்லை –

—————————————–

இப்படி நிஷேதிக்க படுமவையான இவை தன்னை அடியிலே எதுக்காக விதித்தது
என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -131-

அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விச்வாசத்துக்காக விதித்தது –

(ஆய் ஸ்வாமிகள்-நிஷேதயங்களான இவற்றை எதுக்காக விதித்தது- -கீழே விதித்தது எதற்க்காக யாருக்காக என்றவாறு -பிரபத்தி அத்யந்த பாரதந்தர்யம் தானே ஸ்வரூபம்-க்ரூர கர்மம் அபிசார கர்மம் சாஸ்த்ர விசுவாசம் ஏற்படுத்த  அஹங்கார கர்ப்பமான உபாசனம் -அந்நிய சேஷம் தவிர்க்க விதித்தது -அந்யதா ஞானிக்கு – ஸ்வர்க்காதிக்கு பண்ணுகிறான் காம்ய கர்மங்கள் -ஸ்வரூபம் பகவத் சேஷத்வம் அறிந்து விஸ்வஸித்து சத்தை பெற விதித்தது — கீழே சாஸ்த்ர விஸ்வாசம் மட்டும் -தத் ப்ரவர்த்தக -பகவானுக்கு சேஷம் என்று சேனை யாகம் காட்டாதே-உபாசனமும் -இதுவும் தத் யாதாம்யா ஞானம் அத்யந்த பாரதந்தர்யம் காட்டாதே  அஹங்கார கர்ப்பமாக கொண்டு ஸ்வரூபத்தை அழிக்கும்)

(நாஸ்திகன் -சட புத்தி -பிரகாராந்தரம் சாஸ்த்ர விசுவாசம் வந்தவனாயும் -சத்ரு வத காமனாயும் இருப்பவன் -தமோ குணம் உந்த – சாஸ்திரம் பிரமாணம் இல்லை என்பானும் தத் பரிஷார்த்தமாகவும்- சத்ரு வதார்த்தமாகவும் இரண்டு வகை -அஸ்தி நாஸ்தி -சாஸ்திரம் இல்லை செய்கை யாவது அப்ராமாண்ய புத்தி -உண்மையான ஞானம் கொடுக்கும் கருவி இல்லை என்று இருப்பர் -பிரத்யக்ஷம் அனுமானம் மட்டும் ஒத்துக் கொண்டு – தத் ஹேதுக பர லோக அபாவ புத்தி யுடையவன் -சட வக்ர சித்தன் -வாசகம் – நாஸ்திகன் தன் மூல பர லோக அபாவ புத்தி யுடையவன்)

அதாவது -சட சித்த சாஸ்திர வசதோ பாயோபிசார சுருதி -என்கிறபடியே அபிசார கர்மத்தை விதித்தது சாஸ்த்ரத்தை இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு சாஸ்திர விஸ்வாசம் பிறக்கைக்காக-உபாசனத்தை விதித்தது
தன்னை ஸ்வ தந்த்ரன் என்றும் அந்ய சேஷ பூதன் என்றும் பிரமித்து போந்த சேதனனுக்கு -அவை இரண்டும் வந்தேறி –பகவத் சேஷத்வமே நிலை நின்ற வேஷம் என்று தன் ஸ்வரூபத்தில் விஸ்வாசம் பிறக்கைக்காக என்கை

———————————————

இப்படி ஒரோ விஸ்வாசத்துக்காக விதித்து நிஷேதித்தமை ஒத்து இருந்ததே ஆகிலும் –
இவ் உபாசனத்தை விடாமல் பற்றி நின்றால்-அபிசார கர்மம் போலே க்ரூரம் அன்றே இது என்ன – அதிலும் காட்டிலும் க்ரூரம் என்கிறார் –

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

(ஆய் ஸ்வாமிகள்-இது உபாசனம் – அது சேனையாதி காம்ய கர்மங்கள் -விரோதிகள் ஒத்து -இருந்தாலும் அதிலும் இது கொடிது -ஸ்வரூப விரோதி இது தான் -அது சரீரத்துக்கு தானே -தப்பவும் முடியும் பின்னாலே விசிஷ்ட வேஷ விரோதி அபிசார கர்மாக்கள் – துக்க அனுபவ சாதனமான சில தேகங்களை பரிகரிப்பித்து ஆத்மாவில் தட்டாமல் மேலோட்டமாக போகும்
நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியான இது ஸூ யத்ன பிரவ்ருத்தி அஹங்கார சேஷத்வ ஸ்வரூபம் நாசகமாய் ப்ராப்யம் அனுபவம் அளவாக தொடரும் – ஸ்ரீ வைகுந்தம் போனாலும் -திரு உள்ளத்தில் வாசி இருக்குமே -மர்ம ஸ்பர்சி அன்றோ -)

(பல விசேஷம் அடியாக அபிசாராதிகள் அநர்த்தம் -இங்கு பலம் மோக்ஷம் ஆகையால் உபாசனம் சிறந்தது என்றால் -பலத்துடன் நிர்பந்தமாக அநிஷ்ட அனுபந்தி -கட்டி வைக்கும் -மர்மம் -எங்கு தொட்டால் சரீரீ பிராணன் போகுமோ அதுவே மர்ம ஸ்பர்சி -ஆத்ம பிராணம் போவது என்பது ஸ்வரூப நாசம் -சேஷத்வம் பாரதந்தர்யத்தை தாக்குமே இது -முள் குத்துவது தோலுக்கு மட்டும் – புற்று நோய் உள்ளே உலுக்கும் நோய் போலே இது மகா துக்க ஜனகம் -)

பர ஹிம்சா ரூபமான அந்த அபிசார கர்மம் -தேக ஆத்ம அபிமான செயலாய் –
விசிஷ்ட வேஷ விரோதியாய் -அத்தால் வரும் பலமும் -சில துக்க அனுபவ
மாத்ரமாய்க் கொண்டு மேல் எழப் போகையாலே-தோல் புரையே போம் -என்கிறது
அஹங்கார கர்பமான இந்த உபாசனம் -ஆத்ம ஞானம் பிறந்தவன் செயலாய் –
நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியாய் பகவத் ஏக பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப
நாசகம் ஆகையாலே -மர்ம ஸ்பர்சி -என்கிறது –

———————————————–

இவ்வளவே அன்று –இது துஷ்கரமும் என்கிறார் –

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

(ஆய் ஸ்வாமிகள்-பண்ணுவதற்கு மிகவும் கடினமாகவும் இருக்குமே -பிரபத்தி கிருபையால் சாதிக்கப்படுவதால் ஸூ கரமாய் இருக்கும்-சூரணை-115-தொடங்கி தோஷங்கள் பட்டியல்
காய கிலேச கர கர்ம சாத்தியம் -எலி எலும்பன் இவன் ஆகையால் செய்து தலைக் கட்ட ஒண்ணாதே –ஸ்வரூப விரோதி இது தான் -என்று தொடங்கி -மேலே -பய ஜனகம் -சோக ஜனகம் -அபாயம் -இத்யாதி -முன் அருளிச் செய்து-இறுதியில் இத்தைக் காட்டி அருளுகிறார்முகம் கொள்ள அரிதாயும் இருக்கும் -துஷ்கரமுமாய்– மர்ம ஸ்பர்சியாய்  நிஷித்தமுமாய் –ஷூத்ரமுமாய்  அஹங்கார மிஸ்ரமுமாய் சோக பய ஜனகமுமாய் அபாயமுமாய் -ஸ்வரூப விரோதியான ப்ராப்யாந்தரங்களை–என்று கீழோடே சம்பந்தம் -படியே ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விட வேண்டும் -)

(துஷ்கரமும்-உம்மை தொகை -கீழே சொன்னவைகளை சமுச்சயம் – ஸ்வரூப விருத்தத்வ-115- அபாயத்வ -நாசகார -விஸ்லேஷ கரம் –பய ஜனகத்வம் -120- சோக ஜனகத்வம் – அஹங்கார மிஸ்ரதா தள்ளத்தக்கது -122- அவத்யகரம் -123- பலத்துக்கு வி சத்ருசம் –124- மர்ம ஸ்பர்சி -ப்ரஹ்மத்தை அறிய முயன்று அறிய -யஜ்ஜம் தானம் தாபம் செய்து விரதம் இருந்து-யஜ்ஜேன தாநேன தபஸா அனாசகேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி–ப்ருஹதாரண்யம் -என்றும் —யஜ்ஜம் ஜ்யோதிஷ்டஹோமாதிகள் – தானம் சத் பாத்திரத்துக்கு சொத்தை செலவு –தாபம் காய சோஷணம் –ஆசனம் உண்ணுதல் -(சேஷாசனர் சேஷ ஆசன சொல்லுகிறோம் )- அநசனம் உபவாசம் –அவித்யயா அம்ருத்யும்  தீர்த்தவா வித்யயா அம்ருத மஸ்நுதே–மைத்ரேய உபநிஷத் என்றும் -வித்யா பின்னமான கர்ம யோகம் -செய்து -சம்சாரம் மிருத்யுவை தாண்டி -மோக்ஷ பிராப்தி உபாசனத்தால் அடைகிறான் -என்றபடி –சர்வ அபேஷாச யஜ்ஜாதி ஸ்ருதே ரஸ்வவத்-ப்ரஹ்ம ஸூத்ரம் -3-4-பாதம் -என்றும் –அனைத்தையும் எதிர்பார்க்கும் அன்றோ யஜ்ஜாதிகள் -அஸ்வத்வத் குதிரையை போலே -என்றபடி -கடிவாளம் இத்யாதிகள் வேண்டுமே -அங்கங்கள் பலவற்றையும் அபேக்ஷிக்குமே –கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி -என்றும் –கஷாய பாபம் ரஜஸ் தமஸ் குணம் -கர்மங்கள் இவற்றை தொலைத்து உபாசனத்தால் மோக்ஷம் என்றபடி-கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –கர்மங்களால் பாபங்கள் தொலைந்து ஞானம் பிறந்து -என்றபடி-ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி – நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –-பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் ஒரு வகை – மோக்ஷ விரோதி பாபங்கள் வேற வகை -உபாசன பலத்தால் இந்த மோக்ஷ பிரதிபந்தகங்கள் தொலையும்-ஆரம்ப விரோதிகளை தொலைக்க கர்ம ஞான யோகம் -சஹஸ்ர சஹஸ்ர ஜென்மங்களில் தபஸ் ஞானம் –காய சோஷணாதி நியம கர்ம யோகம் குறிக்கும் தபஸ் என்பதால் -ஞானம் ஆத்ம அவலோகநம்-ஞாத்ருத்வ சேஷத்வம் பாரதந்தர்யம் அறிவது –
விசத ஞான விசேஷம் தெளிந்த ஞானம் சமாதி என்றவாறு –பர ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே சமஸ்திதி நிலை பெற்று -பிரியாமல் சேர்ந்து நிலை பெற்று இருத்தல் –
அகில புவன ஜென்ம –ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -சேம பங்காதி லீலே -ஏழாம் வேற்றுமை
எல்லாம் அவன் இடத்தில் சேமுஷி பக்தி ரூப -பக்தி பழுத்த ஞானம் -முதிர்ந்த நிலை என்றவாறு –ஞானான் மோக்ஷம் சாஸ்த்ர வாக்கியம் என்பதால் யமம் நியமம் ஆசனம் இவற்றால் பெற்ற சமாதி இது அன்றோ -நினைவாலே ஒன்றி இருத்தல் -விசேஷ தியானம்  ப்ரீதி யுடன் உள்ள பக்தி கார்ய காரண விபதேசம் -ஒவ் ஒன்றுமே -யமாதிகள் த்யானம் –
விசதம தியானம் சமாதி ப்ரீதி கலந்த பக்தி -தசா பேதம் -ப்ரஜ்ஜா அவஸ்தை தாய் தோழி மகள் போலே -மனத்தின் பக்குவ நிலை -கஷ்டமான கர்மம் – -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -)

இப்படி ஸ்வரூப விரோதியாய் இருக்கிற இவ் உபாசனம் தான் –-யஜ்ஜேன தாநேன தபஸா அனாசகேன ப்ராஹ்மணா விவிதிஷந்தி–ப்ருஹதாரண்யம் -என்றும் – அவித்யயா ம்ருத்யும்  தீர்த்தவா வித்யயா அம்ருத மஸ்நுதே-என்றும் –
சர்வ அபேஷாச யஜ்ஜாதி ஸ்ருதே ரஸ்வவத் –என்றும் –
கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி –என்றும் –
கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி –
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -காய கிலேசகரமான கர்ம அனுஷ்டானத்தாலே
சாதிக்கப்படும் அது ஆகையாலே -அசக்தனான இவனால் செய்து தலைக் கட்ட அரிதாய்
இருக்கும் என்கை –

ஆக -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -115–என்று தொடங்கி -இவ்வளவாக
உபாயாந்தர தோஷம் விஸ்தரேண பிரதி பாதிக்கப் பட்டது –

————————————————–

இப்படி பிரபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்களை ப்ரதிபாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தான் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை

(பிரசங்கிகமாக பிரபத்திக்கு உள்ள ப்ரபாவங்களை அருளிச் செய்கிறார் இது முதல் மேல் எட்டு சூரணைகளால்-–ஞான விசேஷம் -பிரார்த்தனா -மதி சரணாகதி –மஹா விசுவாச பூர்வகம் -ஞான விசேஷமாய்க் கொண்டு – தத் வியதிரிக்த-பகவானைக் காட்டிலும் வேறு பட்ட – உபாயமான -ப்ரபதவ்யன் அவன் -பிரபத்தி செயல் -ப்ரபன்னன் இவன் கீழ் வந்த அனைத்து குற்றங்களும் வேறு பட்டத்துக்கு வாராதோ என்னில் –பிரபத்தி என்பது சர்வேஸ்வரன் நியாசம் சொல்லே ப்ரஹ்மத்தை குறிக்கும் செயலையும் குறிக்கும் விஷ்ணு பதம் வைகுண்டம் -ஸ்தான விசேஷம் இல்லை என்பர் சிலர் -திருவடியைக் குறிக்குமா ஸ்தானத்தை குறிக்குமா விசாரம் இரண்டையும் குறிக்கும் –இக்குற்றங்கள் -இதுவரை அருளிச் செய்தவை இல்லை – தானே உபாயம் என்று ஏற்றி வைக்கும் குற்றம் உண்டே இதனால் -20-குறைகளும் வரும் –

(ஆய் ஸ்வாமிகள்-பிரபத்தி உபாயத்துக்கு -பகவானை உபாயமாக கொண்ட பிரபத்தி என்றபடி -அவனே உபாயம் என்ற விசுவாசமே உறுதியே பிரபத்தி -பிரபத்தியுபாயம் என்றால் உபாயமான பெருமாளை உபாய விஷயமாகக் கொண்ட நம்பிக்கை -திருவடிகளை உபாயமாக உறுதி கொள்ளுவதே-பிரபத்தி –கீழ் சொன்ன அபாயம் முதல் துஷ்கரம் வரை சொன்னவை இல்லை-வரணம்-அடியேன் வரித்தேன் -பெருமாள் அடியேனை ஏற்றுக் கொண்டார் என்று சொல்லாமல் –பிரிய தமனை தானே வரிக்கிறார் சுருதி உண்டே-வரணம்– –ஸூ கதமாய் நின்று ஸ்வரூப யாதாத்யம் பாரதந்தர்யத்துக்கு கொத்தை வருமே -சர்வேஸ்வரன் மட்டுமே உபாயம் -பிரபத்தி உபாயம் இல்லையே –மேலோட்டமாக பார்க்க தன்னை மோக்ஷ உபாயம் என்று எண்ணுவதற்கு காரணமாக பிரபத்தி இருப்பதால் அந்த தோஷம் உண்டே -)

(பகவத் விஷயகத்தவ ஞான விசேஷம் -பக்தி போலே இதுவும் ஞான விசேஷம் விசேஷித்து நிஷேதித்தால் வேறே குற்றம் இருக்கு என்பது ஸூ சித்தம் பிரபத்தி ஸ்த்ரீ லிங்கம் -உபாய வரண ரூபை இது -உபாயதா வாதம் நியதி அன்வய வியதிரேக பரம்-பிரபத்தி செய்து மோக்ஷம் நியதம் – பிரபத்தியால் மோக்ஷம் இல்லை வியதிரேகம் –பகவானைத் தவிர வேறு உபாயம் ஆக மாட்டார் என்ற உறுதியே பிரபத்தி –காம்பற தலை சிறைத்து-பிரபத்தியைத் தள்ளி ஈஸ்வரனே என்ற தெளிவு -உபாயத்வ பிரமம் பிரதிபத்தி -நியாய சித்தாஞ்சனம் -வாதம் செய்து சாஸ்திரம் சொன்னது -கவி தார்க்கிக ஸிம்ஹம்-கேசரி -தத்வ முக்தா கலாபம் -இயம்-கேவல லஷ்மீ ச சோபாயத்வ -பிரத்யாத்மீக பறை சாற்றும் -அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை -ஸூ வ ஹேதுத்வ புத்தியை வெட்டும் -கிம் புன சஹகாரிணாம்-பக்தாதிகளை உபாயம் ஆகாது என்று சொல்ல வேண்டுமோ-ஸ்வஸ்மின் உபாய புத்திக்கு தானே நிவாரகமாய் இருக்கும் –
நியாஸ தசகத்தில் – ஆர்த்தேஷூ ஆசு பல -ஆர்த்தனுக்கு உடனே பலம் -மரணமாக்கி வைகுந்தம் –தத் அந்நிய விஷயேபி-தேக அவசனத்தில் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –ஸ்ரீ ரெங்கேஸ்வர- பாரதந்த்ரத்துக்கு உசிதம் பிரபத்தி நியாஸ திலகம் ஸ்ரீ வரதராஜர் மேல் – நியாஸ விம்சதி ஆச்சார்யர்கள் மேல் -ஆபாத ப்ரதீதியில் வரும் குற்றங்கள் -நினைத்தால் -பக்திக்கு வரும் குற்றங்கள் வரும்
1- சேஷத்வ -ஸ்வரூப விரோதம்
2–அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப விரோதம் வரும்
3–ஸ்வ அபிமத ஸ்வார்த்த அனுபவ கைங்கர்யம் தான் -கொடுக்கும்
4-அசலாக ஆக்குமே -நெறி காட்டி நீக்குதியோ
5–விஸ்லேஷ ஜனகம்
6–பிணம் எழுந்து கடிக்குமா போலே பய ஜனகம் –வர்த்ததே மகத் பயம் -ஆணாக பிராமண புருஷன் சிக்கிக் கொள்வான்
7–மாஸூச ஸ்ரவண மாத்ரத்தால் நடுங்க பண்ணும்
8–ஸ்வரூப யாதாத்மா ஞானம் -பிராயச்சித்தம் கொண்டு கழித்து கொள்ளும் படி இருக்கும்
9–அஹங்கார கர்ப்பமாய்
10–பல விசத்ருசமாய் இருக்கும்
11–வியாஜமாகியும் இருக்காதே சொத்தே நம்மது இல்லை
12–அஞ்ஞானத்தால் செய்ததாக இருக்கும்
13—பகவத் அபஹாரம்
14–அவத்யகரம் பர்த்தா பார்யை குற்றம் போலே
15–பர ஹிம்ஸை ருசி அநுகுணமாக
16–ஸ்வயம் கார்ய கரம்
17–விதித்தது அன்யார்த்தமாகும் -பர ஹிம்சை நிவர்த்திக்க -பக்தியை விலக்க இது என்றபடி 18-சேனை யாகம் சமானம் ஆகுமே -உபாய பிரபத்தி -பல பிரபத்தி-ஆச்சார பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் கடைசியில்
19-20—துஷ்கரத்வ தோஷமும் –மானச துஷ் கரம் -பக்தி காயிக துஷ் கரம்)

இக் குற்றங்கள் என்று ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாகச் சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது –ஒன்றுமே இல்லை என்றது -ஒரு தோஷமும் இதன் பக்கலில் இல்லை என்றபடி
இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை என்கையாலே மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது- அதாவது -வஸ்துத உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே ஆபாத ப்ரதீதியிலே உபாய பிரதிபத்ய அர்ஹமாம் படி இருக்கை –

—————————————-

இக் குற்றங்கள் இதுக்கு இல்லை என்னுமத்தை பிரகாசிப்பைக்காக இதனுடைய-1- ஸ்வரூப உசித -2-ஸூகரத்வங்களை அருளிச் செய்கிறார்

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூகரமுமாயும் இருக்கும்

(ஆய் ஸ்வாமிகள்-ஏற்புடையதாகவும் எளியதாகவும் இருக்கும் – பாரதந்தர்யம் உணர்ந்து -ஸூ யத்ன நிவ்ருத்தி ரூபம் –அத்யந்த பரதந்த்ரன் -யாதாத்ம்ய ஞானம் –ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே ஈஸ்வர ப்ரவ்ருத்தி -பிரபத்தி ஆயாசம் வேண்டாமே —சிற்ற வேண்டா –காய கிலேசம் வேண்டாமே -முகம் கொள்ளும் படி ஸூ கரமாய் இருக்கும் -அபாயம் -நாசகரம்- விஸ்லேஷம் -அநபாயினி  அத்யந்த அபிமதம் இருக்குமே பாரதந்த்ர பிரபன்னன் இடம்-அதிருஷ்ட த்வார சாதனம் இல்லை –அத்யந்த அபிமத ஜனகமாய் இருக்கும் – இது பெருமாளைப் பெற்றுக் கொடுக்கும் சொல்லாமல் அவன் அன்பைப் பெற்றுக் கொடுக்கும் -வளர்த்துக் கொடுக்கும் -)

(ஆத்ம சப்தம் ஸ்வ பாவ வாசி தன்மையைப் பற்றிய உண்மையான அறிவு -யாதாத்ம்யம் – நம-அநாதி வாசனாதீன-மித்யா ஞான நிபந்தன -ஆத்மா ஆத்மீய பதார்த்தங்களில் – ஸ்வா தந்தர்ய மதி -எனக்கு இல்லை -ஆத்ம விஷயத்தில் ஸ்வா தந்தர்ய நிவர்த்தகம் சொல்லிற்று –அது த்வேக உபாயத்வ புத்திக்கு வியதிரிக்த சாதன பிரவ்ருத்திக்கு யோக்யதையே இல்லை-அதிருஷ்ட சாதனமாக பகவத் கிருபையே -பிரபத்தி இதுக்கு இல்லையே -வரிக்கும் யோக்யதையே நமக்குண்டு – இதை உணர்தலே அத்யந்த பாரதந்தர்யம் —கிருபா ஜனகம் இல்லை -கிருபா ஜன்யம் தானே பிரபத்தி –அனுபாயம் -அத்யந்த அபிமதமாயும் இருக்கும் – ஸக்ருத் ஸ்ம்ருதி ஒரு முறை சிந்திப்பே அமையுமே –யாகம் தேவதா உத்தேசித்து த்ரவ்யம் த்யாஜ்யம் போல் -ப்ரபத்தியும் – -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் -பிரார்த்தனா பர்யவசாயா த்வேமேய உபாயம் விசுவாச பூர்வக -மூன்றும் இதுக்கும் உண்டு -விசிஷ்ட ஸ்வரூபம் விசேஷண அதீனம் –நெய் சாப்பிட்டு முழு ஆயுசு -கார்ய காரண பாவம் -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கார்யம் -காரணம் மோக்ஷம் இல்லை -நிர்ஹேதுகம் அன்றோ அவன் –மணம் புஷ்பத்துக்கு காரணம் இல்லையே -பிரயோஜ்ய பிரயோஜக பாவம் -பரம்பரையா கார்ய காரணம் -இருந்தால் இது வரும் –அதே போலே இங்கும் -ஸ்வரூப விரோதி பரமான குற்றங்கள் -அபாயத்வம் பய ஜனகம் -சோக ஜனகம் -அஹங்கார மிஸ்ரம்- அவத்யகரம் இவைகள் எல்லாம் தானே -பகவத் அத்யந்த அபிமத சம்சர்க்க-அபாவம் ப்ரயோஜகம் ரூபமான ஸ்வரூப விரோதித்வம் –பல வி சத்ருசம் என்றால் -பல சாதனத்தவ ஸஹித உபாய -பல சத்ருச அபாவத்வம் -இரண்டும் சேர்ந்து இருக்க கூடாது –ஈஸ்வரன் ஒருவன் தானே சத்ருச சாதனம் -பிரபத்தி அத்யந்த அபிமதம் பெற்று கொடுக்கும் -தாய் அன்பு போலே -ஈஸ்வர கிருபை சாஷாத் உபாயம் -அத்தை கிளப்பி விடும் -அபூர்வ ஸ்தானீய மோஷார்த்த உபாயம் இல்லை -இந்த அத்யந்த அபிமத ஜனகம் கிளப்பும் பிரபத்தி -நித்ய முக்தர்களுக்கு ஸ்வயம் பிரயோஜனம் இது போலே -ப்ரீதி விசேஷ ஹேதுத்வ ரூபம் இவர்கள் பிரவ்ருத்தி  சித்த உபாயமே பல சாதனம் –அதிருஷ்ட த்வாரா -பகவத் பிரசாத ரூப –உபாய பிரார்த்தனை ரூபதயா அனுபாயமாய் -பலத்துடன் அந்வயிக்கும் –அர்ஹதா ரூபமாய் -தகுதி கொடுக்கும் –பலத்தை ரசிக்க யோக்யதை கொடுக்கும் என்றபடி -அத்யந்த பாரதந்தர்யம் –யோக்யதை இல்லாமல் –அதிருஷ்ட துவார சாதன பிரவ்ருத்திகள் அநர்ஹத்வம் –-புண்யம் த்வாரா காம்ய யாகம்- முதல் நிலை –ஈஸ்வர ப்ரீதி துவாரம் கர்மாதி யோகம் -ரிஷிகள் நிலை -ஆழ்வார்கள் அனர்ஹத்வம்-அடியேன் தேவரீர் அனுக்ரஹத்துக்கு பார்த்தமாக –கைங்கர்ய பிர வ்ருத்திகளில் தான் அர்ஹத்வம் -அவனே உபாயம் -ஸூ அபேக்ஷித பிரத – பிரபத்தி —அத்யந்த அபிமத -அவனே உபாயம் என்னும் பிரபத்தி -ஸ்வரூபத்துக்கு உசிதம் -)

இப் பிரபத்தி -ஆத்ம யாதாத்ம்ய ஞான கார்யமாகை யாவது – திருமந்திரத்தில் மத்யம பதத்தில் சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான-பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை யுணருகையாலே வந்ததாய் இருக்கை –
ஸ்வரூபத்துக்கு உசிதமாகையாவது –அந்த பாரதந்தர்யமாகிற ஸ்வரூபத்துக்கு அனு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது –சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை-அதாவது ஒரு வியாபாரமும் பண்ண வேண்டாம் என்றபடி
நிவ்ருத்தி சாத்யமாகையாலே ஸூகரமுமாய் இருக்கும் -என்றது-பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாலே சாதிக்கப்படுமாதாகையாலே எளிதாகச் செய்யலுமாய் இருக்கும் என்கை –

இவை இரண்டையும் சொல்லவே -கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் சித்தித்தபடி என் என்னில்
1-அபாயத்வ -2- பய ஜநகத்வ 3–சோக ஜநகத்வ 4–அஹங்கார மிஸ்ரதயா நிஷித்தத்வ -அவத்ய கரங்கள்-5-ஸ்வரூப விரோதத்தைப் பற்றி வருகிறவை யாகையாலும் -6-பல விசத்ருசம்-இது பல சாதனம் அன்றிக்கே சித்த உபாயமே பல சாதகமாய் -இது தத் வரண மாத்ரமாய் –அதிகாரி விசேஷணமாய் இருப்பது ஓன்று ஆகையால்-இதில் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும்- இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை –ஸ்வரூபத்துக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம் இறே
கர்ம ஸாத்ய தயா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்தியம் ஆகையால் ஸூகரம் -என்றதிலே ஸூ ஸ்பஷ்டம் இறே-ஆகையால் ஸ்வரூப ஓவ்சித்திய ஸூகரத்வங்கள் ஆகிய இவை இரண்டும் இதுக்கு உண்டு என்னவே-கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் ப்ரகாசமாய்த்து –

———————————————-

இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து – ஸ்வ ப்ரவ்ருத்தியில் -நிவ்ருத்தனாய் இருந்து விட அமையுமோ -தத் சந்தோஷ அர்த்தமாக இவன் சில பச்சை விட வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

(ஆய் ஸ்வாமிகள்-இவ்வளவு அல்லது அவனுக்கு செய்யலாவது இல்லையே -ஸூ ப்ராப்ய பூதன் அவாப்த ஸமஸ்த காமன் – பரி பூர்ண விஷயம் -அபரிச்சின்னமான அவன் பெருமைக்கு ஈடாக -திருப்தி அடையும் படி -பச்சை -உபகாரம் – -அபரி பூர்ணன் ஷூத்ரன் வருந்தியும் விட ஒண்ணாதே -)

(இயலாது என்றும் தேவை இல்லை என்றும் – தத் வைபவ அனுரூப ப்ரீதி ஜனக கிஞ்சித்காரம் துஸ் சகம் -ஸ்வ ஹேதுக -ஸ்வ பிரசாத் த்வாரா ஸ்வயமேவ உபாயம் –மோஷார்த்த கிருபையை பெற்றுக் கொடுக்க ஒன்றுமே வேண்டாம் -ஸ்வரூப வர்த்தகத்துக்கு கைங்கர்யம் வேண்டும் – திருப்தி அடையத் தேவையே இல்லையே அவனுக்கு –திருப்தனானாய் தானே இருக்கிறார் -பெருமைக்குத் தகுந்த படி பச்சை இடப போகாது என்றது-இவனுக்குத் தேவையும் இல்லை -ஆசையும் இல்லை -ஆகையால் இயலாது தேவை இல்லை கொடுக்கக் கூடாது -என்றபடி -யதா வஸ்தித வஸ்து நிச்சயம் -ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -இருவரையும் புரிந்து கொண்டு அதனால்– கிஞ்சித்க்கார ரூபம் இல்லாமையால்-மோஷார்த்த பிரசாத அனுபபத்த்தி உபஸ்திதம் )

அதாவது லோகத்தில் -பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இறே இடுவது -இங்கும் பச்சை இடப் பார்க்கில் அப்படி இட வேணும் இறே
அவன் அவாப்த ஸமஸ்த காம தயா பரிபூர்ணனாய் இருக்குமவன் ஆகையால் அவனுடைய வைபவத்துக்கு அனு குணமாக இவனால் ஒரு பச்சை இடப் போகாது என்கை –

———————————————

ஆனால் அவனுக்கு இவன் அளவில் ஸந்தோஷம் விளையும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் (அத்யந்த அபிமதம்)விளையும் –

(ஆய் ஸ்வாமிகள்ஸந்தோஷம்-அத்யந்த அபிமதம்— அநாதிகாலமே பிடித்து விமுகனாய் போந்த இவனுடைய ஆபி முக்கியத்தை ஸூசிப்புக்குமதான –வைமுக்ய அபிசந்த விராம சிந்தனை மாத்திரம் —ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ ஸூக்தி-பாபங்களில் இருந்து ஒய்வு எடுக்க நினைத்தாலே போதுமே -இதனால் அவன் கவலை நீங்கி சந்தோஷிக்கிறானே -இதுக்கு மேலே வேறே ஒன்றுமே வேண்டாமே என்று அவன் திரு உள்ளம் -அனவரத அபரிமித ஸந்தோஷம் பல பர்யந்தமாக விளையும் — சர்வ தர்மான் பரித்யஜ்யம் பண்ணினேன் என்று காட்டினால் அவன் திரு உள்ளம் உகக்குமே-உபாயாந்தரங்களை பார்த்து பகவான் உபாயம் என்று பற்றாமல் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -என்கிற உபாயாந்தர விராக மாத்திரமே வேண்டியது -என்றவாறு)

அதாவது அநாதி காலம் யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு தன் பக்கல் விமுகனாய்ப் போந்தவன் அந் நினைவு குலைந்து தன் பக்கல் அபிமுகன் ஆனமைக்கு ஸூசகமான தொரு வியாபாரம் பெற்ற அளவிலே இத்தனை காலம் விமுகனாய்ப் போந்தவன் இன்று அபிமுகனாகப் பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிக உகக்கும் -என்றபடி –

——————————————————-

அவன் அப்படி இருந்தாலும் அவன் பூர்த்தியானது அகிஞ்சனரான நம்மால் அவனை யுகப்பித்து அணுகப் போகாது என்று இவன் கை வாங்கும் படி பண்ணாதோ என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை

(ஆய் ஸ்வாமிகள்-அவன் பூர்ணன் என்று அபூர்ணனான  நீ கை வாங்காமல் என்றபடி –இவனுக்கு ஜனகனான அவன் பூர்த்தி -அந்நியன் என்று கை வாங்காதே-நம்மது என்றோ நம் ஜனகனான இவன் பூர்த்திஎன்று களித்து மேல் விழுகைக்கு ஹேதுவாகுமே -தேங்கி பிற்கால் இடுகைக்கு ஹேது அன்று -இருவரும் ஒருவரை ஒருவர் மேல் விழ ஹேதுவாகுமே )

அதாவது -அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் ஆஸ்ரயண உன்முகனான இவன்
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிப்பிக்கப் போகாது என்று தத் ஆஸ்ரயணத்தின் நின்றும் மீளுகை அன்றிக்கே நாம் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பரிபூர்ணன் ஆகையால் நம் பக்கல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் என்று அபி நிவேசித்துப் பற்றுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
அன்றிக்கே – (நம் நினைவு இது வரை -மேல் அவன் திரு உள்ளம் ) அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ-உபேக்ஷித்துக் கை வாங்கப் பண்ண ஒண்ணாதோ என்ன
பூர்த்தி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
அதாவது அவனுடைய பூர்த்தியானது-இவன் பச்சை இட்டிலன் என்று அநாதரித்து அங்கீ காரத்தின் நின்றும் கை வாங்காதே ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்துக்கு மேற்பட்ட
நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ என்று விரும்பிக் கைக் கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை என்கை

—————————————————

இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் – அந்யாத் பூர்ணாத்- புரிவதுவும் புகை பூவே –

(ஆய் ஸ்வாமிகள்-அல்பம் இட்டது கொண்டு சந்தோஷம் -பிரமாணங்கள் -இவை -பக்தியுடன் இடப்பட்டதே- -அஹம் உண்ணுகிறேன் – அஹம் ஆன படியால் -என்று தோற்ற –பக்தி பாரவஸ்யத்தாலே அடைவு கெட கொடுக்குமா போலே சினேக பாரவஸ்யத்தாலே அடைவு கெட ஸ்வீ கரிப்பேன் -என்கிறான் -தனக்கு என்று வெட்டி வேர் வைத்த கும்பத்தை காட்டினாலே போதும் – நன்னீர் தூவி புரிவதும் புகை பூவே -1-6–அநந்ய பிரயோஜனராய்-பக்தி பரவசப்பட்டு பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல் -அக்ரமமாக -இறைத்து -போர பொலிய கொடுப்பதும் –ஏதேனும் ஒரு புகை –செருகை இட்டு பொசுக்கவுமாம்-பாவ சுத்தி காணும் அளவே -பதார்த்த வைலக்ஷண்யம் பாரான் -இவன் இட்டது கொண்டு திருப்தனாவான் என்பது பிரபல ப்ரமாண சித்தம்)

(பத்ரம், புஷ்பம், பலம்,தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி| ததஹம் பக்த் யுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயாத்மன: ||- தனித்தனி இரண்டாம் வேற்றுமை -உருபு -நான்கும் வேண்டாம் -ஏதேனும் ஒன்றே அமையும் -என்றபடி-துல்ய விகல்பம் இல்லை விகஸ்தித விகல்பம் -எங்கும் பஹு வசனம் இல்லாமல் ஏக வசனம் -ஏதேனும் ஒன்றை ஒன்றையே கொண்டால் போதும் -இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –ப்ரயாத்மன:-ஆத்ம சப்தம் -மனசைச் சொல்லும் -அவனுடைய அப்படிப்பட்ட பக்தியுடன் தரப்பட்ட அத்தை –இவ்வளவு சின்னதாய் வாங்க -அஹம் –அவாப்த ஸமஸ்த காமன் -இலை தீர்த்தம் தானே முதலில் -தோயம் கடைசியில்-உள்ளதே அப்புறம் மாலை சமர்ப்பித்து –பழம் கொடுத்து வெத்தலை -வரிசை கெட்டு பரவசம் -சாமான்ய சாஸ்திரம் அதிதி போலே செய்தால் போதும் விசேஷ ஏற்றம் ஒன்றுமே வேண்டாமே இவனுக்கு –அந்யத் இது தவிர வேறு ஒன்றையும் இச்சியான் –என்று அறியாயோ -பிரசித்தம் அன்றோ –முடியுமானால் –இடப்பட்ட த்ரவ்யத்துக்கு இல்லை -உள்ளத் தூய்மைக்கு- பக்தி உபஹ்ருதத்துக்கு –பரிவதில் ஈசன் துக்கம் இல்லா- ஹேய ப்ரத்ய நீகன்-படி அனுபவத்தில் விஸ்திருதராய் –பிரிவகை இன்றி -பச்சை இடப போமோ என்று அகலாமல் –நன்னீர் -சம்ஸ்காரம் பண்ணாமல் -ஏலக்காய் இத்யாதிகள் வேண்டாம் – புரிவதுவும் -அருள் கொடையாகக் கொடுப்பது சமர்ப்பிப்பது -இவனுக்கு அருளால் என்று அவன் திரு உள்ளம் -அல்பத்தில் இஷ்டம் -அதிகம் கொடுத்தால் பிடிக்காது -என்றவாறு –
பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி –பக்தியால் கலங்கி இட்டது போலே-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே – ப்ரேமத்தால் கலங்கி கொண்டேன் என்றவாறு
பத்ரம் -உண்ணுவது துளசி என்று கொள்ளலாமோ என்னில் -எத்தை இட்டாலும் என்பதற்கு பொருந்தாதே –துளசி கேசவ பிரியா ஆகுமே -அது அதுக்கு தகுந்தால் போலே –விநியோகம் கொள்ளுவதையே அஸ்னாமி என்கிறான் தானே -பாகவத புராணத்திலும் ஸ்ரீ கீதையிலும் உண்டே ஆதலால் தானே அருளிச் செய்தான் என்கிறார் -ஏற்கனவே நிறைக்கப்பட்ட தண்ணீர் போதும் -இவனுக்காக வேண்டாம் -தான் குடிக்க குளிர வைத்த தண்ணீரே போதுமே -கால் அலம்ப அதிதிக்கு எடுத்த வைத்தது போதும் -பூர்ண கும்பம் வாசலில் வைப்பர் அதிதிக்காக கொடுத்த தண்ணீர் கொடுக்காதது -இன்னொருக்காக எடுத்து வைத்த நல்லதும் வேண்டாம் -தனியான ஸத்காரம் எனக்கு வேண்டாம் –அதிதியை விஷ்ணு போலவே பூஜிப்பாய் என்றும் உண்டே -விஷ்ணுவே வந்தாலும் அதிதி போலே பூஜிக்கலாமே அந்யத் பூர்ணாதாபாம் கும்பாத் அந்யத் ஜனார்த்தன-ந தே இச்சதி
அந்யத் பாதாவநே ஜனாத் அந்யத் ஜனார்த்தன-ந தே இச்சதி
அந்யத் குசல சம் ப்ரஸ்நாந் ஜனார்த்தன-ந தே இச்சதி-விகல்பத்தில் சொல்லப்பட்ட நாநா த்ரவ்யங்கள் அபேஷ விரஹம் இல்லை -ஜல பரிமாண கௌரவ அபேஷை -கும்பத்தில் பூர்ண தீர்த்தம் தேவை இட்டார்-அத்தை அடுத்த பாதத்தில் கழித்து –இதில் சொன்ன காயிக வியாபாரமும் வேண்டாம் வாயாலே விசாரித்தால் போதும் -என்று காட்ட -உத்தர உத்தர அபேஷ லாகவம் சொல்லிற்று -இவ்வளவுகளை ஒழிய –மேலே மேலே மறுத்துச் சொல்லி -ஏதோ ஓன்று வேணும் என்று-பெரிதாக அபேக்ஷை இருக்குமோ என்ற சங்கை தீர்க்க —
வேறு ஒன்றையும் ஜனார்த்தனன் எதிர்பார்க்க மாட்டான் என்பதை ந தே இச்சேத்-என்று அருளிச் செய்கிறார் -)

(பரிவதில் ஈசனை – ஸூ ஸ்பஷ்டம்-பத்ரம் ஸ்பஷ்டம்-அந்யத் பூர்ணாத் -அஸ்பஷ்டம் -மேலே மேலே மறுக்கும் படி-எது வேணும் தெளிவு இல்லை – சாமான்ய பத்ரம் வாக்கியம் ஸ்பஷ்டம் -இன்னும் சங்கை ஒட்டிக் கொண்டு இருக்கும்-உபகரண வைகல்ய பிரதிஷ்டவ்ய பிரிவகை இன்றி -வாக்கியம் இங்கு தானே –இது போல் என்ன எண்ணம் தெளிவாக அவற்றில் இல்லையே -பிரியாமல் என்னிடம் உள்ளவன் ஆழ்வார் தெளிவாக அருளிச் செய்துள்ளார் –எழுவார் விடை கொள்வார் –பிரியாமல்-நன்னீர் தூய -குண த்ரவ்ய நிரபேஷ்யம் —நன்மையை பிரிவகை இன்றி உடன் சேர்த்து வியாக்யானம் -உயர்ந்ததாக இங்கே தானே தெளிவு -அருள் கொடை கொடுப்பதே அபிஷந்தி ஸூ சகம் -புரிவது -இங்கு தானே–அருள் கொடை -சப்தம் இங்கு தானே உள்ளது – பக்தி உபஹ்ருதம் -அருளைப் பெறுவதற்காக அங்கு – இங்கே சேதனன் அருளால் தான் பெற்றது என்ற திரு உள்ளம் தெளிவு)

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்று-பத்ரத்தை யாகவுமாம்-புஷ்பத்தை ஆகவுமாம் -பலத்தை ஆகவுமாம் -ஜலத்தை ஆகவுமாம் -யாவன் ஒருவன் பக்தியால் தருகிறான் -அநந்ய ப்ரயோஜனதை யாகிற சுத்தியோடு கூடின மனசை யுடையனான அப்படிப்பட்ட பக்தியோடு தரப்பட்ட அத்தை -அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற நான் -அவன் ப்ரேமத்தாலே கலங்கித் தருமாப் போலே வியாமோஹத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவன் என்று தானே அருளிச் செய்தான் இறே

அந்யத் பூர்ணாதாபாம் கும்பாத் அந்யத் பாதாவநே ஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் ந தே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது த்ருதராஷ்ட்ரன் -பாண்டவ பக்ஷபாதியாய் இருக்கிற கிருஷ்ணன் வாரா நின்றான் –
அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்ளுகிறோம் -என்றால் போலே சிலவற்றைச் சொல்ல-நினைவும் சொல்லும் ஒத்து இராத அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் -வருகிறவன் அங்கண் ஒத்தவன் அல்ல காண்-
அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான்
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்தில் நிறைத்துக் குளிர வைக்கக் கடவனே-
அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் -அதுக்கும் மேல் ஒன்றுமே வேண்டா-தன் க்ருஹத்திலே அதிதி வந்து புகுந்தால் காலைக் கழுவதுவதாக சாமான்ய சாஸ்திரம் வித்தித்து வைத்தது இறே
அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் -அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றுமே செய்ய வேண்டா-நெடும் தூரம் வந்தவனை குசல ப்ரஸ்னம் பண்ணக் கடவது இறே -அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றுமே வேண்டா
இவ்வளவுகளை ஒழிய மாற்று ஒன்றை இச்சியான் காண் அவன் என்கை-
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ வல்லையாகில் உன் ஆபி முக்ய ஸூ சகமாக இவ்வளவுகளைச் செய்யப் பார் -என்றபடி –

பரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை சம்சாரன் முக்தராய் அனுபவித்து அவ் வனுபவ ஜனித ப்ரீதியாலே -ஏதத் சாம காயன் நாஸ்தே என்கிறபடியே பாடி விஸ்திருதராகையைப் பெற வேண்டி இருப்பீர்-உபகரணங்களில் குறைவு பார்த்து அகலுகை தவிர்த்து- அசம்ஸ்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒரு படி பிரயோகித்து –பின்னை அவனுக்கு அருள் கொடையாகக் கொடுப்பதுவும் ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் இவ்வளவும் அமையும் கிடி கோள் அவனுக்கு என்று-அவனுடைய ஸ்வ ஆராதயையை ஸூ ஸ்பஷ்டமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

—————————————

பூர்ண விஷயம்–136- என்று தொடங்கி இவ்வளவும் ப்ரஸக்த அனு பிரஸ்க்தமாக வந்த இத்தனை இறே –பிரபத்தி வைலக்ஷண்யம் இறே கீழே சொல்லப்பட்டது
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லக்ஷண்யம் சொல்லுகைக்காக சித்த உபாயத்துக்கும் பலத்துக்கும் உண்டான ஐக்கியத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

(இப்படி இவன் சில செய்வதும் அத்தால் ஸ்வரூபம் அந்தர்கதம் கைங்கர்யம் என்றால் பல சாதனம் எது என்ன-பலமான பகவானே சாதனம் வேறு இல்லை –அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் ஸாஸ்த்ர சித்தம் -உபாதானம் தவிர வேறே நிமித்தம் தேட வேண்டாமே -ஒன்றாகவே இருந்தது சத்தாகவே இருந்தது இரண்டாவதாக இல்லை –சாஸ்த்ர சித்தம் -அபின்ன ப்ராப்ய ப்ராபகம் சம்பிரதாய சித்தம் -)

(ஆய் ஸ்வாமிகள் -ஈஸ்வரனையும் ஜீவனையும் உபமேயமாக வைத்து இதுக்கு புல்லை காட்டி -திருவடி அவர் விஷயம் – அஞ்சலி நமக்கு -கறவை மாட்டை அழைக்கவும் கட்டி இடுவதுவும் புல் போலே திருவடிகளே சாதனம் சாத்தியம் -வஸ்து பேதம் இல்லை -அனுசந்தான பேதமே உள்ளது-)

(விலக்ஷண குணம் விக்ரஹம் தேவை -சாதனம் -பிரபத்தி பண்ணுவதும் அர்ச்சையிலே--எளிமை அழகு –அனுபவத்துக்கும் குணங்களும் -பரத்வம் ஸ்வாமித்வம் -நாராயண பதம் பூர்வ உத்தர த்வய வாக்கியங்களில் உண்டே -உபமேயம் அத்யகரித்து கொள்ள வேணும் யோக்யதா அனுகுணம் அத்யாஹாரம் கொள்ள வேண்டும் –ஈஸ்வரன் -சேதனன் இரண்டாகவும்ஈஸ்வரன் -திருவடிகள் – சேதனன் -இத்தை காட்டி -அஞ்சலியைக் காட்டி -அஞ்சலியை பண்ணுகிறான் –பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந – -பலமும் சாதனமும் ஒன்றே- –விசிஷ்ய அந்நிய தரம் -இரண்டில் ஓன்று நிர்தேசியாமல் விட்டார் -விஸிஷ்ய அந்நிய தரம் -ஈஸ்வர சேதன விஷயம் இரண்டையும் சொல்வதற்காக அருளிச் செய்யாமல் விட்டார் –அர்த்த சாமர்த்தியத்தால் இரண்டும் வரக் கடவுமே -முற்று உவமை படி -உபமேயம் சொல்லாமல் விட்டது -உபமானத்தாலே கோடி காட்டி –ஈஸ்வர பரதையாக யோசனையும் சேதனன் பரதையாக யோசனையும் ஒரே ஏற்றம்-இரண்டுமே பிரதானம் தானே  -)

அதாவது கோவை வரவழைத்து -பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் தத் போக்யமான புல்லு தன்னையே-தத் வசீகர சாதனமாக முன்னிட்டு அழைத்துக் கொண்டு அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு
பேதம் இல்லாதாப் போலே -விலக்ஷண குண விக்ரஹ விசிஷ்டனான தானே முந்துற இவனைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு உபாயமுமாய்-பின்னை என்றும் ஓக்க இவனுக்கு உபேயமாய் இருக்கையாலே-பல சாதனங்கள் இரண்டும் ஏக வஸ்துவாய் இருக்கும் என்கை 

—————————————————–

இத்தால் பிரபத்திக்கு வை லக்ஷண்யம் பலித்த படியே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

(ஆய் ஸ்வாமிகள்நிரதிசய போக்யமான சாத்தியமே- நிரபேஷ நிரபாய சாதகமாய்ஆகையால்– அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக ஸூ பிரயத்தன நிவ்ருத்தி ரூபமாய் கொண்டு தத் சரண வர ரூப பிரபத்தியும் -ஸூ க ரூபமாய் இருக்கும்
ஆக -இப்பிரகரணத்தால் –அபாயத்வாதி(நாஸகரம் விஸ்லேஷம் )தோஷ துஷ்டமான சாதனாந்தரங்கள்-ஸ்வரூப அநநுரூபமாய்-விரோதித்வேன த்யாஜ்யங்கள் என்றும் தத் தியாக அங்கியாய் தத் தோஷம் அற்ற பிரபத்தி யுபாயம் -ஸ்வரூப உசிதத்வாதி ஸ்வரூப அனுரூப உசிதம் என்றதாயிற்று -)

(தேவையாய் இராதே -பிரபத்தி ராக பிராப்தம் -பக்தி விதிகள் உண்டு – இது அத்யந்த அபிமதமாய் இருக்க பிரயோஜகம்-அஞ்சலியாதி மாநஸமாகவும் காயகமாகவும் வாசகமாகவும் செய்யலாமே -தொழுது தொழுது -சாதனத்துக்கும் சாத்யத்துக்கும் இரட்டிப்பு -ஞானாகத ஆனுகூல்ய பிரதிகூல்யங்களுக்கு –அறிவுக்கு விஷயம் உறுதி–விஷயகத ஆனுகூல்ய பிரதிகூல்யங்களுக்கு-செய்ய வேண்டியது ஸ்வீகாரம்–பிரார்த்தனையை உள்ளடக்கிய விசுவாசம் -உறுதி குலைந்து உபாயாந்தரங்களுக்கு செல்வது பிராதிகூல்ய கார்யம் – நிரதிசய ஆனந்த ரூப -விட்டுப் பிடிக்காத உறுதியாக சாதகமாய் இருக்கிறார்- -பக்திக்கும் ஸூக ரூபம் உண்டே -ஸ்ரீ கீதையில் உண்டே – சாத்தியமாக உண்டு -சாதனமாக இல்லையே என்பதே சம் ப்ரதாயம் –ஸூஸூகரம் கர்தவ்யம்அங்க பூத கர்ம கத துக்கம் உண்டே -பிரபத்திக்கு அங்கம் சர்வ தர்வான் பரித்யஜ்ய -நிவ்ருத்தி ரூபம் ஸூக ரூபம் தானே -அங்கம் அங்கி இரண்டும் ஸூக ரூபமாக இருக்குமே-தேவையாய் இராதே -வித்யா அதீன -விதித்ததால் பிரவ்ருத்தி -விஷயத்வம் என்பதால் துக்க ரூபமாய் இருக்கும் -அந்த துக்கம் இங்கே இல்லையே)

அதாவது -ஸாத்ய வஸ்து தானே சாதனம் ஆகையால் -தத் வரண ரூபமான இது தேவையாய் இராதே (விதி விதித்தது என்று இல்லாமல் ராக ப்ராப்தையாய் )ஸூக ரூபமாய் இருக்கும் என்றபடி-அன்றிக்கே -இன்னுமும் பிரபத்திக்கு ஒரு வைலக்ஷண்யம் அருளிச் செய்கிறார் -புல்லை -இத்யாதியாலே -அதாவது புல்லைக் காட்டி தேனுவை அழைத்துக் கொண்டு பின்னை அப் புல்லையே இடும் அளவில் பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே ஸக்ருத் க்ருத அஞ்சலி -என்றும் நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )ரூபையான ப்ரபத்தியை முன்னிட்டு ஈஸ்வரனை வசீகரித்தால் பின்னை அவனுக்கு உகப்புக்காகச் செய்யும் அடிமையும் பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந –என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -(தொழுது இரட்டித்தது சாதனமும் சாத்யமும் )-3–8-4-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியாதி (ஆதி மானசமும் வாசகமும் )வ்ருத்தி விசேஷங்களாலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை – இப்படி பலமானது தானே சாதனமாகையாலே இப் பிரபத்தி தான் தேவை இராதே இவனுக்கு ஸூக ரூபமாய் இருக்கும் என்கை —

ஆக – பிரபத்தி யுபாயத்துக்கு-134- என்று தொடங்கி இவ்வளவாக ப்ரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் குண சாஹித்யமும் சொல்லப் பட்டது

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading