ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்–பெறுவான் முறை-
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307–இப்படி பிரித்து அனுபவம் –
ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –
———————————
ஏவம் பூதமான பிராவண்யம் விஷய வைலக்ஷண்ய அதீனம் அத்தனை அன்றோ –
சம தமாதி ஆத்ம குணங்கள் அன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பது என்ன –
அவை தன்னையும் இது தானே உண்டாக்கும் என்கிறார் -மேல் –
சூரணை-94-
இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –
(ஆய் ஸ்வாமிகள்-பிராவண்யம்-அடியாக மடல் எடுக்கை -தேக த்யாஜ்யம் -இத்யாதி -இது அடியாகவே சம தமாதி ஆத்ம குணங்கள் –ஆக ருசி பிராவண்யமே பிரதான்யம் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பதே கர்த்தவ்யம் -அவனுக்கும் பிராட்டிக்கு-ஆச்சார்யர்களுக்கும் -ஹேதுக்கள்-சாஸ்த்ர அத்யாயனாதிகள்-சத்வ குணம் வளர வளர – ஆச்சார்ய சம்பந்தம் கிட்டி -அங்கீகாரம் -ஹேதுவாக பகவத் பிரசாசத்தால் பிறக்கும் -முமுஷுத்வ -முக்தத்வ —ஜாயமானம் புருஷம் கடாக்ஷம் -சாத்விகன் -ஆச்சார்ய உபதேசம்- விஞ்ஞாயா –மோக்ஷ இச்சையும் இதனால் பிறக்கும்-ஆத்ம குணங்களுக்கு பிரதான ஹேது –பகவத் பிராவண்யம் -சத்தா பிரயுக்தமாக துடிப்பிக்கும்-)
(உபாய உபேய அதிகாரங்கள் மினுங்க -அழுக்கு போக்க -பல பிரதிபந்தகம் போக்க சம தம குணங்கள் —கட வல்லி–சாந்த மனஸ் அந்த கரணங்கள்–உபாய உபேய பிரயோஜகத்வம் சொல்லுகிறது இங்கு – -கீழே உபேயத்துக்கு அதிகாரம் சொல்லி –ப்ராவண்யம் -ருசி -ப்ராதான்யத்தை அருளிச் செய்கிறார்-அதி பிரவ்ருத்தி ஏற்படுத்தி -ஆத்ம குணங்களுக்கு அதிகாரமும் கொடுக்கும் –சமதம நியதாத்மா —சர்வ ஜீவ ராசிகள் இடமும் அனுகம்பா -விஷய சுகம் விரக்த-அறிவு ஒளி விட விஷயாந்தரங்களில் ஈடுபடாமல் –அமாநித்வம்-ஸ்ரீ கீதை – -13-அத்யாயம் -பெரியோர்களை அவமதிக்காமல் –சாந்தி ஆர்ஜவம் ஆச்சார்ய உபாசனம் தூய்மை ஸ்தைர்யம்-ஆத்மாவையே நினைத்து -இந்திரிய விஷயங்களில் வைராக்யம் அஹங்காரம் இல்லாமல் -துர்மானம் இல்லாமல்-அனுகூல சகவாசம் -ஆச்சார்ய உபதேசம் ஆகார சுத்தி போல்வன அப்ரதான ஹேதுக்கள்-)
சம தம நியதாத்மா -அமாநித்வம் – இத்யாதியில் சொல்லுகிறபடியே -இச் சேதனனுக்கு உண்டாக்க தக்க ஆத்ம குணங்கள் தான் அநேகம் உண்டு இறே–இவை எல்லாவற்றுக்கும் இந்த பிராவண்யம் -பிரதானம் ஹேது ஆகையாவது –அனுகூல சஹவாச-சாஸ்த்ராப்யாச ஆச்சார்ய உபதேசாதிகளான -(ஆதி -ஆகார ஸூத்தி ஜன்மாந்தர ஸூஹ்ருதம் போல்வன ) ஹேத்வந்தரங்களில் காட்டில் -முக்ய ஹேதுவாய் இருக்கை–
————————————-
இவ் அர்த்தத்தில் பிரமாண உபாதாநம் பண்ணுகிறார் –
சூரணை -95-
மால் பால் மனம் சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –
(ஆய் ஸ்வாமிகள்-மால் பால் மனம் சுழிப்ப-பிராவண்யமே மனம் சுழிப்பது
பரமாத்மநி யோரக்த –விரக்தி வேறே இங்கே ரக்தி உண்டானால்
கண்டு கேட்டு உற்று மோந்து -சிற்றின்பம் ஒழிந்தேன்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு மிதுன சேர்த்தி கண்டு -பின்பே-ஐஸ்வர்ய கைவல்யம்-அளவில்லா சிற்றின்பம் -ஐஸ்வர்யம் பார்த்தால் அளவில்லா -பகவத் லாபத்தை பார்த்தால் சிற்றின்பம் ஒழிந்தது-விரக்தியும் ஆத்ம குணமும் வேறே வேறே இல்லையே -மனம் புலன்களை அடக்குவதே வைராக்யம் –அதுக்கு பகவத் பிராவண்யம் வேணும் என்றவாறு -)
(மனசிலே நசை கிடக்க -கேவலம் கை விடுகை அகிஞ்சித்க்கரம் –தோளிலே கை வைக்காததால் உறுதி பிறக்கும் –மங்கையர் கை தோள் கை விட்டு விரக்தி ஹேதுத்வம்-நூல் பால் மனம் வைக்க-சாஸ்த்ர ஸ்ரவண உபயுக்த அவதான ரூப மனம் அடக்கம்-சம விசேஷ ஹேதுத்வம் – –நாம் ஆத்மா -நம்முடையது மனம் ஒரு கருவியே -நூல் வலையிலே பட்டு இருக்க வேண்டுமே —– கற்கின்ற நூல்வலையில். பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண் (ஸ்ரீ -நா. தி, 40),மனசின் மேலே மநோ குணமான கோபம் நமக்கு வர வேண்டும்-தன் இஷ்டத்துக்கு திரிந்தால் -பெண்ணையும் பிள்ளையும் கண்டிப்பது போலே -)
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் –மூன்றாம் திரு வந்தாதி -13 – என்று சர்வேஸ்வரன் பக்கலில் -ஹிருதயம் பிரவணமாக-போக்யைகளான ஸ்திரீகளுடைய தோளுடன் அணைகையில் நசை அற்று -பிரமாணங்களில் மனசை வைக்க எளிதாம் என்றும் –
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி-என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் அத்தாலே பரமாத்ம இதர விஷயத்தில் -விரக்தன் ஆவான் என்றும் –
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு கேட்டு உற்று
மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் –திருவாய் மொழி -என்று பெரிய பிராட்டியாரும் தேவருமாய் ஒரு தேச விசேஷத்திலே-எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியைக் கண்டு -அங்கே பிரவணனாய்-
ஐஸ்வர்ய கைவல்யங்களில் விரக்தன் ஆனேன் என்றும் –
பகவத் பிராவண்யம் இதர விஷய விரக்தி ஹேதுவாக சொல்லப் பட்டது இறே –
——————————————–
பகவத் பிராவண்யம் ஆத்ம குணங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது என்று பிரஸ்தாவித்து- இதர விஷய விரக்தி -ஹேதுத்வ மாத்ரத்தில் -பிரமாணங்களை தர்சிப்பான் என் என்கிற சங்கையில் – அருளிச் செய்கிறார் –
சூரணை -96-
ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –
(ஆய் ஸ்வாமிகள்-விசேஷண பஞ்சகம் -சாந்த சம தமாதி -பொறுமை மனஸ் வெளி இந்திரியங்களை அடக்கி –வைராக்யம் -விரக்தி -பிராவண்யம் ஹேதுக குண பிரதானம் சமமும் தமமும்-ஸூ அதிகார அபேக்ஷித-ஞானாதி ஆத்ம குணங்களில் -அதில் அதிகார அன்வய பிரதானம் பாஹ்ய ரூப நியமன ரூபமான -சமம் – அந்தகரண நியமன ரூபமான தமமும் என்கிறார் –மா முனிகள் அத்தை தமம் என்றும் இத்தை சமம் என்றும் அருளிச் செய்கிறார்-நியமனம் -நியமிக்கப்படுவது மனம் இந்திரியங்கள் -நியதாத்மா -இவை எல்லாம் அசேதனங்கள் – சித்தம் பிரசாந்தமாக இருப்பதே சமம் – பிரதானத்தை மற்றவை பின் தொடரும் )
(தமஃ பாஹ்ய கரணாநாம் அநர்த விஷயேப்யோ நியமநம். ஷமஃ அந்தஃகரணஸ்ய ததா நியமநம்.–10-4–ஸமோ தமஸ்தப: ஸௌசம் ஷாந்திரார்ஜவமேவ ச ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்–18-42-சமம் தமம் ஆர்ஜவம் சாந்தி -இங்கும் முதலில் சமம் தமம்-சம தமம் என்பதற்கும் விரக்தி என்பதற்கும் அந்யோன்ய சின்ன பேதம் –ராக ஹேதுக ஞான விசேஷ ஜனக –விஷய இந்திரிய சன்னிஹர்ஷம் —நிரோதனம் தடுப்பதே சமம் தமம் -விஷயத்தையே விலக்கி வைக்க வேண்டும் –தத் ப்ரயுக்த ராக அபாவம் விரக்தி -தடுத்தாலும் மனம் போகலாமே -இந்த சின்ன வாசியை உணர வேண்டுமே –அன்றிக்கே-பிராவணயத்தால் விரக்தி -அனைத்து ஆத்ம குணங்களுக்கும் ஹேது -இவற்றில் சமம் தமம் பிரதான்யம் – உப லக்ஷணம் என்றுமாம் –விரக்தி பிரதான்யமும் என்றும் சில பிரமாணங்கள் சொல்லுமே -அஹிம்சை பிரதானமும் – அஷ்ட குணங்களில் தயை பிரதானமும் -சொல்லுமே-விரக்தி அஹிம்சாதிகளுக்கு உப ஜீவனம் சமம் தமம் தானே —இந்த பிரமாணங்களும் சமம் தமத்தில் ஆரம்பித்தே சொல்லுமே -பிரதானம் தலைமை முதன்மை –இது ஏற்பட்டால் தான் அது வரும் -பெருமை மிக்கது என்பது இல்லை -இவை ஏற்பட்டால் மற்றவை பின் தொடரும் —உப ஜீவ்யம்-உபஜீவக பாவத்தால் சமமும் தமமும் பிரதானம் என்னக் குறை இலை -)
சமம் ஆவது -அந்த கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச் ச இந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமச் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நாம் அனர்த்த விஷயேப்யோ நியமனம் –
சமோந்த கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது -மாறி சொல்லும் இடமும் உண்டு –
இந்த சம தமங்கள் உண்டான இடத்தில் -அல்லாத குணங்கள் தன்னடையே வரும் ஆகையால் – பிரதானமான இவற்றுக்கு ஹேது என்னும் இடத்தில் பிரமாணம் காட்டப் பட்டது என்று கருத்து –
அன்றிக்கே –
கீழ் சொன்ன விரக்தி ஹேதுத்வம்-சகல ஆத்ம குண உத்பத்திக்கும் ஹேது என்னும் இடத்துக்கு உப லஷணமாக்கி- இவ் ஆத்ம குணங்களில் பிரதானம் எது என்கிற சங்கையில் ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -என்று அருளிச் செய்தார் ஆகவுமாம்-
—————————————————-
இந்த சம தமங்கள் உண்டானால் -இவனுக்கு உண்டாக கடவ-பல பரம்பரையை
அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -97-
இந்த இரண்டும் உண்டானால் ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே வைகுந்த மா நகர் மற்றது கையதுவே – என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —
(ஆய் ஸ்வாமிகள் -இவை இரண்டாலும் வரும் பிரயோஜன விசேஷங்களை -பிரதான பயன் காரணங்கள்-அருளிச் செய்கிறார் –சுருக்குப்பை திரு மந்த்ரம் —சதாசார்ய பகவத் பிரசாதத்தாலே நிலை நிற்கப் பெறும் இவை இரண்டும் –-இதுக்கு மேலே -இவை கண்டு உகந்து-விசேஷண கடாக்ஷம்-ஹிதைஷியான ஸூவ ஆச்சார்யன் —இது பிரதம அங்கீ காரம் அல்லாமையாலே ச ஹேதுகத்வ தோஷம் வராது -பிரதம கடாக்ஷம் நிர்ஹேதுகமாக -அத்தைப் பெற்று ருசி வளர வளர-எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் விசேஷ கடாக்ஷம் சிலருக்கே –முதலில் அங்கீகாரம் -சம தமம் வளர -பின்பு விசேஷ கடாக்ஷம் என்றவாறு —
ஜாதி அந்தகனுக்கு -குருடனுக்கு புதையல் கிடைத்தால் போலே திருமந்திரம் –அந்நிய சேக்ஷத்வாதிகள் அல் வழக்கு -திரு மந்த்ரம் -ஸ்வரூபாதி பிரகாசமான மாணிக்கச் செப்பான திரு மந்த்ரம் -ஜீவ பர ஸ்வரூபங்களை பிரகாசிக்கும்-ஸ்வார்த்த அனுசந்தானம் -திரு மந்த்ரம் அர்த்தம் அநுஸந்திக்கும் படி அன்றோ விசேஷ கடாக்ஷம் -ஆழ்ந்து – பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்ய அனுஷ்டானத்துக்கு அப்புறம் -பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் பர்யந்தமாக – ஸ்ரீ ஸ்தன ஆபரணமாக பெருமாள் ஸ்ரீ -ரெங்கேஸ்வரன் இனி நான் போகல் ஓட்டேன் என்னும் படி கை புகுரும்-ஸூவதந்த்ரனான ஈஸ்வரன் பரதந்த்ரனாக கை கிடைத்ததான பின்பு —மற்றது -அந்த உயர்ந்த -இதர வியாவ்ருத்த முக்த பிராப்ய பூமி —பொன்னுலகு ஆளீரோ என்று தான் உகந்தாருக்கு கொடுக்கும் படி கை புகுரும் – –விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி போலே -)
(ஆச்சார்ய உபதேச -மூல மந்த்ர ஜன்ய -ஆத்ம யாதாத்ம ஞான அனுகுண- உபாய உபேய அதிகாரங்கள் –உத்தர கால பாவி – –அந்யோன்ய ஆஸ்ரம தோஷம் இல்லாமல் –பூர்வ பாவியான சம தமங்கள்-உபதேசம் கேட்க ஸ்ரவணத்துக்கு உபயுக்தமான –இது மால் பால் மனம் சுளிப்ப பரிபூர்ண சம தமங்கள் இல்லை —– தனக்காகவும் தெரியாது சொன்னாலும் கேட்க்காமல் இருக்கக் கூடாதே அந்த நிலைமை –உபக்ரம அவஸ்தானம் -என்றபடி -சாந்தி அநசூயை-குணம் படிப்பில் மேல் உள்ளாரையும் -வாழ்க்கையிலும் பணத்திலும் கீழ் உள்ளாரையும் பார்க்க வேண்டுமே -ஸ்ரத்தாவான்-குரு அர்த்தத்துக்காக- சுசி சுத்தம் பிரிய ஹிதம் சிஷ்ய லக்ஷணம் –பொதுவானவை -மேலே வளர்ந்த பரிபூர்ண சம தமங்கள்-மந்த்ரம் ஆச்சார்ய அதீனம் –மந்த்ரார்த்தம் மனசில் நிற்க வேண்டும் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ராஹ்மணன் ஆச்சார்யர்-திருமந்திரம் இட்ட வழக்காய் ப்ரஹ்மம் இருக்கும் –தைவாதீனம் ஜகத் சர்வம் என்பதால் -ஜகத் உபய விபூதிகளும் -அவனதே –தெய்வாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீனம் து தெய்வதம் தன் மந்த்ரம் ப்ராஹ்மணாதீனம் தஸ்மத் ப்ராஹ்மணப் பிரபு ஜெயத் (ரிக் வேதம் 62ஆம் பிரிவு – 10ஆம் சுலோகம்) இங்கு மந்த்ரம் திருமந்திரம் -ப்ராஹ்மண -ஆச்சார்யர் –பரிசுத்த குண பேதம் -விசுத்த ஆசார தத் பரம் -விரதஞ்சா சகல பாபான் -குடும்ப பாலணம் -சாதம் தாந்தம் ஆர்ஜவம் பிரணவ பகவத் பரம் –சந்தத்த ஹ்ருதயம்- அடி கொதிப்புடன்-பக்தியில் ஆசை சம்சாரம் கொதிப்பை உணர்ந்து -ஸர்வார்த்த சாதகம் மஹா புத்திக்கு அர்த்தங்களை கிரஹிப்பதில் சத்யம் -குசல பாணி -கை சாமர்த்தியம் கைங்கர்யங்களில் –இவை எல்லாம் சிஷ்ய லக்ஷணம் -பாவேந சங்கதம்-
-சிஷ்யன் என்று கை கூப்பி வர வேண்டும் –அன்புடன் கிருபையுடன் விருப்பத்துடன் உபதேசம்—பரீஷை பண்ணி 3 மாதமாவது உபவாசம் இருக்க வைத்து -சாந்தம் சாந்தம் பரீஷை கிருபையா – –கண்டு உகந்து -சம தமாதிகள் ஆச்சார்யர் கிருபையை கிளப்பும் – சம்சார ஆர்ணவம் -தாண்டுவிக்கும் தோனி தான் அஷ்டாக்ஷரம் -ஆச்சார்யர் உகந்து உபதேசிக்க – துளி சமதம ங்களுடன் வந்தவனுக்கும் உபதேசிக்க சாஸ்திரம் விதிக்கிறது விதி -ராகத்துடன் கண்டு உகந்து உபதேசிக்க இந்த லக்ஷணங்கள் சிஷ்யனுக்கு வேண்டும் என்றவாறு -)
பகவத் ப்ராவண்யம் அடியாக வரும் -பரி பூரணமான சம தமங்களை கீழ்ச் சொல்லிற்றே ஆகிலும் – இவ் இடத்தில் ஆச்சார்ய அங்கீகாரத்துக்கு பூர்வ பாவியான அளவில் ஒதுக்கிச் சொல்லுகிறது –
இந்த சம தமங்கள் இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுருகை யாவது –
இவ் வாத்ம குணம் கண்டு உகந்து -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசிக்கும் படி இவனுக்கு வஸ்யனாகை-
தஸ்மை ஸ வித்வான் உபசந்தாய சமயக் பிரசாந்த சித்தாய சமான்விதாய –
யேனா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
சம தம உபேதனாய்க் கொண்டு உபசன்னானவனுக்கு இறே ப்ரஹ்ம வித்யையை -தத்வத -உபதேசிக்கச் சொல்லிற்று -இந்த ஸ்ருதியில் ஆசார்யுபதேசதுக்கு உடலாக சொன்ன சம தமங்களுக்கு -ஏதேன ஸ்ரவண உபயுக்தம் அவதானம் விவஷிதம் –
நதூபாச நோபயுக்தாத் யன்தேந்த்ரிய ஜயாதி -என்று இறே சுருதி பிரகாசிகாகாரர் வியாக்யானம் பண்ணிற்று –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுருகை யாவது – மந்த்ரா தீநஞ்ச தைவதம் -என்று -திருமந்தரம் இட்ட வழக்காய் இருக்கும்-அவனாகையாலே -அர்த்த சஹிதமாக அது கை புகுந்தவாறே -தத் ப்ரதிபாத்யனான தான் இவனுக்கு -அநிஷ்ட நிவ்ருத்த பூர்வ இஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான – ஈஸ்வரன் கை புகுந்தவாறே –வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறபடியே-பிராப்ய பூமி கை புகுருகை யாவது –தைவாதீனம் ஜகத் சர்வம் -என்று உபய விபூதியும் ஈஸ்வரன் இட்ட வழக்கு ஆகையாலே -அவன் பிராபகனாய் கை புகுந்தவாறே – பிராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்டம் இவனுக்கு அத்யந்த சுலபமாகை–
———————————————
இப்படி சம தமங்கள் உண்டாகவே -உத்தரோத்தரம் இவை எல்லாம் சித்திக்கும் பிரகாரத்தை
ஆரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்து – இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாக சொல்லிற்று ஆக நியதம்-என்னும் இடத்தை அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார் –
சூரணை -98-
பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே -( குணங்களாலே இல்லாமல் -ஜாதி ஏக வசனம்)
(ஆய் ஸ்வாமிகள்-ஆத்ம குணங்களாலே இல்லாமல் குணத்தால் என்றது ஜாதி ஏக வசனம் –
பரம பத பிராப்தம் ஸ்வ தந்த்ர பகவானால் -அவனே உபாயம் –நமஸ் சப்தம் சரண சப்தங்களாலே –நமஸ் விவரணம் சரணம் த்வயத்தில் -தத் பிரகாசம் ஸங்க்ரஹ விவரண ரூபம் -அர்த்த பிரகாசகமான திரு மந்திரத்தால் ப்ரஹ்மம் உண்டாம் -விலக்காமை ஒன்றுமே வேண்டுவது- எனக்கு அல்லேன் என்றாலே போதுமே —பகவான் மந்த்ர அர்த்தம் -என்று விசேஷிக்கையாலே-ஸூ அர்த்த உபதேஷ்ட பிரதான்யம் தோன்றுகிறது –ப்ராபகத்வம் பிரதான்யம் – இந்த சதாசார்ய லாபம் தத்-(பகவத் )ப்ராவண்ய ஹேதுக சம தம ரூபமான ஆத்ம குணத்தால் உண்டாம் –சம தம ஆரம்பித்து -ஹேதுவாகக்கொண்ட-பரம புருஷார்த்தம் வரை -படிப்படியாக உபய க்ரமத்தாலும் கீழிலும் இங்கும் அருளிச் செய்கிறார் -இதனாலே அது உறுதியாக சொல்லி -)
(இதனால் இது கிட்டும் -மற்ற ஒன்றால் கிடைக்காது என்பதை திடமாகக் காட்டுகிறது –பூர்வ பூர்வ காரண கீர்த்தனம் -உத்தர உத்தர கார்ய கீர்த்தனம் -நேர் மறை எதிர்மறை -நின்றனர் –நின்றிலர் -அர்த்தம் திடமாக்க போலே இங்கும் —அன்வயம் வியதிரேகம் -இன்ன இன்ன குணங்களை உடையவன் சிஷ்யன் ஆக மாட்டான் -கிருபையுடன் உபதேசம் என்றும் -சத் உபதேசம் இல்லாமை வித்யை சித்திக்காது-அஷ்டாக்ஷரம் விட வேறே மந்த்ரம் இல்லை என்றும் -சம்சார ஆர்ணவம் மூழ்கி விஷயாந்தரங்களில் அழுந்தி உள்ளவர்களுக்கு விஷ்ணு போதம் -வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றார்கள் –நியதம் -நேர் அடி தொடர்பு என்று இரண்டு வழியிலும் அருளிச் செய்கிறார் —ப்ராப்யம் வைகுந்த மா நகரம் -ப்ராபகம் ஈஸ்வரன் -என்பதை உத்தேசித்து இந்த சப்த பிரயோகங்கள் -)
இது தனக்கு பிரயோஜனம் -இது ஹேது பரம்பரையில் பிரதம ஹேது– சம தமங்கள் ஆகையாலே-அவஸ்யம்-இவை இரண்டும் இவனுக்கு உண்டாக வேணும் என்கை –
ஈஸ்வரனே பிராபகன் ஆகையாலே -பிராப்ய லாபம் ஈஸ்வரனாலே என்கிற -ஸ்தானத்திலே-பிராபகத்தாலே -என்று அருளிச் செய்தது-
————————————
இந்த சம தமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –
சூரணை -99-
இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —
(ஆய் ஸ்வாமிகள்-இந்த சமதமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் இவர்களுக்கும் வேண்டும் என்று பிரபன்னனுக்கு நிச்சயமாக வேண்டும் என்பதை சொல்ல வேண்டுமோ -என்றுவிஷயத்தை த்ருடீகரிக்கிறார்-
சம தம ரூபமான விரக்தி -போக மோக்ஷ அபிலாஷிகளுக்கும் –ஹிரண்ய கசிபு தபஸ் -புலனை அடிக்கித்தானே ஐஸ்வர்யம் பெற்றான் –மண்டோதரி இந்திரியங்களை அடக்கி மூன்று லோகங்களையும் கொண்ட நீ -அடக்காமல் இப்படி அழிந்து போனாயே -என்றாளே-
சாதன அனுஷ்டாத்தின் பொழுது புலன்களை அடக்கி அனுபவிக்கும் தசையில் புலன்களை கொண்டு -என்பதால் முரண்பாடு இல்லையே-ஆப்த அங்கீ கார -ஆச்சார்ய அங்கீ கார -உண்மைக்கு அருகாமையில் உள்ளவரே–நம் நன்மையில் ஆசை கொண்டவர் -உண்மை பேசுபவர் – ஆப்தன் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம ஞானம் உள்ள ஆச்சார்யர் -அங்கீ காரத்துக்கு விரக்தி பிரதானம் -அநந்ய போக்யமாக பகவானை அனுபவிக்க போக்யர்த்த சித்யர்த்தமாக -வேறு ஒன்றில் விருப்பம் இல்லை -என்பதை காட்ட சம தமங்கள் வேண்டுமே -பிரபன்னனுக்கு அதிகாரமாக -உபேய அணுகுணாக வேணும் -அதிகார ரூபமாக வேணும்-பக்தியையும் தேவதாந்தர விஷயாந்தரங்களுடன் சமமாக கொண்டு
கிருஷ்ணனே ப்ராப்யம் ப்ராபகம் என்று நினைக்கும் பிரபன்னன் –ஏகாங்கி என்றபடி –
ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் —இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று -என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-
உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோதாந்த உபரத ஸ்திதி ஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பஸ்யேத் –என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞான நல்சுடர் கொளீ இ--திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே –
பிரபன்னர்க்கு அதிகார அர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமவை-துடக்கறுத்து வந்து
நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –
——————————————
இப்படி அதிகாரி த்ரயத்துக்கும் அபேஷிதமே ஆகிலும் -அதிகமாக வேண்டுவது பிரபன்னனுக்கு என்கிறார் –
சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –
(ஆய் ஸ்வாமிகள்-பிரபன்னன் நிவ்ருத்தி மட்டுமே சொல்லுவோம்- யதா சக்தி அனுஷ்டானம் போதும் என்பார்களே என்னில் -மிகவும் வேண்டுவது – அத்ருஷ்டத்தில் மட்டுமே -த்ருஷ்டங்களில் இல்லையே -ராக பிராப்தம் என்பதால் மிகவும் ஈடுபட்டு செய்வான் – பகவத் ஏக போகனான பிரபன்னனுக்கு மிகவும் வேணும் -உபாசகனுக்கு கொஞ்சம்–ஸ்வார்த்ததா கந்தம் இருக்குமே -அதனால் பகவத் ஏக போகனாக மாட்டான் -அங்கும் ஸ்வார்த்த கைங்கர்யம் தான் -பரார்த்த கைங்கர்யத்துக்கு போக மாட்டான் உபாசகன் -அவன் திரு உள்ளம் ஆனந்தமே பரம பிரயோஜனம் பிரபன்னனுக்கு மட்டும் தானே -)
இவனுக்கு இதில் ஆதிக்யம் சொல்லுகைக்கு ஆக இறே-அல்லாதவர்களை இவ்விடத்தில் பிரசங்கித்ததும்-
—————————————
அவ் வாதிக்யம் தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -101-
மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன் ஏற்றம் –
( ஆய் ஸ்வாமிகள்-ஆஸ்ரம தர்ம புத்தியாலும் – போக புத்தியால் -காமம் அனுபவிப்பான் -தாரத்துடன் -பிரபன்னனுக்கு கூடாமல் இருக்கையே ஏற்றம் –மிகவும் வேண்டும் என்பதை விவரிக்கிறார் இதில் -விஹித விஷயத்திலும் நிவ்ருத்தி வேண்டும்-பலத்தில் கலக்கம் உடைய ஐஸ்வர்யார்த்திக்கும் -சாதனத்தில் கலக்கம் உடைய உபாசகனுக்கும் பர தாரா நிவ்ருத்தி போதும் -உபய கலக்கம் அற்ற பிரபன்னனுக்கு வேறே எங்கும் கண் போகக் கூடாதே -தத் ஏக பகத்வ தூஷணம் வரக் கூடாதே-விசிஷ்ட ஆகாரம் -நிஷேதம் பரதாரா பரத்தை இரண்டும் கூடாதே -பிரபன்னன் நிஷ்க்ருஷ்ட ஆத்மாவைத் தானே பார்ப்பான்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் –என்று என்றே -சொல்லி முடிந்த உடன் பிரசாதங்களை ஸ்வீ கரிக்கிறோம் —தன்னேற்றேம் அசாதாரண பெருமை -)
(முக்தன் பல தசையில் –ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்ம வஸ்யம் இல்லை -சாரூப்பியம் பெற்றவன் –கைங்கர்யத்துக்காக சரீரம் கொள்ளலாம் –தூபம் தீபம் ஸ்த்ரீகள் ஏதாவாகிலும் இருக்கலாம் -போக சங்கோச அர்ஹதை கர்மத்தால் குறை இங்கே —ஸ்வராட் பவதி என்றால் போலே அங்கே -போக சங்கோசம் அர்ஹதை இல்லை –ஸ்வராட் ஸூவ ராஜ்ஜியம் -சேஷ பூதன் தானே -கர்மத்துக்கு வசப்படாதவன் -ப்ரஹ்மதுக்கு வசப்பட்டவனே -அனுபவிப்பது ப்ரஹ்மத்தையே —பிதரம் மாதரம் -தாரான் -விட்டே வந்தவன் பிரபன்னன் -அனுபவம் கூடாதே —சந்த்யா வந்தனம் -இத்யாதி கூடுமா போலே ஸூவ தாரத்துடன் கூடக் கூடாதோ என்னில்-கைங்கர்ய புத்தியா கூடாதோ -அவற்றில் சுக அனுபவம் இல்லையே —போக்யதா புத்தி அவர்ஜனீயம் ஆகுமே -அதிகார பங்கமே உண்டாகும் –ஜீவன் மூன்று கடன்கள் -தேவ கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -தீர்க்க வேண்டுமே யாகங்கள் -தேக கடனை தீர்க்க -பகவத் கைங்கர்ய ரூபம் செய்கிறானே பிரபன்னன் -அந்த அந்த தேவதைகளை ப்ரீதி படுத்த -தர்ம புத்தியா மற்றவர்கள் -அந்தர்யாமி ப்ரீதிக்காக பிரபன்னன் -அதே போலே -ஆஸ்ரமம் மாறியது தேஹத்தைப்பற்றி –பிரபன்னன் நிஷ்டையே அநந்ய போக்த்வம் என்பதால் இது அதுக்கும் மேல் -ஒரே அதிகாரம் விரக்தி -அதுக்கு விரோதியான ஸ்வ தார போக்யத்தையும் விட வேண்டும் – பித்ரு கடனை தீர்க்க பகவத் கைங்கர்ய ரூபம் என்று நினைத்து கூடினால் என் என்னில் பிரஜா உத்பத்திக்காக – பித்ருக்களுக்கு அந்தர்யாமியாக அவனை ப்ரீதி பண்ண -வேண்டாமோ என்னில் —சாமான்ய விதி விசேஷ விதி இரண்டும் உண்டே —அநந்ய போக்யமாக ப்ரஹ்மத்தையே கொண்டவன் -விரக்தியை விரோதித்து வருவதை விட வேண்டுமே-தாரான் சந்தஜ்ய என்றது பிரஜா உத்பத்திக்காக கைப் பிடிக்க கூடாது —கூரத் ஆழ்வான் ஆண்டாளை விட வில்லையே -பிரஜா உத்பத்தியை விடுவதையே சொல்லிற்று –-தர்ம பத்னி உடன் சேர்ந்து பிதாரான் தாரான் சொல்கிறோமே–ஆகார சுத்தி சத்வ சுத்தி என்று ராஜஸ தாமச அன்னம் நிஷேதம் -ஆபத்துக்கு விஷயமாகும் –அன்னத்தையே விடச் சொல்ல வில்லையே -அதே போலே ஆச்சார்யர்கள் புத்ர -உஜ்ஜீவன அர்த்தமாக கொடுத்து புன பிரபத்தி நினைவு படுத்தி பிராயாச்சித்தம் -ஆச்சார்யர் பெயரை வைக்கவும் -ஆளவந்தார் மூன்று விரல்கள் தெரியுமே -)
அதாவது
சப்தாதி போக பரனான ஐஸ்வர்ய காமனுக்கும் -சாதனாந்தர பரனான உபாசகனுக்கும் –
சாஸ்திர நிஷித்த விஷயமான பர தாராதியில் நிவ்ருத்தி மாதரம் அமையும் –(ஆதி -அஸ் ராவ்யம் –கேட்கக் கூடியதையும் பார்க்கக் கூடியதையும் போல்வன )
தத் உபய வ்ருத்தனாய் இருக்கிற பிரபன்னனுக்கு -சாஸ்திர விஹித விஷயமான
ஸ்வ தாரத்தில் நிவ்ருத்தி -அவர்களை பற்ற ஏற்றம் என்கை –
அவர்கள் இருவரிலும் ஐஸ்வர்ய காமனுக்கு ஸ்வ தாரத்தில் சாதன தசையில்
தர்ம புத்த்யா பிரவ்ருத்தியும் -பல தசையில் போக்யதா புத்த்யா பிரவ்ருத்தியுமாய் இருக்கும் உபாசகனுக்கு பலம் பகவத் அனுபவம் ஆகையாலே அவனைப் போலே பல தசையில்
அன்வயம் இல்லையே ஆகிலும் –உபாசன தசையில் தர்ம புத்த்யா பிரவ்ருத்தி வேணும் –
பிரபன்னனுக்கு தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வ அதிகார பஞ்சகம் ஆகையாலே
விஹித விஷயத்திலும் நிவ்ருத்தி வேணும் என்றது ஆய்த்து—(தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும்-உம்மைத் தொகை போக புத்யா ப்ரவர்த்திக்கை கூடவே கூடாது என்பதை சொல்ல வேண்டாமே அன்றோ)
—————————————
தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ —அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
சூரணை -102-
இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –
(ஆய் ஸ்வாமிகள்-போக்யதா வாசனை போக வேண்டுமே -அநாதி காலம் வாசனை உண்டே –விஹித விஷய நிவ்ருத்தி பிறக்கும் வழி –எவ்வாறு என்று அருளிச் செய்கிறார் –ஸூவ பர விபாகம் இல்லாமல் இவ் விஷயாந்தர விரக்தி தான் –உள்ளபடி காட்டக் கண்டார் -ஆழ்வார்கள் -அர்ஜுனன் காட்டக் கண்டான் –உள்ளபடி காட்ட வேண்டுமே –சிலருக்கு மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் –நிர்ஹேதுகமாக –கையினால்-சரி சங்கு இத்யாதி -நான்கு தோள்கள் உடன் -சித்த உபாயமான வடிவு அழகால் வருத்தமற அப்போதே பிறக்கும்-ஒன்றுக்கும் மீளாத விஷய மக்நரான சிலருக்கு –ஆச்சார்யர்களுக்கு இந்த பட்டம் –அவனுக்கு இட்டுப் பிறந்த இவனும் இப்படிப்படுவதே -என்று அருளி –இவர்களது யத்னம் இல்லாமல் பகவத் அருளாலே பிறக்கும் – ஆழ்வார்களுக்கு சடக்கென அப்போதே -வருத்தமற பிறக்கும் என்றாரே –பகவத் சாஷாத்காரம் இவர்களுக்கு தானே இங்கே –பிரகிருதி வாசனை உள்ள -தத்தவஞ்ஞாராயும் –நம் போல்வாருக்கு பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டானம் –எம்பார் -தனி இடம் கண்டிலேன் என்றாரே -இருட்டுத் தேட்டம் -காண வில்லையே பகல் கண்டேன் -எங்கும் வியாபித்து இருக்கிறானே -என்றாரே —அவர்கள் ஆச்சாரம் பின் செல்லா விடில் –உபாய உபேய அதிகாரம் போகுமோ என்று-அநர்த்தம்-என்று உணர்ந்து- பயந்து -அவர்கள் பேற்றுக்கு அசலாய் போகக் கூடாதே – -சிஷ்டாசார -ஸ்ரவணம்-உபதேசம் மூலம் -க்ரமேண பிறக்கும் )
(நாம சங்கீர்த்தனமும் இப்படி தான் க்ரமேண பிறக்கும் -சரணாகதிக்கு இப்படி இடையிலே ஒன்றுமே இல்லை –மேல் நிலை அழகு -அடுத்த நிலை அருள் -அடுத்த நிலை ஆச்சாரம் கேட்டு அச்சம் -அவதார தசையில் அனுஷ்ட்டித்துக் காட்டி அருளுகிறார் –பர வ்யூஹ அர்ச்சா அந்தர்யாமிகளில் இல்லையே –அந்தர்யாமி இவனை வைத்தே கர்தவ்யம் -பர வ்யூஹம் திருத்த வேண்டியது இல்லை -அர்ச்சை பராதீனம் ஏறிட்டுக் கொண்டவன் –
மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸா–நான்கு வர்ண தர்மங்கள் ஆஸ்ரம தர்மங்கள் அவதார பிரயோஜனமாக முமுஷுக்கள் தர்மங்களும் பிரபன்ன தர்மங்களும் மர்யாதா கர்த்தா காரயிதா ச -செய்தும் செய்வித்தும் காட்டுகிறார் —லோகஸ்ய சேஷர்களாகிய நம் போல்வார் அறியும்படி -இதுக்கும் மேலே ஞான அனுஷ்டானங்களில் சிறந்த பூர்வ ஆச்சார்யர்கள் ஆச்சாரங்களையும் கேட்டு – சாஸ்த்ர முகத்தாலும் உபதேசத்தால் அறிந்து – -அனுசந்திக்க விஹித விஷய நிவ்ருத்தி-விரக்தி பிறக்கும் –மரியாதையில் விஹித விஷய நிவ்ருத்தி சேர்க்க வேண்டுமே –-துவாதச வருஷம் அமானுஷன் போகான் அனுபவித்ததாக சொல்லி –ருது மாறியது கூட தெரியாமல் இருந்தார்களே —அபத்ய லாப வைதேஹி கர்ப்பிணி ஆனதும் பரம திருப்தி என்றாரே பெருமாள் –கால பேதேந–அபிரபன்னர்- பிரபன்னர்- பற்ற வேண்டியதைக் கொள்ள வேண்டுமே —பெருமாள் அனைவருக்கும் பொது தானே -வேதம் போலே -த்ரை குண்ய விஷயா வேதா -)
சிலருக்கு அழகாலே பிறக்கும் -என்றது –சாஷத்க்ருத பகவத் தத்வரான-பக்தி பாரவஸ்ய பிரபன்னருக்கு – சகல ஜகன் மோகனமான தத் விக்ரக சௌந்தர்ய அனுபவத்தாலே(விஹித விஷய நிவ்ருத்தி) பிறக்கும் என்ற படி –
சிலர்க்கு அருளாலே பிறக்கும் -என்றது -தத்வ யாதாத்ம்ய தர்சிகளான-ஞானதிக்ய பிரபன்னருக்கு -நம்மை அனுபவிக்க இட்டு பிறந்த வஸ்து இப்படி-அந்ய விஷய பிரவணமாய் அநர்த்த படுவதே -என்று அந்ய விஷய சங்கம் அறும்படி அவன் பண்ணும் பரம கிருபையாலே பிறக்கும் என்றபடி –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் -என்றது -அளவிலிகளான-அஞ்ஞான பிரபன்னருக்கு – அவதாரங்களில் —மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸா-என்கிறபடியே –
அதிகார அனுகுணமாக அவன் ஆசாரித்தும் ஆசாரிப்பித்தும் போந்த படிகளையும் –
அளவுடையரான பூர்வாச்சார்யர்கள் ஆசரித்துப் போந்த படிகளையும் -சாஸ்திர முகத்தாலும் -ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலும் அறிகையாலே – அவ் வாசாரங்களை அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும் -என்றபடி —
———————————————
இவ்வோ ஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை தஜ் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதித்து கொண்டு அருளிச் செய்கிறார் –
சூரணை -103-
பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும் –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –
(ஆய் ஸ்வாமிகள்-விஹித விஷய நிவ்ருத்தி உடனே இல்லையே –விரக்தி பிரகாரம் —
வைர உருக்கான அவன் வடிவு அழகு விஷயாந்தர ஸத்பாவ பிரதிபத்தி அபாவம் ஆகிய –
ஸூவ தார விஷயம் உட்பட –விஷயாந்தரங்களில் அஞ்ஞானத்தை அவிச்சின்னமாக விளைக்கும்-ஆகவே விஹித விஷய நிவ்ருத்தி -ஏற்படும் இவர்களுக்கு –ரூப குணங்கள் -கண்ணையும் மனத்தையும் அபஹரிப்பாரே -நமக்கும் பெருமாளை சேவிக்கும் பொழுது உண்டு -ஆழ்வார்களுக்கு அவிச்சின்னமாக -இருக்குமே –
பர துக்க அஸஹிஷ்ணுத்வ அருள் -ஹேயத்வ தர்சனம் அடியாக அருசியை கொழுந்து விட்டு விளைவிக்கும்-விஷயாந்தரங்கள் தெரியும்- ருசி இல்லாமை ஏற்படும் – ஞானாதிகர்களுக்கு –அருசி -த்வேஷம் -ருசிக்கு எதிர்மறை என்றபடி –
விசிஷ்ட சிஷ்ட ஆச்சர்ய ஆச்சார ஸ்மரணம் -விஷயாசக்தி -அநர்த்தம் உணர்ந்து -அச்சம் –
தொடவே பீதி ஏற்படுத்தும் -தத் சந்நிதியில் பிறக்கும் விகாரம் பீதி -விரக்தியை விளைவிக்கும் -)
அழகு அஞ்ஞானத்தை விளைக்கை யாவது -சித்த அபஹாரி ஆகையாலே விஷயாந்தரம் தன்னை ஒன்றாக அறியாதபடி ஆக்குகை –
அருள் அருசியை விளைக்கை யாவது -விஷயாந்தரங்களை காணும் போது அருவருத்து காரி உமிழ்ந்து போம் படி பண்ணுகை-
ஆசாரம் அச்சத்தை விளைக்கை யாவது -ருசி செல்லச் செய்தே -அவர்கள் ஆசாரித்தபடி செய்யாத போது நமக்கு அனர்த்தமே பலிக்கும் என்று விஷய ஸ்பர்சத்தில் இழிய நடுங்கும் படி பண்ணுகை –ஆகையால் இக் க்ரமத்தில் பிறக்கும் என்று கருத்து —
———————————————
இந்த த்ரிவித பிரபன்னருக்கும் –சௌந்தர்யாதி த்ரயத்தில் ஒரொன்றே விரக்தி ஹேதுவாக சொல்லுகிறதுக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார்
சூரணை -104-
இவையும் ஊற்றத்தைப் பற்றச் சொல்லுகிறது ––
(ஆய் ஸ்வாமிகள்-ஊற்றம் -பூயிஷ்டம் -நிரம்பி இருக்கும் என்றபடி -அழகுக்கு விஷய அஞ்ஞானத்தை பிறப்பிக்கையும் –யத்ர நான்யத்ர பஸ்யதி பூமா -வேறே ஒன்றையும் காணப் பண்ணாதே-அருளுக்கு அருசியை விளைவிக்கை-தோஷத்தை புரிய வைத்து -ஆச்சாரத்துக்கு அச்சம் விளைவிக்கை–அழகும் -ஆச்சாரமும் அருசியை – ஏற்படுத்தாதா–அழகு அச்சத்தை ஏற்படுத்தாதா என்னில் -இவற்றையும் ஏற்படுத்தும்
ஓ ஓ உலகின் இயல்பே என்று அஞ்சி- அருளிச் செய்தவர்களும் உண்டே -என்றாலும் –
ஸூவ ஸூவ அனு ரூபமான காரியங்களை நிறைய ஏற்படுத்தும் என்றபடி –
ஆழ்வார்கள் பர வ்யூஹ விபவ அர்ச்சா அந்தர்யாமி அனைத்தையும் சாஷாத்காரித்தவர்கள் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற ஆழ்வார் -அக்காலத்திலே ஒன்றி நின்றவர் என்றும் வியாக்யானம் –ஆச்சார்யர்கள் அர்ச்சாவதாரமும் அந்தர்யாமியும் தானே சாஷாத்காரம் -)
அதாவது –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் -இத்யாதியால் -இவர்களுக்கு சொன்ன பிரபத்தி
ஹேதுக்களானவை ஒரோன்றின் ஊற்றத்தைப் பற்றிச் சொன்னாப் போலே –
அழகாலே பிறக்கும் -என்று தொடங்கி சொன்ன -விரக்தி ஹேதுக்களான இவையும்
ஒரோன்றின் ஊற்றத்தைப் பற்றி சொல்லுகிறது -என்கை–
இத்தால்-பக்தி பாரவஸ்ய பிரபன்னருக்கு –அருசிக்கு அடியான கிருபையும் – அச்சத்துக்கு அடியான ஆசார அனுசந்தானாமும் உண்டாய் இருக்கச் செய்தே -பகவத் விக்ரஹ வை லஷண்யத்தை சாஷாத்கரித்த்து அனுபவிப்பவர்கள் ஆகையால் வடிவழகிலேயே எப்போதும் நெஞ்சு பற்றி கிடைக்கையால் –விஷயாந்தரங்களை அறியாதபடி பண்ணும் – அவ் வழகே அவர் பக்கல் உறைத்து இருக்கும் –
ஞானாதிக்ய பிரபன்னருக்கு -அஞ்ஞான ஹேதுவான விக்ரஹ சௌந்தர்யத்தை
அர்ச்சாவாதாரத்தில் கண்டு அனுபவிக்கையும் -பய ஹேதுவான ப்ராக்தன சிஷ்ட ஆசார
அனுசந்தானம் உண்டாய் இருக்கச் செய்தே -அவன் தன் கிருபையை முழுமடை செய்து எடுத்த விஷயங்கள் ஆகையாலே –அருசிக்கு அடியான கிருபை அவர்கள் பக்கல் உறைத்து இருக்கும் –
அஞ்ஞான பிரபன்னருக்கு -அர்ச்சாவாதாரத்தில் காதாசித்கமகா -விக்ரஹ சௌந்தர்ய அனுபவமும் -அருசி ஹேதுவான கிருபையும் -ஒரு மரியாதை உண்டாய் இருக்கச் செய்தே -பூர்வர்கள் ஆசாரங்களையே பல காலம் அனுசந்தித்து கொண்டு போருகையாலே –பய ஹேதுவான அவ் வாசாரங்கள் அவர்கள் நெஞ்சில் ஊன்றி இருக்கும் –
இவ் ஊற்றத்தைப் பற்ற ஒரொன்றே விரக்தி ஹேதுவாக சொல்லுகிறது -என்று ஆய்த்து-
———————————————-
விஷய வைலக்ஷண்ய அதிசயத்தாலே -விஷயாந்தர அஜ்ஞானம் விளையக் கூடும் –
ஆப்தரான சிஷ்டர்களுடைய ஆசார அனுசந்தானத்தாலே -அவிஹித விஹித விஷய ஸ்பர்சத்தில் அச்சம் விளையவும் கூடும் – அநாதி காலம் ஆசைப் பட்டு மேல் விழுந்து போந்த விஷயங்களில் அருசி பிறக்கை அகடிதம் இறே-அப்படிப்பட்ட அருசி தான் அவன் அருளாலே பிறக்கும் போதைக்கு அபேஷித அம்சத்தை -அருளிச் செய்கிறார் –
சூரணை-105-
அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம்
அபேஷிதமாய் இருக்கும் —
(ஆய் ஸ்வாமிகள்-தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடலை வீணே சுமந்து மெலிவேனோ -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பிரார்த்தனை -விரக்திகளின் முக்கிய அமுக்கிய அம்சங்களை அருளிச் செய்கிறார் –
அழகை அடியாகக் கொண்ட விரக்தி -ஒதுக்கி வைத்து -அருள் அடியான விரக்தி –
ஹேதுவான அருசி பிறக்கும் பொழுது தோஷ தர்சனம் அவசியம் அபேக்ஷிதம் –
அருசி நிலைக்க தோஷ தர்சனம் வேணும்-இதுவோ பிரதானம் -இந்திராதி சரீரங்களில் தோஷ தர்சனம் இருக்காதே -அத்தை விலக்க -மேலே அப்ராப்தம் பிரதானம் என்பார் -இது வந்தாலே தான் விஹித விஷய நிவ்ருத்தி நிலை நிற்கும் –தோஷ தர்சனம் இரண்டாம் பக்ஷம் அமுக்கிய ஹேது -ஆகுமே-அருசி -த்வேஷம் )
தோஷ தர்சனம் ஆவது -போக்யதா புத்த்யா பரிஷ்வங்கிக்கிற யோஷி தேஹம் மாம்ஸ அஸ்ருக் பூயவின் மூத்திரஸ்நாயும் அஜ்ஞ்ஞாஸ்தி சமுதாயமுமாய் சர்ம அவனத்தமாய் துர் கந்தியாய் இருக்கும் படியையும் -போகம் தான் அல்பமாய் -அஸ்திரமாய் -துக்க மிஸ்ரமாய் -அநர்த்த அவஹமாய் -இருக்கும் படியையும் – பிரத்யஷாதி பிரமாணங்களால் தர்சிக்கை –
——————————————-
ஆனால் அதுவோ பின்னை அருசி ஹேது என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -106-
அது பிரதான ஹேது அன்று –
(ஆய் ஸ்வாமிகள்-தத்வ வித்துக்கள் -ஆச்சாரம் ஸ்ரவணம் சிந்தை வைத்துக் கொண்டே -அநர்த்தம் வரும் என்று அச்சம் வர வேண்டும் –இஹ லோக விஷயங்களில் தோஷம் கண்டு -ஸ்வர்க்கத்தில் காண விரகு அற்று அங்கே ருசி மண்டும் படியாய் வருந்தி கல்பித்து அறிய வேண்டுமே-இதுவும் கர்மாதீன பூமி என்று அறிய நாளாகுமே-விரக்தி பிறக்க அருமை உண்டே -ஆகையால் விஷயங்களில் அருசி பிறக்கை விரக்திக்கு பிரதான ஹேது இல்லை —
அருள் -அருசி -விரக்தி அது தானே விஹித விஷய நிவ்ருத்தி –தோஷ தர்சனம் மட்டும் பிரதான ஹேது இல்லை என்றவாறு)
பிரதான ஹேது அன்று -என்றது -அதுவும் ஒரு ஹேது -முக்கிய ஹேது அன்று -என்றபடி –
———————————————————————–
ஆனால் பிரதான ஹேது என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -107-
அப்ராப்தையே பிரதான ஹேது –
(வகுத்த விஷயம் அல்ல என்றவாறு ஸ்வர்க்கம் ஸத்ய லோகங்களும் அப்ராப்யம் –
தத்வ வித்துக்கள் -இது அப்ராப்தம் என்று விடுவார்கள் –அதத்துவ வித்துக்கள் தோஷம் என்று விடுவார்கள் -அஸ்வதை மரம் மேலே வேர் நான்முகன் -சம்சாரம் மரத்தை வைராக்யம் கோடாலி வைத்து வெட்ட வேண்டும் –பற்றின்மை -திடமான வைராக்யம் கொண்டே சம்சாரம் வெட்ட வேண்டும் -அசங்க சஸ்திரம் திடேன-15-அத்யாயம் -முதலிலே ஸ்ரீ கீதையில் அருளிச் செய்கிறான் –விஷயாந்தரங்களில் ஈடுபாடு ஸ்வரூப நாசகை யாகையாலும் – பிராப்தி பிரதிபந்தகம் ஆகையாலும் –சிஷ்ட கர்ஹிதை ஆகையாலும் -நமக்கு அப்ராப்தம் என்றே விடுகை தான் விரக்திக்கு பிரதான ஹேது -தோஷ தர்சனம் இன்றியிலும் அபிராப்த ஞானம் வந்து விடும் இடங்களில் வைராக்யம் தன்னடையே பிறக்கும்-மதுர கவி ஆழ்வார் சம்சார தோஷம் பற்றி இல்லாமல் – ஆண்டாள் வையத்து வாழ்வீர்காள் -போலே-தோஷ தர்சனம் உண்டானாலும் அப்ராப்தம் புத்தி வாரா விடில் விரக்தி நிலை நிற்காதே -ஆகவே அபிராப்தமே பிரதான ஹேது-அருள் -முதலில் -தானே பிராப்தம் என்று அறிந்து -மற்றவை அப்ராப்தம் என்று-அதுக்கு அப்புறம் அறிந்து-அருசி ஏற்பட்டு விரக்தி – -என்றபடி –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-என்கிறாள் ஆண்டாள் – —அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்று ஆழ்வார்களை போலே விரிக்காமல் —வருத்தம் -ஐஸ்வர்யம் உம் கைவல்யம்- மகிழ்ந்து பகவத் லாபம் ப்ரீதி காரித கைங்கர்யம் -இவளுக்கு
ஒண் கண்ட சதிர் கண்டு தெளிவில்லா சிற்றின்பம் ஒழிந்து-என்றும்
இப்பால் கை வளையும் –காணேன்– கண்டேன் இரண்டையும் சொல்லுவார்கள் –
குணம் உள்ள வஸ்துவும் அப்ராப்தம் என்று அன்றோ மதுரகவி நிஷ்டை –தேவு மற்று அறியேன் –என்பார்-பகவத் ஏக வரூபத்துக்கு சேரும் படி -அவன் ஒருவன் இடத்திலே அனுபவம் இனிமை யாருக்கோ அவனே பகவத் ஏக போகன் –பகவானை விஷயமாகக் கொண்ட போக்யம் -அவனே – எனக்கு அவரே அனுபவம் -அவதாரணம் –அத்யந்த அபிமத -அந்நிய -ஸூய அனுபவம் இல்லாமல் -பிராப்தி -எத்தை அனுபவித்தாலும் பிரதிபந்தகம் ஆகுமே -அருளாலே தானே அப்ராப்தம் என்ற எண்ணம் வரும் பிரதானம் -தோஷ தர்சனம் அப்ரதானம் –நிர்ஹேதுகமாக -அவன் -கர்மாதீனம் தேகம் தோஷம் சோபாதிகம் ஞானம் அப்ரதானம் என்றபடி —இவை சஹகாரி இல்லை -அருளுக்கு இவை இரண்டும் வியாபாரங்களே என்றவாறு )
(ஆய் ஸ்வாமிகள் விஷயாசக்தி ஸ்வரூப நாஸகை ஆகையாலும் பிராப்தி பிரதிபந்தகம் ஆகையாலும் சிஷ்ட கர்ஹிதை யாகையாலும் நமக்கு அப்ராப்தம் என்றே விடுகையே விரக்திக்கு பிரதான ஹேது -தோஷ தர்சனம் இன்றியும் அப்ராப்தம் என்று உணர்ந்தால் இது ஸித்திக்குமே -மதுரகவியாழ்வார் ஆண்டாள் தோஷ தர்சனம் இல்லாமல் அப்ராப்தம் என்று உணர்ந்தார்கள் -தோஷ தர்சனம் இருந்தாலும் அப்ராப்தம் என்றும் உணராவிடில் விரக்தி நிலை நிற்காதே -ஆகவே அது அப்ராப்தமான ஹேது வாகும்)
அப்ராப்தை ஆவது -பகவத்யேக போகமான ஸ்வரூபத்துக்கு சேராததாய் இருக்கை–இத்தால்-அருள் அருசியை விளைக்கும் இடத்தில் -தோஷ தர்சனாதிகளை பண்ணுவித்து விளைப்பிக்கையால் –தோஷ தர்சனமும் -அப்ராப்தி தர்சனமும் -தத்வ வித்துகளுடைய அருசிக்கு கௌண முக்ய ஹேதுக்களாய் இருக்கும் என்றது ஆய்த்து-
———————————–
மால் பால் மனம் சுளிப்ப -இத்யாதி படியே பிராவண்ய விஷயமாக சொன்ன
பகவத் விஷயத்தில் குணம் கண்டு இழிகிறவோபாதி-இதுவும் தோஷம் கண்டே விடுகிற தானாலோ-என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —
(ஆய் ஸ்வாமிகள்-விடும் பொழுது அப்ராப்தம் என்று விடுவதே பிரதானம் என்றார் கீழே –
இங்கு அவனைப் பற்றுவதும் ஸ்வரூப ப்ராப்தத்தால் -என்கிறார் –
குணங்களை பிரிக்க முடியாதே அவன் இடம் இருந்து –உம்மைத் தொகை –விஷயாந்தரங்களை விடுகிறதும் தோஷம் கண்டு அன்று -அது ஸ்வரூப அப்ராப்தம் –
தோஷம் பிரிக்க முடியாது விஷயாந்தரங்களில் இருந்து –உபேதேயமான குண பூர்த்தி உள்ள பகவத் விஷயத்தில் இழிகிறதும் பிராப்தம் என்பதாலேயே – கல்யாண குணங்களைக் கண்டு இல்லையே – அப்ருதக் சித்த ஸ்வரூபத்துக்கு ஸ்வகதா பிராப்தம் என்றவாறு)
பகவத் விஷயத்தில் இழிகிறதும்-குணம் கண்டு அன்று -ஸ்வரூப ப்ராப்தம் என்று-என்கிறார்
(-மால் பால் வியாமோஹ குணம் கண்டு அன்று -வகுத்த விஷயம் என்றபடி -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ )
———————————–
சூரணை -109-
இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது- பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )
(ஆகில் எத்தாலே -என்ன -ஸ்வரூப பிராப்தம் என்று -என்கிறார் —பெண்ணின் வருத்தம் அறியாதவன் -என்றாலும் விடாமல் பற்றுவாளே–(கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே! துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-3-5-)–குண ஹீனன் ஆனாலும் காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகன் ஸ்வாமி என்பார்களே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று பிரவர்த்திக்கிறார்களே -)
ஆய் ஸ்வாமிகள்–இதர விஷயம் அப்ராப்தம் அடியாக த்யாஜ்யம் – பகவத் விஷயம் பிராப்தி அடியாக உபாதேயம்-என்று கொள்ளாத போது-தோஷம் குணம் -இவையால் என்றால் -ஆற்றாமை விஞ்சி இருக்கும் திசையிலும் மேல் விழுந்து இருக்கும் ஆழ்வார்கள் தேஹாத்ம விவேக ஞானம் இல்லாமல் சம்சார பிரவர்த்தியும் கூடாதே -ஸ்வரூப பிராப்தம் -என்று பற்றி குணம் இல்லாயானாலும் விட முடியாதே -அப்ராப்தம் என்று அறியாமல் தோஷ தர்சனம் கண்டும் சம்சாரத்தில் ஆழ்ந்து உள்ளார்கள் –
(சம்சாரம் ரூடி அர்த்தம் பத்னி புத்ராதிகளால் அனுபவம் -யோக அர்த்தம் – –சம்-ஸமித்-ஏகி கார வாசி–சார-கதி – கத்யர்த்தம் புத்யர்த்தம் –சேர்ந்து கூடி அனுபவம் –என்றுமாம் சப்தாதிகள் அனுபவம் என்றவாறு-ரிஷிகளுக்கு -பிராப்த அபிராப்த விவேக ஞானம் இல்லை –பெருமாள் பிராட்டி விஷ்வக் சேனர் -மூலம் குரு பரம்பரா ஞானம் இல்லையே-முளைத்து எழுந்த ஸூர்ய துல்ய யாதாம்ய ஞானம் -நாயனார் -திங்கள் -என்பர் கலியன் -குளிர வைக்க —ரிஷிகளுக்கு தபோ பலம் ஸஹேதுக கடாக்ஷம் -உபதேச பரம்பரா ஞானம் இல்லையே)
அதாவது பகவத் விஷயத்தை பற்றுகிறது -அத் தலையில் கல்யாண குணங்கள்
அடியாக அன்று -இவ் ஆத்மாவுக்கு வகுத்த விஷயம் -என்கையாலே –
இப்படி கொள்ளாத போது -என்றது -இதர விஷயங்களில் அருசிக்கு ஹேது அப்ராப்தை –
பகவத் விஷயத்தில் ருசிக்கு ஹேது பிராப்தை என்று கொள்ளாதே-
தோஷ தர்சனத்தையும் -குண தர்சனத்தையும் இவற்றுக்கு ஹேதுவாக கொள்ளும் போது என்றபடி –
குண ஹீனம் என்று நினைத்த தசையில் பகவத் விஷய பிரவ்ருத்தி யாவது –
பிரிவாற்றாமை கரை புரண்டு பெரு விடாய் பட்டு துடித்து அலமரா நிற்க சடக்கென வந்து
முகம் காட்டாமையாலே -குண ஹீனம் என்று சிந்தித்த தசையில் -பின்னையும் –
அவனை அல்லது அறியேன் -திருவாய் மொழி -5-3-5–என்று அவன் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகை-(காதலன் கடல் புரைய விளைந்ததால் )
தோஷ அனுசந்தான தசையில் சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது – மாதா பித்ராதிகளும் -பார்யா புத்ராதிகளும் -ஜ்ஞாதிகளும் -பந்துகளும் -க்ருக ஷேத்ராதிகளும் ஆக சப்தாதி போகங்களை அனுபவித்து இருக்கை யாகிற சம்சாரத்தின் துக்க பஹூளத்வாதி தோஷத்தை – பிரத்யஷாதிகளால் அறிந்து அனுசந்தியா நிற்கச் செய்தேயும் – அதிலே அபிநிவேசம் நடந்து செல்லுகை -இவை இரண்டும் கூடாது என்ற படி –
அன்றிக்கே
தோஷ அனுசந்தான தசையில் சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது —தத்வ வித்துக்களான மகரிஷிகள் தொடக்கமானவர் –சார அசார விவேக வத்தையா விஷய தோஷ அனுசந்தானம் உண்டாய் இருக்க செய்தே – சாஸ்திர விஹித தயா பிராப்தம் என்கிற புத்தியால் -பண்ணுகிற ப்ரஜோத்பாதநாதி ரூப சம்சாரத்தில் பிரவ்ருத்தி ஆகவுமாம்-(ஆதி பெற்ற குழந்தையைப் போஷித்தல் )
இப்படிக் கொள்ளாத போது இவை கூடாது என்று விரோதம் காட்டுகையாலே
இப்படிக் கொள்ள வேணும் என்னும் இடம் ஸ்தாபிக்க பட்டது –
————————————
குண ஹீனம் என்று நினைத்த தசையில் -பகவத் விஷய பிரவ்ருத்தி எங்கே கண்டது என்ன –
அருளிச் செய்கிறார் –
சூரணை -110-
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —
(ஆய் ஸ்வாமிகள்-பிரணய ரோஷத்தால் -குண ஹீனத்வத்தை அநுஸந்திக்கும் தசையில் -அவன் இடம் உள்ள ஈடுபாடு குறையாமல்-வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாதே -சரசா வஸ்துவில் முகம் வையாதே –சேஷி சேஷன்-பாவம் ஸ்வ பாவிகம் இன்னும் ஒரு சேஷியை -குணவத்தாய் இருந்தாலும் -பார்க்க மாட்டேன் –இயற்கையில் கரும்பு போலே இருந்து என் விஷயத்தில் வேம்பாய் இருந்தாலும்-விரசனாக ரசம் யில்லாமல் இருந்தாலும் -உன்னை அன்றி இலேன் நான் வேம்பின் புழு தானே இதுக்கு இட்டுப் பிறந்தது இத்தையே அனுபவிக்கும் என்றவாறு -)
(கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-3-5-)
(வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-)
அதாவது –
கடியன் -என்று தொடங்கி -அறிவரு மேனி மாயத்தன்–திரு வாய் மொழி -5 -3 -5 -என்னும் அளவும் –
ஸ்வ கார்ய பரன் –(கடியன்)
பிறர் நோவு அறியாதவன் -(கொடியன்)
ஒருவருக்கும் எட்டாதவன் -(நெடிய மால்)
வஞ்சகன் –(மாயத்தன்-உலகம் கொண்ட அடியன்)
துர் ஞேய ஸ்வபாவன்-(அறிவரு மேனி மாயத்தன்)-என்று-
அவன் குண ஹானியை சொல்லி -இப்படி இருந்தான் ஆகிலும் –
அதி லோக குரூரமான என் நெஞ்சு அவனை அல்லாது அறியாதே இருக்கும் என்றும் –
வேம்புக்கு இட்டு பிறந்த புழு அந்த வேம்பையே புஜிக்குமது ஒழிய
கரும்பை கண்டாலும் விரும்பாது -அப்படியே -கடல் மல்லைக் கிடந்த கரும்பு -பெரிய திரு மொழி -7 -1 -4 –என்னும்படி நிரதிசய போக்யனான நீ தானே வேம்பு போல் விரசன் ஆனவன்றும் —த்வத் அனந்யார்க்க சேஷ பூதனான நான் -எனக்கு வகுத்த சேஷியான உன் திருவடிகளை ஒழிய ஆசைப் படன் என்றும் – மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -அருளிச் செய்யா நின்றார்கள் இறே —
(புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே–7-1-4-)
———————————————-
குணைர் தாஸ்யம் உபாகதா -என்றாரும் இல்லையோ என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை-111-
குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம்
இறே பிரதானம் —
( ஆய் ஸ்வாமிகள்-தத்வ வித்துக்களை அனுஷ்ட்டித்து காட்டி உள்ளார்கள் –
திருவடி இடம் –அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் ஹி தாஸ்யம் உபாகதா –
இரண்டு அடையாளம் -தம்பி -தாஸ்யம் குணத்துக்கு தோற்று -இரண்டையும் -உபாகதா -வந்தேறி அப்ராதான்யம் –அப்ருதக் சித்த சேஷத்வ ரூப ஸ்வரூப ப்ரயுக்தமான ஸ்வாபாவிக தாஸ்யம்-இயற்ககை- இதுவே நிருபாதிகம்-காரணத்தை பற்றி வந்தால் காரணம் இல்லா விடில் கார்யம் இருக்காதே –சத்தா ப்ரயுக்தம் ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் –
ஆகதா என்னாமல் உபாகதா என்று அப்ரசித்தி தோற்ற அருளிச் செய்தார் –)
(தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அழகு குணம் -பற்றி வந்ததாக அருளிச் செய்தாலும் –தாஸ்யம் உறுதிப்பட ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் உணர வேண்டும் -உபாகதா-
உப அப்ரதானம் -குண தர்சன ஹேதுவால் வந்த தாஸ்யம்-அதில் இருந்து பிறந்து –தத் ஜன்ய ஜனதத்வம்–பெண் பாட்டிக்கு பிறந்தவள்-மகளுக்கு தாய் போலே –தோஷ தர்சனம் அருளால் பிறந்து அது அருசியை பெற்றுக் கொடுப்பதாக இருக்கும் –சேஷத்வத்தால் ஆத்ம நிரூபணம் -ஒன்றினால் -முக்கியமாக –ஞாத்ருத்வம் போல்வனவும் உண்டே -அவர்ஜனீயத்வம்-குண க்ருத தாஸ்யம் -விட்டுப் பிரியாத குணம் -.-குணங்களுக்கு ஸ்வரூபத்தை அனுவருத்தித்து வருவதாலும் தாஸ்யம் திடப்படுத்த இதுவும்
சேஷத்வம் ஒன்றினால் நிரூபித்த -நான் -த்ரேதா யுகத்து நான் -ஆதி சேஷன் க்ருத யுகம் –
சேஷன் தொக்கி இருக்கும் -சமாக்கியம் பெயரிலே உண்டே –அடிமையாகி இருக்கும் நான் குணத்தை பார்த்தும் தோற்றேன் என்கிறான் -என்றவாறு —லஷ்மணன் –சேஷத்வத்தால் நிரூபணம் லஷ்யதே இதி லஷ்மணன் –ஸ்ருதி லிங்க ஸமாக்யம் -அவதார திசையிலும் -கீழே இயற்க்கை நித்ய ஸூரி தானே இங்கே —ஆதி சேஷன் -லஷ்மணன் – சேஷத்வமுடைய அஹம் குணங்களையும் கண்டு தோற்றேன் -இன்னாருக்கு அடிமை – நல்லவராக இருந்தால் தெம்பாகவும் இருக்கும் -யுத்தம்பகம் ஆகுமே -தாஸ்யம் ஆகாத–ஸ்வரூபம் கண்டு -பின்பு – தாஸ்யம் உபாகத குணத்தைக் கண்டு -)
குண கிருத தாஸ்யம் ஆவது -அவன் குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருக்கை-
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆவது -சேஷத்வைக நிருபணீயமான தன் ஸ்வரூபத்தை பார்த்து அடிமையாய் இருக்கை -ஸ்வரூபம் இப்படி இருந்தாலும் -குணாதிக விஷயம் ஆகையாலே –குண கிருத தாஸ்யமும் இவ் விஷயத்தில் அனுவர்தியா நிற்கும் –
ஆகையால் இறே சேஷத்வைக நிரூபகரான இளைய பெருமாள் தாம் அப்படி அருளி செய்ததும் ..ஆனாலும் குண கிருதமானது ஒவ்பாதிகம் ஆகையால் -அப்ரதானமாய் –மற்றையது நிருபாதிகம் ஆகையாலே பிரதானமாய் இருக்கும் – அத்தைப் பற்ற இறே -தத் பிரதான்ய பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது –
———————————————————-
இவ் வர்த்தத்துக்கு சம்வாதமாக பிராட்டி வார்த்தயை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –
சூரணை -112-
அநஸூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது–
(ஆய் ஸ்வாமிகள்-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திரு உள்ளம் அறிந்து மா முனிகள் வார்த்தைகளைக் காட்டி அருளிச் செய்கிறார் –பிரதானத்துக்கு பிரமாணம் – நித்ய அநபாயினியான பிராட்டி -பிரிவின்மை நித்தியமான பின்பு அழகைக் கண்டு பின் வந்தாள் – தர்மி விட்டு தர்மம் பிரியாதே -பிரிந்து இருக்கும் யோக்யதை இல்லையே -நமக்கும் அப்படியே -சீதாப் பிராட்டிக்கு மட்டும் இல்லை -பெருமாள் விரூபர் ஆதல் -அவர் அழகையும் கண்ணுக்கு இலக்காகாதல் இரண்டில் ஓன்று நடந்தால் தான் என் திரு உள்ளம் நீ அறியலாம்-இதிஹாச ஸ்ரேஷ்ட பிரசித்த வார்த்தை -இதுக்கு பிரமாணம் -)
(ஸ்வரூப க்ருதம் ஏற்றம் லஷ்மணன் வார்த்தையிலே அறிந்தோம்-அவர்ஜனீயம் என்பதற்கும் அதுக்கும் இந்தப் பிரமாணம் —தெய்வ யோகம் -பாக்யத்தால் -உமக்கு கூடிற்று -என்ற வார்த்தை கேட்டு —அதிருஷ்டம் ஸ்வரூப பிரயுக்தம் தானே – த்ருஷ்டமானால் தானே குண க்ருதம் –தகப்பனார் பார்த்து பண்ணிய கல்யாணம் என்று ப்ரீதி பெருமாளுக்கு – பிராட்டியுடைய ஆத்ம குணம் ரூப குணம் பெருமாள் ப்ரீதியை வளர்க்க -வர்ணாஸ்ரம இத்யாதி விசிஷ்ட வேஷ விஷய சாமான்ய சாஸ்த்ர அனுகுணமாக மட்டும் இல்லாமல் – ஆத்ம குணம் ரூப குணம் இவை அன்று –பிராப்தி தகப்பனார் பார்த்து வைத்த கல்யாணமே முக்கிய காரணம்-அயோத்யா காண்டம் இறுதியில் – 117-சர்க்கம் -அத்ரி பகவான் ஆஸ்ரமம் வந்த –வனே ராமம் அனு கச்யதி தெய்வ யோகத்தால் –ஸ்த்ரீனாம் ஆர்யா ஸ்வ பாவானாம் -ஆர்ய சப்தம் -ஷத்ரியருக்கு -ப்ராஹ்மணர் இல்லை மிக உயர்ந்த ஸ்வ பாவம் உள்ளவர்கள் என்றவாறு-அயோத்யா காண்டம் –26-குணங்களை பெருமாள் இடம் இருந்து பிரிக்க முடியாதே –மக்களை குணம் என்னும் கயிற்றால் வசீகரித்து –பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹரிநாம் – இப்படி இருக்க தெய்வ யோகத்தை சொல்லுவான் என்னில் – நாட்டார் நினைத்து இருப்பார் -என்று அநஸூயை சீதாவுக்கு ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே என்று அறிந்து -இருப்பாள் – அதனாலே தெய்வ யோகம் என்கிறாள் -அதிருஷ்ட காரணம் –போகம் அனுபவிக்க ஸ்தானம் உபகரணங்கள் உள்ளன என்று போக அபேஷித்த -தனிமை -ஸம்ருத்தி -த்ருஷ்ட ஹேது இருந்தாலும் தெய்வ யோகத்தால் -என்கிறாள்-வன அனுகமன ஹேது பாவ பந்த அதிசய பிரயோஜக நிரதிசய குண யோக யுக்த –பர்த்ரு சம்பந்தம்–தெய்வ யோகத்தால் -தத் த்வாரா தைவ யோகமே வன அனு கமன ஹேது – -விருப்பமாக வளர — குண சாலிகள் இருவரும் -)
அதாவது அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் -பெருமாள் எழுந்து அருளி -மகரிஷியையும் அனுவர்த்தித்திருந்த அநந்தரம்- தத் பத்னியான அநஸூயையை பிராட்டி சென்று அனுவர்த்திக்கிற அளவிலே அவள் பிராட்டியைப் பார்த்து –பந்து ஜனத்தையும் -அபிமானத்தையும் -ஐஸ்வரத்தையும் -விட்டு பெருமாள் பின்னே காட்டிலே போந்த இது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாக கூடிற்று – நகரஸ்தன் ஆகிலுமாம்-வனஸ்தன் ஆகிலுமாம் -நல்லவன் ஆகிலுமாம் -தீயவன் ஆகிலுமாம்-ஸ்திரீகளுக்கு தைவம் பர்த்தாவே கிடீர் –நீர் இப்படி எப்போதும் பெருமாள் விஷயமாக அனுகூலித்து போரும் -என்ன -பிராட்டி லஜ்ஜித்து கவிழ் தலை இட்டு இருந்து – எனக்கு பெருமாள் பக்கல் பாவ பந்தம் ஸ்வத உண்டாய் இருக்கச் செய்தே -அவர் தான் குணாதிகராக இருக்கையாலே –என்னுடைய பாவ பந்தத்தை குண நிபந்தமே என்று இருப்பர்கள் நாட்டார் –அவ் வாஸ்ரயத்தை குணங்களோடு வ்யதிரேகித்து காட்ட ஒண்ணாமையாலே-நான் அவர் பக்கல் இருக்கும் இருப்பை அறிவிக்கப் பெருகிறிலேன்–அவர் குண ஹீநருமாய்-விரூபருமான அன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது -என்று அருளிச் செய்த வார்த்தை –
————————————————–
இப்படி ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யமே பிரதானம் -ஆகில் – சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அது ஒழிய -அநந்ய உபாயத்வாதிகள் குலையும்படி அவ் விஷயத்தை குறித்துப் பண்ணுகிற ஸ்வ பிரவ்ருத்தி சேருமோ என்கிற சங்கையை அனுவர்த்திகிறார் -பகவத் விஷய பிரவ்ருத்தி -இத்யாதியால் –
சூரணை -113-
பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –
(ததேக உபாயம் என்ற நிஷ்டை குலையும் படி –மடல் எடுக்கை தூது விடுதல் இத்யாதிகள் -சேருமோ -என்னில் –அவனுக்கு அதிசயம் விளைவிப்பதே-சேஷிக்கு ஸ்வரூபம் -அனுரூபமான கைங்கர்யம் வேண்டுமே -ப்ராவண்யம் எதனால் வந்தது -சேஷத்வம் உணர உணர –சம்பந்தம் -அடியாக பிராவண்யம் -சம்பந்தம் அடியாகவே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே -சம்பந்தம் சத்தா ப்ரயுக்தம்– கிடைக்காமல் தவிக்க வேண்டுமே —சேஷி சேஷ சம்பந்தம் நித்யம் அன்றோ -குடல் துவக்கு -ஈடுபட்டு பிரவ்ருத்தி –)
(ஆய் ஸ்வாமிகள்-அதிக்ரமித்து-ஸ்வரூபம் கண்டாலும் சட்டத்தை மீறி அன்பு மேலிட்டு –அன்பு உருகி நிற்கும் அது -என்கிற சத்தா நிபந்தமான நித்ய ப்ராவண்யம் -ப்ராவண்யமும் வந்தேறி அல்ல -சம்பந்தம் போலே இதுவும் -ஆகையால் சட்டம் மீறுவதும் வந்தேறி அல்ல -எல்லாம் ஸ்வ பாவிகம் –குண க்ருதம் தான் வந்தேறி -வளர்த்துக் கொடுக்க உதவும் இது என்றவாறு – ஏற்படுத்தித்தப்பட்ட தாஸ்யம் இல்லையே –நித்ய தாஸ்யம்- பிராகிருத சம்பந்தம் போலே வந்தேறி இல்லையே இந்த சேஷி சேஷ சம்பந்தம் -கர்ம உபாதி பிரயுக்தம் இந்த பிரக்ருதியில் —இங்கு ஸ்வரூபம் -கர்மத்தால் இல்லையே -இத்தையே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் என்கிறோம் -இயற்க்கை என்பதே சத்தா ப்ரயுக்தம் -விசேஷ்யமான சேஷிக்கு விசேஷண ரூபமான சேஷமாய்க் கொண்ட -உதித்த தத் சத்தா பிரயுக்தம் – விசேஷ விசேஷணத்துக்கு காரணம் இல்லையே –நித்யம் தானே –)
அத்தைப் பரிகரிக்கிறார் -அதக்கடி பிராவண்யம் -என்று தொடங்கி–
பிராவண்யம் ஆவது அதி மாத்திர சிநேகம் – அந்த பிராவண்யத்துக்கு அடி விஷய வைலஷண்யம் அன்றோ என்ன -அதுக்கடி சம்பந்தம் -என்கிறார் –
சம்பந்தம் ஆவது -சேஷ சேஷி பாவம் –
அதுதான் குண கிருதமாய் வாராதோ என்ன -அது தான் ஒவ்பாதிகம் அன்று -சத்தா பிரயுக்தம் -என்றது – இவ் ஆத்மாவினுடைய சத்தையே பிடித்து உள்ளது ஓன்று என்கை-
—————————————————–
இத்தால் கீழ் பண்ணின சங்கைக்கு பரிகாரம் ஆனது எது என்ன – அருளிச் செய்கிறார் -மேல் வாக்ய த்ரயத்தாலே –
சூரணை -114-
அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –
(சேஷி சேஷி பாவ ரூப சம்பந்தம் அது அடியாக –ஆத்ம சத்தா – இன்னும் ஒரு பாதை -சேஷி சேஷி பாவ ரூப சம்பந்தம் அடியாக சேஷி சேஷ ஞானம் ஏற்பட வேண்டுமே -அதன் பின்பு -இத்தனை நாள் இழந்தோமே – அதி மாத்ர ப்ராவண்யம் -அதனால் அனுபவம் -இந்த அனுபவம் இல்லாவிடில் -சிநேகம் இல்லை -சம்பந்த ஞானம் இல்லை -சேஷி சேஷ பாவம் குலையும் -சத்தை கெட்டுப் போம் –அந்த அனுபவம் ஏற்பட செய்யப்பட்டவை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டுமே –மடல் தூது அநுகாரம் இவை எல்லாம் அனுபவம் கிடைக்காத ஆற்றாமையால் தானே – சத்தை குலையக் கூடாதே என்றே -இந்த பிரவ்ருத்திகள் -சேரும் என்றபடி -அதுக்கும் மேலே -அவர்ஜனீயமாயும் பிராப்தமாயும் இருக்கும் —
(ஆய் ஸ்வாமிகள்-சத்தா ப்ரயுக்த சம்பந்த நிபந்தன ப்ராவண்யம் கார்யமான தத் விக்ரஹ அனுபவம் இல்லாத போது -குலையும் படி வரும் (ஸ்வரூப அனுபவம் வேதம் ரிஷிகளுக்குத்தானே)- ஒரு நாள் புறப்பாடு- காலம் தாழ்ந்து வந்தால் உயிருடன் இருக்க மாட்டார்களே சத்வ தர்சிகள் –பிராவண்ய அதீனமான சத்தை- பிராவண்ய-அனுபவ ஹேதுவாக வரும்-அனுபவ அலாப்யத்தாலே- அநந்ய உபாயத்வங்கள்-பஞ்சகங்கள்- குலைந்து காமன் காலில் விழுந்து – ஸூ யத்ன பிரவ்ருத்திகள் -பாரதந்தர்ய அனுசந்தானத்தால் அவர்ஜனீயங்களுமாய்–மடல் எடுக்க -அவனுக்கு அதிசயம் பெருமை பெருமிதம் – கிருஷி பலித்ததே -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -சத்தா பிரயுக்த ப்ராவண்யம் –சம்பந்த ஞானம் -அனுபவம் -ஸ்நேஹம் –குறுக்கே குண ஞானம் –சம்பந்தம் ஒத்து இருந்தாலும் நமக்கு ஆழ்வார் போலே பிராவண்யமும் அனுபவமும் இல்லையே – குண ஞானம் இல்லாமையால் ப்ராவண்யம் குறைத்து வளராமல் இருக்கிறது -சம்பந்த ஞானம் இருந்து -குண ஞானம் இல்லாமல் — நிருபாதிக ஸ்வாமி இடம் ஆஸ்ரயண ரூப பிரவ்ருத்தி ஸ்வரூப பிராப்தி என்பதால் சேரும் அனைவருக்கும் -குணம் இருக்கு என்பதால் சரண் இல்லை -ஆனாலும் குணங்கள் உண்டே -சம்பந்தம் ஞானம் பிரதானம் குண ஞானம் அப்ரதானம் -விஷய நியமமே உள்ளது முன்பே பார்த்தோம் -குணம் இருப்பதால் விழவில்லை -கோல் விழுக்காட்டால் அமைந்தது
ஆக
பிரபத்தியில் நியமங்கள் எதுவும் இல்லை –
விஷய நியமமும் மட்டுமே உள்ளது என்றும் –
அதிகாரி விசேஷணத்வமும் -அபேக்ஷித அனுமதி -64-என்னும் சித்த உபாயம்-67-
பேற்றுக்கு நினைவு அவன் நினைவு –
அதிகாரி அனுகுண ஸ்வரூப நிரூபணமும் – உபய அனுஷ்டான சோதனமும் விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்றும்
பகவத் விஷய பிரவ்ருத்தியும் சொல்லி –பிரகார நிரூபணமும்-நிகமிக்கிறார் –
பிரதான பிரமேயமும் -60–மேல் அடங்க ப்ராசங்கிக்க விஷய பிரசங்கம் -)
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுபவம் இல்லாத போது குலையும் -என்றது –
அப்படிப் பட்ட சத்தை தான் ஸ்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக வருகிற பிராவண்ய கார்யமான
பகவத் அனுபவம் இல்லாத போது ஷண காலும் நில்லாது -என்றபடி
அது குலையாமைக்கு வருமவை எல்லாம் அவர்ஜநீயங்களுமாய் பிராப்தங்களுமாய் இருக்கும் -என்றது –அந்த சத்தை அழியாமைக்கு உறுப்பாக வருகிற மடல் எடுக்கை -முதலான சகல பிரவ்ருத்திகளும் -பகவத் அனுபவம் ஒழிய தரிப்பு இல்லாமையாலே தவிறிவோம் என்றாலும் -தவிரப் போகாதவையுமாய் – எல்லாம் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே ஸ்வரூப பிராப்தங்களாய் இருக்கும் என்றபடி –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் -என்று
உக்தத்தை ஹேதுவாக்கிக் கொண்டு பிரக்ருத சங்கையை பரிகரித்து தலைக் கட்டுகிறார் –
(சத்தா வியாபக சேஷி சேஷ பாவ ரூப சம்பந்த –சத்தை வியாப்யம்-சம்பந்தம் வியாபகம் –
பெரிய வட்டத்துக்குள் சின்ன வட்டம் -பிராவண்யம் -அனுபவம் வட்டம் –
ஞான ஹேதுக அதிமாத்ரா ஸ்நேஹத்தினுடைய கார்யமான அனுபவம் -என்றபடி —
அனுபவம் இல்லாத பொழுது க்ஷண காலமும் சத்தா நில்லாதே என்றது –
இருக்கு என்பதற்கு வேண்டியவை -1-அர்த்த கிரியா கார்யத்வம் – 2-கால சம்பந்தித்தவம் -3-பிரமாண சம்பந்த அர்ஹத்வம் -நித்யையாக சொல்லப்பட்ட சத்தைக்கும் ஹானி சொல்லும் படு அனுபவ அலாபம் -பெரிய துன்பம் -ஆத்மாவே இல்லையோ என்னும் படி –திரு நெடும் தாண்டகம் –கீழே அவனை மடல் மூலம் அழித்தாலும் கலங்காத அவன் -ஆழ்வார் தன்னை அழிக்கச் சொல்ல -இவர் இல்லா விடில் -அவரை ரக்ஷித்து-தம் சத்தையை நோக்க வேணும் என்று -அவன் சத்தத்தையே போகும் படி பயப்பட்டாரே –மகாத்மாக்கள் விரகம் சஹியாத மார்த்வம் உண்டே அவனுக்கும் -அதே போலே -இங்கும்-)
(அன்றிக்கே வேவேறா வேட்க்கை நோய் -மெல்லாவி உள் உலர்த்த –லௌகிக அக்னி தண்ணீர் கத்தி காத்து -முடியாதே விரக அக்னி பற்றி இங்கு -வைதிக ஸாமக்ரி -விரக அக்னிக்கு கொளுத்தலாம் -சத்தைக்கு நித்யத்வம் -அசித் வஸ்து நாஸகம் -ஸாமக்ரியால் நாசகம் என்பது இல்லை–துஷ் கரம் க்ருதவன் ராம -சீதையை விட்டுப் பிரிந்து உளனான பிரபு —தாரயத் -ஆத்மனோ தேகம் ந சோகேந அவதீயாதி -சோகத்தால் அழியாமல் -உள்ளாரே -திருவடி —சத்தை ஏற்படுவதே இவளைக் கூடின பின்பே -மூல கத -அநந்ய உபாயத்வம் குலைவது -மடல் அநந்ய உபேயத்வம் குலைவது -நமக்கே நலம் ஆதலின் –அநந்ய தெய்வதம் குலைவது காமனைத் தொழுவது – ந சாஸ்த்ர நைவ க்ரமம் ஸ்வரூப ப்ராப்தமே- உபாய கோடியிலே அந்வயியாது -)
1-புருஷகாரமாகப் பற்றி -2-இதில் உபாய உபய வைபவம் -மேலே 3-உபாயாந்தர தோஷம்
4-சித்த உபாயம் நிஷ்டை ஏற்றம் -5-பிரபன்ன தினசரியா -6-ஆச்சார்ய லக்ஷணம் -7-சிஷ்ய லக்ஷணம் -8-ஹரியுடைய நிர்ஹேதுக கிருபா -9-கம்யமும் கதியும்-எல்லாம் வகுத்த இடம் ஆச்சார்யரே -என்றும்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்றும் -ஒன்பது பிரகணம்– இதில் இரண்டாவது முற்றிற்று –
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply