முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –
——————————–
உபாய வைபவம் –
சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –
க்ருபாதிகளை வெளி இட்டமை சொன்ன போதே -ஸ்ரீ ராமாயணத்தில் புருஷகார
வைபவம் முக்தமான படியை உபபாதித்தாராய் -மகா பாரதத்தில் உபாய வைபவம்
முக்தமானமையை உபபாதிக்கிறார் –
அர்ஜுனன் விஷயமாக ஆச்சார்ய கிருத்யம் ஏறிட்டுக் கொண்டானே –பிரார்த்தித்த போது-பிறர் கார்யம் செய்தது இது
-பிராட்டி கிட்டே இல்லையே-அர்ஜுனன் பிராத்திக்காமலே புருஷகார க்ருத்யமும் ஏறிட்டுக் கொண்டு
பிரார்த்திக்காமல் தன்னுடைய செயலான /உபாய க்ருத்யர்த்ததையும் ஏறிட்டுக் கொண்டு என்றது –
அர்ஜுனன் உபதேசம் பண்ணியும் -சரம ஸ்லோகம் பூர்வார்த்தம் அருளியதும் -பிரபத்யே -சரணம் – பண்ணாமல் –இருந்தும் விடாமல் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று ரக்ஷணத்தை அருளிச் செய்தான் இ றே-
உபாய ஸ்வரூபம் என்னாமல் உபாய வைபவம் என்றது இம் மூன்றும் செய்ததால் -ஸ்வ பாவம் வேறே பிரபாவம் வேறே –
மோக்ஷம் கொடுத்தாலும் ஸ்வ பாவம் தான் அவனுக்கு -மற்றவர் செயலை ஏறிட்டுக் கொண்டதால் வைபவம் –
பிராட்டி புருஷகார பட்டாபிஷேகம் ராம அவதாரத்தில் –
ஸ்ரீ மத் பதம் பூர்வம் -நாராயண பதம் உத்தரம் -அதனால் புருஷகார வைபவம் சொல்லிய அனந்தரம் உபாய வைபவம் அருளிச் செய்கிறார் –
ஷட்க த்ரயார்த்தத்தையும் -அபராத பயத்தை போக்கி -இஷ்ட பிராப்தி அநிஷ்ட பரிகரத்தையும் -நிரங்குச ஸ்வதந்த்ரன் -நித்ய உபாயம் நித்ய உபேயமான தான்
வலிய ஏறிட்டுக் கொண்டு -உபாய பிரதானமான மஹா பாரதம்
உபதேஷடாவான ஆச்சார்யன்-உபதேச விஷய பூதன் ஆச்சார்ய பாரதந்தர்ய யோக்யதை இல்லாமல் தானே ஏறிட்டுக் கொண்டு
விசேஷயமான தான் விசேஷமான பிராட்டி க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டு
நித்ய உபேயம் காதா சித்தகமான உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு
கீதா உபநிஷத் சாரம் -மாம் சரணம் வ்ரஜ பற்றுவித்து -விரோதி நிவர்த்தக பூர்வக பலம் கொடுத்து -ஏறிட்டுக் கொண்டது காணலாம்
ஆச்சார்யத்வம் ம் ச குணமாக இருக்க -சாஸ்த்ரா பாணியாக தானே அவதரித்து இருக்க —
-பரத்வ ஸுலப்யம் கலந்த அவதாரத்தில் ஸுலப்யம் கார்யம் மாத்திரம் ஏறிட்டுக் கொண்டு
அவளை முன்னிட்டு -மாம் புருஷகார விசிஷ்டம் -ஆகையால் -ஸ்ரீ மான் கண்ணனாக -தோன்றி நின்று புருஷீ கரிக்க காணாமையாலும் –
-தத் சா பேஷனாய் ஏறிட்டுக் கொண்டான் என்னலாம்
உபாயத்வம் போலே உபாயத்வம் ஸூவ சித்தம் -உபாயாந்தரங்களுக்கும் உபாயமானது போலே இல்லாமல்
தானே உபாயம் உபேயம் -இங்கு -ஏறிட்டுக் கொள்வது
இவ்வளவும் செய்தும் அர்ஜுனன் செய்யாதது கொத்தை அல்லையோ -என்னில் -தேக அவசானத்தில் மோக்ஷம் இல்லாமை
-கேட்ட அர்த்தத்தில் நிலை இல்லாமல் மறைக்கையாலும் இப்படி மறைக்கைக்கும் அடி–பிரபல -திரௌபதி பரிபவம் கண்டு
இருந்த பாகவத அபசாரத்தாலே –என்பர் ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் –
அஞாதஞாபனம் ஆச்சார்ய கிருத்யம் இறே -சரண்ய கிருத்யம் அன்றே –
ஆகை இறே என்னைப் பெற்ற அத் தாயாய் தந்தையாய் -திரு வாய் மொழி -2 -3 -2 -என்று
பிரிய கரத்வ ஹித கரத்வங்கள் ஆகிற -மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வ யமேவ தமக்கு
செய்த உபகாரத்தை அருளி செய்த அநந்தரம்-ஆச்சார்யன் செய்யும் விசேஷ உபகாரத்தையும்
தானே தமக்கு செய்தமையை அருளி செய்கிற ஆழ்வார் -அறியாதன அறிவித்த -என்று அருளி செய்தது –
இவ்விடத்தில் இவர் அருளி செய்கிற வாக்கியம் தான் அந்த திவ்ய சூக்திக்கு சூசகமாய் இறே இருக்கிறது –
அறியாத அர்த்தங்களை அடைய அறிவிக்கை யாவது –
தத்வ விவேகம் தொடங்கி -பிரபத்தி பர்யந்தமாக -17-அர்த்தங்கள் –
அர்ஜுனனுக்கு முன்பு அஞ்ஞாதமாய் இருந்த
அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கை –
1–தத்வ விவேகம் -2-நித்யத்வ அநித்யத்வங்கள் -3-நியந்த்ருத்வ -4-ஸுலப்ய -5-சாம்யா -6-அகங்கார தோஷ
-6- இந்திரிய தோஷ பல -8-மனா ப்ராதான்ய
9–கரண நியமன -10-ஸூ க்ருதி பேத-11-தேவா ஸூர விபாக -12-விபூதி யோக -13-விஸ்வரூப தர்சன –
14-சங்கா பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகள் -அன்று ஓதிய கீதை -ஆச்சார்ய ஹிருதயம்
தேக ஆத்மா அபிமானியாய் –
தேக அநு பந்திகளான பந்துக்கள் பக்கலிலே அஸ்தானே சிநேகத்தை பண்ணி நிற்கிற இவனை –
பிரகிருதி ஆத்ம விவேகாதிகளாலே தெளிவிக்க வேண்டுகையாலே –
நத்வ வாஹம் ஜாது நாசம் நத்வம் நேம ஜனாதிபா
நசைவ நபவிஷ்யாமஸ் சர்வே வயமித பரம்
தேஹி நோச்மின் யதா தேஹே கௌ மாரம் யௌ வனம் ஜரா ததா
தேகாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி-2-12–இத்யாதிகளாலே
1–பிரகிருதி ஆத்ம விவேகம்-
2–ஆத்ம பரமாத்ம விவேகம் ஆகிய தத்வ விவேகத்தையும் –
அந்தவந்த இமே தேஹா நித்யச்யோக்தா ச்சரீரின
அனாசினோ பிரேமயச்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
ந ஜாயதே ம்ரியதேவா கதாசின் நாயம் பூத்வா பவிதாவா நபூய
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே
ஹன்யமானே சரீரே வாஸாம்சி ஜீர்னாணி யதா விஹாய
நவானி க்ருஹ்னாதி நரோ பராணி ததா சரீராணி
விஹாய ஜீர்னான் யன்யானி சம்யாதி நவானி தேஹீ -2-18-/-22-இத்யாதிகளாலே
3–ஆத்ம நித்யத்வ
4–தேஹாத்ய அநித்யங்களையும்-பிரதமம் உபதேசித்து -இவனுடைய ச்வாதந்திர பிரமத்தை தவிர்க்கைக்காக –
பூமிரபோ நலோ வாயு கம் மனோ புத்தி ரேவச அஹங்கார இதீயம்
மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபேரே யமிதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-/5-என்கிறபடியே -ஸூ யாதாம்யாம் அறிவித்து –
5–சேதன அசேதன சரீரியாய் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ச்ம்ருதிர் ஞான மபோஹநஞ்ச-15-15- -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத் தேசெர்ஜூன திஷ்டதி ப்ராமயன்
சர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா -18–61–என்றும் சொல்லுகிறபடி
6–சர்வ ஜன ஹ்ருதயச்தனாய் நின்று –
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற தன்னுடைய-நியந்த்ருவத்தையும் –
அப்படி சர்வ நியந்தாவாய்கொண்டு சர்வ ச்மாத் பரனாய் இருக்கும் அளவன்றிக்கே –
பரித் ராணாய சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்று –7–அவதாரப்ரயுக்தமான—தன்னுடைய சௌலப்யத்தையும் –
சம்பவாமி யுகே யுகே என்பதே ஸுலப்யம் -இந்த க்ருத்யங்கள் இல்லை –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய—என்று
8–தன்னுடைய ஆஸ்ரயனித்வ சாம்யத்வையும் –
ப்ரக்ருதே க்ரியமானாதி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமுடாத்மா கர்த்தா ஹமிதீ மந்யதே -3–27–என்று
9—அஹங்கார தோஷத்தையும் –
யாததோ ஹ்யபி கௌ ந்தேய புருஷஸ்ய விபச்சித
இந்திரியாணி பரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2–60–என்று–10-இந்திரிய பிராபல்யத்தையும்
அசம்சயம் மகாபாஹோ மனோ துர் நிக்ரகஞ் சலம் -என்று அந்த ப்ராபல்யத்தில் மற்றை இந்திரியங்களை பற்றவும்
மனசினுடைய-ப்ராதான்யத்தையும்
தர்சிப்பிக்கையாலே -ஆச்ரயண விரோதிகளையும் –
தானி சர்வாணி சம்யய யுக்த ஆஸீத் மத் பர -வசேஹி யச்யேந்திரியாணி
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2–61–என்றும் –
யதோ யதோ நிச்சலதி மனஸ் சஞ்சலம் அஸ்திரம் ததஸ் ததோ
நியம்யை ததாத் மன்யமேவ வசம் நேத்-6- -என்று
ஆச்ரயண உப கரணங்களான பாஹ்யாப்யாந்தர கரணங்களை
10–சுவாதீனமாக நியமிக்கும் பிரகாரத்தையும் —அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -போலே என்னிடம் செலுத்தி –
சதுர்விதா பஜந்தே மான் ஜனாஸ் சூக்ருதிநோர்ஜூன
ஆர்த்தோ ஜிஞ்ஞா சூரரத்தார்த்தீ ஜ்ஞானிச பரதர்ஷப -7-14 –என்று
11–ஆஸ்ரயிக்கும் அதிகாரிகளுடைய சாதுர் வித்யத்தையும்-ஸூ ஹ்ருத பேதம்
த்வவ் பூத சர்கவ் லோகேச்மின் தைவ ஆசூர ஏவச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்த்தாயா சூரி மாதா-15- -என்று தன்னுடைய
ஆஞ்ஞா அநு வர்த்தன பரரானவர்கள் தேவர்கள்
தத் அதிவர்த்தன பரரானவர்கள் அசுரர்கள் என்று
12–தேவ அசுர விபாகத்தையும் –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதி ராத்மனஸ் சுபா ப்ராதான்யாத குரு ஸ்ரேஷ்ட நாச்த்யந்தோ விச்தரச்ய மே–10—என்று தொடங்கி-
இவ் விபூதியில் சமஸ்த பதார்த்தங்களுக்கும் வாசகமான சப்தங்கள் தன் அளவிலே பர்யவசிக்கும் படி
13–இவற்றை அடைய ஸ்வ பிரகாரமாக கொண்டு வியாபித்து நிற்கும் படியையும் –
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகமைச்வர்யம் -என்று திவ்ய சஷுசை கொடுத்து
பச்யாமி தேவான் தவ தேவ தே ஹே சர்வாந்ததா பூத விசேஷ சங்காத்
பிரம்மாண மீசம் கமலா சனச்ச்தம் ருஷீம்ச்ச சர்வான் உரகாம்ச்ச தீப்தான்-11- -இத்யாதியாலே –
தன்னுடைய விஸ்வரூபத்தை கண்டு பேசும்படி பண்ணுகையாலே –
14–தான் உகந்தாருக்கு திவ்ய ஞானத்தை கொடுத்து தன் படிகளை தர்சிப்பிக்கும் என்னும் அத்தையும் –
ஆச்சார்யர் விஸ்வரூபம் காட்ட மாட்டாரே -விஸ்வரூபம் உபதேசமோ என்று கேட்ப்பார்க்கு இந்த வாக்கியம் -திவ்ய ஞானம் இது -அன்றோ –
திவ்ய சஷூஸ் கொடுத்து திவ்ய ஞானம் அருளினான் அன்றோ –
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி யுக்த்வைவம் ஆத்மானம் மத் பராயணா-9 -34– –
என்று இப்படி இருந்துள்ள பரத்வ சௌலப்ய யுக்தனான தன் திரு அடிகளை பிராபிக்கை ஆகிற
15-பரம புருஷார்த்ததுக்கு உபாயமாய் இருந்துள்ள கர்ம ஞான ரூப அங்க சஹிதையான பக்தியையும்
–முக்கரணங்களால் பக்தி அதுக்கு அங்கமான பிரபத்தியையும்
-மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –7-4-என்றும்
தமேவசாத்யம் புருஷம் பிரபத்யேத்–15-4–என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத— -என்று-16- அந்த பக்தி அங்கமான பிரதி பத்தியையும் –
நடுவில் பிரபத்யே உத்தம புருஷன் -இவர் பண்ணுவாரா –பிரபத்தி பண்ண வேண்டும் -சரணாகதி பண்ணி -அஞ்ஞானம் போக்க -என்கிறார் –
ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டுக் கொண்டு -அவதார ரூபத்தில் பரம ரஹஸ்ய தம அர்த்தம் உபதேசிக்க ஆச்சார்ய உபாசனம்
தர்மத்தை ஸ்தாபிக்க அனுஷ்டித்துக் காட்ட வேண்டுமே –
ஆதி புருஷனை உபாசிக்கிறார் -பத்ரிகாஸ்ரமத்தில் தானே சிஷ்யனாயும் ஆச்சார்யராகவும்
காமன் சாமான் காலில் விழுந்தது –ப்ராப்ய த்வரை தூண்ட -இருவரும் ப்ரஹ்மமே என்றும் வியாக்யானம் –
மூன்று இடங்களில் சரணாகதி – பற்றி -ஸ்ரீ கீதையில் –
சரம ச்லோகத்தாலே -அந்த பக்தி உபாயத்தின் துஷ்கரத்வாதிகளை உணர்ந்து சோகிப்பாருக்கு
17–ஸூ கரமுமாய் -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் பிரபத்தி என்னும் அத்தையும்
தானே அறிவித்து அருளினான் இறே-
ஆக இப்படி அறியாதன அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கையாலே
ஆச்சார்யா க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்டான் என்கிறது
-இனி புருஷகார க்ருத்யமும் -சரண்யனான தன்னதன்றே -பிராட்டி க்ருத்யம் இறே –
மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்தூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வ நிர்திஷ்டா பரமர்ஷிபி மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லஷணம் பவேத்- -இத்யாதிகளாலே –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
இவனுக்கு தத்வ ஜ்ஞானாதிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டுகையாலே–ஆதி சப்தம் வைராக்யம் பக்தி போல்வன –
ஆச்சார்ய க்ருதயத்தை ஏறிட்டு கொண்டான் ஆகிறான் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ள வேண்டுவான் என்-
அங்கீகரித்து விட அமையாதோ என்னில் -அங்கீகாரத்துக்கு இதுவும் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
எங்கனே என்னில் -இவ் உபாயத்துக்கு புருஷ சாபேஷை யோபாதி புருஷகார சாபேஷைதையும் உண்டு இறே
இவ் உபய சாபேஷைதையும் -உபாய வர்ண ரூபமான பூர்வ வாக்யத்தில்
பிரதம சரம பதங்களிலே காணலாம் -ஸ்ரீ -சப்தத்தாலே புருஷகாரத்தையும் உத்தமனாலே
அதிகாரியையும் இறே சொல்லுகிறது -பிரபத்யே உத்தம புருஷன் தன்னிலை –
ஆகையால் சேதனர் தன்னை உபாயமாக பற்றும் இடத்தில் -ஸ்வ அபராத பயத்தாலே
பிராட்டியை புருஷகாரமாக முன்னிட -அவள் இவன் அபராத நிபந்தனமான தன் திரு உள்ளத்தின்
கலக்கைத்தையும் தானே தணித்து கொண்டு இவனை சேர்த்து கொள்ளுகையாலும் –
அதுதான் செய்கிற அளவில் -அர்த்தித்வ நிரபேஷமாக செய்கையாலும் –
புருஷகார க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் -என்கிறது –
மூன்று அபராதங்கள் -திரு உள்ளம் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வைப்பது பிராட்டி வியாபாரம் தானே -தானே பண்ணிக் கொண்டான் –
ஆகவே புருஷகார க்ருத்யத்வத்தை ஏறிட்டுக் கொண்டான் என்றபடி –
இனி உபாய க்ருத்யம் தன்னதாய் இருக்க -அத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் என்கிறது –
த்வமேவ உபாய பூதா மே பவ இதை பிரார்த்தனா மதி சரணாகதி –என்று இவர் அர்த்தித்தால் -கார்யம் செய்ய அமைந்து இருக்க -/
வேண்டுதல் உபாயம் இல்லை அதிகாரி விசேஷம் -பிரார்த்தித்து பெற்றால் தானே புருஷார்த்தம் ஆகும் –
நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணக் கடவோம் என்று தானே என்று கொண்டு –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கையாலே –சரணாகதியே இல்லாமல் -தானே செய்தானே -அது தான் ஏறிட்டுக் கொண்டான் என்றது –
அல்லது -இப்படி இன்றிக்கே வேறே யோஜனை –உபாய உபேயத்வே ததிஹா தவ தத்தவம் னது குணவ் -என்கிற வஸ்துவுக்கு-ஸ்வரூபமே உபாயம் –
உபாய க்ருத்யத்வம் வந்தேறி அன்று இறே –
உபய லிங்க விசிஷ்டத்வத்தாலே உபாய உபேயத்வங்கள் இரண்டும் ச்வதஸ் சித்தமாய் இறே இருப்பது –ஸ்வரூபத்திலே நித்ய நியதங்களாய் இருப்பது
ஹேய ப்ரத்ய நீகத்வம்-ஹேயா ரஹிதவமும் அந்நிய ஹேயே நிவர்த்தகம் -அநிஷ்ட நிவ்ருத்தி உபாயத்வம்
கல்யானைகதத்வம் மற்ற அனைவருக்கும் அனுகூலமாய் இருப்பதே -இத்தால் ப்ராப்யத்வமும் விவஷிதம் –
அன்றிக்கே உபேயமான தன்னை உபாயம் ஆக்குகையாலே உபாய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டான்
என்கிறது என்பாரும் உண்டு –ஆய் ஸ்வாமிகள் இப்படி அருளிச் செய்கிறார் –
கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குவது போலே –அது பால் மருந்தாம் போலே இவனும் உபாயமாம் இடம் இங்கும் உள்ளது ஒன்றாகையாலே
அர்ஜுனனுக்கு இப்போது அசாதாராணமாக செய்தது ஓன்று அல்லாமையாலும் –
உபாயம் -என்றே வஸ்துவை நிர்தேசித்து தத் வைபவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலும்
இவ் இடத்துக்கு உசிதம் அன்று -ஆன பின்பு கீழ் சொன்ன படியே பொருளாக வேணும் —
ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் -கார்பண்ய தோஷோ பகத ஸ்வபாவ
ப்ருச்சாமி த்வா தர்ம சம்மூட சேதா-யச்ஸ்ரேயஸ் சியான் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்
தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் என்று இவன் அர்த்தித்வம் உண்டாகையாலே
அந்ய க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்ட மாத்ரமே விவஷிதம் ஆகையாலும் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அந்ய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டமையும் –
அது தன்னை அர்த்தித்வ நிரபேஷமாக ஏறிட்டு கொண்டமையும் விவஷிதம் ஆகையாலும் –
ஸ்வ க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அர்த்தித்வ நிரபேஷமாக செய்த அளவே-விவஷிதம் ஆகையாலும் –
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே -என்கிற இது -க்ருத்ய த்ரயத்திலும் யதாயோகம்-அந்வயிக்க கடவது –
ஆச்சார்ய அஞ்ஞாத ஞாபனம் பண்ண –
பிராட்டி புருஷீகரிக்க –
வந்த தன்னை உபாயமாக பற்றினவனுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணி கொடுக்க அமைந்து இருக்க –
இவை எல்லா வற்றையும் தானே ஏறிட்டு கொண்டது வைபவம் இறே –
ஏறிட்டு கொள்ளுகையாலே மகா பாரதத்தில் உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து-என்றது
ஏறிட்டு கொண்டமையை பிரதிபாதிகையாலே சொல்லிற்று ஆய்த்து -என்றபடி –
———————————————-
உபய சாதாரண வைபவம்
சூரணை-15-
புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-
ஆக புருஷகார உபாயங்கள் இரண்டுக்கும் அசாதாராண வைபவத்தை அருளி செய்தார் கீழ்-
உபய சாதாரண -பொதுவான – வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –
தத்தத் சாதாராண வைபவம் சொல்லுகையாலே -புருஷகாரத்தையும் -உபாயத்தையும் -தனித்தனியே உபாதானம் பண்ணி அருளி செய்தார் கீழ் –
உம்மை தொகை இருப்பதால் பொதுவான குணங்கள் இரண்டுக்கும் உண்டே என்பதாலே
இது உபயத்துக்கும் சாதாரண-வைபவ கதனம் ஆகையாலே -புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் -என்று தந்த்ரே னோபாதனம் பண்ணி அருளி செய்கிறார் -உபயத்துக்கும் அசாதாராண வைபவம் சொல்லுகிற இடங்களில் -இருவரையும் திருத்துவது -இத்யாதியாலே சாப்தமாக புருஷகார ஸ்வரூபமும் –ஸ்வரூபம் வேற வைபவம் வேறே -கீழே வைபவம் தானே அருளிச் செய்தார் –
தோஷ நிவர்த்தக -திருத்துவது என்று ஸ்வரூபம் -உப யுக்த கிருபாதி குணங்கள் புருஷகார அசாதாரண வைபவம்
உபாய வைபவம் -மற்ற உபாயம் எதிர்பார்க்காத தன்மை தானே ஸ்வரூபம் -வைபவம் ஆவது க்ருத்யம் சப்தத்தால் –
அர்த்திக்காமல் பிறர் கிருத்யம் ஏறிட்டுக் கொண்டது உபாய வைபவம் –
உபய சாதாரணம் ஸ்வரூபம் -உபாயம் எதிர்பார்க்காமல் –தன்னை அண்ட பிராட்டி எதிர்பார்க்காமல் -பெருமாள் உபாயாந்தரங்களை எதிர்பார்க்காமல்
பொதுவான ஸ்வரூபம் -குண ஹானி கொண்டு தள்ளாமல் இருப்பது ஸ்வரூபம் -அவற்றை பச்சையாக கொள்வது வைபவம் –
உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொள்கையாலே -என்கையாலே -ஆர்த்தமாக-உபாய ஸ்வரூபமும் சொல்லப் பட்டது –
இங்கு உபய ஸ்வரூப கதன பூர்வகமாக வைபவத்தை அருளி செய்கிறார் –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-என்று -தோஷம் ஆவது -அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் –
குனஹாநியாவது -விஹிதாகரணம் –
இவை இரண்டையும் -மநோ வாக் காயை -இத்யாதி சூர்னையாலே எம்பெருமானார் அருளி செய்தார் இறே –
இதம் குரு -இதம் மா கார்ஷீ -என்று விதி நிஷேதாத்மகமான சாஸ்திரம் தான் பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இறே இருப்பது –
ஸ்ருதிஸ் சம்ருதிர் மமைவாஞ்ஞா -என்று தானே அருளி செய்தான் இறே –
ஏவம் பூதம் சாஸ்த்ரத்தில் நிஷித்தத்தை செய்கையும் -விஹிதத்தை செய்யாமையும் இறே –
அநாதி காலம் ஷிபாமி ந ஷமாமி -என்னும் பகவன் நிக்ரகத்துக்கு இலக்காய் போருகைக்கு காரணம் –
இவை இரண்டையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே -என்றது –
ஆஸ்ரயண உந்முக சேதன கதனங்களான இவற்றை தர்சித்து -இவனை வேண்டாம் என்று கைவிடாதே –
அங்கீகரிக்கும் மாத்ரம் அன்றிக்கே என்றபடி –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-யாவது –
அப்படிப் பட்ட தோஷ குண ஹானிகள் தன்னையே -முகம் மலர்ந்து
அங்கீகரிகைக்கு உறுப்பான உபகாரமாக கொள்ளுகை-
உபேஷியாமைக்கு ஹேது -தயா ஷாந்திகள்
பச்சை யாக கொள்ளுகைக்கு ஹேது -வாத்சல்யம் –
சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத பசு -தன் கடையில் நின்றும் விழுந்த கன்றின் உடம்பில்
வழும்பை போக்யமாக விரும்புமா போலே -இருப்பது ஓன்று இறே இது –
இக் குணத்துக்கு ஒப்பதொரு குணம் இல்லை இறே-ஆகையால் இறே -நிகரில் புகழாய் -என்று ஆழ்வார் அருளி செய்தது –
உடையவரும் -அபார காருண்யா சௌசீல்ய வாத்சல்ய என்று குணாந்தரங்கள் உடன்
ஒக்க அருளி செய்தே -இதன் வ்யாவ்ருத்தி தோற்ற மீளவும் -ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -என்றார் இறே –
இவ் வாத்சல்யம் தான் மாத்ருத்வ சம்பந்தத்தாலே ஈச்வரனிலும் பிராட்டிக்கு-அதிசயித்து இறே இருப்பது –
ஆகையால் இருவரும் தம் தாம் அங்கீகரிக்கும் தசையில் இச் சேதனனுடைய
தோஷ குண ஹானிகளை பச்சையாக கொண்டு அங்கீகரிப்பார்கள் என்கை-
——————————————-
இப்படி புருஷகாரமும் -உபாயமும் -தோஷ குண ஹானிகள் குலைவதற்கு முன்னே அங்கீகரிக்கிறது என் –குலையட்டும் என்று விருப்பம் கொண்டு -நாம் -ஆசையுடன் இவர்கள் முன்னே நின்றவுடன் அங்கீ கரிக்கிறார்கள் -இவை குலைந்தே அங்கீ கரிக்க வேண்டும் என்று இருக்க மாட்டார்களே -அவை குலைந்தே அங்கீகரிக்க கடவோம் என்று இருந்தால் வருவது என் என்ன -அருளி செய்கிறார் –
சூரணை -16
இரண்டும் இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –
இரண்டும் என்கிறது –புருஷகார உபாயங்களை –
இரண்டும் குலைய வேணும் என்று இருக்கை யாவது -இவனை அங்கீகரிக்கும் போதைக்கு இவனுடைய தோஷ குண ஹானிகள் இரண்டும் -போய்- கொள்ள வேணும்-(அங்கீ கரிக்க வேணும் _- என்று நினைத்து ஆஸ்ரயண உன்முகனாக இவனை அங்கீகரியாது இருக்கை (விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பர் போலே -அங்கீ காரியா விட்டால்- சத்தையே இல்லாமல் தவிப்பார்கள் -)இருக்கில் வரும் குற்றம் மேல்-இப்படி இருக்கில் -இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது -புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும்-தோஷ குண ஹானிகள் இரண்டும் வருகை –
(முதலில் தோஷ குண ஹானிகள் அவர்களுக்கு என்றும்- மேலே கிருத்ய அகரணம் அக்ருத்ய கரணங்கள் என்றும் அருளிச் செய்கிறார்-)எங்கனே என்னில் –
தோஷம் வருகை யாவது –
த்வம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா-
அகில ஜகன் மாதரம்-
பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய-என்கிறபடியே
சகல சேதனருக்கும் நிருபாதிகமான( சம்பந்தம் )தாயும் தகப்பனும் ஆகையாலே இச் சேதனனுடைய நன்மை தீமைகள் இரண்டும் தங்களதாம் படியான உறவு உண்டாய் இருக்க -இச் சேதனனுடைய தோஷாதிகளை பார்த்து அங்கீகரியாமையாலே-தாத்ருச சம்பந்தத்ததுக்கு-நிருபாதிக சம்பந்தத்துக்கு –கொத்தை விளைகை-
குண ஹானி வருகை யாவது –இவனுடைய துக்கம் கண்டு இரங்காமையாலும் –
இவனுடைய தோஷத்தை போக்யமாக கொள்ளாமையாலும்-க்ருபா வாத்சல்யங்களுக்கு ஹானி வருகை -(நிருபாதிக சம்பந்தம் பார்த்து செய்யாமல் இருக்கும் தோஷமும் கிருபா வாத்சல்யம் குணங்களுக்கு ஹானியும் இருவருக்கும் வரும் என்று கொள்ள வேண்டும் )
அதவா –
இரண்டும் உண்டாய்த்தாம் -என்கிற இடத்திலும் –தோஷ குண ஹானிகள் ஆவன –
அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்கள் ஆகவுமாம்
புருஷகாரத்துக்கு அக்ருத்ய கரணமாவது-ஈஸ்வரனையும் உள் பட தோஷம் காண ஒட்டாத தான் -தோஷாதிகள் குலைந்து அன்று அங்கீ கரியேன்-என்று இருக்கை–(மைத்தடம் கண்ணினாய் -வாய் திறவாய் -மா ஸூச- சொல்ல ஒட்டாமல் என் பரிகரங்களை நீரோ ரஷிக்க வேண்டும் -என்று சேர்ந்து ரஷிக்க வேண்டியவள் தடுத்தது போலே -)
க்ருத்ய அகரணம் ஆவது -இவனுடைய தோஷாதிகள் பாராதே -கை கொண்டு
ஈஸ்வரனோடு சேர்பிக்கை ஆகிற ஸ்வ க்ருத்யத்வத்தை செய்யாமை –
(ஸ்வரூபத்துக்குத் தக்கபடி மாறும் அன்றோ – யாகத்தின் தீஷித்து இருப்பவனுக்கு உடம்புடன் முழுவதும் வெண்ணெய் பூசிக் கொண்டு யாகம் முடியும் வரையில் குளிக்காமல் இருக்க வேண்டும் -நமக்கோ நித்யம் ஸ்நானம் பண்ண வேண்டும்)
ஈஸ்வரனுக்கு அக்ருத்ய கரணமாவது-சம்சாரி சேதனருடைய தண்மையை பார்த்து கை விடாதே –நித்ய -நிருபாதிக சம்பந்தம் அடியாக -அத் வேஷமே தொடங்கி உண்டாக்குகைக்கு -எதிர் சூழல் புக்கு திரிகிற சர்வ பூத ஸூ க்ருதனான தான்-இச் சேதனனை அங்கீகரிக்கும் அளவில் இவன் தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியேன் என்று இருக்கை –
க்ருத்ய அகரணமாவது-இவனுடைய தோஷாதிகளை பாராதே கை கொண்டு ஸ்வ க்ருத்யமான அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை பண்ணாமை –
இது தான் சேதனனுக்கு சொன்ன அக்ருத்ய கரணாதிகளை ப் போலே சாஸ்த்ரத்தை பற்ற சொல்லுகிறது அன்றே —(கர்ம வஸ்யர்கள் இல்லையே) இவர்களுடைய ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை பற்றி சொன்னதாயிற்று-இவர்கள் ஸ்வபாவத்தை பற்றி சொல்லுகிற இவை இத்தனை இறே-விமுகரையும் உள் பட தோஷ குண ஹானிகள் பச்சையாக மேல் விழுந்து அங்கீகரிக்கும் ஸ்வபாவரான இவர்களுக்கு -அபிமுக சேதனர்களை அங்கீகரிக்கும் அளவில் தோஷாதிகள் குலைய வேணும் என்று இருக்கை தான் முதலிலே கூடாமையாலே இவர்களுக்கு இவை வருகைக்கு அவகாசம் இல்லை இறே-ஆயிருக்கச் செய்தே இப்படி அருளிச் செய்தது –(ராவணனை உட்பட மேல் விழுந்து அங்கீ கரிப்பவர் -வருவார்களை விடுவார்களோ -நீராடப் போதுவீர் வியாக்யானம் -)இவ் அர்த்த தத்வம் அறியாதவர்களுக்கு- ஆஸ்ரயண உந்முக சேதன கதங்களான தோஷ குண ஹானிகள் குலைய வேணும் என்று இராமல் அவற்றுடனே அங்கீகரிக்கை இவர்களுக்கு அவஸ்ய கரணீயம் என்று அறிவிக்கைக்காக-
(தண்டனை சாஸ்திரம் கிருபை யார் இடம் காட்ட –ஆஸ்ரயண உன்முகன் இடம் கிருபை — வைமுக்யன் இடம் சாஸ்திரம் காட்ட அன்றோ-அவள் முன்பே அருளிச் செய்தாள்- இந்த ஞானம் நமக்கு தெரிய வேண்டும் என்று இந்த சூர்ணிகை -)
(ஆயி ஸ்வாமிகள் – இந்த புருஷகாரம் உபாயங்கள் வைஷம்யாதி பரிகார அர்த்தமாக தோஷாதி அபிஷந்தி விராம மாத்ரத்தை மட்டுமே பார்த்து-விருப்ப ஒய்வு -அங்கீகரிக்கா விடில் தோஷ குண ஹாநிகளே அவர்களுக்கே வரும் -சம்பந்தம் மட்டுமே பார்த்துக் அங்கீகரிக்க வேண்டும்-ஏற்படில் -எதிர்மறையாக -வ்யதிரேக அர்த்தம் – -தோஷ குண ஹாநிகள் -இருந்தால் அவர்களுக்கே போகும் -லீலா கார்ய ஆசையினால் -என்னலாம் –
புத்ரனை அநீதியை கை விடுவது மாதா பிதா குற்றமே யாவது போலே–தர்மம் அழுக்கு தர்மிக்கே வருமாப்போலே- சரீரத்தில் அழுக்கு இவனுக்குத் தானே வரும் –
லீலா ரசம் அபேக்ஷை -இல்லாமல் -தத் அனுகுண உபேக்ஷையும் இல்லாமல் இருக்க வேண்டும்-சம்பந்தம் வாத்சல்யம் கிருபைகளுக்கு கொத்தை வரும் -)
———————————————-
இப்படி தோஷாதிகள் குலைந்தால் ஒழிய அங்கீ கரியோம் என்று இருக்கில்
அத் தலைக்கு அவை இரண்டும் வரும் என்னும் இடம் சொல்லி –
தோஷாதிகள் குலையப் பட்டு அன்றோ நம்மை அங்கீகரித்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இவை இரண்டும் வரும் என்கிறார் மேல் –
சூரணை-17-
இரண்டும் குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –
(ஆயி ஸ்வாமிகள்-அபிமுகனான தோஷம் குண ஹானி பூர்ணனான சேதனன் – அநாதியாக அபிவிருத்தியாய் வரும் குண ஹாநிகள் தோஷங்கள் இரண்டுமே –ஸூ அனுஷ்டான ஆஸ்திக்யங்களாலே கட்டுக் குலைந்து போனது -என்று நிர்பரமாய் கர்வித்து இருந்தால்
புருஷகாரம் உபாயம் -அடி அற -குற்றம் யார் இடமும் இல்லை என் அடியார் அது செய்யார் -தோஷம் தேடி இல்லை -என்ற நிலை கழிந்து பழைய படியே ஆகும் –
அவனே உபாயம் என்று இருக்காமல் -தன் யத்னத்தால் வந்தது என்றால் அவர்கள் உபேக்ஷிக்க காரணம் ஆகுமே -பல நீ காட்டிப் படுத்துவார்கள் –
தோஷ குண ஹானிகளுக்கு இசைந்தவர்களே ஆஸ்ரயண அதிகாரி -இல்லாத குற்றத்தை இருக்கு என்றாலும் இசைந்து இருப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன்-இவற்றை விரும்பும் அவர்களே உபாய புருஷகார பூதர்கள் –கஷ்டப்பட்டு தேடவேண்டாம் -இருப்பதைக் கொடுத்தாலே போதும் –தோஷாதிகளில் ஒய்வு எடுக்கும் அபேக்ஷை -உபாய பூர்வ பாவியான புருஷகாரத்துக்கு முற்பட்டு – உபாயத்துக்கு பிற்பாடு –
தோஷாதிகள் இல்லாமல் இருப்பதை அனுஷ்டானம் உபாயத்துக்கு அப்புறம் — ஏற்படவேண்டும் –ப்ரவ்ருத்தகரான சக்தரே நிவ்ருத்தகர் –அப்ரவ்ருத்தரான அசக்தர் -நாம் நம் குற்றங்களை போக்க முடியாதே –
ஆச்ரயண விரோதியான பாபங்களை போக்கும் பிராட்டி -பிராப்தி விரோதங்களை போக்குபவன் அவன் — சேதனனே கர்ம ப்ரவர்த்தகனாய் இருக்க- அவனைத் சொல்வது -செய்விப்பவன் அவன் என்பதால் செய்விப்பவன் அவனே -சாது அஸாது கர்மங்களை எல்லாம் –
மா முனிகள் வியாக்யானம் -இரண்டும் குலைந்தது என்று இருக்கை யாவது –
இத்தனை நாளும் நம்மை அங்கீகரியாதவர்கள்-இன்று அங்கீகரித்தது -நம் தோஷாதிகள்
குலையைப் பட்டு அன்றோ -ஆகையால் நமக்கு அவை குலைந்தது என்று அநு சந்தித்து இருக்கை –
இப்படி இருக்கில் -இத் தலைக்கு இரண்டும் உண்டாகையாவது -அக்ருத்ய கரணமும்-க்ருத்ய அகரணமும்- வருகை – எங்கனே என்னில் -இவ் வதிகாரிக்கு -அநாதி காலம் அங்கீகரியாதவர்கள் இன்று நம்மை அங்கீகரித்தது நம்முடையதோஷ ஹானிகள் இரண்டும் குலைந்தவாறே அன்றோ என்று அநு சந்திக்கை -அக்ருத்யமாய் இருக்க -அத்தை செய்கையாலும்-தோஷம் குண ஹானிகள் இருப்பதை –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -திரு வாய் மொழி – 3-3 -4-
அமர்யாத-ஸ்ரீ ஆளவந்தார்
புத்தவாச நோச-ஸ்ரீ –கூரத் ஆழ்வான்
அதிக்ரம அந் நாஜ்ஞம்–ஸ்ரீ பராசர பட்டர் -இத்யாதிபடியே
நம்முடைய தோஷ குண ஹானிகள் இப்போது அளவாக ஒன்றும் குலைந்தது இல்லை என்றும் -இப்படி இருக்க செய்தே தோஷாதிகளே பச்சையாக நம்மை அவன் அங்கீகரித்து அருளுவதே என்றும் அநு சந்திக்கை க்ருத்யமாய் இருக்க அத்தை செய்யாமையாலும்-இரண்டும் வரும் இறே
——————————————
இப்படி புருஷகாரமும் உபாயமும் -தோஷாதிகள் பச்சையாக அங்கீகரித்த இடம் உண்டோ
என்னும் அபேஷையிலே-தத் தத் அங்கீகாரம் பெற்ற ராஷசிகள் உடையவும் -அர்ஜுனன் உடையவும் –
தோஷங்களை தர்சிப்பிக்கவே அது சித்திக்கும் என்று நினைத்து
ப்ரதமம் ராஷசிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –
அர்த்தவாதங்கள் -உண்மை இல்லை என்று ஆஷேபித்தால் -சாஸ்திரம் -விதி நிஷேதங்களுக்கு விரோதம் -கிருபா க்ஷமாதி வைபவம் சொல்லும் சாஸ்த்ர வாக்கியங்களும் உண்டே -ஆஸ்ரயித்தவர்களுக்கு குற்றங்களையே பச்சையாக கொண்ட இடங்கள் உண்டே –
புருஷகாரம்-இவற்றை பச்சையாக கொண்டு அங்கீ காரம் பெற்ற இடம் ராக்ஷஸிகளுக்கு –
உபாயம் -இவற்றை பச்சையாகக் கொண்டு அங்கீ காரம் செய்த இடம் அர்ஜுனனுக்கு -தோஷங்களை தர்சிப்பிக்கவே அது ஸித்திக்கும் (குற்றங்களைக் குணமாகக் கொண்ட பிரகரணம் தானே )ப்ரதமம் ராஷசிகள் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –
சூரணை -18-
ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –
ஏகாஷி ஏக கரணி முதலான ஏழு நூறு ராஷசிகளும் –(சங்க்யா நியதி-நம் இடம் உள்ள ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை -புராணாந்தரங்களிலே கண்டு கொள்வது -க்ரூரர் -ஸப்த சத -700 நிகண்டுவில் உண்டாம் -ஸ்வ கணம் நாய்க்கூட்டம் என்றும் எழுநூறு என்றும் கொள்ளலாம் அரும்பதம் -)
க்ரூரர்கள் -கொடுமையான பார்வை உள்ளவர்கள் -நிகண்டுவில் குரூரம் -700-என்றும் உண்டே — பரஹிம்சை பண்ண பெறில் உண்ணாதே தடிக்கும் படி ப்ரக்ருத்ய பாப சீலைகளாய்-பத்து மாசம் ஒரு படி பட்ட தர்ஜன பர்த்ச்னம் பண்ணி நலிந்து போந்தவர்கள் இறே –
இவர்கள் தோஷம் பிரசித்தம்-என்றது -ஸ்ரீ ராமாயணம் நடையாடும் தேசத்தில்
அறியாதார் இல்லை என்ற படி -ஏவம் பூதைகள் ஆனவர்களை குறித்து
ராஜ சம்ஸ்ரைய வஸ்யானாம் –பாபானாம் வா சுபானாம் வா -என்று குற்றத்தை குணமாக உபபாதித்து -திருவடியோடே மன்றாடி ரஷிக்கையாலே –தோஷமே பச்சையாக அங்கீகரித்தமை பிரசித்தம் என்று கருத்து –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது–இஷ்ட வ்யதிரேகம் மாத்திரம் குண ஹானி – -தோஷம் பச்சை யாம் இடத்தில் குண ஹானி பச்சை யாம் என்னும் இடம் சொல்ல வேண்டா இறே என்று –
இவர்கள் தங்களுக்கு குண ஹானி யாவது –
இடைவிடாது நலிந்து போகிற இடத்தில் இவளும் நம்மோபாதி ஒரு பெண் பிறந்தவள்
அன்றே என்றாகிலும் மறந்தும் அல்பம் நெஞ்சில் இரக்கம் உண்டாதல் –
பவேயம் சரணம் ஹி வ -என்றதற்கு பின்பும் நலிகிற இடத்தில் -ஐயோ இப்படி சொன்னவள் அன்றோ – என்று சற்றும் நெஞ்சு உளுக்குதல் செய்யாமை -முதலானவை –
(ஆயி ஸ்வாமிகள் -க்ரூர கர்ம ஜென்மங்கள் ராக்ஷஸிகள் தோஷம் -உள்ள இடத்தில குண ஹானியும் உண்டே-த்ரிஜடை விலக்க விலக்க பண்ணினதால் குண ஹானியும் உண்டே-சூர்ப்பணகை பத்து ராக்ஷஸிகள் நலிந்த இடத்தில் அஜோமிகி என்பவள் சொன்னபடி கூத்தாடி த்ரிஜடை சொல்வதைக் கேட்க்காமல் இருந்தார்கள் -எம்பார் ஜீயர் அரும்பதம் )
———————————————-
இப்படி தோஷ பிரசுத்தி அர்ஜுனன் பக்கல் இல்லாமையாலும் -குண பிரதை உண்டாகையாலும் -இவனுக்கு தோஷம் எது என்கிற சங்கையை அனுவதித்து கொண்டு தத் தோஷங்களை தர்சிப்பிக்கிறார் –
ஆய் ஸ்வாமிகள் இது முதல் மேல் உள்ள இரண்டு சூர்ணைகளுக்கும் சேர்த்து அவதாரிகை ஸாதித்து அருளுகிறார்
சூரணை-19-
ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவஸ்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல் சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-
(அஸ்தானே ஸ்நேஹம் – அஸ்தானே காருண்யம் – தர்ம அதர்ம வியாகுலம்-
தாய் முறை சொல்லி -ஜிதேந்த்ரம் வென்றவன் -ஆஸ்திக்யம் உடையவன் –திருத்தி பணி கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டானே –
அர்ஜுனன் ஜெயம் கிருஷ்ணன் கீர்த்தி எப்பொழுதும் -அபிமதன் பிராக்ருதர்கள் பக்கல் முன்பு இல்லாத ஸ்நேஹம் -காட்டி
ரக்ஷமாம் சரணம் கதம் திரௌபதி பரிபவம் கண்டு ரக்ஷிக்காதது பெரிய குற்றம் –ஸாமாந்ய தர்மம் சூதாட்டத்தில் தோற்று –)
ஜிதேந்திரியரில் தலைவன் என்றது –
ஆரணஸ்ய ஆபரணம் பிரசாதன விதே பிரசாதன விசேஷ
உபமானாஸ்யாபி சகே பிரத் யுபமானம் வபுஸ் தஸ்யா -என்னும் வைலஷண்யம் உடைய
ஊர்வசி வந்து மேல் விழ-தாயார் – முறை கூறி நமஸ்கரித்து கடக்க நின்றவன் ஆகையாலே
இந்திரிய ஜெயம் பண்ணினாரில் தனக்கு மேல் பட்டார் இல்லாதவன் -என்கை
ஆஸ்திக அக்ரேசன் -என்றது-அஸ்தி என்று ஒத்துக் கொள்பவர் ஆஸ்திகர்
தர்ம அதர்ம பர லோக சேதன ஈஸ்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில்
ப்ரமாண்ய புத்தி உடையவர்களுக்கு முன் நடக்கும் அவன் என்கை –
கேசவஸ்யாத்மா என்று கிருஷ்ணனுக்கு தாரகமாய் இருக்கிற -என்றது
அர்ஜுன கேசவஸ்யாத்மா கிருஷ்ணஸ் சாத்மா கிரீடின-என்று அன்யோன்யம் பிராண பூதராய் இருப்பார்கள் என்கையாலே -இவனை பிரியில் கிருஷ்ணன் தரிக்க மாட்டான் என்னும் படி அபிமத விஷயமாய் இருக்குமவன் என்கை-
இப்படி இருக்க -அர்ஜுனனுக்கு தோஷம் எது என்ற சங்கை -என்னில் -என்றது -அநு வாதம் -தோஷங்கள் தன்னை சொல்லுகிறது –பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும் -என்று –
இவற்றில் சிநேக காருண்யங்கள் தோஷங்கள் ஆகிறது -அஸ்தானே க்ருதங்கள் ஆகையாலே –
வத பீதி தோஷம் ஆகிறது -ஸ்வ தர்மத்தில் அதர்ம புதத்யா வந்தது ஆகையாலே –
அஸ்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம த்யாகுலம் –தீ புத்தி கலங்கி என்றபடி என்று இறே ஆளவந்தாரும் அருளி செய்தது –
தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே சமவேதா யுயுத்சவ -என்கிறபடியே யுத்த இச்சையிலே இரண்டு தலையும் வந்து அணைந்து நின்ற பின்- -யுத்தமே கர்த்தவ்யமாய் இருக்க -அத் தசையில் –யுத்தத்தில் திட புத்தி உள்ளவன் யுதிஷ்ட்ரன் -என்ற பெயர் காரணம் –
ஸ்நேஹம் மனஸ் இளகி இருப்பது -ஆர்த்ததா தன்மை -காருண்யம் -தயை –
உபகாரம் பண்ணி புண்யம் -வைத்தியர் அஹிம்சா பரமோ தர்மம் என்று அறுவை சிகிச்சை செய்யும் பொழுது செய்யலாமோ –
ந கான்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் சூகாநிச கிம் நோ ராஜ்யேன
கோவிந்த கிம் போகைர் ஜீவதேநவா ஏஷாமர்த்தே கான்க்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் சூகாநிச த இமே வச்திதாயுத்தே ப்ராணான் த்யக்த்வா தநாநிச -இத்யாதி படியே
இவர்களை கொண்டு நான் ஜீவிப்பதொரு ஜீவனம் உண்டோ என்று பந்துக்கள் பக்கல்
பண்ணின சிநேகம் -ஸ்வ வர்ண-ஷத்ரிய வர்ண – வ்ருத்தம் ஆகையாலே நிஷித்தம் இறே –
தான் சமீஷ்ய ச கௌந்தேயஸ் சர்வான் பந்தூ நவஸ்திதான்
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் நித மப்ரவீத் -என்னும்படி
அத் தசையில் பண்ணின காருண்யமும் -பஸ்வா லம்பநத்தில் காருண்யம் போலே நிஷித்தம் இறே –(பசுவைக் கொண்டு யாகம் பண்ணுவதே யஜ்ஞத்தில் தீக்ஷை கொண்டவனுக்கு கர்த்தவ்யம் -மாவு பசு வைத்துப் பண்ண வேண்டும் -அங்கு )
குர்யாத் -விசிஷ்ட அதிகாரி மாவாலும் நெய்யாலும் பசு வைத்து பண்ணலாம் யாகம் –
கதம் நஞ்ஞேய மச்மாபி பாபா தஸ்மா ந் நிவர்த்திதம் குலஷய
க்ருதம் தோஷம் பிரபச்யத்பிர் ஜனார்த்தன -என்று தொடங்கி-
அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவசிதா வயம்
யத் ராஜ்ய சூகலோபேன ஹந்தும் ஸ்வ ஜன முத்திதா -என்னும் அளவும்
ஸ்வ வர்ண தர்மமான வதத்திலே அதர்ம புத்த்யா பண்ணிய பீதியும் அப்படியே இறே –
———————————————
இவை எல்லாம் அப்ரதானம் -இன்னும் பிரதான தோஷம் வேறே என்கிறார் –
சூரணை-20-
திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது
கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –
(ஆயி ஸ்வாமிகள் -கரிஷ்யே வசனம் தவ என்று உடனே யுத்தத்தில் இல்லாமல் -18- சொல்லி இசைவிக்க வேண்டியதால் அர்ஜுனன் இடம்-குண ஹானி உண்டே ஸூ ஸ்பஷ்டம்
இனி உறாமை என்று ஆழ்வார் அருளிச் செய்ததும் -உடன் உற்றேன் முடிக்காதது-மேலே பிரபந்தம் சொல்லியே முடிக்கப் பெற்றது –
பகவான் குற்றம் இல்லையோ என்னில் இல்லை அங்கு -நாடு திருந்த நச்சுப் பொய்கையை ஆகாமைக்கு இத்யாதி நான்கு காரணங்கள் உண்டே
இங்கு அர்ஜுனன் – ஸ்வா தந்தர்யத்தால் -வர்ணாஸ்ரம தோஷம் பிராயாச்சித்தம் பண்ணி போக்கலாம் இது -அவள் பரிபவம் கண்டும் வாளா இருந்ததுஸ்வரூப நாசம் -அது ஸ்தூலம் இது சூஷ்மம் -எனவே பிரதான்யம் –
முன்பு திரௌபதியை துர்யோதநாதிகள் பரிபவிக்கிற படியை கண்டு இருக்க செய்தே –
சூதிலே தோற்றமையை நினைத்து -அதர்ம பீதியாலே பொறுத்து இருந்தாலும் –
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணாம் கதம் -என்று கிருஷ்ணனை சரணம் புகுந்த பின்பு பரிபவிக்கிற அளவில் -பகவத் ஆஸ்ரயிரை பிறர் பரிபவிக்க கண்டால் சக்தன் ஆகில் விலக்க வேண்டும் -அசக்தன் ஆகில் இழவோட அவ்வருகே போக வேணும் என்னும் விசேஷ சாஸ்திர மரியாதை பார்த்தாதல் -தன் அளவில் கிருஷ்ணனுக்கு உண்டான சிநேக பஷ பாதங்களை நினைத்து -அவனை சரணம் புகுந்தவள் பரிபவிப்பட பார்த்து இருந்தால் அவன் முகத்தில் நாளை விழிக்கும் படி என்-என்றாதல் -சரக்கென எழுந்து இருந்து விலக்க இறே அடுப்பது –
அத்தை செய்யாதே முன்புத்தையில் காட்டில்–திரௌபதி சரணம் அடைவதற்கு முன்புள்ள தசை – ஒரு விசேஷம் அற-வாளா – இருந்தான் இறே – இதுவே ஆய்த்து இவன் தோஷங்கள் எல்லா வற்றிலும் பிரதானமாக கிருஷ்ணன் திரு உள்ளத்தில் பட்டுக் கிடப்பது -அத்தைப் பற்ற -கிருஷ்ணன் அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் -என்கிறது –தோஷத்துக்கு பிரதாந்யம் க்ரௌர்யத்தால் இறே -அல்லாதவை போல்-அல்லாதவை பகவத் அபசாரம் போல்வன என்றவாறு- அன்றிக்கே –ந ஷமாமி -என்னும் படி யான தோஷம் இறே இது –
—————————————–
இத் தோஷத்தின் கொடுமையை உபபாதிக்கிறார் மேல் –
அன்றிக்கே இத் தோஷம் ஐவர்க்கும் ஒவ்வாதோ -ஆன பின்பு இத்தலையையும்
நிரசித்து பொகடாமல் வைத்தது என் என்கிற சங்கையில் அருளி செய்கிறார் ஆகவும்-
சூரணை -21-
பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க
வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –
(ஆயி ஸ்வாமிகள் -பாகவத அபசாரம் கொடுமை இதுவே இப் பிரபந்த சாரம்- நேராக வராததும் இதுவே காரணம் -சரணகதாம் என்ற நாக்கு வேரூன்றி உள்ள கழுத்து பற்றிய மங்கள ஸூ த்ரம் அன்றோ –செய்ய வாய் -முற்றும் உண்ட கண்டம் -வாய் வழியே போட்டால் தான் கழுத்தில் வரும் -அங்கும் இது போல் வியாக்யானம் -இத்தால் ஆஸ்ரிதரை பரிபவித்தோரோ பாதி அது கண்டு -வாளா – இருந்தாரும் வத்யர் என்னும் இடமும் – அவர்கள் தாங்களே ஆஸ்ரிதர்க்கு விட ஒண்ணாத தொரு பந்தம் உடையார் ஆகில் அவர்களும் அனுகூலரே ஆவார் என்னும் இடமும் -பிரகடிதம் ஆய்த்து –
முற்பட சங்கதிக்கு அர்ஜுனனை என்னாதே –பாண்டவர்களையும் -என்றது இத் தோஷம் ஐவர்க்கும் ஒக்கும் என்று தோற்றுகைக்காக என்று யோஜிக்கக் கடவது –
அனந்தர சங்கதிக்கு தானே தன்னடைவே சேரும் இறே
பரிபவித்த துர்யோதனாதி களோபாதி பரிபவம் கண்டு இருந்த இவர்கள் நிரசநீயர் என்கிறது -ச சப்தத்தாலே –உம்மைத் தொகையால் – நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது -என்றது -இவர்கள் செய்த கொடுமைக்கு தலையை அறுத்து பொகட வேண்டி இருக்க –பிராணனனோடே இருக்கும் படி -வைத்தது என்ற படி –
திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக -என்றது -அவளுக்கு அபிமதமான மங்கள சூத்ரம்
போகாமைக்கு என்ற படி -விரித்ததலை காண மாட்டாதவன் -வெறும் கழுத்து காண மாட்டான் இறே -( தகப்பனார் போனது கேட்டு அழுத பரதன் உத்திஷ்ட ராஜன் என்றதும் அழுகையை நிறுத்தி கலங்கினான் அன்றோ -அது யாருக்கும் அடக்கலாம் -ஸ்வா தந்தர்யம் பொறுக்க மாட்டான் அன்றோ -அது போல் )
இத்தால் ஆஸ்ரிதரை பரிபவித்தோரோ பாதி அது கண்டு -வாளா – இருந்தாரும் நிரசன நீயர் என்னும் இடமும் – அவர்கள் தாங்களே ஆஸ்ரிதர்க்கு விட ஒண்ணாத தொரு பந்தம் உடையார் ஆகில் அவர்களுக்காக அவனால் ரஷிக்க படுவர் என்னும் இடமும் -பிரகடிதம் ஆய்த்து –
———————————————————
ஆனால் இப்படி நிரச நீயன் ஆனவனுக்கு இழி தொழில் செய்ததும்
பரம ரஹஸ்யத்தை உபதேசித்ததும் -என் செய்ய -என்ன -அருளி செய்கிறார் –
சூரணை -22-
அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —
(அந்தத்தில் முடியும் வகை அடியேற்கு தெரியும்- ஓ ஆதி மூர்த்தி –சகாதேவன் சொன்னதை -வில்லிபுத்தூரார் –-ஆய் ஸ்வாமிகள் – தண்ணிய இழி தொழில் கூசாமல் செய்தது இவளுக்காக -பாகவதையான பரிபவம் கண்டு வாளா இருந்தமை –ஆறாவது காது கேட்கக் கூடாத -பூசல் காலத்திலே உபதேசித்து –கடகன் போலே தூது சென்று பூசல் விளைத்து -சாரதியாய் இருந்து தன் மநோ ரதம் நடத்தியும் –சரணாகதையின் அபேக்ஷிதம் நடத்தி தலைக்கட்டவே — உபாயமும் தோஷ குண ஹாணிகளை பச்சையாகக் கொள்ளும் என்னுமிடம் சொல்லிற்று -கீழே புருஷகார வைபவம் சொல்லிற்று -பிரதான ப்ரமேயம் புருஷகார சேஷமாய் இருக்கும் -மா முனிகள் உபய வைபவம் என்றே அருளிச் செய்கிறார் )
தூது போய்த்தது-பொய் சுற்றம் பேசி சென்று பேதம் செய்து பூசல் விளைக்காக—பெரியாழ்வார் திருமொழி – – – –
சாரத்தியம் பண்ணிற்று -ஆயுதம் எடுக்க ஒண்ணாது ஆகையாலே -கொல்லா மா கோல் கொலை செய்து பாரத போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவிக்கைக்காக -திரு வாய் மொழி -3- 2- 3-
பிரபத்தி உபதேசம் பண்ணிற்று -ந யோத்ஸ்யாமி –என்று இருந்தவனை –கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி யுத்தே பிரவ்ருத்தன் ஆக்குகைக்காக –
இவை எல்லாம் செய்தது -சரணாகதை யான இவள் சங்கல்பத்தின் படியே துர்யோநாதிகளை அழிய செய்து இவள் குழலை முடிப்பைக்காக இறே –
ஆக அர்ஜுனன் திறத்தில் செய்த தூத்யாதி த்ரயமும் இவளுக்காக செய்தான் என்கிறது –
பாண்டவர்களையும் என்று தொடங்கி –இவ்வளவும் கீழ் சொன்ன பிரதான தோஷ
க்ரௌர்யமும் உபபாதிதம் ஆய்த்து –
ஆக இப்படி
அஸ்தான ஸ்நேகாதிகளும் -சரணாகதை பரிபவம் கண்டு இருந்த மகா தோஷமும்
இவனுக்கு உண்டாய் இருக்க –
சர்வ குஹ்ய தமம் பூய –ஸ்ருணுமே பரமம் வச –
இஷ்டோசி மே த்ருட இதி ததோ வஹ்யாமி தேஹிதம் –
மன் மனா பவ மத் பக்தோ மத்யாஜி மாம் நமஸ் குரு மமே வைஷ்யசி சத்யம் தே
பிரதி ஜானே ப்ரியோசி மே -என்று இவன் அளவில் உகப்புத் தோற்ற அருளிச் செய்கையாலே இவன் தோஷங்களை பச்சையாக கொண்டு அங்கீகரித்தமை பிரசித்தம் என்று கருத்து —சிரித்துக் கொண்டே உகந்து செய்த படியால் –
குண ஹானி சொல்லாது ஒழிந்தது -தோஷம் பச்சையாம் இடத்தில் குண ஹானி பச்சை யாம் என்னும் இடம் கிம்புனர் நியாய சித்தம் ஆகையாலே —
இவன் தனக்கு குண ஹானிகள் ஆவன —தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -என்று அருளிச் செய்த போதே –கரிஷ்யே வசனம் தவ -என்று எழுந்து இருந்து ஸ்வ க்ருத்யமான யுத்தத்தை பண்ணாமையும் – கிருஷ்ணனை சரணம் புகுந்தவளை பரிபவிக்க விட்டு பார்த்துக் கொண்டு இருந்தோமே என்னும் அநுதாப லேசமும் நெஞ்சில் இல்லாமையும் தொடக்கமானவை –
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காகா வாகில்-
இவன் தோஷத்தை பச்சையாக கொண்டு அங்கீகரித்தான் என்னும் அது கூடாதே -என்னில் -அதுக்கு குறை இல்லை –
இவள் கார்யார்த்தமாக இவனைக் குறித்து இவை எல்லாம் செய்கிற இடத்தில் -இவன் தோஷங்களை பார்த்து முகம் சுளியாமல் உகப்போடே செய்கையாலே –
த்வய விவரணம் இப்பிரபந்தம் என்கிறார் மேலே
அர்ஜுனனைக் குறித்து ஆச்சார்யா க்ருத்யாதிகளை ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அவன் தோஷத்தை பச்சையாக கொண்டும் -சாரதியாக புரை யற கலந்து நின்றும்
செய்கை முதலானவை உண்டாகையாலே –
அறியாத அர்த்தங்களை -இத்யாதியாலே -ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான வாத்சல்யாதி குணங்கள் சூசிதம் —பூர்வ வாக்கியம் நாராயண அர்த்தம்
இங்கே -தூத்ய சாரத்வங்கள் பண்ணிற்றும் -என்கிற இத்தாலே –
அஸ்மாத் வேத்த பரான் வேத்த வேத்தார்த்தம் வேத்த பாஷிதம் யத் யதஸ் மத்திதம்
கிருஷ்ண தத் தத் வாச்யஸ் சூயோதன -என்கிறபடியே கார்ய அகார்யாஜ்ஞனனான தான் போனால் அல்லது கார்ய சித்தி உண்டாகாது என்று இத்தலையை ரஷிக்கைகாக தான் தூது போனமையும் – ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்கையாலே -சாரத்யத்தில் ப்ரவர்தனாய் கொண்டு தேர் காலாலே பிரதி பஷத்தை அழிய செய்தமையும் தோற்றுகையாலே – ஆஸ்ரித கார்ய ஆபாதங்களான ஞான சக்தி யாதிகள் சூசிதம் –
(உத்தர வாக்ய நாராயண அர்த்தம் )
இன்னமும் -பிரதி பத்தி பண்ணிற்றும் –என்கையாலும்-சரம ஸ்லோகத்தில் –மாம்-அஹம் -என்கிற பதங்களால் சொல்லப் படுகிற உபயவித குணமும் சூசிதம் இறே-
ஆகையால் புருஷகார வைபவம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ மத் பதார்த்தம் பிரகடிதமானவோபாதி – அநந்யார்ஹை பாரதந்த்ர கேட் ப்க்கும் -குண வர்த்தகை -ஸ்ரீ சப்தார்த்தம் –
உபாய வைபவம் சொல்லுகிற இடத்தில் நாராயண பதார்த்தம் பிரகடிதம் –
உபாயத்வம் -சொல்லுகையாலே -சரணவ் சரணம் -என்றதும் சூசிதம் –
ஆக -இதிஹாச ஸ்ரேஷ்டம் 5–என்று தொடங்கி -இவ்வளவும் -ஸ்ரீ இராமாயண மகா பாரத
உக்தங்களான புருஷகார உபாய வைபவங்கள் தத் தத் ஸ்வரூபங்களோடே விசதமாக பிரதி பாதிக்க பட்டது –
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply