முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார்
புருஷகார வைபவம்–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றம் –
——————————————
சூரணை -5-
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-
ஸ்ரீ ராமாயணத்துக்கு ஸ்ரேஷ்டத்துக்கு அடை மொழி சொல்லி -மஹாபாரதம் நேராக சொல்லி – தூது போனவன் என்று ஆஸ்ரித பரதந்த்ரன் என்றவாறு –
உஜ்ஜீவனத்துக்கு அன்றோ இந்த பிரபந்தம் -ஆகவே சாரமான அர்த்தங்களை இந்த இதிகாசங்களில் இருந்து அருளிச் செய்கிறார் –
முதலிலே வேதார்த்தம் இத்யாதியாலே -வேத தத் அர்த்த தத் உப ப்ருஹ்மணங்களை
சாகல்யேன உபாதானம் பண்ணி -அந்த வேதத்தினுடைய பாக விபாக தத் உப ப்ருஹ்மண
விபாகங்களையும் பண்ணினாரே ஆகிலும் -(-சங்கா பரிகாரம் மேலே )-
சேதனருடைய உஜ்ஜீவனத்துக்கு அபேஷித அர்த்தங்களை
அருளி செய்ய இழிந்தவர் ஆகையாலும் ( ப்ரஹ்ம மீமாம்ஸையிலும் இதே போலே தானே )-அது தான் பூர்வ பாக வேத்யம் அன்றிக்கே -உத்தர பாக
வேத்யம் ஆகையாலும் -பூர்வ பாகத்தில் முமுஷுவுக்கு ஞாதவ்ய அம்சம் உள்ளதும் -உத்தர பாக
அர்த்தங்களான ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதிபாதன ஸ்தலங்களிலே -தத் தத் அனுகுண
த்யாஜ்யுபாதேய கதன முகேன ஞாபிகளாய் இருக்கையாலும் -உத்தர பாக அர்த்த நிர்ணயத்திலே-ப்ரவர்த்தராய் -அது தன்னிலும்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் பகவத் உபாசானாதிகளையும்
பரக்க நின்று பிரதிபாதிக்கிற இடங்களில் -சார அசார விவேக பூர்வகமாக தாத் பர்யங்களை ஸங்க்ரஹித்து –
சம்சய விபர்யயம் அற சேதனருக்க்கு பிரபத்தி விஷயமாம் படி அருளி செய்து செல்லுகிறார் மேல் – (ஸாத்ய விஷயங்கள் அசாரம்- சித்த விஷயங்கள் தானே சாரம்-
அதனாலே நேராக புருஷகார வைபவம் அருளிச் செய்கிறார் -சார தாமம் அன்றோ – )
(கீழே பிராமண நீர்த்தேசம் -பிரமேய நீர்த்தேசம் செய்கிறார் )
அதில் பிரதமத்திலே உத்தர பாக உப ப்ரும்ஹண த்வயத்தில் பிரபலமாக சொன்ன இதிகாசங்களில் வைத்து கொண்டு
ஸ்ரீ ராமாயணத்தினுடைய பிராபல்யத்தை பிரகாசிப்பியா நின்று கொண்டு தத் பிரதிபாத்ய விசேஷத்தை அருளி செய்கிறார் —
இதிஹாச த்வயத்தில் பிரதிபாத்ய அர்த்த விசேஷயத்தை பற்ற ஸ்ரேஷ்டம் என்கிறார் ஸ்ரீ ராமாயணத்தை –
பிரபந்த கர்த்தா நான்முகன் அனுக்ரஹம் அங்கு தகப்பனார் அனுக்ரஹம் இங்கு / ஸீதாயா சரிதம் மஹத் -வால்மீகி –
காவ்யம் உள்ளுறை பொருளால் பெருமை சப்தங்கள் எல்லாம் ராமனை சொல்லும் -ராமாயணம் காவ்யம் க்ருஸ்னம்- முழுவதும் என்றவாறு –
கிருபா அதிசயத்தால் வந்த ஏற்றம் அந்த கர்மம் சிறை இருந்தவள் என்பதால் -தொனிக்கும் -ராமன் சிறை இருக்க வில்லையே –
கலப்பை நுனி சீதா// சீதாஷீன் தாது தலைப்பட்டு இருந்தவள் சிறைப்பட்டு இருந்தவள் –
மடக்கு ஓசை கழுத்தில் கட்டி -இன்னார் தூதன் -சுலப ரக்ஷகத்தால் வந்த ஏற்றம் -ஸ்ரேஷ்டம் -சப்த வை லக்ஷண்யம் இல்லை இரண்டும் சம்ஸ்க்ருதம் –
உபய கர்த்தாக்களும் ரிஷிகள் -கிரந்த பாஹுலயத்தால் இல்லை
தூது போனவன் சரித்திரத்தை பகல் விளக்கு படுத்தும் சிறை இருந்த சரித்திரம் பிரபாவம் அர்த்த விசேஷம் அன்றோ –
பிறர் கால் விலங்கு அற- -பிறர் அனர்த்தம் கண்டு -இயற்கையிலே ஸ்த்ரீ -இளகிய நெஞ்சு சார தம்மை -தந்தை காலில் விலங்கு அற வந்தது ஏற்றமோ –
சிறைப்படாமல் நழுவியும் பிறர் அனர்த்தம் கண்டு கால் நகர்ந்து தூது போனதும் ஏற்றமோ – –
கருணை பாரதந்தர்யம் ஸ்வாதந்தர்யம் அடியாக ஏறிட்டு கொண்டவன் நெஞ்சு -பிரபாவம் -ஒக்குமோ
வெஞ்சொல் பொருத்தும் இனிய சொல் சொல்வாரை தேடி ஆற்றாமை கரை புரண்டு -பாரதந்தர்யம் நோக்கி ஸ்வ சக்தியை கைவிட்டு –
சக்திமான் பின்னே தொடர்ந்து நடந்தும் – ஆஸூர பிரக்ருதிகளுக்கு ஹிதம் சொல்லியும்- ததியர் வரக் கண்டு சத்தையைப் பெற்றும் –
தத் ஸ்பர்சம் பெற்று பாடு ஆற்றியும் -ததீயர் விக்ரஹம் மங்களா சாசனம் பண்ணியும் நெருப்பு சுடக்கூடாது என்றதை இப்படி அருளிச் செய்கிறார் –
ததியர் இடம் சல்லாபித்து ஆற்றாமை தாபம் குறைத்தும் -சாபராதம் பண்ணிய ராக்ஷஸிகள் இடமும் கிருபை பொழிந்து
அநந்யார்ஹர்-அநந்ய தைவம் அநந்ய போக்தராயும் – பரம ஆப்தருடைய தன்னேற்றம் -பிந்து ப்ரஸேனம் செய்து அருளுகிறார் -என்பர் ஆய் ஸ்வாமிகள் –
ஸ்ரீ ராமாயணத்துக்கு இதிஹாச ஸ்ரேஷ்டத்வமாவது -வால்மீகயே மகர்ஷயே சந்தி தேச
ஆசனம் தத பிரஹ்மணா சமனுஜ்ஞாதஸ் சோப்யு பாவிசத சனே-என்று சகல லோக பிதாமஹானான
பிரஹ்மாவாலே சம்பாவிதனான-கௌரவிக்கப்பட்ட ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரநீயதம் ஆகையாலும் –
(வியாஸர் எழுதி வருந்தி நாரதர் சொல்லி பாகவதம் எழுத்தாகி சொன்னாரே அங்கு )
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்று –ப்ரஹ்மா அநுக்ரஹிக்கையாலே இதில் சொன்ன
அர்த்தங்களை எல்லாம் மெய்யாக கடவதாகையாலும் —
எம்பெருமான் தானே திரு ஓலக்கம் இருந்து கேட்டு அருளிய பெருமை உண்டே ஸ்ரீ ராமாயணத்தை சாம கானம் போலே உகந்து -உத்தர காண்டம்–
பவிஷ்யத் நடக்கப் போவதை லவகுசர் சொல்ல கேட்டு மகிழ்ந்து -பரம பிரயாணம் -) தாவத் ராமாயண கதா லோகேஷூ பிரசர்ஷயதி -என்று
சகல லோக பரிக்ரஹம் உண்டாகையாலும் -இதிஹாசாந்தரங்களை பற்ற பிரபல பிரமாணமாய் இருக்கை-
இது தன்னை-நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தத்தவத்ரய பிரபந்தத்தில் பிரமாண அதிகாரத்திலே அருளி செய்தார் இறே–இந்த பிரபந்தம் இப்பொழுது கிடைக்க வில்லை –
நம்பிள்ளை லோகான் சத்யத்தால் வென்றான் என்று சொல்லியத்தை கேட்டு இந்த நடுவில் திரு வீதி பிள்ளை அரசனிடம் பரிசு பெற்ற ஐதிக்யம் உண்டே –
இன்னமும் வேத வேத்யே பரே பும்சி-இத்யாதி படியே சர்வச்மாத்பரனான சர்வேஸ்வரன் சம்சாரி சேதன ரஷண அர்த்தமாக
இதர சஜாதீயனாக வந்து அவதரித்தால் போலே -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான வேதமும் -தத் அவதார குண சேஷ்டித
பிரதிபாதன முகேன-தத் ஆச்ரயண ருசியை சம்சாரிகளுக்கு உண்டாக்கி ரஷிக்கைகாக ஸ்ரீ ராமாயண ரூபேண அவதரித்தது என்று
சொல்லப் படுகையாலும் -இதனுடைய ஏற்றம் சம்ப்ரதிபந்தம் –( வேதமே வால்மீகி மூலம் இங்கே ஆவிர்ப்பவிக்க வியாசம் வேதத்தை காவியமாக அன்றோ ஆக்கினார் )
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக -தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி
மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது – அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-
சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே -ஆஸ்ரிதரான தேவர்கள்
உடையஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –
இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் -காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம்
சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –
அநந்தரம் மகாபாரத பிரதிபாத்யத்தை அருளி செய்கிறார் -மகா பாரதத்தால் என்று தொடங்கி –
க்ருஷ்ணத் வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும் கோக்யந்தோ புவி மைத்ரேய மகாபாரத
க்ருத் பவேத் ஏவம் விதம் பாரதந்து ப்ரோக்தம் யேன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபி மகா முனி –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்று பகவத் ஆவேச அவதாரமாய்-சஹோவாச வியாச பாராசர்ய-என்று ஆப்த தமனாக- பிரசித்தமாய்
இருந்துள்ள -ஸ்ரீ வேத வியாச பகவானாலே -வேதான் அத்யாபயாமாச ,மகா பாரத பஞ்சமாத் -என்கிறபடி –
பஞ்சம வேதமாய் -ப்ரணீ தமாய் -அநேக புராண பிரசச்தமாய் இருந்துள்ள மகா பாரதமும் ஸ்ரீ ராமாயணத்தோ பாதி
பிரபல பிரமாணம் –இத்தாலே ஸ்ரீ ராமாயணம் பிரபல தமம் என்றதாயிற்று – –இதுவும் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் தாமே அருளி செய்தார் –
பெரிய பட்டரும் ஸ்ரீ சஹஸ்ரநாமபாஷ்ய உத்போதகத்தில் ஸ்ரீ இராமாயண வந் மகா பாரதம் சரணம் -என்று அருளி செய்தார் இறே
சர்வேஸ்வரன் -என்னாதே -தூது போனவன் -என்றது அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ரத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேவதேவனானவன் தன்பெருமையையும் -செய்கிற தொழிலின் தண்மையையும் -பாராதே –
பாண்டவர்களுக்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்தது-
ப்ரணத பாரதந்த்ர்ய ருசி பரவசனாய் இறே -இது தான் இவனுடைய ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக நீர்மைக்கு
உடலாய் இருந்துள்ள வாத்சல்யாதிகளுக்கு எல்லாம் பிரகாசமாய் இருப்பது ஓன்று இறே –
இந்த குண ஆதிக்யத்திலே ஈடு பட்டு இறே -இன்னார் தூது என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்றும்
குடை மன்னர் இடை நடந்த தூதா –பெரிய திரு மொழி -6-2-9–என்றும் –திரு மங்கை ஆழ்வார் அருளி செய்தது-
அந்த திவ்ய சூக்தி இறே இவர் இப்படி அருளி செய்கைக்கு மூலம் -பேசிற்றே பேசுகை இறே இவர்களுக்கு ஏற்றம் –
தூது போனது தண்மை ஆவது -கர்மவச்யத்தை அடியாக வரிலே இறே –
ஐச்சமாக ஆஸ்ரித விஷயத்தில் செய்கிற தாழ்ச்சி எல்லாம்
ஏற்றத்துக்கு உடலாய் இறே இருப்பது -ஸ உச்ரேயான் பவதி ஜாயமான -என்று-அந்த பரம் பொருள் ஒருவனுக்கு இந்த பெருமை என்றதே –
பரார்தமாக பிறக்கையாலே நிறம் பெரும்- என்று சுருதி சொன்ன இது பரார்தமாக
தன் இச்சையிலே செய்யும் அவை எல்லாம் இவனுக்கு தேஜஸ் கரம் என்னும் அதுக்கு உப லஷணம் இறே –
இவன் செய்த தூத்யத்தை மாந்த்ய ஹேதுவாக நினைப்பார் அறிவு கேடரில் தலை யானவர்கள் இத்தனை –
அறிவில் தலை நின்றவர்கள் -எத்திறம் -என்று மோகிக்கும் படி இறே இருப்பது -இப்படி இருந்துள்ள
இந் நீர்மையின் ஏற்றத்தை -வெளி இடுகைக்காக ஆய்த்து இவர் -தூது போனவன் -என்று அருளி செய்தது –
மகா பாரதம் எல்லாம் இவனுடைய ஏற்றம் சொல்லுகையிலே தாத் பர்யம் ஆகையாலே இறே
மகாபாரத கதை சொல்ல தொடங்குகிறவன் -நாராயண கதாம் இமாம் -என்றது –
ஆக பிரபந்த த்வ்யத்துக்கும் பிரதான பிரதிபாத்யங்கள் என்னது என்னும் இடம் பிரகாசிக்க பட்டது-
—————————–
சூரணை-6-
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –
இரண்டாலும் என்றது ஸ்ரீ ராமாயணத்தையும் ஸ்ரீ மஹா பாரத்தையும் -புருஷகார வைபவம் உபாய வைபவம் இரண்டுமே
முதல் பிரகரணத்தில் உண்டே என்றாலும் முன்னதே பிராசர்யம்
இவ்வேற்றம் இரண்டின் ஊற்றத்தை அருளிச் செய்கிறார் – அபராத பய நிவ்ருத்தி போக்கும் தாயாதி கிருபை தயா வைபவமும் —
சித்த உபாயத்தை தானே அருளிச் செய்து -சுலபத்வாதி-தூது போவதே ஸுலப்யத்தின் காரியமே – மாம் என்று தொட்டுரைத்த சொல் —
ஹார்த்தமாக உள்ளுறைப் பொருளாக -சொல்லிற்று ஆயிற்று –
உபய ப்ருஹ்மண முகேன -வேதார்த்த தாத்பர்யத்தை நிஷ்கரித்து –(வேத தாத்பர்யம் என்று சொல்லாமல் -)-உஜ்ஜீவனதுக்கு உடலான வற்றை
சொல்லுவதாக இறே உபக்ரமித்தது -அதில் இப்போது சொன்ன இவற்றால் வேதாந்தத்தில் எவ் அர்த்தங்கள்
சொல்லிற்று ஆய்த்து -என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிறை இருந்தவள் ஏற்றம்-தூது போனவன் ஏற்றம் -என்ற இவை இரண்டாலும் அபராத பூயிஷ்டரான
சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் -அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக -/ தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-அபராதங்களை பார்த்து சீறி –
ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
-அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –
உபாய பூதனானவன் வைபவமும் சொல்லிற்று ஆய்த்து என்கை-
புருஷகாரம் -என்றும் -உபாயம் -என்றும் -இவற்றை நிரூபகமாக அருளி செய்தது –
பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -அசாதாரணம் என்று தோற்றுகைக்காக-வியாவர்த்தம் -விசேஷம் -இதை தவிர மற்றத்தை நிவர்த்திக்கும் –
பிராட்டிக்கு உபாயத்வமும் அவனுக்கு புருஷகாரத்வமும் இல்லை -வியாவர்த்தகம் -விருத்தி தாது -இதர பேத அனுமதி ஜனகத்வம் – –
உபாயம் என்றால் ஸ்வா தந்தர்யம் வரும் -புருஷகாரமாக பாரதந்தர்யம் வேண்டுமே –
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் -என் திரு உள்ளமும் அதுவே –
வேறே லக்ஷணம் இல்லை -பிராப்தி பூர்வபாவி -புருஷகாரத்வ அவிருத்தமாய் பிராப்தி உபயோகியான அசாதாரண தர்மம் இல்லை என்றவாறு –
அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் -நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே –சாஷாத் ஸ்வயம் உபாயம் -உபாயாந்தரங்கள் உபாயம் ஆகாது லஷ்மியும் இல்லை ஸ்வயம் என்பதால் –
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன
மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன
மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் -அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு -கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
பிரதி நியதி தர்ம த்வயம் -புருஷகாரத்வமும் உபாயத்வமும் –விவஸ்தாபக வாசகம் -/சம்சார அர்ணவ தாரிணி/
பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —
ரஹஸ்ய த்ரயம் -23-/-27–28-பிராட்டிக்கு யுக்தமான உபாயத்வம் பொருந்தாது –
பிள்ளான் முதலிய மத்யஸ்த கிரந்தம் -அரும்பத உரையில் -1776-/ இருபாலாரும் ஏற்றுக் கொண்டு காலக்ஷேப கிரந்தம் /
முனி த்ரயம் பிள்ளான் மட்டும் -அஹோபிலம் ஈடு வாசிப்பார் / அவஸ்ய வக்த்வய ஸ்தலங்களில் பிராட்டிக்கு புருஷகாரத்வம் மட்டுமே சொல்லப்பட்டது -இதிலும் –
பிராட்டி தன் பெருமைகளை குறைத்துக் கொண்டு காரணத்தவம் உபாயத்வம் அவன் இடமே விட்டு இருக்கிறாள் என்பதே தேசிகர் பக்ஷம்
லோகாச்சார்யா வேதாசார்ய சம்ப்ரதாயம் -பெருமாளுக்கு அடுத்து பிராட்டி நிலை இருவரும் –/
பெரியாழ்வார் ஆண்டாளுக்கு மங்களா சாசனம் பத்நித்வ ப்ரயுக்தம் தானே
ப்ரஹ்மம் ஒன்றே த்வித்வம் வரக் கூடாதே -இதில் இருவரும் கொள்கிறார்கள் -யோஜனா பேதமே -மத பேதம் இல்லை —
மற்றை பிராட்டிமாருக்கும் -நிழல் போன்றவர்கள் –சூரிகள் முதலான ததீயருக்கும் இவள் சம்பந்தம் அடியாக வருகிற
புருஷகாரத்வம் இறே உள்ளது -இவளை போலே ச்வதஸ் சித்தம் அன்றே –
ஆகை இறே –
ஏதத் சாபேஷ சம்பந்தா தன்யேஷா மாமலாத்மனாம்
தேவி சூரி குரூ னாஞ்ச கடகத்வம் நது ஸ்வத-என்று தீப சங்கரத்திலே-வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளி செய்தது
உபாயத்வமும் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமாக சொல்லப் படுகிற
அவனுக்கே ச்வதஸ் சித்தமாய் -ததீயருக்கு ததா சித்தி அடியாக வருகிறது இறே உள்ளது –
உபாய அநபேஷா உபாயத்வம் -நித்ய சித்த உபாயம் இவன் ஒருவனே -சனாதத்வம் தர்மத்துக்கு விசேஷணம் –
தர்மமாகிற உபாயத்வம் நித்யம் சித்தம் -சேதனன் யத்னத்தால் இல்லை -அதிருஷ்ட த்வாரக மோக்ஷ பிரதத்வம் –ததீயர்களுக்கு அவன் சம்பந்தத்தால் –
ஆகையாலே பிராட்டிக்கு புருஷகாரத்வமும் -ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் -நிரூபகமாக
தட்டு இல்லை –
இவ் அர்த்தத்தை வெளி இடுகைக்கு ஆய்த்து இவர் இப்படி அருளி செய்தது –
இப்படி உப ப்ரஹ்மணமான பிரபந்த த்வ்யத்தாலும் பிரதி பாதிக்க படுகிற புருஷகாரத்வமும் உபாயத்வமும்
உப ப்ரும்ஹ்யமான வேதாந்தத்தில் உக்தமான ஸ்தலம் எது என்னில்
கடவல்லி உபநிஷத் சித்தமான
த்வயத்தில் பூர்வ வாக்யத்தாலே உபயமும் சேர உக்தம் இறே –
இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம்
உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும் குற்றவாளர்க்கும் கூசாமல்
வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன் அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-
————————————-
சூரணை -7-
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-
உப ஜீவ்ய உப ஜீவக சம்பந்தம் -இவை மூன்றுக்கும் புருஷகாரத்துவத்துக்கும் –சங்கதி –
கார்யகரமாம் போது இவை வேண்டுமே –ஸ்வ தந்த்ர உபாயம் -இச்சா அனுவிதானம் பண்ணி —
அவன் திரு உள்ளம் அனைவரும் தன் திருவடி அடையவே தானே –
தத் அதிசய கரமாய் கொண்டு புருஷகாரமாக இருக்கும் போது -உபய சம்பந்தம் அநாதியாய் இருக்கச் செய்தேயும் –
தத் அனுரூப புருஷகாரமும் அநாதி –
ஆம் போது என்றது – ஸ்வா தந்தர்ய நிருத்தமான காலம் இல்லாமல் கிருபா விசிஷ்ட ஸ்வ தந்தர்யம் கண்டு –
விரோதம் அற்று புருஷீ கரிக்கும் போது என்றவாறு –
பர துக்க அசஹிஷ்ணுத்வ -ரூபையான கிருபையும் / பராதீன பாரதந்தர்யம் -பகவானே பிரதானம் பிரயோஜனம் -/
அந்நிய யோக்யதா ராஹித்யமான அநந்யார்ஹத்வம் /
பெருமாளுக்கும் இவை மூன்றும் உண்டு ஆச்ரித பாரதந்தர்யன் -ந தே ரூபம் பக்தருக்காக -உபாயமாகவும் இம் மூன்றும் வேண்டும்
ஸ்வ தந்தர்ய வஸ்துவுடைய கிருபை -நிரபேஷம்-மதில் மேல் பூனை /
சர்வ சாதாரணமான பாரதந்தர்யம் -சமுத்திர ராஜன் இடம் கூட சரண் அடைந்தார்
மஹா பாலி இடம் கை நீட்டி -நம்ப முடியாதே
அடியார்களுக்கே இருந்தாலும் -அநந்ய அர்ஹமான சர்வஞ்ஞத்வமும் சர்வ சக்திதவமும் உண்டே /
மூன்றும் பகல் விளக்கு பட்டு இருக்கும் –
அன்யோன்ய சா பேஷம் இம் மூன்றும் இவளுக்கு –கடகத்வத்துக்கு -அபேக்ஷிதம் –
பாரதந்தர்ய அநந்யார்ஹத்வம் -பெருமாளை குறித்து / கிருபை நமக்கு -/
பராதீனம் பரார்த்தமாய் இருக்கும்
அநந்தரம் புருஷகாரத்தின் படிகளை விஸ்தரேன உபபாதிக்க கோலி-
பிரதமத்திலே புருஷகாரத்வதுக்கு அவஸ்ய அபேஷித குணங்களை அருளி செய்கிறார் –
புருஷகாரம் ஆம் போது என்றது புருஷகாரம் ஆம் இடத்தில் என்ற படி –
க்ருபையாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் – / துக்கித்துவமா -பொறுக்க முடியாமத்தா -போக்க முயலுவதா —
தானும் துன்பப்படுவதே மிக உயர்ந்தது -/
இது குறை இல்லை -கர்மத்தால் அல்ல கிருபையால் தானே /ச ஏகாகீ ந ரமேத -வாடி அங்கு அவனுக்கு —
குண பெருமை தானே இதுவும் அவனுக்கு /
பாரதந்த்ர்யமாவது பார அதீனத்வம் –அவனுக்கு வசப்பட்டு இருக்கை
அனந்யார்ஹத்வமாவது-தத் வ்யதிரிக்த விஷய அனர்ஹத்வம் —
இவை புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் ஆனபடி என் என்னில் –
சேதனர் சம்சாரத்தில் படுகிற துக்கம் கண்டு பொறுக்க மாட்டாமல் -ஈச்வரனோடே இவர்களை
சேர்க்கைக்கு உடலான யத்னம் பண்ணுகைக்கு கிருபை வேணும் —ஸ்வரூப உபயுக்தம் கிருபை என்றபடி –
ஸ்வதந்த்ரனை வசீகரிக்கும் போது அனுவர்த்தனத்தாலே வசீகரிக்க வேண்டுகையாலே–பாரதந்த்ர்யம் வேணும்
அவனுக்கு பிடித்ததையே செய்து -அவனை வசீகரித்து –தான் நினைத்த படி பெருமாளை செய்ய வைப்பது இல்லை -பாரதந்தர்யம் குலையுமே –
அவன் இச்சைப்படி அவனை நடக்க வைப்பதே -தடுப்பை நீக்கி -சம்சாரி சேதனன் அனைவரையும் தன் தாளிணை கீழ் சேர்ப்பதே அவன் இச்சை —
-நம்மை ஒழிந்த ஒரு விஷயத்துக்கு அர்ஹ்ம் இன்றியே நமக்கே
அதிசயகரமாய் இருக்கும் வஸ்து ஆகையாலே நம் கார்யம் அன்றோ சொல்கிறது என்று -பிராட்டி
சொன்னபடி அவன் செய்கைக்கு உறுப்பாகையாலே-அனந்யார்ஹத்வம் வேணும் –அந்நிய அர்ஹம் படாமல் -என்றவாறு –
ஆகையிலே இறே மூன்றும் புருஷகாரத்துக்கு அவஸ்ய அபேஷிதம் இறே –
ஈஸ்வர கிருபையில் காட்டில் இவள் கிருபைக்கு விசேஷம் என் என்னில் -ஈச்வரனாவன் நிரங்குச -ஸ்வ தந்த்ரனானவன் -நிக்ரஹ அனுக்ரஹங்கள்
இரண்டுக்கும் கடவனாய் -சேதனர் கர்மங்களை நிறுத்து அறுத்து-தீத்துமவன் ஆகையாலே –
அவனுடைய கிருபை ஸ்வாதந்த்ர்யத்தால் அமுக்கு உண்டு கிடந்தது -ஒரோ தசைகளிலே தலை எடுக்க கடவதாய் இருக்கும் –
இவள் அனுக்ரஹ ஏக சீலை ஆகையாலே-அனுக்ரஹ ஏக சீலம் -அனுக்ரஹம் -மட்டுமே இருக்கும் -எப்பொழுதும் வரும் -என்றவாறு
இவளுடைய கிருபைக்கு வேறு ஒன்றால் ஓர்அநபிபவம் இல்லாமையாலே -எப்போதும் ஒருபடிபட்டு இருக்கும் –
ஆகையால் இவளுடைய கிருபை கரை அழித்து இருக்கும் –
சம்பந்தத்தில் வியாவ்ருத்தி போலே ஆய்த்து கிருபையில் வியாவ்ருத்தியும் —
பிதா மாதா -/ அன்னையாய் அத்தனையாய் என்பான் என்னில் -ஏறிட்டுக் கொண்ட மாத்ருத்வம் குறையே -/
ஆழ்வாருடைய நாயகி பாவத்துக்கு இந்த குறை இல்லை -ஆத்மசித்த ஸ்த்ரீத்வம் உண்டே மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
இப்படி இருக்கையாலே இறே இவளை ஆஸ்ரயிப்பார்க்கு வேறு ஒரு புருஷகாரம்-வேண்டாது ஒழிகிறது-
ஈஸ்வர விஷயத்தில் இவளுடைய பாரதந்த்ர்ய அனந்யார்ஹத்வங்களும்
1–ஸ்வரூப பிரயுக்தமான மாத்ரம் அன்றிக்கே– -ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் –
விஷ்ணு பத்நீ -என்றும் சொல்லுகிற-
2- பத்நீத்வ பிரயுக்தமாயும் -அஹந்தா பிராமணாஸ் தஸ்ய சாகமச்மி சனாதநீ-என்றும்
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -மண்டோதரி சதுஸ் ஸ்லோகி –என்றும் சொல்லுகிறபடியே
-3-பகவத் –ஸ்வரூப நிரூபகத்வாதி– சித்தமான அனந்யத்வ பிரயுக்தமாயும் இருக்கும்-
பிரிந்து இருக்கும் தன்மை இல்லையே -அநந்யா ராகவத்வ -போலே —
பெருமாளுடைய ஸ்வரூபம் இவளால் நிரூபிதம்- இத்தால் பூமி நீளா தேவி வியாவ்ருத்தம்/
இப்படி மூன்றும் உண்டே –ஸ்வரூப -பத்நீத்வ -பகவத் ஸ்வரூப நிரூபக அந்நயத்வம் -மூன்றும் –
இப்படி இருக்கையாலே இறே அல்லாதார்க்கு அடைய மிதுன சேஷத்வமும் -இவள் ஒருத்திக்கும் ததேக சேஷத்வமுமாய் ஆய்த்து –
இந்த அவ்யவதா நேன வுண்டான- நேராக இடையில் யாரும் வேண்டாத சாஷாத் –சம்பந்தத்தால் இறே இவளுக்கு
ஈஸ்வரனை வசீகரிக்கும்-அளவில் புருஷகாரம் வேண்டாது ஒழிகிறது –
இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங் சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் -ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –
—————————————
சூரணை-8-
பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –
இந்த க்ருபாதி த்ரயத்தையும் – (எல்லாரும் அறியும் படி –பிரதிகூலரான ராக்ஷஸிகளும் அறியும் படி கிருபை –
ரிஷிகள் எல்லாரும் அறியும் படி இரண்டாம் பிரிவு பாரதந்தர்யம்– விச்வாஸம் வர வேண்டுமே )-தானே வெளி இட்டு அருளின வைபவத்தை-
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –
மது ப்ரத்யயம் -சொல்லி விஸ்லேஷம் -த்ரயம் உபபன்னம் எங்கனே -ஸ்வரூபம்- திரு மார்பில்-அக்ஷரத்தில் எல்லாம் நித்ய யோகம் /
அவதாரத்தில் வந்த பிரிவு -பாவனா மாத்ரமோ என்னில் -நாடகமோ என்னில் -கதை என்றால் விச்வாஸம் வராதே -என்னில் விஸ்லேஷம் உண்டு –
புல்கிக் கிடந்தேன்-என்நீர்மை கண்டு இரங்கி -கண்டால் எதற்கு இரங்க வேண்டும் கேட்டு இருக்க வேண்டும் தமிழன் சொல்ல –
அணைப்பை திடப்படுத்த -அந்த விஸ்லேஷம் -திட ஆலிங்கனாதி -ஸூ இச்சையால் வந்த அவதார விஸ்லேஷம் -நெகிழ்த்த இடத்தில் போலே
அவதார விக்ரஹ மாத்திரத்தில் -விஷ சஸ்திரங்கள் தேடும் படி படாத பாடு பட்டாள்–
முடிந்து பிழைக்க முடியாது- பிழைத்து முடித்துக் கொள்வேன்- பாரதந்தர்யம் காட்டி -ஸ்த்ரீத்வம் -இரண்டாவது பிரிவு –
வராஹ பெருமாள் தானே பிராட்டி திருவடியைப் பற்றி வர வேண்டும் நேராக காட்டி அருள –
பெருமாள் அநந்யார்ஹத்வம் காட்ட அன்றோ மூன்றாம் பிரிவு –
நான் கண்ட நல்லது என்று அன்றோ இதனாலே ஆழ்வார் அருளிச் செய்தார் –
நித்ய அநபாயினி –நலிந்து போன ராக்ஷஸிகளை -செருக்கனான திருவடியுடன் மன்றாடி –
குற்றமே நற்றமாக நோக்கின படியால் -ரஷித்த படியால் –
கிருபையை ஸூ அபராத பீதர் எல்லாரும் அறியும்படி
ராகவன் வம்சம் -அழிக்க கூடாதே கை விட்ட பெருமாள் நினைவை பின் சென்று-அவரை விட்டு தான் உயிருடன் இருந்தமையால் – -பாரதந்த்ரம் –
கடியன் கொடியன் –ஆகிலும் கொடிய வன் நெஞ்சம் அவன் என்றே கிடக்குமே –துஸ் ஸூ தந்த்ரனும் அறியும் படி -இளைய பெருமாளை
அஸ்வமேத யாகம் –பெருமாள் திரு முன்பே பிறந்தகத்தே புக்கு அனந்தரம் பிரிந்தது -பூமியில் இருந்து பிறந்தவள்தானே
-ஸூர்யன் ஓளி விட்டு இல்லாதப் பாதி அன்யரும் அருகில் உள்ளாறும் அறியும் படி பிரிந்து காட்டி –
புருஷகாரமாக பற்ற ருசி வளருகைக்காக அன்றோ இம் மூன்றும் –
பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே –ராகவத்வேபவத் சீதா -என்கிறபடியே —
கர்ப்ப வாசம் இல்லாமல் -ஒரு நூல் உயர்ந்து –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே-பிடித்த திரு நாமம் ராமருக்கும் மேலே இதே போலே
சீதைக்கும் – தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி- -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே -பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று —
பிருகு மகரிஷி சாபம் காரணம் இந்த முதல் பிரிவு லிங்க புராணம் சொல்லுமே
தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை –
பரமம் -மேம்பட்டது இல்லை -அவன் கிருபையை இவள் கிளப்பி விட வேண்டும்
இவள் கிருபைக்கு வேறே ஒன்றும் வேண்டாமே -எங்கனே என்னில் —
(காருண்யமே ரூபமாக -பெருமாள் காருண்யம் கிளறி- பெருமாள் காருண்யமே வடிவு என்று சொல்லும் படி மூன்றும் உண்டே )
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-
நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது -மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி
திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –1000-வயசில் கர்ப்பம் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனாநி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாத மூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யேக ராத்ரம் காகுத்ச்த வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய -சரம பர்வ நிஷ்டை -ஆச்சார்யர்கள் உடன் கூடி இருக்க –
ஆக ஆச்சார்ய அபிமானம் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டது –
கீழே ராமனை விட்டு பிரிந்தால் நரகம் என்றவள் இங்கு இப்படி அருளிச் செய்கிறாள்
அத்தை பற்ற போக விடுவாரை போலே -லோக அபவாத பரிகார்த்தமாக -சர்வேஸ்வரனுக்கும் லோக பரிகாரம் உண்டே –
பெருமாள் காட்டிலே போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடைய பத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-
கீழே ஸ்வரூப பிரயுக்தம் -கிருபையைக் காட்டியது இங்கு பத்நீத்வ ப்ரயுக்தம்
கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே பெருமாள் நினைவை பின் சென்று தன் பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –பெருமாள் நினைவு லோக அபவாதம் போக்குவதே –
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத் பார்த்து கார்யம் விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே-பிராணனை விட பார்த்தா திரு உள்ளம் –
லோக அபவாதம் இவள் முடிந்தால் வரும் -அலாப்ய லாபம் பிள்ளை பெற்றால் என்றானே இவை இரண்டும் அவன் அபிப்ராயம் –
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே-
-அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான–பெருமாளுக்கும் பிராட்டிக்கு -பிரமாணத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு என்றுமாம் –
தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்
பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து-கேசன் மூத்தவர் என்பதால் நம் ஆச்சார்யர்கள் குசலவர்கள் என்றே அருளிச் செய்வார்கள் –
ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசேஷஞ்ஞர் –சங்கீத ஞானம் ரசம் அறிந்தவர்கள் என்றபடி – எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே -அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில்–ஆத்மா சாக்ஷியாக சுத்தி என்றபடி -மக்களுக்கு அறியும் படி என்றுமாம் –
இது தான் பெருமாள் மநோ ரதம்-என்று அறிந்து செய்வதே பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் -ஆத்மாவை சேஷம் என்றே
மணத்தையும் ஒளியையும் பிரியாத பூவையும் மாணிக்கம் போலே இருக்க வேண்டுமே – கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன் சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட -அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே – சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசிநீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே-
பெருமாளை பிரிந்து கஷாய வஸ்திரம் கொண்டு இருந்தாள் அன்றோ –
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –
யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி-பூமா தேவி இடை வெளி கொடு -ராமனை மனசாலும் முக்கரணங்களாலும் மட்டுமே அறிவேன் –
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –
ச பந்த்யாம்- சபதம் உண்மை ஆக்ரோஷம் இரண்டும் -இல்லாமல் உண்மை மட்டும் என்றபடி
ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை நா மாசனே சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று
அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க -ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது
என்கையாலே -இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறேஆக –
இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-இங்கன் அன்றாகில் -அநபாயிநியாய்-அகர்மவச்யையாய் –
யதா சர்வ கதா விஷ்ணு இவளும் -அவன் விபு -பத்தினியான படியால் பிரியமாட்டாள் அதனால் இவளும் என்றவாறு
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —
தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் -புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று
பட்டர் அருளி செய்தது -இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –
சாஸ்த்ரங்களில் கேட்கிற மாத்திரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-
ஸ்ரவண மனன அனுஷ்டானம் மூன்றும் நமக்கும் வேண்டுமே –
வாரீர் நிருபாதிக -சர்வ காம பிரதத்வ உபாயமான பெருமாளையும் சித்த உபாய பிரதத்வ ரூப உதாரம்
கருணா சீலத்தவம் ஆச்ரித தோஷத்தை குணமாக கொள்ளும் வாத்சல்யம் –
வெள்ளோட்டம் போலே சீதா அவதாரம் பெரிய பிராட்டியார் இடம் இன்றும் காணலாம் -அப்யாஸம் அங்கு –
———————————————-
சூரணை-9-
சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும்
புருஷகாரத்வம் தோற்றும் –
இளைய பெருமாள் காகாசூரன் ராவணன் ராக்ஷஸி -நால்வர் பக்கலிலும் காணலாம்
புருஷகாரத்வம் – பகவத் க்ஷமையை கிளப்பி விடுதல் மட்டும் இல்லையே -புருஷகாரத்வம் அவளுக்கு ஸ்வரூபம் தானே –
உபதேசித்து ஆஸ்ரியரை ஸம்ஸலேஷிக்க செய்தல் மட்டுமே இல்லையே –
ஸத்யஸங்கல்பனை நினைக்க விட கூடாதே -நினைத்தாலே அது கார்யகரம் ஆகுமே –
ஏவம் பூத குண விசிஷ்டை யான இவளுடைய புருஷகாரத்வம் தோற்றுவது எங்கே -என்ன
அருளி செய்கிறார் மேல் –
புருஷகாரத்வம் ஆவது கடகத்வம்–
அது இவளுக்கு அவனோடு கூடி இருக்கும் தசையிலும் -நீங்கி இருக்கும் தசையிலும் பிரகாசிக்கும் என்கை–
கடகத்வம்- ஆவது இருக்கும் எண்ணங்களை தூண்டி தடங்கலை விலக்கி -அதாவது
சேதன ஈஸ்வர விஷயங்கள் -யோகார்த்த அர்த்தங்களில் -பிரபத்ரு பிரபத்ருத்வய பாவம் -க்ஷமிக்கத்தக்கவன் ஷமிப்பவன் –
அந்நிய தர ரூப கடனா –இருக்கும் சம்பந்தத்தை வழிப்படுத்திக் கொடுத்தல் –
கடி மா மலர் பாவையோடு ஓக்க சாம்ய ஷட்கம் –பிரதிசம்பந்திதயா-இருவருக்கும் உண்டே –
ஸம்ஸ்லேஷ தசையில் போல் விஸ்லேஷ திசையிலும் தோற்றுமோ என்னில் –தோற்றும் -என்று ஆய் ஸ்வாமி அவதாரிகை –
இரண்டிலும் -துல்யமாக மா முனிகள் -இவர் அதில் போலே இதிலும் -தோற்றும் என்கிறார் -மாழை மான் மட நோக்கி -தமேவம் சரணம் –
லக்ஷ்மணன் குகன் காகாசுரன் -மூவரையும் கூட்டி -அருளுகிறார் இவர் –
குகன் சரணாகதி அடைந்தானோ என்னில் -ஏழை –என்னாது இரங்கி -பெருமாள் திரு உள்ளத்தில் நினைக்காமல் -இரங்கி /
குகன் சொல்லாமல் இருந்த போதும் -என்ற அர்த்தத்தில் சரணாகதி பண்ண வில்லை
பேச்சு சரணாகதி பண்ணினானோ இல்லையோ -எப்படி இருந்தாலும் அவளது புருஷகாரத்வம் -அவள் நோக்கினதே -காரணம் பெருமாள் உபாயமாவதற்கு –
ராக்ஷஸி குசலவ பூமிகளுக்கு -மூன்றையும் காட்டி அருளுகிறார் இவர் -அஸ்வமேத யாகம் குதிரை விருத்தாந்தம் குசலவ -விஸ்லேஷ தசையில்
விஸ்லேஷ தசையில் சேதனருடைய சித்தத்தில் உள்ள அழுக்கை போக்கி புருஷகாரம் செய்து அருளுகிறாள் –
சம்ச்லேஷ தசையிலே -இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது-
பெருமாள் நிறுத்தி போவதாக தேடின அளவில் —
விசேஷ விதி -சீதை உன்னை தவிர மற்று ஒன்றால் சுவர்க்கமும் வேண்டாம் -லஷ்மணனை கூட்டிப்போவதாக இல்லை அர்த்தாத சித்தம் –
இலஷ்மணன் சோகத்துடன் நின்றான் என்று இருப்பதாலும் –
என்னைக்கூட கொண்டு போக வேண்டும் என்று
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசா தியசா ராகவஞ்ச மகா வ்ரதம்-என்கிறபடி-வாசிக சரணாகதி பிராட்டி இடம்
பெருமாள் இடம் காயிகமாக சரணாகதி –என்றபடி -சரணம் புகுகிற அளவிலும் –சோகம் தாங்காமல் மநோ வியாபாரமும் உண்டே –
பஞ்சவடியிலே எழுந்து அருளின போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு பிரதேசத்தை
பார்த்து பர்ண சாலையை சமையும் என்று பெருமாள் அருளி செய்ய –
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் –பிரபல தம விரோதி நமஸ் இது -பரத ஆழ்வானுக்கு திருமந்திர நமஸ் கைகேயி ராஜன் என்றதும் –
காட்டில் உள்ளவனுக்கும் கட்டில் உள்ளவனுக்கும் ஆபத்து வந்ததே –
ஏவ முக்தஸ்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி
சீதா சமஷம் காகுத்ஸ்தமிதம் வசன மப்ரவீத்
ப்ரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதா மிதமாம் வத-என்கிறபடியே
தம்முடைய பாரதந்த்ர்யத்தை பெறுகைக்காக கையும் அஞ்சலியுமாய் நின்று அபேஷிக்கிற அளவிலும் –
சீதையை நோக்கி கையைக் கூப்பி -புருஷகாரமாக –
பெருமாளை நோக்கி பேசவுபாயமாக பற்றி -ஞாத்ருத்வம் தாஸ்யம் புரிந்து ஸூ பிரயோஜன நிவ்ருத்தனாகி —
உபாய பிரார்த்தனை —பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு
தம் அபேஷிதம் பெறுகையாலும்–
ஆசூர பிரக்ருதியான ஜெயந்தன் காக ரூபத்தை கொண்டு வந்து ஜனனி பக்கல் அக்ருத்ய ப்ரவர்தனாக —
அஸஹ்யா அபசாரம் -என்ன என்று சொல்ல நா கூசும் –
க க்ரீடதி சரோஷேன பஞ்ச வக்த்ரென போகினா -என்று பெருமாள் அவன் மேல் சீறி தலையை
அறுப்பதாக ப்ரஹ்மாச்த்ரத்தை பிரயோக்கிக்க -ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன்லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத —என்கிறபடியே எங்கும் சுற்றி திரிந்த இடத்திலும்
ஒரு புகலிடம் இல்லாமையாலே போக்கற்று சரணம் புக –
ச தம் நிபதிதம் பூமவ் சரண்யச் சரணாகதம் வதார்ஹமபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -என்றும் –
புரத பதிதம் தேவீ தரண்யாம் வாயசம் ததா தச்சிர
பாதயோஸ் தஸ்ய யோஜயாமாச ஜாநகீ தமுத்தாப்ய கரெனோத
க்ருபாபீயுஷூ சாகர ரரஷா ராமோ குணவான் வாயசம் தயையை ஷத்-என்றும்
ஸ்ரீ இராமாயண பாத்ம புராணங்களிலே சொல்லுகிறபடியே இவள்
புருஷகாரமாக பெருமாள் ரஷிக்கையாலும் —மாம்ச விருப்பம் காக்கை ரூபம் -காமம் ஆசையுடன் வந்தான் என்றால் –
தேவன்-செய்த அபசாரம் – என்றால் உடனே தண்டனை கிடைத்து இருக்குமே /
சரணாகதம் -வால்மீகி சொன்னாலும்– யுக்தி உண்டு என்பாரும் உண்டு –
கையால் ஆகாத தன்மையை வெளியிட்டால் சரணாகதனாக திரு உள்ளம் கொள்வான்
ராக்ஷஸிகள் கடைசி வரை சரணம் பண்ணாமல் கடைசி வரை ஹிம்சை பண்ணி கொண்டே இருந்தார்கள்
பாத்ம புராணம் –பாதத்துடன் தலையை சேர்த்து -கடகத்தவம்-குணவானான ராமன் ரக்ஷித்தான் பிராட்டி புருஷகார பலத்தால் –
விஸ்லேஷ தசையிலே
இஹசந்தோ நவா சந்தி சதோவா நானுவர்த்த சே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஷிதா -இத்யாதியாலே
விபரீத புத்தியான ராவணனை பெருமாள் திரு அடிகளிலே சேர்க்கைக்கு விரகு பார்க்கையாலும் —உபாய உபாயத்வமே புருஷகாரத்வம் –
ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –
உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ் சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –
அவ்விடத்தில் புருஷீகரித்தமை எங்கனே என்னில் —உபாயத்வம் ஆகாதோ –
பலாத்காரித்து மற்றவரை சமாதானப்பட வேண்டி இல்லாமல் செய்வதே உபாயத்வம் –
ரக்ஷகத்வம் -சுக்ரீவன் தடுத்த போது பிசாசோ கந்தர்வரோ விறல் நுனியால் வெல்வேன் என்றாரே பெருமாள் –
மித்ரா பாவேந -வந்தாலும் நான் கைக் கொள்வேன் என்றாரே
பலாத்காரத்தால் அன்றிக்கே அநு சாரத்தாலே அபராதங்களை பொறுக்கையாலே
புருஷகாரத்வம் என்கிறது —பெருமாள் பொறுப்பிக்க மாட்டாரே –
மன்றாடி -பராதீனமாக செய்தார்கள் -தன்னுடைய பாக்ய ஹானி -அவர்களை குற்றம் சொல்லாதே –
ரஷிக்காமல் இருக்க முடியாதே என்று தன்னுடைய ஸ்வரூபம் சொல்லி –
கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —
ஆகையால் இரண்டு தசையிலும் இவள் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்தை
சொல்லுகிற இவ் வாக்யத்திலும் கூட்டக் குறை இல்லை-
———————————————–
சூரணை-10-
ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –
அங்கீகார அபிமுகன் ஆக்கியும் – ஆஸ்ரித அபிமுகன் ஆக்குகையும் –
ஈஸ்வரனை திருத்துகையாவது -அபராதத்தையே பார்த்து -ஷிபாமி-ந ஷமாமி -என்று
இருக்கும் இருப்பை குலைத்து அங்கீகார உந்முகன் ஆக்குகை–பரம சேதனனை என்னாமல் ஈஸ்வரனை என்றது
ஸ்வதந்த்ரன் -அதனாலே கோபிப்பாரே -ஆஸ்ரித பரதந்த்ரன் என்று சொல்லி திருத்துகிறாள்
சேதனனை திருத்துகையாவது -அக்ருத்ய கரணாதி சீலனாய் –ஆதி சப்தத்தால் கிருத்ய அகரணமும் சொல்லி -பகவத் விமுகனாய் -திரிகிற
ஆகாரத்தை குலைத்து ஆஸ்ரேயன உந்முகன் ஆக்குகை –சேதனன்-ஞானம் உள்ளவன் ஸ்வ தந்த்ரன் என்ற தப்பாக நினைத்து –
சேஷத்வ ஞானம் அடியேன் உள்ளான் -பாரதந்த்ரம் நினைவூட்டி திருத்துகிறாள்
சம்ச்லேஷ தசையில் இளைய பெருமாளுக்காக ஈஸ்வர விஷயத்திலும் –
விஸ்லேஷ தசையில் ராஷசிகளுக்கு திருவடி விஷயத்திலும் புருஷி கரித்தமை
உபய தசையிலும் புருஷகாரத்வம் தோற்றும் என்கிற மாத்ரத்துக்கு கூட்டி கொள்ளலாய்
இருந்தது ஆகிலும் -பிரகரண அர்த்தம்- – சம்சாரி சேதனனையும் ஈஸ்வரனையும் சேர விடுகையாலே
இவ் வாக்யத்துக்கு இப்படியே அர்த்தமாக கடவது —
இளைய பெருமாள் சர்வேஸ்வரன் விஷயம் பொருந்தும் -சேதனன் திருவடி -என்பது எப்படி பொருந்தும் –என்கிற சங்கைக்கு —
ஆகையால் ஈஸ்வரனுடன் தான் கூடி இருக்கும் தசையில் சேதனன் ஆச்ரயண உன்முகனாய் வந்து
இருக்க செய்தே -பூர்வ அபராதத்தை பார்த்து ஈஸ்வரன் அங்கீகரியாது இருக்கும் அளவில் –
அவன் ச்வாதந்த்ர்யத்தை தவிர்த்து –
க்ருபாதி குணங்களை கிளப்பி –
இவனை அங்கீகரிக்கும் படி ஆக்குகையும் –
பிரிந்து இருக்கும் தசையில் –
ஈஸ்வரன் அங்கீகார உன்முகனாய் வந்து இருக்க செய்தே -இச் சேதனன்
கர்ம அநு குணமாக விமுகனாய் இருக்கும் அளவில் –
இவன் வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைப்பித்து
ஆச்ரயண உந்முகன் ஆக்குகையும்
இவள் இரண்டு தலையையும்– திருத்துகை ஆவது –
ஆக இப்படி-
அங்கீகார விரோதியான ச்வாதந்த்ர்யத்தை மாற்றி -அங்கீகாரத்துக்கு உடலான
க்ருபாதிகளை உத்பவிக்கையாலும் –
ஆச்ரயண விரோதியான வைமுக்யத்தை மாற்றி -ஆச்ரயண ருச்யாதிகளை
ஜனிப்பிக்கையாலும் —
ஹிம்சாயாம் -என்கிற தாதுவிலும்
ஸ்ரு விஸ்தாரே-என்கிற தாதுவிலும்
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்திலும் ஸ்ருனாதி ஸ்ரூனாதி -என்கிற வ்யத்பத்தி த்வய அர்த்தமும்–
தோஷத்தை போக்கி குணத்தை பெருக்குகிறாள் என்றவாறு –
இவ் இடத்திலே தோற்றுகிறது
ஸ்ருனாதி நிகிலான் தோஷான் ஸ்ருனாதி ச குணைர் ஜகத் -என்று
இவ் உத்பத்தி த்வ்யமும் சேதன பரமாக தோற்றிற்றே ஆகிலும் –
ஈஸ்வரனை திருத்தும் -என்கிற இடத்திலும் இந்த நியாயம் தோற்றுகையாலும் –
இப்படி சொல்ல குறை இல்லை/ ஸ்வா தந்தர்யம் அவனுக்கு தோஷம் –
ஜகத் சப்தம் அவனையும் குறிக்கும் -ஆக இருவர் இடத்திலும் பொருந்தும் –
இருவர் இடமும் வியாபரிக்கிறாள் —விருப்பப்பட்ட கார்ய விரோதிகள் இருவர் இடமும் உள்ளதே –
கர்மம் இங்கும் ஸ்வா தந்தர்யம் அங்கும் –
தோஷம் நிவ்ருத்தி பூர்வக -குணம் ஏற்படுத்தி -கர்மம் போக்கி ருசியை கொடுத்து இங்கு –
ஸ்வாதந்தர்யம் போக்கி கிருபாதிகளை கிளப்பி -அங்கு /
கூட்டம் கலக்கி செல்வர் விரோதி என்றால் போலே -இவள் விருப்பத்துக்கு விரோதி என்றவாறு –
அந்நிய தர இரண்டில் ஓன்று/ அந்நிய தம பலரில் ஓன்று /-ஈஸ்வர சம்சாரி -இருவரும் சேதனர்/
கர்த்தா கர்மா -அங்கீகாரம் கர்த்தாவுடைய கர்மம்
அங்கீகார -ஆச்ரயண -அந்நிய தர -விரோதி -ஸ்வா தந்தர்ய வைமுக்யம் அன்யதர நிவேதன பூர்வகம் –
கிருபை ருசி கிளப்பி -இருவர் இடமும் புருஷகாரம் –
கொடுப்பதால் அவன் புருஷன் அவனை நோக்கி நடப்பதால் இவன் புருஷன் –
இதுவே அங்கீகாரம் -ஆஸ்ரயணம்-என்கிற சப்தத்தால் அருளிச் செய்கிறார் –
இதுவே இரண்டு தலையும் திருத்துகை -தசை -சம்ச்லேஷத்தின் பொழுது அவனை / விஸ்லேஷத்தில் இவனை -இதுக்குத் தானே
தனிக் கோயில் நாச்சியார் திரு மார்பு நாச்சியார் உபய நாச்சிமார் -இப்படி கஷ்டமான நிர்வசனம் புருஷகாரத்துக்கு
பலம் கொடுக்க சேதன நிஷ்ட அபிகந்த்வ்ய -நாம் அபீகமானம் பண்ண – -ஆக்குவதும் உபாயமே புருஷகாரம் என்றால் என்ன -லகு நிர்தேசம் –
ஜீவாத்மா பற்றி இல்லாமல் -உபாயத்வம் மட்டும் என்றால் குணங்களுக்கும் சேரும்
புருஷகார த்வய ஸ் தா ஸ்ரீ சப்த உத்பத்தி -இரண்டும் ஹிம்சிக்கிறாள் சேர்த்து வைக்கிறாள் –
நிகில தோஷங்களையும் போக்க இருவரையும் சொல்ல வேண்டுமே —
புருஷகார வ்யுத்பத்தி த்வயம் -இருவரையும் சொல்ல வேண்டுமே –
அபேக்ஷித்தமாயும் -இருவருக்கும் உண்டே -ருசி விளைந்தே மோக்ஷம் -அர்த்தித்தே பெற வேண்டும்
அசங்கோசமான நியாயம் -இருவர் இடமும் பொருந்தும் -ஆகையால் இருவரையும் குறித்தே புருஷகாரம் –
—————————————————
-சூரணை -11
இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –
இருவரையும் திருத்துவது எவ் வழியாலே என்னும் ஆகாங்க்ஷையிலே அருளி செய்கிறார் –
அஞ்ஞாதம் ஞாபனத்தால் அறியாததை அறிவித்த அத்தா போலே தெரியாததை தெரிய வைப்பதே –
கண் பார்வையே போதும் அவனுக்கு –
தத் தத் உசித உபதேசத்தால் திருத்துகிறாள் –உனக்கு வேண்டிய நம் பெருமாள் நல்லவர் —
பிதா போலே ஹிதத்தில் ஆசை கொண்டவர் கோபம் ஏற்படலாம் –
கோபத்தை உசித உபாயத்தால் அடக்கி -சாஸ்திரம் கிருபை இரண்டும் குலையாமல் இருக்க வழி சொல்லி –
சாஸ்திரம் விமுகர் -கிருபை அவிமுகர் பக்கல் –
ஆனுகூல்ய லேசம்-கூட வேண்டாம் ப்ராதிகூல்யம் போனாலும் போதும் தர்மம் சூஷ்மம் அறிந்தவர் –
குற்றம் நற்றமாக கொள்ளும் ஞால நாதன் –
செருக்கு உள்ளவன் என்பதால் கை கொடுக்கச் சொல்லி உபதேசம் –
ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —
ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –
பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-
தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம் த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப் பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி
இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
-1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
-4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –
விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று
-1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
-2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
-4–நான் பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —
மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
-அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம் இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே ஸ்ரூ ஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில் ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்
அதவா விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –
ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –
—————————————
சூரணை-12-
உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –
இவ் உபதேசத்தால் இரண்டு தலையிலும் பலிக்கும் அது என்ன -அருளி செய்கிறார் –
கர்த்தாவானவன் கர்மா பலம் அனுபவிக்க வேண்டாவோ என்று கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்திரத்தை ஏற்றி –
மேல் நழுவுகிற ஈஸ்வரனுடைய கர்ம பாரதந்தர்யம் –
கர்மம் என்று ஓன்று உண்டோ -தேவரீர் கற்பித்தது அன்றோ -புண்யம் பாபம் எது எது நீர் தானே சொன்னீர் –
நின்றனர் –அனைத்தும் தேவரீர் அதீனமே-
அசேதனம் இதுக்கு -ப்ரேரகரே நீர் பல பிரதரும் நீரே மூச்சற்ற கருமத்துக்கு ஒரு ஸ்வாதந்தர்யம் கற்பித்து
பரதந்த்ர ஆத்மவஸ்துவை விட்டால் -பழி உம்மது அன்றோ-
கிருபா பரதந்த்ரராக ஆக வேண்டாமோ -/ இவனை அவனைப் பற்ற வைத்து மோக்ஷயிஷ்யாமி சொல்ல வைக்கிறாள் –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து அலைகிற சம்சாரி சேதனனுடைய -ஞாத்ருத்வ நிபந்தமான கர்த்ருத்வமும் பகவத் அதீனமாய்-
அவன் தூண்ட தானே செயல் படுகிறாய் –
கர்மங்களுக்கு ஸ்வாதந்தர்ய கந்தமும் இல்லை அவனுடைய போக ரசத்துக்கு உறுப்பாய் உஜ்ஜீவி -போக்யம் என்று புரிந்து – இப்படி உபதேசம்
அதாவது –
எப்படி இரண்டு தலைக்கும் தத் தத் அநு குணமாக இவள் பண்ணும் உபதேசத்தாலே
புண்ய பாபங்களின் வசத்திலே இழுப்பு உண்டு பகவத் விமுகனாய் திரிகை யாகிற சேதனனுடைய-கர்ம பாரதந்த்ர்யமும் –
இவன் பண்ணின கர்மத்தை பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக செய்வன் இத்தனை என்று
இவனுடைய ரஷணத்தில் விமுகனாய் இருக்கை யாகிற ஈஸ்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யமும்-நிவ்ருத்தமாம் என்கை-
சேதனனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -அனாத் யசித் சம்பந்த கார்யமான அவித்யா நிபந்தனம்
ஈச்வரனுடைய கர்ம பாரதந்த்ர்யம் -நிரந்குச ச்வாதந்த்ர்யம் கார்யமான ஸ்வ சங்கல்ப நிபந்தனம் –
இவை இரண்டும் -அநாதி சித்தமாய் போந்ததே ஆகிலும் -மாத்ருத்வ சம்பந்த்தாலே -சேதனனுக்கு ஆப்தையாய்
மகிஷீத்வ சம்பந்த்தாலே ஈஸ்வரனுக்கு அபிமதையும் ஆன இவள் –
இரண்டு தலையும் நெஞ்சு இளகி ஆஸ்ரயண அங்கீகார அபிமுகமாம் படியாக பண்ணும் உபதேசத்தாலே நிவ்ருத்தமாக தட்டில்லை-
————————————————
சூரணை -13-
உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –
சித்த உபாய விசேஷங்களால் திருத்த பார்ப்பாள் -அழகும் அருளும் சித்தம் -உபதேசம் சாத்தியம் என்றவாறு –
புத்ரன் திரும்பி திரிந்தாலும் வத்சலாய் மாத்ருத்வ நிபந்தமான அருளால் பகவத் அபிமுக்யன் ஆகும் படி திருத்தும்
உபதேசம் -த்ருஷ்டம் -அதிருஷ்டம் அருள் -என்றவாறு -இவள் இரக்கம் இவனை அபி முகீகரித்து உஜ்ஜீவிப்பிக்கும்
தன் வல்லபன் -ஸ்வ தந்த்ரன் -அன்புக்கு கட்டுப் பட்டவன் –
ஓடம் ஏத்திக் கூலி கொள்வாரைப் போலே – காட்டிக் கொடுத்து தானே சித்குரைக்கிலும்
என் அடியார் அது செய்யார் தன்னையும் உதறிக் கைக் கொள்ளும் படி திருத்தி அருளும்
இதன் பெருமையைக் காட்டவே அவன் உபதேசத்தால் திருந்தாமல் இருக்கிறான் –
போக தசையில் திருப்பவளம் கற்பூர நிகரமாகக் கைக் கொள்ளும் படி மெய்யான உபாயம் -அருள் —
போக கடகத்வங்கள் ஏக காலத்தில் பொருந்தும் படி –
கடாக்ஷம் ஈஸ்வர சங்கல்பத்தாலே தானே பலிக்கும் -ரக்ஷண சங்கல்பம் கொண்டவர் பெருமாள் —
அருளைக் காட்ட வில்லை -பெருமாளை திருத்த சம்ச்லேஷம் இல்லை –
எம்பெருமானுக்கு வீர்ய ஸுர்ய பராக்கிரம -தினவு அடங்கும் படி பிரதி யுத்தம் -ஜெய விஜயர்கள் இசையார் –
அனுபவித்தே அறும் படி -சாபத்தை சங்கல்பித்து –
கர்ம வஸ்யர்கள் இல்லையே இவர்கள் -ஞானாதிகளை பிரகிருதி சம்பந்தத்தால் மறைத்து யுத்த ரசம் பண்ண சர்வேஸ்வரன் பண்ணுகிற கிருஷி
விபலம் ஆக்க ஒண்ணாதே என்று அருள வில்லை
முன்பே மூன்று ஜென்மம் பிறக்க -மீளவும் எம்பெருமான் திருவடி சேர கிலேசிக்க–
திருவனந்த ஆழ்வான்-ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -இவர்கள் நிமித்தம்
பெரிய பிராட்டியார்-ராவண வத நிமித்தம் – திருவாழி ஆழ்வான் -சிசுபாலாதிகள் –
உபதேசம் -ஞானம் ஆடி மண்டி கலங்க -ஒரு நாடு அடங்க அனர்த்தம் பட கண்டு தன்னை மறந்து உபதேசித்தாள் -என்றவாறு –
உபதேசத்துக்கு யோக்யதை இல்லாத இடத்திலும் செய்தால் கை முதிக நியாயம் -காகம் சிறுமை பாராமல் ப்ரஹ்மாஸ்திரம் விட –
தனஞ்ச பிரஜை -ஒரு நீர் க்ருணனன் நம்மை சுட்டி –சீதோ பவ என்றால் போலே
அம்பன்ன கண்ணாள் கடாக்ஷித்து காகத்துக்கு ஒரு ரக்ஷையும் இட்டு
முன் வளைத்துக் கொண்டு வரும் படி ஏவ –
காகாசுரன் விழுந்தால் போலே ராவணனும் -சசால சாபஞ்ச வெறும் கை வீரன் –
திவ்விய அஸ்த்ர புருஷர்கள் -இவள் வசம் -அவன் கையில் வில்லும் விழ
ராமா சரணம் என்னும் அளவும் கூட்டி வர -ஸ்வா தந்தர்யம் போக -பிராதி கூல்யம் குலைய -ரஷிக்க ப்ரதிஜ்ஜை உண்டே பெருமாளுக்கு —
கச்சா -சொல்ல கேட்டு போனான் -சொன்னதை கேட்டு பரதந்தர்யமும் காட்டி -கடாக்ஷ பலம் இதுவே –
ராவணனையும் அருளால் திருத்தினாள் என்னலாம்–
ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி-இதுவே சரணாகதி –
த்ராஹி த்ராஹி அங்கே அவனை ஆழங்கால படுத்தி ரஷிக்க பண்ணினாள் -கண் அழிவே பலமாக -ஆக்கி –
தேவ ஸ்த்ரீகள் விலங்கை தன் காலில் இருக்க -ராவணன் விபரீத ப்ரவ்ருத்தி -இருந்தாலும் –
சென்று வா என்ன குணம் எந்த கோஷ்ட்டி தெரியவில்லையே –
கூட இருக்கவே அங்கு பலித்தது -இவள் சந்நிதி இல்லாமையால் ராவணன் முடிந்தான்-
சேதனன் மீளாமைக்கு அடி -அநாதி காலம்–யாதானும் பற்றி நீங்கும் -திரு விருத்தம் – 95- என்கிறபடியே
பகவத் விமுகனாய் -விஷயாந்தர ப்ரவணனாய்-போருகையால் வந்த துர்வாசநாதிகள்–ஆதி சப்தம் ருசிகள் –
ஈஸ்வரன் மீளாமைக்கு அடி அபாரத அநு குணம் இவனை சிஷிக்க வேணும் என்னும் அபிசந்தியாலே
நின்ற நிலை இளகாமல் நிற்க்கைக்கு உடலான நிரங்குச ச்வாதந்த்ர்யம் —
இவ்வோ ஹேதுகளாலே இரண்டு தலையும் தன்னுடைய உபதேசத்தால் ஸ்வ ஸ்வ கர்ம-பாரதந்த்ர்யத்தில் நின்றும் மீளாத அளவில் –
சேதனனை அருளாலே திருத்துகை யாவது -ஐயோ இவனுடைய துர்புத்தி நீங்கி
அநு கூலபுத்தி உண்டாக வேணும் என்று அவன் திறத்தில் தான் பண்ணுகிற
பங்கயத்தாள் திரு அருள் -பெரிய திரு மொழி -9 – 2-1 -என்கிற பரம கிருபையாலே–திரு அருள் பரம கிருபை உத்க்ருஷ்டம்
தனக்கு புருஷார்த்தம் வேண்டாத படி அவன் கிருபையை கிளர்த்தி விடும் கிருபை அன்றோ –
அவன் பாப புத்தி குலைந்து பகவத் அபிமுகனாம் படி பண்ணுகை —ராவணனை அருளால் நிறுத்தாமல் உபதேசத்துடன் நிறுத்தினாள்- –
தேவதைகளுக்கு ராவண வத ப்ரதிஜ்ஜை இருந்ததால் –அங்கத முகத்தால் ராவணனுக்கு உபதேசித்த பெருமாளை பின் தொடர்ந்து உபதேசித்தாள்-
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-
ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply