இப்பிராட்டி தன் தவ்ர்பல்யத்தாலே மடலூரவும் மாட்டாதே இருக்கச் செய்தே -அதுக்கு மேலே இராத்திரியும் வந்து -சராசரங்கள் அடைய உறங்கி
-பந்துக்கள் எல்லாம் இவள் ஆர்த்தி பொறுக்க மாட்டாதே பரவசராய் நிதரிக்கிற தசையில் தனிப்பட்டு கலங்கி அநேக கல்பமாய்
மஹா அந்தகாரமாய் தனக்கு பிழைக்கைக்கு அவகாசம் தராது இருந்துள்ள ராத்ரியையும் -தன் வியாசனத்துக்கு ஹேதுவான கொடிய கர்மத்தையும் –
ஏவம் விதமான தசைகளில் உதவக் கடவனான புருஷோத்தமனையும் -அவனுடைய தாஷிண்யாதி குணங்களையும் -இவற்றை எல்லாம் பல காலும் சொல்லி
-இத்தசையில் தன்னை ஐயோ என்று கிருபை பண்ணி யாதல் -இது யுக்தம் அன்று என்று பொடிந்தால் முகம் காட்டுவார் ஒருவரையும் பெறாதே
அத்யந்தம் அவசந்தனையாய் மிகவும் பிரலாபித்து முடிய புகுகிறவள் -ஜகத் ரஷா சிந்தாத் மிகையான யோக நித்திரையை பண்ணி இருக்கிறவன்
நான் இப்படி அவசந்தனையாக என்னை உபேக்ஷியான் என்று தரிக்கிறாள்-
—————————————————————-
ராத்ரியாகிற இம் மஹா ஆபத்தும் செல்லா நிற்க ஆபத் சகனான எம்பெருமான் வருகிறிலன் -இனி எனக்கு ரக்ஷகர் ஆவார் உண்டோ -என்கிறாள் –
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-
ஊர் எல்லாம் உறங்குகையாலே சிலருடன் போது போக்கப் பொறாமையாலும் லோகம் எல்லாம் மஹா அந்தகாரமாகையாலும் ஒன்றைக் கண்டு காலஷேபம் பண்ணப் பெறாமையாலும் ஜலதத்வமும் ஒலி அடங்கி ஸ்ரவண இந்த்ரியத்துக்கு விஷயம் இல்லாமையாலும் ஹ்ருதயம் தனிமைப்பட்டு ஆற்றாமை மிகுகையால் பண்டு போல் நீள் இரவாகாதே-எல்லா ராத்ரிகளும் ஒரு நெடிய ராத்ரியாய் அதுக்கு ஓர் அவசானம் காணப் பெறுகிறது இல்லை எல்லார்க்கும் ஆபத் சகனாய் ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் இத்தசையில் வந்து தோற்றுகிறிலன் –
ஏவம் விதனானவனும் கூட வாராது ஒழிகைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னுடைய பிராணனை –
எல்லே –என்று தோழியுடைய சந்நிதியில் அவளை சொல்லும் சொல்லை சொல்கிறாள் –
நம் என்றும் எம் என்றும் பல பாட்டில் சொல்கிறது -சம்ச்லேஷ தசையில் அவன் தனக்கு கை வந்தபடியே நினைத்து –
———————————————————————-
இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள் –
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-
அபரிச்சேத்யமான கடலையும் பூமியையும் ஆகாசத்தையும் அடைய மறைத்து அவ்வளவு அன்றிக்கே மஹா விகாரத்தை யுடைத்தாய் நூறாயிரம் ஆதித்யர்கள் வந்தாலும் பேதிக்க ஒண்ணாதது ஒரு ராத்திரி வந்து தனக்கு அவசானம் இல்லாத படி யாயிற்று -காவி சேர் வண்ணன்-கவி போலே இருக்கிற நிறத்தை யுடையவன் –
—————————————————————–
சகல துக்கங்களையும் கெடுத்து உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வ பாவனான காகுத்ஸனனும் வருகிறிலன் -பரதந்த்ரை யாகையாலே முடியவும் விரகு பெறுகிறிலன் என்று இன்னாதாகிறாள்
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-
அபரிச்சேத்யமாம் படி வளர்ந்த ராத்திரி கல்பமாய் வந்து தோற்றி ஒன்றும் குறைந்து காட்டாதே நெடுகிற்று-பிரதிகூலரை தஹிக்கும் ஸ்வ பாவமாய் தரிசன மாத்திரத்திலே பயாவஹமான ஸ்ரீ சார்ங்கத்தை யுடையனான சக்ரவர்த்தி திருமகனும் வருகிறிலன்-
———————————————————————-
கண்டாருக்கு பொறுக்க ஒண்ணாத படி வியசனப்படா நிற்க-எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் வருகிறிலன்-என்னுடைய நிரவதிக சித்தா வியசனத்தை போக்குவார் ஆர் -என்கிறாள்
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-
நான் படுகிற மஹா துக்கத்தை பெண்ணாய் பிறந்தார் படும் மஹா துக்கம் -இனி நான் காண மாட்டேன் என்று தான் வரில் நமக்கு ஆச்வாஸ கரமான ஒளியை யுடைய ஆதித்யன் வராதே ஒளித்தான்
குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனாய் நிரதிசய ஸுந்தர்ய யுக்தனாய் ஜகத்தின் யுடைய ஆபன் நிவாரணத்திலே மேனாணித்து இருக்கிறவன்-
————————————————————–
துர்த்தசையில் உதவக் கடவரான அன்னையரும் தோழிமாரும் ஆராய்கிறிலர்கள்-அவர்கள் உதவாத போது வந்து உதவக் கடவ கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் போய் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்-
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-
நான் அவசன்னை யானால் உதவக் கடவ நீங்களும் -நீ என் பட்டாய் என்னாதே நான் ஈடுபடுகிற இராவெல்லாம் கிடந்தது உறங்கா நின்றி கோள்
உன்னுடைய நீர்மை என் என்று வினவாதே உறங்கா நின்றார்கள் என்றுமாம் –
வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான திரு நிறத்தை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் முடிந்த பின்பும் என் பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை
—————————————————————
விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள் –
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-
விடாதே தொடருகிற காதல் ஆகிற வியாதி நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –ராத்ரியாகிற கல்பம் முன்னே நின்று பதார்த்தங்களும் தோற்றாத படி கண்ணை மறையா நின்றது –
ஆர்த்தத்ராணார்த்தமாக எப்போதும் கை கழலா நேமியனாய் அத்யாச்சர்யா பூதனான கிருஷ்ணன் வருகிறிலன் -ஜயத்ரவதத்தின் அன்று தேஜோ ரூபமான திரு வாழியைக் கொண்டு பகலை இரவாக்கின அத்யாச்சர்ய பூதனான கிருஷ்ணன் -திரு வாழியை இட்டு இரவைப் பகல் ஆக்கிக் கொண்டு தோற்றுகிறிலன் என்று கருத்து
நீள் ஆவி காப்பார் ஆர் -துர்த்தசையிலும் முடியாதே என்னை நோவு படுத்தா நின்றுள்ள இவ்வுயிர் ஆகிற பகையை போக்குவார் ஆர் -என்றுமாம் –
———————————————————————-
ராத்திரி யாகிற யுகம் செல்லா நிற்கவும் எம்பெருமான் வந்து தோற்றாது ஒழிந்த வாறே -அநிமிஷர் ஆகையால் உறவு முறையாரைப் போலே -இவ்வவஸ்தையிலே உறங்காதே நீர்மையை யுடையருமாகையாலே -தெய்வங்காள் என் செய்கேன் -என்று தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் –
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-
ராத்திரி இருளும் சிறு துளியாய் நெடுமை ஸ்வ பாவமான கல்பமாய் முடிவின்றிக்கே செல்லுகிற இக்காலத்தில் –
மருங்குலை -மருங்கு -என்றால் போலே -கங்குலை -கங்குல் -என்கிறது –
நிர்மலமாய் வெளுத்து இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழி யையும் ஏந்தி இவ்வந்த காரம் எல்லாம் போம்படி வந்து தோன்றுகிறிலன் –
அவன் அங்கீ கரியாத படி பண்ண வற்றான மஹா பாபத்தை யுடையேன் –
————————————————————
ஒரு ராத்திரி அநேகம் யுகமாய் மிகவும் பாதியா நின்றது -எம்பெருமானும் வருகிறிலன் -அதுக்கு மேலே தென்றலும் நலியா நின்றது என்கிறாள்
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-
முடித்து அல்லது போகேன் என்று வந்து என் ஆத்மாவை முடித்து அல்லது போகேன் என்று வந்து -என் ஆத்மாவை மிகவும் நோவு படுத்தா நின்றது -நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடையனான கிருஷ்ணனும் வருகிறிலன் -துஸ் ஸஹமாம் படி தடவிக் கொண்டு வருகிற குளிர்காற்று அத்யுஷ்ணமான நெருப்பில் காட்டில் சுடா நின்றது –
——————————————————————-
ராத்திரியும் மிகவும் பாதியா நின்றது -வரக் கடவதான ஸூர்ய உதயமும் நமக்கு என்றவாறே ப்ரார்த்தமாய் விட்டது -எம்பெருமானோ வந்து தோன்றுகிறிலன் -நான் நின்று நோவு படும் அத்தனை போக்கி என்னுடைய உபாதை போக்க கடவ யாருண்டோ இனி என்கிறாள் –
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–
வீங்கா நின்றுள்ள இருளையும் நுண் துளியையும் யுடைத்தாய் கொண்டு ராத்ரியானது நெருப்பில் காட்டில் நலியா நின்றது -தோற்று அரவிலே இருளை போக்கி நம்முடைய கிலேச ஹானியை பண்ண வல்ல அழகிய ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிய தேரும் தோன்றுகிறது இல்லை –
இங்கனம் துஸ் ஸஹமான தசை செல்லா நிற்க சிவந்த ஒளியை யுடைத்தாய் தாமரைப் பூப் போலே இருக்கிற அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஸ்ரீயபதியானவனும் வந்து தோன்று கிறிலன்-
——————————————————————–
இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-
நிரந்தரமாக உருகுகிற என்னைப் போலே இந்த பெரும் பரப்பை யுடைய ஆகாசம் தேய்ந்து உருகுகிற சிறு துளியை யுடைய ராத்திரியிலே
யாதிருச்சிகமாக அன்றே ஒருகால் பூமியை அளந்தான் அத்தனை -அது நியதி ஸ்வ பாவம் அன்று -அத்யந்த நிர்க்ருணன் என்றாகிலும் ஒரு வார்த்தையை ஒரு கால் சொல்லாதே –
——————————————————
நிகமத்தில் இத்திருவாய் மொழியில் ஆழ்வாருக்குச் சென்ற ஆர்த்தியை அனுசந்தித்தார் எங்கனே தரிக்கும் படி -என்கிறார் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
கண் வளருவான் போல் ஜகத் ரக்ஷ உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை -இது -தமக்கு தரிப்பு பார்த்த படி –
சிறந்த பொழில்-சம்ருத்தமான பொழில்
நிறம் -பண்
—————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply