ஸ்ரீ ராமனின் பாதையில்-2014-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே சஹச்ர நாம தத்துல்யம் ராம நாம வரா நநே

ஆபத்தாம் அபஹர்தாரம் தாதாரம் சர்வசம்பதாம் லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

கோன்வச்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ்ஸ வீர்யவான் தர்மஜ்ஞச்ச க்ருதஜ்ஞச்ச சத்யவாக்யோத்ருட வ்ரத
சாரித்ரேண ஸ கோ யுகத சர்வ பூதேஷு கோஹித வித்வான் க க ஸ் சமர்தஸ்ஸ கச்சைக ப்ரிய தர்சன
ஆத்மவான் க் ஜிதக்ரோத த்யுதிமான் கோ அன ஸூயக கஸ்ய பிப்யதிதே தேவாஸ்ஸ ஜாத ரோஷச்ய சம்யுகே –

குணவான்
-சௌசீல்யம் -பிறப்பு கல்வி செல்வம் அழகு -பாராமல் கலந்து -குகனோடு ஐவரானோம் முன்பு
-பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் -அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்-

வீர்யவான்
-சத்ரோ பிரக்யாத வீர்யச்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை
ராம -விராம -தேவர்கள் கொடுத்த வரம் ஒய்வு கொள்ள வேண்டிய படி வீர்யம் -வெட்டுவது மட்டும் வீரம் அல்ல விட்டுக் கொடுப்பதும் வீரமே –
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம் –
ஜய ஜய மஹா வீர -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்ற திருமுகம் -இரட்டைகளைக் கண்டு கலங்காமல் –

தர்மஜ்ஞன்
-பொதுவான தர்மங்கள் -சிறப்பான தர்மங்கள் -கருணை தயை –குருவின் ஆனை -தாடகை வதம் -சரணாகத வத்சல்யன்
–இவள் சந்நிதியால் காகம் தலை பெற்றது -விபீஷண ஆழ்வான் இடம் தம் மதம் -குற்றமாகவே இருந்தாலும் ரஷிப்பேன்
-யதி வா ராவணஸ்ய -விபீஷணஸ்ய -மித்ரா பாவேன – வ்ரதம் மம –வானர முதலிகளை வில்லும் கையுமாக விழித்து இருந்து காத்து அருளினான் –
நகச்சின் நபராதயாதி -லுகுதரா ராமஸ்ய கோஷ்டி

க்ருதஜ்ஞன்
-உனக்கு ஏதேனும் ஓன்று நேர்ந்து இருந்தால் பின்பு சீதையை அடைந்தும் என்ன பயன் -என்பானே
-வானர பெண்களையும் புஷ்பக விமானத்தில் அயோத்யை கூட்டிச் சென்றானே
-இரண்டு உயிர்களையும் ரஷித்த ஆஞ்சநேயருக்கு என் செய்வேன் என்று துடித்த மிதுனம் –

சத்ய வாக்யவான்
ராமோ தவிர் நாபி பாஷதே -ஒரு வில் ஒரு இல் ஒரு சொல்- சக்ருத் ஏவ ஒரே தடவை பற்றினாலே போதும் –
பரத்வாஜர் ஆஸ்ரமம் தங்கி கொடுத்த வாக்கைக் காப்பாற்றி -ஆஞ்சநேயரை நந்திக்ராமம் அனுப்பி பரதனை ஆசவாசப் படுத்தி
-சூர்பணகை இடமும் ஆர்ஜவம் காட்டி அருளி –
சத்யேன லோகன் ஜயதி -வைகுந்தத்தை ஜடாயுவுக்கு அருளினான் –

த்ருட வ்ரதன்-
-உயிரை விட்டாலும் பிராட்டியை விட்டாலும் லஷ்மணனை விட்டாலும் சொன்ன சொல்லை விட மாட்டேன்
-புறா கதை –குரங்கு மனிதன் புலி -கதை –
உடல் வளைந்தால் ஆரோக்கியம் -உள்ளமும் உறையும் வளையாமல் உறுதியோடு இருந்தால் அதுவே உண்மையான வலிமை –

சாரித்ரேண யுக்தன் –
கிங்கரராகவே இருப்போம் -விஸ்வாமித்ரர் இடம் -அனுஷ்டானங்கள் ஒன்றும் குறையாமல்
-உடம்பில் புழு பூச்சிகள் ஊர்ந்தது கூட தெரியாமல் -சீதைக்காக உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-
ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத சத்ருக்னன் -உடை வாள் -போலே பாகவத சேஷத்வமும் பார தந்த்ர்யமே நமக்கு வகுத்தவை
-பிராட்டி நூபுரம் ஒன்றே அறிந்த இளைய பெருமாள் நிலை
-கல்வி செல்வம் பதவி முக்குறும்பு அறுத்து அடிப்படை தர்மங்களை அலட்சியம் செய்யாமல் கடைப்பிடித்தே வாழ வேண்டும் –

சர்வ பூதேஷு ஹிதன்-
அரக்கர்களையும் உயிர் மீட்க நினைத்தான் –
யதி வா ராவணஸ்ய விபீஷணஸ்ய -தீயவர்கள் திருந்தா விடில் உலகுக்குத் தீமை -அவர்களையும் திருத்துவதே அனைவருக்கும் நன்மை –
மரணாணி வைராணி பகைவர்கள் மாண்டு போகலாம் -ஆனால் மாண்டவன் பகைவனாக மாட்டான் அல்லவா –

வித்வான்
-நீண்ட கால தீர்க்க தர்சனம் -அம்மான் பின் போனால் தானே அவதரித்த கார்யம் நிறைவேறும்
–கற்றதையும் கேட்டதையும் மட்டும் ஆராயாமல் உள்ளத்தையும் ஊடுருவிப் பார்ப்பவனே வித்வான் –
கணை யாழி கொடுத்து பிராட்டி கடாஷாம் பெற்று துஷ்க்ருதவான் என்னப் பண்ணி அருளினான் –
குற்றம் பார்த்து கைவிடாமல் ஏற்றுக் கொள்பவர் –

சமர்த்தன்
-வலியவர்கள் நட்பை விட நல்லவர்கள் நட்பு நன்மை செய்யும் -கூடா நட்போ குழியில் தள்ளும்
வாலியை விட்டு ஸூ க்ரீவனை சகாவாகக் கொண்டான் –
கிஷ்கிந்தையும் அயோத்யைக்கு சேர்ந்த இடமே –தண்டிக்கும் பொழுதும் வேட்டை யாடும் பொழுதும் நேருக்கு நேர் செய்யத் தேவதை இல்லையே
மக்கள் அரசன் தொடர்பு உண்டே -குற்றத்துக்கு தண்டனை -தம்பி மனைவியை பறித்து -காலில் விழுந்து சரண் அடைந்தவனை காக்காமல் -வாலியே ஒத்துக் கொண்டான் –
-பாதுகையை பணயமாக பரத ஆழ்வானுக்கு ஈந்து காடேறினான்
-நல்லவர்கள் சாமர்த்தியமாக இருந்தால் உலகுக்கு நன்மையே –தீயவர்கள் சாமர்த்தியமாக இருந்தாலோ உலகுக்குத் தீமை தானே –
பர ப்ரஹ்மத்தை முழுவதும் அறிந்தேன் என்பவன் அறிவிலி -அறிவுக்கு எட்டாதவர் என்று அறிபவனே அறிவாளி –

ஏக் ப்ரிய தர்சனன்-
ரமயதி இதி ராம -லஷ்மண லஷ்மி சம்பன்னன் -ராம என்றால் நாவுக்கு தூய்மை -கண்டால் கண்ணுக்குக் குளிர்ச்சி
-வா போ வந்து இங்கு மீண்டும் போ -தளர்ச்சியைப் போக்கி முதியவனையும் உத்சாஹம் அடைவித்து இளமையும் அழகும் தருபவன் அன்றோ
-சபரி பெருமாள் கடாஷம் பெற்றாள்-
மூக்கு அறுபட்டவள் இளமை அழகு மென்மைப்பண்பு வலிமை தாமரைக் கண்கள் மான் தோல் மரவுரி அணிந்த ஒப்பனை அழகு கொண்டாடி பேசினாள்
இராமனை நாம் தர்சித்தால் பயன் -இராமன் நம்மை கடாஷித்தால் பெரும் பயன் உண்டே –

ஆத்மவான்
-ஜீவாத்மாவின் தன்மை யுடையவனைப் போலே தோன்றினாலும் பரத்வம் ஸ்புடமாக பொலியும் படி அதி மானுஷ சேஷ்டிதங்கள் –
ரிஷிகள் குடிலிலே ஒதுங்கி இருந்த பெருமாள் -ராமோ விக்ரஹவான் தர்ம –சக்கரவர்த்தி திருமகன் என்றே உகப்பவன்
-ஐந்து நாட்களில் நூறு யோசனை நீல சேது அணை கட்டி அருளி -தர்சித்தால் புண்யம் கிட்டும் -பெருமாளையே பாலமாக பற்றினால் முக்தியே கிட்டுமே
புல் எறும்பாதி எல்லாம் வைகுந்தத்து ஏற்றி அருளி -குப்தார்காட் -சரயு நதியில் இறங்கி தன்னுடைச் சோதி அடைந்தான்
பேச்சால் தெய்வம் போன்றும் செயலால் கீழ்த் தரமாக நடப்பதை விட பேச்சில் மனிதனாகவும் செயலில் தெய்வத் தன்மை உடன் இருத்தலே நலம் –
சாம்யா பத்தி அடைகிறான் முக்தன் -ஆனந்தத்திலே சாம்யம் -சாலோக்யம் சாமீப்யம் சாரூப்யம் சாயுஜ்யம் –

ஜிதக்ரோதன் –
-பரதன் என்னை எதிர்க்கிறான் என்ற நினைவே என்னைக் கொன்று விடுமே கோபத்தை விடு என்று இளைய பெருமாளுக்கு உபதேசித்தான்
-ரோஷராமன் இடம் –இராவணன் இடம் -காட்டிய கோபம் -கோபத்தை வசமும் படுத்துவார் -கோபத்தின் வசமும் ஆவார்
-விறகு நெருப்பைத் தூண்டும் -தண்ணீரோ நெருப்பை அணைக்கும் -கோபம் மென்மேலும் கோபத்தையே தூண்டும் –
ஆனால் பொறுமையோ கோபத்தையே அனைத்து மனதினைக் குளிர்வித்து குணவான் ஆக்கும் –

த்யுதிவான் –
ஒளி யுடையவன் -கல்யாண குணங்களையே ஒளியாக கொண்டவர் -நற் குணங்கள் வடிவான சீதா பிராட்டியே ஒளியாக கொண்டவர்
ரிஷிகள் இடம் வெட்கி -முன்னே வந்து ரஷித்தேன் அல்லேனே என்றார் -விளக்கு ஒளி வெளியிருளைப் போக்கும்
-இராமனின் பண்பு எனும் தூய பேரொளி உள்ளிருலான அறியாமையைப் போக்கி விடும்
அடியார்வர்கள் குற்றத்தை பொறுத்த -பெருமாள் சமுத்திர ராஜன் இடம் -தான் விட்ட அம்பு உனது எதிரிகளுக்கு என்றானே –
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -பொறுமை குணத்தால் எப்போதும் உலகை பிரகாசம் ஆக்குகிறார் –
மேகத்துக்கு மின்னல் -ஸூ ர்யனுக்கு ஒளி -பெருமாளுக்கு சீதா பிராட்டி
குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -ராம திவாகரனுக்கும் ஒளி ஊட்டுபவள் பிராட்டி
பர்ணசாலை பார்த்து தந் தந்தை இறக்க வில்லை உன்னை எனக்கவே வைத்துச் சென்றார் என்றார் பெருமாள் இளைய பெருமாள் இடம் –
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி -ஆத்மாவுக்கு இறைத் தொண்டு –

அநஸூயன்
அஸூயை இல்லாமல் குற்றத்தையே குணமாக கொள்பவன் அன்றோ
பிறருக்கு கிடைக்கும் பெருமையைக் கண்டு அவர்களை விட மகிழ்ச்சி கொள்பவனும் இவனே –
பொன்முடி சூடும் அரசனாக இருப்பதை விட இராமன் திருவடி சூடும் அரசனாக இருப்பதே சாலச் சிறந்தது
அயோத்யா மக்கள் இன்ப துன்பங்களை தமதாக கொண்டவர் பெருமாள் –

ஜாத ரோஷன் –
எவருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடுங்குவார்களோ அவனே ராமன் -கோபத்தை வென்றவன் -ஜிதக்ரோத –கோபப்பட நேரிடில்
-ஜிதக்ரிஷா -அதுவும் நன்மையிலே தான் முடியும்
இறைவனுடைய சினம் என்பது அடியவர்களுக்கு பேர் அருளே –பாகவத அபசாரம் பொறாமை தானே இவன் ஆனைத் தொழில்கள் செய்து அருளியவை
-சாது மிரண்டால் காடு கொல்லாதே
சீறி அருளாதே -நீ தாராய் -பறை -இறைத் தொண்டு -என்று ஆண்டாளைப் போலே நாமும் இறைஞ்சுவோம் –
கோபமும் அருளும் கலந்து இருப்பவன் இராமன் -கோபத்தை விலக்கி இராமனை அருள வைக்கும் கருணை உள்ளவள் சீதாப் பிராட்டி –
இணை பிரியா இவ்விருவரையும் ஒரு சேர நமக்கு நல்கி அருளுபவர் -காரேய் கருணை இராமானுசர்
-இளைய பெருமாள் திரு நாமத்தையும் கைங்கர்ய செல்வத்தையும் தனதாக்கிக் கொண்டு திருவவதரித்தவர்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசர் திருவடிகளையே புகலாகப் பற்றி
ஸ்ரீ ராமன் பாதையில் நன்னடை பயில்வோம்
நம் நன்னடத்தையால் சீதா மணாளனின் சீர் அருளுக்கு இலக்காவோம்

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading