ஸ்ரீ லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமரஷிபி-
ஸ்ரீ -ஸ்ரீ ரெங்க நாச்சியார் –
அம்ருதோத்பவா-ஸ்ரீ அம்ருதபல வல்லித் தாயார் -திரு சோளிங்கர் –சிந்து கன்யா –ஸ்ரீ மோஹன வல்லித் தாயார் -திரு மோகூர்
கமலா -ஸ்ரீ கமல வல்லித் தாயார் -ஸ்ரீ உறையூர் –க -பெருமான் /ம -ஜீவாத்மா / லா -கொடுத்து வாங்குபவள் சேர்ப்பிப்பவள்-
சந்திர சோபனா -ஸ்ரீ பரிமள ரெங்க நாச்சியார் -சந்த்ரனுக்கும் சோபையை ஊட்டுபவள்
விஷ்ணு பத்நீ-ஸ்ரீ வஞ்சுள வல்லித் தாயார் -திரு நறையூர் –
வைஷ்ணவி –ஸ்ரீ யதுகிரி நாச்சியார் -ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் –
வராரோஹா –ஸ்ரீ வரமங்கை நாச்சியார் –
ஹரி வல்லபா -ஸ்ரீ ஆண்டாள் –
சார்ங்கிணீ–ஸ்ரீ கோமள வல்லித் தாயார்
தேவ தேவிகா –ஸ்ரீ பெரும் தேவித் தாயார்
ஸ்ரீ மஹா லஷ்மீ –ஸ்ரீ பத்மாவதிதாயார்
லோக ஸூ ந்தரீ -ஸ்ரீ சௌந்தர்ய வல்லித் தாயார்
ஸ்ரீ –
-ஸ்ரீ யதே –தஞ்சமாக அனைவராலும் பற்றப்பட்டு –ஸ்ரயதே -தான் நாராயணனை பற்றுகிறாள்
ஸ்ருணோதி -சரனாகதர் குறைகளை காது கொடுத்து கேட்கிறாள் -ஸ்ராவயதி -இவள் தனது பரிவு சொற்களை பகவான் காது கொடுத்துக் கேட்கும் படி செய்கிறாள் –
ஸ்ருணாதி-சரனாகதர்கள் உடைய பாபங்களை தந் அருளால் நீக்குகிறாள் —ஸ்ரீணாதி -ஜீவர்களை பெருமாள் உடன் சேர்த்து வைக்கிறாள் –
லஷ்யதே அநயா இதி லஷ்மீ –குளிர்ந்த கடாஷத்துக்கு இலக்காக்குகிறாள் –
அஸ்ய ஈஸாநா ஜகாத விஷ்ணு பத்நீ –
ஹரீஸ்ஸ தே லஷ்மீ ச பத்ன்யௌ-
லஷ்மீ தந்த்ரம் -இந்தரனுக்கு லஷ்மீ உபதேசித்து அருளினாள்
வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ
அராயி காணே விக்டே கிரிம் கச்ச ஸதான்வே
ஸ்ரிம் பிடஸ்ய சத்வபி தேபிஷ்ட்வா சாதயாமசி–ரிக் வேதம் -8-8-13-
குற்றம் செய்யாதவர் யார் -மன்னியுங்கள் -ஸ்ரீ தேவி
உலகில் குற்றம் செய்தவரே இல்லையே -பூதேவி
உலகில் குற்றம் என்பதே இல்லையே -நீளா தேவி
நித்யை வேஷா ஜகன் மாதா -விஷ்ணோ ஸ்ரீ அநபாயி நீ –ராகவத்வே அபவத் சீதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா
சாஷாத் ஷாமாம் கருணா கமலாமிவ அந்யாம்-
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச தேவ்யா காருண்யா ரூப்யா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தேபி சகீ யதே –
பெருமாள் -சீதா / இளைய பெருமாள் -ஊர்மிளா /ஸ்ரீ பரத ஆழ்வான் –மாண்டவி /ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் –ஸ்ருத கீர்த்தி
ஸ்ரீ வத்ஸம்–பீடம் –கார் மேகத்தின் நடுவில் மின்னல் போல் -செய்யாள் -இவளைக் கடாஷித்தே தாமரைக் கண்ணன் சிவந்த கண்ணனாகவும்
அவனைக் கண்டு கொண்டே இவள் திருக்கண்கள் கருத்தும் உள்ளன -இவள் கரு விழிகளால் கண்டு கொண்டே இருப்பதால் திருமேனி கருத்ததாம்
-திருமாலின் சிவந்த திருக் கண்களால் நோக்கப் பெற்றே மலர்மகளது திரு மேனி சிவந்ததாம்
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ்வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வ ண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு –மூன்றாம் திருவந்தாதி -100-
நீள் நாகம் சுற்றி நெடுவரை நட்டு -ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டோமே —பெரிய திருமொழி -11-7-1-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்கையை விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி -6-1-2-
ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகனாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப்
புறம் செய்யும் கொலோ –பெரியாழ்வார் –3-8-4-
சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போந்து இமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே –திருவிருத்தம் -21-
கர்ப்பம் -பிறப்பு -குழந்தை பருவம்-சிசு /விளையாட்டுப் பருவம் -பாலன் -படிக்கும் பருவம் குமாரன் –இளமை முதுமை
-ஏழு பருவங்களில் ஏற்படும் பாப புண்யங்களே ஏழு எருதுகளின் கொம்புகள் -இவற்றை முறித்து ஜீவனுக்கு முக்தி அளிக்கவே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
சீர் மல்கும் ஆய்ப்பாடியில் குற்றமொன்றில்லா கோவலர் தம் குடில்களில் ஆயர் பாடிக்கு அணி விளக்காய் பிறந்து
கொத்தலர் பூம் குழல் -பந்தார் விரலி -நப்பின்னை பிராட்டியை திருமணம் புரிந்தான் –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்ர்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –திருவாய்மொழி –5-6-11-
ஸ்ரீ மதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மாநே
ஸ்ரீ ரங்க வாசிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்
——————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply