ஸ்ரீ கண்ணனின் மாயம் என்ன மாயமே -2015-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ கீதாசார்யன் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூன

அஜாயமான பஹூ தா விஜாயதே –பஹூ நி மே வ்யதீதானி ஜன்மானி –சன்மம் பல பல செய்து
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்

ஆனை காத்தோர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேத்தி யானை யுண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மையரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –

வேண்டித் தேவர் இரக்க தான் வந்து -பிறப்பிலியான தானும் தன்னை பிறக்க வேண்டிக் கொண்டு சங்கல்பித்து அருளினான் –
மன்னு வடமதுரை -மதுரா நாம நகரீ புனா பாப ஹரி சுபா -மதுரையார் மன்னன் -விரும்பிய திரு நாமம்
நாம் நம் கர்மத்தின் விளைவாகப் பிறக்கிறோம் -நம் பிறப்பு இறப்பு சுழலைத் தடுப்பதற்காகவே அவன் கருணையால் இச்சையால் திருவவதரிக்கிறான்-

யது குலத்தில்-தேவகன் உக்ரசேனன் எனும் சகோதரர்களுக்கு தேவகியும் கம்சனும் பிறந்தனர் -சூரசேனனுக்கு வ ஸூ தேவர் பருத்தா -குந்தி பிறந்தனர்
விண் ஒலித்தது -கம்சனுக்கு வலித்தது –
சந்திரனின் குளுமையும் யதுவின் எளிமையும் சேரப் பிறந்தான் கண்ணன் -திருமாலின் மனத்தில் இருந்து உருவானவர் சந்தரன் –
ஆகவே சந்தரனைப் போலே நம் மனத்தையும் ஈர்க்கிறான் கண்ணன் –

கருவரங்கத்தில் திருவரங்கன் ஆன கண்ணன்
தேவகிக்கு அடுத்தடுத்து –கீர்த்திமான் -ஸூ ஷேணன்-பத்ர சேனன் -ருஜூ –சம்மர்த்தனன் -பத்ரன் -எனும் ஆறு குழந்தைகள் -அடுத்து யோகமாயா –
உலகத்தையே தன வயிற்றிலே கருவாக வைத்துக் காக்கும் இறைவன் தானே கருவில் இருந்த கருணையை என்ன வென்று சொல்வது —

விண்டது விலங்கு கண்டார் வ ஸூ தேவர் –
ஆவணி மாதத்து கிருஷ்ண பஷ அஷ்டமி திதியில் ரோஹிணி நஷத்ரத்தில் இரவுப் பொழுதில் நான்கு கரங்களுடன்
ஏந்திய சங்கு சக்கரங்கள் உடன் அனைத்து திரு ஆபரணங்கள் உடன் தோன்றிய தாமரைக் கண்ணன் –
ஸூ தபா ப்ருச்னி தம்பதியராய் இருந்து முதலில் ப்ருச்நிகர்ப்பன் -அடுத்து அதிதி காச்யபர் -தம்பதிக்கு வாமனன் –
-இப்போது தேவகி வ ஸூ தேவர் தம்பதிக்கு கிருஷ்ணன் -கண்ணனின் பிறப்பை த்யாநித்தால் நம் பிறவி எனும் விலங்கு அறுமே –

தூய பெரு நீர் யமுனை –
ஸூ ர்யனின் பெண் யமுனை -கண்ணனுக்குத் தக்க சமயத்தில் தொண்டு புரிந்தது -திருவடியைத் தொட்டுத் தூய்மை பெற்று வடிந்தது -ஆகவே நாமும் திருவடி பற்றினால் சம்சாரக் கடலே வடிந்து விடும் –

நஞ்சே அமுதாகும் நேர –
அவித்யா என்பதே பூதனை -அஹங்காரம் மமகாரம் ஆகிய இரண்டும் அவளுடைய மார்புகள் -அதனால் ஏற்படும் துன்பமே விஷப்பால் -கண்ணன் தன அருளால் நம் அறிவின்மையை ஒழித்து யான் எனது எனும் ஆணவத்தையும் அதனால் வரும் துன்பத்தையும் அழிக்கிறான்

பதம் புரிந்த பாதம் —
ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கில் விட்டில் பூச்சி போலே தாங்களாகவே வந்து மாய்ந்தனர்
ஜகத் சக்கரம் -படைப்பு அழிப்பு எனும் சுழற்சி -யுகங்களின் சுழற்சி -பிறப்பு இறப்பு கர்ம சக்கரம் சுழற்சி –
ஸூ தர்சன சக்கரத் தாழ்வான் ஏந்தி இருப்பவனுக்கு வண்டிச் சக்கரம் ஒரு பொருட்டோ
நமக்கு ஆபத்து வந்தால் இறைவனின் திருவடிகளே தஞ்சம் -இறைவனுக்கும் அவையே தஞ்சம் -திருக் காலாண்ட பெருமான் –

உத்தமன் பேர் –
கோபியர் குல குருவான கர்க்காசார்யர் -கிருஷி -பூமி – ண-மகிழ்ச்சியையும் -குறிக்கும் கிருஷ்ணன் –
-எங்கும் வசிப்பவன் -வ ஸூ –அத்தை விளையாட்டாகச் சொல்லுகிறபடியால் தேவன்
-கண் அழகு உடையவன் -காக்கும் இயல்வினன் கண்ணன்
-அண்ணன் பலசாலி -பல ராமன் -ஒருத்தி வயிற்றில் இருந்து கர்ப்பத்தை இழுத்து வந்து மற்று ஒருத்தி வயிற்றில் புகுத்துப் பிறந்த படியால் சங்கர்ஷணன்
பேராயிரம் பேருடை உத்தமனின் ஒரு பெயர் போற்றிப் பாடினாலும் நீங்காத செல்வம் நிறையுமே –

முழந்தாள் இருந்தவா காணீரே –
பலராமன் வெள்ளி மலையைப் போலே மோடு மோடு என்று விரைந்தோட -கண்ணன் கருத்த யானை மெதுவே அடியிடுவது போலே பின் தொடர
-முழு முதல் கடவுள் என்பதற்கு அடையாளமாக சங்கு சக்கர அடையாளம் அவன் நடந்த இடம் எங்கும் சித்திரம் எழுதினால் போலே பதிந்தது
-பகவத் பக்தியில் குழந்தைகளான நமக்கு மெதுமெதுவே அறிவூட்டித் தவழ வைத்து பக்திப் பாதையில் விரைந்து செல்ல அருளுகிறான் –
பெரும் பாசத்தோடு நன்மை செய்யும் தாயைப் போலே நாம் தடுத்தாலும் நமக்கு கிருஷ்ணன் நன்மையே செய்து அருளுகிறான் –

மண்ணை உண்டான் விண்ணைக் காட்டினான் –
மஞ்சாடு வரை எழும் கடல்கள் எழும் வானகமும் மண்ணகமும் மற்றும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் கண்டாள் பிள்ளை வாயுளே
-யசோதை மட்டும் அல்ல மற்ற ஆயர் மாதரார்களும் –உயர்ந்தவன் எளிமையாக இருந்தால் அனைவரும் அவனையே பற்றுவர் –

திருடியது வெண்ணெயையா மனத்தையா –
வெண்ணெய் போன்ற ஜீவாத்மாக்கள் -அவன் உடைமையே தானே -ஸ்வதந்தரமாக திரிந்தால் வலுக்கட்டாயமாக தன பால் ஈர்த்து
பக்தியை ஊட்டி தன்னிடம் சேர்த்து கொள்வான் –
சரீர தொடர்பை தள்ளி ஆத்மாவை மட்டும் அழைத்துச் செல்வதைப் போலே வெண்ணெயை மட்டும் விழுங்கி வெறும் கலத்தை உடைப்பான்
ஜீவன் ஸ்வயமாகவே இனியவன் -அவன் கண்ணன் திரு உள்ளத்துக்கு விருந்தானால் மட்டுமே பிறவிப் பயன் பெறுவான் –

கட்டுப் பட்டானா -கட்டை அவிழ்த்தானா –
அஞ்சிய அனநோக்கும் தொழுத கையும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–சீர் மல்கும் ஆய்ப்பாடியில் பரம பதம் ஏக தேசம் என்னலாம் படி
பக்தி என்னும் கயிற்றை அவனே தந்து அருள்வான் –அவன் கட்டுப் பட்டதை த்யாநித்தால் நாம் பிறந்து சம்சாரத்தில் கட்டுப் பட வேண்டியதில்லை –

மரம் சாய்ந்தது –அறம் தழைத்தது –
குபேரனின் புதல்வர்கள் -மணிக்ரீவன் நள கூபரன் -முனிவர் சாபத்தால் மரங்களாக பிறக்க -கண்ணன் திருவடி பட்டதால் சாபம் நீங்கினர் –
தேவையற்ற இரட்டைகள் -விருப்பு வெறுப்பு /காமம் கோபம் /அஹங்காரம் மமகாரம் /இவற்றால் பீடிக்கப் பட்டு வலிய நெஞ்சு -உடையராய் நிற்க
நிர்ஹேதுக அருளால் அவற்றை முறித்து ஈர நெஞ்சினராக்கி -பக்தர்கள் ஆக்கி தம்முடன் சேர்த்துக் கொள்கிறான் –

ஒரு கன்று அழிந்தது -பல கன்றுகள் பிழைத்தன –
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -உள் திருப்பாதங்களின் சிகப்பை காட்டி அருளினான் -ஆஸ்திக நாஸ்திகரை
அடையாளம் கண்டு கொள்வது கடினமே -கண்ணன் திருவடிகளே நமக்கு அந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் –

எல்லாம் கண்ணன்
அகாசூரன் மலைப்பாம்பு -தலை வெடித்து மாயும் படி செய்து அருளி ஆயர் பிள்ளைகள் உடன் களித்து இருக்க
பரம் பொருள் என்பதையும் மறந்து அசூயைப் பட்டான் பிரமன் –
ஓராண்டு காலம் கண்ணன் தானே இடையர்களாகவும் மாடு கன்றுகளாகவும் வடிவு எடுத்து தினமும்
கோகுலத்துக்கும் ப்ருந்தாவனத்துக்குமாக சென்று வந்தான் –
பிரபஞ்சத்தையே தன உடலாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் -இதை ஒரு பழக்காரி கூட உணர்ந்தாள்-ஆனால் பிரமன் இழந்தானே –

கோவிந்தா கோபாலா —
ஸ்ரீ ராமாவதாரத்தால் வீறு பெற்றது குரங்கினம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தால் வீறு பெற்றது கோ வினம்
விந்ததி -அடைந்தவன் -பாலனம் -காத்தல் -நித்ய சூரிகளுக்கு அதிபதியாவதைக் காட்டிலும்-திவத்திலும் பசு நிரை மேய்ப்பது உகப்பவன் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளை-நீரூட்டி விடுவானாம் -திமிறி ஓடும் பொழுது எழும் புழுதி அளைந்த பொன் மேனி காண உகக்குமே
-பசுக்கள் தங்களுக்குக் காப்பாளானாக தங்களையும் நம்பாது பிறரையும் நம்பாது கண்ணனையே நம்பும் -கண்ணனும் தப்பாது காப்பான்
-கண்ணன் தானாக நம்மை அருள வரும் பொழுது விலக்காமையே வேண்டுவது –

பிடித்தான் பாம்பை -அது எடுத்தது ஓட்டம் –
காளிங்கன் விருத்தாந்தம் -ஒவ் ஒரு ஜீவனும் இறைவனுக்கு அடங்கித் தொண்டு பிரிய வேண்டியவனே –
இதை மீறு நாம் ஸ்வ தந்திரமானவர்களே என்று நினைத்தால் கண்ணன் நம் தலையில் ஏறித் தன தலைமையை நிலை நாட்டுவார்

கொக்கும் கழுதையும் காளையும் –
நமக்கு உள் பகைவர்கள் -இவற்றைப் போக்க நாம் சக்தர்கள் அல்லர் -அவனை சரண் அடைந்து இவற்றை ஒழிக்க வேண்டும் -என்பதை உணர்த்தவே
பகாசூரன் கொக்கு -வடிவிலும் -தேனுகாசூரன் கழுதை வடிவிலும் அரிஷ்டாசூரன் -காளை வடிவிலும் -வந்தவர்களை கண்ணன் அளித்தார் –
இந்த அல்ப விலங்குகளை அழிக்க அவன் வர வேண்டிய தேவை இல்லையே -எனினும் பக்தர்களின் பகைவர்களை நானே அழிக்கிறேன்
என்பதை உணர்த்தவே இந்த லீலைகள் –
முதலில் உள் பகைவர்கள் அழிந்தால் வெளிப்பகைவர்களே இல்லாதபடி சாந்தமாகி விடுவோம் –

தட்டாமாலை
பிரலம்பாசூரன்-ஆயர் சிறுவனாகவே வேடம் பூண்டு -பலராமன் அவன் தலையிலே ஓங்கி அடித்து அவனை முடித்தான் –
ஆத்மா சம்சாரத்தை வென்று முக்தி அடைய ஒரே வலி -தோற்றோம் -நம -அவனைச் சரண் அடைந்து வணங்குவது தானே –
நாம் ஆணவத்துடன் இருந்தால் நம்மை தொர்கடிப்பான் -நாம் வணங்கினால் நம்மை தன தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்வான் –

அதோர் அற்புதம் கேளீர் –
மூங்கில் பெருமிதம் -வேணுகோபாலன் -முரளீதரன்–வம்சிதரன் -நாவலம் பெரிய தீவினில் நங்கைமீர் இதோர் அற்புதம் கேளீர்
-குருவின் மூலம் உபதேசிப்பது போலே புல்லாங்குழல் -ஒரே காற்று வெளி வரும் துளைகளின் அமைப்புக்கு ஏற்ப ஸ்வரம் மாறும்
-ஆத்மாக்கள் அனைவரும் ஸ்வா பாவிகமாக ஒரே தன்மை -இருந்தும் ஏற்கும் உடலைப் பொறுத்து இயல்பில் மாறுவர் –
நாம் ஒவ் ஒருவருமே தேஹம் என்னும் புல்லாங்குழலில் உறைபவர்கள் -நம் இச்சைப்படி உழலாமல் அவன் கைப் புல்லாங்குழலாக இருந்தால் எத்தனை ஆனந்தம் –

உன்பேர் பாடி ஆடை உடுப்போம் –
ஒரு கையால் வணங்கினால் குற்றம் -வெட்கம் மறந்து இரு கைகளாலும் தொழுது ஆடைகளைப் பெற்றார்கள்
-உண்மையான பக்திக்கு வெட்கம் விளக்க வேண்டுமே –

உண்மை அறிந்த ரிஷி பாதணிகள் –
வேர்த்து நெடும் நோக்கு கொண்ட கண்ணன் கடாஷம் பட்ட ரிஷி பத்னிகள்-அப்போதே புனிதம் அடைந்தனர் –
வெற்றுச் சடங்காக ஜபம் பிரதஷினம் செய்வதால் என்ன பயன் -இறைவன் உடைய உகப்புக்காக என்னும் அறிவே முக்கியம்

கல் எடுத்து கல் மாரி காத்தான் –
ஸ்ரீ நாத த்வாரகை -ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரி சேவை -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி –
அஹம் வோ பாந்தவ ஜாத-அவனுக்கு நைவேத்யம் செய்து கலத்தது உண்ண வேண்டும் –

கூத்தன் கோவலன் –
ராசக்ரீடை –குடக் கூத்தாட்டம் -அவன் ஒருவனே புருஷோத்தமன் -நாம் யாவரும் ஸ்திரீ ப்ராயர்கள்
-ஜீவாத்மா பரமாத்மா உறவேல் ஒழிக்க ஒழியாதது அன்றோ
எல்லையற்ற இந்த இறைப் பேரன்பை யன்றோ ஜ்ஞாநியரும் நல தவ முனிவரும் நாடுகின்றார்கள் இதுவே தர்மங்களுக்குள் தலையான தர்மம் –

மன்மதன் தோற்றான்
-கோபிகா கீதம் -ஆற்றாமை உடன் அருளி -சிகை அலங்காரம் புன் சிரிப்பு பீதாம்பரம் உடன் நடுவில் தோன்றி
மன்மதனும் பிச்சை எடுக்கச் செய்யும் அழகோடு மிளிர்ந்தான் –
தறி கேட்டு ஓடும் நம் மனதை அடக்க சாஸ்திரம் ஆசார்ய உபதேசம் உள்ளன -இவற்றுக்கு வசப் படாத போது தன் பேர் அழகைக் காட்டி
நம் மனத்தை கொள்ளை கொள்கிறான் –
தன் பால் ஆதாரம் பெருக வைக்கும் அழகன் அரங்கன் –

கோகுலம் ஒரு வழிப்பாதை —
பக்தர்கள் இங்கேயே இருப்பார் -எதிரிகள் நுழைந்து அழிந்து மீள மாட்டார்கள்
கேசி குதிரை வடிவுடன் இறுதியில் வர அநாயாசாமாக வாயைப் பிளந்து முடித்தான் -வ்ரஜ பூமிக்கே பெருமையான ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
-விளையாடிய இடங்களை எல்லாம் இன்றும் நமக்கு அளித்து பிறவித் துயரை போக்குகிறது
-கண்ணன் 10 வருஷங்கள் பால்ய சேஷ்டிதங்கள் காட்டி அருளிய இடங்கள் நமக்கு சேம வைப்பு –

அழிக்க ஆள் இல்லை -அழைக்க அக்ரூரர் வந்தார் –
அழகனை தர்சிக்கும் ஆவல் உடன் தேரை செலுத்தினார் கண்ணனைக் கண்டு கட்டித் தழுவிக் கொண்டார் -கோபிகள் அவரை க்ரூரர் என்று ஏசினார்கள்
யமுனைக் கரையில் தேரை நிறுத்தி நீராட கண்ணனை உள்ளே கண்டார் -திகைத்து வெளியே நோக்கினார் -தேரிலும் கண்டார்
அனைத்தும் கண்ணனே -செய்பவனும் செய்விப்பனும் எல்லாம் கண்ணனே -இந்த உண்மையை அறிந்தால்
அவனது கையில் நாம் ஒரு கருவி என்பதை உணரலாம் –
வண்ணான் -த்ரிவிக்ரா மாலா காரர் -உள்ள குறுக்குத் தெரு தேடி சென்று அருளினான்
-நல்ல புஷ்பம் ஆடை ஆபரணம் கண்டாள் அது கண்ணனுக்கே என்னும் தூய மனம் கொள்வோம்

நெஞ்சில் ஈரம் இல்லை -எனவே நெருப்பென நின்ற நெடுமால் –
குவலையா பீடம் -முஷ்டிகன் சாணூரன் -முடித்து -காஞ்சனை பிடித்து இழுத்து நெஞ்சில் ஈரம் ஒரு மூலையிலாவது ஒட்டி உள்ளதா பார்த்து
அது இல்லாததால் தானே நெருப்பாக இருந்து அவனை அழித்தான்
உடனே நேராக தாய் தந்தையை வணங்கச் சிறைக்கு ஓடி அனைத்து சேஷ்டிதங்களையும் காட்டிய நெடுமால் அன்றோ
மனத்தாலும் அறிந்தே பாப்பம் புரிந்தால் தண்டிக்கிறான் -செய்த குற்றங்களுக்கு மனத்தால் இரங்கி பரிதவிப்பதே பிராயச் சித்தத்தின் முதல் படி –

மறுபடியும் முதலில் இருந்து
எல்லாம் நந்தன் பெற்றனன் நல வினை இல்லா வ ஸூ தேவன் இழந்தனனே –காணுமாறு அருளாய் –
அனைத்தையும் காட்டி அருளினான் -அப்போதே நடப்பது போலே தேவகியின் கண் முன்பே –அவன் குணங்கள் திருவிளையாடல்கள்
பற்றிய த்யானமே எப்போதும் உடன் இருந்து நம்மைக் காத்து அருளும்

64 நாள்கள் 64 கலைகள்
சாந்தீபினி -அவந்திகா -இன்றைய உஜ்ஜையினி-ஸூ தாமா உடன் பயின்றார் -ஆய கலைகள் 64 -64 நாள்களில் பயின்றார்
குரு மூலமே கற்க வேண்டும் என்பதைக் காட்டி அருளி -குரு தஷிணை யாக பிள்ளையை மீட்டுக் கொடுத்து அருளினார் –

கண்ணைத் திறந்தான் -கண்ணனைக் கண்டான் –
முசுகுந்தன் -இஷ்வாகு வம்ச மன்னன் -எழுப்பி ஒதுங்கி நிற்க -கண் விழித்து காலயவனன் பார்த்து அவனை சாம்பல் ஆக்கினான்
-இந்த்ரன் கொடுத்த வர பலன் -இன்று டாகூர் த்வாரகை சேவை -ரண சோட்ராய்-கண்ணனை அண்டியவர்க்கு என்றுமே பயம் இல்லையே

த்வராபதி மன்னன் –
120 mile கடலுக்குள் நிர்மாணிக்க சங்கல்பித்தான் -கோமதி நதி சங்கமம் ஆகும் இடம் –
குசஸ் தலீ-ரைத்தவர் குசங்களை தர்ப்பைப் புற்களை பரப்பி தவம் புரிந்த இடம் –
52 கோடி யாதவர்களை குடி ஏற்றினான்
இந்த்ரன் ஸூ தர்மா ராஜ சபையையும் பாரிஜாத மரத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணித்தான்
இன்று த்வாரகையில் இருக்கும் கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ர நாபனால் ஸ்தாபிக்கப் பட்டது –
யயாதி சாபத்தால் பட்டாபிஷேகத்தை இழந்த யது குலத்தை மீண்டும் உயர்த்தி முடி சூடினான்
நாமும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை நம் தலையால் வணங்கினால் நாம் இழந்ததை எல்லாம் மீண்டும் பெறலாம்-

காணாமலே காதல் –
விதர்பா தேசம் -தலை நகர் -குண்டினபுரம் -பீஷ்மகன் திருமகள் ஸ்ரீ ருக்மிணி பிராட்டி
அண்ணன் ருக்மி -அத்தை மகன் -சிசுபாலன் –
ஏழு ஸ்லோஹங்கள் -ருக்மிணி சந்தேசம் –
தாருகன் -தேரோட்டி -கூட்டிக் கொண்டு கண்ணன் பிராட்டியை தேரில் ஏற்றிக் கொண்டு த்வாரகை அடைந்து அனைவரையும் கூட்டி
கோலாஹல திருமணம் புரிந்தார் -பெருமானை எப்போதும் பிரியாத ஸ்ரீ மகா லஷ்மி பிராட்டியே ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –
கருணையே உருவான திருமகளைத் தஞ்சமாகப் பற்றி அவள் அருளாலே பெருமானைச் சரண் புகுந்து முக்தி பெறுவோம் –

பழி துடைத்த விவாஹம் –
சத்ராஜித் -ஸ்யமந்தக மணி -ஜாம்பவான் மகள் ஜாம்பவதி திருக்கல்யாணம் –
ஸ்ய மந்தக மணி போன்ற ஜீவாத்மா கண்ணனின் திரு மார்பை அணி செய்யவே படைப்பப் பட்டவன் –
-நம் ஆத்மாவை நம் சொத்து என்று நினைக்காமல் அது கண்ணனின் உடைமை என்ற உண்மையை உணர வேண்டும் –

நரகன் அழிந்தான் -பண்டிகை பிறந்தது –
அதிதி குண்டலங்கள் -வருணன் குடை பறித்து -இந்த்ரனை வென்றவன் நரகாசூரன் -ப்ராக்ஜோதிஷா புரம் தலை நகராக கொண்டவன் –
16108 பெண்களை சிறை வைத்து இருந்தான் -முதலில் முரன் அசுரனை வென்று முராரி பெயர் பெற்றான்
நரகாசூரனை வென்று -அவன் வேண்டுகோள் படி நரக சதுர்த்தி -தீபாவளி –
ஒரு ஜீவனுக்கு பெருமாள் உடன் நடக்கும் திருமணமே முக்தி –ஆகவே ஒரு பக்தன் தன் வாழ்க்கை முடிவதை நினைத்துக் கலங்காமல்
தனக்கு மீண்டும் பிறவி இன்றி கண்ணன் உடன் என்றும் கூடி இருக்கவே விரும்புவான் –

குடும்பத் தலைவன் –
பிரபஞ்சத்துக்கே தலைவன் கண்ணன் –
ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதான மகிஷிகள் -ருக்மிணீ -ஜாம்பவதி -சத்யபாமா -காளிந்தீ -மித்ரவிந்தா -சத்யா என்னும் நப்பின்னை –பத்ரா –லஷ்மணா –
மற்றும் 16108 மனைவியர் -ஒவ் ஒருவருக்கும் பத்து பிள்ளைகள் –
கண்ணன் ருக்மிணி -திருக் குமாரர் -பிரத்யும்னன் -அவர் ருக்மியின் மகள் ருக்மவதியை மணந்தார் –
அவர்கள் திருக் குமாரர் -அநிருத்தன் -ருக்மியின் பேத்தி லோசனாவை மணந்தார்
என்னிடம் ஒன்றும் இல்லை -என் அடியார்கள் இடமும் ஒன்றும் இல்லை –நான் பூரணன் -அடைவதற்கு ஒன்றும் இல்லை –
என் பக்தர்கள் பூர்ணனான என்னை அடைந்த பின்பு அடைவதற்கு ஒன்றும் இல்லையே -வேறு ஒன்றையும் விரும்ப மாட்டார்கள் என்றபடி
அச்சுதனின் திருப்பாதம் அடைந்தவர்கள் மற்ற எதையும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்களே –

கல்யாணத்தில் முடிந்த சண்டை –
பாணாசூரனின் புதல்வி உஷை -சித்ரா லேகா அவள் தோழி-மாயா சக்தியால் தூக்கி கொண்டு வரச் செய்து -மணம் புரிய –
பாணன் உடைய 998 கரங்களையும் வெட்டி -பாணனுக்கு உதவ வந்த பரம சிவன் அவன் புத்ரர்கள் அக்னி காலி க்ருதியை தோற்று ஓடினர்
திருமால் நம்மை காக்க வந்தால் எவரது உதவியும் தேவை இல்லை -அவரே தண்டிக்க வந்தால் மற்ற யார் உதவிக்கு வந்தாலும் பயன் இல்லை

முதல் பூஜை –
தர்மர் ராஜ சூய யாகம் -சகா தேவன் -கண்ணனைத் தவிர வேறு யாருக்கும் கொடுத்தால் காலால் உதைப்பேன் என்ன தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள்
இவனே ஆதி வேர் தனி முதல் வித்து -தனக்கு ஒரு காரணம் இல்லாதவன் நான்முகனையும் தன் நாபி கமலத்தில் இருந்து படைத்த நாராயணன்
-மோஷ ப்ரதன் இவன் ஒருவனே -வேதைக சமைதி கம்யன்-காரண வஸ்துவையே த்யானித்து மோஷம் பெற வேண்டும் என்றது ஸ்ருதிகளும்
கண்ணனையே த்யானித்து கடைத்தேறுவோம்-

அச்சுவை பெறினும் வேண்டேன் –
த்வாராக நிலயா அச்யுதா கோவிந்தா புண்டரீகாஷா -சரண் அடைந்த திரௌபதிக்கு புடைவை சுரந்தது திருநாமம் இ றே
கண்ணன் அருகில் இருந்தால் கோபியர்களின் அஹங்காரம் ஆகிய ஆடையைப் பறிப்பான் –அவன் கருணையிலும் விஞ்சியது அன்றோ அவன் திருநாமம் –

கன்றைத் தேடி ஓடும் தாய்ப்பசு –
அஷய பாத்தரத்தை -ஸூ ர்யன் கொடுத்த பரிசு கொண்டு பலருக்கும் உணவு அளிப்பாள் த்ரௌபதி -துர்வாசர் சீடர்கள் உடன் மதியம் வர –
அதில் ஒட்டி இருந்த பருக்கை உண்டு அவர்கள் பசி தீர்ந்தது -பாசம் உள்ள பசு கன்றைத் தேடி ஓடிச் சென்று உதவுமே -கண்ணனே பசு -பாண்டவர்கள் கன்று
நாமும் அவனது பக்தர்கள் ஆனால் பாசத்துடன் நம்மை நாடி வந்து காத்து அருள்வான் கண்ணபிரான் –

கொடுத்துப் பெற்றாரா -பெற்றதுக்குக் கொடுத்தாரா –
குசேலர் -சேலா ஆடை -குசேலர் கிழிந்த ஆடை அணிந்தவர் அவல் கொடுத்தது செல்வம் பெறுவதற்கு அல்லவே -கண்ணன் காட்டிய அன்புக்கு
தன்னை சமர்ப்பிப்பதையே நோக்காக கொண்டவர் -பக்தியையும் முக்தியையும் தவிர வேறு எதற்காகவும் கை ஏந்த வேண்டாம் –

காட்டியது எளிமையினை -பெற்றதோ பெருமையினை
துர்யோதனனால் ஆண்ட முடியாத கண்ணன் விதுறர்க்கு வசப்பட்டு இருந்தார் -வலியவர்களின் ஆணவத்தை அடக்குவார்
-கண்ணன் எளியவர்களின் பக்திக்கோ என்றும் அடங்குவார் –

தேர்ப்பாகனின் போர்பாகு –
உடல் ஒரு தேர் -ஜீவன் பயணிப்பவன் தேரோட்டி கீதாசார்யன் -விஜய சாரதி -பார்த்த சாரதி -நம் வாழ்க்கை சரியான இலக்கை அடைய
அந்த பார்த்த சாரதி இடமே நம் பரங்களை ஒப்படைப்போம்

மாசுசா –
வேதாந்த கருத்துகளை தித்திக்கும் பாலாக கறந்து கொடுக்கவே கீதாசார்யன் –
விச்வத்தையே உருவகமாகக் கொண்ட அவன் திருக்கைகளில் ஒரு கருவியே நாம் -தன்னை சரண் அடைந்தவர்களின்
அனைத்து பாபங்களையும் போக்கி தூயவர் ஆக்கி அருளுகிறான் ஆதலால் சோகப் படாதீர் என்று அருளிச் செய்கிறான்
ஒரு ஆசார்யனாகவும் இருந்து கீதோபதேசம் செய்து அருளி நம்மை உஜ்ஜீவிப்பிக்க வந்த அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

அடியார்க்கு எளியவன் –
ஆழி கொண்டு மறைத்து ஜயத்ரதனை அழித்து -பீஷ்மரை அழிக்க சிகண்டியை நிறுத்தி
-துரோணரை முடிக்க தர்மபுத்ரரை பேசச் சொல்லி -ஆயுதம் எடேன் என்றாலும் பீஷ்மர் வார்த்தை மெய்ப்பிக்க ஆயுதம் எடுத்ததும்
அடியவர்க்கு மெய்யன் கண்ணன் எது வாயினும் அது மெய்யே
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -நிலை நின்ற தர்மம் அவனே-

பாதம் பட்டது உயிர் வந்தது –
அஸ்வத்தாமா எய்த அஸ்தரம் அபிமன்யுவின் மனைவி உத்தரை கர்ப்பத்தை கலக்க -உத்தரை சரண் புக –
கண்ணன் சக்ராயுதம் எனது நுண் வடிவில் கர்ப்பத்துள் புகுந்து காத்தார் -உயிர் அற்ற பிண்டம் போல் கரிக்கட்டையாய் பிறந்தது
-கண்ணன் -நான் ப்ரஹ்ம சாரி எனபது உண்மையானால் பொய்யே சொல்லாதவன் எனபது உண்மையானால் இக் குழந்தை உயிர் பெற்று எழட்டும்
-என்று கூறி திருவடியால் தீண்ட குழந்தை உயிர் பெற்றதே –
அவன் திருவடி பற்றி முக்தி பெறுவோம்

நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
பகவன் நாம சங்கீர்த்தனமே சிறந்த தர்மம் -யுதிஷ்ட்ரனே உன் அருகில் நின்று கொண்டு தனது திரு நாமத்தை கேட்டுக் கொண்டு இருக்கும்
இந்தக் கண்ணனே பரம் பொருள் -என்றார் பீஷ்மர்
கலியுகத்தில் அவன் திரு நாமங்களை பாடிக் கொண்டே அவனை மனக் கண்ணாலும் கோயில்களிலும் சாதுக்கள் உருவிலும் தர்சிப்பதே சிறந்த தர்மம் –

கையில் புல்லாங்குழல் ஆனால் உலக்கையில் புல்
மண்ணின் பாரத்தை போக்கி அருளினார் -இனி தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள திரு உள்ளம் கொண்டார் —
அதற்காக திரு விளையாடல் ஓன்று நடத்தினார்
யாதவர்கள் ஆணவம் கொண்டனர் -சாம்பன் என்பவனுக்கு பெண் வேடம் இட்டு ரிஷிகள் இடம் கேலியாக இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்
-சபிக்க உலக்கை பிறக்கும் உங்கள் குலம் அழியும் -என்றார்கள்
அப்படியே உலக்கை பிறக்க -தங்கள் குலம் காக்க அத்தை பொடியாக்கி கடலில் வீச
-மரப் பொடிகள் கோரைப் புற்கள் -இரும்பு பகுதி மீன் உண்ண -அத்தை ஒரு வேடன் எடுத்து கூராக்கி வைத்தான்
-யாதவர்கள் கோரைப் புற்களால் அடித்துக் கொண்டு மாண்டனர்
-ஆணவப் பட்டால் கடவுளுக்கே உறவானாலும் அழிவு வருமே -ஆணவம் அகன்றால் அழியா வாழ்வு கிட்டும் –

மண்ணின் பாரம் தீர்த்தார் விண்ணில் ஏகினார் —
கண்ணனும் யாதவனே -தான் சங்கல்பித்த படியே தன்னுடைச் சோதி எழுந்து அருள பிரபாச ஷேத்ரத்தை அடைந்தார் –
அங்கு ஒரு மரத்தடியில் ஒரு திருவடி மேல் மற்று ஒரு திருவடியை வைத்து சாய்ந்து கொண்டு இருந்தார் –
மானின் முகம் என்று அந்த வேடன் அம்பு எய்ய -அந்த உலக்கையின் இரும்பு பாகமே அம்பின் முனையாக
அதுவே காரணமாக மண்ணைத் துறக்க எண்ணினார் – பயந்து நின்ற வேடனுக்கு அபயம் தந்து ஸ்வர்க்க வாழ்வையும் அளித்தார் –
தன் தேரோட்டி இடம் தாருகா உடன் த்வாரகைக்கு சென்று த்வாரகையை கடல் விழுங்கப் போவதை சொல்லச் சொல்லி
அங்கு இருந்து பிரபாசத்துக்கு போக சொல்லி
யாரும் இல்லா தனிமையில் முதலில் தனது தேர் சங்கு சக்கரம் ஆகியவை விண்ணில் ஏற பின்னால் தன் அப்ராக்ருத திருமேனி உடன் ஸ்ரீ வைகுண்டம் அடைந்தார் –
ஸ்ரீ மத் பாகவதம் மற்றும் உள்ள புனித நூல்கள் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் வடிவிலே என்றும்
நம்முடனே இருந்து நல் வழி நடத்தும் கண்ணனின் மாயம் என்ன மாயமே –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading