ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
———————————————————————————————————————————————————————————————
அகில ஜகத்தி தாநுசாசநபரபான வேதத்திலும்
வேத உபப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருத்தங்களானச்ம்ருதீதிஹாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய்
சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்வ ம்மாய்
நம் ஆச்சார்யர்களுக்கு ஆபத் தனமாய் இருந்துள்ள அர்த்த தவத்தையும் பிரதிபாதிக்கையாலே
த்வயம் என்று திரு நாமத்தை யுடைத்தாய் இருந்துள்ள வாக்த்வயம் -பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –
அதாகிறது –
1–ஸ்ரீ யபதித்வமும் –
2–நாராயணத்வமும்-
3–நாராயணனுடைய சர்வ லோக சரண்யமான சரணாரவிந்த யுகளமும்-
4–அதினுடைய ப்ராபகத்வமும் –
5–தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள ப்ரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகிலாத்ம நித்ய கைங்கர்ய பிரதாநார்த்தமான நித்ய சம்பந்தமும்
7- கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும் –
8- சர்வ ஸ்வாமித்வத்வமும்
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமும் ஆகிற
அர்த்த விசேஷங்கள் –
ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷத்தின் யுடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய்
உபநிஷத்தாய்
இருந்துள்ள -திருவாய்மொழியில் பத்துப் பாத்தாலும் இப்பத்து அர்த்தத்தையும்
பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்துக் கொண்டு போருவர்கள் –
அதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்-1-3-1- என்றும்
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திரு மகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும்
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்றும்
பூ மகளார் தனிக் கேள்வன்-1-9-3- -என்றும்
மைந்தனை மலராள் மணவாளனை –1-10-4- என்றும்
ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து–
இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7- என்றும்
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-2-7-1- என்றும்
நாரணன் முழு வேழுலகுக்கும் நாதன் –2-7-2- என்றும்
நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து –
மூன்றாம் பத்தால் –
நாண் மலரடித் தாமரை -3-3-9- என்றும்
அங்கதிரடியன் -3-4-3- என்றும்
அவன் பாத பங்கயம் -3-6-4- என்றும்
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10- என்றும்
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணனுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதமாய்த்து –
நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி யுய்த்தவர் -4-2-8- என்றும்
வல்வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11- என்றும்
தொல் வினை தீர -4-5-2- என்றும்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய -4-5-4- என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-7-7- என்றும்
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9- என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிகள் கூட்டினை -4-9-9- என்றும்
அக்தே யுய்யப் புகுமாறு -4-2-11- என்றும்
உய்வுபாயம் மற்றின்மை தேறி -4-3-11- என்றும்
அநிஷ்ட நிவ்ருத்தி
இஷ்டபிராப்தி கரத்வ
லஷணமான ப்ராபகத்வம் பிரதிபாதிதமாய்த்து-
அஞ்சாம் பத்தால் —
தமியேனுக்கு அருளாய் -5-7-2- என்றும் –
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10- என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -5-8-3-என்றும் –
அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக் கொண்ட -5-8-11-என்றும் –
நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமானடி மேல் சேமம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் -5-9-11- என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11- என்றும்
நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11- என்றும் –
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள ப்ரார்த்த நாகர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதமாய்த்து –
ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்திருந்து –6-5-8- என்றும்
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11- என்றும் –
ஒசிந்த வொண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும் –
என் திருமார்வற்கு 6–8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே -6-9-3- என்றும்
கைங்கர்ய ப்ரதா நார்த்தமான லஷ்மீ தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து-
ஏழாம் பத்தால் –
கன்னலே யமுதே -7-1-2-என்றும் –
கொடியேன் பருகின்னமுதே -7-1-7- என்றும் –
அலைகடல் கடைந்த ஆரமுதே -7-2-5- என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ–7-9-9- என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும் –
கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யத்வம் பிரதிபாதித்த மாய்த்து –
எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் -8-1-3- என்றும் –
விண்ணவர் கோன் நாங்கள் கோனை -8-2-2- என்றும் –
அமர்ந்த நாதனை -8-4-10- என்றும் –
மூவுலகாளி –8-9-5- என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11- என்றும்
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதமாய்த்து –
ஒன்பதாம் பத்தால் –
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து-9-2-1- என்றும் –
நின் தீர்த்தவடிமைக் குற்றேவல் செய்து -9-2-2- என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3- என்றும் –
கொடு வினையெனும் பிடிக்க -9-2-10- என்றும்
உறுவதிது வென்று உனக்காட்பட்டு -9-4-4- என்றும் –
ஆட்கொள்வான் ஒத்து -9-6-7- என்றும் –
நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4- என்றும் –
நித்ய கைங்கர்யம் ப்ரதி பாதிதமாய்த்து —
பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது-10-1-7- என்றும் –
கெடுமிடராய எல்லாம் -10-2-1- என்றும் –
எழுமையும் ஏதஞ்சாரா-10-2-2-என்றும் –
தீரும் நோய் வினைகள் எல்லாம் -10-2-3- என்றும் –
இப்பிறப்பு அறுக்கும் -10-2-5- என்றும் –
உன்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9- என்றும் –
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7- என்றும் –
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3- என்றும் –
விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம் -10-4-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9- என்றும் –
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11-
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் 10-8-5– என்றும் –
பிறவி கெடுத்தேன் -10-8-3- என்றும் –
அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -10-8-7- என்றும் –
அவா வற்று வீடு பெற்ற -10-10-11-என்றும்
கைங்கர்ய ப்ரதி பந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதமாய்த்து –
இப்படி
ஸ்ரீ யபதித்வ பிரமுகங்களாய்-
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள உபாதேய அர்த்தங்களை
பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்யத்வமும் –
திருவாய் மொழியும் –
பகவத் சரணார்த்தி களாய்-அநந்ய உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
போக ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் —
ஸார சங்க்ரஹம் முற்றிற்று –
————————————————————————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply