ஸப்த காதை —5—என் பக்கல் ஓதினார் இன்னார்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் -மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு—-5-

———————————————————————-

அவதாரிகை –

இப்படி உத்தேச்யனான சிஷ்யனுக்கு
ஸ்வாச்சார்யா விஷயத்தில் பிரேமம் அற்று இருக்கை
ஸ்வரூப ஹாநி யானவோபாதி
உபதேஷ்டாவான ஆச்சார்யனுக்கு
தன்னிடத்தில் தன்னை மாறாடி நினைக்கை யாகிற
ஆச்சார்யத்வ பிரதிபத்தியும்
சிஷ்யன் இடத்தில் சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற
ஸ்வ சிஷ்ய பிரதிபத்தியும்
அப்படியே
சஹஜ தாஸ்யத்தை யுடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலில்
ஜன்ம நிரூபணமும்
ஸ்வ ஸ்வரூப ஹாநியாய விடும்
என்கிறார் –

—————————————————————————-

வியாக்யானம் –

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும் –
சிலர் தன பக்கலிலே ஞான உபஜீவனம் பண்ணும் அளவில்
அறிவிலேன் -என்றும்
அஜ்ஞ்ஞோஹம் -என்றும்
அஜ்ஞா நா மக்ர கண்யம் மாம் -என்றும்
சொல்லுகிறபடியே
தன்னை அஜ்ஞ்ஞரில் தலைவனாக நினைத்து
அவர்களும் தானும்
போதயந்த பரஸ்பரம் -பண்ணினார்களாக பிரதி பத்தி பண்ணி இராதே –
என்னிடத்தில் இன்னார் இன்னார் இவர்த்த விசேஷங்களை
அதிகரித்துப் போந்தார்கள் ஆகையாலே
அவர்கள் எனக்கு சிஷ்யர்களாய் இருப்பார்கள்
என்று நினைத்து இருக்கை இ றே
இந்த துஸ் ஸ்வ பாவம் –

அவ்வளவேயோ –
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –
அப்படியே
தான் சிலருக்கு ஜ்ஞ்ஞான உபதேசம் பண்ணும் அளவில் –
என் முன் சொல்லும் மூ வுருவா -என்றும்
ஸ்ரோத்ரு ஷூ பிரதம ஸ்வயம் -என்றும் -சொல்லுகிறபடியே
ஸ்வாச்சார்யனை உபதேஷ்டாவாகவும்
ஸ்ரோதகர்களில் தன்னை முந்தின ஸ்ரோத்தாவாகவும்
ஸ்வ உபதேச்யரை தனக்கு ஸ ப்ரஹ்மசாரிகளாகவும்
பிரதி பத்தி பண்ணி இராதே
தன்னை
இவர்களுக்கு உபதேஷ்டாவாகவும்
அவர்கள் தனக்கு உபதேச்யராகவும்
நினைத்து
நான் இன்னார்க்கு இன்னபடி அஜ்ஞ்ஞாதஜ்ஞாபனம் பண்ணிக் கொண்டு போந்தேன்
ஆகையால்
என்னிடத்தில் ஆச்சார்யத்வம் ஆகிற நன்மை இரா நின்றது
என்று நினைத்து இருக்கை யாகிற
இந்த துஸ் ஸ்வ பாவமும் –
இயல்வு -ஸ்வ பாவம் –

அவ்வளவேயோ –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும் –
அப்படியே
பதிம் விச்வச்ய-என்றும்
ஜகத் பதீம் -என்றும்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும்
இறைவா -என்றும்
சொல்லுகிறபடியே
சர்வ ஸ்வாமியான எம்பெருமான் பக்கலிலே
சிநேக பூர்வ அநு த்யானம் பக்திரித்யபி தீயதே
பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரி கீர்த்தித –
என்னும்படியாக சிநேக பூர்வகமாக நித்ய சேவை பண்ணுமவர்களுக்கு
நடையா வுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் -என்கிறபடியே
பரம ஸ்நேஹிகளாய்க் கொண்டு
அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்விதராய் சஹஜ தாஸ்யத்தை யுடைய ராய் இருந்துள்ள
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடத்திலே
வைஷ்ணவோத்பததி சிந்தனம்
மாத்ரு யோநி பரீஷா யாஸ்துல்ய மா ஹூர்மநீஷிண-என்று
மாத்ரு யோநி பரிஷை யோடு ஒக்க சாஸ்த்ரங்களில்
சொல்லப் படுகிற ஜன்ம நிரூபணமும்-

ஜன்ம நிரூபணம் ஆவது –
ஜாதி நிரூபணம்
இது குற்றத்துக்கும் இழவுக்கும் உப லஷணம்-
பகவத் பக்தி தீபாக் நிதக்த துர்ஜாதி கில்பிஷா -இத்யாதி களாலே
தத் ப்ரபாவத்தாலே விச்வாமித்ரனுக்கு ஷத்ரியத்வம் நிவ்ருத்தமானாப் போலே
பகவத் பிரசாதத்தாலே துர்ஜாதி நிவ்ருத்தமாம் என்று சொல்லுகையாலே
அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -அதஸ்மிம்ச்தத் புத்தியாய் இ றே இருப்பது –

அன்புடையோர்
நிதி யுடையோர் -என்னுமா போலே
இதுக்கு மேற் பட்டு இருப்பதோர் சம்பத்து இல்லையே
அன்புடையோர் சன்ம நிரூபணம் -ஆவிக்கு நேரே அழுக்கு-
மற்றையார் இடத்தில்
ஜன்ம நிரூபணம்
யதா வஸ்த்தித்த வஸ்து விஷயம் ஆகையாலே
அழுக்கு அன்று போலே காணும் –

சன்ம நிரூபணம் ஆவிக்கு நேரே அழுக்கு –
கீழ் சொன்ன இரண்டும்
தேஜோ த்ரவ்யமான ஆத்மவஸ்துக்களுக்கு பாகவத அபசாரத்தில் முற்பட
பரி கணிதமான ஜன்ம நிரூபணமான இது நேரே அழுக்கு –

அன்றியே
ஸ்வாச்சார்யா விஷயத்தில் அன்பு இல்லாமையும்
ஆத்மாஜ்ஞ்ஞான மயோமல-என்கிற ஆத்மவஸ்துக்களுக்கு
இம் மூன்றுமே நேரே அழுக்கு என்னவுமாம் —

அங்கனும் அன்றிக்கே –
அஞ்சு பொருளும் அளித்தவன் பால்
அன்பிலாமை நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு
நேர் கொடு நேர் நாசகம் ஆனால் போலே
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வு -முதலான இம் மூன்றும்
ஆத்மாவுக்கு நேர் கொடு நேர் நாசகம்-
என்னவுமாம் –

நேரே அழுக்கு
அஹங்கா ரார்த்த காமாதிகளைப் போலே
சத்வாரகம் அன்றியே
அத்வாரமாகவே அழுக்கு –

க்ரூர நிஷித்தம் என்னும்படி இ றே இவற்றின் கொடுமை இருப்பது –

ஆக
இப்பாட்டில் -பூர்வார்த்தத்தாலே
ஆச்சார அனுவர்த்தன பிரகரணத்தில்
தன்னை மாறாடி நினைக்கை யாவது -தன்னை ஆச்சார்யன் -என்று நினைக்கை -இத்யாதியாலும்
மனஸ் ஸூ க்குத் தீமை யாவது
ஸ்வ குணத்தையும்
பாகவத தோஷத்தையும்
நினைக்கை -இத்யாதியாலும்
பாகவத அபசாரம் தான் அநேக விதம்
அதில் ஓன்று அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -இத்யாதியாலே
கீழ் பிரகரணத்தில் சொன்ன அர்த்த விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————–

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading