ஸப்த காதை —4–தன்னை யிறையை—பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

தன்னை யிறையைத் தடையைச் சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை யொரு மந்த்திரத்தின் இன்னருளால்
அஞ்சிலும் கேடோட வளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான்——4-

——————————————————————-

அவதாரிகை –

பின்னையும்
ஹிம்வாஹலோக நியாயேன இரண்டாம் பாட்டைக் கடாஷித்து அருளி
அதிலே நிர்த்தேசித்த அஞ்சு பொருள் தான் இன்னது என்றும்
அதுதான் இவ்விடத்தே பிரதி பாதிக்கப் பட்டது என்று
அருளிச் செய்யா நின்று கொண்டு
ஏவம் பூதமான இவ் வர்த்த பஞ்சகத்தை
தன்னுடைய பரம கிருபையால் உபதேசித்து அருளிய
ஆச்சார்யன் பக்கலிலே பிரேமம் அற்று இருக்குமவன்
விஷத்தில் காட்டிலும் அதி க்ரூரன்
என்கிறார்-

—————————————————————————

வியாக்யானம் –

ஆதரத்தில் பௌனபுந்யம் அலன்க்ருதியாய் இருக்கும் போலே காணும் –
தன்னை இறையை -இத்யாதிகளில்
த்வதீயையை பிரதமை யாக்கி
திரு மந்திர பிரதிபாத்யமாய் இருந்துள்ள
ஸ்வ ஸ்வரூபாதிகள் ஐந்திலும் கேடோடே அளித்தவன் -என்று அன்வயிக்க்கவுமாம்

அன்றிக்கே
மந்திரத்தில் ஐந்திலும் வைத்துக் கொண்டு
தன்னை இறையை
தடையை
சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை
கேடோடே அளித்தவன் –
என்றும் அன்வயிக்க்கவுமாம் –

யஸ் யாஸ்மி -இத்யாதிகளில் வைத்துக் கொண்டு
பர ஸ்வரூபம் முன்னாக அர்த்த பஞ்சகத்தை நிர்தேசித்தார்
முதல் பாட்டில்
பிள்ளை அருளிச் செய்த அர்த்த பஞ்சக ரஹச்யத்தை உட்கொண்டு
ஸ்வ ஸ்வரூபம் முன்னாக அர்த்த பஞ்சகத்தை நிர்தேசிகிறார் -இதில் –

தன்னை –
திருமந்த்ரத்தில் பிரதம பதமான பிரணவத்தில் –
பகவத் சேஷத்வ ஆஸ்ரயமாக
மகாரத்தாலே பிரதி பாதிக்கப் படுகிற
தானும்

யிறையைத்-
தனக்கு வகுத்த சேஷியாக பிரதிபாதிக்கப் படுகிற
அகார வாச்யனான
எம்பெருமானும் –

தடையைச் –
தான் அவனைப் பற்றும் இடத்தில் இடைச் சுவராக
த்வதீய பதமான நமஸ் சில்
சஷ்ட்யந்த மகாரோக்தமான
விரோதியும் –

சரண் நெறியை –
அப்படியே தான் அவனைப் பெறுகைக்கு
நிரபாய உபாயமாக
அகண்ட நம பத உக்தமான
சரணா கதியும் –

மன்னு பெரு வாழ்வை -‘-
இச் சரணா கதி லப்தமான
சவிபக்திக நாராயண பதோக்தமான
கைங்கர்யம் ஆகிற நித்ய புருஷார்த்தமும் –

யொரு மந்த்திரத்தின் –
இப்போது படும் துறை இது ஒன்றுமே போலே காணும்
மற்ற வ்யாபக த்வ்யத்துக்கும்
இப் பேறு பாடில்லை இ றே-

ஒரு
இவ்வர்த்த விசேஷங்களை
பிரதிபாதிக்கக் கடவதாயும்
பிரபன்னன் ஆகிற பிரமாதாவுக்கு
அர்ச்சாவதாரம் ஆகிற ப்ரமேயத்தை அறிவிக்கும் பிரமாணமாயும்
சர்வ உபாய ஸூன்யர்க்கு சர்வ ஸ்வம்மாயும்
அந்தனுக்கும் அசக்தனுக்கும் வைத்த தண்ணீர் பந்தலாயும்
சம்சார விஷ தஷ்டனுக்கு சித்த ஔஷதமாயும்
அதனனுக்கு நிதியாயும்
எம்பெருமானைப் பற்றும் அதிகாரிக்கு மங்கள ஸூ த்ரமாயும்
ஒரு பாகவத நியமனத்தை வெறுத்தல் மறுத்தல் செய்யாதே
அது போக்கியம் என்று இருக்கை யாகிற பல ஞானத்தை யுண்டாக்கக் கடவதாயும்
தனக்கு பிராப்தி அணித்தாய் இருக்கும் அளவிலும் பகவத் விஷயத்தில் அபி நிஷ்டரான
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு தத் கிஞ்சித் காரத்துக்கு உறுப்பாக
இங்குத்தை வாசத்திலே ஒருப்படுகை யாகிற
பல யாதாம்ய ஞானத்தை விளைக்கக் கடவதாயும்
ஜ்ஞானப் ப்ரதன் ஆச்சார்யன் -என்னும் நினைவை ஜனிப்பிக்குமதாயும்
ஞான வர்த்தகர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னும் பிரதிபத்தியை பிறப்பிக்குமதாயும்
ஞான விஷயம் எம்பெருமான் என்னும் உணர்வை யுண்டாக்குமதாயும்
ஜ்ஞான பலம் பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் என்னும் தெளிவைக் கொடுக்குமதாயும்
அக் கைங்கர்யத்துக்கு சரமாவதி பாகவத கைங்கர்யம் என்னும் பிரதிபத்தியை பிறப்பிக்குமதாயும்
போருகையாலே
நமந்திர அஷ்டாஷராத்பர -என்றும்
நாஸ்திசஅஷ்டாஷராத்பர-என்றும்
சொல்லுகிறபடியே வாசகங்களில் தனக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லாதபடி
தனக்குள் நின்ற வஸ்துவைப் போலே அத்விதீயமாய் யாய்த்து
பெரிய திரு மந்த்ரம் தான் இருப்பது –

ஒரு மந்திரத்தின் –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
தன்னை அனுசந்திப்பார் ஆரேனும் ஆகவுமாம்
அவர்களுடைய இஷ்ட ப்ராபண பர்யந்தமாயும்
அநிஷ்ட நிவாரண பர்யந்தமாயும் இருந்துள்ள
ரஷணத்தைப் பண்ணுமதாகையாலே
இத்தை மந்த்ரம் -என்கிறது –

இப்படி அர்த்த பஞ்சகத்தை உபதேசித்தது இத்தலையில் ஏதேனும் ஒரு நன்மை கண்டோ என்ன –
இன்னருளால் –
அங்கன் அன்றிக்கே
நிர்ஹேதுகமாக -என்கிறார் –

இன்னருளால் –
பல்லார் அருளும் பழுது -என்னும்படியான
ஈஸ்வரனின் அருளிலும் அதிசயமாய் இ றே இவ்வருள் தான் இருப்பது –
அது -ஸ்வ தந்த்ரமாயும்
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாயும்
இருக்கும்
இவனுடைய அருள்
பரதந்த்ரமாயும்
மோஷைக ஹேது பூதமாயும் இருக்கும் –

இன்னருளால் –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறபடியே
இத்தலையிலொரு நன்மை அபேஷியாதே
பரம கிருபையாலே-

அஞ்சிலும் கேடோட வளித்தவன் –
இந்த மந்திர பிரதிபாத்யமான
அர்த்த பஞ்சகத்திலும்
அஞ்ஞான
சம்சய
விபர்யயங்கள்
அறும்படி ஞான உபதேசம் பண்ணி அருளின சதாச்சார்யன் பக்கலிலே –

அஞ்சிலும் கேடோட அளிக்கை யாவது –
மகர வாச்யனான சேதன ஸ்வரூபம்
ப்ரக்ருதே பரமாய்
ஜ்ஞானானந்த லஷணமாய்
ஜ்ஞான குணகமாய்
நித்தியமாய்
நிர்விகாரமாய்
அணுவாய்
ஏக ரூபமாய்
பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் என்றும்-

அகார வாச்யனான பர ஸ்வரூபம் –
லஷ்மி ஸ நாதமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
உபய விபூதி நிர்வாஹகமாய்
சர்வ அபாஸ்ரயமாய்
சர்வ பிரகாரத்தினாலும் ரஷகனாய்
சேஷியாய்
இருக்கும் என்றும்

ஷஷ்ட்ட்யந்த மகார உக்தம்மான விரோதி ஸ்வரூபம்
தேக ஆத்மா அபிமான ரூபமாய்
தேவதாந்திர பரதவ புத்தி விலஷணமாய்
பர உபகாந்தர உபாயத்வ பிரதிபாத்யாத்மகமாய்
கைங்கர்ய ஸ்வாரத்ததா புத்தி ரூபமாய்
பிராரப்த சரீர சம்பந் தாத்மகமாய் –
சம்சார வர்த்தகமாய்
அஹங்கார மமகார ரூபமாய்
அத்யந்த ஹேயமாய்
த்யாஜ்யமாய்
இருக்கும் என்றும்

அகண்ட நம பத உக்தமான உபாய ஸ்வரூபம்
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வஞ்ஞமாய்
சர்வ சக்தியாய்
சஹா யாந்தர நிரபேஷமாய்
சர்வ பல பிரதமாய்
பிராப்தமாய்
வ்யபிசார விளம்ப விதுரமாய்
ச்வீகார விஷய பூதமாய்
இருக்கும் என்றும்

சவிபக்தகமான நாராயண பத உக்தமான புருஷார்த்த ஸ்வரூபம்
அனுபவ ஜனித ப்ரீதி காரிதமாய்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசிதமாய்
பரம பிராப்யமாய்
பரார்த்த தைக வேஷமாய்
ஸ்வரூப அனுரூபமாய்
ஸ்வர்த்தத்தா கந்த ரஹிதமாய்
நிரதிசய போக்யமாய்
யாவதாத்மா பாவியாய்
இருக்கும் என்று வெளி இட்டுக் கொண்டு-

தேகாத்ம ப்ரமம்
ஸ்வ தந்த்ராத்மா ப்ரமம்
அந்ய சேஷத்வ ப்ரமம்
பகவத் விஷயத்தில் அநீஸ்வர ப்ரமம்
தேவதாந்திர பரதவ ப்ரமம்
தத் சமத்வ ப்ரமம்
அஹங்கார மமகாராத் யுபபாதேயத்வ ப்ரமம்
பிராரப்த சரீரஷ்ய அநிவிர்த்தத்ய ப்ரமம்
தத் அனுபந்தி ஷூ பந்தித்வ ப்ரமம் –
ச்வீகார உபாயத்வ ப்ரமம்
கைங்கர்ய ச்வார்த்தத்ய ப்ரமம்
தத் ச்வீகர்த்ருத்வ ப்ரமம்
ப்ரப்ருதிகமான அஜஞான உதய அஜ்ஞ்ஞானாதிகள் எல்லாம்
வாசனையோடு போம்படி கிருபை பண்ணுகை-

அளித்தவன் பால் அன்பிலார் –
இப்படி உபதேசித்த ச்வாச்சார்யன் விஷயத்திலே
யஸ்ய தேவே பராபக்திர்யதா தேவே ததா குரௌ-என்று
அநச்ய கர்த்தவ்தையா விதிக்கப் பட்ட ப்ரேமம் இன்றிக்கே இருக்குமவர்கள் –

இப்படி -இருந்துள்ள இவர்களை நீர் நினைத்து இருப்பது எங்கனே என்ன
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான் –
நஞ்சு -கேடு
இவர்கள் அதிலும் கேடு
ஹேயமாய் நச்வரமான சரீரத்தை
ஸ்வ பஷணத்தாலே முடிக்க வற்றான விஷத்தில் காட்டிலும்
உபாதேயமாய் நித்தியமான ஆத்மவஸ்துவை முடித்துக் கொள்ளுமவர்கள் ஆகையாலே
நா பக்ராமதி சம்சாராத் சகலு ப்ரஹ்ம ஹா பவேத் -என்று
மகா பாதகியாக
சொல்லப்படுகிற நித்ய சம்சாரி யோபாதி
அதி கிரூரர் என்று அறுதி இட்டாய்த்து நான் இருப்பது
என்கிறார் –

இருப்பன் நான் –
என்று ஸ்வ பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்கிறார்

இருப்பன்
இவ்விருப்பில் எனக்கு ஒரு சலம் இல்லை
இதுவே யாய்த்த் யாத்ரை –

நான் –
பிள்ளை லோகாச்சார்யர் உடைய விஷயீ காரத்தைப் பெற்ற எனக்கு
இவ்விருப்பு வந்தேறி யாய் இராது இ றே-

——————————————————————————-

ஆக இம் மூன்று பாட்டாலும்
அதிகார நிஷ்டாக்ரம பிரகரணத்தில் –
அசஹ்யாபசாரமாவது -நிர்நிபந்தனமாக பகவத் பாகவத
விஷயம் என்றால் அசஹமாநனாய் இருக்கையும்
ஆசார்ய அபசாரமும் —அவை யுண்டானாலும்
இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும்
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய்-இத்யாதிகளில் சொல்லுகிற
அர்த்த விசேஷங்களை வெளி இட்டு அருளினார் -ஆயிற்று-

—————————————————————————————-

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading