தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை -110-118–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -110-

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களின் யுடைய
உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இவற்றைக் கொண்டு ஈஸ்வரன்
அண்ட ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்படியை அருளிச் செய்கிறார் -மேல்

இவை கூடினால் அல்லது
கார்ய கரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும்
சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே

ஈஸ்வரன் இவற்றை எல்லாம்
தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி
அதுக்கு உள்ளே
சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –

அதாவது –
இவை கூடினால் அல்லது கார்ய கரம் அல்லாமையாலே –
நாநா வீர்யா ப்ருதக் பூதாஸ் ததஸ் தே சம்ஹதம் விநா
நாசக்நுவந் ப்ரஜாஸ் ஸ்ரஷ்டு மசமாகம்ய க்ருதஸ் நாச (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53 )

(அதன் பின்னர் பலவிதமான வீர்யங்கள் கொண்டதும் தனித்தனியாக உள்ளதும் ஆகிய
அந்த மஹத் முதலான தத்வங்கள் ஒன்றாகச் சேர்ந்தால் அல்லாமல் பிரஜைகள் போன்றவற்றைப்
படைப்பதற்கு ஒன்றாகச் சேரத் தக்க வரிசையை அடைவது இல்லை )-என்கிறபடியே

சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே
நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற
இம் மஹதாதி பதார்த்தங்கள் பரஸ்பர சம்ஹதம் ஆனால் அல்லது
அண்ட ரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே -என்கை-

மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக் சுவர் இடுவாரைப் போலே –
அதாவது –
ப்ருதக் வீர்யங்களாய் ப்ருதக் ஸ்த்திதங்களாய் இருக்கிற
ம்ருத சிகதா சலிலங்களை-அந்யோந்யம் சேர்த்து
தத் சமுதாயாத் மகமான தொரு த்ரவ்யமாகி
பித்தி ரூபமான தொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி –
அதாவது –
ஜகத் ஸ்ருஷ்டாவான ஈஸ்வரன்
சமேத் யாந் யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா ஏக சங்காத லஷ்யாச் ச சம் ப்ராப்யைக் யம சேஷத
மஹதாதயோ விசேஷாந் தா ஹயண்ட முத் பாதயந்திதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53 )

(ஒன்றை ஓன்று சார்ந்து நிற்பவைகளாக ஒன்றை ஓன்று தொடர்பு கொண்டவைகளாக –
ஒரு குவியலாகக் காணத் தக்கைவைகளாய் -உள்ள அவற்றைக் கொண்டு மஹத் தொடங்கி
அவற்றின் விசேஷமான பூதங்கள் முடிய உள்ள பலவும் சேர்ந்து அண்டத்தை உத்பத்தி செய்கின்றன ) -என்கிறபடியே
இவற்றை எல்லாம் அந்யோந்யம் சம்ஹதமாக்கி
இவற்றாலே அண்ட சிருஷ்டியைப் பண்ணி -என்கை –

இவ் வண்டத்துக்கு உள்ளே மஹதாதி கார்யங்களை அடையக் காண்கையாலே
மஹதாதி பதார்த்தங்கள் எல்லா வற்றையும் சேர்த்து
அண்ட சிருஷ்டியைப் பண்ணினான் என்னும் இடம் ஸூவ்யக்தம் ஆகையாலே

பூதேப் யோண்டம் மஹா புத்தே ப்ருஹத்
தது தகேசயம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55)
(பூதங்களில் இருந்து அண்டம் உண்டாகிறது பெரியதாக உள்ள அந்த அண்டம் நீரிலே உள்ளது )என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் அது உதகத்திலே கிடக்கும் என்று சொன்னதும்

அப ஏவ ச சர்ஜாதௌ தாஸூ வீர்யம் அபா ஸ்ருஜத தத் அண்டம பவத் தைமம் சஹஸ்ராம்சு ச சம ப்ரபம் (மனு ஸ்ம்ருதி -1-7-9 )
(தொடக்கத்தில் நீரைப் படைத்தான் -நீரில் அண்டத்தைப் படைத்தான் –
அண்டமானது பொன்னைப் போன்ற ஸூர்யனை ஒத்த தேஜஸ்ஸூ கொண்டதாக ஆனது ) -என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னதும்
பூதாந்தரதுக்கும் உப லஷணம்-

அதாவது
பூர்வ பூதாம்சங்களோடே சம் ஸ்ருஷ்டமுமாய்
பிருத்வியும் தனக்கு உள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் நின்றும் உத்பன்னமாய்
அதிலே கிடக்கும் -என்றபடி –

இப்படி அண்ட சிருஷ்டியை பண்ணும் படியை அருளிச் செய்து

அநந்தரம்
இந்த பாஹ்யமான பூதங்கள் ஆந்தரமான ஆகாசாதிகளாய் பரிணமித்த பின்பு
அவற்றைக் கொண்டு லோக விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
அந்த லோகங்களில் தேவாதி ஜீவ விபாகங்களைப் பண்ணுகைக்காகவும்
இவ்வண்டத்துக்கு உள்ளே
பத்தாத்மா சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவை சிருஷ்டித்து அருளும் படியை அருளிச் செய்கிறார் –

அதுக்கு உள்ளே சதுர் முகனை சிருஷ்டித்து அருளும் -என்று
சதுர் முகனுக்கு பத்தாத்மா சமஷ்டி பாவமாவது
இவ் வண்டத்துக்கு வேண்டும் கர்ம வஸ்ய சேதனர் -இவன் சரீரத்தில் யுண்டாய் கிடக்கை

இப்படி சதுர் முகனை சிருஷ்டித்து
இனி மேல் யுண்டான சிருஷ்டி எல்லாம் சத்வாரமாக நின்று செய்வதாக இறே –

—————————————————-

சூர்ணிகை -111-

அது தன்னை தர்சிப்பிக்கைக்காக சமஷ்டி சிருஷ்டியிலும் வ்யஷ்டி சிருஷ்டியிலும்
சர்வேஸ்வரன் செய்யும் க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல்

அண்டத்தையும்
அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்

அண்டத்துக்கு உட்பட்ட
வஸ்துக்களை
சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று
யுண்டாக்கும் –

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும் –
அதாவது –
சமுதாய கார்யமான அண்டத்தையும்
தத் காரணமான மஹதாதி பதார்த்தங்களையும்
சத்ய சங்கல்பனான தன்னுடைய அவயவஹித சங்கல்பத்தாலே
யுண்டாக்கும் -என்கை –

சோபித் யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷூர் விவிதா ப்ரஜா அப ஏவ
ச சர்ஜாதௌ தாஸூ வீர்யம பாஸ்ருஜத ததண்டமபவத் தைமம் சஹஸ்ராம்ஸூ சம் ப்ரபம் ( மனு -1-8-9-)

(பரமாத்மா சங்கல்பம் செய்து தனது திரு மேனியில் இருந்து பலவற்றையும் படைக்க வேண்டும் என்று எண்ணி
முதலில் நீரைப் படைத்தான் -அந்த நீரில் வீரியமான அண்டத்தைப் படைத்தான் –
அது பொன் மயமான ஸூர்யனுக்கு நிகரான தேஜஸ்ஸூ கொண்டதாக விளங்கியது )-என்னக் கடவது இறே –

அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் –
அதாவது
சதுர்முகாதி சேதனர்களுடைய ஹ்ருதயங்களில் இருந்து —
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சன்னிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹநஞ்ச -(ஸ்ரீ கீதை -15–15)
(அனைவருடைய இதயங்களிலும் நான் உள்ளேன் -என்னிடம் இருந்து ஞாபகமும் மறதியும் ஏற்படுகின்றன )
சங்கல்ப ஞானாதிகளை ஜெநிப்பித்துக் கொண்டு –
அண்டாந்த்ர வர்த்திகளான சகலத்தையும் ஸ்ருஷ்டிக்கும் –

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யே ஸத்வஜா தேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜ் யஸ்ய ஸம்ஸ்தவ் தத் ஸர்வம் வை ஹரேஸ் தனு (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-33 )
(எந்தப் பொருள்கள் நான்முகனால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டனவோ அவை அனைத்துக்கும்
பகவான் ஸ்ரீ ஹரியே காரணமாக உள்ளான்
அனைத்துமே அவனுடைய சரீரம் அல்லவோ )

யாதொரு சத்வ சமூகத்தால் -யாதொரு வஸ்து ஸ்ருஷ்ட்க்கப்படுகிறதோ
அதில் ஈஸ்வரன் காரணமாக இருக்கிறான் -அந்தர்யாமியாக -இருந்து -என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் ப்ரஹ்மத்தின் சரீரம் என்றதாயிற்று –

ஈஸ்வரன் சகல கர்த்ரு சரீரியாய்க் கொண்டு சகல காரியங்களையும் ஸ்ருஷ்டிக்கும் -என்னக் கடவது இறே

——————————————————————

சூர்ணிகை -112-

ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி (சூர்ணிகை-110 )-என்று
சர்வேஸ்வரன் மஹதாதி பதார்த்தங்களைச் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணும்
என்னும் இவ்வளவு இறே கீழே அருளிச் செய்தது

இப்போது
இந்த அண்ட பஹூத்வத்தையும்
அவற்றின் யுடைய கட்டளை இருக்கும் படியையும்
அவை தான் சர்வேஸ்வரனுக்கு இன்ன விநியோகத்துக்கு உறுப்பு என்னுமத்தையும்
அவற்றின் யுடைய பரிணாம பிரகாரத்தையும்
அருளிச் செய்கிறார் –

அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு கரீடா கந்துக ஸ்த்தாநீயங்களாய்
ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-

அண்டங்கள் தான் அநேகங்களாய்-
அண்டாநாம் து சஹாஸ்ராணாம் சஹஸ்ராண்ய யுதானி ச
ஈத்ருசா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச- (ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-7-27 )
(ஆயிரம் அண்டங்களுடைய ஆயிரம் ஆயிரம் மற்றும் பதினாயிரம் என்னும் பிரிவுகள் கொண்ட
அண்டங்களுடைய பல கோடிகள் உள்ளன )என்னக் கடவது இறே-

பதினாலு லோகங்களோடே கூடி –
பதினாலு லோகங்கள் ஆவன –
கீழில் அண்ட கடாஹலத்துக்கு மேல் –
எண்பத்து மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் ,யோஜனை
உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே

சப்த திஸ்து சஹாஸ்ராணாம் த்வி ஜோச்சராயோபி கத்யதே
தச சஹஸ்ர மேகைகம் பாதாளம் முனி சத்தம
அதலம் விதலஞ்சைவ நிதலஞ்ச கபஸ்திமத் மகாக்க்யம்
ஸூ தலாஞ் சாக்யர்ம்
பாதாளஞ்ச சைவ சப்தமம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-12 )

(பூமியின் உயரம் 70000 யோஜனை ஆகும்
1 யோஜனை -12 -15 கி மீட்டர்
பாதாள லோகம் ஒவ்வொன்றும் 16000 யோசனைகள் உயரம் மற்றும் அகலம் கொண்டதாக உள்ளன
அதலம்-விதலம் -நிதலம் -கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாளம் என்று ஏழு லோகங்கள் உள்ளன ) –என்கிறபடியே

ஓர் ஓன்று பதினாலாயிரம் யோஜனத்து அளவும் உயர்தியையும் பரப்பையும் யுடைத்தாய்
தைத்ய தானவ பந்நக (நாகங்கள் ) ஸூபர்ணாதிகள்(பறவைகள் ) வர்த்திக்கும் தேசமாய்

சுக்ல க்ருஷ்ண அருணா பீதாச் சர்க்கராச் சைல காஞ்சனா பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ராசாத சோபிதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-3 )
(மைத்ரேயரே எந்த ஒரு லோகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் மாளிகைகளில் உள்ள தரை முதலானவை
வெளிர் நிறம் உள்ளவைகளாயும் மலைகளையும் கரும் கற்களாயும் -வெண் நிறமாகவும் உள்ளதோ )-என்கிறபடியே
சுக்லங்களாயும் க்ருஷ்ணங்களாயும் அருணங்களாயும் பீதங்களாயும்
வாலுகா மயமான சர்க்கரா ரூபங்களாயும் சைல ரூபமாயும் பொன்னாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை யுடையவையாய்
விலஷணமான மாளிகைகளாலேயும் ப்ராசாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமுமாய்
அதலம் என்றும்
விதலம் என்றும்
நிதலம் என்றும்
கபஸ்திமதம் என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
மஹாதலம் என்றும்
ஸூ தலம் என்றும்
பாதாளம் என்றும்
பேரை யுடைத்தாய் அதோ லோகங்கள் ஏழும்

இதுக்கு மேலே
எழுபதினாயிரம் யோஜனம் அகலத்தை யுடைத்தாய்
சப்த த்வீப சாகர பர்வதாதி விசிஷ்டமாய்
பாதசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
பத்மாகாரமான பூலோகமும்

பூ லோகத்துக்கு மேலே ஆதித்யனுக்கு கீழே
நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
கந்தர்வாதிகள் வர்த்திக்கும் தேசமான
புவர் லோகமும்

ஆதித்யனுக்கு மேலே த்ருவனுக்கு கீழே
பதினாலு நூறாயிரம் யோஜனத்து அளவு உயர்த்தியை யுடைத்தாய்
சாதிகாரரான க்ரஹ நஷத்ர இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேசமான
ஸ்வர் லோகமும் –

த்ருவனுக்கு மேலே
ஒரு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்
விநி வ்ருத்தாதி காரஸ்து மஹர் லோக நிவாசின
(அதிகாரம் நீங்கியவர்கள் மற்றும் மஹர் லோகத்தில் உள்ளவர்கள் ) –என்று
நிவ்ருத்த அதிகாரராய் அதிகார அபேஷரான இந்த்ரிராதிகள் வர்த்திக்கும் தேசமான
மகா லோகமும்

அந்த மகா லோகத்துக்கு மேலே
இரண்டு கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடையதாய்
ப்ரஹ்ம புத்ரர்களான சனகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான
ஜனர் லோகமும்

ஜனர் லோகத்துக்கு மேலே
எட்டுக் கோடி யோஜனத்து அளவும் உயர்த்தியை யுடைத்தாய்-
வைராக்ய அக்ரஜரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான
தபோ லோகமும் –

தேஷாமேஷாம் கேசன ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யாந்யே சந்தி தத்ரைவ லோகா –
விஷ்னோர் அந்ய சநதி லோகா விசாலாஸ் தாம் ஸ் தாந் லோகாந் தானுபாஸ்ய வ்ரஜந்தி

(ஒரு சிலர் ஸத்ய லோகத்தில் நான்முகனுடைய லோகம் உள்ளதாகவும் –
அங்கேயே ருத்ரனுடைய லோகம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்
ஒரு சிலர் விஷ்ணுவின் பரந்த லோகம் அங்கு உள்ளதாகக் கூறுகிறார்கள் ) -என்கிறபடியே
ப்ரஹ்ம விஷ்ணு சிவர்களும்
அவர்களை உபாசித்து தத் பிராப்தி பண்ணினவர்களும்
வர்த்திக்கும் தேசமான
சத்ய லோகமும்

ஆக ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு
அறுபது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும்
ஐம்பது கோடி யோஜனம் அண்டோச்சர்யமாய் இருக்கும் என்பாரும் யுண்டு

அதில் –
ஸூர்யாண்ட கோள யோர் மத்யே கோட் யஸ்யுர் பஞ்ச விம்சதி
(ஸூர்ய மண்டலமானது அண்ட கோளங்களின் நடுவில் 25 கோடி யோஜனை பரப்பளவில் உள்ளது ) -என்கிற
சுக்ர வசனத்தின் படியே
ஸூர்யனுக்கு மேலே இருபத்தஞ்சு கோடியும்
கீழே இருபத்தஞ்சு கோடியுமாய் இருக்கும்-

இப்படி இருந்துள்ள சதுர் தச புவனங்களோடு கூட
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு –

அதாவது
கீழ்ச் சொன்ன பதினாலு லோகத்தையும்
ஏதத் அண்ட கடா ஹேன திரச் சோர்த்த்வ மதஸ் ததா கபித் தஸ்ய யதா பீஜம் சர்வதோ வை சமாவ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-22 )
(விளாம் பழத்தின் விதைகளானவை எவ்விதம் ஓட்டுடன் நான்கு பக்கங்களிலும் நன்றாக சூழப்பட்டு
நிறைந்து உள்ளனவோ அதே போன்று இந்த லோகங்கள் அனைத்தும்
அண்ட கோளத்தால் கீழும் மேலுமாகச் சூழப் பட்டு உள்ளன ) -என்கிறபடியே
உள் வாயில் விளாம் தசையை விளாவோடு எங்கும் ஒக்க ஆவரிக்குமா போலே
கோடி யோஜன மானஸ்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்திதே
(அண்ட கோசமானது கோடி யோஜனை அளவு கொண்டது ) -என்று
கோடி யோஜனம் எடுப்பம் அவகாச தயா உக்தமான படி
அண்ட கடாஹம் ஆவரித்து நிற்கும்

சாண்ட கடாஹமான இவ் வண்டம்
தசோத் தரேண பயஸா மைத்ரே யாண்டஞ்ச தத் வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-23 )
(மைத்ரேயரே பூமிக்கு பத்து மடங்கு அதிகமான நீராலும் அந்த அண்டம் சூழப்பட்டுள்ளது ) -என்கிறபடியே
தன்னில் பதிற்று -பத்து – மடங்கு பரந்து இருக்கிற ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் –

பஞ்சா சத் கோடி விஸ்தாரா சேய முர்வீ மஹா முனே சஹை வாண்ட கடா ஹேன
சத்வீ பாபதி மஹீ தரா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-4-98 )
(மகா முனிவரே தீவுகள் பெரும் கடல்கள் பெரிய மலைகள் என்று பலவற்றுடன் கூடியுள்ள
அண்ட கோஷத்துடன் சேர்ந்து பூமியானது ஐம்பது கோடி யோஜனை பரப்பு கொண்டது ) என்று
சாண்ட கடாஹமான பூ மண்டலம் பஞ்சாசத் கோடி விஸ்தாரமாகச் சொல்வாரும்

பூ மண்டலம் து சத கோடி விஸ்தாரம் சாண்ட கடாஹம்
(அண்ட கோசத்துடன் கூடிய பூ மண்டலமானது நூறு கோடி யோஜனை பரப்பு கொண்டது )-என்று
ஸ்ரீ வராஹ புராணத்தில் சொல்லுகையாலும்

இப்படி ஸ்கந்த புராணத்திலே சிவ ரஹஸ்யத்திலே பரக்கச் சொல்லுகையாலும்
மேருவைச் சுற்றும் பஞ்சா சத கோடி விஸ்தாரத்தைக் கொண்டு
பூமியை சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுவாருமாய் இருக்கும்

இதில் இரண்டத்து ஒரு மரியாதையை தளமாக்கி அதில்
பதிற்று -பத்து மடங்கு
பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் என்றபடி-

அண்ட கடாஹத்தைப் பற்ற
பதிற்று -பத்து – மடங்கு பெருத்த ஜல தத்வத்தாலே ஆவ்ருதம் என்பாரும் யுண்டு
இப்படி தசோத்தரமாயக் கொண்டு ஜல தத்தவத்தை தேஜஸ் தத்வம் ஆவரிக்கும்
அப்படியே அத்தை வாயு தத்வம் ஆவரிக்கும்
வாயுவை ஆகாசம் ஆவரிக்கும்
ஆகாசத்தை அஹங்காரம் ஆவரிக்கும்
அஹங்காரத்தை மஹத் தத்வம் ஆவரிக்கும்
அந்த மஹத் தத்தவத்தை அவ்யக்தம் ஆவரிக்கும்

தத் அநந்தம் அசங்கயாத ப்ரமாணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-26)
(ப்ரக்ருதி எனப்படும் பிரதானமானது அளவிட இயலாதபடி உள்ளது ) -என்று
அபரிமித ப்ரமாணமான அவ்யக்தத்துக்கு ஆவரணத்வ பிரயுக்தமான
தசோதரத்வம் கூடும்படி எங்கனே என்னில்
ஆயிரத்தில் பத்தும் யுண்டாமா போலே அபரிமித சங்கையில் அதுவும் யுண்டாகையாலே கூடும்-

வாரி வஹ்நி அநில ஆகாஸ சைஸ் ததோ பூதாதிநா பஹி வ்ருதம் தச குணைர் அண்டம் பூதாதிர் மஹதா ததா
அவ்யக்தேந ஆவ்ருதோ ப்ரஹ்மந் தைஸ் சர்வைஸ் சஹிதோ மஹான் ஏபி ஆவரணை அண்டம் சப்தபி
ப்ராக்ருதைர் வ்ருதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-60 )

(அதன் பின்னர் நீர் அக்னி வாயு ஆகாசம் ஆகியவற்றாலும் அஹங்காரத்தாலும் சூழப்பட்ட அண்டத்தாலும்
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கு அதிகமாகச் சூழப்பட்டுள்ளது –
பூதாதியானது மஹத்தாலே சூழப்பட்டுள்ளது -இவ்விதம் அனைத்து விதமான மூடுதலையும் கொண்ட மஹத்தானது
அவ்யக்த்தத்தாலே சூழப்பட்டு உள்ளது
இவ்விதம் ஏழு விதமான மறைவுகள் கொண்டு அண்டம் மூடப்பட்டு உள்ளது ) -என்கிறபடியே

இப்படி தசோததரங்களான சப்த அவரண்ங்களாலும் சூழப் பட்டு ஈஸ்வரனுக்கு க்ரீடா கனதுக சத்தா நீயங்களாய்-
அதாவது
க்ரீடா பரனான பாலனுக்கு க்ரீட நகங்கள் போலே
க்ரீடாரசாநு புபூஷுவான ஈஸ்வரனுக்கு லீலா உபகரணங்களாய் இருக்கை-

ஹரே விஹரசி க்ரீடா கந்து கைரிவ ஜந்துபி (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
(இந்த மனிதர்களைப் பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் ) -என்றும்
மோததே பகவான் பூதைர் பால க்ரீட நகைரிவ
(சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக்கு கருவிகள் போன்று பயன்படுத்துகிறான் )-என்றும் சொல்லுகிறபடியே
ஈஸ்வரனுக்கு விபூதியாக லீலா உபகரணமாய் இறே இருப்பது-

ஜலபுதபுதம் போலே ஏக காலத்திலேயே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும் –
அதாவது
இவ் வண்டங்களை ஈஸ்வரன் சிருஷ்டிக்கும் அளவில் ஓரிரு படையாக இட்டு அகம் எடுக்குமா போலே
க்ரமத்தில் பரிணமிக்கை அன்றிக்கே

ந க்ரமேண விவ்ருத்தம் தத் ஜலபுத் புதவத் சமம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-56 )
(அண்டமானது வரிசையாக வளராமல் நீர்க்குமிழி போன்று சட்டு என்று வெளிப்படுகிறது )-என்கிறபடியே
நீர் குமுழி போலே ஒருக்காலே உத்பன்னங்களாய் -என்கையும்

ஏக காலேன ஸ்ருஜயந்தே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17 )-
(ஒரே காலத்திலே ஸ்ருஷ்ட்டிக்கப் படுகின்றன ) என்கிறபடியே
சகல அண்டங்களும்
ஏக காலத்திலேயே உத் பன்னங்களாய் -என்கையும்-

ஆக –
அண்டங்கள் தான் அநேகங்கள் -என்னும் இடமும்
அவை தான் எல்லாம் ஓன்று போலே இருக்கும் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –

————————————————————-

சூர்ணிகை -113

பூத பஞ்சகங்களுக்கும் தனித்தனியே
விநியோகங்களைத் தர்சிப்பிக்கிறார் –

பூதங்களில்
ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ்ஸூ பச நாதி ஹேது –
ஜலம் ஸேசன பிண்டீ கரணாதி ஹேது
பிருத்வி தாரணாதி ஹேது
என்பார்கள்-

அதாவது –
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது –
சகல பதார்த்தங்களுக்கும் ஸ்திதி கம நாதிகளுக்கு இடம் கொடுத்து கொண்டு இருக்கிற இது
ஆகாசத்துக்கு விநியோகம் என்கை-

அஸ்ய தேஜஸ்ய வியதோ லாகவம் சௌஷ்ம்யம் ஏவ ச சப்த ஸ்ரோத்ரம்
பலம் ப்ரஹ்மந் ஸூஷிரத்வம் விவிக் ததா( ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் )
( நமது சரீரத்துக்கு எடை குறைவான தன்மை -நுட்பமாக உள்ள தன்மை –
சப்தம் செவி மற்றும் வலிமை கொண்டதாக உள்ள தன்மை -துளைகளை யுடைய தன்மை
மற்றும் இடைவெளி கொண்டதாக உள்ள தன்மை ஆகிய பலவும் சரீரத்துக்கு ஆகாயத்தில் இருந்து ஏற்படுகிறது ) -என்று
இதுக்கு அநேக விநியோகங்கள் யுண்டாய் இருக்க இது ஒன்றையும் அருளிச் செய்தது
இதனுடைய ப்ராதான்யத்தைப் பற்ற –
இது தான் மற்றை அவற்றுக்கும் உப லஷணம்

வாயு வஹ நாதி ஹேது –
வஹனம் வஹிக்கை
ஆதி சப்தத்தாலே வ்யூஹன சேஷ்டாதிகளை சொல்லுகிறது
இது தான் –
வாயோஸ் ஸ்பர்ச இந்த்ரியஞ் சேஷ்டாம் கார்க்ககச்யம் ஸ்பர்சமேவ ச வ்யூஹநம்
வஹநம் தேஜஸ் ஸ்வீகரோதி ஸ்துத் தமே-
(ஸ்பர்ச இந்திரியம் அசைத்தல் உறுதியுடன் இருத்தல் ஸ்பர்சம் உலவுதல் எடுத்துச் செல்லுதல் போன்ற
பலவற்றையும் சரீரமானது வாயுவில் இருந்து கொள்கிறது ) -என்று சொல்லப் பட்டது இறே –

தேஜஸ்ஸூ -பஐ நாதி ஹேது –
பசனம் ஆவது பாகம் பண்ணுகை
ஆதி சப்தத்தாலே ஔஷண்ய பிரகாசாதிகளை சொல்லுகிறது
இதுவும்
அக்னே ரௌஷண்யம் பிரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம்
சந்தாப சௌர்ய தைஷண்யானி வர்ணம் பசன சக்தி தாம் ஆதத்தே சஹசா தேஜஸ் சாஹசஞ்ச த்விஜர்ஷப
( உஷ்ணமாக இருத்தல் -ஒளி பொருந்தி இருத்தல் -கண்கள் பொறுத்துக் கொள்ள இயலாமை -தாபம் -ஸுர்யம் –
தீஷ்ண்யம் -நிறம் -சமைக்கும் திறம் -சாகசம் ஆகியவற்றை இந்தச் சரீரமானது அக்னியிடம் இருந்து பெறுகிறது )-என்று
கதிதமாயிற்று

ஜலம் சேசன பிண்டீ கரணாதி ஹேது –
சேசனம் ஆவது -நனைக்கை
பிண்டீ கரணமாவது -திரட்டுகை
ஆதி -சப்தத்தாலே
சைத்ய மார்த்வாதிகளை சொல்லுகிறது
இதுவும்
அத்ப்யச் சைத்யம் சமாதத்தே ஸ்நிக் தத்வம் ரசேந இந்த்ரியம் பிரசாதம் மார்தவம் பிண்டீ கரணம் க்லேத நஞ்ச வை
( குளிர்ச்சி மென்மை சுவை இந்திரியம் தெளிவு மெழுகு போன்ற தன்மை திரட்டும் தன்மை நனைக்கும் தன்மை
போன்றவற்றைச் சரீரமானது நீரிலிருந்து பெறுகிறது )-என்று அபிஹிதம் ஆயிற்று –

பிருத்வி தாரணாதி ஹேது என்பார்கள் –
தாரணம் -தரிக்கை
ஆதி சப்தத்தாலே
மூர்த்தி மத்வ குருத் வாதிகளைச் சொல்லுகிறது

பூமோ கந்த குணம் காரணம் கரிமாணஞ்ச தாரணம் மூர்த்திமதத்வம் சஹிஷ்ணுத்வம் ஸ்வீகரோதி யதா ததம்
(மணம் என்ற தன்மை -மூக்கு பெரியதாக உள்ள தன்மை -தாங்கும் தன்மை -உருவம் கொண்டு இருத்தல் -பொறுமை
போன்றவற்றைச் சரீரமானது பூமியில் இருந்து பெறுகிறது ) -என்று
இதுவும் வயாஹ்ருத மாயிற்று

என்பார்கள் -என்றது –
தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி –

—————————————————————————————–

சூர்ணிகை -114-

இனி ஏகாதச இந்த்ரியங்களினுடைய வ்ருத்தி பேதத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும்
க்ரஹிக்கை தொழில் –

வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்துக்கும்
விஸர்க சிலபகத் யுக்திகள் தொழில்

மனஸ்ஸூ இவை
இத்தனைக்கும் பொது –

அதாவது
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
ஸ்ரோத்ரத்துக்கு சப்த க்ரஹணமும்
த்வக் இந்த்ரியத்துக்கு ஸ்பர்ச க்ரஹணமும்
சஷூஸூக்கு ரூப க்ரஹணமும்
ஜிஹ்வைக்கு ரச க்ரஹணமும்
க்ராணத்துக்கு கந்த க்ரஹணமும்
தொழில் –

த்வக் சஷூர் நாசிகா ஜிஹ்வா ஸ்ரோத்ரம் அத்ர து பஞ்சமம் சப்தாதீ நாம வாப்த்யர்த்தம்
புக்தி யுக்தாநி வை த்விஜ (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-48 )
(சரீரத்தில் உள்ள தோல் கண் மூக்கு நாக்கு மற்றும் காது ஆகிய ஐந்தும் –
ஸப்தம் முதலான புலன்களை அடையும் விதமாக புத்தி தத்வத்துடன் சேர்ந்து உள்ளன )-என்னக் கடவது இறே

இந்த ஸ்லோகத்தில் இந்த்ரியங்களை வ்யுத் க்ரமமாக எடுக்கையாலே
இன்னத்துக்கு இன்ன விஷயம் என்கிற நியமம் ந்யாயம் கொண்டு நிச்சயிக்க வேணும்

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு சப்தாதிகளை க்ரஹிக்கை தொழில் என்னும் இவ்வளவே பிரகாசிப்பது –

வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விஸர்க சிலபகத் யுக்திகள் தொழில்
அதாவது –
இப்படி வ்யுத் க்ரமமாக அருளிச் செய்தது வாக்ய ஸ்வா ரஸ்யத்துக்காக

இத்தால்
வாக்குக்கு உக்தியும்
பாணிக்கு சிலப்மும்
பாதத்துக்கு கதியும்
உபஸ்த்த பாயுகளுக்கு ஜல மல விஸர் ஜனமும் தொழில் என்கை –

பாயூபஸ்ததௌ கரௌ பாதௌ வாக் ச மைத்ரேய பஞ்சமீ
விசர்க சில் பகத் யுக்தி கர்ம தேஷாஞ்ச கத்யதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-50 )
(மல மூத்ர கருவிகள் கைகள் கால் வாக்கு ஆகிய ஐந்தும் மலம் மற்றும் சிறு நீர் கழித்தல் பொருளை எடுத்தல்
நடத்தல் மற்றும் பேசுதல் என்பதான தொழில் புரிகின்ற கர்ம இந்திரியங்கள் ) -என்னக் கடவது இறே

மனஸ்ஸூ இவை இத்தனைக்கும் போது – –
அதாவது –
ஜ்ஞான இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்கும் போதும்
கர்ம இந்த்ரியங்கள் ஸ்வ ஸ்வ கர்மங்களைப் பண்ணும் போதும்
மனஸ் சஹகாரம் வேண்டுகையாலே
உபயாத்மகமான மனஸ்ஸூ இவை இத்தனைக்கும்
சாதாரணமாய் இருக்கும் -என்கை –

—————————————————————–

சூர்ணிகை -115-

ஜ்ஞான இந்த்ரியங்களுக்கு விஷயமாகச் சொல்லப் பட்ட
சப்தாதிகள் ஐந்தும்
ஆகாசாதிகளுக்கு பிரதி நியத குணங்களாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே
சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும் –

அதாவது
ஆகாச குணம் -சப்தம்
வாயு குணம்- ஸ்பர்சம்
அக்னி குணம்- ரூபம்
ஜல குணம்- ரசம்
பூ குணம்- கந்தம்
என்றபடி-

————————————————————————-

சூர்ணிகை -116-

இப்படி பிரதி நியத குணங்களான பூதங்களுக்கு
குண விநி மயம் வருகைக்கு அடி அருளிச் செய்கிறார் –

குண விநி மயம்
பஞ்சீ கரணத்தாலே –

குண விநி மயமாவது -ஏக பூதத்திலே பூதாந்திர குணங்களும் காணலாம்படி-
பூதங்களில் யுண்டான குணக் கலப்பு

ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸூக பஷீயத்திலே
தேஜோ வாரிம் ருதாம் யதா விநிமய
(அக்னி நீர் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு எவ்விதம் ஒன்றுடன் ஓன்று சேர்க்கை ஏற்படுகிறது )-
என்கிற விதுக்கு
விநிமய பரஸ்பர ஸம்மிஸ் ரீ கரணம் -(வி நிமயம் என்றால் ஒன்றுடன் ஓன்று கலத்தல் )என்றாரே

இங்கும்
பரஸ்பர ஸம்மிஸ் ரீ கரணமே விநிமய சப்தார்த்தம்
அங்கு பூதங்களுக்கு அந்யோந்யம் கலப்புச் சொல்லிற்று
இங்கு குணங்களுக்கு அந்யோந்யம் சொல்லுகிறது
குணங்களுக்கு அந்யோந்யம் கலப்பாவது பூதமும் பூதாந்தரமும் போலே
குணமும் குணாந்தரமும் தன்னிலே கலக்கை அன்று
ஒன்றினுடைய குணம் ஒன்றிலே புக்கு எல்லா வற்றிலும் எல்லாம் யுண்டாம்படி இருக்கை –

அதவா –
விநிமயமாவது
ஒன்றைக் கொடுத்து ஒன்றைக் கொள்ளுகையாய்
தன் குணத்தை பூதாந்தரங்களுக்கு கொடுத்து அதன் குணத்தை தான் பஜிக்கை -என்னவுமாம் –

இத்தால் தன் குணம் அந்யத்தின் பக்கல் யுண்டாய்
அந்யத்தின் யுடைய குணம் தன் பக்கலிலும் யுண்டாம்படி இருக்கையைச் சொல்லுகிறது –

இந்த குணா விநீயம் பஞ்சீ கரணத்தாலே -என்றதுக்கு கருத்து
குணங்கள் ஆகையாலே ஆச்ரயா தந்யதோ வ்ருத்தி இல்லை இறே இவற்றுக்கு
ஆகையால் த்ரவ்யத்தின் யுடைய கலப்பே குணக் கலப்புக்கு ஹேது என்கை –

பஞ்சீ கரணமாவது –
ஏவம் ஜாதேஷூ பூதானி ப்ரத்யேகம ஸ்யுர் த்விதா தத சதுர்த்தா பின்ன மேகைக மரத்தமரத்தம்
ததா ஸ்த்திதம் வ்யோம தோர்த்த பாகாச் சத்வாரோ வாயு தேஜ பயோபுவாம்
அர்த்தா நியானி வாயோஸ்து வ்யோம தேஜ பயோபுவாம்

(இப்படியாகத் தோன்றிய பூதங்கள் அதன் பின்னர் தனித்தனியே இரண்டாயின
ஒவ்வொரு பாதி பாகமும் நான்காக மாறின
மற்ற ஒரு பாதி பாகம் பிரிக்கப்படாமல் இருந்தது ஆகாசத்தில் பாதி பாகம் மற்றும் வாயு அக்னி நீர் பூமி
ஆகியவற்றின் நான்கு பாகங்களும் சேர்ந்து வாயுவின் பாதி பாகமும் ஆகாசம் அக்னி நீர் பூமி ஆகியவற்றின்
நான்கு பாகங்களும் சேர்ந்து பஞ்சீ கரணம் ஆகிறது)-இத்யாதி
புராணங்களில் சொல்லுகிறபடியே

ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி
அவற்றில் ஒரு கூறை நாலு கூறாக்கி
அந்த கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி
சர்வ பூதங்களிலும் சர்வமும் யுண்டாம்படி பண்ணுகை –

இப்படி பஞ்சீ கரணம் ஆனாலும் அவிபக்தமான அர்த்தங்கள் பிரதானங்களாய் நிற்கையாலே
ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்கும் குறை இல்லை –

—————————————————————-

சூர்ணிகை -117-

ஆகாசம்
கறுத்துத்
தோற்றுகிறதும்
அத்தாலே –

அதாவது
அதி ஸூஷ்மதையாலே கண்ணுக்குத் தோற்றாத படி இருக்கும் ஆகாசத்துக்கு சஷூர் விஷயத்வமும்
யத் க்ருஷ்ணம் தத் பிருத்வீ (சாந்த் -6-4-1 )
(எந்த ஓன்று கறுமையாக உள்ளதோ அது பூமியின் அம்சமாகும் ) – என்று
பிருதிவிக்கு உள்ளது ஒன்றாக சொல்லுகிற கிருஷ்ணத்வமும் யுண்டாயிற்று
அது பஞ்சீ கரணத்தாலே -என்கை-

இத்தால் த்ரி வ்ருத்த கரணத்தைச் சொன்ன அநந்தரம் ஸ்ருதி தானே
யதக் னே ரோஹிதம் ரூபம் தேஜஸஸ் ச தத் ரூபம் யச் சுக்லம் ததபாம் யத் க்ருஷ்ணம் ததந் நஸ்ய (சாந்தோ -6-4-1-)
(அக்னிக்கு உள்ள சிவந்த நிறம் தேஜஸ்ஸின் அம்சம் -வெண்மையானது நீரின் அம்சம் -கறுமை யானது பூமியின் அம்சம் )-என்று
அக்னியிலே த்ரி ரூபத்வத்தை தர்சிப்பித்தால் போலே
இவரும் பஞ்சீ கரணத்தை அருளிச் செய்த அநந்தரம்
அது தன்னை சர்வத்தையும் பற்ற ஸூஷ்மமாய் இருப்பதொரு பூதத்திலே தர்சிப்பார் ஆயிற்று-

இப்படி ஸ்ரீ பாஷ்யத்திலே
யதக்நேர் லோஹிதம் ரூபம் தேஜஸஸ் ததபாமபி சுக்லம் க்ருஷ்ணம் ப்ருதிவ் யாச் சேத்ய கநா வேவ த்ரி ரூபதா
ஸ்ருத்யைவ தர்சிதா தஸ்மாத் சர்வே சர்வத்ர சங்கதா -(ஸ்ரீ பாஷ்யம் -1-1-1- ஸத் க்யாதி வாதம் )

(அக்னியில் உள்ள சிவப்பு நிறமானது தேஜஸ்ஸூவின் உடையதாகும்
வெண்மை நிறம் நீரினுடையது ஆகும் -கறுப்பு நிறமானது ப்ருத்வீ -பூமி நிறமாகும் –
இப்படியாக அக்னியில் உள்ள மூன்று விதமான ரூபங்கள் குறித்து ஸ்ருதியிலே தெளிவாக்க கூறப்பட்டு உள்ளது ) என்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார் இறே –

சாந்தோக்யத்தில் பஞ்சீ கரணம் சொல்லாதே த்ரி வ்ருத்த கரணத்தை சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜ உப பன்னங்கள் மூன்றும் யுடையவும் உத்பத்தி மாதரம் இறே சொல்லிற்று
ஸ்ருதி யந்தரத்தில் சொல்லுகிற ஆகாச வாயுக்களின் யுடையவும்
அவ்யவகத மஹத் அஹங்காராதிகளின் யுடையவும் உத்பத்தி தானும் சொல்லிற்று இல்லை இறே
ஆகையால் தேஜோ உப பன்ன மாத்ரம் கதனம்
தத் வாந்தரங்களுக்கும் உப லஷணம் ஆனால் போலே
த்ரிவ்ருத கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கும் உப லஷணம்

இப்படி பஞ்சீ கரணத்தாலே சகல பூதங்களும் பரஸ்பரம் மிஸ்ரங்கள் ஆகையாலே
சப்தாதி குண பஞ்சகமும் சர்வ பூதங்களிலும் யுண்டாய் இருக்கும் என்று
குண விநிமய ஹேது சொல்லிற்றாய் நின்றது –

——————————————————————————

சூர்ணிகை -108-

இனி ஆகாசாதிகளில் பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரவத்துக்கு
குணாதிக்யம் யுண்டாகைக்கு மூலம் அருளிச் செய்கிறார் –

முன்புத்தை தன் மாத்ரைகளோடே
கூடிக் கொண்டு
உத்தர உத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று
என்றும் சொல்வார்கள்-

அதாவது
சப்த தந்மாத்ரத்தாலே ஆவ்ருதமாய்க் கொண்டு
ஸ்பர்ச் தந்மாத்ரம் ஸ்வ விஷயமான வாயுவை ஜநிப்பிக்கையாலே
வாயுவுக்கு ஸ்பர்ச சப்தங்கள் இரண்டும் குணமாயிற்று

இப்படி சப்த தந்மாத்ரையாலே ஆவ்ருத்தமான ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ஆவ்ருத்தமான
அவை இரண்டோடும் கூடி நின்று ரூப தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான தேஜசை ஜநிப்பிக்கையாலே
அத தத்வத்துக்கு சப்த ஸ்பர்ச ரூபங்கள் ஆகிற மூன்று குணங்களும் யுண்டாயிற்று

இப்படி பூர்வ தந்மாத்ர த்வய விசிஷ்டமான ரூப தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்
அவை மூன்றோடு கூடி நின்று ரச தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான ஜலத்தை ஜநிப்பிக்கையாலே
அதுக்கு சப்த ஸ்பர்ச ரூப ரச குணங்கள் நாலும் யுண்டாயிற்று

இப்படி பூர்வ தன்மாத்ரதயா விசிஷ்டமான ரச தந்மாத்ரத்தாலே ஆவிருத்தமாய்க் கொண்டு
கந்த தந்மாத்ரம் ஸ்வ விசேஷமான பிருதிவியைப் பிறப்பிக்கையாலே
அதுக்கு சப்தாதிகள் ஆன அஞ்சு குணங்களும் உண்டாயிற்று -என்கை –

இத்தால்
ஏகைகுண ஆச்ரயமான ஆகாசாதி பூதங்களுக்கு
குண விநிமயம் பஞ்சீ கரண பர யுக்தமானவோபாதி
உத்தர உத்தர பூதங்களில் குணாதிக்யம்
ஸ்வ ஸ்வ தன்மாத்ரங்களுக்கு யுண்டான
ஆவரண ப்ரயுக்தம் என்றது ஆயிற்று
என்றும் சொல்லுவார்கள் என்று கீழ் சொன்னத்தோடே
இத்தையும் சமுச்சயித்து அருளிச் செய்கிறார்
இப்படி தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை –

ஆகாசம் சப்த மாத்ராந்து ஸ்பர்ச மாத்ரம் சமாவிசத்
ரூபம் ததை வா விசித சப்த ஸ்பர்ச குணா யுபௌ
சப்தஸ் ஸ்பர்சச்ச ரூபஞ்ச ரச மாத்ரம்
சமாவிசத தஸ்மாத் சதுர் குணா ஹி ஆபோ விசேஷாச் சேந்த்ரிய க்ரஹ –

( ஆகாசமானது சப்தம் மற்றும் ஸ்பர்சம் தன்மாத்திரைகளைப் பெற்று உள்ளது –
அவ்விதமே இரண்டாக உள்ளதான ஸப்தம் மற்றும் ஸ்பர்சம் ஆகிய குணங்கள்
அக்னிக்கு காரணமாக உள்ள ரூப தன்மாத்ரையை அடைகின்றன –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ஆகிய குணங்கள் நீருக்குள் காரணமாக உள்ள சுவை தன்மாத்ரையை அடைகின்றன
எனவே இந்த்ரியங்களால் அறியப்பட வல்லதாக உள்ளதும் சிறப்பையும் கொண்ட நீரானது
நான்கு குணங்கள் கொண்டதாக உள்ளது )என்னக் கடவது இறே –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading