திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நிகமத்தில் –
மேலான வண்மையை உடைய
திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லார்க்குத்
துன்பம் எல்லாம் நீங்கும்
என்கிறார்

———————————————————————————————————

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே

—————————————————————————————————————-

ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை-
நம் செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள்
என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய குற்றேவல்கள் என்றது
அவன் குடக் கூத்தினை நினைத்து
இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே மூண்டார் -என்றபடி –

வாய்த்த வாயிரத்துள் இவை –
சர்வேஸ்வரனுக்கு நேர் பட்ட ஆயிரத்துள்ளே
வாய்த்தவை ஆயின இவை –

வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –
மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த
பத்து
கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சோபனா மம
ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9-

ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே
என்பது பிரசித்தம்
தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே
இத் திருவாய் மொழியின் இனிமையாலே
திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –
இவை
ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –
இப்பத்தினை கற்க வல்லார்க்கு
உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே
வழித் துணை இல்லை என்று
வருந்த வேண்டாதபடி
காளமேகம் வழித் துணையாம்

நிகமத்தில்
துக்க நிவ்ருத்தி
ஔதார்யம் மிக்க
திரு மோகூருக்கு ஈத்த பத்து
ஆயிரமும் -திருவரங்கனுக்கு
திருவேங்கடத்துக்கு இவை பத்து
ஏத்த வல்லாருக்கு
குற்றேவல் பாடம்
குற்றேவல்கள் என்றும்
குடமாடு கூத்தனை நமர்காள் ஏத்துமின்
வாய் படைத்த பிரயோஜனம்
குருகூர் சடகோபன் குற்றேவல் அந்தரங்க வாசிக்க அடிமை
ஆயிரத்துள் இவை
வண்  திரு மோகூருக்கு ஈத்த பத்து
ரஷகன்
கைம்முதலாக
ரத்னம் ஹாரித –
முத்து -அளவில் பெரிதாக இருந்தால் அரசன் இடம் இருக்க வேண்டும்
ரத்னா ஹாரி -உயர்ந்த திருவாய் மொழி திரு மோகூருக்கு கொடுத்து அருளி
இனிமையால் இந்த திவ்ய தேசம் கொடுத்து ஈத்த பத்து
வழித் துணை இல்லாத இடர் கெடும்
தானே காள மேகமாக வந்து கூட்டிச் செல்வான்

—————————————————————————————————————————————-

தாள் அடைந்தோர் தங்கட்கு தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி–மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் எனக்
கேதம் உளதெல்லாம் கெடும்-91

சாரம்
மா முனிகள் –
தானே வழித் துணையாம்
தாள் அடைந்தார் தங்கட்கு
கதி யாக்கி
மீளுதல்  ஏதம் குற்றம் இல்லாத விண் உலகில்
ஏற என்னும் மாறன்
திரு நாமம் சொல்ல தடைகள் நீங்கும்

—————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading