தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற
சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் இசை எனக்கு பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –
என்கிறாள்
——————————————————————————————————————————————
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்
——————————————————————————————————————————————-
பண்புடை வண்டொடு தும்பிகாள்-
நீர்மை உடைய வண்டொடு கூடின தும்பிகாள் –
பண் மிழற்றேன்மின் –
பண் மிக்க -ஆளத்தி வையாதே கொள்ளுங்கோள் -ஆளத்தி -ஆலாபம்
பண்புரை -என்ற பாடமான போது
பண்பான உரையாய் -முரலுதலைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
பண்ணை முரலா நின்ற -என்றுமாம் –
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் –
முன்னரே மற்றயவற்றின் குரல்களாலே புண் பட்டு அன்றோ இருக்கிறது
அதிலே வேலைக் கொடு குத்தினாப் போலே இரா நின்றது உங்கள் குரல் –
எண்ணிலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தில் எறி வேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் -கம்பர் -பால -கையடைப் படலம்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் –
குளிர்ந்து பெரிய நீரை உடைய பொய்கையிலே
தாமரைப் பூ மலர்ந்தால் போலேயாய்
அவ்வளவு அன்றிக்கே
பெரிய கண்களை உடைய கிருஷ்ணன் –
நம் ஆவி உண்டு எழ நண்ணினான் –
அவ்வடிவு அழகைக் காட்டி
என்னை முடித்து
பிரிந்து போனான் –
மது பான -வண்டுகள் தும்பிகள்
த்வனி சகிக்க முடியாமல்
தண் பெரும் நீர் தடம் தாமரை கம்பீர நாள
இன் குரல்
நீர்மை உடைய வண்டு உடன் கூடிய தும்பி
பான் மிக்க ஆலத்தி வையாமல்
பண்புடை -வண்டு -பண்பான உரையாய் முரளுகை
பண்பு உடை
பண்பு உரை
பண புரை
மூன்றும்
பண்புரை
ஆசார்ய பண்புரை வேதம் –
மா முனிகள் இப்படியும் கொள்ளலாம்
நாயனார் -அருளியது இத்தை கொண்டு
பண்புரைந்த வேதம் சாம வேதம்
வெந்த புண் -மற்றவை த்வனியால் புண் பட்ட நெஞ்சு
வேலை கொண்டு உங்கள் த்வனி
பொய்கை -பெரிய கண்ணன் -தாமரை விட
ஆவி உண்டு வடிவு அழகை காட்டி பிரிந்தான் –
———————————————————————————————————————————————————————–
Leave a Reply