தூணிலே தோற்றி
பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று
தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து
ஏத்துகிறார்
—————————————————————————————————————————
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே
—————————————————————————————————————————-
உகந்தே யுன்னை உள்ளும் –
பிரிந்த துயரத்தோடு தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே
ஒரே தன்மையாக உன்னை அனுபவிக்கும்படியாக –
என்னுள்ளத்து –
எண்ணே-கொண்ட சிந்தையை உடைத்தான
என் உள்ளத்து –
அகம்பால் அகந்தான் –
உள்ளுக்கும் உள்ளே -என்றது
உள் உள் ஆவி -என்னும்படியே
கமர் பிளந்த இடம் எங்கும் மறு நினையும்படி -என்றவாறு –
அமர்ந்தே –
தன பேறாக மிக்க காதலைச் செய்து –
யிடங்கொண்ட –
இடம் உள்ள எங்கும் தானே ஆம்படி நிறைந்த –
வமலா –
இவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பயனைக் கணிசித்து அன்றிக்கே -ஸுயம் பிரயோஜனமாகவும்
ஒரு காரணத்தையும் பற்றியும் இன்றி நிர்ஹெதுகமாக இருக்கையும் –
எண்ணே கொண்ட சிந்தையதாய் -என்றதனை ஒரு சாதனமாக நினைத்து இலர் –
மிகுந்தானவன் –
பகைமையில் ஒரு அளவில்லாத தானவன் -என்றது
தன்னை இல்லை செய்கை அன்றிக்கே
தன் உயிர் நிலையிலே நலிந்தவன் -என்றபடி
உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18-
ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –
மார்வகலம் இரு கூறா நகந்தாய் –
அகன்ற மார்வானது இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல
நகத்தை உடையவனே
நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் –
நரசிங்கமதாய வுருவே –
என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –
சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிற விக்ரகத்தை இப்படி கொள்வதே –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
அடியார்கள் சூளுறவு செய்த காலத்தில் வந்து
தோற்றுமவன் ஆகையால்
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி
மனத்தின் இடம் எல்லாம் புகுந்து
கமர்பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே
நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –
என்கிறார் என்பது –
தூணிலே தோற்றி பிரகலாதன் ஆர்த்தி தீர்த்து அருளியது போலே
உகந்து உள்ளும் நெஞ்சு
உகந்தே -பிரியாமல் சம்ச்லேஷம் ஒன்றாலே ஏவ காரம் –
அனுபவிக்க
எண்ணே கொண்ட சிந்தை நினைத்த மாதரம்
அகம்பால் -அகம் -உள்ளுக்கும் உள்ளே -ஏகாந்தம் -அறைக்கு உள்ளே பிறை
கமர் பிளந்த இடம் எங்கும் -நனையும் படி மறு நனையும் படி அமர்ந்தே
இடம் கொண்ட அவகாசம் கொண்ட இடம் எங்கும்
அமலா -ஹேது இன்றி தனது பேறாக
இருப்பே பிரயோஜனம் அவனுக்கு
இசைவுக்கே இவ்வளவு அனுக்ரஹம் செய்து அருளி
எண்ணே கொண்ட சிந்தை அதுவும் சாதனம் இல்லை
நிர்ஹெதுக கிருபை
கிடைத்த பேறு
எண்ணம் ஸ்வரூபம் தான்
தானவன் -மிகுந்த விரோதம் பிரதிகூல்யம் மிக்கு
தன்னை இல்லை செய்து அன்றி
தன் உய்ர் நிலை பிரகலாதனனை ஹிம்சித்து
ஞானி ஆத்மைவ மே மதம் –
என்னுடைய அபிப்ராயம்
வேதாந்த சித்தமா விசாரம் வேண்டாம்
ஞானிகள் என்னுடைய ஆத்மா
வேதாந்தம் –
அறிவார் உயிர் ஆனாய் -வேற்றுமை தொகை அன் மொழி தொகை இரண்டும்
மிகும் தானவன் –
முதுகில் அடிக்கலாம் வயிற்றில் அடிக்காதே போலே
அகன்ற மார்வி இரண்டு கூஒராக நகத்தால்
நகந்தாய் நகற்றாய் -நகம் உள்ளவன்
சதைக ரூபா ரூபாயா நரசிங்க உருவாக்கி
இரண்டு வடிவை
பிரதிஞ சமகாலம்
உள்ளே புகுந்து எல்லா இடமும் நிரம்பி
கஜேந்த்திரன் உதவ வந்த வேகமும் கூட பொறுக்க மாட்டாமல் ஆழ்வார் நிலை –
———————————————————————————————————————————————
Leave a Reply