திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நாம் எளியோமான கோடியிலே அன்றோ
உமக்கு பேறு கை புகுந்து இருக்க
நீர் இங்கன் படுகிறது என் -என்ன
என் நெஞ்சு காண்கையிலே
விரையா நின்றது
என்கிறார்

————————————————————————————————————————————

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே

—————————————————————————————————————————————–

அம்மானை
சர்வேஸ்வரனை –

அமரர் பிரானைப்
நித்ய சூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து
அனுபவிப்பிக்கும் உபகாரகனை –

பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்
தனக்கு உரிமைப் பட்டவையாய்
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –

பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை –

அரியாய –
படைக்கப் பட்ட உலகத்திலே
அடியவன் பொருட்டு
அவன் சூளுறவு செய்த அந்த சமயத்திலே
தன்னை அழிய மாறி வந்து அவதரித்தவனை –

வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற –
அடியாருக்கு உதவுகை அன்றிக்கே
அவர்களோடு கலந்து இருக்கும் தன்மையானை
வரி வாள் அரவு
வரியையும் ஒளியையும் உடைய அரவு
வரி -அழகுமாம் –

கரியான் –
வெளுத்த நிறத்தை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே
ஒரு காளமேகம் சாய்ந்தால் போலே
ஆயிற்று கண் வளர்ந்து அருளுவது –

கழல் காணக் கருதும் கருத்தே
என்மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது
படுக்கைக்கு பரபாகமான வடிவும்
அதற்கு பரபாகமான திருவடிகளும்
ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது

எளியோமான கோஷ்டிபேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன
நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்

எளியவன் கோஷ்டி நீர்
பேறு கை புகுந்து இருக்க இங்கனே படுகிறது என்ன
நெஞ்சு உன் கழல் காண துடிக்க
சர்வேஸ்வரன்
அமரர் பிரான் நித்ய சூரிகளுக்கு கட்டுக் கொடுத்து உபகரிதவன்
பெரியான் -ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி இவன் அதானம்
யாராலும் அரிய முடியாத
பிரமனை முன் படைத்தானை அரியானே
அரியாய -நரசிம்கன்
பரத்வம் சொல்லி
ஸ்ருஷ்டமான ஜகத்தில்
பிரதிஞ்ஞா சம காலம் ஆஸ்ரீதருக்காக
அழிய மாறி தோற்றி
அரவின் ஆணை -சம்ச்லெஷக ஏக ஸ்வாபவன்
வரி அழகு -செர்தியால் வந்த
கரியான்
வெளுத்த அரவின் மேல் காள மேகம் பரப்பாக சோபை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
காண
கழல் -சிவந்த உள்ளம் கால்
பரபாகம்
நீல மேனி திருவடியில் -செம்கண் கருமேனி அம கை தலம் ஏறி
செங்கமலம் தேனை பருகும் சங்கு போலே -அங்கும் பரபாகம்
இந்த சேர்த்தி அழகைக் காண த்வரித்து நின்றது நெஞ்சு

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading