ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்; இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார். 2மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது; இத் திருவாய்மொழியில் உபேயத்தைப்பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக்கடவது. 3மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரமஸ்லோகம்போலேஇரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், 2அது சக்தியோகத்தாலே வருமது அன்றோ; வெவ்வேறு நிலைகளைப்பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக்கடவன.
3மிகப்பெரிய துன்பத்தோடே பரமபதத்திலே கேட்கும்படி கூப்பிடச்செய்தேயும் சர்வரக்ஷகனானவன் வந்து முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள்கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய் உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் 4“நினைவிற்கும் எட்டாத சொரூபத்தையுடைய உலகநாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”
என்கிறபடியே, நித்தியசூரிகட்குக் காட்சிகொடுத்துக்கொண்டு இருக்கக் கூடிய சர்வேசுவரன், பலரும் நம்மை இழக்க நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்; அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்கவேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து திருமலையிலே நாய்ச்சியாருடனேகூட நின்றருளினான்;1அதிகாரிநியதி, காலநியதி, அங்கநியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே, பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறுகதி இல்லாமையை விண்ணப்பம் செய்து சரணம்புக்குத் தம்முடைய எண்ணத்தை அறிவிக்கிறார்.
2மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே ‘தர்மிபுக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்; இங்கு அது தன்னையே வாய்விடுகிறார். 3மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே. 4திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அதுபோலே இத் திருவாய்மொழி. 5“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப்பார்த்துப் பிரமன் கூறியது.சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”
என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.
‘இழந்ததுபெறவேணும்’ என்னுமதுவும் 1அவ்வளவே. 2ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே. 3தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்திபண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே. 4ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனேயன்றோ ( சீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே. யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – 4செல்வம் ஆத்ம்பிராப்தி பகவத்பிராப்தி விரோதி இவை எல்லாம் உன்னைக்கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது. இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று, எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.இனித்தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும்வேணும்; தான் அதிகாரியாகவும் வேணும். 2நற்குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அதுதானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணாநின்றோம் அன்றோ. 3இங்ஙனே இருக்கச்செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம் கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம். 4இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்கவேணும்; 5சரணம்புகா, பலித்தது இல்லை என்னா, “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது “க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
. 6“மயர்வறமதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக்கொண்டு புறப்படுவார் வேணும். 1செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடியுடையார்க்குக் காரியகரம் ஆகாதே அன்றோ. 2“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப்போகிறேன்; வானரவீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு, மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ. “க்ஷமயாஹி ஸமாயுக்தம் – 3‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்; இங்கே வருணனை வழிவேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டாநின்றார்; இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி, வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். – 2“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே, கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர்கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை; ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை. அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திராநின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை. மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக்காணும் தன்னை நினைத்திருக்கிறது; தன்னை மீன்படுகுட்டமாக அறிகிறது இல்லை. அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ளவல்லோம் என்று அறிகிறது இல்லை. இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில், திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம். 3விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது? கோபத்தைப்போன்று, காரியகாலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம். அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறைகொண்டு காரியம் கொள்ளவேண்டாவோ?
என்னில், ஈத்ருஸேஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை. இதுக்கு 1இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியாநின்றதே. 2ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.
652.
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் அடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
பொ-ரை :- பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே! எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே! உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே! தொன்றுதொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.
வி-கு :- உலகுக்குத் திலதமாய் என் மாற்றுக.
இத் திருவாய்மொழி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 3உன்னை ஒழிய வேறுகதி இன்றிக்கே இருக்கிற என்னை உன் திருவடிகளிலே சேரும்படி செய்தருள வேண்டும் என்கிறார்.
உலகம் உண்ட பெருவாயா – 4தேவர் திருவடிகளைக் கிட்டாத அன்று எனக்கு உண்டான தளர்த்தி, பத்துப் பிரளய ஆபத்தைப்போன்றதேயா மன்றோ? 1பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே இருக்கும் பாரிப்பையுடையவனே! 2உன் பாரிப்புக்கும் என் துயரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? 3நீ, அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே கைம்முதலாகக் காப்பாற்றுமவன் அன்றோ! 4ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ? பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? 5அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? 6சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? ஜலப்பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? 7‘சரணம்புகாதாரை ரக்ஷிக்கவேண்டும்7 என்கிற நியதி உண்டோ! சரணம்புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? 8ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று இருக்கக்கடவ உனக்கு என்னுடையரக்ஷணத்தில் கலவாமல் கைவாங்கி இருத்தல் போருமோ? 1பிரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் ‘நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்று உண்டோ’ என்று உடன் கிடந்தாரை மடிதடவி, பின்னர் ‘என் செய்தோமானோம்’ என்று தபிக்கின்றவர்களைப் போலே இழவுபட்டிருப்பான் ஒருவன் அன்றோ நீ!
2பெருவாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது, 3அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி. பெருவாயா – 4திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க, சபையில் துச்சாதனன் உண்டாக்கின மானபங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தருமபுத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் 5“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.
குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் “நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில் புண்ணோடேயன்றோ எழுந்தருளினான். உலப்பு இல் கீர்த்தி அம்மானே – 1இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையதுகொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்; இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது. 2பொழில் ஏழும் காவல்பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம், 10.3இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியையுடைய சர்வேசுவரனே! 4“அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி பெரியது” என்றும், 5“கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்” “யஸஸ: ச ஏகபாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19.என்றும் உபதேசத்தால் அறிய வேண்டும்படி அன்றிக்கே, 6“எல்லாராலும் அறியப்பட்டவர்”“விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.
சுந். 21 : 20.என்று பகைவர்கள் கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது. 7‘பாதகத்தின் சந்நிதியிலே பாதிக்கப்படும் பொருளும் ஜீவிக்கும்படி அன்றோ உன்னுடைய ஆணை இருப்பது. அவன் நினைத்த அன்று பாதகந்தானே பாதிக்கப்படுகிற பொருளுக்குப் பால்ஊட்டி வளர்த்தா நிற்குமன்றோ. உலப்பு இல் கீர்த்தி அம்மானே – 8“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்” என்றும், 1“அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்” “ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸபுராணம்.
என்றும், 2“ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய கல்யாணகுணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல” என்றும்வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ணபர்வம்.
, 3“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன” பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.
என்றும் சொல்லுகிற குணங்களும் முடிவு இன்றிக்கே இருக்கை. இவற்றை எல்லைகாண நினைத்தால் கரைகண்டு மீள ஒண்ணாது. மதிக்குறைவாலே மீளுமத்தனை.
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி – 4பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விடஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி. ஒரு கருமம் காரணமாக வந்து அது வற்ற வற்றுவது அன்று ஆதலின் ‘நிலவும்’ என்கிறது. 5உள்ளு மண்பற்றாய்ப் புறம்பு ஒளிஊட்டியிருத்தல் அன்றிக்கே, “ஒளிகளின் திரள்” திருவாய். 1. 7 : 4.என்கிறபடியே, ஒளிப்பொருள்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே இருத்தலின் ‘சுடர்சூழ்’ என்கிறது. இராசத தாமதங்களால் கலந்தது அன்றிக்கே, சுத்தசுத்துவமயமாய் நிரவதிக தேஜோரூபமாய், நெய்திணுங்கினாற்போலே உள்ளும்புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
“உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றை” என்னக்கடவதன்றோ. 1திருமேனிதன்னைப் “பஞ்ச சக்தி மயம்” என்றும் சொல்லா நின்றார்கள்; “ஷாட்குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்; ஆராய்ந்து பார்த்தால் பொருளின் நிலைமைதான் “பஞ்சசக்திமயம்” என்றே இருக்கும்; ‘ஷாட்குண்ய விக்ரஹம்’ என்றது, திருமேனிதான் குணங்களுக்குத் திரோதாயகம் அன்றிக்கே பிரகாசகமாய் இருக்கையாலே. 2“மன்மதன்போன்ற சுந்தரமான உருவமுடையவர்; கவர்ச்சிகரமான காந்தியுடையவர்” “ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந் தந்தர்ப்பஇவ மூர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 30.
என்றும் 3“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்” “தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . . . .ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.
என்றும் சொல்லுகிறபடியே யன்றோ இருப்பது.
நெடியாய் – 4மேலேகூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண அடியேன் ஆர்உயிரே – 1வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னைவிட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே! 2“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க இதனைக் கூட்டக் கடவது. திலதம் உலகுக்கு ஆய்நின்ற – பெண்களுக்கு நிறைந்திருக்கின்ற ஆபரணம்போலே ஆயிற்று பூமிக்குத் திருமலை. திருவேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆர் உயிரே – திருமலையில் நின்று என்னுடைய சேஷத்வ முறையை அறிவித்து, உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே! இவ்வளவும் வர, அவனுடைய சொரூபம் சொன்னார்; இனி, தம் சொரூபம் சொல்லுகிறார்: குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன். இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் 3ஒருவர்க்கேயாய் இருப்பாரை வேறு சிலர் நோக்குதல் இல்லை அன்றோ. உனபாதம் கூடுமாறு கூறாய் – 4சொரூபம் இதுவான பின்பு, சொரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய். அடியேன் உனபாதம் கூடுமாறு – 5அடியவன் உன்னைக்கூட என்னுமது ‘உன பாதம்கூட’ என்பதே அன்றோ. உனபாதம் கூடுமாறு – 6இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி. கூறாய் – உனக்கு ஒரு சொல்;ஒண்ணாதபடியாயிருக்கை. 5“மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தறை காண ஒண்ணாதிருக்கிறபடி.எனக்குச் சொரூபலாபம் கண்டாய். 1அவன் ஒரு வார்த்தை அருளிச்செய்ய, தளப்பம் தீரும் அன்றோ இவர்க்கு. 2“மாசுச: – துக்கப்படாதே” என்னவேணும்.
பிராப்ய வேஷம் கீழ் சொல்லி
இதில் பிராபக வேஷம்
சர்வேஸ்வரத்வம் ஸ்ரீ ய பதித்வம் பரத்வம் சௌலப்யம் போக்யதை சொல்லி
மேலே அடையும் வழியை சொல்லுகிறார் –
இரண்டிலும் இரண்டும் இருந்தாலும் பிரதானம் இதுவே
திரு மந்த்ரம் போலே கீழ் திருவாய்மொழி
இது சரம ஸ்லோகம் போலே –
ஸ்வரூபம் பிராப்யம் புருஷார்த்தம் மூன்றும் திரு மந்த்ரம்
ஸ்வரூபம் திருமந்தரம்
உபாயம் சரம ஸ்லோகம்
உபேயம் த்வயம்
என்றும் சொல்வாரே
இருந்தாலும் பிரதானம்
சக்தி யோகத்தால் வருவதால் இரண்டும் உண்டே
அவஸ்தா நிலை எம்பெருமான்
ஆத்திக்கீரை கொண்டு பசுவை வர வளைத்து
ஏணி வாங்கி -மோஷத்துக்கு கூட்டி போன பின்பு
ஏணி உபாயம்
போகும் வரை உபாயம்
அங்கு போன பின்பு உபாய ஆகாரம் வாங்கி உபேயம் ஆகாரம் மட்டும் தானே
ஆர்த்தி உடன் கூப்பிட்டாலும் -முகம் காட்ட வில்லை சர்வ ரஷகன்
துக்கம் மிக்கு
ஸ்ரீ ய பதியாய் -வைகுண்டம் -ஜகத் பதி
விஷ்ணு -அசிந்த்யாத்மா மனசால் நினைக்க முடியாதவன்
நெடும் கை நீட்டாது இழக்க ஒண்ணாது என்று பலரும் இழக்க கூடாது என்று
ராம கிரிஷ்ணாதி அவதாரங்கள் செய்து
சமகாலத்தார் அனுபவிக்க
பிறபாடரும் இழக்காமல் ருசி ஜனகனாய் கொண்டு திருமலையில் நாச்சிமார் உடன் இருக்கக் கண்டு
அதிகாரி நியதி பிரகார கால நியதி இன்றி
சரணம் புக்கு அத்யாவச்சாயம் தெரிவிக்கிறார்
அநந்ய கதிகளாய்-
கீழேயும் பிரபத்தி செய்தார் -நோற்ற நாலும்
லஷ்மி சம்பந்தம் ஸ்பஷ்டமாக இல்லை ஒரே இடம் திருமாலே ஒரே பாசுரம் 40 பாட்டில்
இது தான் பரி பூர்ண சரணா கதி -அகலகில்லேன் இறையும்-என்று அலர் மேல் மங்கை உறை மார்பா –
பிரிக்க முடியாத விசேஷணம் தான் பிராட்டி –
ஸ்வரூப நிரூபக விசேஷம் –
தரமி புகுந்த இடத்தில் –
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்
கீழ் திரு மந்த்ரம் போலே
இது த்வயம் போலே
உ காரத்தாலும் அகாரத்தலும்
அடிமை செய்யும் பொழுது கிருஹினிக்கு
அர்த்தால் உண்டு அங்கு எல்லாம்
இங்கு சப்தமும் உண்டே
முக்த கண்டம் -வாய் விட்டு சொல்வது
எம்பெருமானைக் கண்டால் வேற விஷயம் ஆசை வராதே
பிரபத்தி சர்வ பலத்துக்கும்
சரணம் அடைந்ததும் துக்கம் போகும்
முன்பு தான் வாஞ்சை மோகம் இருக்கும்
எல்லாம் அவனாக இருக்குமே அவனை பற்றினதும் –
இழந்தது பெற போகிறான்
சாபலம்
மோகித்து -ஐஸ்வர்யம் தேகத்துக்கு கேட்டு போகிறான்
அவன் தான் ஆனந்திப்பிக்கிறான் அறிந்ததும்
அசேஷ -பாபங்களும் போக்கி
ஐஸ்வர்யம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி போக்கி
சரணம் புகுகிறார்
சரணாகதி ஸ்வரூபம்
சரண்யன் ஸ்வரூபம் -சர்வ சக்தன் சர்வஞ்ஞன்
பண்ணுகிறவன் ஸ்வரூபம் அசக்தன் அனந்யகதி அகிஞ்சனன்
மாறி இருந்தால் சரணா கதி பலிக்காதே
பெருமாள் சமுத்திர ராஜன் -சரண் அடைந்து பலிக்க வில்லையே
பானம் கொண்டு வழிக்கு கொண்டுகிறவர் அநந்ய கதி இல்லையே
பலிக்க -சரண்யன் கையில் அதிகாரி செய்ய வேண்டும்
பகவத் பின்ன சேதனன்
வ்யதிரிக்த விஷயத்தில் செய்தால் அதுவே கட்டை வெட்டும்
பரசுராமன் -தசரதர் சரணா கதி போலே
அது பூர்ண அவதாரம் இல்லையே –
அதிகாரி நியமமோ
தேச நியமமோ
கால நியமமோ
பிரகார நியமமோ
பல நியமமோ இல்லை சரணா கதிக்கு
எங்கும் யாராவாது எப்பொழுதாவது எவ்வாறாகவும் எதுக்கும் பண்ணலாம்
ஸ்ரீ வைஷ்ணவன் அல்ப பலம் கேட்க மாட்டான்
விஷய நியமம் ஒன்றே உள்ளது
சரண்யன் சரணா கதிக்கு அருகன் இல்லையே
பரம சேதனன் மட்டுமே அருகன் இல்லை
சரணா கதன்-அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் -கொண்டேபண்ணுவான் –
பகவத் பின்ன சேதனன் மட்டுமே பண்ணலாம் –
அநந்ய கதித்வம் உபாயம் வேறு இன்றி உபேயமும் வேறு இன்றி
அகிஞ்சன அகதி பிரார்த்தனா மதி சரணா கதி
அறிவு ஒன்றும் இல்லா -ஆய்க்குலம்
தீமைகள் எல்லாம் உண்டு
நன்மைகள் எதுவும் இல்லை
குளித்து போது குரங்கு உம்பர் ஊர் ஐந்தும்
அடுத்து ஐந்தும் –
கையை கூப்பி ஆகிஞ்சன்யம் காட்டி
காலை சேர்த்து அநந்ய கதித்வம் காட்டி
தாளும் தடக்கையும் கூப்பி பணியுமவர் கண்டீர்-
அவனுக்கு சக்தி கிருபையும் வேண்டுமே -சரண கதி பலிக்க
பூர்த்தி ஒரே வார்த்தை -சர்வஞ்ஞன் சர்வ சக்தன்
பூர்த்தி உள்ள இடமே விஷயம்
அர்ச்சாவதரமே பூர்த்தி உள்ள இடம்
திருவேம்கடமுடையான் இடம் பண்ணுகிறார் –
சாதனம் அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யம் இல்லை –
இவை அதிகாரி விசேஷணம் தான் என்று புரிய வேண்டும் –
சில இடங்களில் பலிக்கலாம்
வேடன் முயலை விட்டானே
கோபம் குரோதம் உள்ள இடத்திலே பலித்தால் கிம் புன நியாயம் -கைம்முதிக நியாயம்-அவன் இடத்தில் பலிக்குமே
மெய்யாக அநந்ய கதித்வம் வேண்டும் –
சாமர்த்தியம் தனக்கு தானே உள்ளவன் சரண் அடைந்தாள் பலிக்காதே-
பெருமாள் சமுத்திர ராஜன் -மகராலாய மீன் குட்டை இது என்றானே கடலை –
மயர்வற மதி நலம் அருளினவரும் மடல் எடுத்து
சாகரம் சோஷயிஷ்யாமி-
திரு விருத்தம் இதே வியாக்யானம் –
ஜல தத்வம் இல்லாமல் பண்ணுவேன்
நாலே போதும் சிருஷ்டிக்கு -என்றான் இ றே
ஷமையோடு கூடின என்னை –
பெண் பெண்டாட்டி சொல்ல கைகேயி வந்தவர்
இங்கே சீறி –
ஷமா பொறுமைக்கு விஷயம் உண்டு -என்று சொல்ல லாமா
ஷமை பெருமாள் காலைக் கட்டிக் கொண்டு –
வாலி புறப்படும் பொழுது தாரை காலைக் கட்டிக் கொண்டது போலே –
மாம் -யார் என்று நினைத்தாய் -பெருமாள் சொல்வதாக
சக்ரவர்த்தி பிள்ளை யாக்கும்
தூங்குபவன் குடித்தவன் கோபித்தவன் தனது ஸ்வா பம் மறைக்க முடியாதே
நம்மை ஐயர் மகன் என்று அறிகிறது இல்லை –
ஷத்ரியத்வம் உணர்ந்தார் -பெருமாளும் -இப்பொழுது –
அயம் -தன்னை சிறாகித்து இருக்கிற நம்மை அறிகிறது இல்லை
மீன் தங்கிய
அயோதியை கோசல சாம்ராஜ்யம் என்று நினைத்து வெறும் மீன் படு குட்டை தெரியாமல் –
செவ்வை கெட பரிமாறுவாரையும்-விரோதிகளையும் ஒக இட்டு கார்யம் கொள்வோம் அறியாமல்
சுக்ரீவன் விபீஷணன் இருவரையும் சேர்த்துக் கொண்டு –
கோபம் வர வளைத்துக் கொண்டு
கார்ய காரத்தில் அழைத்து கார்யம் கொள்ள பார்த்து
கோபச்ய வசமே இவா திருவடியை அடித்ததும் –
இங்குள்ளார் சம்பந்தம் -பலியா நின்றது
ராஷச சம்பந்தம் –
ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி
பத்தாம் பாட்டில் சரணா கதி பண்ணுகிறார்-
முதல் மூன்று வரி சரண்யன் படி சொலி
இறுதியில் சரணா கதி
உலகம் உண்ட பெருய வாயை உடையவன்
முடிவில்லா புகழ் உடையவன்
ஒளி நிலவும் திரு விக்ரகம்
அடியேன் ஆர் உயர்
திரு வேங்கடத்து எம்பெருமான்
குல தொல் அடியேன்
பிரளயம் -ஜகத் ரஷன சிந்தை கொண்டு –
கேட்க்காமலே வந்து காத்து அருளி
ஆபத்தே செப்பாடாக வந்து -காத்து அருளி
ஒருவனுக்கே பத்து பிரளயம் இந்த்ரியங்கள்
பெரு வாயா -பாரிப்பு மிக்கு -உனது பாரிப்புக்கும் எனது ஆர்த்திக்கும் -சேர்த்தி உண்டாக கூடாதா
சம்பந்தம் ஆபத்தே கொண்டு ரஷித்து-நீ அறிந்த சம்பந்தம் –
ஒரு விபூதிகாகா ஆபத்தை நோக்கி
ஒருவனுக்கு அவ்வளவு பெரிய ஆபத்து வந்தால் ரஷிக்க மாட்டாயா
பிரளய அர்ணவத்தில் நோக்கி சம்சார பிறவி பெரும்கடலில்
அபேஷியாதாரை தான் நோக்குவாயா
சரீர்ரதுக்கு வரும் ஆபத்தை நோக்கி ஆத்மாவுக்கு வந்தால்
ஜல பிரளயம் விரக பிரளயம்
பிறரால் வரும் ஆபத்தை நோக்கி உன்னால் வந்த ஆபத்தை நோக்க மாட்டாயா
சரணம் என்று புகாதாரை தான் காப்பாயா
காத்து சமைந்து பின்னையும் ஒன்றும் செய்திலேன் என்று இருக்கும் நீ -ரஷிகாமல் போகலாமா
பிரளய ஆபத்தில் காத்தும் ஒன்றும் செய்யவில்லை என்று நினைந்து
உளன் கிடந்தாரை மடி தடவி -உபகாரம் செய்யாமல் அபகரிதோம் -என்று நினைப்பாரைப் போலே
என்ன செய்தோம் தவிப்பாரை
பெரு வாயா பாரிப்பு மிக்கு
உலகம் உண்ட பெரு வாயா ரஷ்யத்தின் அளவு இல்லாத ரஷகன்
கொண்டல் -வெண்ணெய் உண்ட வாயன் பெரு வாயன் இல்லை அங்கெ
பெரு -வாயை திற -வாயுக்குள்ளே போக போகிறானா -வைத்தியர்
பாரிப்பு மிக்கு –
தளிகை பிரசாதம் -கொண்டு போக பாத்ரம் கொண்டு போக –
அந்த பெரிய பாரிப்பு போலே என் பக்கல் வெறுப்பு கொண்டு இருக்கிறாய் –
சரணம் த்ரௌ பதி உக்தி மட்டும்
சதஸில் பரிபவம் போக்கி குழலையும் முடித்து –
மைதுனமார் –உத்தரை சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன்-
அடுப்பு மூட்ட வெந்நீர் சுடலை கிருஷ்ணா என்பாள் வருவானாம் ஊதுவானாம்
அர்ஜுனன் இடம்
தன்னுடை சோதிக்கு போகும் பொழுது ரிணம்-ப்ரவர்தம் இவமே -குறைவாளனாய் -வட்டிக்கு வட்டி மிக்கு
இத்தனையும் பண்ணின பின்பும் –
சரணம் உக்திக்கு ஈடாகாதே என்ற திரு உள்ளம்
ஆழ்வார் கதறுகிறார்
நெஞ்சு வேகாமல் போனானாம் -கண்ணன்
உலப்பில் கீர்த்தி
ரஷணம் வந்தேறி இல்லையே
புகழ் முன்பே உண்டே
பொழில் எழும் காவல் பூண்ட -புகழ் உண்டே
லோகம் அனைத்தும் காத்து
யசஸ்-புகழுக்கே இருப்பிடம்
உபதேச கம்யம் அன்றிக்கே லோகத்திலும் பிரசித்தம்
சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தம்
பாதகத்தின் சந்நிதியில் பாத்யமும் ஜீவிக்கும்
தீர்த்தம் பாக்யத்தை உண்டா உரிமை -பாதகத்தை தான் உண்டு
இவன் நினைத்தால்பாத்க்கப் படுபவனும்
சுமுகன் கருடன் -கையிலே காட்டி பாலூட்டி வளர்க்கப் பண்ணி
ரஷகன் நீ பாதகன் ஆகலாமா எனக்கு
உலப்பில் கீர்த்தி அம்மானே -குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் -முடிவு இன்றிகே இருக்கை-
கரை கண்டு மீள முடியாது
சக்தி இன்றி தான் மீள வேண்டும்
ஸ்வரூபம் குணத்துக்கு தோற்றி
ஒளி நிலவும் சுடர் சூழ் மூர்த்தி -அழகு விட ஒண்ணாத
நிலவும் மூர்த்தி -கர்மம் அடியாக வந்து போவது போலே அன்றி
சுடர் சூழ் ஒளி திவ்ய மங்கள விக்ரஹம் தேஜஸ் பதம்
உள்ளும் புறம்பும் தேஜஸ்
தேஜசாம் ராசி மூர்த்திதாம் திரட்டி பிடித்தால் போல் ஒண் சுடர் கற்றை
சுத்த சத்வ மயம்
அளாவி -கலந்து -அலாவுதல் விளாவுதல் -கதை அளக்கிறாய்
நிரதிசய தேஜோ –
பஞ்ச சக்தி மயம் -திரு மேனி -கொண்டவன் –
ஷாட் குணிய விக்ரஹம் என்பாரும் உண்டே
ஆராய்ந்து பார்த்தால் பஞ்ச சக்தி மயம் தான்
குணங்கள் வெளியில் தெரியும் படி இருப்பதால் இப்படியும் சொல்லி –
பிரகாசமாய் திரு மேனி இருப்பதால்
ரூபவான் சுப ஸ்ரீ மான் ஸ்கந்த மிவ பீதாம்பர சாஷாத் மன்மத
கீழே சொன்ன உலப்பில் கீர்த்தி கல்யாண குணங்களை காட்டும் திரு மேனி என்கிறார் இத்தால் –
நெடியாய்
எல்லை -இல்லாத சௌந்தர்ய லாவண்யம் -ரூபகுணங்கள்
ஆத்மா குணங்கள் ஸ்வரூப குணங்கள் போலே இன்றி –
மகான் தொட்ட தொட்ட இடம் எல்லாம் தரை காண முடியாமல்
அடியேன் ஆர் உயிர் -பிரிந்தால் தரித்து இருக்க முடியாதே
வடிவையும் குணத்தையும் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
திருவேங்கடத்து எம்பெருமானே அடியன் ஆர் உயிர் என்கிறார்
திலக பூரணமான ஆபரணம் திருமலை பூமிப் பிராட்டிக்கு
சௌமாங்கல்யம் கொடுக்கும் அனைவருக்கும்
சேஷத்வ முறை அறிவித்து உன்னை அல்லால் செல்லாமல் பண்ணி அருளி
இவ்வளவும் வர அவன் ஸ்வரூபம் சொல்லி
குல தொல் அடியேன் -ஆதிக்யம் சொல்ல வில்லை அநந்ய கதித்வம் சொல்லுகிறார்
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -பெருமை உடன் அங்கு
இன்று வந்து ஆஸ்ரியத்தவனையும் பழ அடியேன் என்று நினைப்பான்
அடிமை தன்மை நிரந்தரம்
அறியாமல் இழந்தான் இது வரை
மாணிக்கம் சானைக் கல் ஒளி கூட்ட வில்லை அழுக்கை நீக்கி தான் காட்டுகிறது
அடிமைத் தன்மை -திரை விலக்கி -brushing memory –
எல்லாம் தேவர் போட்ட சிஷை தான்
இருந்தவற்றை என்னைக் கொண்டு விலக்கி வைத்தான் –
சேஷத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வரூபம்
குல தொல் அடியேன் –
பழ அடியேன் நீங்காதது -ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி
இங்கு சரணா கதி பண்ணும் இடத்தில் அநந்ய கதித்வம் ஒருவருக்கே இருப்பாரை வேறு சிலர் நோக்குவர் இல்லையே
உன்ன பாதம் கூடுமாறு
ஸ்வரூப அநு ரூபா கைங்கர்யம்
உனது திருவடி சேர்த்து ஒல்லை
தலை சேர்த்து கொக்குவாயும் படு கண்ணியம் போலே
பாதம் கூட அடியேன்
திருவடிகளிலே சேருவோம்
சாயுஜ்யம் -பாதம் கூடுவது ஆழ்வாருக்கு
ஒரு சொல் எனக்கு ஸ்வரூப லாபம்
வார்த்தை அருளிச் செய்ய
மாசுசா போலே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply