ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கீழே நில மங்கைக்காக ஸ்ரீ வராஹ நாயனார்
சீதா -மலர் மங்கை – நிலமகள் ஆனாள் -அவளுக்கு பெருமாள் செய்தவை இதில்

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-

விண்டாரை வென்று -கூடாரை வெல்லும் சீர்
கொண்டாடு மல்லகலம்–கொண்டு ஆடு மல் அகலம்

————————————————-

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே
ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து
ஈடுபடுமவர்கள்
என் ஒருவன் அளவன்றிக்கே
என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-

வியாக்யானம் –

விண்டாரை வென்று –
நல்ல வார்த்தை சொல்லச் செய்தேயும்
ந நமேயம் -என்று இருப்பாரை யாயிற்று வெல்லுவது –
வாலியை நிரசித்து
கடலை அணை செய்து
ஊரைச் சூழப் போந்து –
இலங்கையை அடை மதிள் படுத்தி –

இனித்தான் அநு கூலிக்கப் படுமோ -என்று
அங்கதப் பெருமாளைப் போக விட்டு
நல் வார்த்தை சொல்லுவித்து

அதுவும் கேளாது ஒழிய
பையல் கண் முகப்பே பரிகரத்தை அடைய நிரசித்து
அதுக்குப் பொருந்தாதே வந்து எதிரிட
நிராயுதனாய் மிடுக்கறப் பண்ணி விடச் செய்தேயும்
பிற்றை நாளும் வந்து என்னை கொல்ல அமையும்
என்ன பின்னை இறே கொன்றது –
விண்டாரை யாயிற்று கொல்ல வல்லது –

அநு கூல சங்கை உள்ள இடங்களில்
சுக்ரீவம் சரணம் கத –
லோக நாத புரா 00சுக்ரீவம் நாதம் இச்சதி –
என்று தான் சரணம் புகா நிற்கும் –

பெருமாள்
நத்யேயம் கதஞ்சன –
ஏதத் வ்ரதம் மம-
என்று நின்றார்
மஹா ராஜர் –
வத்யதாம் என்றே நின்றார்
என்று இவ் விடத்துக்கு பட்டர் அருளிச் செய்யும்படி –
இருவரும் சரணாகத ரஷணத்துக்கு பிணங்கு கிறார்கள்-

ஆவி விலங்குண்ண-
அவர்கள் பேணிப் போந்த பிராணங்களை
கழுகும் பருந்தும் பற்றி முடிக்க -அதாவது என் என்னில் –
குற்று உயிராயக் கிடக்கிற சமயத்தில் இவை வந்து
மேலிட்ட படியாலே சேஷித்த ப்ராணங்கள் அவற்றோடு
போகையைச் சொல்லுகிறது –

மெல்லியலார் இத்யாதி –
ஸ்திரீகள் ஆதரிக்க -அத்தாலே பேணி வளர்ந்த போந்த மார்பிலே –
துஷ்ட சத்வங்களை கண்ட நாய்கள் மேல் விழப் பிற்காலிக்குமா போலே பிற்காலித்துப் போந்த
அக்நி தத்வமானது வந்து பிரவேசிக்க –

வெஞ்சமத்து  மல்லகலம் அழலேற கண்டாரை-
தனி இடத்திலே அநு கூல வேஷத்தோடு வந்து தோற்றி
வஞ்சகரான பையல்களை கூட்டிக் கொடு வந்து
ராஜ புத்ரர்களை அகற்றி –
களவிலிலே பிடித்துக் கொண்டு போந்த பையல்களைப் போலே அன்றிக்கே
நேராக சொட்டைப் பூசலிலே –
பிராட்டி தானும்
உடோ வாராய் வீரர்கள் வர்த்திக்கும் வழி அல்ல காணும் நீ செய்தது -என்றாள்-

அழலேற கண்டாரை–
அத்யவை நிர்ப்பய லங்காம் பிரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய
என்கிறபடியே அவன் பட்டுக் கிடக்க துணுக்கு என்றே எழுந்து இருக்கும் என்று பார்த்து
உன் எல்லைக்குள்ளே ஆதித்ய கிரணங்கள் வந்து புகுரா நின்றன கிடாய் -என்றாள் இறே-
அப்படி மதிப்பனாய் இருக்கிற அவனுடைய மார்விலே
அக்நியை பிரவேசிப்பித்து –

கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை –
சாமத்துக்கு செல்லாதாகில் அன்றோ
தண்டத்துக்கு இழிய வேண்டுவது
என்று இளைப்பு கிடக்கிறவரை-
(சாம பேத தண்டம் )

கொண்டாடும் நெஞ்சுடையார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –
(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்)

அவர் எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்
என்னும் அளவல்ல எங்களது-
ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading